என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
தற்போது கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பெண்ணுக்கு காசநோய் இருப்பது தெரிய வந்து, பிறகு முறையான சிகிச்சையினைச் செய்துவிட்டால் அந்த தாய்க்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது உறுதி.
தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும்போது காசநோய் ஏற்பட்டால் அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது. மேலும், காசநோய் இருக்கும் பெண் கர்ப்பம் தரிப்பது சகஜமாக நிகழக்கூடியதே. இனப்பெருக்க உறுப்புகளில் காசநோயிருந்தால்தான் கர்ப்பம் தரிப்பது என்பது இயலாத காரியமாகும்.
மருத்துவம் முன்னேறாத காலத்தில் காசநோய் ஒரு பெண்ணுக்கு வந்துவிட்டால் அதைக் குறிக்க ஒரு சொல்வழக்கு இருந்திருக்கிறது. அது என்னவென்றால்,
‘‘கன்னி கழியாத கன்னிக்குக் காசமெனில் கல்யாணமில்லை. கல்யாணமானவளுக்கு கர்ப்பமில்லை, கர்ப்பமானவளுக்கு அடுத்த கர்ப்பமில்லை, தாயனவளுக்குத் தாய்ப்பாலூட்ட வழியில்லை’’ என்பதாம்.
இப்போது கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பெண்ணுக்கு காசநோய் இருப்பது தெரிய வந்து, பிறகு முறையான சிகிச்சையினைச் செய்துவிட்டால் அந்த தாய்க்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது உறுதி. கர்ப்பப்பையின் காசநோயர்ல் காசநோய்க்கிருமிகள் ‘பனிக்குட நீர்’ எனும் ஆம்னியாடிக் திரவத்தில் கலந்து விடும். அவற்றை கருப்பையில் இருக்கும் குழந்தை விழுங்கிவிடும். அக்கிருமிகள் பச்சளம் குழந்தைக்கு காசநோயினை ஏற்படுத்திவிடும்.
பிறவிக் காசநோயின் அல்லது பச்சிளம் குழந்தை காசநோயின் அறிகுறிகள் என்ன?
பிறவிக் காச நோயால் மஞ்சள் காமாலை, இரத்த சோகை, குழந்தையின் வளர்ச்சி குறைவு, நீலம் பூத்து இருத்தல், பெருத்த மண்ணீரல், நுரையீரலில் காசத் தொற்று நோய் போன்றவை இருக்கும்.
பிறவிக் காச நோயின் நிர்ணயம்
இக்காச நோயினினி நிர்ணயிக்க இரைப்பை கழுவலில் காச நோய்க்கிருமியைத் தேடல், நுரையீரல் அல்லது கல்லீரல் பயாப்சி போன்ற சோதனைகள் தேவைப்படும். பச்சிளம் குழந்தையின் வாய் வழியாகவோ அல்லது மூக்கு வாயாகவோ மெல்லிய ரப்பர் அல்லது பிளாஸ்டிக் குழாயினைச் செலுத்தி பின்னர் வயிற்றிலிருந்து வரக்கூடிய நீரினை எடுத்து, அதில் காச நோய்க்கிருமிகள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்துப் பார்ப்பதையே ‘இரைப்பை கழுவலில் காசநோய்க்கிருமியைத் தேடல்’ என்போம்.
இவ்வளவு சித்திரவதையான சோதனைதான் பச்சிளம் குழந்தைக்கான காசநோயினை நிர்ணயிக்க உதவுமா? மற்ற பரிசோதனைகளான தோல் ஊசி பரிசோதனை போன்றவற்றால் நிர்ணயிக்க முடியாதா?
தோல் ஊசி பரிசோதனை பச்சிளம் குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தோருக்கும் பயன்படாது. பச்சிளம் குழந்தைக்குள்ள காசநோயினை உரியவாறு நிர்ணயம் செய்து சரியான மருத்துவம் செய்துவிட்டால் குழந்தையின் வாழ்வும் மலரும், குழந்தையும் பிழைத்துக்கொள்ளும். தாய்க்கும் காசநோய்க்கான கிசிச்சையினை முறையாக அளிப்பது மிக அவசியம்.
மருத்துவம் முன்னேறாத காலத்தில் காசநோய் ஒரு பெண்ணுக்கு வந்துவிட்டால் அதைக் குறிக்க ஒரு சொல்வழக்கு இருந்திருக்கிறது. அது என்னவென்றால்,
‘‘கன்னி கழியாத கன்னிக்குக் காசமெனில் கல்யாணமில்லை. கல்யாணமானவளுக்கு கர்ப்பமில்லை, கர்ப்பமானவளுக்கு அடுத்த கர்ப்பமில்லை, தாயனவளுக்குத் தாய்ப்பாலூட்ட வழியில்லை’’ என்பதாம்.
இப்போது கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பெண்ணுக்கு காசநோய் இருப்பது தெரிய வந்து, பிறகு முறையான சிகிச்சையினைச் செய்துவிட்டால் அந்த தாய்க்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது உறுதி. கர்ப்பப்பையின் காசநோயர்ல் காசநோய்க்கிருமிகள் ‘பனிக்குட நீர்’ எனும் ஆம்னியாடிக் திரவத்தில் கலந்து விடும். அவற்றை கருப்பையில் இருக்கும் குழந்தை விழுங்கிவிடும். அக்கிருமிகள் பச்சளம் குழந்தைக்கு காசநோயினை ஏற்படுத்திவிடும்.
பிறவிக் காசநோயின் அல்லது பச்சிளம் குழந்தை காசநோயின் அறிகுறிகள் என்ன?
பிறவிக் காச நோயால் மஞ்சள் காமாலை, இரத்த சோகை, குழந்தையின் வளர்ச்சி குறைவு, நீலம் பூத்து இருத்தல், பெருத்த மண்ணீரல், நுரையீரலில் காசத் தொற்று நோய் போன்றவை இருக்கும்.
பிறவிக் காச நோயின் நிர்ணயம்
இக்காச நோயினினி நிர்ணயிக்க இரைப்பை கழுவலில் காச நோய்க்கிருமியைத் தேடல், நுரையீரல் அல்லது கல்லீரல் பயாப்சி போன்ற சோதனைகள் தேவைப்படும். பச்சிளம் குழந்தையின் வாய் வழியாகவோ அல்லது மூக்கு வாயாகவோ மெல்லிய ரப்பர் அல்லது பிளாஸ்டிக் குழாயினைச் செலுத்தி பின்னர் வயிற்றிலிருந்து வரக்கூடிய நீரினை எடுத்து, அதில் காச நோய்க்கிருமிகள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்துப் பார்ப்பதையே ‘இரைப்பை கழுவலில் காசநோய்க்கிருமியைத் தேடல்’ என்போம்.
இவ்வளவு சித்திரவதையான சோதனைதான் பச்சிளம் குழந்தைக்கான காசநோயினை நிர்ணயிக்க உதவுமா? மற்ற பரிசோதனைகளான தோல் ஊசி பரிசோதனை போன்றவற்றால் நிர்ணயிக்க முடியாதா?
தோல் ஊசி பரிசோதனை பச்சிளம் குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தோருக்கும் பயன்படாது. பச்சிளம் குழந்தைக்குள்ள காசநோயினை உரியவாறு நிர்ணயம் செய்து சரியான மருத்துவம் செய்துவிட்டால் குழந்தையின் வாழ்வும் மலரும், குழந்தையும் பிழைத்துக்கொள்ளும். தாய்க்கும் காசநோய்க்கான கிசிச்சையினை முறையாக அளிப்பது மிக அவசியம்.
கேழ்வரகில் கால்சியம், நார்ச்சத்து ஆகிய இரண்டும் அதிகம் இருக்கிறது. இன்று கேழ்வரகில் சத்தான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 2 கப்
உளுத்தம் பருப்பு - 3/4 கப்

செய்முறை :
உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும். ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும்.
கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு, அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும்.
இட்லி பாத்திரத்தில் அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
கேழ்வரகு மாவு - 2 கப்
உளுத்தம் பருப்பு - 3/4 கப்
உப்பு - 1 தே.கரண்டி

செய்முறை :
உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும். ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும்.
கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு, அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும்.
இட்லி பாத்திரத்தில் அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான சத்தான கேழ்வரகு இட்லி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
ஒவ்வொரு பயிற்சிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் இருந்தாலும், இந்த ஸ்விஸ் பந்துக்கென தனிச் சிறப்பு இருக்கிறது.
நாற்காலியில் உட்காரும்போது, அது நம்மை பேலன்ஸ் செய்யுமா என்ற கவலை இல்லாது நிம்மதியாக உட்காருவோம். ஆனால், நிலைத்தன்மையற்ற பந்தில் மீது உட்கார்ந்தால்? நிலைதடுமாறி கீழே விழுந்துவிடுவோம் என்று தோன்றும். ஆனால், ஸ்விஸ் பந்தின் மீது உட்கார்ந்து பயிற்சி செய்யும்போது, நம்மை அறியாமல் நமது உடல் சரியான போஸ்சரை தேர்ந்தெடுத்து தடுமாறாமல் காத்துக்கொள்ளும். உடலும் ஃபிட்டாகும்.
ஒவ்வொரு பயிற்சிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் இருந்தாலும், இந்த ஸ்விஸ் பந்துக்கென தனிச் சிறப்பு இருக்கிறது. காலையில் இந்த பயிற்சிகளை செய்யும்போது, உடல் முழுக்க சீரான ரத்த ஓட்டம் நடக்கிறது. இதனால், நாள் முழுவதும் ஃபிரஷ்ஷான உணர்வு கிடைக்கும். இடுப்பு, வயிற்றை ஃபிட்டாக்கும் 15 நிமிட பயிற்சிகள்…
ஸ்குவாட் (Squat)
சுவருக்கும், முதுகுக்கும் இடையில் பந்தை வைத்து, தரையில் கால்களை அகட்டி நேராக நிற்க வேண்டும். கைகளை இடுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது, நாற்காலியில் அமர்வதுபோல, உட்கார்ந்து எழ வேண்டும். இப்பயிற்சியின் போது, மூச்சை சீராக உள்ளிழுத்து, வெளிவிட வேண்டியது அவசியம். இதை, 15 முறை செய்யலாம்.
பலன்கள்: உடல் முழுவதுக்குமான பயிற்சி இது. முதுகுத் தசைகள் மற்றும் தொடைத் தசைகள் வலுவடையும், ஃபிட்டாகும்.
அப்டக்டர் ஸ்குவாட் (Abductor Squat)
ஸ்குவாட் பயிற்சியில் நின்றதுபோல இருக்க வேண்டும். கால்களை அகட்டி வைக்கும்போது, விரல்கள் இரண்டும் வௌிப்புறம் நோக்கியபடி வைக்க வேண்டும். கையில் சற்று கனமான மெடிசின் பால் அல்லது கனமானப் பொருளைப் பிடித்து மேலே உயர்த்தி இறக்க வேண்டும். இதை 20 முறை செய்யலாம்.
பலன்கள்: கால்பகுதியில் அமைந்திருக்கும் வெளிப்புற தசைகளின் இயக்கம் அதிகரிக்கும். ரத்த ஓட்டமும் தூண்டப்படும். முக்கியமாக பிரசவத்தின்போது கால்தசைகள் விரிவடைய உதவும். டீன் ஏஜ் வயதில் இருக்கும் பெண்களுக்கு சிறந்த உடற்பயிற்சி இது.
அப்டாமினல் கிரன்ச் (Abdominal crunch)
கால்களை அகட்டி தரையில் நன்கு பதித்து, சுவிஸ் பந்தின் மீது நேராக அமர வேண்டும். கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளலாம். அப்படியே மெதுவாக பந்தின் மீது படுத்து, தலையை நன்கு சாய்க்க வேண்டும். இப்போது, கைகளை மேலே உயர்த்த வேண்டும். அதேநேரம் தலையையும் உயர்த்த வேண்டும். பின்னர், இயல்புநிலைக்குத் திரும்பலாம். இப்படி, 10 – 15 முறை செய்யலாம்.
பலன்கள்: புவி ஈர்ப்பு விசைக்கு (anti gravity) எதிராகச் செய்யப்படும் உடற்பயிற்சி என்பதால் மேல் வயிறு, இடுப்பு மற்றும் கைகளில் உள்ள கொழுப்பு கரையும். தசைகள் வலுவடையும்.
ரிவர்ஸ் கிரன்ச் (Reverse crunch)
தரையில் அமர்ந்து கால்களை சற்று அகட்டி வைக்க வேண்டும். கால்களுக்கு இடையே சுவிஸ் பந்தை வைத்து, பாதங்களால் அழுத்தமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தரையில் பதிக்க வேண்டும். இப்போது, மேல் உடலை சாய்த்து தரையில் படுக்க வேண்டும். பின்னர், மெதுவாக கால்களால் பந்தினை மேலே உயர்த்தி இறக்க வேண்டும். இதை, 15 முதல் 20 முறை செய்யலாம்.
பலன்கள்: வயிறு, அடிவயிறு, தொடை, இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பு கரைந்து, தசைகள் வலுவடையும்.
பட் மஸ்கல் கிரன்ச் (Butt muscle crunch)
கட்டில் அல்லது படுக்கும் வகையிலான நாற்காலியில், நுனியில் அமர்ந்து கொள்ள வேண்டும். பந்தை கால்களுக்கு இடையில், பக்கவாட்டுப் பாதங்களால் பிடித்துக் கொண்டு, கைகளை கட்டிலின் முனையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்போது மெதுவாக படுக்க வேண்டும். அப்படியே மூச்சை உள்ளிழுத்து, வெளியில் விட்டபடி பந்தை பிடித்தபடி கால்களால் உயர்த்தி, இறக்க வேண்டும். இதை 10 முறை செய்யலாம்.
பலன்கள்: உள்ளுறுப்புகள் பலப்படும். சிறுநீரகம் தொடர்பான தொந்தரவுகளை தீர்க்கும். இடுப்பு மற்றும் பின்புறத் தசைகள் வலுவடைந்து, ஃபிட்டாகும்.
ஒவ்வொரு பயிற்சிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் இருந்தாலும், இந்த ஸ்விஸ் பந்துக்கென தனிச் சிறப்பு இருக்கிறது. காலையில் இந்த பயிற்சிகளை செய்யும்போது, உடல் முழுக்க சீரான ரத்த ஓட்டம் நடக்கிறது. இதனால், நாள் முழுவதும் ஃபிரஷ்ஷான உணர்வு கிடைக்கும். இடுப்பு, வயிற்றை ஃபிட்டாக்கும் 15 நிமிட பயிற்சிகள்…
ஸ்குவாட் (Squat)
சுவருக்கும், முதுகுக்கும் இடையில் பந்தை வைத்து, தரையில் கால்களை அகட்டி நேராக நிற்க வேண்டும். கைகளை இடுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது, நாற்காலியில் அமர்வதுபோல, உட்கார்ந்து எழ வேண்டும். இப்பயிற்சியின் போது, மூச்சை சீராக உள்ளிழுத்து, வெளிவிட வேண்டியது அவசியம். இதை, 15 முறை செய்யலாம்.
பலன்கள்: உடல் முழுவதுக்குமான பயிற்சி இது. முதுகுத் தசைகள் மற்றும் தொடைத் தசைகள் வலுவடையும், ஃபிட்டாகும்.
அப்டக்டர் ஸ்குவாட் (Abductor Squat)
ஸ்குவாட் பயிற்சியில் நின்றதுபோல இருக்க வேண்டும். கால்களை அகட்டி வைக்கும்போது, விரல்கள் இரண்டும் வௌிப்புறம் நோக்கியபடி வைக்க வேண்டும். கையில் சற்று கனமான மெடிசின் பால் அல்லது கனமானப் பொருளைப் பிடித்து மேலே உயர்த்தி இறக்க வேண்டும். இதை 20 முறை செய்யலாம்.
பலன்கள்: கால்பகுதியில் அமைந்திருக்கும் வெளிப்புற தசைகளின் இயக்கம் அதிகரிக்கும். ரத்த ஓட்டமும் தூண்டப்படும். முக்கியமாக பிரசவத்தின்போது கால்தசைகள் விரிவடைய உதவும். டீன் ஏஜ் வயதில் இருக்கும் பெண்களுக்கு சிறந்த உடற்பயிற்சி இது.
அப்டாமினல் கிரன்ச் (Abdominal crunch)
கால்களை அகட்டி தரையில் நன்கு பதித்து, சுவிஸ் பந்தின் மீது நேராக அமர வேண்டும். கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளலாம். அப்படியே மெதுவாக பந்தின் மீது படுத்து, தலையை நன்கு சாய்க்க வேண்டும். இப்போது, கைகளை மேலே உயர்த்த வேண்டும். அதேநேரம் தலையையும் உயர்த்த வேண்டும். பின்னர், இயல்புநிலைக்குத் திரும்பலாம். இப்படி, 10 – 15 முறை செய்யலாம்.
பலன்கள்: புவி ஈர்ப்பு விசைக்கு (anti gravity) எதிராகச் செய்யப்படும் உடற்பயிற்சி என்பதால் மேல் வயிறு, இடுப்பு மற்றும் கைகளில் உள்ள கொழுப்பு கரையும். தசைகள் வலுவடையும்.
ரிவர்ஸ் கிரன்ச் (Reverse crunch)
தரையில் அமர்ந்து கால்களை சற்று அகட்டி வைக்க வேண்டும். கால்களுக்கு இடையே சுவிஸ் பந்தை வைத்து, பாதங்களால் அழுத்தமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தரையில் பதிக்க வேண்டும். இப்போது, மேல் உடலை சாய்த்து தரையில் படுக்க வேண்டும். பின்னர், மெதுவாக கால்களால் பந்தினை மேலே உயர்த்தி இறக்க வேண்டும். இதை, 15 முதல் 20 முறை செய்யலாம்.
பலன்கள்: வயிறு, அடிவயிறு, தொடை, இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பு கரைந்து, தசைகள் வலுவடையும்.
பட் மஸ்கல் கிரன்ச் (Butt muscle crunch)
கட்டில் அல்லது படுக்கும் வகையிலான நாற்காலியில், நுனியில் அமர்ந்து கொள்ள வேண்டும். பந்தை கால்களுக்கு இடையில், பக்கவாட்டுப் பாதங்களால் பிடித்துக் கொண்டு, கைகளை கட்டிலின் முனையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்போது மெதுவாக படுக்க வேண்டும். அப்படியே மூச்சை உள்ளிழுத்து, வெளியில் விட்டபடி பந்தை பிடித்தபடி கால்களால் உயர்த்தி, இறக்க வேண்டும். இதை 10 முறை செய்யலாம்.
பலன்கள்: உள்ளுறுப்புகள் பலப்படும். சிறுநீரகம் தொடர்பான தொந்தரவுகளை தீர்க்கும். இடுப்பு மற்றும் பின்புறத் தசைகள் வலுவடைந்து, ஃபிட்டாகும்.
இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும்.
என் கடன் பணிசெய்து கிடப்பதே என்பார் அப்பர். ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு. இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும்.
ஓர் உயிர் படும் துன்பத்தை கண்டு அதனைத் தாங்கிக் கொள்ள இயலாமல் உடனே ஓடிச் சென்று உதவுவது தான் தொண்டு. அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதிமத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாக கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காக தொண்டாற்றுவது கடமையாகும்.
மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு வாய்ப்பாக பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம் போன்ற அமைப்புகள் உள்ளன. மாணவர்கள் இவ்வமைப்புகளில் சேர்ந்து தொண்டாற்றலாம்.
தெருக்களை தூய்மை செய்தல், நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், தவறிய பொருட் களைத் தேடி கண்டுபிடிக்க உதவுதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை போதிக்கலாம்.
செய்தித்தாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசின் செய்தித்துறையினர் உதவி கொண்டு வேளாண்மை, குடும்ப நலம், நோய்த்தடுப்பு முதலியன பற்றிய திரைப்படங்களை காட்டி பொது அறிவை வளர்க்க உதவலாம். கிராமங்களில் உள்ள விவசாயிகள் தம் ஓய்வு நேரத்தை பயன்படும் வகையில் போக்க அரசின் நிதிஉதவி பெற வழிகாட்டலாம். அதன் மூலம் அவர்கள் கோழி பண்ணைகள் வைத்தல், தேனீக்கள் வளர்த்தல், பாய் பின்னுதல், கூடை முடைதல் போன்ற கைத்தொழில்களை செய்ய அறிவுறுத்தலாம். நல்ல ஆட்சி அமைய நல்ல வேட்பாளர்களை வழிகாட்டலாம்.
நகர்புறங்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த காவல்துறையினருக்கு உதவலாம். பள்ளி வகுப்பறையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏழை மாணவர்களுக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். ஒழுக்கம் தவறும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் தம்முடைய புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவலாம்.
இயற்கை சீற்றங்கள், புயல், வெள்ளம் போன்றவை நிகழும்போது, அந்த பகுதிக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டு மக்களின் நலன் காக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் மருந்து பொருட்களை தந்து உதவவேண்டும். மஞ்சள் காமாலை, போலியோ மற்றும் இதர நோய் தடுப்பு பிரசாரங்களில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மாணவர்கள் திகழ வேண்டும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று நினைத்து சமூக நலத்தொண்டாற்ற வேண்டும்.
ஓர் உயிர் படும் துன்பத்தை கண்டு அதனைத் தாங்கிக் கொள்ள இயலாமல் உடனே ஓடிச் சென்று உதவுவது தான் தொண்டு. அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதிமத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாக கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காக தொண்டாற்றுவது கடமையாகும்.
மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு வாய்ப்பாக பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம் போன்ற அமைப்புகள் உள்ளன. மாணவர்கள் இவ்வமைப்புகளில் சேர்ந்து தொண்டாற்றலாம்.
தெருக்களை தூய்மை செய்தல், நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், தவறிய பொருட் களைத் தேடி கண்டுபிடிக்க உதவுதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை போதிக்கலாம்.
செய்தித்தாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசின் செய்தித்துறையினர் உதவி கொண்டு வேளாண்மை, குடும்ப நலம், நோய்த்தடுப்பு முதலியன பற்றிய திரைப்படங்களை காட்டி பொது அறிவை வளர்க்க உதவலாம். கிராமங்களில் உள்ள விவசாயிகள் தம் ஓய்வு நேரத்தை பயன்படும் வகையில் போக்க அரசின் நிதிஉதவி பெற வழிகாட்டலாம். அதன் மூலம் அவர்கள் கோழி பண்ணைகள் வைத்தல், தேனீக்கள் வளர்த்தல், பாய் பின்னுதல், கூடை முடைதல் போன்ற கைத்தொழில்களை செய்ய அறிவுறுத்தலாம். நல்ல ஆட்சி அமைய நல்ல வேட்பாளர்களை வழிகாட்டலாம்.
நகர்புறங்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த காவல்துறையினருக்கு உதவலாம். பள்ளி வகுப்பறையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏழை மாணவர்களுக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். ஒழுக்கம் தவறும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் தம்முடைய புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவலாம்.
இயற்கை சீற்றங்கள், புயல், வெள்ளம் போன்றவை நிகழும்போது, அந்த பகுதிக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டு மக்களின் நலன் காக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் மருந்து பொருட்களை தந்து உதவவேண்டும். மஞ்சள் காமாலை, போலியோ மற்றும் இதர நோய் தடுப்பு பிரசாரங்களில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மாணவர்கள் திகழ வேண்டும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று நினைத்து சமூக நலத்தொண்டாற்ற வேண்டும்.
வாழ்வில் இன்பமும், அமைதியும் மலரவும் என்ன செய்யவேண்டும்? தவறிழைத்தவரை மன்னிக்கும் மன நிலையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்; சமூக அமைதிக்கு மன்னிப்பு ஒன்று தான் மருந்து.
இன்றைய தனிமனித உறவு நிலைகள், குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை போன்றவற்றில் ஏற்படும் பல சிக்கல்கள், வன்முறைகள், கலவரங்கள், உயிர்ப்பலிகள் போன்றவற்றிற்கான மூல காரணம் பழிவாங்கும் உணர்ச்சியாகும். தனக்கு தீமை செய்த ஒருவனை, தனக்கு அவமரியாதை ஏற்பட காரணமான ஒரு மனிதனை, பாதிக்கப்பட்டவன் எவ்வாறேனும் பழிவாங்க துடிக்கிறான். இதன் விளைவு தான் சமூகத் தீமைகள் மற்றும் வன்முறைகளின் பெருக்கம். இவற்றை தவிர்க்கவும் வாழ்வில் இன்பமும், அமைதியும் மலரவும் என்ன செய்யவேண்டும்? தவறிழைத்தவரை மன்னிக்கும் மன நிலையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்; சமூக அமைதிக்கு மன்னிப்பு ஒன்று தான் மருந்து.
அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தியதில், நரம்புக் கோளாறு, கோபம் முதலிய குறைபாடுடையவர்கள் தாம் பழிவாங்கும் பண்புடையவர்களாக இருக்கின்றனர். மன்னிக்கும் பண்புடையவர்கள் மகிழ்ச்சியும், உடல் நலமும் உடையவர்களாக வாழ்கின்றனர் என்ற முடிவு வெளிப்பட்டுள்ளது. மன்னிக்கும் மாண்புடைய மனிதர்களின் இதயம், மூளை, நரம்பு மண்டலம் முதலியன சிறந்த முறையில் இயங்குகின்றன என்ற உண்மையும் வெளிப்பட்டது.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரட் லஸ்கின் பல்லாண்டுகள் செய்த ஆய்வின் முடிவில், மன்னிக்கும் பண்பு ஒருவரின் உடல் நலத்தில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியது என்று கண்டறிந்தார். அரசியல், சமய ரீதியான முரண்பாடுகளினால் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளிடையே பேராசிரியர் பிரட் லஸ்கின் நடத்திய ஆய்வில் வியத்தகு முடிவுகளைக் கண்டறிந்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிக்கும் பண்பின் தேவையை நன்கு உணர்த்திய பின்னர், காலப்போக்கில் அவர்கள் மனநிலைகளில் கோபம், பதற்றம் ஆகியவை குறைந்து, அவர்களிடம் நம்பிக்கை பண்பு துளிர்த்ததையும் மன அழுத்தம், அதன் விளைவான நோய்களின்றி அவர்கள் வாழ்ந்ததையும் பிரட் லஸ்கின் சான்றுகளுடன் வெளியுலகிற்கு உணர்த்தினார். எனவே மன்னிக்கும் மாண்பு எவரிடம் இருக்கிறதோ அவர் நோயின்றி, மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ முடியும் என்பதை இந்நூற்றாண்டின் ஆய்வுகள் விளக்குகின்றன.
வாழ்வியல் அறங்களைச் சிறப்பாக எடுத்துரைத்த வள்ளுவர் மன்னிப்பின் மாண்பினைப் பல குறட்பாக்களில் விளக்குகிறார். தீமை செய்த ஒருவனை தண்டிப்பதால் மனத்தில் ஒரு வகை நிறைவு, மகிழ்ச்சி ஏற்படும் என்பது உண்மைதான்; ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரே நாளில் முடிந்து விடும். தண்டிக்கப்பட்டவன் மீண்டும் ஏதாவது தீமை செய்து விடுவானோ என்ற அச்சம் அதன் பின்னர் மனத்தை உறுத்திக்கொண்டே இருக்கும்; அதற்கு மாறாக, தீமை செய்தவனை மன்னித்து விட்டால், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியும் புகழும், நிலைத்திருக்கும் என்ற கருத்து தோன்றும்படி,
“ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
பொன்றும் துணையும் புகழ்”
என்ற குறட்பாவினைத் தந்திருக்கிறார் வள்ளுவர். ஒருவரை மன்னிப்பது இயலாமையின் குறியீடு அல்ல; அது வீரம், தகுதியின் குறியீடாகும். உலகம் சீராக தடையின்றி இயங்குவதற்கு தேவையான அறக்கருத்துகளைக் கூறும் ஒரு கலித்தொகைப் பாடலில், “பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்று கூறப்படுகிறது. பொறுமை, மன்னித்தல் போன்ற பண்புகள் வலிமையுடையவரிடம் காணப்பட்டால், அது பண்புகளிலெல்லாம் மேம்பட்ட சிறந்த பண்பாகிறது என்று நாலடியார் கூறுகிறது.
“ஒறுக்கும் மதுகை உரணுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை”
என்பது நாலடியார் கூறும் கருத்து.
மன்னிப்பின் மாண்பினைச் சிலப்பதிகாரம் நன்கு உணர்த்துகிறது. தன்னைப் பிரிந்து மாதவியின் இல்லம் சென்று தங்கியிருந்து திரும்பிய கணவன் கோவலன் தன் செயல் பற்றிய குற்றவுணர்வினால் வருந்தும் போது, கண்ணகி எந்த விதமான கோபத்தையும் முகத்தில் காட்டாமல், தன் காற்சிலம்புகளை எடுத்துச் “சிலம்புள கொண்ம்” என்று கூறுகிறாள். இந்த மன்னிப்பினால் கோவலன் மனம் மேலும் துன்புற்று, பண்பட்டு இழந்த பொருள்களை மீட்க வேண்டும் என்ற உந்துதல் பெறுகிறான். மன்னிப்பினால் கண்ணகியின் மாண்பும் உணர்கிறது; கோவலனும் தன் மனத்தை நல்வழியை நோக்கித் திருப்புகிறான்.
கம்பராமாயணத்தின் இறுதிப்பகுதியில் மன்னிப்பின் சிறப்பு கூறப்படுகிறது. போர்கள் முடிந்த பின் சீதை அக்கினிப்பிரவேசம் செய்து மீண்ட பின் தசரதன் விண்ணுலகினின்று தோன்றி, சீதையிடம், ராமன் மீது சீற்றம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறான். சீதையின் தூய்மையையும், சிறப்பினையும் உலகிற்கு காட்டவே ராமன், சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யத் தூண்டினான் என்று கூறி, “கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக் கருதேல்” என்று தசரதன் சீதையிடம் வேண்டுகிறான். தான் நாடும் மணிமுடியும் துறக்க காரணமாக இருந்த கைகேயியை மன்னித்து அருளும்படி தசரதனிடம் ராமன் கேட்கிறான். இது ராமனின் மன்னிக்கும் பண்பு; இதைக் கேட்டு உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் “வாய்திறந்து அழுது ஆர்த்தன” என்று கம்பர் குறிப்பிடுகிறார். மன்னிக்கும் பண்பின் உயர்வினை குறிக்கும் குறியீடாக ராமன் திகழ்கின்றான்.
சிலப்பதிகாரத்தின் இறுதிப்பகுதியில், கண்ணகி தெய்வ வடிவில் தோன்றி, ‘தன் கணவன் பாண்டிய மன்னனால் கொலையுண்டது விதி வசம்; மன்னன் மீது ஏதும் குற்றமில்லை’ என்று மன்னித்து விடுகிறாள். “தென்னவன் தீதிலன் தேவர் கோன் தன் கோயில் நல்விருந்தாயினான்; நான் அவன்றன் மகள்” என்று கூறுகிறாள். மன்னிக்கும் பண்பின் மாண்பு இது. தவறுகள் நடப்பது உலகத்தின் இயல்பு; எனினும் தவறுகளையும், அவற்றின் விளைவுகளையும் மனத்தில் பூட்டிப் பாதுகாத்து வைத்துக் கொள்ளக் கூடாது. அது சமூக இயக்கத்திற்கு நல்லதல்ல என்ற கருத்தினைத் தமிழ்ச் சமூகம் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறது.
டாக்டர் ம.திருமலை, முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.
அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தியதில், நரம்புக் கோளாறு, கோபம் முதலிய குறைபாடுடையவர்கள் தாம் பழிவாங்கும் பண்புடையவர்களாக இருக்கின்றனர். மன்னிக்கும் பண்புடையவர்கள் மகிழ்ச்சியும், உடல் நலமும் உடையவர்களாக வாழ்கின்றனர் என்ற முடிவு வெளிப்பட்டுள்ளது. மன்னிக்கும் மாண்புடைய மனிதர்களின் இதயம், மூளை, நரம்பு மண்டலம் முதலியன சிறந்த முறையில் இயங்குகின்றன என்ற உண்மையும் வெளிப்பட்டது.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரட் லஸ்கின் பல்லாண்டுகள் செய்த ஆய்வின் முடிவில், மன்னிக்கும் பண்பு ஒருவரின் உடல் நலத்தில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியது என்று கண்டறிந்தார். அரசியல், சமய ரீதியான முரண்பாடுகளினால் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளிடையே பேராசிரியர் பிரட் லஸ்கின் நடத்திய ஆய்வில் வியத்தகு முடிவுகளைக் கண்டறிந்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிக்கும் பண்பின் தேவையை நன்கு உணர்த்திய பின்னர், காலப்போக்கில் அவர்கள் மனநிலைகளில் கோபம், பதற்றம் ஆகியவை குறைந்து, அவர்களிடம் நம்பிக்கை பண்பு துளிர்த்ததையும் மன அழுத்தம், அதன் விளைவான நோய்களின்றி அவர்கள் வாழ்ந்ததையும் பிரட் லஸ்கின் சான்றுகளுடன் வெளியுலகிற்கு உணர்த்தினார். எனவே மன்னிக்கும் மாண்பு எவரிடம் இருக்கிறதோ அவர் நோயின்றி, மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ முடியும் என்பதை இந்நூற்றாண்டின் ஆய்வுகள் விளக்குகின்றன.
வாழ்வியல் அறங்களைச் சிறப்பாக எடுத்துரைத்த வள்ளுவர் மன்னிப்பின் மாண்பினைப் பல குறட்பாக்களில் விளக்குகிறார். தீமை செய்த ஒருவனை தண்டிப்பதால் மனத்தில் ஒரு வகை நிறைவு, மகிழ்ச்சி ஏற்படும் என்பது உண்மைதான்; ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரே நாளில் முடிந்து விடும். தண்டிக்கப்பட்டவன் மீண்டும் ஏதாவது தீமை செய்து விடுவானோ என்ற அச்சம் அதன் பின்னர் மனத்தை உறுத்திக்கொண்டே இருக்கும்; அதற்கு மாறாக, தீமை செய்தவனை மன்னித்து விட்டால், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியும் புகழும், நிலைத்திருக்கும் என்ற கருத்து தோன்றும்படி,
“ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
பொன்றும் துணையும் புகழ்”
என்ற குறட்பாவினைத் தந்திருக்கிறார் வள்ளுவர். ஒருவரை மன்னிப்பது இயலாமையின் குறியீடு அல்ல; அது வீரம், தகுதியின் குறியீடாகும். உலகம் சீராக தடையின்றி இயங்குவதற்கு தேவையான அறக்கருத்துகளைக் கூறும் ஒரு கலித்தொகைப் பாடலில், “பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்று கூறப்படுகிறது. பொறுமை, மன்னித்தல் போன்ற பண்புகள் வலிமையுடையவரிடம் காணப்பட்டால், அது பண்புகளிலெல்லாம் மேம்பட்ட சிறந்த பண்பாகிறது என்று நாலடியார் கூறுகிறது.
“ஒறுக்கும் மதுகை உரணுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை”
என்பது நாலடியார் கூறும் கருத்து.
மன்னிப்பின் மாண்பினைச் சிலப்பதிகாரம் நன்கு உணர்த்துகிறது. தன்னைப் பிரிந்து மாதவியின் இல்லம் சென்று தங்கியிருந்து திரும்பிய கணவன் கோவலன் தன் செயல் பற்றிய குற்றவுணர்வினால் வருந்தும் போது, கண்ணகி எந்த விதமான கோபத்தையும் முகத்தில் காட்டாமல், தன் காற்சிலம்புகளை எடுத்துச் “சிலம்புள கொண்ம்” என்று கூறுகிறாள். இந்த மன்னிப்பினால் கோவலன் மனம் மேலும் துன்புற்று, பண்பட்டு இழந்த பொருள்களை மீட்க வேண்டும் என்ற உந்துதல் பெறுகிறான். மன்னிப்பினால் கண்ணகியின் மாண்பும் உணர்கிறது; கோவலனும் தன் மனத்தை நல்வழியை நோக்கித் திருப்புகிறான்.
கம்பராமாயணத்தின் இறுதிப்பகுதியில் மன்னிப்பின் சிறப்பு கூறப்படுகிறது. போர்கள் முடிந்த பின் சீதை அக்கினிப்பிரவேசம் செய்து மீண்ட பின் தசரதன் விண்ணுலகினின்று தோன்றி, சீதையிடம், ராமன் மீது சீற்றம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறான். சீதையின் தூய்மையையும், சிறப்பினையும் உலகிற்கு காட்டவே ராமன், சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யத் தூண்டினான் என்று கூறி, “கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக் கருதேல்” என்று தசரதன் சீதையிடம் வேண்டுகிறான். தான் நாடும் மணிமுடியும் துறக்க காரணமாக இருந்த கைகேயியை மன்னித்து அருளும்படி தசரதனிடம் ராமன் கேட்கிறான். இது ராமனின் மன்னிக்கும் பண்பு; இதைக் கேட்டு உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் “வாய்திறந்து அழுது ஆர்த்தன” என்று கம்பர் குறிப்பிடுகிறார். மன்னிக்கும் பண்பின் உயர்வினை குறிக்கும் குறியீடாக ராமன் திகழ்கின்றான்.
சிலப்பதிகாரத்தின் இறுதிப்பகுதியில், கண்ணகி தெய்வ வடிவில் தோன்றி, ‘தன் கணவன் பாண்டிய மன்னனால் கொலையுண்டது விதி வசம்; மன்னன் மீது ஏதும் குற்றமில்லை’ என்று மன்னித்து விடுகிறாள். “தென்னவன் தீதிலன் தேவர் கோன் தன் கோயில் நல்விருந்தாயினான்; நான் அவன்றன் மகள்” என்று கூறுகிறாள். மன்னிக்கும் பண்பின் மாண்பு இது. தவறுகள் நடப்பது உலகத்தின் இயல்பு; எனினும் தவறுகளையும், அவற்றின் விளைவுகளையும் மனத்தில் பூட்டிப் பாதுகாத்து வைத்துக் கொள்ளக் கூடாது. அது சமூக இயக்கத்திற்கு நல்லதல்ல என்ற கருத்தினைத் தமிழ்ச் சமூகம் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறது.
டாக்டர் ம.திருமலை, முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.
பல்வேறு மருத்துவ குணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள கற்பூரவல்லி மூலிகைச்செடிக்கு பெரியவர்களால் செய்யப்படும் கை வைத்தியத்தில், சிறப்பான பங்கு இருந்து வந்தது.
சளி, இருமலால் அவதிப்படும்போது சிரப், டானிக் போன்றவற்றைக் கொடுப்பது தற்போது வழக்கமாக இருக்கிறது. இவையெல்லாம் பயன்பாட்டுக்கு வராத காலக்கட்டத்தில் நமது முன்னோர்கள் இதுபோன்ற பல பிரச்னைகளுக்குக் கற்பூரவல்லி மூலிகையைப் பயன்படுத்தி பக்கவிளைவுகள் இல்லாமல் அவற்றை குணப்படுத்தியிருக்கிறார்கள்.
பழங்காலத்தில் இருந்து நம்முடைய முன்னோர்கள் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் மூலிகைச் செடிகளை வளர்ப்பதை முக்கிய வழக்கமாக கொண்டு இருந்தனர். அவற்றுள் ஒன்றுதான் கற்பூரவல்லி என்ற இந்தப் பச்சிலை. இச்செடி வீடுகளில் இயல்பாக வளரக்கூடிய தன்மை உடையது.
பல்வேறு மருத்துவ குணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள இந்த மூலிகைச்செடிக்கு பெரியவர்களால் செய்யப்படும் கை வைத்தியத்தில், சிறப்பான பங்கு இருந்து வந்தது. ஏனென்றால், குழந்தைப் பருவம் தொடங்கி முதுமைப் பருவம் வரை ஏற்படுகிற அனைத்துவிதமான உடல் நலக்குறைபாடுகளை சரி செய்யும் தன்மை இந்தப் பச்சிலைக்கு உள்ளது.
குறிப்பாக குழந்தைப் பருவத்தில் ஏற்படுகிற சுவாசக் கோளாறுகள், வயிற்றுப் பொருமல், மாந்தம், வாந்தி எடுத்தல், பசியின்மை, சளி, செரிமான குறைபாடு போன்ற பிரச்சனைகளைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்த மூலிகைக்கு உண்டு. வீட்டு மருத்துவத்தில் சிறந்து விளங்கும் இந்த கற்பூர வல்லியினை மழைக்காலம், பனி மற்றும் குளிர்காலங்களில் அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்குகிற நெஞ்சு சளி, சாதாரண காய்ச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
‘‘கற்பூரவல்லியின் 2 அல்லது 3 இலைகளை 150 மில்லி லிட்டர் அளவு தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதனுடன் தேன் கலந்து அருந்தலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு கற்பூரவல்லியின் ஓர் இலையை குக்கரில் இருந்து வெளிப்படும் ஆவியில் பல தடவை காட்டி, அதில் இருந்து வடியும் சாறை தாய்ப்பாலுடன் கலந்து ஒரு சங்கு பருக தர வேண்டும்.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றால், 30 மில்லி கிராம் அதாவது கால் டம்ளர் புகட்டலாம். ஐந்தில் இருந்து 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியருக்கு கற்பூரவல்லி சாறை அரை டம்ளர் தருவது நல்லது. இவ்வாறு தினமும் உணவு வேளைக்குப் பின்னர் காலை, மாலை என இரண்டு வேளை கொடுத்து வந்தால், வீஸிங் உட்பட சுவாசப் பாதை கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.
மருத்துவ குணம் நிறைந்த இந்தப் பச்சிலையை முதுமைப் பருவத்தினரும் கஷாயமாக குடிக்கலாம். வயோதிக காலத்தில் சர்க்கரை நோய் பொதுவாக காணப்படக்கூடிய பாதிப்பு என்பதால், முதியவர்கள் 5 இலையை நன்றாக நீரில் கொதிக்க வைத்து, தேன் கலக்காமல் 200 மில்லிகிராம் அளவு பருகலாம். இது மட்டுமில்லாமல் கற்பூரவல்லி இலையை உணவு பதத்திலும் சாப்பிடலாம்.
இம்மூலிகையைப் பயன்படுத்தி குழம்பு, ரசம், சூப் செய்யலாம். கடலை மாவில் இந்த இலையைத் தோய்த்து பஜ்ஜி செய்தும் உண்ணலாம். இந்த கற்பூரவல்லி சைனஸ் நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவாகும்.
வாரத்தில் 2 நாட்கள் இவற்றை உணவுக்குப் பின், எடுத்துக்கொண்டால் வாய் மற்றும் மூக்கு வழியாக சளி படிப்படியாக வெளியேறும். உணவுப்பதத்தில் இந்த மூலிகையைப் பயன்படுத்துவதோடு கொதிக்கும் தண்ணீரில் சுக்கு, மஞ்சள், கற்பூரவல்லி மூலிகை போட்டு ஆவி பிடிப்பதும் பயன் தரும்!’’
சிக்கன் ரெசிபியில் ஒன்றான தவா சிக்கனை இதுவரை ஹோட்டல்களில் தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இன்று அந்த தவா சிக்கனை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 500 கிராம்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஃப்ரஷ் கிரீம் - 1 டேபிள் ஸ்பூன்
குடை மிளகாய் - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குடைமிளகாயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம் மற்றும் வர மிளகாய் போட்டு தாளிக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் அதில் சிக்கன் துண்டுகளை போட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் கிளற வேண்டும்.
பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை கிளற வேண்டும்.
இந்த நேரத்தில் எலுமிச்சை சாறு மற்றும் ஃப்ரஷ் கிரீம் சேர்த்து, கலந்து 1 கப் தண்ணீரை விட்டு மூடி வைக்க வேண்டும்.
ஒரு 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து, வேக வைக்க வேண்டும்.
பின்னர் மற்றொரு கப் தண்ணீர் விட்டு, மீண்டும் 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இப்போது தண்ணீர் சுண்டி, சிக்கன் நன்கு வெந்திருக்கும்.
இந்த சமயம் மூடியைத் திறந்து, அதில் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் கொத்தமல்லியை தூவி, மற்றொரு 5 நிமிடம் தீயை குறைத்து வேக வைத்து, பின்பு இறக்க வேண்டும்.
சூப்பரான தவா சிக்கன் தயாராகிவிட்டது.
சிக்கன் - 500 கிராம்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஃப்ரஷ் கிரீம் - 1 டேபிள் ஸ்பூன்
குடை மிளகாய் - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குடைமிளகாயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம் மற்றும் வர மிளகாய் போட்டு தாளிக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் அதில் சிக்கன் துண்டுகளை போட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் கிளற வேண்டும்.
பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை கிளற வேண்டும்.
இந்த நேரத்தில் எலுமிச்சை சாறு மற்றும் ஃப்ரஷ் கிரீம் சேர்த்து, கலந்து 1 கப் தண்ணீரை விட்டு மூடி வைக்க வேண்டும்.
ஒரு 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து, வேக வைக்க வேண்டும்.
பின்னர் மற்றொரு கப் தண்ணீர் விட்டு, மீண்டும் 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இப்போது தண்ணீர் சுண்டி, சிக்கன் நன்கு வெந்திருக்கும்.
இந்த சமயம் மூடியைத் திறந்து, அதில் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் கொத்தமல்லியை தூவி, மற்றொரு 5 நிமிடம் தீயை குறைத்து வேக வைத்து, பின்பு இறக்க வேண்டும்.
சூப்பரான தவா சிக்கன் தயாராகிவிட்டது.
இதனை சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
குறிப்பிட்ட வயதை அடையும் வரையிலுமே குழந்தைகளுக்கு பொம்மைகள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட பொம்மைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
பொம்மை என்பது பெரியவர்களுக்குத்தான் உயிரற்ற ஒரு விளையாட்டு பொருள். ஆனால், குழந்தைகளைப் பொறுத்தவரை அதுவும் ஓர் உறவுதான். அதனோடு பேசுவது, விளையாடுவது, தான் சாப்பிடும் உணவை அதற்கு ஊட்டுவது, குளிப்பாட்டுவது, அழகுபடுத்துவது எனபொம்மையைச் சுற்றியே அவர்களின் உலகமும் இயங்கும். பெரியவர்கள் சமயங்களில் அலட்சியமாக பொம்மையைக் கையாண்டால்கூட குழந்தையின் முகமே வாடிவிடும். குறிப்பிட்ட வயதை அடையும் வரையிலுமே குழந்தைகளுக்கு பொம்மைகள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட பொம்மைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
‘‘குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் பெரிய அளவிலான வண்ணமயமான பொம்மைகள், சுழலக்கூடிய அல்லது இசை பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம். கீச்சொலிஎழுப்புகிற அல்லது கண்ணாடியில் பிரதிபலிக்கிற பொம்மைகள் அவர்களை அதிகம் வசீகரிக்கிறது. 3-லிருந்து 6 மாத குழந்தைகள் தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்தையும்கற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள். அதனால் கிலுகிலுப்பை, ரப்பரால் செய்த பொம்மைகள் குழந்தைகள் பிடிக்க, கைகளில் அழுத்த சுலபமாக இருக்கும். குழந்தைகளின் தொட்டில் (அ)படுக்கைக்கு மேலே அவர்கள் கண்களில் படும் வகையில் சுழலும் வண்ணமயமான பொம்மைகளை தொங்கவிடுவதாலும் அவர்கள் உற்சாகமடைவார்கள்.
6-லிருந்து 9 மாதங்களில் குழந்தைகள் உட்கார, தவழ முயற்சிப்பார்கள். தொடுவது, பிடிப்பது, எறிவது, தள்ளுவது என எல்லா விளையாட்டையும் இந்த வயதில் செய்வார்கள். இந்தப் பருவத்தில் அவர்களுக்கு நகரும்படியான பொம்மைகள் வாங்கி தருவது நல்லது. உதாரணமாக கார், பஸ்கள், ரயில்கள், நடனமிடும் வாத்து, விலங்குகள் போன்ற பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
பல வண்ணங்களிலும், வடிவங்களிலும், மிக எளிதாகக் கையாளக்கூடிய வகையில் இந்தப் பருவத்தில் இருக்கும் பொம்மைகளைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். 9-லிருந்து 12 மாதங்களில் குழந்தை எழுந்து சிறிது தூரம் நடக்கவும், நகரவும் செய்யும். பற்கள் முளைக்கும் இந்த வயதுகளில் எல்லாவற்றையும் கடித்து இழுத்து முயற்சிப்பார்கள். அதனால் மரத்தால் ஆன நடை வண்டி போன்றவை பழகவிட வேண்டும்.
ஒரு வயது குழந்தைகளுக்கு பொம்மைகளை வைத்து செயல்முறை விளையாட்டுகளைக் கற்றுக் கொடுக்கலாம். பந்து, மட்டை பந்து விளையாடுவது, வாத்து, சமையல் பொருட்கள் மற்றும் கட்டிட பொம்மைகள். இவைகள் உணர்ச்சி திறன்களை மேம்படுத்தும். பொதுவாக, குழந்தைகளுக்குபாதுகாப்பான பொம்மைகளை கொடுக்க வேண்டும்.சிறியபேட்டரிகள் கொண்டஎலெக்ட்ரானிக் பொம்மைகளை குழந்தைகள் விழுங்கிவிடக்கூடிய அபாயம் உண்டு. அதேபோல கூர்மையான பொம்மைகள், நச்சு பெயின்டிலான பொம்மைகளும் ஆபத்தானவை.
வெல்வெட்டால் செய்த மென்மையான வழுவழுப்பான பொம்மைகளால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த வகை பொம்மைகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்.முக்கியமாக ஒரு நல்ல பொம்மை பார்க்க புதுமையாக அல்லது விலை அதிகமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தவறான பின்விளைவுகள் அல்லது வன்முறை எண்ணங்களைக் குழந்தைகளின் மூளையில் திணித்துவிடக் கூடாதுஎன்பதே மிக முக்கியம்!’’
‘‘குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் பெரிய அளவிலான வண்ணமயமான பொம்மைகள், சுழலக்கூடிய அல்லது இசை பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம். கீச்சொலிஎழுப்புகிற அல்லது கண்ணாடியில் பிரதிபலிக்கிற பொம்மைகள் அவர்களை அதிகம் வசீகரிக்கிறது. 3-லிருந்து 6 மாத குழந்தைகள் தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்தையும்கற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள். அதனால் கிலுகிலுப்பை, ரப்பரால் செய்த பொம்மைகள் குழந்தைகள் பிடிக்க, கைகளில் அழுத்த சுலபமாக இருக்கும். குழந்தைகளின் தொட்டில் (அ)படுக்கைக்கு மேலே அவர்கள் கண்களில் படும் வகையில் சுழலும் வண்ணமயமான பொம்மைகளை தொங்கவிடுவதாலும் அவர்கள் உற்சாகமடைவார்கள்.
6-லிருந்து 9 மாதங்களில் குழந்தைகள் உட்கார, தவழ முயற்சிப்பார்கள். தொடுவது, பிடிப்பது, எறிவது, தள்ளுவது என எல்லா விளையாட்டையும் இந்த வயதில் செய்வார்கள். இந்தப் பருவத்தில் அவர்களுக்கு நகரும்படியான பொம்மைகள் வாங்கி தருவது நல்லது. உதாரணமாக கார், பஸ்கள், ரயில்கள், நடனமிடும் வாத்து, விலங்குகள் போன்ற பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
பல வண்ணங்களிலும், வடிவங்களிலும், மிக எளிதாகக் கையாளக்கூடிய வகையில் இந்தப் பருவத்தில் இருக்கும் பொம்மைகளைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். 9-லிருந்து 12 மாதங்களில் குழந்தை எழுந்து சிறிது தூரம் நடக்கவும், நகரவும் செய்யும். பற்கள் முளைக்கும் இந்த வயதுகளில் எல்லாவற்றையும் கடித்து இழுத்து முயற்சிப்பார்கள். அதனால் மரத்தால் ஆன நடை வண்டி போன்றவை பழகவிட வேண்டும்.
ஒரு வயது குழந்தைகளுக்கு பொம்மைகளை வைத்து செயல்முறை விளையாட்டுகளைக் கற்றுக் கொடுக்கலாம். பந்து, மட்டை பந்து விளையாடுவது, வாத்து, சமையல் பொருட்கள் மற்றும் கட்டிட பொம்மைகள். இவைகள் உணர்ச்சி திறன்களை மேம்படுத்தும். பொதுவாக, குழந்தைகளுக்குபாதுகாப்பான பொம்மைகளை கொடுக்க வேண்டும்.சிறியபேட்டரிகள் கொண்டஎலெக்ட்ரானிக் பொம்மைகளை குழந்தைகள் விழுங்கிவிடக்கூடிய அபாயம் உண்டு. அதேபோல கூர்மையான பொம்மைகள், நச்சு பெயின்டிலான பொம்மைகளும் ஆபத்தானவை.
வெல்வெட்டால் செய்த மென்மையான வழுவழுப்பான பொம்மைகளால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த வகை பொம்மைகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்.முக்கியமாக ஒரு நல்ல பொம்மை பார்க்க புதுமையாக அல்லது விலை அதிகமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தவறான பின்விளைவுகள் அல்லது வன்முறை எண்ணங்களைக் குழந்தைகளின் மூளையில் திணித்துவிடக் கூடாதுஎன்பதே மிக முக்கியம்!’’
கர்ப்ப காலத்தில் ஏறிய உடல்எடை பிரசவத்துக்குப் பிறகு சிலருக்குத் தானாகக் குறைந்து விடும். கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பகாலத்தில் பெண்களைக் குழப்புகிற பல கேள்விகளில் எடை பற்றிய பயமும் ஒன்று. இரு உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று சொல்லியே அதிகம் சாப்பிட வைப்பார்கள். ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லியே உடலுழைப்பு இல்லாமலும் வைத்திருப்பார்கள். இந்த இரண்டின் காரணமாக கர்ப்பிணிகளின் உடல் எடை எக்குத்தப்பாக எகிறிவிடும். இப்படி ஏறிய எடை, பிரசவத்துக்குப் பிறகு சிலருக்குத் தானாகக் குறைந்து விடும். பலருக்கு அதுவே நிரந்தரமாகிவிடும். கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்? எது நார்மல்? எது அசாதாரணம்? என்பது குறித்து பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் எல்லோரும் ஒரே மாதிரியாக எடை அதிகரிப்பதில்லை. ஒரே கர்ப்பிணிக்கு ஒவ்வொரு கர்ப்பத்துக்கும் வெவ்வேறு மாதிரியான எடை அதிகரிப்பு இருக்கும். உயரம், எடை, வயது ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும் மருத்துவர், நீங்கள் எவ்வளவு எடையைக் கூட்டினால் போதுமானது என்பதைச் சொல்வார். தோராயமாக 9 கிலோ இருக்கலாம். குழந்தையின் 3 கிலோ தனி. மொத்தத்தில் அதிகபட்சமாக பன்னிரண்டரை கிலோ எடை அதிகரிக்கலாம்.
கர்ப்பம் தரித்த உடனே எடை உயராது. ஏனெனில், கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் உண்டாகிற குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற காரணங்களால் முதல் 3 மாதங்களில் எடையானது இயல்பைவிட மிகவும் குறைந்துவிடும். அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை குறைவது சாதாரணமானது. 5, 10 கிலோ வரை குறைவது என்பது அசாதாரணம். இவ்வாறு அதிகமாகக் குறைந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பானது கருத்தரித்த 12 வாரம் அல்லது 14-வது வாரத்தில்தான் பொதுவாக ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பெரும்பாலும் வாந்தியும், குமட்டலும் நின்றிருக்கும். கர்ப்பிணிக்கு நன்றாகப் பசியெடுத்து, எதையாவது சாப்பிட வேண்டும் என்பது போலத் தோன்றும். இந்த நாட்களில் ஊட்டம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
நல்ல ஊட்டம் பெறும் கர்ப்பிணிக்கு சுமார் 20 வாரம் எடை வரை அதிகரிப்பு இருக்கும். அதன் பிறகு குழந்தையின் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக இருப்பதால் 30-வது வாரத்துக்குள் எடை அதிகமாகி, பிரசவத்துக்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து கொண்டு வரும். கர்ப்ப காலத்தில் உடலின் பல உறுப்புகள் (குறிப்பாக மார்பகம், வயிறு, கருப்பை, அதிலுள்ள குழந்தை மற்றும் பனிக்குடம் அதிலுள்ள நீரின் அளவு ஆகியவை) அளவில் வளர்ச்சியடைவதாலும், ரத்த ஓட்டம் சுமார் 30 சதவிகிதம் அதிகரிப்பதாலும் எடை அதிகரிப்பு இருக்கும். இதனால்தான் கர்ப்பிணி 9 கிலோ எடை இருக்க வேண்டும்.
உடம்பில் அதிக நீர்ச்சத்து சேர்தல், அதிகமான ஹார்மோன் உடலில் சுரப்பது, உணவில் அதிகமாக உப்பு அல்லது வாசனைப் பொருட்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது அல்லது இந்த அத்தனைக் காரணங்களாலும் கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் உடல் எடை அதிகரிக்கலாம். எடை உயர்வை கண்காணிக்க வீட்டிலோ அல்லது மருத்துவனையிலோ வாரத்திற்கு ஒருமுறை எடையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிக்கு வழக்கத்துக்கு மாறாக எடை உயர்ந்தால், அவர் சரியான உணவு முறையைப் பின்பற்றவில்லை என்பதை மருத்துவர் தெரிந்துகொள்வார். எனவே, கர்ப்பிணி வழக்கமாக உணவில் என்ன சாப்பிடுகிறார், எதை கூடுதலாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.கர்ப்பிணிகள் கர்ப்பக் காலத்தில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து காபி அல்லது தேநீர் அருந்தலாம். இதில் குறைந்த கலோரிச் சத்து இருக்கும். அதே போல
அஜீரணக் கோளாறை உண்டாக்கும் வறுத்த உணவுகள், ஸ்ட்ராங் டீ, கிரீம் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.
கர்ப்ப காலத்தில் எல்லோரும் ஒரே மாதிரியாக எடை அதிகரிப்பதில்லை. ஒரே கர்ப்பிணிக்கு ஒவ்வொரு கர்ப்பத்துக்கும் வெவ்வேறு மாதிரியான எடை அதிகரிப்பு இருக்கும். உயரம், எடை, வயது ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும் மருத்துவர், நீங்கள் எவ்வளவு எடையைக் கூட்டினால் போதுமானது என்பதைச் சொல்வார். தோராயமாக 9 கிலோ இருக்கலாம். குழந்தையின் 3 கிலோ தனி. மொத்தத்தில் அதிகபட்சமாக பன்னிரண்டரை கிலோ எடை அதிகரிக்கலாம்.
கர்ப்பம் தரித்த உடனே எடை உயராது. ஏனெனில், கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் உண்டாகிற குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற காரணங்களால் முதல் 3 மாதங்களில் எடையானது இயல்பைவிட மிகவும் குறைந்துவிடும். அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை குறைவது சாதாரணமானது. 5, 10 கிலோ வரை குறைவது என்பது அசாதாரணம். இவ்வாறு அதிகமாகக் குறைந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பானது கருத்தரித்த 12 வாரம் அல்லது 14-வது வாரத்தில்தான் பொதுவாக ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பெரும்பாலும் வாந்தியும், குமட்டலும் நின்றிருக்கும். கர்ப்பிணிக்கு நன்றாகப் பசியெடுத்து, எதையாவது சாப்பிட வேண்டும் என்பது போலத் தோன்றும். இந்த நாட்களில் ஊட்டம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
நல்ல ஊட்டம் பெறும் கர்ப்பிணிக்கு சுமார் 20 வாரம் எடை வரை அதிகரிப்பு இருக்கும். அதன் பிறகு குழந்தையின் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக இருப்பதால் 30-வது வாரத்துக்குள் எடை அதிகமாகி, பிரசவத்துக்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து கொண்டு வரும். கர்ப்ப காலத்தில் உடலின் பல உறுப்புகள் (குறிப்பாக மார்பகம், வயிறு, கருப்பை, அதிலுள்ள குழந்தை மற்றும் பனிக்குடம் அதிலுள்ள நீரின் அளவு ஆகியவை) அளவில் வளர்ச்சியடைவதாலும், ரத்த ஓட்டம் சுமார் 30 சதவிகிதம் அதிகரிப்பதாலும் எடை அதிகரிப்பு இருக்கும். இதனால்தான் கர்ப்பிணி 9 கிலோ எடை இருக்க வேண்டும்.
உடம்பில் அதிக நீர்ச்சத்து சேர்தல், அதிகமான ஹார்மோன் உடலில் சுரப்பது, உணவில் அதிகமாக உப்பு அல்லது வாசனைப் பொருட்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது அல்லது இந்த அத்தனைக் காரணங்களாலும் கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் உடல் எடை அதிகரிக்கலாம். எடை உயர்வை கண்காணிக்க வீட்டிலோ அல்லது மருத்துவனையிலோ வாரத்திற்கு ஒருமுறை எடையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிக்கு வழக்கத்துக்கு மாறாக எடை உயர்ந்தால், அவர் சரியான உணவு முறையைப் பின்பற்றவில்லை என்பதை மருத்துவர் தெரிந்துகொள்வார். எனவே, கர்ப்பிணி வழக்கமாக உணவில் என்ன சாப்பிடுகிறார், எதை கூடுதலாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.கர்ப்பிணிகள் கர்ப்பக் காலத்தில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து காபி அல்லது தேநீர் அருந்தலாம். இதில் குறைந்த கலோரிச் சத்து இருக்கும். அதே போல
அஜீரணக் கோளாறை உண்டாக்கும் வறுத்த உணவுகள், ஸ்ட்ராங் டீ, கிரீம் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.
இங்கே பாதாம் பருப்பை வைத்து வீட்டிலே செய்யக்கூடிய எளிமையான ஃபேஸ் பேக் செய்முறையை உங்களுக்குத் தருகிறோம். சருமத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க இது நிச்சயம் உதவும்.
பாதாம் விட்டமின் ஈ நிறைந்த ஒன்று. இது உங்களின் சருமத்தை வறண்டு போகாமல் வைத்துக் கொள்ளும். உங்கள் சருமத்தை சுருக்கம் இல்லாமல் இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது. இங்கே பாதாம் பருப்பை வைத்து வீட்டிலே செய்யக்கூடிய எளிமையான ஃபேஸ் பேக் செய்முறையை உங்களுக்குத் தருகிறோம். சருமத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க இது நிச்சயம் உதவும்.
1. பாதாம் மற்றும் பால் கலந்த ஃபேஸ் மாஸ்க்
1 டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர்
2 டேபிள்ஸ்பூன் காய்ச்சாத பால்
ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள் மேலே சொன்ன இரண்டு பொருட்களையும் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். வெதுவெதுபான தண்ணீரில் முகம் கழுவி விட்டு முகத்திலும் கழுத்திலும் இந்த ஃபேஸ்பேக்கை போடவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவேண்டும். இதை உங்களில் கை மற்றும் கால்களில் கூட இந்த மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
2. பாதாம், பால் மற்றும் அரைத்த ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க்
2 டேபிள்ஸ்பூன் பாதாம்
1 டேபிள்ஸ்பூன் அரைத்த ஓட்ஸ்
3 டேபிள்ஸ்பூன் காய்ச்சாத பால்
ஒருபவுலில் மேலே சொன்ன பொருட்களையெல்லாம் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். தூங்குப் போவதற்கு முன் இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடலாம். ரோஜா தண்ணீரை பஞ்சினால் தொட்டு முகம் முழுவதும் துடைத்துவிட்டு. இந்த மாஸ்கை முகத்தில் போட்டு 20 நிமிடம் கழித்தோ அல்லது முழு இரவு வைத்துப் பின் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவலாம். பின் நைட் கிரீம்மை பயன்படுத்தவும்.
3. பாதாம், மஞ்சள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்
1 டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர்
2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு
1 டேபிள்ஸ்பூன் மஞ்சள்
ஒரு பவுலில் மேலே சொன்ன பொருட்களையெல்லாம் கலந்து ரோஸ் வாட்டர் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்துப் பின் முகம் கழுவவும்.
1. பாதாம் மற்றும் பால் கலந்த ஃபேஸ் மாஸ்க்
1 டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர்
2 டேபிள்ஸ்பூன் காய்ச்சாத பால்
ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள் மேலே சொன்ன இரண்டு பொருட்களையும் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். வெதுவெதுபான தண்ணீரில் முகம் கழுவி விட்டு முகத்திலும் கழுத்திலும் இந்த ஃபேஸ்பேக்கை போடவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவேண்டும். இதை உங்களில் கை மற்றும் கால்களில் கூட இந்த மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
2. பாதாம், பால் மற்றும் அரைத்த ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க்
2 டேபிள்ஸ்பூன் பாதாம்
1 டேபிள்ஸ்பூன் அரைத்த ஓட்ஸ்
3 டேபிள்ஸ்பூன் காய்ச்சாத பால்
ஒருபவுலில் மேலே சொன்ன பொருட்களையெல்லாம் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். தூங்குப் போவதற்கு முன் இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடலாம். ரோஜா தண்ணீரை பஞ்சினால் தொட்டு முகம் முழுவதும் துடைத்துவிட்டு. இந்த மாஸ்கை முகத்தில் போட்டு 20 நிமிடம் கழித்தோ அல்லது முழு இரவு வைத்துப் பின் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவலாம். பின் நைட் கிரீம்மை பயன்படுத்தவும்.
3. பாதாம், மஞ்சள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்
1 டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர்
2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு
1 டேபிள்ஸ்பூன் மஞ்சள்
ஒரு பவுலில் மேலே சொன்ன பொருட்களையெல்லாம் கலந்து ரோஸ் வாட்டர் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்துப் பின் முகம் கழுவவும்.
கேழ்வரகில் களி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. கோதுமை மாவிலும் களி செய்யலாம். இந்த களி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்,
உப்பு - சிறிது,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - 3 கப்.

செய்முறை :
கோதுமை மாவில் அரை கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.
அடிகனமான கடாயில் 2 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கொதிக்கும் தண்ணீரில் எண்ணெயும் சிறிது உப்பும் சேர்க்கவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள கோதுமை மாவினை ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வேக விடவும்.
கையில் தண்ணீர் தொட்டு களியில் கை வைத்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இந்த பதம் வந்ததும் இறக்கவும்.
சாம்பார், பொரியல், குழம்பு, ரசம், தயிர் பிசைந்து இதனை சாப்பிடலாம்.
கோதுமை மாவு - 1 கப்,
உப்பு - சிறிது,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - 3 கப்.

செய்முறை :
கோதுமை மாவில் அரை கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.
அடிகனமான கடாயில் 2 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கொதிக்கும் தண்ணீரில் எண்ணெயும் சிறிது உப்பும் சேர்க்கவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள கோதுமை மாவினை ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வேக விடவும்.
கையில் தண்ணீர் தொட்டு களியில் கை வைத்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இந்த பதம் வந்ததும் இறக்கவும்.
சாம்பார், பொரியல், குழம்பு, ரசம், தயிர் பிசைந்து இதனை சாப்பிடலாம்.
சத்தான கோதுமை மாவு களி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
லையிங் சைடு லெக் ரைஸ் பயிற்சி செய்வதால் தொடையின் பக்கவாட்டுப் பகுதி வலுவடையும். பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுகும். தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பு கரையும்.
உடலைத் தாங்க பலமான தொடைகள் அவசியம். தொடைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளைக் பல இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை. அவ்வகையில் இந்த பயிற்சி நல்ல பலனை தரக்கூடியைது. இந்த பயிற்சியின் பெயர் லையிங் சைடு லெக் ரைஸ் (Lying side leg raise).
இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். வலது கையைத் தலைக்கு மேல் நீட்டி, அதன் மீது தலையை வைத்துக்கொள்ள வேண்டும். இடது கையை முட்டிவரை மடித்து, வலது பக்கமாக தரையில் பதிக்க வேண்டும். வலது காலை சற்று மடித்து முன்புறமாக வைக்க வேண்டும்.
இடது காலை மட்டும் மேலே உயர்த்தி, ஐந்து விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும். பின்னர், படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல 15 முறை செய்துவிட்டு, இடது பக்கத்துக்கும் செய்ய வேண்டும். நன்கு பழகிய பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.
பலன்கள்
தொடையின் பக்கவாட்டுப் பகுதி வலுவடையும். பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுகும். தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பு கரையும்.
இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். வலது கையைத் தலைக்கு மேல் நீட்டி, அதன் மீது தலையை வைத்துக்கொள்ள வேண்டும். இடது கையை முட்டிவரை மடித்து, வலது பக்கமாக தரையில் பதிக்க வேண்டும். வலது காலை சற்று மடித்து முன்புறமாக வைக்க வேண்டும்.
இடது காலை மட்டும் மேலே உயர்த்தி, ஐந்து விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும். பின்னர், படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல 15 முறை செய்துவிட்டு, இடது பக்கத்துக்கும் செய்ய வேண்டும். நன்கு பழகிய பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.
பலன்கள்
தொடையின் பக்கவாட்டுப் பகுதி வலுவடையும். பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுகும். தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பு கரையும்.






