என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
பலரையும் கவரும் கவர்ச்சிகரமான கடனாக தனிநபர் கடன் உள்ளது. எப்படி இருந்தாலும் பின்வரும் காரணங்களுக்காக எல்லாம் தனிநபர் கடனைத் தவிர்ப்பதே நல்லது.
எந்தவித ‘செக்யூரிட்டி’யும் கோராமல் வழங்கப்படுவது என்பதால், பலரையும் கவரும் கவர்ச்சிகரமான கடனாக தனிநபர் கடன் உள்ளது.
மருத்துவச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றுக்குப் பணம் தேவை என்னும்போது உடனடியாக கை கொடுப்பது தனிநபர் கடன் ஆகும். இதற்கான வட்டி விகிதமும் 10 முதல் 13 சதவீதம் என்பது மிகவும் அதிகம் என்றாலும், அவசியமாகத் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
ஆனால், எப்படி இருந்தாலும் பின்வரும் காரணங்களுக்காக எல்லாம் தனிநபர் கடனைத் தவிர்ப்பதே நல்லது. அவை பற்றி...
தனிநபர் கடனாகப் பெற்ற பணத்தை பங்குச் சந்தை அல்லது பிற ‘ரிஸ்க்’கான முதலீடுகளில் போடாதீர்கள். அவை போன்ற ரிஸ்க்கான திட்டங்கள் லாபம் அளிக்காமல் முதலீடு செய்ததை விடக் குறைவான மதிப்புக்குச் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன.
வாகனம் வாங்க அல்லது அதுபோன்ற பிற செலவுகளுக்கு தனிநபர் கடன் வாங்க வேண்டாம். தனிநபர் கடன் எந்த ஓர் உத்தரவாதமும் இல்லாமல் அளிக்கப்படுவதால் வட்டி விகிதம் கூடுதலாக இருக்கும். சொந்தமாக தொழில் தொடங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க எல்லாம் தனிநபர் கடனை விடக் குறைவான வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும்.
உங்களுக்கு விருப்பமானவற்றை வாங்க வேண்டும் என்பதற்காகவும் தனிநபர் கடன் வாங்க வேண்டாம். இன்றைய சூழலில் பல நிறு வனங்கள் தங்களது தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்பதற்காக வட்டியில்லாத ஈ.எம்.ஐ. சேவைகளை எல்லாம் வழங்குகின்றன.
பிறரின் தேவைக்காகக் கடன் பெற்று கொடுத்துவிட்டு அவர்கள் சரியான நேரத்தில் உங்களுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கவில்லை என்றால் அதனால் உங்களுக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படும். அதுமட்டும் அல்லாமல், நீங்கள் சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும்போது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, வேறு எந்தக் கடனும் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.
தொழில் தொடங்க தனிநபர் கடன் பெற வேண்டாம். தனிநபர் கடனை தவிர்த்து தொழில் துவங்க அரசு பலவகைகளிலும் கடன் அளித்து உதவி செய்கிறது. புதியதாகத் துவங்கும் ஒரு தொழிலில் உடனே வருவாய் பெற்றுக் கடனை திருப்பிச் செலுத்திவிடலாம் என்பதும் முடியாத காரியம் ஆகும். எனவே தனிநபர் கடன் என்பது அவசரத் தேவையின்போது உங்களுக்கு உதவ மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மருத்துவச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றுக்குப் பணம் தேவை என்னும்போது உடனடியாக கை கொடுப்பது தனிநபர் கடன் ஆகும். இதற்கான வட்டி விகிதமும் 10 முதல் 13 சதவீதம் என்பது மிகவும் அதிகம் என்றாலும், அவசியமாகத் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
ஆனால், எப்படி இருந்தாலும் பின்வரும் காரணங்களுக்காக எல்லாம் தனிநபர் கடனைத் தவிர்ப்பதே நல்லது. அவை பற்றி...
தனிநபர் கடனாகப் பெற்ற பணத்தை பங்குச் சந்தை அல்லது பிற ‘ரிஸ்க்’கான முதலீடுகளில் போடாதீர்கள். அவை போன்ற ரிஸ்க்கான திட்டங்கள் லாபம் அளிக்காமல் முதலீடு செய்ததை விடக் குறைவான மதிப்புக்குச் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன.
வாகனம் வாங்க அல்லது அதுபோன்ற பிற செலவுகளுக்கு தனிநபர் கடன் வாங்க வேண்டாம். தனிநபர் கடன் எந்த ஓர் உத்தரவாதமும் இல்லாமல் அளிக்கப்படுவதால் வட்டி விகிதம் கூடுதலாக இருக்கும். சொந்தமாக தொழில் தொடங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க எல்லாம் தனிநபர் கடனை விடக் குறைவான வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும்.
உங்களுக்கு விருப்பமானவற்றை வாங்க வேண்டும் என்பதற்காகவும் தனிநபர் கடன் வாங்க வேண்டாம். இன்றைய சூழலில் பல நிறு வனங்கள் தங்களது தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்பதற்காக வட்டியில்லாத ஈ.எம்.ஐ. சேவைகளை எல்லாம் வழங்குகின்றன.
பிறரின் தேவைக்காகக் கடன் பெற்று கொடுத்துவிட்டு அவர்கள் சரியான நேரத்தில் உங்களுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கவில்லை என்றால் அதனால் உங்களுக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படும். அதுமட்டும் அல்லாமல், நீங்கள் சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும்போது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, வேறு எந்தக் கடனும் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.
தொழில் தொடங்க தனிநபர் கடன் பெற வேண்டாம். தனிநபர் கடனை தவிர்த்து தொழில் துவங்க அரசு பலவகைகளிலும் கடன் அளித்து உதவி செய்கிறது. புதியதாகத் துவங்கும் ஒரு தொழிலில் உடனே வருவாய் பெற்றுக் கடனை திருப்பிச் செலுத்திவிடலாம் என்பதும் முடியாத காரியம் ஆகும். எனவே தனிநபர் கடன் என்பது அவசரத் தேவையின்போது உங்களுக்கு உதவ மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நாம் விடும் குறட்டை, நம் உடலையே பாதிக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நமது குறட்டை நம் ஆயுளை குறைக்கும் என்றால் அதை நம்புவீர்களா?. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குறட்டை, பொதுவாக இந்த வார்த்தையை நாம் பல இடங்களில் கேலிக்காக பயன்படுத்தி வருகிறோம். குறட்டையால் கணவன்-மனைவி இருவரும் விவாகரத்து வரை சென்றதாக நகைச்சுவையாக கூறுவது உண்டு. இந்த குறட்டையால் பாதிக்கப்படுவது பக்கத்தில் தூங்குபவர்கள் மட்டுமல்ல, சம்பந்தப்பட்டவரும்தான். இது பற்றி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கோவன் நுரையீரல் மற்றும் ஸ்லீப் மருத்துவ மைய டாக்டர் பால.கலைக்கோவன் கூறியதாவது:-
குறட்டை என்பது நமது உடல் சோர்வான நிலையில் வருவது என்று பலர் நினைப்பது உண்டு. அது ஒரு ஆபத்தில்லா பிரச்சினை என்றும் நம்புவதுண்டு. ஆனால் நாம் விடும் குறட்டை, நம் உடலையே பாதிக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நமது குறட்டை நம் ஆயுளை குறைக்கும் என்றால் அதை நம்புவீர்களா?. ஆம் அப்படிப்பட்ட ஒரு பிரச்சனைதான் OBSTRUCTIVE SLEEP APNEA
( OSA ) குறட்டையுடன் கூடிய தூக்கத்தில் மூச்சுத்திணறல்
OSA ஏன் ஏற்படுகிறது என்றும், அதன் அறிகுறிகள் என்ன என்பதையும் பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம். குறட்டை உள்ள அனைவருக்கும் இந்த OSA நோய் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. அப்படி என்றால் சாதாரண குறட்டைக்கும், OSA குறட்டைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிப்பது எப்படி?
OSA ஏன் ஏற்படுகிறது ?
நாம் சுவாசிக்கும் காற்று, நமது மூக்கின் வழியாக உள்ளே சென்று தொண்டை பகுதியை கடந்து நுரையீரலுக்கு செல்லும். நாம் விழிப்புடன் இருக்கும் நேரத்தில், இந்த பாதையில் அடைப்பு ஏற்படாது. ஆனால் தூங்கும்போது அந்த தொண்டை தசைகள் தளர்ந்து, மூச்சு உள்ளே செல்வது தடைபடும். இந்த தடைப்பட்ட மூச்சுபாதை வழியாக நாம் மூச்சுவிடும் போது வரும் சத்தம் தான் “குறட்டை“
தூக்கத்தின் ஒரு பகுதியில் மட்டும் (ஆழ்நிலை தூக்கம் REM SLEEP ) இது போன்ற தொண்டை சதைகள் தளர்வது உண்டு. அது அளவுக்கு மீறி தடைப்பட்டால், காற்று நுரையீரலுக்கு உள்ளே போவது, முழுவதுமாக தடைபடும் போது இந்த OSA (தூக்கத்தில் மூச்சுத்திணறல்) ஏற்படும்.
OSA வின் அறிகுறிகள் என்ன ?
(1) தூக்கத்தின் போது அதிகப்படியான குறட்டை
(2) தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது போல் உணர்தல்
(3) தூங்கும் போது மூச்சுவிடுவதை நிறுத்துவது
(4) பகல் நேரத்தில் அதிகமாக தூக்கம் வருதல்
(5) காலை எழுந்தவுடன் தலைவலி ஏற்படுவது
(6) அதிகமான மறதி, சோர்வு, ஆர்வமின்மை ஏற்படுவது
(7) தாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லாமை
(8) வாகனம் ஓட்டும் போது தூக்கம் வருவது
(9) அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது கூட தூக்கம் வருவது
(10) காலை எழுந்தவுடன் நாக்கு வறண்டு போய் ,தொண்டையோடு ஒட்டிபோன உணர்வுடன் தாகம் எடுத்தல். இந்த அறிகுறிகளுள் 3-க்கு மேல் இருந்தால் உங்களுக்கு OSA இருக்க வாய்ப்புள்ளது .
சர்க்கரை நோய் ( Diabetes ) , ரத்த அழுத்தம் ( High Blood pressure ) , இருதய நோய் ( HEART ATTACK ) , பக்கவாதம் ( STROKE ) , குழந்தையின்மை ( Infertility ) , ஞாபக மறதி ( Memory loss ) ,திடீர் மரணம் ( Sudden Death ) உள்ளிட்டவைகள் OSA வினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகும்.
மேற்கண்ட OSA அறிகுறிகள் உள்ளவர்கள் தக்கநேரத்தில் தகுந்த மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
இவ்வாறு டாக்டர் பால.கலைக்கோவன் கூறினார்.
குறட்டை என்பது நமது உடல் சோர்வான நிலையில் வருவது என்று பலர் நினைப்பது உண்டு. அது ஒரு ஆபத்தில்லா பிரச்சினை என்றும் நம்புவதுண்டு. ஆனால் நாம் விடும் குறட்டை, நம் உடலையே பாதிக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நமது குறட்டை நம் ஆயுளை குறைக்கும் என்றால் அதை நம்புவீர்களா?. ஆம் அப்படிப்பட்ட ஒரு பிரச்சனைதான் OBSTRUCTIVE SLEEP APNEA
( OSA ) குறட்டையுடன் கூடிய தூக்கத்தில் மூச்சுத்திணறல்
OSA ஏன் ஏற்படுகிறது என்றும், அதன் அறிகுறிகள் என்ன என்பதையும் பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம். குறட்டை உள்ள அனைவருக்கும் இந்த OSA நோய் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. அப்படி என்றால் சாதாரண குறட்டைக்கும், OSA குறட்டைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிப்பது எப்படி?
OSA ஏன் ஏற்படுகிறது ?
நாம் சுவாசிக்கும் காற்று, நமது மூக்கின் வழியாக உள்ளே சென்று தொண்டை பகுதியை கடந்து நுரையீரலுக்கு செல்லும். நாம் விழிப்புடன் இருக்கும் நேரத்தில், இந்த பாதையில் அடைப்பு ஏற்படாது. ஆனால் தூங்கும்போது அந்த தொண்டை தசைகள் தளர்ந்து, மூச்சு உள்ளே செல்வது தடைபடும். இந்த தடைப்பட்ட மூச்சுபாதை வழியாக நாம் மூச்சுவிடும் போது வரும் சத்தம் தான் “குறட்டை“
தூக்கத்தின் ஒரு பகுதியில் மட்டும் (ஆழ்நிலை தூக்கம் REM SLEEP ) இது போன்ற தொண்டை சதைகள் தளர்வது உண்டு. அது அளவுக்கு மீறி தடைப்பட்டால், காற்று நுரையீரலுக்கு உள்ளே போவது, முழுவதுமாக தடைபடும் போது இந்த OSA (தூக்கத்தில் மூச்சுத்திணறல்) ஏற்படும்.
OSA வின் அறிகுறிகள் என்ன ?
(1) தூக்கத்தின் போது அதிகப்படியான குறட்டை
(2) தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது போல் உணர்தல்
(3) தூங்கும் போது மூச்சுவிடுவதை நிறுத்துவது
(4) பகல் நேரத்தில் அதிகமாக தூக்கம் வருதல்
(5) காலை எழுந்தவுடன் தலைவலி ஏற்படுவது
(6) அதிகமான மறதி, சோர்வு, ஆர்வமின்மை ஏற்படுவது
(7) தாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லாமை
(8) வாகனம் ஓட்டும் போது தூக்கம் வருவது
(9) அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது கூட தூக்கம் வருவது
(10) காலை எழுந்தவுடன் நாக்கு வறண்டு போய் ,தொண்டையோடு ஒட்டிபோன உணர்வுடன் தாகம் எடுத்தல். இந்த அறிகுறிகளுள் 3-க்கு மேல் இருந்தால் உங்களுக்கு OSA இருக்க வாய்ப்புள்ளது .
சர்க்கரை நோய் ( Diabetes ) , ரத்த அழுத்தம் ( High Blood pressure ) , இருதய நோய் ( HEART ATTACK ) , பக்கவாதம் ( STROKE ) , குழந்தையின்மை ( Infertility ) , ஞாபக மறதி ( Memory loss ) ,திடீர் மரணம் ( Sudden Death ) உள்ளிட்டவைகள் OSA வினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகும்.
மேற்கண்ட OSA அறிகுறிகள் உள்ளவர்கள் தக்கநேரத்தில் தகுந்த மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
இவ்வாறு டாக்டர் பால.கலைக்கோவன் கூறினார்.
குழந்தைகளுக்கு பன்னீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர், பாலக்கீரை சேர்த்து அருமையான பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மேல் மாவிற்கு…
கோதுமை மாவு - 2 கப்,
உப்பு - தேவைக்கு,
பாலக் கீரை - 1 கட்டு,
கோதுமை மாவு - 3 கப்,
அரைத்த பச்சைமிளகாய் - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய் அல்லது வெண்ணெய், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
ஸ்டஃப்பிங்க்கு…
துருவிய பன்னீர் - 1/4 கப்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 3,
கொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

செய்முறை :
பாலக் கீரையை நன்றாக சுத்தம் செய்து வேகவைத்து அரைத்துக் கொள்ளவும்.
இத்துடன் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், அரைத்த பச்சைமிளகாய், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
கொத்தமல்லித்தழை, பன்னீர், பச்சைமிளகாய், உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி பன்னீர் கலவையை நடுவில் வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது வெண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
மேல் மாவிற்கு…
கோதுமை மாவு - 2 கப்,
உப்பு - தேவைக்கு,
பாலக் கீரை - 1 கட்டு,
கோதுமை மாவு - 3 கப்,
அரைத்த பச்சைமிளகாய் - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய் அல்லது வெண்ணெய், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
ஸ்டஃப்பிங்க்கு…
துருவிய பன்னீர் - 1/4 கப்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 3,
கொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

செய்முறை :
பாலக் கீரையை நன்றாக சுத்தம் செய்து வேகவைத்து அரைத்துக் கொள்ளவும்.
இத்துடன் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், அரைத்த பச்சைமிளகாய், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
கொத்தமல்லித்தழை, பன்னீர், பச்சைமிளகாய், உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி பன்னீர் கலவையை நடுவில் வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது வெண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான பன்னீர் பாலக் பரோட்டா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
கோடை வெப்பத்தை சமாளிக்க சில உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அதே போல் சில உணவுகளை தவிர்க்கவும் வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.
தண்ணீருக்குப் பதிலாக தாதுக்கள் சேர்க்கப்பட்ட, உப்பு சேர்க்கப்பட்ட தண்ணீரை குடிக்கலாம்.
அசதியாக இருப்பவர்கள் குளுக்கோஸ் கலந்த நீர் பருகலாம்.
எலுமிச்சை, கிர்ணி, தர்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களின் பானங்களை பருகலாம்.
இளநீர் பருகலாம். வெள்ளரிக்காய், நுங்கு சாப்பிடலாம்.
காலையும், மாலையும் தலைக்கு குளியல் போடலாம்.
வாரத்தில் ஒரு முறையாவது மூலிகை எண்ணெய் தேய்த்து குளித்து உடல் சூட்டை தணிக்கலாம்.
உடலில் சந்தனம் பூசிக் கொள்ளலாம். மஞ்சளும் பூசலாம்.
பழங்களையும் அதிகமாக சாப்பிடலாம்.
தண்ணீருடன் சேர்ந்த பழஞ்சோறு நல்லது. கூழ்- களி வகைகளை சாப்பிடலாம்.
வெயிலில் செல்ல நேர்ந்தால் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெயை உடலில் தேய்த்துக் கொள்ளலாம்.
சாப்பிடக்கூடாதவை
மாம்பழம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்கும். குறைவாக ஜூஸ் போட்டு பருகலாம்.
சிக்கன் உணவும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். கோடை நேரத்தில் இதை தவிர்க்கலாம்.
அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். சாப்பிட்டவுடன் மற்ற பானங்களை பருக வேண்டாம்.
கார உணவுகள் வெயில்காலத்திற்கு நல்லதல்ல.
செயற்கை குளிர்பானங்கள், நிறமூட்டப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அசதியாக இருப்பவர்கள் குளுக்கோஸ் கலந்த நீர் பருகலாம்.
எலுமிச்சை, கிர்ணி, தர்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களின் பானங்களை பருகலாம்.
இளநீர் பருகலாம். வெள்ளரிக்காய், நுங்கு சாப்பிடலாம்.
காலையும், மாலையும் தலைக்கு குளியல் போடலாம்.
வாரத்தில் ஒரு முறையாவது மூலிகை எண்ணெய் தேய்த்து குளித்து உடல் சூட்டை தணிக்கலாம்.
உடலில் சந்தனம் பூசிக் கொள்ளலாம். மஞ்சளும் பூசலாம்.
பழங்களையும் அதிகமாக சாப்பிடலாம்.
தண்ணீருடன் சேர்ந்த பழஞ்சோறு நல்லது. கூழ்- களி வகைகளை சாப்பிடலாம்.
வெயிலில் செல்ல நேர்ந்தால் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெயை உடலில் தேய்த்துக் கொள்ளலாம்.
சாப்பிடக்கூடாதவை
மாம்பழம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்கும். குறைவாக ஜூஸ் போட்டு பருகலாம்.
சிக்கன் உணவும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். கோடை நேரத்தில் இதை தவிர்க்கலாம்.
அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். சாப்பிட்டவுடன் மற்ற பானங்களை பருக வேண்டாம்.
கார உணவுகள் வெயில்காலத்திற்கு நல்லதல்ல.
செயற்கை குளிர்பானங்கள், நிறமூட்டப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கற்காலம் ஆயினும் கலிகாலம் ஆயினும் ஒரு தனி மனிதனால், உறவுகள் இல்லாமல், மன நிம்மதியோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மையான விஷயம்.
கற்காலம் ஆயினும் கலிகாலம் ஆயினும் ஒரு தனி மனிதனால், உறவுகள் இல்லாமல், மன நிம்மதியோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மையான விஷயம். ஒரு தனி குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வு நடக்குமெனில் தங்களுடைய உறவினரிடையே பகிர்ந்து கொள்ளும் போது அந்த மகிழ்ச்சியானது பல மடங்கு பெருகி அனைவருக்கும் ஆத்மார்த்தமான உணர்வை நிச்சயம் அளிக்கும். அதுவே நமக்கு ஏதேனும் ஒரு வகையில் துன்பம் நேர்ந்தால் நம்மை தேற்றவும், நமக்காக முன் வந்து நிற்கவும், நமக்காக ஆறுதல் அளிக்கவும் நமது உற்றார் உறவினர் முன் வருகையில், மனதிற்கு யானை பலம் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படும்.
மேற்கூறிய அனைத்தும் இப்போதைய காலகட்டத்தில் முக்கால்வாசி குடும்பங்களில் காண முடியாது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமாக கூட்டுக் குடும்பம் என்ற கலாசாரமே தொலைந்து அனைவரும் தனித்தனி குடும்பங்களாக வசிக்கத் தொடங்கிவிட்டோம். கால சூழ் நிலைகளுக்கு ஏற்பவும் வேலைக்கு தகுந்தாற் போலவும் தனி குடும்பங்களாக மாறிப்போனதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் உறவு முறைகளையும் உறவினர்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டே வருகிறோம்.
எதற்கெடுத்தாலும் தற்போதைய வேகமான உலகத்தில் எங்கே நேரம் இருக்கிறது என்று குறைபட்டுக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். என்னதான் உலகம் பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்தாலும் தனக்கான தனித்துவத்தை காட்டுவது நம் பாரம்பரியத்தால் மட்டுமே முடியும். ஒரு குடும்பத்தில் எடுத்துக்கொண்டால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் கடை பிடித்து வரும் பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.
மேலும் குழந்தைகளை சிறு வயதிலிருந்தே அவற்றை கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும். ஆனால் இப்போதைய பெற்றோர்களில் நிறைய பேர் இச்செயலை செய்யத் தவறுவதோடு மட்டுமல்லாமல், இவற்றையெல்லாம் நீங்கள் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று வேறு கூறிக் கொண்டிருக்கின்றனர். நிறைய குழந்தைகளுக்கு உறவு முறைகளே தெரிவதில்லை.
இந்த செயலால் பெரிதும் வீட்டில் உள்ள குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். வேகமான உலகத்தில் பள்ளியையும், வீட்டையும் தவிர இவர்களுக்கு வேறு எதுவும் தெரிவதில்லை. முன்பெல்லாம் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர் அனைவரும் ஆளுக்கு ஒருவராக அக்குழந்தையை தங்கள் குழந்தையாக எண்ணி வளர்ப்பார்கள்.
அக்குழந்தை வளரத் தொடங்கிய உடன் சக குழந்தைகளோடு ஓடியாடி விளையாடி குழந்தைப் பருவத்தை மிக அருமையாக அனுபவிக்கும். ஆனால் தற்போது அடுக்குமாடி குடியிருப்பில் ஏதோ எந்திர பொம்மைகளைப் போல குழந்தைகள் அடைந்து கிடக்கின்றனர். நகரத்தில் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மாதம் ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊர்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். அப்படிச் செய்யும்போது குழந்தைகளால் உறவு முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். அந்த இளம் வயதில் அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தம் உருவாகாமல் தவிர்க்கப்படும்.
ஒரு வீட்டில் திருமணம் நடக்கப் போகிறது என்றால் உறவினர்களால் ஒரு வாரம் முன்னதாகவே வீடே நிறைந்து காணப்பட்ட காலமானது மாறி, ஒரு நாளுக்கு முன் கூட வீட்டில் யாரையும் பார்க்க முடிவதில்லை. கல்யாண பத்திரிகைகளை தங்களால் முடியாத பட்சத்தில் தான் தபாலில் அனுப்பிக்கொண்டிருந்தனர்.
ஆனால் இப்போதோ தபாலும் கூட நின்று வாட்ஸ்-ஆப் பத்திரிகையாக மாறிப்போய்விட்டது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், நமது நண்பர்களின் பத்திரிகையையோ, உறவினரின் பத்திரிகையையோ, குடும்பத்துடன் பிரித்துப் படிக்கும்போது ஒருவித மனமகிழ்ச்சியை, டிஜிட்டல் பரிமாற்றம் செய்யப்பட்ட வாட்ஸ்-ஆப் பத்திரிகையால் எக்காலத்திலும் தர முடியாது. உலகத்துக்கு ஏற்ப அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமே தவிர தனது அடையாளமான பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தரக்கூடாது.
சதாகாலம் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை வாரம் ஒருமுறை தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை ஆகியோரிடத்தில் பேசச் செய்ய வேண்டும். கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் சூழ்நிலையில் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க அனேகம் பேர் தவறுகின்றனர்.
நம்முடைய குழந்தைகளுக்கு நிறைய பணம் சம்பாதித்து வைக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியத்துடன் வளர்க்கிறோமா என்பதை மனதில் கொள்வதில்லை. இந்த சூழலில் வளரும் குழந்தைகள் சிறுவயது முதலே அதீத மன அழுத்தத்துடன் வளரத் தொடங்குகின்றனர். சிறுவயதில் பெற்றோர்கள் இழைக்கும் இந்த தவறினால் குழந்தைகள் வளர்ந்த பின் ஒரு சிறிய பிரச்சினைக்குக்கூட மனம் உடைந்து தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் தியேட்டர்களுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும் குழந்தைகளை அழைத்துச் செல்வதை வெகுவாக குறைத்து அவரவர் வழிபடும் கோவில்களுக்கு அழைத்துச் செல்லத் தொடங்க வேண்டும். இது நிச்சயம் குழந்தைகளுக்கு மன ஒருமைப்பாட்டை ஏற்படுத்த வழிவகுக்கும். முன்பெல்லாம் மாதத்தில் ஒருமுறை நெருங்கிய உறவினர்களோடு ஒன்றாக புறப்பட்டு குலதெய்வ வழிபாடு செய்து ஒன்றுகூடி கோவில்களில் சமைத்து மகிழ்ந்தனர். அந்த நிலைமையானது 80 சதவீத குடும்பங்களில் காணாமல் போய்விட்டது.
பண்டிகை என்ற ஒரு தருணம் வந்தாலே அனைவரது வீட்டிலும் சத்தான இனிப்புகளையும் பலகாரங்களையும் செய்து நெருங்கிய உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இப்போதோ அவரவர் வீட்டிற்கு தேவையான பலகாரங்களை கூட செய்வதில்லை. உறவுகளின் எடையை அவர்கள் வைத்திருக்கும் பணத்தை பொருத்து நிர்ணயிக்க தொடங்கிவிட்டது இக்காலம். நாம் நாகரிகம் என்ற பெயரில் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கு தவறி ஆரோக்கியமான வாழ்விற்கு பெரிய அளவில் பாதிப்பை பெருக்கிக்கொண்டே போகிறோம். இதை உணர்ந்து பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு காலம் காலமாக நம் முன்னோர்கள் காப்பாற்றிய பாரம்பரியத்தை நம் சந்ததியினருக்கு கொண்டு செல்வோம்.
மு.முத்துமீனா, எழுத்தாளர், நாமக்கல்.
மேற்கூறிய அனைத்தும் இப்போதைய காலகட்டத்தில் முக்கால்வாசி குடும்பங்களில் காண முடியாது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமாக கூட்டுக் குடும்பம் என்ற கலாசாரமே தொலைந்து அனைவரும் தனித்தனி குடும்பங்களாக வசிக்கத் தொடங்கிவிட்டோம். கால சூழ் நிலைகளுக்கு ஏற்பவும் வேலைக்கு தகுந்தாற் போலவும் தனி குடும்பங்களாக மாறிப்போனதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் உறவு முறைகளையும் உறவினர்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டே வருகிறோம்.
எதற்கெடுத்தாலும் தற்போதைய வேகமான உலகத்தில் எங்கே நேரம் இருக்கிறது என்று குறைபட்டுக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். என்னதான் உலகம் பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்தாலும் தனக்கான தனித்துவத்தை காட்டுவது நம் பாரம்பரியத்தால் மட்டுமே முடியும். ஒரு குடும்பத்தில் எடுத்துக்கொண்டால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் கடை பிடித்து வரும் பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.
மேலும் குழந்தைகளை சிறு வயதிலிருந்தே அவற்றை கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும். ஆனால் இப்போதைய பெற்றோர்களில் நிறைய பேர் இச்செயலை செய்யத் தவறுவதோடு மட்டுமல்லாமல், இவற்றையெல்லாம் நீங்கள் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று வேறு கூறிக் கொண்டிருக்கின்றனர். நிறைய குழந்தைகளுக்கு உறவு முறைகளே தெரிவதில்லை.
இந்த செயலால் பெரிதும் வீட்டில் உள்ள குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். வேகமான உலகத்தில் பள்ளியையும், வீட்டையும் தவிர இவர்களுக்கு வேறு எதுவும் தெரிவதில்லை. முன்பெல்லாம் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர் அனைவரும் ஆளுக்கு ஒருவராக அக்குழந்தையை தங்கள் குழந்தையாக எண்ணி வளர்ப்பார்கள்.
அக்குழந்தை வளரத் தொடங்கிய உடன் சக குழந்தைகளோடு ஓடியாடி விளையாடி குழந்தைப் பருவத்தை மிக அருமையாக அனுபவிக்கும். ஆனால் தற்போது அடுக்குமாடி குடியிருப்பில் ஏதோ எந்திர பொம்மைகளைப் போல குழந்தைகள் அடைந்து கிடக்கின்றனர். நகரத்தில் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மாதம் ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊர்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். அப்படிச் செய்யும்போது குழந்தைகளால் உறவு முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். அந்த இளம் வயதில் அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தம் உருவாகாமல் தவிர்க்கப்படும்.
ஒரு வீட்டில் திருமணம் நடக்கப் போகிறது என்றால் உறவினர்களால் ஒரு வாரம் முன்னதாகவே வீடே நிறைந்து காணப்பட்ட காலமானது மாறி, ஒரு நாளுக்கு முன் கூட வீட்டில் யாரையும் பார்க்க முடிவதில்லை. கல்யாண பத்திரிகைகளை தங்களால் முடியாத பட்சத்தில் தான் தபாலில் அனுப்பிக்கொண்டிருந்தனர்.
ஆனால் இப்போதோ தபாலும் கூட நின்று வாட்ஸ்-ஆப் பத்திரிகையாக மாறிப்போய்விட்டது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், நமது நண்பர்களின் பத்திரிகையையோ, உறவினரின் பத்திரிகையையோ, குடும்பத்துடன் பிரித்துப் படிக்கும்போது ஒருவித மனமகிழ்ச்சியை, டிஜிட்டல் பரிமாற்றம் செய்யப்பட்ட வாட்ஸ்-ஆப் பத்திரிகையால் எக்காலத்திலும் தர முடியாது. உலகத்துக்கு ஏற்ப அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமே தவிர தனது அடையாளமான பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தரக்கூடாது.
சதாகாலம் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை வாரம் ஒருமுறை தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை ஆகியோரிடத்தில் பேசச் செய்ய வேண்டும். கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் சூழ்நிலையில் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க அனேகம் பேர் தவறுகின்றனர்.
நம்முடைய குழந்தைகளுக்கு நிறைய பணம் சம்பாதித்து வைக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியத்துடன் வளர்க்கிறோமா என்பதை மனதில் கொள்வதில்லை. இந்த சூழலில் வளரும் குழந்தைகள் சிறுவயது முதலே அதீத மன அழுத்தத்துடன் வளரத் தொடங்குகின்றனர். சிறுவயதில் பெற்றோர்கள் இழைக்கும் இந்த தவறினால் குழந்தைகள் வளர்ந்த பின் ஒரு சிறிய பிரச்சினைக்குக்கூட மனம் உடைந்து தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் தியேட்டர்களுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும் குழந்தைகளை அழைத்துச் செல்வதை வெகுவாக குறைத்து அவரவர் வழிபடும் கோவில்களுக்கு அழைத்துச் செல்லத் தொடங்க வேண்டும். இது நிச்சயம் குழந்தைகளுக்கு மன ஒருமைப்பாட்டை ஏற்படுத்த வழிவகுக்கும். முன்பெல்லாம் மாதத்தில் ஒருமுறை நெருங்கிய உறவினர்களோடு ஒன்றாக புறப்பட்டு குலதெய்வ வழிபாடு செய்து ஒன்றுகூடி கோவில்களில் சமைத்து மகிழ்ந்தனர். அந்த நிலைமையானது 80 சதவீத குடும்பங்களில் காணாமல் போய்விட்டது.
பண்டிகை என்ற ஒரு தருணம் வந்தாலே அனைவரது வீட்டிலும் சத்தான இனிப்புகளையும் பலகாரங்களையும் செய்து நெருங்கிய உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இப்போதோ அவரவர் வீட்டிற்கு தேவையான பலகாரங்களை கூட செய்வதில்லை. உறவுகளின் எடையை அவர்கள் வைத்திருக்கும் பணத்தை பொருத்து நிர்ணயிக்க தொடங்கிவிட்டது இக்காலம். நாம் நாகரிகம் என்ற பெயரில் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கு தவறி ஆரோக்கியமான வாழ்விற்கு பெரிய அளவில் பாதிப்பை பெருக்கிக்கொண்டே போகிறோம். இதை உணர்ந்து பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு காலம் காலமாக நம் முன்னோர்கள் காப்பாற்றிய பாரம்பரியத்தை நம் சந்ததியினருக்கு கொண்டு செல்வோம்.
மு.முத்துமீனா, எழுத்தாளர், நாமக்கல்.
சாம்பார், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஜீரா ஆலு. இன்று இதனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 200 டகிராம்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மாங்காய் பொடி - 1 டீஸ்பூன்,
சாட் மசாலாப் பொடி - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது.

செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெறும் கடாயில் சீரகம், மிளகு, தனியாவை வறுத்து ஆறியதும் பொடித்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி சூடானதும் சிறிது சீரகம் போட்டு தாளித்த பின்னர் உருளைக்கிழங்கை போட்டு வறுக்கவும்.
உருளைக்கிழங்கு நன்கு மொறுமொறு என்று வந்தவுடன் உப்பு, மிளகாய்த்தூள், மாங்காய் பொடி, வறுத்து அரைத்த பொடி, சாட் மசாலாப் பொடி சேர்த்து வறுக்கவும்.
அனைத்தும் சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையை கலந்து பரிமாறவும்.
உருளைக்கிழங்கு - 200 டகிராம்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மாங்காய் பொடி - 1 டீஸ்பூன்,
சாட் மசாலாப் பொடி - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது.

செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெறும் கடாயில் சீரகம், மிளகு, தனியாவை வறுத்து ஆறியதும் பொடித்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி சூடானதும் சிறிது சீரகம் போட்டு தாளித்த பின்னர் உருளைக்கிழங்கை போட்டு வறுக்கவும்.
உருளைக்கிழங்கு நன்கு மொறுமொறு என்று வந்தவுடன் உப்பு, மிளகாய்த்தூள், மாங்காய் பொடி, வறுத்து அரைத்த பொடி, சாட் மசாலாப் பொடி சேர்த்து வறுக்கவும்.
அனைத்தும் சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையை கலந்து பரிமாறவும்.
சூப்பரான ஜீரா ஆலு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
மருத்துவகுணம் நிறைந்த இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சி சாறு பொடுகு, தலை முடி உதிர்தல் மற்றும் அரிப்பு நீக்கவும் பயன்படுகிறது.
இஞ்சி உடலில் ஏற்படும் அலர்ஜியை போக்குகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சியை சருமப் பராமரிப்பிற்கும் பயன்படுத்த முடியும். இஞ்சி சாறை முகம் மற்றும் முடிக்கான மாஸ்க்காக பயன்படுத்த முடியும். தலை முடியில் ஏற்படும் பிரச்சனைக்களுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சி சாறு பொடுகு, தலை முடி உதிர்தல் மற்றும் அரிப்பு நீக்கவும் பயன்படுகிறது.
பொடுகு மற்றும் தலை அரிப்பை நீக்கும் இஞ்சி ஹேர் மாஸ்க்
1. இஞ்சியை எடுத்து பொடி பொடியாக வெட்டியோ அல்லது துருவியோ வைக்கவும்.
2. பொடியாக நறுக்கிய இஞ்சியை தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பில் கொதிக்க விடவும். சிறிது நேரத்தில் தண்ணீரில் நிறம் மாறத்தொடங்கும். மென்மையான மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கும்.
3. அடுப்பை அணைத்து விட்டு வடிக்கட்டி தனியே எடுத்து வைக்கவும்.
4. நன்றாக பிழிந்து அதிகபட்ச இஞ்சி சாறை எடுத்து தனியாக கண்டெய்னரில் வைக்கவும்.
5. இஞ்சி சாறு நன்றாக சூடு தணிந்த பின் சின்ன ஸ்பிரே பாட்டிலில் வைத்து நேரடியாக தலை முடியின் வேர்கால்களில் படும் விதமாக பயன்படுத்தவும்.
6. அரை மணி முதல் 1 மணிநேரம் வரை இந்த மாஸ்க் தலையில் இருக்கும் விதமாக வைத்துவிட்டு ஷாம்பு தேய்த்து தலை முடியையை மென்மையாக கழுவவும். இந்த ஹேர்மாஸ்க்கை வாரம் ஒரு முறை பயன்படுத்துவது நல்லது. இதனால் பொடுகு குறைந்து தலை அரிப்பும் குறைந்து விடும். அன்றாடம் தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதும் மிகவும் அவசியம்.
பொடுகு மற்றும் தலை அரிப்பை நீக்கும் இஞ்சி ஹேர் மாஸ்க்
1. இஞ்சியை எடுத்து பொடி பொடியாக வெட்டியோ அல்லது துருவியோ வைக்கவும்.
2. பொடியாக நறுக்கிய இஞ்சியை தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பில் கொதிக்க விடவும். சிறிது நேரத்தில் தண்ணீரில் நிறம் மாறத்தொடங்கும். மென்மையான மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கும்.
3. அடுப்பை அணைத்து விட்டு வடிக்கட்டி தனியே எடுத்து வைக்கவும்.
4. நன்றாக பிழிந்து அதிகபட்ச இஞ்சி சாறை எடுத்து தனியாக கண்டெய்னரில் வைக்கவும்.
5. இஞ்சி சாறு நன்றாக சூடு தணிந்த பின் சின்ன ஸ்பிரே பாட்டிலில் வைத்து நேரடியாக தலை முடியின் வேர்கால்களில் படும் விதமாக பயன்படுத்தவும்.
6. அரை மணி முதல் 1 மணிநேரம் வரை இந்த மாஸ்க் தலையில் இருக்கும் விதமாக வைத்துவிட்டு ஷாம்பு தேய்த்து தலை முடியையை மென்மையாக கழுவவும். இந்த ஹேர்மாஸ்க்கை வாரம் ஒரு முறை பயன்படுத்துவது நல்லது. இதனால் பொடுகு குறைந்து தலை அரிப்பும் குறைந்து விடும். அன்றாடம் தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதும் மிகவும் அவசியம்.
குட்டீஸ், நீங்கள் எல்லாரும் விடுமுறை என்றாலே குதூகலமாகிவிடுவீர்கள்தானே? கோடையில் எங்கு சென்றாலும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வது அவசியம்.
கோடை, கத்தரி வெயில்போல காட்டமாக வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. சிறுவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது. மீதி மாணவர்களுக்கும் இன்னும் சில நாட்களே பள்ளி இயங்க இருக்கிறது. பின்னர் விடுமுறைதான். குட்டீஸ், நீங்கள் எல்லாரும் விடுமுறை என்றாலே குதூகலமாகிவிடுவீர்கள்தானே? கோடையில் நீங்கள் எங்கே செல்ல திட்டமிட்டு இருக்கிறீர்கள்? சுற்றுலாவுக்கா, உறவினர் வீட்டிற்கா, இல்லை கோடை பயிற்சி வகுப்புகளுக்கா? எங்கு சென்றாலும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வது அவசியம். கோடை வெயிலின் கடுமை பற்றியும், அதிலிருந்து தப்பிக்கும் வழிகளையும் தெரிந்துகொள்வோம்...
வெயிலில் அலைந்தால்தானே நமக்குப் பாதிப்பு என்றுதான் பலரும் எண்ணுவோம். ஆனால் கோடையின் உக்கிரம் என்பது, நேரடியாக இல்லாமல் மறைமுகமாகவும் உடல் வெப்பம் மற்றும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. உடல் சூடு, சரும பாதிப்புகள், அதிக வியர்வை, உடல் அசதி என பாதிப்புகள் நீண்டு கொண்டே செல்லும்.
கோடை வெப்பத்தால் ஏற்படும் சோர்வு உங்களை எளிதில் களைப்படைய வைத்துவிடும் குட்டீஸ். எனவே வெயிலிலும், வெப்பம் நிறைந்த இடங்களிலும் நீண்ட நேரம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். கிரிக்கெட் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது மற்றும் பிற விஷயங்களுக்காக நண்பர்களுடன்/ தோழிகளுடன் வெயிலில் திரிவது தவறாகும். குறிப்பாக உச்சி வெயலில் கண்டிப்பாக வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
வெயிலில் அதிகமாக சுற்றுவதால் ஏற்படும் களைப்பு சிலரை மயக்கத்தில் தள்ளிவிடும் என்பதால் கவனம் தேவை. சக தோழர்களோடு விளையாடும்போது மயக்கமடைந்தால் அவர்களும் திகைப்படைவார்கள். முதலுதவி பற்றி யாருக்கும் தெரியாவிட்டால் சிக்கலாகிவிடும். எனவே விளையாட்டு எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தாலும், உடம்பு களைத்துவிட்டது தெரிந்தால், அதிகமாக தாகம் எடுப்பதை உணர்ந்தால் விளையாட்டிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, நிழலில் இளைப்பாறுங்கள். தண்ணீர் மற்றும் பழரச பானங்களை பருகி உடலுக்கு தெம்பூட்டுங்கள்.
ஒருவேளை உங்களுடன் விளையாடும் தோழன்-தோழி யாராவது மயக்கமடைந்தால் உடனே அருகில் உள்ள பெரியோர்களின் உதவியுடன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுங்கள். பெற்றோருக்கும் தகவல் தெரிவியுங்கள். முடிந்தவரை, ஆள்நடமாட்டம் இல்லாத கண்மாய், காடுகளில் விளையாடுவதை தவிர்த்துவிடுங்கள். நிழல் நிறைந்த இடங்களில், வீட்டிற்கு அருகிலேயே விளையாடுங்கள்.
நீண்ட நேரம் விளையாடாமல் இருந்தாலும் வெயிலின் தாக்கம், உங்களை பாதிக்கலாம். தினமும் கொஞ்ச நேரம் வெயிலில் விளையாடுவதால், அந்த வெப்பம் தலைவலியை ஏற்படுத்தலாம். சருமத்தில் சுருக்கங்களையும், அதிகமான வியர்வை வெளியேற்றத்தையும் உண்டாக்கலாம். இதனால் தோல் வெளிறிப் போவதுண்டு. சிலருக்கு சருமம் கருப்பாக மாறிவிடும். சிலருக்கு நேர்மாறாக உடலின் சூடு குறைந்துவிடுவதும் உண்டு. நாக்கு வறட்சி அடிக்கடி ஏற்படும்.

வெயிலில் திரிந்து திரும்பியபின்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படலாம். சிறுநீர் அதிகமான மஞ்சள் நிறத்துடன் வெளியேறினால் கவனிக்க வேண்டும். தொடர்ந்து இப்படி ஏற்படுவது மஞ்சள் காமாலை பாதிப்பை குறிக்கும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
வெயிலினால் வியர்வை மற்றும் சிறுநீருடன் சேர்த்து உப்புக்களும் வெளியேறுவது, களைப்புக்கு காரணமாகும். இதை ஈடு செய்ய தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து பருகலாம். அல்லது எலுமிச்சை சாறுடன், உப்பு சேர்த்து பருகலாம். இனிப்பு தேவைப்படுபவர்கள் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வீட்டின் உள்ளே இருந்தாலும் சிறுகுழந்தைகள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும். வியர்க்குரு உள்ளிட்ட சரும பாதிப்புகள் ஏற்படும். உயரம் குறைவாக உள்ள வீடுகளில் வசிப்பவர்கள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படும். வழக்கத்திற்கு மாறாக குழந்தைகள் அழுவது, சருமத்தை சொரிந்து கொண்டி ருப்பது, சுறுசுறுப்பாக விளையாடாமல் முடங்கிவிடுவது, சிறுநீரில் மாற்றங்கள் தெரிவது போன்ற நடவடிக்கைகள் தெரிந்தால் குழந்தையின் தாயார் அதிக கவனமாக குழந்தையை பராமரிக்க வேண்டும்.
வெப்பத்தை தணிப்பதற்காக சுகாதாரமற்ற வகையில் தயாரித்து விற்கப்படும் சர்பத் மற்றும் ஜூஸ்களை குடிக்க வேண்டாம். குளிர்பானங்களையும் தவிர்க்கலாம்.
வெளியில் விளையாடிவிட்டு வீட்டிற்குச் சென்றால், கைகால்களை கழுவாமல் எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது.
அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டால், வெயிலில் திரியாமல், தனியறையில் இருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சின்னம்மை, மஞ்சள் காமாலை பாதிப்புகளுக்கு மருந்தும், சிகிச்சையும் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.
வெயில் உயிர்களுக்கு பலவிதங்களில் நன்மை செய்கிறது. கோடை வெயிலாலும் பல நன்மைகள் உண்டு. ஆனாலும் கோடை வெயிலால் உடல் நிலையில் தாக்கம் ஏற்படும் என்பதால் கவனமாக விளையாட வேண்டும். சரியா குட்டீஸ்!
வெயிலில் அலைந்தால்தானே நமக்குப் பாதிப்பு என்றுதான் பலரும் எண்ணுவோம். ஆனால் கோடையின் உக்கிரம் என்பது, நேரடியாக இல்லாமல் மறைமுகமாகவும் உடல் வெப்பம் மற்றும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. உடல் சூடு, சரும பாதிப்புகள், அதிக வியர்வை, உடல் அசதி என பாதிப்புகள் நீண்டு கொண்டே செல்லும்.
கோடை வெப்பத்தால் ஏற்படும் சோர்வு உங்களை எளிதில் களைப்படைய வைத்துவிடும் குட்டீஸ். எனவே வெயிலிலும், வெப்பம் நிறைந்த இடங்களிலும் நீண்ட நேரம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். கிரிக்கெட் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது மற்றும் பிற விஷயங்களுக்காக நண்பர்களுடன்/ தோழிகளுடன் வெயிலில் திரிவது தவறாகும். குறிப்பாக உச்சி வெயலில் கண்டிப்பாக வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
வெயிலில் அதிகமாக சுற்றுவதால் ஏற்படும் களைப்பு சிலரை மயக்கத்தில் தள்ளிவிடும் என்பதால் கவனம் தேவை. சக தோழர்களோடு விளையாடும்போது மயக்கமடைந்தால் அவர்களும் திகைப்படைவார்கள். முதலுதவி பற்றி யாருக்கும் தெரியாவிட்டால் சிக்கலாகிவிடும். எனவே விளையாட்டு எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தாலும், உடம்பு களைத்துவிட்டது தெரிந்தால், அதிகமாக தாகம் எடுப்பதை உணர்ந்தால் விளையாட்டிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, நிழலில் இளைப்பாறுங்கள். தண்ணீர் மற்றும் பழரச பானங்களை பருகி உடலுக்கு தெம்பூட்டுங்கள்.
ஒருவேளை உங்களுடன் விளையாடும் தோழன்-தோழி யாராவது மயக்கமடைந்தால் உடனே அருகில் உள்ள பெரியோர்களின் உதவியுடன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுங்கள். பெற்றோருக்கும் தகவல் தெரிவியுங்கள். முடிந்தவரை, ஆள்நடமாட்டம் இல்லாத கண்மாய், காடுகளில் விளையாடுவதை தவிர்த்துவிடுங்கள். நிழல் நிறைந்த இடங்களில், வீட்டிற்கு அருகிலேயே விளையாடுங்கள்.
நீண்ட நேரம் விளையாடாமல் இருந்தாலும் வெயிலின் தாக்கம், உங்களை பாதிக்கலாம். தினமும் கொஞ்ச நேரம் வெயிலில் விளையாடுவதால், அந்த வெப்பம் தலைவலியை ஏற்படுத்தலாம். சருமத்தில் சுருக்கங்களையும், அதிகமான வியர்வை வெளியேற்றத்தையும் உண்டாக்கலாம். இதனால் தோல் வெளிறிப் போவதுண்டு. சிலருக்கு சருமம் கருப்பாக மாறிவிடும். சிலருக்கு நேர்மாறாக உடலின் சூடு குறைந்துவிடுவதும் உண்டு. நாக்கு வறட்சி அடிக்கடி ஏற்படும்.

வெயிலில் திரிந்து திரும்பியபின்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படலாம். சிறுநீர் அதிகமான மஞ்சள் நிறத்துடன் வெளியேறினால் கவனிக்க வேண்டும். தொடர்ந்து இப்படி ஏற்படுவது மஞ்சள் காமாலை பாதிப்பை குறிக்கும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
வெயிலினால் வியர்வை மற்றும் சிறுநீருடன் சேர்த்து உப்புக்களும் வெளியேறுவது, களைப்புக்கு காரணமாகும். இதை ஈடு செய்ய தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து பருகலாம். அல்லது எலுமிச்சை சாறுடன், உப்பு சேர்த்து பருகலாம். இனிப்பு தேவைப்படுபவர்கள் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வீட்டின் உள்ளே இருந்தாலும் சிறுகுழந்தைகள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும். வியர்க்குரு உள்ளிட்ட சரும பாதிப்புகள் ஏற்படும். உயரம் குறைவாக உள்ள வீடுகளில் வசிப்பவர்கள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படும். வழக்கத்திற்கு மாறாக குழந்தைகள் அழுவது, சருமத்தை சொரிந்து கொண்டி ருப்பது, சுறுசுறுப்பாக விளையாடாமல் முடங்கிவிடுவது, சிறுநீரில் மாற்றங்கள் தெரிவது போன்ற நடவடிக்கைகள் தெரிந்தால் குழந்தையின் தாயார் அதிக கவனமாக குழந்தையை பராமரிக்க வேண்டும்.
வெப்பத்தை தணிப்பதற்காக சுகாதாரமற்ற வகையில் தயாரித்து விற்கப்படும் சர்பத் மற்றும் ஜூஸ்களை குடிக்க வேண்டாம். குளிர்பானங்களையும் தவிர்க்கலாம்.
வெளியில் விளையாடிவிட்டு வீட்டிற்குச் சென்றால், கைகால்களை கழுவாமல் எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது.
அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டால், வெயிலில் திரியாமல், தனியறையில் இருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சின்னம்மை, மஞ்சள் காமாலை பாதிப்புகளுக்கு மருந்தும், சிகிச்சையும் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.
வெயில் உயிர்களுக்கு பலவிதங்களில் நன்மை செய்கிறது. கோடை வெயிலாலும் பல நன்மைகள் உண்டு. ஆனாலும் கோடை வெயிலால் உடல் நிலையில் தாக்கம் ஏற்படும் என்பதால் கவனமாக விளையாட வேண்டும். சரியா குட்டீஸ்!
சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் சத்தான ஸ்நாக்ஸ் உப்புக்கடலை. இந்த உப்புக்கடலையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கருப்பு கொண்டைக்கடலை - 100 கிராம்,

செய்முறை :
ஓர் அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் உப்பை போட்டு நன்றாக சூடானதும் கருப்பு கொண்டைக்கடலையை போட்டு நன்றாக வறுக்கவும்.
8 முதல் 10 நிமிடங்கள் வரை வறுத்தபின் கடலையில் சிறிது பிளவு ஏற்படும். பின், சிறு தீயில் தொடர்ந்து 5 முதல் 8 நிமிடங்கள் வரை வறுத்து எடுத்து ஆறிய பின் கலந்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து, தேவைப்படும்போது சுவைக்கலாம்.
கருப்பு கொண்டைக்கடலை - 100 கிராம்,
உப்பு - அரை கப்

செய்முறை :
ஓர் அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் உப்பை போட்டு நன்றாக சூடானதும் கருப்பு கொண்டைக்கடலையை போட்டு நன்றாக வறுக்கவும்.
8 முதல் 10 நிமிடங்கள் வரை வறுத்தபின் கடலையில் சிறிது பிளவு ஏற்படும். பின், சிறு தீயில் தொடர்ந்து 5 முதல் 8 நிமிடங்கள் வரை வறுத்து எடுத்து ஆறிய பின் கலந்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து, தேவைப்படும்போது சுவைக்கலாம்.
சூப்பரான உப்புக்கடலை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
சுகப்பிரசவமோ, சிசேரியனோ... எதுவானாலும் பிரசவித்த பெண் உடலளவிலும் மனதளவிலும் மிகுதியான களைப்பை சந்தித்திருப்பாள். பிரசவமான பெண்ணுக்கு முழு ஓய்வு மட்டுமே அதை சாத்தியப்படுத்தும்.
கர்ப்பத்தின் 9 - 10 மாதங்கள் வரை பெண்ணின் உடல் ஏகப்பட்ட ஹார்மோன் மாறுதல்களைச் சந்திக்கிறது. அவளது தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்பிலும் மாற்றத்தை உணர்ந்திருப்பாள். பிரசவமானதும் இயற்கையாக அவளது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாகக் குறைந்துவிடும். எளிதில் தொற்றுகளுக்கு உள்ளாகக்கூடும் என்பதால்தான் அவளை பாதுகாப்பான சூழலில் ஆரோக்கியமாக வைத்திருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இதுதவிர தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கும் ஆரோக்கிய பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதிலும் அவள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டை விட்டே வெளியே போகக்கூடாது என்பதும், சமையலறை பக்கம் போகக்கூடாது என்பதும் அவளது ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட தகவல்களே தவிர, அப்படி செல்வதால் தவறு ஒன்றும் இல்லை. களைப்பாக இருப்பாள் என்கிற ஒரே காரணம்தான் இவை எல்லாவற்றின் பின்னணியும்.
இப்போதெல்லாம் சிசேரியன் செய்யப்படுகிற பெண்களையே மருத்துவமனையில் இரண்டாவது, மூன்றாவது நாளே எழுந்து நடக்கச் செய்கிறோம்.அப்போதுதான் அவளுக்கு தன் உடல் பற்றிய பயமும், பதற்றமும் மாறும். காயங்களும் சீக்கிரம் ஆறும்.வீட்டை விட்டு வெளியே செல்கிறபோது உணவு விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பிரசவித்த பெண்களுக்கு செரிமானக் கோளாறுகள் வரலாம் என்பதால் வெளி உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் அவர்களை வெளியே அனுமதிக்காததற்கு ஒரு காரணம். மற்றபடி தாய் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்திலும், ஊட்டம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறதும், தன்னையும் குழந்தையையும் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிற பட்சத்திலும் வெளியே சென்று வருவதில் பிரச்னை இல்லை.
சுகப்பிரசவமோ, சிசேரியனோ... எதுவானாலும் பிரசவித்த பெண் உடலளவிலும் மனதளவிலும் மிகுதியான களைப்பை சந்தித்திருப்பாள். பிரசவம் பற்றிய பயமும் பதற்றமும் நீங்கி, அவள் சகஜமான உடல் மற்றும் மனநிலைக்குத் திரும்ப சில நாட்கள் ஆகும். பிரசவமான பெண்ணுக்கு முழு ஓய்வு மட்டுமே அதை சாத்தியப்படுத்தும்.
அந்த ஓய்வு அம்மாவுக்கும் குழந்தைக்குமான பிணைப்பைக் கூட்டவும் காரணமாக அமையும். இத்துடன் பிரசவித்த முதல் சில நாட்களுக்கு குழந்தைக்கும் தாயின் அருகாமை மிக அவசியம். தாயின் வாசனையும் ஸ்பரிசமும் குழந்தைக்கு அதிகமாகத் தேவைப்படும். பசியால் அழும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க தாய் அருகில் இருக்க வேண்டும்.
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் பிரசவித்த பெண்ணுக்கு வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்படும்போது, குழந்தையை மிக மிகப் பாதுகாப்பான சூழலில் நம்பிக்கையான நபர்களிடம் விட்டுச் செல்ல வேண்டியது முக்கியம். சுகாதாரமான சூழல் வலியுறுத்தப்பட வேண்டும். குழந்தை இருக்கும் சூழலில் புகைப்பிடிப்பவர்களோ, மது அருந்துபவர்களோ இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதுதவிர தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கும் ஆரோக்கிய பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதிலும் அவள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டை விட்டே வெளியே போகக்கூடாது என்பதும், சமையலறை பக்கம் போகக்கூடாது என்பதும் அவளது ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட தகவல்களே தவிர, அப்படி செல்வதால் தவறு ஒன்றும் இல்லை. களைப்பாக இருப்பாள் என்கிற ஒரே காரணம்தான் இவை எல்லாவற்றின் பின்னணியும்.
இப்போதெல்லாம் சிசேரியன் செய்யப்படுகிற பெண்களையே மருத்துவமனையில் இரண்டாவது, மூன்றாவது நாளே எழுந்து நடக்கச் செய்கிறோம்.அப்போதுதான் அவளுக்கு தன் உடல் பற்றிய பயமும், பதற்றமும் மாறும். காயங்களும் சீக்கிரம் ஆறும்.வீட்டை விட்டு வெளியே செல்கிறபோது உணவு விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பிரசவித்த பெண்களுக்கு செரிமானக் கோளாறுகள் வரலாம் என்பதால் வெளி உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் அவர்களை வெளியே அனுமதிக்காததற்கு ஒரு காரணம். மற்றபடி தாய் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்திலும், ஊட்டம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறதும், தன்னையும் குழந்தையையும் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிற பட்சத்திலும் வெளியே சென்று வருவதில் பிரச்னை இல்லை.
சுகப்பிரசவமோ, சிசேரியனோ... எதுவானாலும் பிரசவித்த பெண் உடலளவிலும் மனதளவிலும் மிகுதியான களைப்பை சந்தித்திருப்பாள். பிரசவம் பற்றிய பயமும் பதற்றமும் நீங்கி, அவள் சகஜமான உடல் மற்றும் மனநிலைக்குத் திரும்ப சில நாட்கள் ஆகும். பிரசவமான பெண்ணுக்கு முழு ஓய்வு மட்டுமே அதை சாத்தியப்படுத்தும்.
அந்த ஓய்வு அம்மாவுக்கும் குழந்தைக்குமான பிணைப்பைக் கூட்டவும் காரணமாக அமையும். இத்துடன் பிரசவித்த முதல் சில நாட்களுக்கு குழந்தைக்கும் தாயின் அருகாமை மிக அவசியம். தாயின் வாசனையும் ஸ்பரிசமும் குழந்தைக்கு அதிகமாகத் தேவைப்படும். பசியால் அழும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க தாய் அருகில் இருக்க வேண்டும்.
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் பிரசவித்த பெண்ணுக்கு வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்படும்போது, குழந்தையை மிக மிகப் பாதுகாப்பான சூழலில் நம்பிக்கையான நபர்களிடம் விட்டுச் செல்ல வேண்டியது முக்கியம். சுகாதாரமான சூழல் வலியுறுத்தப்பட வேண்டும். குழந்தை இருக்கும் சூழலில் புகைப்பிடிப்பவர்களோ, மது அருந்துபவர்களோ இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த உடற்பயிற்சி செய்வதால் மார்பு நன்கு விரிந்து கைகள், தோள்பட்டைகளுக்கு வலிமை கிடைக்கிறது. இந்த பயிற்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மார்பு அளவிற்கு இரண்டு உள்ளங்கைகளையும் புஜங்களுக்கெதிரில் தரையில் ஊன்றி, கால்களை ஒன்று சேர்த்து பின்னுக்கு நீட்டிக் கொள்ளவும். கால் விரல்களை பூமியில் படிய வைத்து தலை நிமிர்ந்து உடலை விறைப்பாக வைத்துக் கொண்டு சுவாசத்தை நெகிழ்த்தவும். அதாவது உடல் தரையில் படாமல் உள்ளங்கைகளும், கால் விரல்களும் மட்டுமே தரையில் பட வேண்டும்.
பிறகு சுவாசத்தை நெகிழ்த்திய பின் உடலை தரை மட்டத்திற்கு கொண்டு வர வேண்டும். ஆனால் தரையில் உடல் படக்கூடாது. இந்நிலையில் சுவாசத்தை உள் இழுத்துக் கொண்டே முன்போல உடலை மேலே நோக்கி கிளப்பி கைகளை நேரே உயர்த்தி தலையை நிமிர்த்தவும். உடலைத் தணிக்கும் பொழுது உள்ளங்கைகளும் கால் விரல்களும் தவிர மற்ற பாகங்கள் தரையில் படுத்தல் கூடாது.
இதுமாதிரி ஆரம்பத்தில் பத்து தடவைகள் செய்யலாம் சில நாட்கள் பயின்று திறமை வந்த பின் சுவாசத்தை அடக்கிய வண்ணமே ஒரே மூச்சில் (தம்மில்) எத்தனை தடவைகள் சுலபமாக செய்ய முடிகிறதோ அத்தனை தடவைகள் சுறுசுறுப்பாக செய்து பழக வேண்டும்.
சற்று சிரமம் ஏற்படும் பொழுதும் அப்பிடியே கை, கால்களை நகர்த்தாமல் உடலைத் தரையில் படிய வைத்து சுவாசத்தை நெகிழ்த்தி சில வினாடிகள் ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் முன்போல் செய்யலாம். இந்த பயிற்சி செய்வதால் மார்பு நன்கு விரிந்து கைகள் வலிமையடைகிறது.
பிறகு சுவாசத்தை நெகிழ்த்திய பின் உடலை தரை மட்டத்திற்கு கொண்டு வர வேண்டும். ஆனால் தரையில் உடல் படக்கூடாது. இந்நிலையில் சுவாசத்தை உள் இழுத்துக் கொண்டே முன்போல உடலை மேலே நோக்கி கிளப்பி கைகளை நேரே உயர்த்தி தலையை நிமிர்த்தவும். உடலைத் தணிக்கும் பொழுது உள்ளங்கைகளும் கால் விரல்களும் தவிர மற்ற பாகங்கள் தரையில் படுத்தல் கூடாது.
இதுமாதிரி ஆரம்பத்தில் பத்து தடவைகள் செய்யலாம் சில நாட்கள் பயின்று திறமை வந்த பின் சுவாசத்தை அடக்கிய வண்ணமே ஒரே மூச்சில் (தம்மில்) எத்தனை தடவைகள் சுலபமாக செய்ய முடிகிறதோ அத்தனை தடவைகள் சுறுசுறுப்பாக செய்து பழக வேண்டும்.
சற்று சிரமம் ஏற்படும் பொழுதும் அப்பிடியே கை, கால்களை நகர்த்தாமல் உடலைத் தரையில் படிய வைத்து சுவாசத்தை நெகிழ்த்தி சில வினாடிகள் ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் முன்போல் செய்யலாம். இந்த பயிற்சி செய்வதால் மார்பு நன்கு விரிந்து கைகள் வலிமையடைகிறது.
ஆரோக்கியமான பற்களே நம் உடலுக்கு நல்லது. மேலும் வாயிலும் பற்களிலும் ஏற்படும் நோய்களால் உடலின் பலபாகங்களுக்கும் கெடுதல் ஏற்படும்.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி. ஆரோக்கியமான பற்களே நம் உடலுக்கு நல்லது. வாய்நமது உடலின் கண்ணாடி ஆகும். ஏனெனில் உடலில் ஏற்படும் அனேக நோய்களுக்கு Symptoms வாயில் காணப்படும். மேலும் வாயிலும் பற்களிலும் ஏற்படும் நோய்களால் உடலின் பலபாகங்களுக்கும் கெடுதல் ஏற்படும்.
உதாரணத்திற்கு சொத்தையாகி கெட்டு செமித்துபோன பற்களை எடுக்காமல் வைத்திருப்பவர்களுக்கு தோல்நோய்கள், மூட்டு, இடுப்புவலி மற்றும்மூட்டுகளில் வீக்கம், கண்களில் புரை ஏற்படுதல் Sinusitis (சைனஸ் ட்ரபுள்) தொண்டையில் சதை வளர்தல், இளநீர் கட்டு இருதய நோய்கள் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே பற்களில் ஏற்படும் சொத்தையை வலிஇல்லாத காரணத்தால் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பற்களில் ஏற்படும் சொத்தை சிறுவர்களுக்கு பால்பற்களில் வலி உண்டாக்குவதற்கு ஒரு வருடம் ஆகலாம். அதுவே பெரியவர்களுக்கு இரண்டு வருடங்கள் ஆகலாம். எனவே பல்லில் சொத்தை ஏற்பட்டால் வலிவரும். முன் னர் பல் மருத்துவரை சந்தித்து சுத்தப்படுத்தி அடைத்துக் கொள்ளலாம்.
பற்களில் சொத்தை வருவதை தடுப்பது என்பது கடினம் (அரிது) என்பதால் சொத்தை வந்த பற்களை ஆரம்பத்திலேயே (வலிவரும் முன்) சுத்தம் செய்து அடைத்து விடுவது பற்களை இழப்பதை தடுக்கும் எளிய முறையாகும். பற்களில் பின்பக்கங்களிலோ இரு பற்களுக்கு நடுவிலோ, நோயாளிகளுக்கு நேரடியாகவோ, கண்ணாடி மூலமாகவோ பார்க்க இயலாத இடங்களில் சொத்தை வர வாய்ப்பு உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து பற்களில் சொத்தை ஏற்படுகிறதா என சோதித்து கொள்ளலாம்.
அப்படியும் சொத்தையான பற்களை ஆரம்பத்தில் அடைக்காமல் விட்டதால் வலி ஏற்பட்டால் பற்கள் நொறுங்கும் நிலைக்கு முன்பாக பல் மருத்துவரிடம் சென்றால் வலி வந்த பற்களுக்கு Root Canal Treatment (பல்வேர் சிகிச்சைசெய்து)பற்களுக்கு Ceramic crown மாட்டியும், பாதுகாத்துக்கொள்ளலாம்.
மேலும் ஒரு சில பற்களுக்கு வேர் சிகிச்சை (Root Apiceo tomy) செய்தும் சரி செய்து கொள்ளலாம். மேலும் பொது மக்கள் பொதுவாக ஆண்டிற்கு ஒருமுறை Dental Checkup செய்து கொண்டால் பல் மருத்துவரின் ஆலோசனைபடி பற்களில்சொத்தை வராமலும், பற்களை மற்றும் காரை ஏற்படாமலும் சொத்தை வந்த பற்களை அடைத்தும் பல் ஈறு நோய்கள் வராமலும் தடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு பிறந்த ஆறு மாதங்களில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். பொழுதிலிருந்தே பற்களை சுத்தம்செய்து விடுதல் வேண்டும். குழந்தைகளுக்கு ஆறு வயது வரும் வரையிலாவது பெற்றோர்களின் உதவி பல் துலக்குவதில் இருத்தல் அவசியம். சிறுவயது முதல் வாலிப வயது வரை உள்ளவர்களுக்கு பல் வரிசை சரி இல்லாமல் இருந்தால் Fixed orthodentic Clip மாட்டி சரி செய்து கொள்வது பற்களில் கறை படிவதையும் சொத்தை ஏற்படுவதையும் தவிர்க்க ஏதுவாக இருக்கும்.
இந்த Fixed orthodentic Clip மூலம் பற்களில் வரிசையை சரிசெய்து கொள்ளலாம். திரும்பி முளைத்த பற்கள் (Rotated tooth), தெற்றுப் பற்கள் வரிசையை விட்டுமேலோ அல்லது கீழோ உள்ள சிங்கப் பற்கள் (Highly positioned or unerrupted canine teeth) ஆகியவற்றையும் சரி செய்து கொள்ளலாம். மேலும் தற்போது சமுதாயத்தில் பலர் பாக்கு புகையிலை போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளனர். பாக்கு, புகையிலை போன்றவற்றை உபயோகப்படுத்துபவர்கள். அதற்கு அடிமையாவதுடன் பசியின்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், பல் ஈறு மற்றும் வாய் சளி படலத்தில் (Mucous membram) நோய்கள் ஏற்படுதல் மற்றும் உதடு மற்று கன்னத்தசைகளில் எலாஸ்டிக் தன் மையை (Elasticity of the Buccal and labial mucosa) இழந்து விடுவதும் ஏற்படுகிறது.
இதனால் வாயை முழுமை யாக திறக்க முடியாமலும், ஆறாத புண் ஏற்படுவதற்கும் காரணமாகி காரமான உணவுப் பொருட்களை சிறிதளவும் உண்ண முடியாத நிலையும் இந்த புகையிலை மற்றும் பாக்கு பொருட்களால் ஏற்படும். இதுவே பிற்காலத்தில் sub mucous Fibrosis மற்றும் oral cancer (வாய் புற்றுநோய்) ஏற்படுவதற்கும் உகந்ததாகி விடும். எனவே பாக்கு, புகையிலை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
17 அல்லது 18 வயதுக்கு மேல் wistomteeth (ஞானப்பல் அல்லது ஒவ்வொரு வரிசையிலும் கடைசிப்பல்)முளைக்கும் காலத்தில் ஈறு புண் உண்டாகுதல், வாய் துர்நாற்றம், நெறி கட்டுதல் ஆகியவை ஏற்படலாம். மேலும் இந்த wisdom teeth வரிசையை விட்டு விலகியும் படுக்கை வசமாகவோ (Impacted tooth) முளைக்க வாய்ப்பு உண்டு.
இவ்வாறு முளைக்கும் பற்கள், பல்ஈறு வீக்கம் அருகில் உள்ள பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு காரணமாகுதல், அருகில் உள்ள பற்கள் அசையும் நிலைக்கு காரணமாகுதல் மற்றும் தலைவலி, கண்ணில் எரிச்சல், காதுகள் மற்றும் கழுத்து, தோள் பகுதிகளில் வலி, அடிக்கடி சளிபிடித்தல் ஆகியவற்றுக்கு காரணமாக அமையும்.
எனவே 17, 18 வயதுக்கு பிறகு wisdom teeth முளைக்கும் காலத்திலும் Dental Checkup செய்து கொள்வது நல்லது. எனவே பற்களை ஒழுங்காக துலக்காதவர்கள்தான் பல் மருத்துவமனை செல்கிறார்கள் என்ற தவறான மனஎண்ணத்தை தவிர்த்து பல் மற்றும் ஈறு நோய்களை வராமல் தவிர்க்கவும், வந்த நோய்களை ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை செய்வதால் பற்களையும் அதன் பயன்பாட்டையும் இழப்பதை தவிர்க்க வும், உடல் ஆரோக்கியத்து டன் நீடூழி வாழ பல் பராமரிப்பும் periodical and regular dental checkup மிக அவசியம் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்வது நல்லது.
எமது மருத்துவமனையில் நவீன B.P.S. என்னும்முறையில் சொத்தை பற்களை எடுத்துவிட்டு புதிய பற்கள் கட்டப்படுகிறது. இந்த செயற்கை முறையால் அதிக காற்றழுத்தத்துடன் அதிக வெப்பநிலையில் தயாரிக்கப்படுவதால் மிகவும் இயற்கை பற்களைபோல உறுதியாகவும், பளபளப்புடனும் காணப்படுகிறது. இந்த முறையில் பற்கள் கட்டுபவர்களுக்கு கழண்டு வராமல் உறுதியான பிடிப்புடன் இருக்கிறது.
நன்றாக கடித்து உண்ணமுடியும். கீழ்த் தாடை எலும்பு தேய்ந்து போனவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல்கட்ட அளவு எடுக்கும்போது எந்த அளவுக்கு பிடிப்பாக இருக்கும் என்பதை அறிந்துதேவையான அளவுக்கு மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். இம்ளாண்ட் Supported Denture - தாடை எலும்பில் டைட்டானியம் ஸ்க்ரு மாட்டி அதன் மேல் நிலையான பெர்மனன்ட் பல் மாட்டும் முறையிலும் பல் செட் மாட்டிக்கொள்ளலாம்.
டாக்டர் சங்கர் சுதாகர், பல் மருத்துவர், சுதா பல் மருத்துவமனை, சுரண்டை.
உதாரணத்திற்கு சொத்தையாகி கெட்டு செமித்துபோன பற்களை எடுக்காமல் வைத்திருப்பவர்களுக்கு தோல்நோய்கள், மூட்டு, இடுப்புவலி மற்றும்மூட்டுகளில் வீக்கம், கண்களில் புரை ஏற்படுதல் Sinusitis (சைனஸ் ட்ரபுள்) தொண்டையில் சதை வளர்தல், இளநீர் கட்டு இருதய நோய்கள் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே பற்களில் ஏற்படும் சொத்தையை வலிஇல்லாத காரணத்தால் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பற்களில் ஏற்படும் சொத்தை சிறுவர்களுக்கு பால்பற்களில் வலி உண்டாக்குவதற்கு ஒரு வருடம் ஆகலாம். அதுவே பெரியவர்களுக்கு இரண்டு வருடங்கள் ஆகலாம். எனவே பல்லில் சொத்தை ஏற்பட்டால் வலிவரும். முன் னர் பல் மருத்துவரை சந்தித்து சுத்தப்படுத்தி அடைத்துக் கொள்ளலாம்.
பற்களில் சொத்தை வருவதை தடுப்பது என்பது கடினம் (அரிது) என்பதால் சொத்தை வந்த பற்களை ஆரம்பத்திலேயே (வலிவரும் முன்) சுத்தம் செய்து அடைத்து விடுவது பற்களை இழப்பதை தடுக்கும் எளிய முறையாகும். பற்களில் பின்பக்கங்களிலோ இரு பற்களுக்கு நடுவிலோ, நோயாளிகளுக்கு நேரடியாகவோ, கண்ணாடி மூலமாகவோ பார்க்க இயலாத இடங்களில் சொத்தை வர வாய்ப்பு உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து பற்களில் சொத்தை ஏற்படுகிறதா என சோதித்து கொள்ளலாம்.
அப்படியும் சொத்தையான பற்களை ஆரம்பத்தில் அடைக்காமல் விட்டதால் வலி ஏற்பட்டால் பற்கள் நொறுங்கும் நிலைக்கு முன்பாக பல் மருத்துவரிடம் சென்றால் வலி வந்த பற்களுக்கு Root Canal Treatment (பல்வேர் சிகிச்சைசெய்து)பற்களுக்கு Ceramic crown மாட்டியும், பாதுகாத்துக்கொள்ளலாம்.
மேலும் ஒரு சில பற்களுக்கு வேர் சிகிச்சை (Root Apiceo tomy) செய்தும் சரி செய்து கொள்ளலாம். மேலும் பொது மக்கள் பொதுவாக ஆண்டிற்கு ஒருமுறை Dental Checkup செய்து கொண்டால் பல் மருத்துவரின் ஆலோசனைபடி பற்களில்சொத்தை வராமலும், பற்களை மற்றும் காரை ஏற்படாமலும் சொத்தை வந்த பற்களை அடைத்தும் பல் ஈறு நோய்கள் வராமலும் தடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு பிறந்த ஆறு மாதங்களில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். பொழுதிலிருந்தே பற்களை சுத்தம்செய்து விடுதல் வேண்டும். குழந்தைகளுக்கு ஆறு வயது வரும் வரையிலாவது பெற்றோர்களின் உதவி பல் துலக்குவதில் இருத்தல் அவசியம். சிறுவயது முதல் வாலிப வயது வரை உள்ளவர்களுக்கு பல் வரிசை சரி இல்லாமல் இருந்தால் Fixed orthodentic Clip மாட்டி சரி செய்து கொள்வது பற்களில் கறை படிவதையும் சொத்தை ஏற்படுவதையும் தவிர்க்க ஏதுவாக இருக்கும்.
இந்த Fixed orthodentic Clip மூலம் பற்களில் வரிசையை சரிசெய்து கொள்ளலாம். திரும்பி முளைத்த பற்கள் (Rotated tooth), தெற்றுப் பற்கள் வரிசையை விட்டுமேலோ அல்லது கீழோ உள்ள சிங்கப் பற்கள் (Highly positioned or unerrupted canine teeth) ஆகியவற்றையும் சரி செய்து கொள்ளலாம். மேலும் தற்போது சமுதாயத்தில் பலர் பாக்கு புகையிலை போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளனர். பாக்கு, புகையிலை போன்றவற்றை உபயோகப்படுத்துபவர்கள். அதற்கு அடிமையாவதுடன் பசியின்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், பல் ஈறு மற்றும் வாய் சளி படலத்தில் (Mucous membram) நோய்கள் ஏற்படுதல் மற்றும் உதடு மற்று கன்னத்தசைகளில் எலாஸ்டிக் தன் மையை (Elasticity of the Buccal and labial mucosa) இழந்து விடுவதும் ஏற்படுகிறது.
இதனால் வாயை முழுமை யாக திறக்க முடியாமலும், ஆறாத புண் ஏற்படுவதற்கும் காரணமாகி காரமான உணவுப் பொருட்களை சிறிதளவும் உண்ண முடியாத நிலையும் இந்த புகையிலை மற்றும் பாக்கு பொருட்களால் ஏற்படும். இதுவே பிற்காலத்தில் sub mucous Fibrosis மற்றும் oral cancer (வாய் புற்றுநோய்) ஏற்படுவதற்கும் உகந்ததாகி விடும். எனவே பாக்கு, புகையிலை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
17 அல்லது 18 வயதுக்கு மேல் wistomteeth (ஞானப்பல் அல்லது ஒவ்வொரு வரிசையிலும் கடைசிப்பல்)முளைக்கும் காலத்தில் ஈறு புண் உண்டாகுதல், வாய் துர்நாற்றம், நெறி கட்டுதல் ஆகியவை ஏற்படலாம். மேலும் இந்த wisdom teeth வரிசையை விட்டு விலகியும் படுக்கை வசமாகவோ (Impacted tooth) முளைக்க வாய்ப்பு உண்டு.
இவ்வாறு முளைக்கும் பற்கள், பல்ஈறு வீக்கம் அருகில் உள்ள பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு காரணமாகுதல், அருகில் உள்ள பற்கள் அசையும் நிலைக்கு காரணமாகுதல் மற்றும் தலைவலி, கண்ணில் எரிச்சல், காதுகள் மற்றும் கழுத்து, தோள் பகுதிகளில் வலி, அடிக்கடி சளிபிடித்தல் ஆகியவற்றுக்கு காரணமாக அமையும்.
எனவே 17, 18 வயதுக்கு பிறகு wisdom teeth முளைக்கும் காலத்திலும் Dental Checkup செய்து கொள்வது நல்லது. எனவே பற்களை ஒழுங்காக துலக்காதவர்கள்தான் பல் மருத்துவமனை செல்கிறார்கள் என்ற தவறான மனஎண்ணத்தை தவிர்த்து பல் மற்றும் ஈறு நோய்களை வராமல் தவிர்க்கவும், வந்த நோய்களை ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை செய்வதால் பற்களையும் அதன் பயன்பாட்டையும் இழப்பதை தவிர்க்க வும், உடல் ஆரோக்கியத்து டன் நீடூழி வாழ பல் பராமரிப்பும் periodical and regular dental checkup மிக அவசியம் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்வது நல்லது.
எமது மருத்துவமனையில் நவீன B.P.S. என்னும்முறையில் சொத்தை பற்களை எடுத்துவிட்டு புதிய பற்கள் கட்டப்படுகிறது. இந்த செயற்கை முறையால் அதிக காற்றழுத்தத்துடன் அதிக வெப்பநிலையில் தயாரிக்கப்படுவதால் மிகவும் இயற்கை பற்களைபோல உறுதியாகவும், பளபளப்புடனும் காணப்படுகிறது. இந்த முறையில் பற்கள் கட்டுபவர்களுக்கு கழண்டு வராமல் உறுதியான பிடிப்புடன் இருக்கிறது.
நன்றாக கடித்து உண்ணமுடியும். கீழ்த் தாடை எலும்பு தேய்ந்து போனவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல்கட்ட அளவு எடுக்கும்போது எந்த அளவுக்கு பிடிப்பாக இருக்கும் என்பதை அறிந்துதேவையான அளவுக்கு மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். இம்ளாண்ட் Supported Denture - தாடை எலும்பில் டைட்டானியம் ஸ்க்ரு மாட்டி அதன் மேல் நிலையான பெர்மனன்ட் பல் மாட்டும் முறையிலும் பல் செட் மாட்டிக்கொள்ளலாம்.
டாக்டர் சங்கர் சுதாகர், பல் மருத்துவர், சுதா பல் மருத்துவமனை, சுரண்டை.






