என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை சாதம்
Byமாலை மலர்18 Oct 2021 5:26 AM GMT (Updated: 18 Oct 2021 5:26 AM GMT)
கறிவேப்பிலை சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் நீங்க பெறுவார்கள்.
தேவையான பொருட்கள்:
உதிராக வடித்த சாதம் - 2 கப்,
கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
வேர்க்கடலை - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
பொடிக்க:
மிளகு, கசகசா - தலா 1 டீஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
முந்திரி - 4,
கறிவேப்பிலை - 1 கப்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 6.
செய்முறை:
கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள்.
பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்து, வேர்க்கடலை, கடலைப் பருப்பு போட்டு தாளித்த பின்னர் அதில் பொடித்த பொடி, சாதம், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.
அருமையான கறிவேப்பிலை சாதம் ரெடி.
உதிராக வடித்த சாதம் - 2 கப்,
கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
வேர்க்கடலை - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
பொடிக்க:
மிளகு, கசகசா - தலா 1 டீஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
முந்திரி - 4,
கறிவேப்பிலை - 1 கப்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 6.
செய்முறை:
கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள்.
பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்து, வேர்க்கடலை, கடலைப் பருப்பு போட்டு தாளித்த பின்னர் அதில் பொடித்த பொடி, சாதம், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.
அருமையான கறிவேப்பிலை சாதம் ரெடி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X