என் மலர்tooltip icon

    சமையல்

    நவராத்திரி பிரசாதமாக சத்தான சுண்டல் வகைகளை செய்து கொடுத்து அசத்தலாம். இன்று பச்சை பட்டாணி சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    சமைக்க தேவையானவை

    பச்சை பட்டாணி - 1 கப்
    பச்சை மிளகாய் - 2
    தேங்காய்த் துருவல் - கால் கப்
    இஞ்சி - சிறு துண்டு
    பெருங்காயப்பொடி - கால் டீஸ்பூன்
    கொத்தமல்லி - தேவையான அளவு
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் பட்டாணியை முதல் நாளே தண்ணீரில் ஊறவைக்கவும்.

    ப.மிளகாய் மிளகாய், இஞ்சியை தேங்காயுடன் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

    குக்கரில் பச்சை பட்டாணியை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து 5, 6 விஸில் வரை வைத்து இறக்கி ஆவி போன பின் தண்ணீரை ஒட்ட வடிய வைக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை போட்டு தாளித்து தேங்காய்க் கலவையைச் சேர்த்து சிறிது வதக்கி வெந்த பட்டாணியை சேர்த்து வதக்கவும்.

    உப்பு காரம் கலந்தவுடன் இறக்கி, ருசிக்கேற்ப, எலுமிச்சை சாற்றைக் கலந்து, கொதத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

    சூடான பச்சை பட்டாணி சுண்டல் தயார்

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நவராத்திரி சமயங்களில் வீட்டிலேயே எளிய பிரசாதங்களை செய்தோமானால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. சரி, இன்று வேர்கடலை - தேங்காய் சாதம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தேங்காய் துருவல் - கால் கப்
    வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப்
    காய்ந்த மிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் )
    கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
    உளுந்து - ஒரு தேக்கரண்டி
    வேர்கடலை - ஒரு தேக்கரண்டி
    கடுகு - ஒரு தேக்கரண்டி
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - சிறு துண்டு
    கொத்தமல்லி - சிறிது
    பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
    கறிவேப்பிலை, எண்ணெய், நெய் - தாளிக்க
    தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
    உப்பு, முந்திரி - தேவைக்கு ஏற்ப

    செய்முறை :

    உதிரியாக வடித்த சாதத்தை தட்டில் சாதத்தை கொட்டி பரத்தி உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.

    கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர்  பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

    நன்கு ஆறிய சாதத்தை தாளித்த தேங்காய் கலவையுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சுவையான வேர்கடலை - தேங்காய் சாதம் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நீங்கள் உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்தை பெற வேண்டும் என்று விரும்பினால், ஒரு சக்திவாய்ந்த எடை குறைப்பு பானத்தை இதோ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். அதுதான் சூடான, சக்திமிகுந்த பூண்டு இஞ்சி தேநீர்.
    தேவையான பொருட்கள்:

    பூண்டு - 3-4 பல்
    தண்ணீர் -  ஒரு தம்ளர்
    இஞ்சி - ஒரு துண்டு
    தேன் - சுவைக்கு ஏற்ப
    எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன் (விரும்பினால்)

    செய்முறை

    ஒரு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சேர்க்கவும்.

    அடுத்து அதில் பூண்டை நசுக்கி சேர்க்கவும்.

    உங்கள் சுவைக்கு ஏற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

    இதோ…சூடான சக்திமிகுந்த பூண்டு இஞ்சி தேநீர் தயார்…

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நவராத்திரி சமயங்களில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும், வீட்டிலேயே எளிதில் பலகாரங்களைச் செய்தோமானால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. சரி, எளிதில் செய்யக்கூடிய எள் பர்ஃபியை பார்க்கலாம் வாங்க.
    எள்ளில் வைட்டமின் பி1, பி6, நியாசின், தையாமின், போலிக் அமிலம், ரிபோ பிளேவின் போன்ற வைட்டமின்கள், புரோட்டீன் மற்றும் இரும்புசத்து உள்ளது.

    தேவையான பொருட்கள்:

    வெள்ளை எள் - 1 கப்
    நெய் - 3 ஸ்பூன்
    வெல்லம் - ½ கப்
    தண்ணீர் - சிறிதளவு
    பிஸ்தா, பாதாம் - சிறிதளவு (நறுக்கியது)

    செய்முறை:

    வாணலியில் ஒரு கப் வெள்ளை எள்ளை போட்டு அடுப்பை சிறு தீயில் வைத்து மூன்று நிமிடங்கள் வறுக்கவும். வறுத்த எள் ஆறியவுடன் அதை மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    மற்றொரு தவாவில் இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றி அதில் பொடி செய்து வைத்துள்ள அரை கப் வெல்லத்தை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பை மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும். பாகு வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள எள்ளை சேர்த்து ஒரளவு திரண்டு வரும் வரை கை விடாமல் கிளறவும்.

    பின்பு, நெய் தடவிய தட்டில் திரண்ட எள்ளை கொட்டி சமன் செய்து அதன் மேல் நறுக்கி வைத்துள்ள பாதாம், பிஸ்தாக்களால் அலங்காரம் செய்யவும்.

    வெது வெதுப்பாக சூடு இருக்கும் பொழுதே கத்தியில் நெய் தடவிக் கொண்டு வேண்டிய அளவில் பர்பியாக அறுக்கவும். ஆறிய பிறகு பர்பியாக துண்டுகள் போடுவது மிகவும் கடினமாகி விடும்.

    இப்பொழுது, சுவையான சத்துகள் நிறைந்த எள் பர்ஃபி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைக்கு சமச்சீரான சத்துக்கள் நிறைந்த கிச்சடி செய்து தரவேண்டும் என விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் காய்கறி பருப்பு கிச்சடி செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருள்கள்

    அரிசி - 1 கப்
    சிறு பயறு - அரை கப்
    வெங்காயம் - 1
    இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 1 நீளவாக்கில் அறிந்தது
    தக்காளி - 1 சிறிய அளவு
    பட்டாணி - 1 தேக்கரண்டி
    அறிந்த குடை மிளகாய், கேரட் - 2 மேசைக்கரண்டி
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
    கொத்தமல்லி, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
    நெய் - 2 தேக்கரண்டி
    பட்டை - 1
    கிராம்பு - 1
    சீரகம் - 1 தேக்கரண்டி
    பெருங்காயம் - 1 சிட்டிகை

    செய்முறை

    அரிசி, பருப்பு நன்றாக கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.

    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நெய் ஊற்றி  சூடானதும் பட்டை, கிராம்பு, சீரகம் போட்டு பொரித்தவுடன், பெருங்காயம் சேர்க்கவும்.

    அடுத்து அதில் அறிந்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காய, பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதங்கியதும், இஞ்சி-பூண்டு சேர்த்து வாசனை நீங்கும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்க வேண்டும்.

    இதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பட்டாணி, குடமிளகாய், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

    காய்கறிகள் சற்று வதங்கிதும் இதனுடன் சிறுபயறு, அரிசி சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் வந்ததும் நிறுத்தி விடலாம்.

    இறக்கியதும் கொத்தமல்லி தூவி கலந்து பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வெண்டைக்காய் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கு நன்மை புரிகிறது. இதில் உள்ள நார்ப்பொருட்களால் கொழுப்பு கரைந்து, மலச்சிக்கல் நீங்கும்.
    தேவையான பொருட்கள் :
     
    வெண்டைக்காய் - 1/2 கிலோ
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்
    அரிசி மாவு - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :
     
    வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக நறுக்கி நடுவில் கீறி கொள்ளவும்.
     
    ஒரு பாத்திரத்தில் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
     
    இந்த கலந்த மசாலாவை வெண்டைக்காயின் நடுவில் வைத்து அரை மனி நேரம் ஊற வைக்கவும்.
     
    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்கு வறுக்கவும்.

    சூப்பரான வெண்டைக்காய் பிரை தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சேமியா புட்டு செய்வது மிகவும் எளிது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும். சத்தானதும் கூட. இன்று இந்த புட்டு செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நொறுக்கிய சேமியா - ஒரு கப்
    சர்க்கரை - அரை கப்
    தேங்காய் துருவல் - அரை கப்
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்
    முந்திரி - தேவையான அளவு
    ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை :

    கடாயில் நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அதே கடாயில் சேமியாவை போட்டு வறுத்து கொள்ளவும்.

    வறுத்த சேமியாவில் சிறிது உப்பு சேர்த்து கலந்த பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசறி 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், நறுக்கிய முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

    புட்டு குழலில் முதலில் தேங்காய் துருவலை போட்டு அதன் மேல் பிசறி வைத்த சேமியாவை போட்டு அதன் பின் தேங்காய் துருவல், சேமியா என்ற வகையில் போட்டு ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    சத்தான சுவையான சேமியா புட்டு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நகைகள் என்றால் அவை தங்கத்தினால் செய்ததாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? வெள்ளி நகைகளிலும் எத்தனையோ டிசைன்கள், வடிவங்கள் என்று அற்புதமான நகைகள் வந்து விட்டன.
    நகைகள் என்றால் அவை தங்கத்தினால் செய்ததாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? வெள்ளி நகைகளிலும் எத்தனையோ டிசைன்கள், வடிவங் கள் என்று அற்புதமான நகைகள் வந்து விட்டன.

    சாதாரணமாக வெள்ளி நகைகள் என்றாலே மெட்டி, கொலுசு அதிகபட்மாக கை மோதிரங்கள் இவற்றைத்தான் வாங்குவோம். ஆனால் வெள்ளியிலும் பழமையான நகைகள், எத்னிக் நகைகள் மணப்பெண் அலங்கார நகைகள், பாரம்பரிய நகைகள் என அனைத்தும் வந்துவிட்டன.

    * வெள்ளி ஹாரத்தில் கையகல டாலர்கள். டாலர்களின் ஓரத்தில் சலங்கைகள். ஒரு டாலரின் கீழே இணைக்கப்பட்ட மற்றொரு பெரிய டாலர். இந்த ஒரு நகை மட்டும் போதும். இத்துடன் வேறு எந்த நகையும் அணியத்தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு ஆளுமையான தோற்றத்தைத் தருகிறது. அடர்த்தியான நிறமுள்ள பிளெயின் சேலைகளுடன் இந்த ஹாரமானது அணிந்து சென்றால் மிகவும் அருமையாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. பெரிய நிகழ்ச்சிகளுக்கு இதை அணிந்து செல்லலாம்.

    * இரண்டு சரமாக மெல்லிய வெள்ளிச் செயின், அதன் இடையிடையே வெள்ளிக் குண்டுகள் கீழே அழகிய பெரிய அகலமான டாலர். அதன் கீழ்ப்புறத்தில் சலங்கைகளும், வெள்ளிச்செயினும் தொங்குவது போல் வடிவமைத்திருப்பது அற்புதம் என்று சொல்லலாம். கோவில்கள் மற்றும் சிறிய விழாக்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவையாக இவை இருக்கும்.

    * சிறிய லக்‌ஷ்மியானது ஒன்றன் கீழ் ஒன்றாக இணைக்கப்பட்ட ஹாரத்திற்கு இரண்டு மயில்கள் ஒட்டிக்கொண்டிருக்க அதன் கீழே லக்‌ஷ்மி அருள் பாலிக்கிறார். இந்த டாலரின் கீழ் சிவப்பு கற்கள் பதித்திருக்க, அந்த ஒவ்வொரு கற்களின் கீழும் முத்துக்கள் தொங்குகின்றன. வரவேற்பு நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள் மற்றும் குடும்ப விழாக்களில் இவற்றை அணிந்தால் நம்முடைய பெயர் ஏதுவாக இருந்தாலும் லக்‌ஷ்மிகரமான பெண் என்று பெயர் எடுக்கலாம்.

    * காசுமாலையை வெள்ளியில் அணிந் தால் கட்டாயம் நன்றாகத்தான் இருக்கும். இவை ஒரே சரமாகவும், பல அடுக்குச் சரங்களாகவும் உள்ளன. இந்தக் காசுமாலைகளை சேலை, பாவாடை தாவணியோடு மட்டுமல்லாமல் சல்வார் சூட், லாங் ஃப்ராக், மட்டுமல்லாமல் குர்த்தி என எதனுடனும் பொருத்தி அணிந்து கொள்ளலாம்.

    * வெள்ளி குந்தன் ஹாரங்களின் அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். சிறிய குந்தன் கற்கள் பதித்த ஹாரங்கள் ஒரு விதமான அழகு என்றால் பெரிய குந்தன் வேலைப்பாட்டுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஹாரங்கள் அழகோ அழகு. பதக்கங்கள் இல்லாமல் வரும் ஆரங்களும் பார்க்க ஒரு கவுரவமான மிடுக்கான தோற்றத்தைத் தருவதாக உள்ளன. காக்ரா சோளி, பட்டு சல்வார் செட், பட்டு குர்திகள் மற்றும் லெகங்காக்களுடன் இவற்றை அணிந்தால் விழா நாயகியாக நீங்கள் இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

    * வெள்ளியில் வரும் சோக்கர் செட்டுகளில் இத்தனை வகைகளா என்று வாய்பிளக்கும் அளவுக்கு ஏராளமான மாடல்கள் உள்ளன. இரண்டு விரல் அகல சோக்கர், குந்தன் வேலைப்பாடுடைய சோக்கர்களில் சலங்கைகள் தொங்குவது போல் உள்ள சோக்கர்கள், கையகல சோக்கர், கழுத்திலிருந்து துவங்கி மார்பை மறைப்பது போல் உள்ள மாலைகள் என்று வகை வகையான நகைகள்.

    * சில தங்க கழுத்தணிகள் அதிக பவுனில் செய்யப்பட்டவையாக இருக்கும். அதுபோன்ற நகைகள் அணிய ஆசையாக இருக்கின்றது ஆனால் அவ்வளவு பணத்தை அதில் முதலீடு செய்ய வேண்டுமா? என்று நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பவை வெள்ளியில்அதே போன்று செய்யப்பட்டு தங்க முலாம் போடப்பட்ட நகைகளாகும். இந்திப் படமான ‘ ஜோதா அக்பர்’ படத்தில் ஐஸ்வர்யாராய் அவர்கள் அணிந்தது போன்ற பெரிய பெரிய நகைகள் கூட வெள்ளியில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசி விற்பனை செய்யப்படுகின்றன. தங்க நகைகளுக்கு செய்யப்படும் அனைத்து வேலைப்பாடுகளும் வெள்ளி நகைகளிலும் கிடைக்கின்றன என்பது கூடுதல் தகவலாகும்.

    * உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெள்ளியால் செய்யப்பட்ட நகைகளை அணிகிறார்கள்.

    * வெள்ளியால் செய்யப்பட்ட காதணிகள் சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை கிடைக்கின்றன. பெரிய அளவிலிருக்கும் ‘ஜிமிக்கிகள்’ பெண்கலால் பெரிதும் விரும்பி அணியப்படுகின்றன.

    * வெள்ளியில் “ஹூப்ஸ்” என்று சொல்லப்படும் வளையங்கள், தொங்கட்டான்கள், “டேங்கிள்ஸ்” என்று அழைக்கப்படும் நீளமாகத் தொங்கும் காதணிகள் “சான்டிலியர்” மாடல்கள், ஹக்கிஸ் மாடல், டியர் ட்ராப் மாடல், ‘இயர் கஃப்ஸ் எனப்படும் காது மடல்களுக்கும் செய்யப்பட்டிருக்கும் காதணிகள், கம்மல் அணிகின்ற துவாரம் வழியாக நுழைக்கப்படும் செயினானது துவாரத்தின் இருபக்கமும் தொங்குவது போல சில சமயங்களில் காதின் முன்புறத்தில் தொங்கும் செயினில் கற்கள் அல்லது மணிகள் இணைக்கப்பட்ட ‘த்ரெட்டர்’, “சந்த்பாலி” எனப்படும் சந்திர வடிவில் வட்டமாக இருக்கும் காதணிகள் எனப்பல மாடல்களில் வெள்ளியால் செய்யப்பட்ட காதணிகள் விற்பனை செய்யப் படுவதோடு அதைப் பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்பது கூடுதல் தகவலாகும்.
    சாலட், சாண்ட்விச் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் மயோனைஸை தயாரிப்பது, அத்தனை பெரிய காரியமில்லை. வீட்டிலேயே எவ்வாறு செய்வது என்பதைக் காணலாம்.
    தேவையான பொருட்கள்:

    சமையல் எண்ணெய் - ஒரு கப்
    முட்டை - 2
    கடுகுத் தூள் - 1 மேசைக் கரண்டி
    எலுமிச்சை சாறு - 1 மேசைக் கரண்டி
    உப்பு - சிறிதளவு

    மயோனைஸ் செய்ய தேவையான பொருட்கள்

    செய்முறை :

    மிக்ஸி ஜாரில் இரண்டு முட்டைகளை உடைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    அதில் கடுகுத் தூள், எலுமிச்சை சாறு அல்லது வினிகர் இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம் , கொஞ்சம் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி மிக்ஸியில் அரைக்கவும். இவ்வாறு செய்வதால் முட்டை கலவை கெட்டிப் பதத்திற்கு வரும்.

    பின் இறுதியாக மொத்த எண்ணெயையும் ஊற்றி நன்கு அரைத்தால் கெட்டியான பதத்தில் மயோனைஸ் ரெடி.

    இதை சிக்கன் 65, சாலட், சாண்ட்விச் போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் அவலுக்கு முக்கிய பங்கு உண்டு. இன்று நாம் உடலுக்கு வலுசேர்க்கும் சுவையான அவல் தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையானவை பொருட்கள்

    அவல் - 200 கிராம்,
    அரிசி - 100 கிராம்,
    உப்பு - தேவையான அளவு,
    கடுகு, இஞ்சி துருவல் - சிறிது,
    மிளகாய் - 1.

    செய்முறை

    ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும்.

    மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும்.

    தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டெடுக்கவும்.

    சூடான அவல் தோசையுடன் காரமான கெட்டிச்சட்னியை வைத்து சாப்பிட சுவை நன்றாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் மட்டன் நல்லி பெப்பர் பிரை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் நல்லி - 200 கிராம்,
    சின்ன வெங்காயம் - 50 கிராம்,
    தக்காளி - 1,
    இஞ்சி, பூண்டு விழுது- தேவைக்கு,
    பட்டை, சோம்பு, சீரகம் - தேவைக்கு
    க.எண்ணெய் - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மிளகாய்த்தூள்- தேவைக்கு,
    உப்பு- தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை:

    மட்டன் நல்லியை நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிய பிறகு நல்லி எலும்புகளை அதில் சேர்த்து கிளறிய பிறகு சிறிது நேரம் மூடி விடவும்.

    சிறிது நேரம் கழித்து தண்ணீர் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும்.

    சூப்பரான மட்டன் நல்லி பெப்பர் பிரை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தொண்டையில் கரகரப்பு ஏற்படுவது சாதாரண நிலைதான் என்றாலும், அதை அப்படியே தவிர்த்துவிட முடியாது. காபி, டீக்குப் பதிலாக திரிகடுகம் காபியை குடித்துவருவது மிகவும் நல்லது.
    உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது திரிகடுகம் காபி. கொரோனா பரவலைத் தடுக்கும் போராட்ட நிலையில் வாழ்கிறோம். தற்போது கோடைக்காலம் குறைந்து மழைக்காலம் வரத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தொண்டையில் கரகரப்பு ஏற்படுவது சாதாரண நிலைதான் என்றாலும், அதை அப்படியே தவிர்த்துவிட முடியாது. இந்த நிலையில் காபி, டீக்குப் பதிலாக இந்த திரிகடுகம் காபியை இடைப்பட்ட நேரத்தில் குடித்துவருவது மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள் :

    மிளகு - 30 கிராம்
    சுக்கு - 50 கிராம்
    திப்பிலி - 5 கிராம்
    கருப்பட்டி - தேவையான அளவு
    காபி தூள் - 2 ஸ்பூன்

    செய்முறை :

    மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை நன்றாக பொடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் கருப்பட்டியை போட்டு கரைந்த பின்னர் காபி தூள், திரிகடுகம் பொடி சேர்த்து கலந்து 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கி மூடி வைக்கவும்.

    தூள் தெளிந்தபின்னர் வடிகட்டி சூடாக பருகவும்.

    திரிகடுகம் காபி ரெடி.

    இதை பால் சேர்க்காமல் அருந்த வேண்டும். காலை - மாலை இரு வேளை குடிப்பது நல்லது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×