என் மலர்tooltip icon

    சமையல்

    இந்த வரும் தீபாவளிக்கு அன்னாசிப்பழ புட்டிங் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்க. சரி, இன்று குளு குளு அன்னாசிப்பழ புட்டிங் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அன்னாசிப்பழம் - 1
    கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
    பால் பவுடர் - 7 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 7 டேபிள் ஸ்பூன்
    பொடித்த முந்திரி பருப்பு + முந்திரி பழம் - 1/4 கப்
    அன்னாசி எசன்ஸ் - 1/2 டீ ஸ்பூன்

    செய்முறை

    அன்னாசிப்பழத்தை தோல் சீவி மிகவும் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கஸ்டர்ட் பவுடரினுள் 5 டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும்.

    அதனுள் சர்க்கரையை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அடிக்கவும்.

    அதனுள் சிறிது சிறிதாக பால் பவுடரையும் சேர்த்து அடிக்கவும்.

    பின்னர் இக்கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பொடித்த முந்திரி பருப்பு, முந்திரி பழம் அன்னாசி எசன்ஸ் போட்டு கலக்கவும்.

    பின்னர் இக்கலவையில் சிறிய அளவை ஒரு உருண்டையான கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் அன்னாசி துண்டுகளைப் போடவும். இவ்வாறு மாறி மாறி ஊற்றவும். பின்னர் இதனை ஆவியில் வைத்து அவித்தெடுக்கவும். (அல்லது 10 நிமிடங்கள் மைக்ரோ அவனில் பேக் செய்யவும்) சுவையான அன்னாசி புட்டிங் தயார்.

    இதனை குளிர வைத்து துண்டுகளாக்கி பரிமாறவும்.

    சூப்பரான அன்னாசிப்பழ புட்டிங் ரெடி


    மொச்சை கொட்டை உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும். இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறையும். இன்று மொச்சையில் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மொச்சை - அரை கப்,
    வெங்காயம் - ஒன்று,
    தக்காளி - ஒன்று,
    குடைமிளகாய் - ஒன்று,
    ஆலிவ் ஆயில் - 3 டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உலர்திராட்சை - 20 கிராம்,
    பாதாம் - 10
    உப்பு - தேவைக்கு.

    செய்முறை:


    வெள்ளை மொச்சையை நான்கு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்.

    பாதாமை 3 மணி நேரம் ஊற வைத்து நீள வாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி (விதை நீக்கி), குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாயகன்ற பாத்திரத்தில் வேகவைத்த மொச்சை, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, உலர்திராட்சை, பாதாம், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு அனைத்தையும் நன்றாகக் கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான மொச்சை சாலட் ரெடி.

    இறாலில் பல வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இறாலில் பல வகை ரெசிபி செய்யலாம். வாங்க இன்று இறால் சுக்கா மசாலா செய்வது குறித்து பார்க்கலாம்..
    தேவையான பொருள்கள்:

    இறால் - அரை கிலோ
    தேங்காய் - 1/2 கப்
    வரமிளகாய் - 5
    பூண்டு - 4-5
    கறிவேப்பிலை - சிறிதளவு
    சோம்பு - 2 ஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
    வெங்காயம் - 1
    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகுத் தூள் - 2 ஸ்பூன்
    கரம் மசாலா - 1 ஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    தேங்காய், வரமிளகாய், சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து மிக்சியில் பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.

    பின்னர் சுத்தம் செய்த இறால், மஞ்சள் தூள், உப்பு ஆகியவை ஒன்றுடன் ஒன்று சேரும் வரை கிளற வேண்டும்.

    அரைத்து வைத்த மசாலைவை சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும்.

    கடைசியில் மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவை சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான இறால் சுக்கா தயார்...

    பச்சை பயிறு என்று அழைக்கப்படும் பாசிப்பயறை சாப்பிடுவதன் மூலமாக நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து மற்றும் புரத சத்தானது கிடைக்கிறது.
    தேவையான பொருட்கள்:

    பாசி பயிறு - 200 கிராம்
    புழுங்கல் அரிசி - 50 கிராம்
    உளுந்து, வெந்தயம் - 25 கிராம்

    தாளிக்க

    கடுகு, கறிவேப்பிலை
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 3

    செய்முறை:

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதல் நாள் இரவு பாசி பயிறு, புழுங்கல் அரிசி, மற்றும் உளுந்து+வெந்தயம் தனித்தனியாக இம்மூன்றையும் ஊற வைத்துக் கொள்ளவும்.

    காலையில் தனித்தனியாக கரகரப்பாக அரைத்து ஒன்றாக கலக்கி உப்பு சேர்த்து 2 மணி நேரம் புளிக்க விடவும்.

    தாளிக்க பொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலந்து பணியாரமாக ஊற்றி எடுக்கலாம்.

    சூப்பரான பாசிப்பயிறு பணியாரம் ரெடி.

    இதையும் படிக்கலாம்..சூப்பரான பீட்ரூட் பிரியாணி
    பீட்ரூட்டில் அல்வா, பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பீட்ரூட் வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - ஒன்று
    அரிசி - ஒரு கப்
    கொத்தமல்லி இலை, புதினா இலை (சேர்த்து) - ஒரு கப்
    பச்சை மிளகாய் - ஒன்று
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
    சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    பட்டை - ஒரு இஞ்ச் நீளத் துண்டு
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 3
    நெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாகக் கழுவி வைக்கவும்.

    பீட்ரூட்டை நறுக்கி தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்து வைக்கவும்.

    அரைத்த பீட்ரூட் உடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு கப் வருமாறு கலந்து வைக்கவும்.

    குக்கரில் எண்ணெய் (அ) நெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், சோம்பு, கிராம்பு சேர்த்து வதக்கவும்.

    பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். இலைகள் வதங்கியதும், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    அதில் அரைத்து கலந்து வைத்திருக்கும் பீட்ரூட் தண்ணீரை ஊற்றி, கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியைப் போட்டு, குக்கரை மூடி, 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிட்டு எடுக்கவும்.

    சுவையான பீட்ரூட் பிரியாணியை லஞ்ச் பாக்ஸில் பேக் செய்து கொடுக்கவும்.

    இந்தப் பிரியாணியின் கலர் வித்தியாசமாக இருப்பதால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்; சுவையும் பிரமாதமாக இருக்கும்.

    காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.
    தேவையான பொருட்கள்:

    அவல் - ஒரு கப்
    சின்ன வெங்காயம் (தோலுரித்து, பொடியாக நறுக்கியது) - கால் கப்
    நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2 (கீறவும்)
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கடுகு - அரை டீஸ்பூன்
    உடைத்த உளுந்து - ஒரு டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    புளித்த தயிர் - ஒரு கப்
    தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    அவலை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.

    தயிரில் தண்ணீர், உப்பு சேர்த்துக் கடைந்துகொள்ளவும் (மோராக இரண்டரை கப் வரை இருக்க வேண்டும்).

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, சீரகம், உளுந்து தாளித்து கடலைப்பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும்.

    கடைந்த மோரை அதில் ஊற்றி கலக்கி, அவல் மாவை போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்த்துருவல் தூவி, நன்கு வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான அவல் மோர்க்கூழ் ரெடி.

    காளானில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காளான் வைத்து சூப்பரான பத்தே நிமிடத்தில் சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    உதிராக வடித்த சாதம் - 2 கப்,
    காளான் - 10,
    பெரிய வெங்காயம் - 1,
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 6 பல்,
    வெங்காயத் தாள் - 2,
    பச்சை கலர் சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்,
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
    சீன உப்பு - அரை டீஸ்பூன்,
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.

    செய்முறை:

    வெங்காயம், இஞ்சி, பூண்டு, காளான் ஆகியவற்றை நீளவாக்கில் மெல்லியதாகவும், வெங்காயத்தாளை பொடியாகவும் நறுக்கிகொள்ளவும்.

    எண்ணெயில் வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வதக்குங்கள்.

    வெங்காயம் நிறம் மாறியதும் காளானைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்கி, பிறகு சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகுத்தூள், சீன உப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கிளறுங்கள்.

    இந்தக் கலவையில் சாதம், வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான காளான் சாதம் ரெடி.

    தக்காளியில் பல்வேறு வைட்டமின் சத்துக்களும், மெக்னீசியம், நார்சத்து, இரும்புசத்து, பரஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளன. இது எளிதில் ஜீரணமாகச் செய்யும். மலச்சிக்கலும் நீங்கும்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 3,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    சிறிய வெங்காயம் - 50 கிராம்,
    உப்பு - தேவையான அளவு
    மிளகு - 1 தேக்கரண்டி,  
    கடலை பருப்பு - 1 மேஜை கரண்டி,
    கடுகு - அரை தேக்கரண்டி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    செய்முறை:

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து கிளறவும்.

    உப்பு, மிளகு சேர்த்து கிளறி இறக்கி ஆறியதும் நன்றாக அரைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து, சட்னியில் சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான தக்காளி சட்னி ரெடி.

    குறிப்பு: வெங்காயத்தை வதக்கிய பின்புதான் தக்காளியை சேர்க்கவேண்டும். முதலில் தக்காளியை கொட்டினால், அதன் சாறு வெங்காயத்தை வதங்கவிடாது.

    சப்பாத்தி, நாண், தோசைக்கு அருமையாக இருக்கும் இந்த தக்காளி தால். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மசூர் தால் - 1 கப்,
    தக்காளி - 4,
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 5 பல்,
    பச்சை மிளகாய் - 2,
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை:

    பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேகவையுங்கள்.

    தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்குங்கள்.

    எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து, அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

    இதனுடன், தக்காளி, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, இதை அப்படியே பருப்பில் சேருங்கள்.

    இதில் தேவையான உப்பு போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

    கடைசியாக, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறுங்கள்.

    சூப்பரான தக்காளி தால் ரெடி.

    குறிப்பு: தாளிக்கும்போது, எண்ணெயைக் குறைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால், ருசியும் மணமும் அதிகரிக்கும்.

    பாகற்காயினை தினமும் வேகவைத்து சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தி கூடும். ஒரு வாரம் தொடர்ந்து பாகற்காய் ஜூஸ் குடித்தால் ஈரல் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
    தேவையான பொருட்கள்:

    பிஞ்சு பாகற்காய் - 100 கிராம்,
    மஞ்சள்தூள் - 2 சிட்டிகை,
    மோர் - 2 டேபிள்ஸ்பூன்,
    சின்ன வெங்காயம் - 6 ,
    தக்காளி - 2 ,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    அரிசி கழுவிய தண்ணீர் - 200 மில்லி,
    சோள மாவு (கார்ன் ஃப்ளார்) கரைசல் - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன், தண்ணீர்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பிஞ்சு பாகற்காயைச் சுத்தம்செய்து பொடியாக நறுக்கி மோர்விட்டு அரை மணி நேரம் கழித்து மோரிலிருந்து எடுத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி போட்டு வதக்கியபின் ஊறவைத்த பாகற்காயைச் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் அதில் அரிசி கழுவிய தண்ணீர், சோள மாவுக்கரைசல் சேர்த்து நன்கு வேகவைத்து மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

    வடிகட்டி அல்லது அப்படியே பரிமாறவும்.

    சத்து நிறைந்த பிஞ்சு பாகற்காய் சூப் ரெடி.

    இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபமானது. சுவை நிறைந்தது. இன்று இந்த ரெசிபியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 10
    சர்க்கரை - 2 ஆழாக்கு
    தேங்காய் - 1
    ஏலக்காய் - 3
    நெய் - 1 டீஸ்பூன்
    முந்திரி - 10
    உப்பு - 1 சிட்டிகை

    செய்முறை

    முட்டையை நுரைபொங்கும் அளவுக்கு நன்றாக அடித்து கலக்கி வடிகட்டி வைக்கவும்.

    சர்க்கரையை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    பின்பு தேங்காயை அரைத்து பிழிந்தெடுத்து வடிகட்டிகொள்ளளவும். இதில் முதல் பாலை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    தேங்காய் பாலில் பொடித்த சர்க்கரையையும் அடித்து வைத்த முட்டையையும் நன்றாக கலந்து கொள்ளவும். முந்திரியை பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும்.

    ஏலக்காயை வாணலியில் வறுத்துக்பொடித்து முட்டை கலவையில் 1 சிட்டிகை உப்புடன் சேர்த்து கலக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் சிறிது நெய், தடவி அதில் இந்த கலவையை ஊற்றி மூடி வைக்கவும்.

    அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முட்டை கலவை இருக்கும் பாத்திரத்தை வைத்து மூடி மிதமான தீயில் வேக வைக்கவும்.

    கலவை வேக ஆரம்பித்தவுடன் மீதமுள்ள நறுக்கிய முந்திரி பருப்பை மேலே தூவி மூடியை கொண்டு மூடி விடவும்.

    வெந்து விட்டதா என்று பார்ப்பதற்கு ஒரு சுத்தமான குச்சியை கலவைக்குள் விட்டு பார்க்கவும்.

    கலவை வெந்து இருந்தால் குச்சியில் ஒட்டாது. பின்பு அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.

    ஆறிய பின்பு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

    குறிப்பு

    வட்டலப்பத்தில் தண்ணீர் இறங்கி விடாமல் கவனமாக மூடியை திறக்கவும்.
    ரவை, சேமியாவில் எப்போது உப்புமா, கிச்சடி செய்து சலித்து விட்டதா? இன்று இவை இரண்டுடன் வெஜிடபிள் சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சேமியா - 1/4 கப்,
    கோதுமை ரவை - 1 கப்,
    உப்பு- தேவைக்கு,
    தயிர் - 1 கப்,
    துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், பச்சைப்பட்டாணி கலந்து - 1 கப்,
    நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்,
    இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - 1/4 டீஸ்பூன்,
    முந்திரிப்பருப்பு - 4,
    நெய் - 1 டீஸ்பூன்.

    செய்முறை

    கடாயில் சிறிது நெய் விட்டு சேமியாவை வறுத்துக் கொள்ளவும்.

    இத்துடன் கோதுரவை, தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

    கடாயில் சிறிது நெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்த பின்னர் இஞ்சி பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கவும்.

    பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், பச்சைப்பட்டாணி, பீன்ஸ் கலவையை சேர்த்து வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் பொடித்த முந்திரிப்பருப்பை சேர்த்து கலந்து, ஊறவைத்த கோதுமை ரவை கலவையில் கொட்டி நன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து, இட்லிகளாக ஊற்றி வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான ரவா - சேமியா வெஜிடபிள் இட்லி ரெடி.

    ×