search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைசம்"

    சிறுதானியங்களில் சத்தான சுவையான ரெசிபிகளை செய்யலாம். இன்று சாமை அரிசி, கருப்பு உளுந்து சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    சாமை அரிசி - 1 கப்
    கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப்
    வெந்தயம் - கால் ஸ்பூன்
    சீரகம் - கால் ஸ்பூன்
    முழுப்பூண்டு - 2
    தேங்காய் துருவல் - அரை கப்
    உப்பு - தேவைக்கேற்ப


     
    செய்முறை :

    சாமை அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.

    முதலில் உளுத்தம் பருப்பை கல் நீக்கி, நன்றாக கழுவி அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    உளுந்து பாதியளவு வெந்ததும் ஊறவைத்த சாமை அரிசியை சேர்க்கவும்.

    அத்துடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு சேர்க்கவும்.

    அனைத்து நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான சாமை கருப்பு உளுந்துகஞ்சி ரெடி.

    கஞ்சி திக்காக இருந்தால் பால் அல்லது மோர் அல்லது சூடான நீர் சேர்த்து கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×