search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தேங்காய்ப்பால் தக்காளி சாதம்
    X
    தேங்காய்ப்பால் தக்காளி சாதம்

    தேங்காய்ப்பால் தக்காளி சாதம்

    தக்காளி சாதம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. தேங்காய் பால் சேர்த்து தக்காளி சாதம் செய்தால் அருமையாக இருக்கும். இன்று ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சை பட்டாணி - அரை கப்,
    பச்சரிசி - 2 கப்,
    தேங்காய்ப் பால் - 2 கப்,
    வெங்காயம் - 1
    தக்காளி - 6,
    பச்சை மிளகாய் - 2,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை:

    அரிசியை சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள்.

    தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள்.

    சாதத்தில் தக்காளி கலவையை சேர்த்துக் கலக்குங்கள்.

    புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.

    சூப்பரான தேங்காய்ப்பால் தக்காளி சாதம் ரெடி.
    Next Story
    ×