மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தொண்டையில் கரகரப்பு ஏற்படுவது சாதாரண நிலைதான் என்றாலும், அதை அப்படியே தவிர்த்துவிட முடியாது. காபி, டீக்குப் பதிலாக திரிகடுகம் காபியை குடித்துவருவது மிகவும் நல்லது.
திரிகடுகம் காபி
மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தொண்டையில் கரகரப்பு ஏற்படுவது சாதாரண நிலைதான் என்றாலும், அதை அப்படியே தவிர்த்துவிட முடியாது. காபி, டீக்குப் பதிலாக திரிகடுகம் காபியை குடித்துவருவது மிகவும் நல்லது.
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது திரிகடுகம் காபி. கொரோனா பரவலைத் தடுக்கும் போராட்ட நிலையில் வாழ்கிறோம். தற்போது கோடைக்காலம் குறைந்து மழைக்காலம் வரத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தொண்டையில் கரகரப்பு ஏற்படுவது சாதாரண நிலைதான் என்றாலும், அதை அப்படியே தவிர்த்துவிட முடியாது. இந்த நிலையில் காபி, டீக்குப் பதிலாக இந்த திரிகடுகம் காபியை இடைப்பட்ட நேரத்தில் குடித்துவருவது மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள் :
மிளகு - 30 கிராம்
சுக்கு - 50 கிராம்
திப்பிலி - 5 கிராம்
கருப்பட்டி - தேவையான அளவு
காபி தூள் - 2 ஸ்பூன்
செய்முறை :
மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை நன்றாக பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் கருப்பட்டியை போட்டு கரைந்த பின்னர் காபி தூள், திரிகடுகம் பொடி சேர்த்து கலந்து 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கி மூடி வைக்கவும்.
தூள் தெளிந்தபின்னர் வடிகட்டி சூடாக பருகவும்.
திரிகடுகம் காபி ரெடி.
இதை பால் சேர்க்காமல் அருந்த வேண்டும். காலை - மாலை இரு வேளை குடிப்பது நல்லது.
-
இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து
கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள
முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.