என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கற்பூரவள்ளி டீ
    X
    கற்பூரவள்ளி டீ

    சளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் கற்பூரவள்ளி டீ

    இருமல், சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த கற்பூரவள்ளி டீயை பருகலாம். இன்று இந்த டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கற்பூரவள்ளி இலைகள் - 5,  
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்புன்,
    டீத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - தேவையான அளவு
    தேன் - தேவைக்கு,
    தண்ணீர் - 2 கப்.

    கற்பூரவள்ளி

    செய்முறை :

    கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் டீத்தூள், இஞ்சித் துருவல், ஓமவல்லி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    பிறகு வடிகட்டி தேவையான அளவு தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×