search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீ காபி"

    • மூலிகை டீயை பருகுவதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
    • முலிகை டீ பருகுவதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

    காபி, டீக்கு மாற்றாக மூலிகைகள் கலந்த டீயை பருகுவதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். முலிகை டீ பருகுவதிலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. டீ தயாரிப்பு முறையில் செய்யும் தவறுகள் உடல்நல பாதிப்புகள் ஏற்படவும் காரணமாகிவிடும்.

    * மூலிகை டீயின் சுவைக்காக சர்க்கரை சேர்ப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்காக மூலிகை டீ பருகும்பட்சத்தில் சர்க்கரை சேர்ப்பது பொருத்தமாக இருக்காது. சர்க்கரைக்கு மாற்றாக தேன் சேர்த்து பருகலாம். உடல் பருமனை குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள் தேன் கலந்து பருகுவது நல்ல பலனை கொடுக்கும். சூடாக தயாரிக்கப்பட்ட முலிகை டீயில் ஒருபோதும் தேன் கலந்துவிடக்கூடாது. மிதமான சூடான இருக்கும்போதுதான் தேன் கலக்க வேண்டும்.

    * மூலிகை டீயை அதிக சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ பருகக்கூடாது. மிதமான சூட்டில் பருகுவதே சிறந்தது. அதிலும் பித்தம் சார்ந்த பிரச்சினை உடையவர்கள் ஓரளவு மிதமான சூட்டில் அருந்துவதே நல்லது.

    * பெரும்பாலானவர்கள் காபியோ, டீயோ அளவுக்கு அதிகமாக தயார் செய்துவிட்டால் சில மணி நேரம் கழித்து மீண்டும் அதனை சூடுபடுத்தி குடிப்பார்கள். அதுபோல் மூலிகை டீயை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி பருகக்கூடாது. அப்படி பருகினால் மூலிகையில் உள்ள சத்துக்கள் நீக்கிவிடும்.

    * பித்தம் சம்பந்தமான பிரச்சினை உடையவர்கள் கோடை காலங்களில் மூலிகை டீ பருகுவதை தவிர்ப்பது நல்லது. மற்ற நேரங்களிலும் அடிக்கடி பருகுவதை தவிர்க்க வேண்டும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மன இறுக்கத்தை போக்குவதற்கு காபி உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    • நாமே தயார் செய்து கொள்ளக்கூடிய காபிகள் குறித்து சில தகவல்கள் உங்களுக்காக:

    காபி, இந்த வார்த்தையை கேட்டாலே ஏதோ ஒரு புத்துணர்ச்சி வரத்தான் செய்யும். சிறுவயதினர் தொடங்கி பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் பிடித்தமான ஒரு பானம். ஒவ்வொரு நாளும் காலை பொழுது விடிந்து, பல் துலக்கியவுடன் குடிக்கும் சூடான காபி மற்றும் நீண்ட நேர பணி சோர்வுக்கு பிறகு அருந்தும் ஒரு காபி என்பது உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை தரக்கூடியதாக இருக்கிறது. மன இறுக்கத்தை போக்குவதற்கு இந்த காபி உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய காபியில் வித, விதமான காபிகள் இருக்கிறது. இதில் நாமே தயார் செய்து கொள்ளக்கூடிய காபிகள் குறித்து சில தகவல்கள் உங்களுக்காக:

    பிராப்பே

    நீங்கள் வழக்கமாக சாப்பிடும் கோல்டு காபியைக் காட்டிலும் இது நல்ல தேர்வாக அமையும். ஆனால், இதில் கொஞ்சம் ஐஸ் சேர்க்கப்படுகிறது. இன்ஸ்டன்ட் காபி தயார் செய்து, அதில் குளிர்ந்த நீர், சர்க்கரை, பால் ஆகியவற்றை கலந்து இந்த பிரப்பே தயார் செய்கின்றனர். இதை வீட்டிலேயே நாம் எளிமையாக தயார் செய்து விடலாம். அந்த அளவுக்கு இலகுவாக தேவையோ, அந்த அளவுக்கு பிளெண்ட் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, கிளாஸ் பொங்கி வழியும் அளவுக்கு பிளெண்ட் செய்தால் சுவை தாறுமாறாக இருக்கும்.

    சாக்கலேட் காபி ட்ரபிள்

    சாக்கலேட் சாப்பிடுவதற்கு அதிக விருப்பம் இல்லாதவர்களுக்கு கூட, அதன் மணம் மிகவும் பிடிக்கும். எனவே நேரடியாக சாக்கலேட் சாப்பிடவில்லை என்றாலும், காபியுடன் அதனை மிக்சிங் செய்து கொள்ளலாம். இது இனிப்பும், கசப்பும் கலந்த சுவையில் இருக்கும்.

    டல்கோனா காபி

    தென் கொரியாவைச் சேர்ந்த டோபி என்ற பான வகை தான் டல்கோனா காபி என்று பரவலாக அறியப்படுகிறது. இதை எப்படி தயாரிக்க வேண்டும் என்றால், சூடான பாலில் சர்க்கரை சேர்த்து, காபியுடன் கலக்கவும், அதனை ஒரு கிளாசில் பாதி அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் இப்போது மேல் பகுதியில் சில்லென்ற காபியை சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டும் கலந்த அனுபவம் நம் மனதை மெய்மறக்கச் செய்யும்.

    திராமிசு

    காபி என்றால், எப்போதுமே அதை பானமாக தான் எடுத்து கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உணவு பொருளாகவும் எடுத்துக் கொள்ளலாம். இத்தாலி உணவு வகையை சேர்ந்த இந்த திராமிசுவில் முக்கிய மூலப்பொருள் காபி ஆகும். க்ரீம், சாக்கலேட், காபி ஆகியவற்றின் காம்பினேஷன் என்பது நம்மை சொர்க்கத்துக்கே அழைத்துச் செல்லும்.

    பில்டர் காபி

    பில்டர் காபி இந்த வார்த்தையை யாரும் கேட்காமல் இருந்திருக்க முடியாது. மேலும், நீங்கள் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் என்றால், பல இடங்களில் இந்த வார்த்தையைபார்க்க முடிந்து இருக்கும். கசப்பு மற்றும் இனிப்பு, ஆகியவை சரியாக கலந்துள்ள கலவை இது. இதன் மேல் நிற்கும் நுரையே நமக்கு மிகுந்த மணத்தை தரும்.

    • காலையில் எழுந்ததும் டீ குடிக்காவிட்டால் அன்றைய பொழுதே விடியாது.
    • டீ குடிப்பது நல்லதா? கெட்டதா? என்ற விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது.

    காலையில் எழுந்ததும் டீ அருந்தும் வழக்கம் பலருக்கும் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிறது. கூடவே எந்த டீ பருகுவது உடல் நலனுக்கு நல்லது என்ற விவாதம் நீண்ட காலமாக நீடித்துக்கொண்டிருக்கிறது.

    அதனால் டீயில் பால் கலந்து பருகலாமா? வெறுமனே தேயிலை கலந்து 'பிளாக் டீ'யாக ருசிக்கலாமா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. அதனை முன்வைத்து ஆய்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்திய புதிய ஆய்வு ஒன்று டீ குடிப்பது எப்படி ஆயுளுக்கு பலம் சேர்க்கும் என்ற கருத்தை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆய்வின்படி, 40 முதல் 69 வயதுடையவர்களின் உணவு பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் தேநீர் உட்கொள்ளல் போன்ற விஷயங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆய்வில் பங்கேற்றவர்களில் 85 சதவீதம் பேர் டீ பருகுவதை ஒப்புக்கொண்டனர். அதிலும் 89 சதவீதம் பேர் இரண்டு முதல் ஐந்து கப் வரை பால் கலக்காமல் 'பிளாக் டீ' பருகியுள்ளனர்.

    ஆய்வின்போது ஒரு நாளைக்கு இரண்டு கப் பிளாக் டீ அருந்துபவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவு என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    ஒரு நாளைக்கு மூன்று கப் பிளாக் டீ பருகுவதால் இறப்பு அபாயம் 12 சதவீதம் குறைந்துள்ளது. பிளாக் டீ பருகுவது, நீரிழிவு, பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

    இந்த பானத்தில் பைட்டோநியூட்ரியன்கள், பாலிபினால்கள், கேட்டசின்கள் மற்றும் ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன.

    ஒரு கப் பிளாக் டீயில் 2.4 கலோரிகள் மற்றும் சிறிய அளவு கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் கொழுப்புகள் உள்ளன.

    • தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேநீர் பருகுவது நல்லதல்ல.
    • டீ ஏற்படுத்தும் சில பக்கவிளைவுகள் குறித்து பார்ப்போம்.

    காலையில் எழுந்ததும் முதல் வேலையாக டீ பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். ஆனால், வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவது நல்லதா என்று எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா? மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரோகினி பாட்டீல், தேநீர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பானம்தான் என்றாலும் அதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லதல்ல என்கிறார்.

    தேநீரில் ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியையும், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கச்செய்யும். என்றாலும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் வயிற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்றில் இருக்கும் அமிலங்களை தூண்டி செரிமானத்தை சீர்குலைக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். காலையில் வெறும் வயிற்றில் டீ பருகும்போது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் குடலுக்கு கடத்தப்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.

    வெறும் வயிற்றில் பருகப்படும் டீ ஏற்படுத்தும் மேலும் சில பக்கவிளைவுகள் குறித்து பார்ப்போம்.

    தலைவலி:

    தலைவலியால் அவதிப்படுபவர்கள் அதனை கட்டுப்படுத்த டீ பருகி இருக்கலாம். ஆனால் டீயில் காபின் இருப்பதால் எதிர்பார்க்கும் பலனை தராது. டீக்கு பதிலாக தண்ணீர் அதிகம் பருகுவது தலைவலியின் வீரியத்தை குறைக்க உதவும்.

    அஜீரணம் - நீரிழப்பு:

    வெறும் வயிற்றில் தேநீர் பருகுவது செரிமான அமைப்புக்கு இடையூறை ஏற்படுத்தும். வாயு தொந்தரவையும் உண்டாக்கும். தேநீரில் இருக்கும் டையூரிடிக் சேர்மம், அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு வழிவகுத்துவிடும். அப்படி சிறுநீர் கழிப்பது உடலில் நீரிழப்பை உண்டாகிவிடும்.

    இரவில் பல மணி நேர தூக்கம் காரணமாக ஏற்கனவே உடல் நீரிழப்புடன் காணப்படும். காலையில் எழுந்தவுடன் டீ குடித்தால், நீரிழப்பை அதிகப்படுத்திவிடும். தேநீரில் உள்ள தியோபிலின் என்ற ரசாயனப் பொருளும் நீரிழப்பை அதிகப் படுத்திவிடும். மலச்சிக்கலுக்கும் வழிவகுத்துவிடும் என்கிறார், ரோகினி பாட்டீல்.

    ஊட்டச்சத்து உறிஞ்சுதலை தடுக்கும்:

    தேநீரில் டானின் என்ற சேர்மம் உள்ளது. இது சாப்பிடும் உணவில் இருந்து உடலுக்கு இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதை தடுத்துவிடும். மேலும் தேநீரில் உள்ள காபினும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் அளவை குறைத்துவிடும்.

    அசிடிட்டி பிரச்சினை ஏற்படும்

    வயிற்றில் இருக்கும் திரவங்களின் செயல்பாடுகளுக்கு தேநீர் தொந்தரவு ஏற்படுத்தும்.

    அமில, கார சம நிலையையும் சீர்குலைக்கும். அசிடிட்டி பிரச்சினை தலைதூக்கும். நெஞ்செரிச்சல் ஏற்படும். கீழ் மார்பில் வலியை உணரக்கூடும்.

    வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவதற்கு பதிலாக ஏதேனும் சிற்றுண்டி உட்கொள்ளலாம். குறிப்பாக சிறிதளவு நட்ஸ் வகைகளை சாப்பிட்டுவிட்டு தேநீர் அருந்துவது சிறப்பானது. தேநீரில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்கலாம். வெல்லத்தில் பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. எளிதில் செரிமானம் நடைபெறுவதற்கும் வித்திடும்.

    ''தேநீர் அருந்துவதற்கு சிறந்த நேரம் மாலை 3 மணிதான். அது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். காய்ச்சல் மற்றும் சளி வராமல் தடுக்கும்'' என்கிறார், டாக்டர் ரோகினி பாட்டீல்.

    • உணவுக்குழாய் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
    • இந்தியாவில் அச்சுறுத்தும் புற்றுநோய் வகைகளில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

    டீயை சூடாக பருகுவதற்கு தான் நிறைய பேர் விரும்புகிறார்கள். அப்படி பருகுவதுதான் தொண்டைக்கு இதமாக இருக்கும் என்றும் கருதுகிறார்கள். ஆனால் அதுவே தொண்டைக்கும், உணவு குழாய்க்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மிக அதிகமான சூட்டில் அதாவது 140 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில் டீ பருகினால் உணவுக்குழாய் புற்றுநோய் உருவாகக்கூடும் என்கிறார், ஆய்வை மேற்கொண்ட டாக்டர் பர்ஹத் இஸ்லாமி.

    ''காபி, டீ போன்றவைகளை தயாரித்து சில நிமிடங்களாவது ஆறவைத்து மிதமான சூட்டில் பருகுவதுதான் சரியானது. டீ தயாரித்து முடிப்பதற்கும் - பருகுவதற்கும் இடையே குறைந்த பட்சம் 4 நிமிடங் களாவது இடைவெளி இருக்க வேண்டும்'' என்றும் சொல்கிறார்.

    டீ மட்டுமின்றி சூடான எந்தவொரு பானமாக இருந்தாலும் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் இருந்தால் பருகக்கூடாது. டாக்டர் பர்ஹத் இஸ்லாமி தலைமையிலான ஆய்வு குழுவினர் 40 வயது முதல் 75 வயதுக்குட்பட்ட டீ பிரியர்கள் 50,045 பேரை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்.

    தற்போது உணவுக்குழாய் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தொண்டையில் இருந்து வயிற்றுக்கு உணவு செல்லும் உணவுக் குழாயின் உள் பகுதி செல்களில் இந்த புற்றுநோய் உருவாகிறது. இது இந்தியாவில் அச்சுறுத்தும் புற்றுநோய் வகைகளில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

    ×