என் மலர்tooltip icon

    சமையல்

    பெண்கள் தங்கள் வீடுகளில் மாம்பழ பர்பி தயாரித்து வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி அசத்தலாம். இந்த பர்பி தயாரிக்கும் முறை விவரம் வருமாறு:
    தேவையான பொருட்கள்:

    மாம்பழ துண்டுகள் - 2 கப்
    பால் - 2 கப்
    தேங்காய் துருவல் - 1 கப்
    ரவை - 1.5 கப்
    சர்க்கரை - 2 கப்
    நெய் - 1 கப்
    ஏலக்காய் தூள் - 1.5 தேக்கரண்டி

    செய்முறை:


    ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.

    தேங்காய் துருவலுடன் பால் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்த விழுதுடன் ரவை சேர்த்து அடுப்பில் வேக வைக்கவும்.

    இதனுடன் மாம்பழம், சர்க்கரை சேர்த்து கிளறவும்.

    பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து இறக்கி நெய் தடவிய தட்டில் ஊற்றி துண்டுகள் ஆக்கவும்.

    இப்போது மாம்பழ பர்ஃபி ரெடியாகி விட்டது.

    டபுள் பீன்ஸில் உள்ள அதிகளவு கால்சியம், மக்னீசியம் சத்துக்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது.
    தேவையான பொருட்கள்

    டபுள் பீன்ஸ் - 1 கப்
    சோம்பு - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - 1 டீஸ்பூன்
    இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    டபுள் பீன்ஸை உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சித்துருவல் போட்டு தாளித்த பின்னர் வேக வைத்த டபுள் பீன்ஸ், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

    கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான டபுள் பீன்ஸ் சுண்டல் ரெடி.

    இதையும் படிக்கலாம்...சூப்பரான பட்டர் பீன்ஸ் புலாவ்
    பட்டர் பீன்ஸில் உள்ள நார்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலை விட்டு வெளியேற்றுகிறது. இதய நோய் ஏற்படாமல் இக்காயில் உள்ள ஊட்டசத்துக்கள் நம்மைப் பாதுகாக்கின்றன.
    தேவையான பொருட்கள்

    பட்டர் பீன்ஸ் - 150 கிராம்
    உருளைக்கிழங்கு - 1
    பெரிய வெங்காயம் - 2
    மீடியம் சைஸ் தக்காளி - 3
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4

    தாளிக்க

    பட்டை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர சோம்பு
    கொத்தமல்லி இலை, புதினா இலை - 1 கைப்பிடி
    நெய் - ஒரு ஸ்பூன்

    செய்முறை

    தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.

    உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை எல்லாவற்றையும் போட்டு நன்கு வாசனை வந்ததும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்..

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    பின்னர் அதில் கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கழுவி வைத்துள்ள பட்டர் பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

    பச்சை வாசனை போனவுடன் நாம் ஏற்கனவே 10 நிமிடம் ஊற வைத்துள்ள அரிசியை உள்ளே சேர்த்து ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். இறுதியாக உப்பு, காரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு குக்கரை மூடவும்

    இப்போது சத்தான சுவையான பட்டர் பீன்ஸ் புலாவ் ரெடி
    மரவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மலச்சிக்கல், வயிறுவீக்கம் மற்றும் செரிமான குறைபாடு போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுவிக்க உதவியாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    மரவள்ளிக்கிழங்கு - ஒன்று,
    இட்லி அரிசி - 200 கிராம்,
    துவரம்பருப்பு - 100 கிராம்,
    கடலைப்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 4,
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்),
    பூண்டுப் பல் - 2,
    மிளகு - 10,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - 100 மில்லி.

    செய்முறை:

    மரவள்ளிக்கிழங்கைத் தோலுரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    இட்லி அரிசியைத் தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

    துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    ஊறவைத்த அரிசியைக் களைந்து, நறுக்கிய மரவள்ளிக்கிழங்குடன் மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்துத் தண்ணீர்விட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அடுத்து ஊறவைத்த பருப்பையும் சேர்த்து, காய்ந்த மிளகாய், இஞ்சி, தோலுரித்த பூண்டுப் பல் போட்டு, மிளகு, உப்பு சேர்த்து அடை மாவுப் பதத்துக்கு கொரகொரப்பாக அரைக்கவும்.

    அரைத்த மாவை தோசைக்கல்லில் பரவலாக மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் எண்ணெய்விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

    சத்தான சுவையான மரவள்ளிக்கிழங்கு அடை ரெடி.

    பால் போளி, தேங்காய்ப் போளி, பருப்புப் போளி தான் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. நெல்லிக்காய் கிடைக்கும் சீஸனில் இந்தப் போளியை செய்து சுவைக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மைதா மாவு - 50 கிராம்,
    பெரிய நெல்லிக்காய் - 5,
    நெய் - 75 மில்லி,
    கடலைப்பருப்பு - 50 கிராம்,
    வெல்லம் - 100 கிராம் (பொடித்துக்கொள்ளவும்),
    தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
    கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை,
    நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் நல்லெண்ணெய், கேசரி பவுடர் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து மூடி வைக்கவும்.

    நெல்லிக்காயை வேகவைத்து உதிர்த்து கொட்டை எடுக்கவும்.

    கடலைப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்து தண்ணீர் வடிக்கவும்.

    வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும்.

    வேக வைத்த கடலைப்பருப்பு, நெல்லிக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் சிறிதளவு வெல்லத் தண்ணீரை விட்டு கெட்டியாக அரைக்கவும்.

    வாணலியில் மீதம் உள்ள வெல்லத் தண்ணீர், அரைத்த விழுது சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். ஆறிய உடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.

    ஒரு வாழையிலையில் சிறிதளவு நெய் தடவி, மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து லேசாக குழவியால் உருட்டி பூரணத்தை உள்ளே வைத்து மூடி கைகளால் போளி வடிவில் தட்டவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் தீயைக் குறைத்து, தட்டிவைத்து இருக்கும் போளியை ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் நெய் தடவி வாட்டி எடுக்கவும்.

    சர்க்கரைவள்ளிக்கிழங்கில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது. இன்று சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 100 கிராம்,
    பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - ஒன்று,
    கடுகு - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை:


    சர்க்கரைவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி மீடியமான துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்து கொள்ளவும்.

    பாசிப்பருப்பையும் குழையாமல் தனியாக வேக வைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு போட்டு சிறிது வெடித்ததும் மிளகாயைக் கிள்ளிப் போட்டு வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் தண்ணீர் வடித்துப் போட்டு, வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்க்கவும்.

    இதனுடன் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

    சூப்பரான சர்க்கரைவள்ளிக்கிழங்குப் பொரியல் ரெடி.
    மாப்பிள்ளை சம்பா அரிசியில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. இன்று மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாப்பிள்ளை சம்பா அரிசி - 100 கிராம்,
    தண்ணீர் - 100 மில்லி,
    மோர் - 50 மில்லி,
    சின்ன வெங்காயம் - 8 ,
    பச்சை மிளகாய் - ஒன்று ,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மாப்பிள்ளை சம்பா அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்த பிறகு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    ஒரு வாணலியில் அரைத்த மாப்பிள்ளை அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

    பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த கஞ்சியில் ஊற்றவும்.

    நன்கு ஆறியபின் மோர் சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி ரெடி.
    தக்காளி சாதம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. தேங்காய் பால் சேர்த்து தக்காளி சாதம் செய்தால் அருமையாக இருக்கும். இன்று ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சை பட்டாணி - அரை கப்,
    பச்சரிசி - 2 கப்,
    தேங்காய்ப் பால் - 2 கப்,
    வெங்காயம் - 1
    தக்காளி - 6,
    பச்சை மிளகாய் - 2,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை:

    அரிசியை சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள்.

    தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள்.

    சாதத்தில் தக்காளி கலவையை சேர்த்துக் கலக்குங்கள்.

    புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.

    சூப்பரான தேங்காய்ப்பால் தக்காளி சாதம் ரெடி.
    கறிவேப்பிலை சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் நீங்க பெறுவார்கள்.
    தேவையான பொருட்கள்:

    உதிராக வடித்த சாதம் - 2 கப்,
    கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்,
    கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
    வேர்க்கடலை - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.

    பொடிக்க:

    மிளகு, கசகசா - தலா 1 டீஸ்பூன்,
    சீரகம் - 2 டீஸ்பூன்,
    முந்திரி - 4,
    கறிவேப்பிலை - 1 கப்,
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
    மிளகாய் வற்றல் - 6.

    செய்முறை:

    கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள்.

    பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்து, வேர்க்கடலை, கடலைப் பருப்பு போட்டு தாளித்த பின்னர் அதில் பொடித்த பொடி, சாதம், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

    அருமையான கறிவேப்பிலை சாதம் ரெடி.
    ஆயுத பூஜையை முன்னிட்டு அனைவரின் வீட்டிலும் பொரி இருக்கும். அந்த பொரியை அப்படியே சாப்பிடாமல் அதில் மசாலா சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    பொரி - 2 கப்
    பொட்டுக்கடலை - 1/2 கப்
    கறிவேப்பிலை - 20
    மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்
    பூண்டு பல் - 6
    உப்பு - தேவையான அளவு
    வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்
    தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, பொட்டுக்கடலை, தட்டிய பூண்டு, வேர்க்கடலை, மிளகாய் தூள் ஆகியவற்றை போட்டு மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை வதக்கி கொள்ளவும்.

    பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதில் பொரி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை போட்டு அந்த கடாய் சூட்டிலேயே நன்கு கலந்துவிட வேண்டும். அவ்வளவு தான் எளிய முறையில் சுவையான மசாலா பொரி தயார்.
    உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் கோதுமையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமை ரவை வைத்து வெஜிடபிள் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - கால் கப்
    வெங்காயம், வெள்ளரிக்காய், குடைமிளகாய் - தலா ஒன்று
    ப்ராக்கோலி - பாதியளவு
    தக்காளி - 2
    ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
    பூண்டு - 2 பல்
    எலுமிச்சைச் சாறு -  2 டேபிள்ஸ்பூன்
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    வறுத்த பாதாம்பருப்பு - 10
    பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப     
    ஆரோக்கியமான சாலட் வகைகள்

    செய்முறை:

    கோதுமை ரவையை நன்றாகக் கழுவி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழையாமல் உதிரியாக வேகவைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும்.

    குடைமிளகாய்களை விதை நீக்கி நான்கு துண்டுகளாக, பெரியதாக நறுக்கிக்கொள்ளவும். ப்ராக்கோலியை பெரிய பூக்களாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய கலர் குடைமிளகாய், பூண்டு, ப்ராக்கோலி ஆகியவற்றை லேசாக, நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு, வதக்கிய குடைமிளகாய், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். (ப்ராக்கோலியை நறுக்கத் தேவையில்லை).

    வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

    வேகவைத்த கோதுமை ரவை, காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து அதன்மேல் வறுத்து நீளமாக நறுக்கிய பாதாம்பருப்பைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

    கோதுமை ரவை வெஜிடபிள் சாலட் ரெடி.

    குறிப்பு: இந்த சாலட்டில் கோதுமை ரவைக்குப் பதிலாக வேகவைத்த கினுவா என்ற தானியம், அல்லது வேகவைத்த சிறுதானியங்களைச் சேர்க்கலாம்..
    உங்கள் வீட்டில் இரவு செய்த சப்பாத்தி மீதம் இருந்தால், அதனைக் கொண்டு காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு அருமையான ஒரு ரெசிபியை செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சப்பாத்தி - 4
    முட்டைக்கோஸ் - 1/4 கப்
    கேரட் - 2
    குடைமிளகாய் - 1 சிறியது
    பூண்டு - 5 பற்கள்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்
    தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    முட்டைக்கோஸ், கேரட், குடைமிளகாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் சப்பாத்தியை கத்தரிக்கோல் பயன்படுத்தி நூடுல்ஸ் போன்று நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    பின்பு அதில் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் குடைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

    பிறகு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

    பின் வெட்டி வைத்துள்ள சப்பாத்திகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சப்பாத்தி வெஜிடபிள் நூடுல்ஸ் ரெடி!!!
    ×