
பாசி பயிறு - 200 கிராம்
புழுங்கல் அரிசி - 50 கிராம்
உளுந்து, வெந்தயம் - 25 கிராம்
தாளிக்க
கடுகு, கறிவேப்பிலை
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 3
செய்முறை:
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதல் நாள் இரவு பாசி பயிறு, புழுங்கல் அரிசி, மற்றும் உளுந்து+வெந்தயம் தனித்தனியாக இம்மூன்றையும் ஊற வைத்துக் கொள்ளவும்.
காலையில் தனித்தனியாக கரகரப்பாக அரைத்து ஒன்றாக கலக்கி உப்பு சேர்த்து 2 மணி நேரம் புளிக்க விடவும்.
தாளிக்க பொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலந்து பணியாரமாக ஊற்றி எடுக்கலாம்.