என் மலர்
சமையல்
குழந்தைகளுக்கு விருப்பமான குச்சி ஐஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இன்று மாம்பழம் சேர்த்து குளுகுளு மாம்பழ குச்சி ஐஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால் - அரை லிட்டர்,
அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - 100 கிராம்,
பாதாம் - சிறிது
முந்திரி - சிறிது

செய்முறை
பாலை நன்கு வற்ற காய்ச்சவும்.
அரிசி மாவுடன் சீனியை கலந்து கொண்டு சிறிது சிறிதாக கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் போட்டு கட்டி பிடிக்காமல் கலக்கவும்.
அல்லது மாவை தண்ணீரில் கரைத்தும் சேர்க்கலாம். சுமார் 5 நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும்.
மாவு நன்கு வெந்து, கலவை கெட்டியானதும் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி துண்டுகளை போட்டு கலக்கி இறக்கி ஆற விடவும்.
இதற்கிடையே மாம்பழத்தை தோல் சீவி நீளநீள துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக அரைக்கவும்.
பால் அரிசி மாவு கலவை ஆறியதும் அதில் மாம்பழ கூழ் சேர்த்து கலக்கவும். பின்னர் இதை குல்பி அச்சில் ஊற்றி பிரீசரில் வைக்கவும்.
குல்பி அச்சு இல்லாதவர்கள் சிறிய கிண்ணங்களில் ஊற்றி பிரீசரில் வைக்கலாம்.
பால் - அரை லிட்டர்,
அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - 100 கிராம்,
பாதாம் - சிறிது
முந்திரி - சிறிது
மாம்பழம் - 1

செய்முறை
பாலை நன்கு வற்ற காய்ச்சவும்.
அரிசி மாவுடன் சீனியை கலந்து கொண்டு சிறிது சிறிதாக கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் போட்டு கட்டி பிடிக்காமல் கலக்கவும்.
அல்லது மாவை தண்ணீரில் கரைத்தும் சேர்க்கலாம். சுமார் 5 நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும்.
மாவு நன்கு வெந்து, கலவை கெட்டியானதும் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி துண்டுகளை போட்டு கலக்கி இறக்கி ஆற விடவும்.
இதற்கிடையே மாம்பழத்தை தோல் சீவி நீளநீள துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக அரைக்கவும்.
பால் அரிசி மாவு கலவை ஆறியதும் அதில் மாம்பழ கூழ் சேர்த்து கலக்கவும். பின்னர் இதை குல்பி அச்சில் ஊற்றி பிரீசரில் வைக்கவும்.
குல்பி அச்சு இல்லாதவர்கள் சிறிய கிண்ணங்களில் ஊற்றி பிரீசரில் வைக்கலாம்.
மாம்பழ குல்பி உறைந்ததும் எடுத்து பரிமாறலாம். இப்போது சுவையான மாம்பழ குச்சி ஐஸ் ரெடி.!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தினமும் கேரட்டை அதிகம் சாப்பிட்டால், பார்வைக் கோளாறு வராமல் தடுக்கலாம். வளரும் குழந்தைகள், கேரட்டை அதிகம் சாப்பிடுவது நல்லது. இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கேரட் - 3 பெரியது
அரிசி - 1 கப்வெங்காயம் - 1
கிராம்பு - 2
ப.மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
ஏலக்காய் - 6
பட்டை - 2 இன்ச்
நட்ஸ் - 5 டேபிள் ஸ்பூன் (பாதாம், முந்திரி, உலர் திராட்சை போன்றவை)
நெய் - 2 டேபிள் ஸ்பூன்

கேரட்டை துருவிக்கொள்ளவும்.
அரிசியை கழுவி அடுப்பில் வைத்து உதிரியாக வேக வைத்து ஆற வைக்கவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப,மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் துருவிய கேரட், உப்பு சேர்த்து வதக்கவும்.
கேரட் வேக சற்று தண்ணீர் தெளித்து 6-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
பின் தீயை குறைவில் வைத்து, ஆறவைத்த சாதம் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்த பின் இதன் மேல் கொத்தமல்லி, நட்ஸ்களை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
சூப்பரான சத்தான கேரட் டிரை ஃப்ரூட்ஸ் சாதம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ரவை கேசரி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளியமுறையில் சூப்பரான சுவையில் மில்க் கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - 200 மில்லி லிட்டர்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 7
வெள்ளை ரவை - 100 கிராம்
நெய் - 30 மில்லி
முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பருப்பு - 2
பிஸ்தா - 2

செய்முறை:
வாணலியில் சிறிது நெய் விட்டு ரவையை நிறம் மாறாமல் சிம்மில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
மற்றொரு வாணலியில் பால் சேர்த்து காய்ச்சியதும் வறுத்த ரவை, தட்டிய ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.
பால் வற்றி ரவை வெந்த பிறகு சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். சர்க்கரை உருகி, கேசரி பதத்துக்கு ரவை வந்த பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
இதில் பாதாம் பருப்பு, பிஸ்தா, செர்ரியை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.
குறிப்பு:
கேசரிக்கு நிறம் வேண்டு மென்றால், பாலுடன் ஒரு சிட்டிகை குங்குமப்பூவைச் சேர்க்கலாம்
பால் - 200 மில்லி லிட்டர்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 7
வெள்ளை ரவை - 100 கிராம்
நெய் - 30 மில்லி
முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பருப்பு - 2
பிஸ்தா - 2
செர்ரி பழம் - 2

செய்முறை:
வாணலியில் சிறிது நெய் விட்டு ரவையை நிறம் மாறாமல் சிம்மில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
மற்றொரு வாணலியில் பால் சேர்த்து காய்ச்சியதும் வறுத்த ரவை, தட்டிய ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.
பால் வற்றி ரவை வெந்த பிறகு சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். சர்க்கரை உருகி, கேசரி பதத்துக்கு ரவை வந்த பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
இதில் பாதாம் பருப்பு, பிஸ்தா, செர்ரியை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.
குறிப்பு:
கேசரிக்கு நிறம் வேண்டு மென்றால், பாலுடன் ஒரு சிட்டிகை குங்குமப்பூவைச் சேர்க்கலாம்
அல்லது கேசரி மீது ஒரு சிட்டிகை குங்குமப் பூவைத் தூவியும் பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கம்பு, கேழ்வரகை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இவை இரண்டையும் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - ஒரு கப்
கம்பு மாவு - அரை கப்
அரிசி நொய் - அரை கப்
நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப்
கடைந்த தயிர் - அரை கப்

செய்முறை:
கேழ்வரகு மாவில் 3 கப் தண்ணீர் விட்டு முதல் நாளே கரைத்து புளிக்கவிடவும்.
மறுநாள் கம்பு மாவை ஒரு கப் நீர் விட்டு உடனடியாக கரைத்துக்கொள்ளவும்.
அரை கப் அரிசி நொய்யில் ஒரு கப் நீர் விட்டு வேகவிடவும்.
வெந்ததும் புளிக்க வைத்த கேழ்வரகு மாவு, கரைத்த கம்பு மாவு உப்பு சேர்த்து கட்டித் தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும்.
கேழ்வரகு மாவு - ஒரு கப்
கம்பு மாவு - அரை கப்
அரிசி நொய் - அரை கப்
நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப்
கடைந்த தயிர் - அரை கப்
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கேழ்வரகு மாவில் 3 கப் தண்ணீர் விட்டு முதல் நாளே கரைத்து புளிக்கவிடவும்.
மறுநாள் கம்பு மாவை ஒரு கப் நீர் விட்டு உடனடியாக கரைத்துக்கொள்ளவும்.
அரை கப் அரிசி நொய்யில் ஒரு கப் நீர் விட்டு வேகவிடவும்.
வெந்ததும் புளிக்க வைத்த கேழ்வரகு மாவு, கரைத்த கம்பு மாவு உப்பு சேர்த்து கட்டித் தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும்.
வெந்ததும் இறக்கி கடைந்த தயிர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்துப் பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று தர்பூசணியில் சூப்பரான ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தர்பூசணி - 2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ஃபிரெஷ் கிரீம் - 2 ஸ்பூன்

செய்முறை
தர்பூசணியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் அதில் ஃபிரெஷ் கிரீம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
அடுத்து அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள்.
மைய அரைத்து அதை அப்படியே ஒரு கின்னத்தில் ஊற்றி ஃபிரீசரில் வையுங்கள்.
தர்பூசணி - 2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ஃபிரெஷ் கிரீம் - 2 ஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் - ஒரு துளி

செய்முறை
தர்பூசணியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் அதில் ஃபிரெஷ் கிரீம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
அடுத்து அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள்.
மைய அரைத்து அதை அப்படியே ஒரு கின்னத்தில் ஊற்றி ஃபிரீசரில் வையுங்கள்.
2 மணி நேரம் கழித்துப் பார்த்தால் கெட்டியான பதத்தில் தர்பூசணி ஐஸ்கிரீம் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் குறைகிறது. வயிற்றிரைச்சல், வயிற்றுக்கடுப்பு, வயிறு உப்பீசமாக காணப்படுதல் போன்ற வயிற்று கோளாறுகளை வெந்தயக்கீரை குறையச்செய்கிறது.
தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
சோள மாவு - 1 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
வெண்ணெய் - சிறிதளவு
காய்ச்சிய பால் - 1/2 டம்ளர்

செய்முறை:
வெந்தயக்கீரை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கவேண்டும்.
பின்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவேண்டும்.
நன்கு கொதிக்கும் போது வெந்தயக்கீரை, பூண்டு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவேண்டும்.
காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதனுடன் சேர்க்கவேண்டும்.
எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கி விடவேண்டும்.
உப்பு, மிளகுப்பொடி தேவையான சேர்க்கவேண்டும்.
இப்பொழுது சுவையான சத்தான வெந்தயக்கீரை சூப் தயார்.
சிறிதளவு சோளத்தை அரைத்து அந்த சூப்பில் சேர்த்தால் மணமும் சுவையும் அதிகரிக்கும்.
மருத்துவப் பயன்கள்:
வெந்தயக்கீரையில் வைட்டமின் எ, பி உயிர்ச்சத்துக்கள் காணப்படுகிறது. உடலிலுள்ள எலும்புப்பகுதிகளை உறுதியாக வைத்திருக்க பயன்படுகிறது.
இருமல், கபம், சளி ஆகிய நோய்களை வெந்தயக்கீரை குறையச்செய்கிறது
வெந்தயக்கீரை மந்தமாக காணப்படுவர்களை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
வெந்தயக்கீரை - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
சோள மாவு - 1 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
வெண்ணெய் - சிறிதளவு
காய்ச்சிய பால் - 1/2 டம்ளர்
மிளகுப்பொடி, உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வெந்தயக்கீரை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கவேண்டும்.
பின்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவேண்டும்.
நன்கு கொதிக்கும் போது வெந்தயக்கீரை, பூண்டு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவேண்டும்.
காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதனுடன் சேர்க்கவேண்டும்.
எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கி விடவேண்டும்.
உப்பு, மிளகுப்பொடி தேவையான சேர்க்கவேண்டும்.
இப்பொழுது சுவையான சத்தான வெந்தயக்கீரை சூப் தயார்.
சிறிதளவு சோளத்தை அரைத்து அந்த சூப்பில் சேர்த்தால் மணமும் சுவையும் அதிகரிக்கும்.
மருத்துவப் பயன்கள்:
வெந்தயக்கீரையில் வைட்டமின் எ, பி உயிர்ச்சத்துக்கள் காணப்படுகிறது. உடலிலுள்ள எலும்புப்பகுதிகளை உறுதியாக வைத்திருக்க பயன்படுகிறது.
இருமல், கபம், சளி ஆகிய நோய்களை வெந்தயக்கீரை குறையச்செய்கிறது
வெந்தயக்கீரை மந்தமாக காணப்படுவர்களை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
அஜீரணத்தை வெந்தயக்கீரை குறையச் செய்கிறது.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பருப்பு உருண்டை குழம்பு சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சுவையில் பருப்பு உருண்டை ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பருப்பு உருண்டை செய்ய
ஊறவைத்த துவரம் பருப்பு - முக்கால் கப்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
ரசம் வைக்க :
நெய் - 3 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
புளி தண்ணீர் - 1 கப்
தக்காளி - 1
தனியா தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
முந்தைய நாள் இரவே துவரம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
மிக்ஸியில் உருண்டைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இட்லி குக்கரில் நல்லெண்ணெய் தடவி பருப்பை உருண்டைகளாக உருட்டி அதில் வைத்து வேக வைத்து கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கடுகு , சீரகம், கறிவேப்பிலை , காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கிய பின்னர் புளித்தண்ணீர் சேர்க்கவும்.
அதோடு மஞ்சள், தனியா , சீரகம் , மிளகு தூள், உப்பு, 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு செய்து வைத்த உருண்டை, கொத்தமல்லி போட்டு இறக்கி அரை மணி நேரம் மூடிவைத்த பின்னர் பரிமாறவும்.
பருப்பு உருண்டை செய்ய
ஊறவைத்த துவரம் பருப்பு - முக்கால் கப்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
ரசம் வைக்க :
நெய் - 3 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
புளி தண்ணீர் - 1 கப்
தக்காளி - 1
தனியா தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
முந்தைய நாள் இரவே துவரம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
மிக்ஸியில் உருண்டைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இட்லி குக்கரில் நல்லெண்ணெய் தடவி பருப்பை உருண்டைகளாக உருட்டி அதில் வைத்து வேக வைத்து கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கடுகு , சீரகம், கறிவேப்பிலை , காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கிய பின்னர் புளித்தண்ணீர் சேர்க்கவும்.
அதோடு மஞ்சள், தனியா , சீரகம் , மிளகு தூள், உப்பு, 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு செய்து வைத்த உருண்டை, கொத்தமல்லி போட்டு இறக்கி அரை மணி நேரம் மூடிவைத்த பின்னர் பரிமாறவும்.
சூப்பரான பருப்பு உருண்டை ரசம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகள் விரும்பும் உணவுகளை ஆரோக்கியத்துடன் செய்து கொடுப்பது நல்லது. அந்த வகையில் இன்று சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நட்ஸ் சேர்த்து மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - ஒன்று
பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் - தேவையான அளவு
காய்ச்சி ஆறவைத்த பால் - 200 மில்லி
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி துருவி கொள்ளவும்.
பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துப் பொடிக்கவும்.
அதனுடன் துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து அரைத்தெடுக்கவும்.
அடுத்து அதில் பால், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் நுரை பொங்க அடித்துப் பரிமாறவும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - ஒன்று
பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் - தேவையான அளவு
காய்ச்சி ஆறவைத்த பால் - 200 மில்லி
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி துருவி கொள்ளவும்.
பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துப் பொடிக்கவும்.
அதனுடன் துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து அரைத்தெடுக்கவும்.
அடுத்து அதில் பால், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் நுரை பொங்க அடித்துப் பரிமாறவும்.
குறிப்பு: இதைக் குளிரவைத்தும் பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மைசூர் சில்லி சிக்கன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்,
தேவையான பொருட்கள்
சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
குடைமிளகாய் (பச்சை மஞ்சள் சிவப்பு) - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
தேங்காய்த் துருவல் - அரை கப்
வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:
சிக்கனை துண்களாக வெட்டி நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.
குடைமிளகாய், வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், வேர்க்கடலை, எள் சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்து கொள்ளவும்.
அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிக்கன், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் அரைத்த பவுடர், கறிவேப்பிலை, வெங்காயம், குடைமிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.
சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
குடைமிளகாய் (பச்சை மஞ்சள் சிவப்பு) - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
தேங்காய்த் துருவல் - அரை கப்
வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
சிக்கனை துண்களாக வெட்டி நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.
குடைமிளகாய், வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், வேர்க்கடலை, எள் சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்து கொள்ளவும்.
அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிக்கன், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் அரைத்த பவுடர், கறிவேப்பிலை, வெங்காயம், குடைமிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.
சூப்பரான மைசூர் சில்லி சிக்கன் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரட், வேர்க்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இவை இரண்டையும் வைத்து சத்தான சுவையான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துண்டுகளாக நறுக்கிய கேரட் - ஒரு கப்
வேர்க்கடலை - கால் கப்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் உப்பு - தேவையான அளவு.
தாளிக்க :
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை

செய்முறை:
வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.
கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
கால் டீஸ்பூன் எண்ணெயில் கேரட்டை வதக்கி வைத்துக் கொள்ளவும்.
மிக்சியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாவை போட்டு நன்றாக பொடித்த பின்னர் வேர்க்கடலையை சேர்த்து அரைக்கவும்.
கடைசியாக பெருங்காயத்தூள் வதக்கிய கேரட், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான பதத்தில் துவையலாக அரைத்தெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டி நன்றாக கலந்து பரிமாறவும்.
துண்டுகளாக நறுக்கிய கேரட் - ஒரு கப்
வேர்க்கடலை - கால் கப்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் உப்பு - தேவையான அளவு.
தாளிக்க :
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை

வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.
கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
கால் டீஸ்பூன் எண்ணெயில் கேரட்டை வதக்கி வைத்துக் கொள்ளவும்.
மிக்சியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாவை போட்டு நன்றாக பொடித்த பின்னர் வேர்க்கடலையை சேர்த்து அரைக்கவும்.
கடைசியாக பெருங்காயத்தூள் வதக்கிய கேரட், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான பதத்தில் துவையலாக அரைத்தெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டி நன்றாக கலந்து பரிமாறவும்.
இதை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் பிரெட் வடை. இந்த வடையை செய்வது மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிரெட் துண்டுகள் - 6,
உளுத்தம் பருப்பு - 100 கிராம்,
வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு,
பச்சை மிளகாய் - 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.
பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
பிரெட் துண்டுகள் - 6,
உளுத்தம் பருப்பு - 100 கிராம்,
வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு,
பச்சை மிளகாய் - 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.
பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
சூப்பரான பிரெட் வடை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சத்தான சுவையான மில்க் ஷேக் செய்து கொடுக்க விரும்பினால் சோயா ஃப்ரூட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சோயா பால் - ஒரு கப்,
காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப்,
நாட்டு சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
விருப்பமான ஃப்ரூட் கலவை - அரை கப் (தோல், விதை நீக்கியது).

செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் சோயா பால் ஊற்றிச் சூடாக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக் கிளறி ஒரு கொதிவிடவும்.
இதனுடன் பால், நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி ஆறவிடவும்.
பிறகு, பழத்துண்டுகளைச் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து எடுக்கவும்.
சோயா பால் - ஒரு கப்,
காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப்,
நாட்டு சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
விருப்பமான ஃப்ரூட் கலவை - அரை கப் (தோல், விதை நீக்கியது).

செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் சோயா பால் ஊற்றிச் சூடாக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக் கிளறி ஒரு கொதிவிடவும்.
இதனுடன் பால், நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி ஆறவிடவும்.
பிறகு, பழத்துண்டுகளைச் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து எடுக்கவும்.
ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






