என் மலர்tooltip icon

    சமையல்

    மழை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட கோதுமை மாவு தட்டை அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 1 கப்
    பாசிப் பருப்பு - 2 மேசைக்கரண்டி
    சோள மாவு - 4 மேசைக்கரண்டி
    எள் - 1 மேசைக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    ப.மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    வெண்ணெய் - 50 கிராம்
    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    பாசிப்பருப்பை அரை அணி நேரம் ஊறவைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    ப.மிளகாய் மற்றும் இஞ்சி துண்டை மிக்சியில் போட்டு தனியாக அரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, அரைத்து வைத்திருந்த பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வெண்ணெய்யை சிறிது சிறிதாக சேர்த்து மாவை கிளறவும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, எள், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

    இப்போது அதில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைய வேண்டும்.

    5 நிமிடங்கள் கழித்து சப்பாத்தி திரட்டுவது போல் மாவை திரட்டி உங்களுக்கு விருப்பமான வடிவில் வெட்டி துண்டு போட்டு கொள்ளவும்.

    அவற்றை சூடான எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தால் மொறுமொறுப்பான கோதுமை மாவு தட்டை ரெடி.
    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று தினை வைத்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தினை அரிசி - 1 கப்
    வெங்காயம் - 1
    கேரட்  - 1
    ப.மிளகாய் - 2
    தேங்காய் - 1 துண்டு
    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுந்து - 2 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கைப்பிடி
    கொத்தமல்லி - 2 கைப்பிடி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    தேங்காய், கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தினை அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்த பின்னர் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்..

    ஓரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், கேரட், தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்..

    பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்..

    காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அரைத்த அரிசி மாவை ஊற்றி கிளறவும்.

    மாவு நன்கு வெந்து சுருண்டு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் 15 வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான தினை வெஜிடபிள் கொழுக்கட்டை ரெடி.

    உருளைக்கிழங்கில் பொரியல், சிப்ஸ், வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2
    அரிசி மாவு - 2 கப்
    கடலை மாவு - 1 கப்
    மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேகவைத்து, அதோடு 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    பின்பு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். அந்தக் கலவையில் வெண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும்.

    இப்போது அரைத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.

    இந்த மாவை சூடான எண்ணெயில் முறுக்கு வடிவில் பிழிந்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    இப்போது உருளைக்கிழங்கு முறுக்கு தயார்.

    காலையில் அல்லது மாலையில் சத்தான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் இந்த பொரி வெஜிடபிள் சாலட் செய்து சாப்பிடலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள்

    பொரி - 1 கப்
    வெங்காயம் - 2
    கொத்தமல்லி சட்னி - 2 ஸ்பூன்
    கேரட் - 2
    வேர்க்கடலை - கால் கப்
    ப.மிளகாய் - 2
    பீட்ரூட் - 2
    கொத்தமல்லி தழை - 1 கையளவு
    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை :

    ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும்.

    வேர்கடலையை வேக வைத்து  கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொரியை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், வேர்க்கடலை, கொத்தமல்லி சட்னி, துருவிய கேரட், பீட்ரூட் மற்றும் கொத்தமல்லி தழை ஆகியற்றை சேர்த்து, நன்கு கலந்துகொள்ளவும்.

    பின், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து, உடன் எலுமிச்சை சாறு கலந்தால் சுவையான பொரி வெஜிடபிள் சாலட் தயார்.

    நாண், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் வெங்காய குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெ.வெங்காயம் - 4
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 2
    கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    கடலை மாவு - 1 டீஸ்பூன்
    கடுகு - சிறிதளவு
    சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள், மஞ்சள் தூள் - சிறிதளவு
    மல்லித்தூள் - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

    அதனுடன் கடலைப்பருப்பு, வெங்காயம், தக்காளி, மிளகாய், சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்கவிடவும்.

    நன்கு வெந்ததும் கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து ஊற்றவும்.

    மீண்டும் கொதிக்க தொடங்கியதும் கொத்தமல்லி தூவி கீழே இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான வெங்காய குருமா ரெடி.

    பொரியை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். இன்று பொரி, காய்கறிகளை சேர்த்து சுவையான சத்தான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    அரிசி பொரி - 2 பெரிய கப்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    உப்பு - 1 டீஸ்பூன்
    வேர்க்கடலை - 1/4 கப்
    எலுமிச்சம் பழம் - 1
     
    தாளிக்க:
     
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    காய்ந்த மிளகாய் - 4
    கறிவேப்பிலை - தேவைக்கு
    கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
    பட்டாணி - சிறிதளவு
    கொத்துமல்லித் தழை - சிறிது

    செய்முறை :

     
    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
     
    ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அதில் பொரியைக் கொட்டவும். பொரி தண்ணீரில் போட்டவுடன் மிதக்கும். கைகளால் லேசாக அழுத்தி விட்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர், இரண்டு கைகளாலும் பொரியை அள்ளி, நன்றாகப் பிழிந்து எடுத்து வேறொருப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
     
    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலைத் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்.
     
    வெங்காயம், தக்காளி சற்று வதங்கியவுடன், அதில் உப்பு, மஞ்சள்தூள், வேக வைத்த பட்டாணியை சேர்த்து வதக்கி, உடனே அடுப்பை அணைத்து விடவும்.
     
    பின் அதில் ஊறவைத்தப் பொரி, வேர்க்கடலை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
     
    அடுத்து அதில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டு ஒரு கிளறுக் கிளறி அதன் மேல் கேரட் துருவல், கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.
     
    சுவையான அரிசி பொரி உப்புமா ரெடி.

    கமகமவென்ற மணத்துடன் தீபாவளி மருந்து தயாரித்து நாளை தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம். தீபாவளி மருந்து தயாரிப்பது எப்படி என்ற விவரம் வருமாறு:-
    தேவையான பொருட்கள்

    கண்டந்திப்பிலி - 50 கிராம்
    அரிசி திப்பிலி - 20 கிராம்
    ஜாதிக்காய் - 1
    ஜாதிபத்திரி - 8 இதழ்
    சித்தரத்தை - 50 கிராம்
    விரலி மஞ்சள் -10 கிராம்
    சுக்கு - 100 கிராம்
    அதிமதுரம் - 20 கிராம்
    ஓமம் - 100 கிராம்
    லவங்கம் - 6
    ஏலக்காய் - 6
    தனியா - 25 கிராம்
    மிளகு - 50 கிராம்
    சீரகம் - 50 கிராம்
    வெல்லம் - 400 கிராம்
    நெய் - 250 கிராம்
    நல்லெண்ணை - 250 கிராம்
    தேன் - 100 கிராம்

    செய்முறை

    கண்டந்திப்பிலி அரிசி திப்பிலி, ஜாதிக்காய், ஜாதி பத்திரி, சித்தரத்தை, விரலி மஞ்சள், சுக்கு, அதிமதுரம் ஆகிய பொருட்களை தனித் தனியாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்,

    பின்னர் வாணலியில் செந்நிறம் வரும்வரை வறுத்து பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்,

    அதன்பிறகு ஓமம், லவங்கம், ஏலக்காய், தனியா, மிளகு, சீரகம் ஆகிய பொருட்களை வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

    அவற்றுடன் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள 8 பொருட்களையும் நன்றாக கலந்து கொஞ்சம் கொஞ்சமாக மிக்சியில் போட்டு நைசாக அரைத்து மாவு ஜல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளவும்.

    ஜல்லடையில் மீது உள்ளதை மீண்டும் மிக்சியில் அரைத்து சலித்து எல்லா மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு மிதமான சூடு கொண்ட தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.

    அதன்பிறகு அடிகனமான வாணலியில் வெல்லத்தை பொடியாக்கி போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்ததும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டி அதை அந்த வாணலியில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    நன்றாக கொதித்தவுடன் நல்லெண்ணை, நெய் இரண்டையும் பாதி பாதி ஊற்றி கிளறி விட வேண்டும்.

    பின்னர் கரைத்து வைத்துள்ள மருந்து பொடியை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கலவை கெட்டியானதும் மீதி இருக்கும் நெய்யையும், நல்லெண்ணையையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறி நெய்யும், எண்ணெணையும் பிரிந்து கெட்டியாக அல்வா பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு தேனை பரவலாக விட்டு நன்றாக கலக்க வேண்டும்.

    2 முதல் 3 மணிநேரம் ஆற விட்டு கிளறினால் கமகம என்ற வாசனையுடன் தீபாவளி மருந்து தயாராகும்.

    தீபாவளி அன்று ஆரோக்கியமான இனிப்பு வகைகளை செய்து, சுவைத்து கொண்டாடுவோம். அந்த வகையில் இன்று கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை ரவை - 50 கிராம்
    தேங்காய் துருவல் - அரை கப்
    கருப்பட்டி - முக்கால் கப்
    முந்திரி, திராட்சை - தேவையான அளவு
    சுக்கு பொடி - ஒரு சிட்டிகை
    ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
    காய்ச்சிய பால் - ஒரு தம்ளர்
    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வாணலியில் நெய்விட்டு உருகியதும், முந்திரி, உலர்ந்த திராட்சை, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே வாணலியில், கோதுமை ரவை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    ரவை வறுப்பட்டதும் 4 கப் வெந்நீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் கருப்பட்டியுடன், தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்கவும்.

    கோதுமை ரவை நன்றாக வெந்ததும், கருப்பட்டி ஜீரா சேரத்து கிளறிவிடவும்.

    கோதுமை ரவையுடன், கருப்பட்டி சேர்ந்து வெந்ததும் சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி, வறுத்து வைத்த முந்திரி கலவையை சேர்க்கவும்.

    இறுதியாக, பால் சேர்த்து கொதி வந்ததும் இறக்கவும்.

    சுவையான கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம் ரெடி..!.

    இதையும் படிக்கலாம்...தீபாவளி ஸ்பெஷல்: பாதாம் பர்ஃபி
    இந்த தீபாவளிக்கு எளிய முறையில் செய்யக்கூடிய பாதாம் பர்ஃபி செய்து குடும்பத்தில் உள்ளவர்களை அசத்துங்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:
     
    பாதாம் - 1 1/2 கப்
    சர்க்கரை - 1 1/4 கப்
    ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    தண்ணீர் - 100 மில்லி
    குங்குமப்பூ - அலங்கரிக்க
    பாதாம், பிஸ்தா - அலங்கரிக்க

    செய்முறை:
     
    பாதாமை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து தோலை உரித்து கொள்ளவும். தோல் நீக்கிய பாதாமை வாணலியில் ஈரம் போக லேசாக வறுத்து பொடி செய்துக்கொள்ள வேண்டும்.
     
    சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து நான் ஸ்டிக் வாணலியில் கொதிக்க விடவேண்டும். சர்க்கரை நன்கு கரைந்தவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து பாதாம் பொடியையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
     
    பாதாம் கலவை நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சேர்ந்தும் வரும் வரையில் கைவிடாமல் கிளறி அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஆறிய பின் அதை நன்கு வெடிப்புகள் இல்லாமல் பிசைந்துக்கொள்ள வேண்டும்.
     
    பிசைந்த மாவு பட்டர் பேப்பர் அல்லது நெய் தடவிய தட்டில் பரப்பி மேலே பாதாம் துண்டுகள் மற்றும் குங்குமப்பூவை தூவி துண்டுகள் போடவும்.

    சுவையான பாதாம் பர்ஃபி தயார்.

    இந்த இரண்டு வேர் காய்கறிகளிலும் வைட்டமின் சி, ஏ, துத்தநாகம், போலிக் அமிலம், இரும்பு, நார்ச்சத்து, மாங்கனீஸ் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - பாதி
    கேரட் - 4
    இஞ்சி - சிறு துண்டு
    தண்ணீர் - அரை கப்
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    கேரட் மற்றும் பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    அதனுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு, தண்ணீர் கலந்து ஜூஸ் பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும்.

    பின்பு வடிகட்டி பருகலாம்.

    காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. விரும்பினால் சிறிதளவு மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

    சூப்பரான கேரட் பீட்ரூட் ஜூஸ் ரெடி.

    தீபாவளிக்கு அனைத்து வீடுகளிலும் முறுக்கு சுடப்படும். எப்போதும் ஒரே மாதிரியான முறுக்கை சுடுவதற்கு பதிலாக, இந்த வருடம் சற்று வித்தியாசமாக முந்திரி முறுக்கு செய்து பாருங்கள்.
    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 2 கப்
    முந்திரி - 75 கிராம்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை

    முந்திரியை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த முந்திரி பேஸ்ட், நெய் மற்றும் உப்பு சேர்த்து கையால் நன்கு பிசையவும்.

    வேண்டுமானால் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி முறுக்கு பதத்திற்கு மாவை மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    எண்ணெய் சூடானதும், முறுக்கு அச்சில் எண்ணெயை தடவி, பின் அதனுள் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நேரடியாக எண்ணெயில் பிழிய வேண்டும்.

    பின் அதனை பொன்னிறமாக பொரித்து எடுத்து, மீதமுள்ள மாவையும் அதேப்போல் பிழிந்து பொரித்து எடுத்தால், முந்திரி முறுக்கு ரெடி!!!

    ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சரும செல்களை புத்துயிர் பெறச்செய்து, சருமத்திற்கு கூடுதல் பொலிவு அளிக்க உதவும். ஒளிரும் சருமத்தை பெறவும் சுவையான ஆப்பிள் ஜூஸை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    ஆப்பிள் - 4
    எலுமிச்சை - அரை பழம்
    இஞ்சி - சிறு துண்டு
    தண்ணீர் - 1 கப்
    உப்பு - சிறிதளவு

    செய்முறை:

    ஆப்பிள்களை தோலுரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அதனுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கலந்து கிளறிவிடவும்.

    இந்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து காலை வேளையில் பருகி வருவதன் மூலம் சரும பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.

    சூப்பரான ஆப்பிள் எலுமிச்சை ஜூஸ் ரெடி.

    ×