என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
பலருக்கும் வருகிற ஒரு சரும அலர்ஜி Urticaria. இது தமிழில் காணாக்கடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடித்தது என்னவென்று அறிய முடியாத ஒரு நச்சுக்கடி என்பதே இதற்கு அர்த்தம்.
பலருக்கும் வருகிற ஒரு சரும ஒவ்வாமை இது. தமிழில் காணாக்கடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடித்தது என்னவென்று அறிய முடியாத ஒரு நச்சுக்கடி என்பதே இதற்கு அர்த்தம்.
தற்போதுள்ள வாழ்க்கை முறையில் நாம் சாப்பிடும் உணவில், நாம் சுவாசிக்கும் காற்றில், நம் சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் மாசு காரணமாக இந்த காணாக்கடி இப்பொழுது நிறைய பேரை பாதிக்கிறது.
உடல் முழுவதும் திடீரென்று பட்டை பட்டையாக சிவந்து தடித்து போகும். அரிப்பு அதிகமாகி, கொஞ்ச நேரத்தில் தானாகவே மறைந்துவிடும். இது தொண்டை, கண் இமை போன்ற இடங்களை பாதித்தால், உடல் முழுவதிலும் தடித்துக்கொண்டு, மூச்சு விடுவதிலும் சிரமம் இருக்கும். இப்படி இருக்குமானால், உடனே மருத்துவரின் உதவியை நாடுவது முக்கியம். சிலருக்கு இந்த அலர்ஜி ஏற்படும்போது வாந்தி, மயக்கம், உடல்வலி, தலைவலி, வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் சேர்ந்தே காணப்படலாம்.
மிகச்சிலருக்கு இது எதனால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், பலருக்கு இது எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிப்பதும் சிரமமாக இருக்கிறது.
உண்ணும் உணவு, மாத்திரைகள், தொற்று நோய்கள், குடலில் கீரி பூச்சிகள் இருப்பது, நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பொருட்கள், பூச்சிக்கடிகள், மருந்துகள், கண்களில் அல்லது காதுகளில் விடப்படும் சொட்டு மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவையும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
மீன், பால், வேர்க்கடலை, பீன்ஸ், கேரட், முருங்கைக்காய், இறைச்சி போன்றவையும், உணவுகளில் சேர்க்கப்படும் வண்ணங்களும், மணமூட்டிகளும், இதனை ஏற்படுத்தலாம். பற்களில் உள்ள சொத்தை, தொண்டை, காதுகளில் ஏற்படும் வலி, சீழ் உண்டாதல் போன்றவை இதை ஏற்படுத்தலாம். அது மட்டுமின்றி சுவாசக் குழாயிலும், சிறுநீர் பாதையில் மற்றும் பித்தப்பையில் உள்ள கிருமி தொற்றுகளாலும் கூட இது ஏற்படலாம்.
குடலில் நாக்குப்பூச்சிகள் என்று அழைக்கப்படும் தொற்றுப் புழுக்கள் இருப்பதும் கூட ஒரு காரணம். பூக்களின் மகரந்தத் தூள்கள், விலங்குகளின் முடிகள் மற்றும் வீட்டில் உள்ள தூசுகளாலும் காணாக்கடி உண்டாகலாம்.
கொசுக்கள், மூட்டைப்பூச்சிகள் கடித்தால் கூட ஒவ்வாமை ஏற்படலாம். தேனியோ குளவியோ கொட்டுவதால் வரலாம். தடுப்பூசிகள் போட்டால் சிலருக்கு அலர்ஜியினால் இதுபோன்று தடிப்புகள் ஏற்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
தற்போதுள்ள வாழ்க்கை முறையில் நாம் சாப்பிடும் உணவில், நாம் சுவாசிக்கும் காற்றில், நம் சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் மாசு காரணமாக இந்த காணாக்கடி இப்பொழுது நிறைய பேரை பாதிக்கிறது.
உடல் முழுவதும் திடீரென்று பட்டை பட்டையாக சிவந்து தடித்து போகும். அரிப்பு அதிகமாகி, கொஞ்ச நேரத்தில் தானாகவே மறைந்துவிடும். இது தொண்டை, கண் இமை போன்ற இடங்களை பாதித்தால், உடல் முழுவதிலும் தடித்துக்கொண்டு, மூச்சு விடுவதிலும் சிரமம் இருக்கும். இப்படி இருக்குமானால், உடனே மருத்துவரின் உதவியை நாடுவது முக்கியம். சிலருக்கு இந்த அலர்ஜி ஏற்படும்போது வாந்தி, மயக்கம், உடல்வலி, தலைவலி, வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் சேர்ந்தே காணப்படலாம்.
மிகச்சிலருக்கு இது எதனால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், பலருக்கு இது எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிப்பதும் சிரமமாக இருக்கிறது.
உண்ணும் உணவு, மாத்திரைகள், தொற்று நோய்கள், குடலில் கீரி பூச்சிகள் இருப்பது, நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பொருட்கள், பூச்சிக்கடிகள், மருந்துகள், கண்களில் அல்லது காதுகளில் விடப்படும் சொட்டு மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவையும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
மீன், பால், வேர்க்கடலை, பீன்ஸ், கேரட், முருங்கைக்காய், இறைச்சி போன்றவையும், உணவுகளில் சேர்க்கப்படும் வண்ணங்களும், மணமூட்டிகளும், இதனை ஏற்படுத்தலாம். பற்களில் உள்ள சொத்தை, தொண்டை, காதுகளில் ஏற்படும் வலி, சீழ் உண்டாதல் போன்றவை இதை ஏற்படுத்தலாம். அது மட்டுமின்றி சுவாசக் குழாயிலும், சிறுநீர் பாதையில் மற்றும் பித்தப்பையில் உள்ள கிருமி தொற்றுகளாலும் கூட இது ஏற்படலாம்.
குடலில் நாக்குப்பூச்சிகள் என்று அழைக்கப்படும் தொற்றுப் புழுக்கள் இருப்பதும் கூட ஒரு காரணம். பூக்களின் மகரந்தத் தூள்கள், விலங்குகளின் முடிகள் மற்றும் வீட்டில் உள்ள தூசுகளாலும் காணாக்கடி உண்டாகலாம்.
கொசுக்கள், மூட்டைப்பூச்சிகள் கடித்தால் கூட ஒவ்வாமை ஏற்படலாம். தேனியோ குளவியோ கொட்டுவதால் வரலாம். தடுப்பூசிகள் போட்டால் சிலருக்கு அலர்ஜியினால் இதுபோன்று தடிப்புகள் ஏற்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
மதியம் மீந்த சாதத்துடன், காய்கறிகள் சேர்த்து கட்லெட் செய்தால் அருமையாக இருக்கும். சரி, இப்போது ரைஸ் வெஜிடபிள் கட்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரிசி சாதம் - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
மிக்ஸ்டு வெஜிடேபிள் (பீன்ஸ், கேரட், குடைமிளகாய்) - 1 கப்
வெங்காயம் - 1
இஞ்சி - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
சாதத்தை வேகவைத்து ஆறியதும் மசித்து கொள்ளவும்.
காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, சாதம், பொடியாக நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள, மல்லித்தூள், சோள மாவு, கடலைமாவு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
அரிசி சாதம் - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
மிக்ஸ்டு வெஜிடேபிள் (பீன்ஸ், கேரட், குடைமிளகாய்) - 1 கப்
வெங்காயம் - 1
இஞ்சி - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
சாதத்தை வேகவைத்து ஆறியதும் மசித்து கொள்ளவும்.
காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, சாதம், பொடியாக நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள, மல்லித்தூள், சோள மாவு, கடலைமாவு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான ரைஸ் வெஜிடபிள் கட்லெட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
டீ, இந்தியாவை எட்டிப்பார்ப்பதற்கு முன்னால் இங்கு சூடான கிராமிய காபி வகைகள் பருகப்பட்டு வந்தன. அவை கருப்பட்டி அல்லது வெல்லத்தில் தயார் செய்யப்பட்டது.
காபி, தேநீர் இரண்டும் உலக அளவில் எல்லோரும் விரும்பும் பானங்கள். ஆனால் இவை இரண்டின் ருசியும் உலக நாடுகள் அனைத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ‘தினமும் நான் ஏழெட்டு டீ குடிப்பேன். டீ குடிக்கவில்லை என்றால் எனது தலையே வெடித்துப்போய்விடும்’ என்று சொல்கிற இந்திய டீ பிரியர்கள் கனடாவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ போகும்போது அங்கு கிடைக்கும் டீயை ஆசையோடு ஒரு மிடறு குடித்துவிட்டு, ‘கலரைப் பார்த்து மயங்கிட்டேன். இப்படி ஒரு டீயை குடித்தால் என் நாக்கே செத்துப்போயிடும்’ என்று முகத்தை சுளித்தபடி சொல்லிவிட்டு, அந்த நாட்டு பயணம் முடியும்வரை ‘டீ’ என்று சொன்னாலே ‘ஆளை விட்டுருங்கப்பா..!’ என்று, இடத்தை காலிசெய்துவிடுவார்கள்.
ஆக உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறவர்கள் எளிதாக இந்த உண்மையை புரிந்துகொள்வார்கள். எல்லா நாடுகளிலும் ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரி இருந்தாலும் அவர்களது மொழி, இயல்பு, கலாசாரங்களில் நாட்டுக்கு நாடு வேறுபாடு இருக்கத்தான் செய்யும். அதுபோல் உலகம் முழுக்க காபி, டீ என்ற பொதுப்பெயரில் சூடான பானங்கள் அழைக்கப்பட்டாலும், நாட்டுக்கு நாடு அதன் சுவைகளில் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும். எல்லா நாடுகளிலும் தயாரிக்கப்படும் டீ வகைகளும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று கூறுவதற்கில்லை.
சுவையின் அடிப்படையில் டீயில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. டீ டேஸ்ட்டர்கள், அந்தந்த நாட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு டீ யில் சுவையூட்டி வழங்குகிறார்கள். ஊருக்கு தக்கபடி, ஆளுக்கு தக்கபடி, நிகழ்ச்சி களுக்கு தக்கபடி, இப்படி நிறைய மாற்றங்களை சந்தித்து வந்திருக்கும் பானம், டீ என்றால் அது மிகையில்லை. அதனால் சில ஊர்களில் தயாரிக்கப்படும் டீ, அந்த நாட்டு மக்களே விரும்பும் ருசியாக மாறி விடுவதுண்டு. அப்படிப்பட்ட ஒன்று, ‘சுலைமானி’. இது கேரளாவில் மலபார் பகுதி மக்கள் விரும்பி பருகும் பானம். தென்னிந்தியாவிலும் இது பிரபலமாகியுள்ளது.
தனித் தேநீரான கட்டன் டீயில் எலுமிச்சை சாறு கலந்த சூடான பானத்திற்கு சுலைமானி என்று பெயர். தேவைப்படும்போது இதில் இஞ்சிச்சாறும் சேர்க்கப்படுகிறது. இதன் சரித்திரம் என்னவென்று தெள்ளத்தெளிவாக தெரியவில்லை. ஆனால் சாலமன் மன்னரின் சபையில் இது பரிமாறப்பட்டதால், சாலமானி என்று அழைக்கப்பட்டு, பின்பு சுலைமானி என்று மருவி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. முதலில் இந்த பானம் மத சம்பிரதாயங்களோடு தொடர்புடையதாக இருந்திருக்கிறது. பின்பு பொதுமக்களுக்கானதாக மாறி கல்யாணம், விருந்து, விழாக்களில் மக்கள் விரும்பி பருகும் பானமாக மவுசு பெற்றுள்ளது.
தற்போது மக்கள் பல்வேறு விதவிதமாக டீயை பருகிவருகிறார்கள். ஆனால், டீ அறிமுகமாவதற்கு முன்பு மக்கள் இதமான ருசிக்காக வேறு எந்த பானத்தை பருகினார்கள்?
டீ, இந்தியாவை எட்டிப்பார்ப்பதற்கு முன்னால் இங்கு சூடான கிராமிய காபி வகைகள் பருகப்பட்டு வந்தன. அவை கருப்பட்டி அல்லது வெல்லத்தில் தயார் செய்யப்பட்டது. அவைகளில் சுக்கு, மல்லி, மிளகு போன்றவைகளை கலந்து, ‘சுக்கு காபி’, ‘மல்லி காபி’ என்ற பெயர்களில் அழைத்தார்கள். அவைகள் உடலுக்கு உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுத்தன.
இந்திய கிராம மக்கள் இந்த வகை காபிகளுக்கு அடிமையாகிப்போயிருந்த காலகட்டத்தில்தான், இந்தியாவை அடிமைப்படுத்த ஆங்கிலேயர்கள் இங்கே வந்தார்கள். 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருந்து வருகை தந்த டாக்டர் கிறிஸ்டி, நீலகிரியின் குளிருக்கு தனது மனதை பறிகொடுத்தார். அந்த இதமான குளிருக்கு சூடாக ஒரு கப் டீ பருகினால் நன்றாக இருக்குமே என்று, அவர் மூளையில் மின்னலாக எழுந்த ஆசைதான் நீலகிரியில் தேயிலை செடியின் அறிமுகத்திற்கு வித்திட்டது. அவர் 1832-ல் நீலகிரியில் தேயிலை செடியை நட்டார். பின்னர் அது மூணாறு மலை உச்சிகளில் எல்லாம் கிளைபரப்பி பரந்து விரியத் தொடங்கியது.
தேயிலை பயிர் வெற்றிகரமாக வளர்ந்தது. பறிக்கப்பட்ட தேயிலை எல்லாம் பதப்படுத்தப்பட்டது. ஆனால் அதை ஆங்கிலேயர்கள் மட்டும் பயன்படுத்தினால் போதாதே. விளைந்த தேயிலையை எல்லாம் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து அவர்களை பயன்படுத்த வைக்கவேண்டும் அல்லவா!
ஆனால் தொடக்கத்தில் மக்கள் தேயிலையை திரும்பிகூட பார்க்கவில்லை. அவர்கள் மல்லி காபியிலும், சுக்கு காபியிலுமே மதிமயங்கி நின்றார்கள். அத்தகைய காபி விரும்பிகளை, தேயிலை விரும்பிகளாக எப்படி மாற்றினார்கள் தெரியுமா?
இன்று புதிதாக அறிமுகமாகிற பொருட்களை, அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் முதலில் ‘சாம்பிள் பாக்கெட்’களாக இலவசமாக கொடுத்து மக்களை பயன்படுத்தச்செய்து தன்வசப்படுத்தும். பின்பு தொடர்ந்து அந்த பொருளை மக்கள் வாங்கும்படி தூண்டும். இது மார்க்கெட்டை பிடிக்க பலரும் செய்யும் வியாபார தந்திரம்.
இந்த வியாபார தந்திரத்திற்கு முன்னோடியே ஆங்கிலேயர்கள்தான். அவர்கள் தேயிலை மூலம்தான் இந்த இலவச அறிமுக திட்டத்தை அமல் படுத்தினார்கள். அவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து, பொதுமக்கள் கூடும் இடங்களில் அவர்களை சந்தித்து, டீயை தொடக்ககாலத்தில் இலவசமாக வழங்கினார்கள். தேனீராக அவர்கள் தயார் செய்து மக்களுக்கு வழங்கி, அதை மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டினார்கள். ஆனாலும் இந்த திட்டம் எளிதாக வெற்றியடையவில்லை.
இலவசமாக கிடைத்தபோது ஆர்வமாக பருகிய மக்கள் பின்பு தாமதமாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் காசு கொடுத்து வாங்கி அதனை பயன்படுத்த முன்வந்தார்கள். அதுவரை இந்திய சமையல் அறை அடுப்புகளில் நீங்காத இடம் பிடித்திருந்த சுக்கு காபி தயாரிக்கும் பாத்திரங்கள் கீழ் இறக்கப்பட்டன. தேயிலை தயார் செய்யும் கைப்பிடி கொண்ட பாத்திரங்கள் அடுப்புகளில் அழகாக அமரத் தொடங்கின.
‘கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’ என்று கருப்பட்டி காபியின் புகழ் பாடிக்கொண்டிருந்தவர்களும், கண்ணைக்கவரும் விதத்திலான டீயை விரும்பத் தொடங்கினார்கள். குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் தினமும் டீ பருகுகிறவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்கள் என்ற எண்ணமும் உருவாக்கப்பட்டது. ‘அதனால் நாங்களும் மாறிட்டோம்ல..’ என்று போட்டிபோட்டுக்கொண்டு பலர் டீயின் பக்கம் சாய்ந்தார்கள். தங்களுக்கு பிடித்தமானவர்களை அழைத்து டீ பார்ட்டி நடத்தி, தங்கள் சமூக அந்தஸ்தையும் உயர்த்தினார்கள். இப்படித்தான் டீ குடிக்கும் பழக்கம் இந்தியாவில் வளர்ந்தது.
இப்படி மக்கள் டீயை அதிகமாக பயன்படுத்த தொடங்கிய பின்பு அதில் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை சேர்த்து ருசி மாற்றங்களை உருவாக்கினார்கள். அதில் சிறந்ததாகி, கிட்டதட்ட இருநூற்றாண்டுகள் பழமைவாய்ந்ததாக இருப்பதுதான் சுலைமானி. இதனை பெரும்பாலும் பிரியாணி சாப்பிட்ட பின்பு மக்கள் பருகும் வழக்கம் உள்ளது.
இதில் கட்டன் டீ, எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு போன்றவை சேர்க்கப்படுவதால் ஜீரணத்திற்கு துணைபுரிகிறது. உடல் சீராக இயங்கவும், வயிற்றுப்புண்கள் குணமாகவும் உதவுகிறது. தேனீரிலும், எலுமிச்சை சாறிலும் உடல் எடையை குறைக்கும் சக்தி இருக்கிறது. நோய் எதிர்ப்புசக்தியும் இதில் உள்ளது. அதனாலும் மக்கள் சுலைமானியை விரும்பி பருகுகிறார்கள். சாதாரண டீயை அதிகம் பருகுவது நல்லதல்ல. ஆனால் இதனை அடிக்கடி பருகலாம். இதில் சிறிதளவே சர்க்கரை சேர்க்கவேண்டும்.
இந்த சுலைமானிபோல் வட இந்தியாவிலும் வித்தியாசமான ருசிகளில் டீயை தயார்செய்து ருசிக்கிறார்கள். அதுபோல் உலகில் பல இடங்களிலும் டீயை வித்தியாசமான சுவைகளில் தயாரிக் கிறார்கள். அதற்கு வித்தியாசமான பெயர்களும் சூட்டியிருக்கிறார்கள். நீங்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு, அந்த நாட்டு பாரம்பரியப்படி தயார் செய்யப்படும் டீயை பருக மறந்துவிடாதீர்கள். ஏன்என்றால் அது உங்களுக்கு மறக்க முடியாத சுவையை தந்து, அந்த நாடு எப்போதும் உங்கள் நினைவில் நிற்க துணைபுரியும்.
வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கே உள்ள விசேஷமான உணவுகளை பற்றி முதலிலே இன்டர்நெட் மூலம் தெரிந்து கொண்டு, அவைகளில் பிடித்தமானவற்றை சாப்பிட முயற்சி செய்யுங்கள். ஏன்என்றால் வெளிநாட்டு பயண அனுபவம் என்பது அந்தநாட்டு உணவுகளை ருசிப்பதையும் உள்ளடக்கியதுதான்! அதனால் எல்லாநாட்டு ருசி அனுபவங்களையும் பெறுங்கள்.
- முனைவர் ஜெ.தேவதாஸ்,
(உணவியல் எழுத்தாளர்) சென்னை.
ஆக உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறவர்கள் எளிதாக இந்த உண்மையை புரிந்துகொள்வார்கள். எல்லா நாடுகளிலும் ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரி இருந்தாலும் அவர்களது மொழி, இயல்பு, கலாசாரங்களில் நாட்டுக்கு நாடு வேறுபாடு இருக்கத்தான் செய்யும். அதுபோல் உலகம் முழுக்க காபி, டீ என்ற பொதுப்பெயரில் சூடான பானங்கள் அழைக்கப்பட்டாலும், நாட்டுக்கு நாடு அதன் சுவைகளில் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும். எல்லா நாடுகளிலும் தயாரிக்கப்படும் டீ வகைகளும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று கூறுவதற்கில்லை.
சுவையின் அடிப்படையில் டீயில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. டீ டேஸ்ட்டர்கள், அந்தந்த நாட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு டீ யில் சுவையூட்டி வழங்குகிறார்கள். ஊருக்கு தக்கபடி, ஆளுக்கு தக்கபடி, நிகழ்ச்சி களுக்கு தக்கபடி, இப்படி நிறைய மாற்றங்களை சந்தித்து வந்திருக்கும் பானம், டீ என்றால் அது மிகையில்லை. அதனால் சில ஊர்களில் தயாரிக்கப்படும் டீ, அந்த நாட்டு மக்களே விரும்பும் ருசியாக மாறி விடுவதுண்டு. அப்படிப்பட்ட ஒன்று, ‘சுலைமானி’. இது கேரளாவில் மலபார் பகுதி மக்கள் விரும்பி பருகும் பானம். தென்னிந்தியாவிலும் இது பிரபலமாகியுள்ளது.
தனித் தேநீரான கட்டன் டீயில் எலுமிச்சை சாறு கலந்த சூடான பானத்திற்கு சுலைமானி என்று பெயர். தேவைப்படும்போது இதில் இஞ்சிச்சாறும் சேர்க்கப்படுகிறது. இதன் சரித்திரம் என்னவென்று தெள்ளத்தெளிவாக தெரியவில்லை. ஆனால் சாலமன் மன்னரின் சபையில் இது பரிமாறப்பட்டதால், சாலமானி என்று அழைக்கப்பட்டு, பின்பு சுலைமானி என்று மருவி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. முதலில் இந்த பானம் மத சம்பிரதாயங்களோடு தொடர்புடையதாக இருந்திருக்கிறது. பின்பு பொதுமக்களுக்கானதாக மாறி கல்யாணம், விருந்து, விழாக்களில் மக்கள் விரும்பி பருகும் பானமாக மவுசு பெற்றுள்ளது.
தற்போது மக்கள் பல்வேறு விதவிதமாக டீயை பருகிவருகிறார்கள். ஆனால், டீ அறிமுகமாவதற்கு முன்பு மக்கள் இதமான ருசிக்காக வேறு எந்த பானத்தை பருகினார்கள்?
டீ, இந்தியாவை எட்டிப்பார்ப்பதற்கு முன்னால் இங்கு சூடான கிராமிய காபி வகைகள் பருகப்பட்டு வந்தன. அவை கருப்பட்டி அல்லது வெல்லத்தில் தயார் செய்யப்பட்டது. அவைகளில் சுக்கு, மல்லி, மிளகு போன்றவைகளை கலந்து, ‘சுக்கு காபி’, ‘மல்லி காபி’ என்ற பெயர்களில் அழைத்தார்கள். அவைகள் உடலுக்கு உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுத்தன.
இந்திய கிராம மக்கள் இந்த வகை காபிகளுக்கு அடிமையாகிப்போயிருந்த காலகட்டத்தில்தான், இந்தியாவை அடிமைப்படுத்த ஆங்கிலேயர்கள் இங்கே வந்தார்கள். 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருந்து வருகை தந்த டாக்டர் கிறிஸ்டி, நீலகிரியின் குளிருக்கு தனது மனதை பறிகொடுத்தார். அந்த இதமான குளிருக்கு சூடாக ஒரு கப் டீ பருகினால் நன்றாக இருக்குமே என்று, அவர் மூளையில் மின்னலாக எழுந்த ஆசைதான் நீலகிரியில் தேயிலை செடியின் அறிமுகத்திற்கு வித்திட்டது. அவர் 1832-ல் நீலகிரியில் தேயிலை செடியை நட்டார். பின்னர் அது மூணாறு மலை உச்சிகளில் எல்லாம் கிளைபரப்பி பரந்து விரியத் தொடங்கியது.
தேயிலை பயிர் வெற்றிகரமாக வளர்ந்தது. பறிக்கப்பட்ட தேயிலை எல்லாம் பதப்படுத்தப்பட்டது. ஆனால் அதை ஆங்கிலேயர்கள் மட்டும் பயன்படுத்தினால் போதாதே. விளைந்த தேயிலையை எல்லாம் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து அவர்களை பயன்படுத்த வைக்கவேண்டும் அல்லவா!
ஆனால் தொடக்கத்தில் மக்கள் தேயிலையை திரும்பிகூட பார்க்கவில்லை. அவர்கள் மல்லி காபியிலும், சுக்கு காபியிலுமே மதிமயங்கி நின்றார்கள். அத்தகைய காபி விரும்பிகளை, தேயிலை விரும்பிகளாக எப்படி மாற்றினார்கள் தெரியுமா?
இன்று புதிதாக அறிமுகமாகிற பொருட்களை, அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் முதலில் ‘சாம்பிள் பாக்கெட்’களாக இலவசமாக கொடுத்து மக்களை பயன்படுத்தச்செய்து தன்வசப்படுத்தும். பின்பு தொடர்ந்து அந்த பொருளை மக்கள் வாங்கும்படி தூண்டும். இது மார்க்கெட்டை பிடிக்க பலரும் செய்யும் வியாபார தந்திரம்.
இந்த வியாபார தந்திரத்திற்கு முன்னோடியே ஆங்கிலேயர்கள்தான். அவர்கள் தேயிலை மூலம்தான் இந்த இலவச அறிமுக திட்டத்தை அமல் படுத்தினார்கள். அவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து, பொதுமக்கள் கூடும் இடங்களில் அவர்களை சந்தித்து, டீயை தொடக்ககாலத்தில் இலவசமாக வழங்கினார்கள். தேனீராக அவர்கள் தயார் செய்து மக்களுக்கு வழங்கி, அதை மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டினார்கள். ஆனாலும் இந்த திட்டம் எளிதாக வெற்றியடையவில்லை.
இலவசமாக கிடைத்தபோது ஆர்வமாக பருகிய மக்கள் பின்பு தாமதமாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் காசு கொடுத்து வாங்கி அதனை பயன்படுத்த முன்வந்தார்கள். அதுவரை இந்திய சமையல் அறை அடுப்புகளில் நீங்காத இடம் பிடித்திருந்த சுக்கு காபி தயாரிக்கும் பாத்திரங்கள் கீழ் இறக்கப்பட்டன. தேயிலை தயார் செய்யும் கைப்பிடி கொண்ட பாத்திரங்கள் அடுப்புகளில் அழகாக அமரத் தொடங்கின.
‘கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’ என்று கருப்பட்டி காபியின் புகழ் பாடிக்கொண்டிருந்தவர்களும், கண்ணைக்கவரும் விதத்திலான டீயை விரும்பத் தொடங்கினார்கள். குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் தினமும் டீ பருகுகிறவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்கள் என்ற எண்ணமும் உருவாக்கப்பட்டது. ‘அதனால் நாங்களும் மாறிட்டோம்ல..’ என்று போட்டிபோட்டுக்கொண்டு பலர் டீயின் பக்கம் சாய்ந்தார்கள். தங்களுக்கு பிடித்தமானவர்களை அழைத்து டீ பார்ட்டி நடத்தி, தங்கள் சமூக அந்தஸ்தையும் உயர்த்தினார்கள். இப்படித்தான் டீ குடிக்கும் பழக்கம் இந்தியாவில் வளர்ந்தது.
இப்படி மக்கள் டீயை அதிகமாக பயன்படுத்த தொடங்கிய பின்பு அதில் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை சேர்த்து ருசி மாற்றங்களை உருவாக்கினார்கள். அதில் சிறந்ததாகி, கிட்டதட்ட இருநூற்றாண்டுகள் பழமைவாய்ந்ததாக இருப்பதுதான் சுலைமானி. இதனை பெரும்பாலும் பிரியாணி சாப்பிட்ட பின்பு மக்கள் பருகும் வழக்கம் உள்ளது.
இதில் கட்டன் டீ, எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு போன்றவை சேர்க்கப்படுவதால் ஜீரணத்திற்கு துணைபுரிகிறது. உடல் சீராக இயங்கவும், வயிற்றுப்புண்கள் குணமாகவும் உதவுகிறது. தேனீரிலும், எலுமிச்சை சாறிலும் உடல் எடையை குறைக்கும் சக்தி இருக்கிறது. நோய் எதிர்ப்புசக்தியும் இதில் உள்ளது. அதனாலும் மக்கள் சுலைமானியை விரும்பி பருகுகிறார்கள். சாதாரண டீயை அதிகம் பருகுவது நல்லதல்ல. ஆனால் இதனை அடிக்கடி பருகலாம். இதில் சிறிதளவே சர்க்கரை சேர்க்கவேண்டும்.
இந்த சுலைமானிபோல் வட இந்தியாவிலும் வித்தியாசமான ருசிகளில் டீயை தயார்செய்து ருசிக்கிறார்கள். அதுபோல் உலகில் பல இடங்களிலும் டீயை வித்தியாசமான சுவைகளில் தயாரிக் கிறார்கள். அதற்கு வித்தியாசமான பெயர்களும் சூட்டியிருக்கிறார்கள். நீங்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு, அந்த நாட்டு பாரம்பரியப்படி தயார் செய்யப்படும் டீயை பருக மறந்துவிடாதீர்கள். ஏன்என்றால் அது உங்களுக்கு மறக்க முடியாத சுவையை தந்து, அந்த நாடு எப்போதும் உங்கள் நினைவில் நிற்க துணைபுரியும்.
வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கே உள்ள விசேஷமான உணவுகளை பற்றி முதலிலே இன்டர்நெட் மூலம் தெரிந்து கொண்டு, அவைகளில் பிடித்தமானவற்றை சாப்பிட முயற்சி செய்யுங்கள். ஏன்என்றால் வெளிநாட்டு பயண அனுபவம் என்பது அந்தநாட்டு உணவுகளை ருசிப்பதையும் உள்ளடக்கியதுதான்! அதனால் எல்லாநாட்டு ருசி அனுபவங்களையும் பெறுங்கள்.
- முனைவர் ஜெ.தேவதாஸ்,
(உணவியல் எழுத்தாளர்) சென்னை.
பொடுகு பிரச்சனை வர பல்வேறு காரணங்கள் உள்ளன. பொடுகு ஏன் வருகிறது. பொடுகு வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.
பொடுகு ஏன் வருகிறது?
1. வறட்சியான சருமத்தினால் வரும்.
2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர், சோப்பு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் இந்தபொடுகு உற்பத்தியாகிறது.
3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது.
4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணீர் தலையில் தங்க நேரிடும். இதனாலும் இப்பொடுகு வருகிறது.
5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் இந்தபொடுகு பிரச்சனை வரலாம்.
6. எக்ஸீமா(Eczema), சொரியாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நோய்களாளும் பொடுகு வரலாம்.
7. அதிகமாக ஷாம்பு பயன்படுத்தினாலும் வரலாம்.
8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்.
பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை, துண்டு போன்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது.
2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்.
பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?
* சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15 நிமிஷம் கழித்து குளிக்கனும்.
* பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.
* வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
* பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது.
* வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
* வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்க்கலாம்.
பொடுகு ஏன் வருகிறது?
1. வறட்சியான சருமத்தினால் வரும்.
2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர், சோப்பு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் இந்தபொடுகு உற்பத்தியாகிறது.
3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது.
4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணீர் தலையில் தங்க நேரிடும். இதனாலும் இப்பொடுகு வருகிறது.
5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் இந்தபொடுகு பிரச்சனை வரலாம்.
6. எக்ஸீமா(Eczema), சொரியாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நோய்களாளும் பொடுகு வரலாம்.
7. அதிகமாக ஷாம்பு பயன்படுத்தினாலும் வரலாம்.
8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்.
பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை, துண்டு போன்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது.
2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்.
பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?
* சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15 நிமிஷம் கழித்து குளிக்கனும்.
* பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.
* வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
* பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது.
* வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
* வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்க்கலாம்.
இந்த ஆசனம் செய்வதால் முதுகுப்பகுதி மற்றும் அடிவயிற்று பகுதிக்கு வலு சேர்க்கிறது. முதுகுத்தண்டின் வளைவுத்தன்மை அதிகரிக்கின்றது. முதுகு வலியை குணமாக்குகிறது.
பிட்டிலாசானா என்பது சம்ஸ்கிருத மொழியில் பசுவின் பெயரான பட்டிலா என்பதிலிருந்து உருவானதாகும். பெயரை போலவே நமது உடலையும் பசுவை போல வைத்து இதனை செய்ய வேண்டும்.
செய்முறை
விரிப்பில் கைகள் இரண்டையும் தரையில் ஊன்றி, கால்களை மடக்கி நன்கு கால்கள் கொண்ட பசுவை போல செய்ய வேண்டும். பின்னர் உங்களின் பின்பகுதியை சற்றே உயர்த்தி, உங்களின் வயிற்று பகுதியை கீழ்நோக்கி தள்ள வேண்டும். தலையை நேராகவோ அல்லது மேல் பக்கமாகவோ உயர்த்தி மூச்சினை மெதுவாகவும், வேகமாகவும் பயிற்சி செய்ய வேண்டும்.
பலன்கள்
இது முதுகுப்பகுதி மற்றும் அடிவயிற்று பகுதிக்கு வலு சேர்க்கிறது. முதுகுத்தண்டின் வளைவுத்தன்மை அதிகரிக்கின்றது. மேலும் இது வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்துகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. முதுகு வலியை குணமாக்குகிறது.
செய்முறை
விரிப்பில் கைகள் இரண்டையும் தரையில் ஊன்றி, கால்களை மடக்கி நன்கு கால்கள் கொண்ட பசுவை போல செய்ய வேண்டும். பின்னர் உங்களின் பின்பகுதியை சற்றே உயர்த்தி, உங்களின் வயிற்று பகுதியை கீழ்நோக்கி தள்ள வேண்டும். தலையை நேராகவோ அல்லது மேல் பக்கமாகவோ உயர்த்தி மூச்சினை மெதுவாகவும், வேகமாகவும் பயிற்சி செய்ய வேண்டும்.
பலன்கள்
இது முதுகுப்பகுதி மற்றும் அடிவயிற்று பகுதிக்கு வலு சேர்க்கிறது. முதுகுத்தண்டின் வளைவுத்தன்மை அதிகரிக்கின்றது. மேலும் இது வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்துகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. முதுகு வலியை குணமாக்குகிறது.
மார்பக புற்றுநோயை தொடக்கத்திலே கண்டறியும் பிராவை வடிவமைத்து பெண்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றிருக்கிறார், முனைவர் சீமா.
மார்பக புற்றுநோயை தொடக்கத்திலே கண்டறியும் பிராவை வடிவமைத்து பெண்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றிருக்கிறார், முனைவர் சீமா. இவரது தலைமையிலான குழுவினர் வடிவமைத்த அந்த அதிசய பிராவை 250 பெண்களை அணியவைத்து பரிசோதித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான கேரளாவை சேர்ந்த இந்திரா என்ற பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது, இந்த பிரா மூலம் தொடக்க நிலையிலே கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சையளித்து குணப்படுத்திவிட்டார்கள்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு சீமாவின் காதுகளில் விழுந்த உரைதான், அவரை உறக்கமில்லாத அளவுக்கு சிந்திக்கவைத்து இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்திருக்கிறது. அந்த உரை புற்றுநோய் ஆராய்ச்சி மைய டாக்டர் சதீசனால், கேரளாவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது.
அவர், ‘இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஒன்றரை லட்சம் பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். நாற்பது வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தொடக்கத்திலே கண்டறியும் வாய்ப்புகள் எதுவும் இல்லாததால்தான் இந்த பாதிப்பு அதிகரிக்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு?’ என்று எலக்ட்ரானிக்ஸ் துறை ஆராய்ச்சியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பி இருக்கிறார். அந்த கேள்வி, அங்கிருந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான முனைவர் சீமாவை ஆழமாக சிந்திக்கவைத்திருக்கிறது.
எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய கண்டு பிடிப்பை உருவாக்கி, அதன் மூலம் மார்பக புற்றுநோயை முதலிலே எப்படி கண்டறியலாம்? என்று சிந்தித்திருக்கிறார். 2018-ம் ஆண்டு அதற்கான தீர்வை கண்டுபிடித்துவிட்டார். மார்பக புற்றுநோயை கண்டறியும் பிராவை உருவாக்கி, பெண் இனத்திற்கே பெருமை சேர்த்துவிட்டார்கள். இதை முனைவர் சீமா பணிபுரியும் சீமெட் என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு உருவாக்கியுள்ளது.
“இ்ந்த பிராவில் சென்சர் இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதை பெண்கள் அணியும்போது அதிலுள்ள சாக்கெட் மூலமாக கம்ப்யூட்டருக்கு படங்கள் கிடைக்கும். அதைவைத்து, அவரது மார்பகத்தில் புற்றுநோய் இருக்கிறதா? இல்லையா? என்று கண்டுபிடித்துவிடலாம்” என்று முனைவர் சீமா சொல்கிறார். அதற்காக இவருக்கு விருதுகளும், பாராட்டுகளும் குவிந்துகொண்டிருக்கின்றன.
அவரிடம் சில கேள்விகள்:
எப்படி இந்த பிரா மூலம் புற்றுநோய் கண்டறியப்படுகிறது?
புற்றுநோய் பாதித்த திசுக்கள் பரவும்போது உடல் சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் தோன்றும். அதனை கண்டறிவதற்காக ஒரு மில்லி மீட்டர் நீளமும், ஒரு மில்லி மீட்டர் அகலமும், ஒன்றரை மில்லி மீட்டர் கனமும் கொண்ட சென்சர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனை வடிவமைத்து காட்டன் துணியில் உருவான பிராவுக்குள்வைத்து தைத்திருக்கிறோம். அவைகள் மூலமான தகவல்கள் கம்ப்யூட்டர் வழியாக படங் களாக சேகரிக்கப்படுகிறது. இதன் மூலம் மார்பக புற்றுநோயை தொடக்க நிலையிலே மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இதில் கதிர்வீச்சு பற்றிய எந்த பயமும் இல்லை.
மெக்சிகோவில் இதுபோன்றதொரு கண்டுபிடிப்பு முன்பே இருந்ததாக கூறப்படுகிறதே?
அடிப்படையில் அதில் இருந்து இது மாறுபட்டது. இது பெண்களின் மார்பகங்களின் சீதோஷ்ணநிலையை அளவிடுகிறது. அதன் ரிசல்ட் ஒரு படமாக கிடைக்கும். புற்றுநோயை கண்டுபிடிக்கும் மாமோகிராம் பரிசோதனையை நாற்பது வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செய்வதில்லை. இதை பத்து, பதினைந்து வயது சிறுமிகளுக்குகூட தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். இந்த பரிசோதனையில் அந்த பெண்களின் தனிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எந்த தயக்கமும் இன்றி இதனை மேற்கொள்ளலாம். இந்த பிராவை அணிந்துகொண்டு அதற்கு மேல் விருப்பப்பட்ட உடையை வழக்கம்போல் உடுத்திக்கொள்ளலாம். எதிர்காலத்தில் ஐம்பது ரூபாயில்கூட மிக எளிதாக இந்த சோதனையை நடத்திவிடலாம்.
இந்த புற்றுநோய் பிராவுக்கான ஆராய்ச்சியை நீங்கள் மேற்கொள்ள தனிப்பட்ட வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா?
சமூகத்திற்கு ஏதாவது நல்லகாரியம் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, இந்த வாய்ப்பு வந்தது. அதனால் உடனே அதை பயன்படுத்திக்கொண்டேன். எங்கள் அமைப்பு பொதுமக்களின் பணத்தில் இயங்குகிறது. அதனால் மக்களுக்கு நன்மைபயக்கும் விஷயங்களுக்கு முன்னுரிமைகொடுக்கிறோம். பொதுமக்களுக்கு பலன் தரும் பல பொருட்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அதில் ஒன்று விரைவாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் எமர்ஜென்சி லாம்ப். ஒரு நிமிடத்திலே அதில் சார்ஜ் ஏற்றிவிடலாம். இந்தியாவில் மின்சார வசதி இல்லாத ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் அது மக்களுக்கு பெரும் பலன் தரும். சூரிய சக்தி மூலமும் அதில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இப்போது இது போன்ற எமர்ஜென்சி லாம்ப்களை தைவான், சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.
புற்றுநோய் கண்டறியும் பிரா வடிவமைப்பில் உங்கள் பணி எவ்வாறு அமைந்திருந்தது?
அதற்கான பரிசோதனைக்கூடத்தில் 24 மணி நேரமும் பிராவின் சீதோஷ்ண நிலையை கண் காணித்தோம். அப்போதெல்லாம் முழுநேரமும் பரிசோதனைக்கூடத்தில்தான் இருந்தேன். ஆராய்ச்சிப் பணிகள் எதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று கூற முடியாது. விடுமுறை நாட்களிலும் நாங்கள் வேலைபார்த்தோம். இந்த துறையை சார்ந்த மாணவிகளும் எங்களோடு சேர்ந்து பணியாற்றினார்கள்.
இந்த பிராவை வடிவமைத்ததும் நான்தான் அதை அணிந்து பரிசோதித்து பார்த்தேன். அதன்பின்பு என்னோடு பணிபுரிபவர்களும் அதை அணிந்துகொள்ள முன்வந்தனர். அடுத்து மலபார் கேன்சர் சென்டரில் உள்ளவர் களோடு பேசி, அவர்கள் மூலமும் பரிசோதனை செய்தோம். 250 பேர்களுக்கு பயன்படுத்தியதில் இ்ந்திராவுக்கு புற்றுநோய்க்கான தொடக்க அறிகுறி இருந்தது இந்த பிரா மூலம் கண்டறியப்பட்டது. தொடக்கத்திலே கண்டுபிடிக்க முடிந்ததால் அவருக்கு எளிதாக சிகிச்சை அளித்து குணப் படுத்த முடிந்தது. ஒருவரையாவது காப்பாற்ற முடிந்தது மகிழ்ச்சியான விஷயம்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு சீமாவின் காதுகளில் விழுந்த உரைதான், அவரை உறக்கமில்லாத அளவுக்கு சிந்திக்கவைத்து இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்திருக்கிறது. அந்த உரை புற்றுநோய் ஆராய்ச்சி மைய டாக்டர் சதீசனால், கேரளாவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது.
அவர், ‘இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஒன்றரை லட்சம் பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். நாற்பது வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தொடக்கத்திலே கண்டறியும் வாய்ப்புகள் எதுவும் இல்லாததால்தான் இந்த பாதிப்பு அதிகரிக்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு?’ என்று எலக்ட்ரானிக்ஸ் துறை ஆராய்ச்சியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பி இருக்கிறார். அந்த கேள்வி, அங்கிருந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான முனைவர் சீமாவை ஆழமாக சிந்திக்கவைத்திருக்கிறது.
எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய கண்டு பிடிப்பை உருவாக்கி, அதன் மூலம் மார்பக புற்றுநோயை முதலிலே எப்படி கண்டறியலாம்? என்று சிந்தித்திருக்கிறார். 2018-ம் ஆண்டு அதற்கான தீர்வை கண்டுபிடித்துவிட்டார். மார்பக புற்றுநோயை கண்டறியும் பிராவை உருவாக்கி, பெண் இனத்திற்கே பெருமை சேர்த்துவிட்டார்கள். இதை முனைவர் சீமா பணிபுரியும் சீமெட் என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு உருவாக்கியுள்ளது.
“இ்ந்த பிராவில் சென்சர் இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதை பெண்கள் அணியும்போது அதிலுள்ள சாக்கெட் மூலமாக கம்ப்யூட்டருக்கு படங்கள் கிடைக்கும். அதைவைத்து, அவரது மார்பகத்தில் புற்றுநோய் இருக்கிறதா? இல்லையா? என்று கண்டுபிடித்துவிடலாம்” என்று முனைவர் சீமா சொல்கிறார். அதற்காக இவருக்கு விருதுகளும், பாராட்டுகளும் குவிந்துகொண்டிருக்கின்றன.
அவரிடம் சில கேள்விகள்:
எப்படி இந்த பிரா மூலம் புற்றுநோய் கண்டறியப்படுகிறது?
புற்றுநோய் பாதித்த திசுக்கள் பரவும்போது உடல் சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் தோன்றும். அதனை கண்டறிவதற்காக ஒரு மில்லி மீட்டர் நீளமும், ஒரு மில்லி மீட்டர் அகலமும், ஒன்றரை மில்லி மீட்டர் கனமும் கொண்ட சென்சர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனை வடிவமைத்து காட்டன் துணியில் உருவான பிராவுக்குள்வைத்து தைத்திருக்கிறோம். அவைகள் மூலமான தகவல்கள் கம்ப்யூட்டர் வழியாக படங் களாக சேகரிக்கப்படுகிறது. இதன் மூலம் மார்பக புற்றுநோயை தொடக்க நிலையிலே மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இதில் கதிர்வீச்சு பற்றிய எந்த பயமும் இல்லை.
மெக்சிகோவில் இதுபோன்றதொரு கண்டுபிடிப்பு முன்பே இருந்ததாக கூறப்படுகிறதே?
அடிப்படையில் அதில் இருந்து இது மாறுபட்டது. இது பெண்களின் மார்பகங்களின் சீதோஷ்ணநிலையை அளவிடுகிறது. அதன் ரிசல்ட் ஒரு படமாக கிடைக்கும். புற்றுநோயை கண்டுபிடிக்கும் மாமோகிராம் பரிசோதனையை நாற்பது வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செய்வதில்லை. இதை பத்து, பதினைந்து வயது சிறுமிகளுக்குகூட தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். இந்த பரிசோதனையில் அந்த பெண்களின் தனிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எந்த தயக்கமும் இன்றி இதனை மேற்கொள்ளலாம். இந்த பிராவை அணிந்துகொண்டு அதற்கு மேல் விருப்பப்பட்ட உடையை வழக்கம்போல் உடுத்திக்கொள்ளலாம். எதிர்காலத்தில் ஐம்பது ரூபாயில்கூட மிக எளிதாக இந்த சோதனையை நடத்திவிடலாம்.
இந்த புற்றுநோய் பிராவுக்கான ஆராய்ச்சியை நீங்கள் மேற்கொள்ள தனிப்பட்ட வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா?
சமூகத்திற்கு ஏதாவது நல்லகாரியம் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, இந்த வாய்ப்பு வந்தது. அதனால் உடனே அதை பயன்படுத்திக்கொண்டேன். எங்கள் அமைப்பு பொதுமக்களின் பணத்தில் இயங்குகிறது. அதனால் மக்களுக்கு நன்மைபயக்கும் விஷயங்களுக்கு முன்னுரிமைகொடுக்கிறோம். பொதுமக்களுக்கு பலன் தரும் பல பொருட்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அதில் ஒன்று விரைவாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் எமர்ஜென்சி லாம்ப். ஒரு நிமிடத்திலே அதில் சார்ஜ் ஏற்றிவிடலாம். இந்தியாவில் மின்சார வசதி இல்லாத ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் அது மக்களுக்கு பெரும் பலன் தரும். சூரிய சக்தி மூலமும் அதில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இப்போது இது போன்ற எமர்ஜென்சி லாம்ப்களை தைவான், சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.
புற்றுநோய் கண்டறியும் பிரா வடிவமைப்பில் உங்கள் பணி எவ்வாறு அமைந்திருந்தது?
அதற்கான பரிசோதனைக்கூடத்தில் 24 மணி நேரமும் பிராவின் சீதோஷ்ண நிலையை கண் காணித்தோம். அப்போதெல்லாம் முழுநேரமும் பரிசோதனைக்கூடத்தில்தான் இருந்தேன். ஆராய்ச்சிப் பணிகள் எதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று கூற முடியாது. விடுமுறை நாட்களிலும் நாங்கள் வேலைபார்த்தோம். இந்த துறையை சார்ந்த மாணவிகளும் எங்களோடு சேர்ந்து பணியாற்றினார்கள்.
இந்த பிராவை வடிவமைத்ததும் நான்தான் அதை அணிந்து பரிசோதித்து பார்த்தேன். அதன்பின்பு என்னோடு பணிபுரிபவர்களும் அதை அணிந்துகொள்ள முன்வந்தனர். அடுத்து மலபார் கேன்சர் சென்டரில் உள்ளவர் களோடு பேசி, அவர்கள் மூலமும் பரிசோதனை செய்தோம். 250 பேர்களுக்கு பயன்படுத்தியதில் இ்ந்திராவுக்கு புற்றுநோய்க்கான தொடக்க அறிகுறி இருந்தது இந்த பிரா மூலம் கண்டறியப்பட்டது. தொடக்கத்திலே கண்டுபிடிக்க முடிந்ததால் அவருக்கு எளிதாக சிகிச்சை அளித்து குணப் படுத்த முடிந்தது. ஒருவரையாவது காப்பாற்ற முடிந்தது மகிழ்ச்சியான விஷயம்.
வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பாதுகாக்கும். இன்று வெள்ளரிக்காய் மோர் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெள்ளரி - 2
மிளகு - அரை டீஸ்பூன்
புதினா - சிறிது
உப்பு - சிறிதளவு
ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு
மோர் - தேவையான அளவு

செய்முறை :
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய், மிளகு, உப்பு, ஐஸ்கட்டிகள், மோர், புதினா சேர்த்து நன்றாக அரைக்கவும்.
வெள்ளரி - 2
மிளகு - அரை டீஸ்பூன்
புதினா - சிறிது
உப்பு - சிறிதளவு
ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு
மோர் - தேவையான அளவு

வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய், மிளகு, உப்பு, ஐஸ்கட்டிகள், மோர், புதினா சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த ஜூஸ் வடிகட்டியில் ஊற்றி வடிகட்டி கண்ணாடி டம்ளரில் ஊற்றி பருகவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வேலை, சம்பளம் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு படிப்பை தேர்வு செய்து விடக்கூடாது. விருப்பமான துறைகளில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து படிக்க வேண்டும்.
கல்விதான் ஒரு மனிதனை பண்பு உள்ளவனாக மாற்றுகிறது. கல்வி கற்ற சமுதாயம் தான் உயர்ந்த சமுதாயமாக கருதப்படுகிறது. எனவே அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றியது. இதனால் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் கட்டாயமாக கல்வி கற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இடைநிற்றல் வெகுவாக குறைந்ததால் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதற்காக மாணவ-மாணவிகளுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநில அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதையடுத்து மாணவ-மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்து படிக்க வேண்டும். ஆனால் எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் அவர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொருவரும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தங்களுக்கு விருப்ப மான பாடத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேல்நிலை கல்வியுடன் படிப்பை விட்டு விடக் கூடாது. நாட்டில் உயர்கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை தற்போதும் குறைவாகவே உள்ளது. அதை உயர்த்த வேண்டியது அவசியம். இதற்கு கல்லூரி படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு என்று மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும். ஆராய்ச்சி நிலை வரை மாணவ- மாணவிகள் படித்தால் தான், அது அவர்களுக்கு மட்டுமின்றி நாட்டிற் கும் பயன் உள்ளதாக இருக்கும்.
கல்லூரி படிப்பை தொடர கிராமப்புற மாணவர்கள், நகரங்களை தேடி செல்ல வேண்டிய நிலை தற்போதும் உள்ளது. அதற்காக அவர்கள் மனம் தளர்ந்து விடாமல் விருப்பமான படிப்பு மற்றும் கல்லூரியை தேர்வு செய்து படிக்க வேண்டும். எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் மாணவ- மாணவிகளுக்கு பெற்றோர்கள் உதவிகரமாக, வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். மாறாக மாணவ- மாணவிகளை நிர்பந்தம் செய்து, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டு விடக்கூடாது. எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மாணவர்களின் கல்வி விருப்பத்தை நிறைவேற்ற பெற்றோர்கள் முயற்சி செய்வார்கள். அதை புரிந்து கொண்டு மாணவர்களும் செயல்பட வேண்டும்.
வேலை, சம்பளம் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு படிப்பை தேர்வு செய்து விடக்கூடாது. விருப்பமான துறைகளில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து படிக்க வேண்டும். அந்த கல்வி தான் வாழ்க்கை முழுவதற்கும் நிறைவை தருவதாக இருக்கும். அப்படி இல்லாத நிலையில் வேலை, சம்பளம் மட்டும் மகிழ்ச்சி அளித்து விடாது. எனவே உயர் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் மாணவ- மாணவிகள் உறுதியாக இருக்க வேண்டும். அது அவர்களை உயர்த்திக் கொள்ளவும், நாட்டை வளப்படுத்துவதற்கும் உதவும் என்பது நிச்சயம்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதையடுத்து மாணவ-மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்து படிக்க வேண்டும். ஆனால் எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் அவர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொருவரும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தங்களுக்கு விருப்ப மான பாடத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேல்நிலை கல்வியுடன் படிப்பை விட்டு விடக் கூடாது. நாட்டில் உயர்கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை தற்போதும் குறைவாகவே உள்ளது. அதை உயர்த்த வேண்டியது அவசியம். இதற்கு கல்லூரி படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு என்று மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும். ஆராய்ச்சி நிலை வரை மாணவ- மாணவிகள் படித்தால் தான், அது அவர்களுக்கு மட்டுமின்றி நாட்டிற் கும் பயன் உள்ளதாக இருக்கும்.
கல்லூரி படிப்பை தொடர கிராமப்புற மாணவர்கள், நகரங்களை தேடி செல்ல வேண்டிய நிலை தற்போதும் உள்ளது. அதற்காக அவர்கள் மனம் தளர்ந்து விடாமல் விருப்பமான படிப்பு மற்றும் கல்லூரியை தேர்வு செய்து படிக்க வேண்டும். எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் மாணவ- மாணவிகளுக்கு பெற்றோர்கள் உதவிகரமாக, வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். மாறாக மாணவ- மாணவிகளை நிர்பந்தம் செய்து, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டு விடக்கூடாது. எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மாணவர்களின் கல்வி விருப்பத்தை நிறைவேற்ற பெற்றோர்கள் முயற்சி செய்வார்கள். அதை புரிந்து கொண்டு மாணவர்களும் செயல்பட வேண்டும்.
வேலை, சம்பளம் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு படிப்பை தேர்வு செய்து விடக்கூடாது. விருப்பமான துறைகளில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து படிக்க வேண்டும். அந்த கல்வி தான் வாழ்க்கை முழுவதற்கும் நிறைவை தருவதாக இருக்கும். அப்படி இல்லாத நிலையில் வேலை, சம்பளம் மட்டும் மகிழ்ச்சி அளித்து விடாது. எனவே உயர் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் மாணவ- மாணவிகள் உறுதியாக இருக்க வேண்டும். அது அவர்களை உயர்த்திக் கொள்ளவும், நாட்டை வளப்படுத்துவதற்கும் உதவும் என்பது நிச்சயம்.
ஆண் என்பவன் குற்றங்களின் இருப்பிடம் என்ற தவறான மனப்பான்மையில் இருந்து விடுபட்டு ஆண்கள் பெண்கள் இருவரையும் அறம் நோக்கி வழிநடத்த நமது சிந்தனையில் மாற்றம் ஏற்படுவது தான் இன்றைய தேவையாக இருக்கிறது.
கடந்த வாரம் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே ஒரு கேளிக்கை ஓய்விடத்தில் பல இளம் வயது ஆண்களும் சில பெண்களும் கூடி, குடித்து கூச்சலிட்டு கொண்டாட்டம் போட்டு, அக்கம் பக்கம் குடி இருப்பவர்களுக்கு பெரும் இடைஞ்சல் ஏற்படுத்தியதாக புகார் வரவே, காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், அங்கிருந்த இளைஞர்கள் கஞ்சா, கோகைன் போன்ற போதைப் பொருட்களை உட்கொண்டு இருந்ததும், அதில் சிலர் அரை நிர்வாண நடனம் ஆடியதும் செய்தியாக வெளியானது.
இரண்டு நாட்களில் மற்றொரு அதிரடி சோதனை நடந்தது. இம்முறை மாமல்லபுரத்தில், அதே போல் இன்னொரு கேளிக்கை ஓய்வு விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் அவர்களுடன் ஏழு பெண்களும் போதையேறி சத்தம்போட்டு போலீசுக்கு புகார் சொல்வது போல நடந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் மாவட்ட காவல்துறை அதிகாரி ஒரு மண்டபத்தில் வைத்து விசாரித்து, எச்சரித்து அனுப்பியுள்ளார். பொள்ளாச்சியிலும் இது தான் நடந்துள்ளது.
இரண்டு கேளிக்கை இடங்களிலும் கூடி இருந்த இளைஞர்களின் வயது 18 முதல் 28 வயது வரை. பெரும்பாலானவர்கள் மாணவர்கள்; பலர் தகவல் தொழில் நுட்பத்துறை ஊழியர்கள். சிலர் தனியார் நிறுவனப் பணியாளர்கள். அவர்களின் வயது, எதிர்காலம் குடும்பம் ஆகியவற்றைக் கருதி அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ள காவல்துறை அதிகாரிகள், அந்த இடங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
இந்த செய்தியைப் படிக்கும்போது நமக்குக் கவலை ஏற்படுகிறது. தொலைக்காட்சியில் பார்க்கும் போது மனம் பதறுகிறது. வளரும் தலைமுறையின் ஒரு பகுதி இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை போக்கைத் தான் விரும்புகிறதா? இதில் பெண்கள் வேறு இவர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடுகிறார்களே, இது எங்கு போய் விடும்? என்றெல்லாம் கேள்விகள் சங்கிலித் தொடராய் வந்து கொண்டே இருக்கின்றது. அந்தக் கேள்விகள் விடையற்றவையா? இல்லை. அதற்கு விடை இருக்கிறது.
இந்த நிலைக்கு என்ன காரணம்? இதை எப்படிச் சீர்படுத்துவது? என்ற இரண்டு கேள்விகளை ஒவ்வொருவரும் தன்னைத் தானே கேட்டுக் கொண்டால், கொஞ்சம் தெளிவு பிறக்கும். அதற்கு முன்னால், நாம் சிந்திக்க வேண்டிய சில பிரச்சினைகள் உள்ளன. இந்த செய்திகளைப் படித்த, பார்த்த கொஞ்சம் உலகியல் அறிவுள்ள எவருக்கும் ஒரு சந்தேகம் எழுகிறது. இப்போது தான் முதல் முறையாக இப்படி ஒரு விருந்து நடைபெறுகிறதா? இது வரையில் எத்தனை நாட்கள் இந்தக் கொண்டாட்டங்கள் நடந்திருக்கும்? இப்படி இன்னும் எத்தனை ரிசாட்டுகள் உள்ளன. அவற்றில் எத்தனை ஆயிரம் ஆண்கள், பெண்கள் இப்படி விருந்துகளில் பங்கு பெற்று இருப்பார்களா? இது வரையில் ஏன் இவை காவல்துறையின் கவனத்திற்கு வரவில்லை? அல்லது நடவடிக்கை எடுக்கவில்லை? இவை அனைத்தும் அந்த சந்தேகத்தில் முளைக்கும் கிளைக் கேள்விகள்.
இதைப் பண்பாட்டுச் சீரழிவு என்று சொல்லலாமா? சொல்லலாம். ஆனால் அதற்கு முன்னால் நமது பண்பாடு எது என்று புரிந்து கொள்வது அவசியம் அல்லவா? இதுவரையில் நம் நாட்டு ஆண்கள் கூடி குடித்து கும்மாளம் போட்டதே இல்லையா? “கிழக்குக் சீமையிலே“ என்ற திரைப் படத்தில் தென் தமிழ் நாட்டு மண்வாசனையை கிராமத்துப் புழுதி கிளம்ப அப்படியே திரையில் வரைந்திருப்பார் இயக்குனர் பாரதிராஜா. அந்த திரைப்படத்தில் கையில் சாராய பாட்டில் இல்லாத ஒரே ஆண், கதாநாயகியின் அண்ணன் மட்டுமே.
பெண் பார்க்க வருகிற மாப்பிள்ளை மாட்டு வண்டியிலேயே குடித்துக் கொண்டு வருகிறான். பெண் வீட்டின் பின்புற முற்றத்தில் உட்கார்ந்து குடிக்கிறான். அவனுக்குப் பெண் கொடுப்பதில் எந்தப் பிரச்சினையுமில்லை. “மற்றபடி அவன் நல்லவன் தான்“. பிறகு கொங்கு நாட்டுப் பேச்சு மற்றும் பழக்க வழக்கத்துடன் “கிழக்கு வாசல்“ வந்தது. தோட்டத்திற்கு நடுவில் பண்ணை வீடு கட்டி அதில் ஒரு வைப்பாட்டியை வைத்து குடித்தனம் நடத்துபவர் தான் ஊர்ப் பெரிய மனிதர். இவை இரண்டும் எடுத்துக் காட்டுக்கு மட்டுமே.
இதைப் போல எத்தனையோப் படங்கள், எவ்வளவு அருவருப்பான காட்சிகள். ஆனால் அவையெல்லாம் எங்கள் சமூகத்தை இழிவுபடுத்தி விட்டன என்றோ யாரும் வருத்தப்படவில்லை. மாறாக அதை ஒரு பெருமையுடன் அங்கீகரித்தார்கள். அந்தப் பின்னணியில் இருந்து வரும் ஆண்கள் கல்லூரிக்குச் சென்ற பிறகு, படிக்காமல், குடிகாரனாக வலம் வந்தாலும் கூட, குடித்து உடலை கெடுத்துக் கொள்கிறான் என்று தான் கவலைப் பட்டார்களே தவிர அது நம் குலத்தின் பெருமைக்கு அடுக்குமா என்று கேட்டதில்லை. கறி விருந்து வைத்து போதையில் கட்டிப் புரண்ட காட்சிகளை தமது பெருமையாக நினைத்த ஆணாதிக்க மனக் கோளாறு, கேளிக்கை விடுதியில் கூடிக் கும்மாளம் போடும் கூட்டத்தைத் தானே உருவாக்கும். அதனால் ஏதோ மேல் நாட்டில் இருந்து கம்ப்யூட்டர், செல்போன் சிப். புளூடூத் மாதிரி இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு என்று கட்டமைப்பது தவறு.
இன்று எந்த நாட்டிலும் நமது இளைஞர்கள் வேலை செய்கிறார்கள் என்றால் அதற்கு காரணம்? இந்த ஐ.டி. எனப்படும் தகவல் தொழில் நுட்ப பன்னாட்டு கம்பெனிகள் தான். ஆனால் இந்த நிறுவனங்களின் சுயநலக் கட்டமைப்பு, இவர்கள் இப்படிக் கூடிக் களிப்பதை தங்கள் அலுவலகத்தில் சிறந்த நிர்வாக நடைமுறைகளில் ஒன்றாகவே வைத்திருக்கிறது. அவர்கள் நம் இளைஞர்களை ரத்தம் சுண்ட, மூளை வறண்டு போகும் அளவுக்கு உழைப்பைச் சுரண்டுகிறார்கள்.
கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பல மணி நேரங்கள் வேலை செய்யும் ஆண்களும், பெண்களும் முப்பத்தைந்து வயதிற்குள் தலையில் வழுக்கையோ, சொட்டையோ விழும் அளவிற்கு சத்திழந்து போகிறார்கள். தூங்குவதென்றால் மரக் கட்டைகளைப் போல் மணிக்கணக்காய்க் கிடப்பார்கள். தூங்கி எழுந்த பின் பார்த்தால் முன்னை விட களைப்பாகத் தெரிவார்கள். இவர்களை உசுப்பி விட்டு வேலை வாங்குவற்காக அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கியது தான் இந்த பார்ட்டி கல்ச்சர். இது எந்த வகையில் அவர்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்? மேலும் அவர்களை பலவீனமாகத் தான் ஆக்கும்.
இவர்களை இதிலிருந்து மீட்பதற்கு நமது அரசும், குடும்பங்களும் என்ன முயற்சி செய்கிறோம் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு தொழிலாளிக்குக் கொடுக்க வேண்டிய குறைந்த பட்ச அல்லது அதிக பட்ச வேலை நேரம் குறித்த எந்த சட்டமும் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு செல்லாது. வேலைக்குப் பாதுகாப்பு இல்லை. எட்டு ஆண்டு கடின வேலை செய்த ஒருவரை இரண்டே “ரிவ்யூ மீட்டிங்“ வைத்து வேலையை விட்டு நீக்கிவிடலாம். கேள்வி முறை இல்லை. இந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் போது, இந்த சட்டங்கள் ஒழுங்குபடுத்த இந்திய அரசு எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. ஒரு வேளை ஏதாவது எழுத்தில் இருந்தாலும் அதை நிறைவேற்ற முயல்வதில்லை.
சரி இவர்களது குடும்பத்தைப் பாருங்கள். பெற்றோராகிய நாம் என் மகனோ, மகளோ அமெரிக்க டாலர் கணக்கில் ரூ.70 ஆயிரம் சம்பளம் வாங்க வேண்டாம். ஏழு, எட்டு மணி நேரம், வேறு கம்பெனியில் நிம்மதியாக வேலை செய்து 20 ஆயிரம் வாங்கினால் போதும் என்று நினைக்கிறோமோ? இவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு பயந்து, அவர்களின் பிள்ளைகளுக்கு ஆயா வேலை பார்க்க வயதான காலத்தில் ஒன்றாக இருக்க முடியாமல் அப்பா ஆறு மாதம், அம்மா ஆறு மாதம் அமெரிக்காவில் பேரக் குழந்தையை பார்த்துக் கொள்வார்கள் என்கிறோம். அப்பாவும் அம்மாவும் இப்படிப் பிரிந்திருக்கலாமா என்று பிள்ளைகள் நினைப்பதில்லை.
இந்த வலைப் பின்னலை உருவாக்கிய அந்த பணம் எனும் சிலந்தி தான் தன் இரையாக இந்த இளைஞர் கூட்டத்தை வளைத்துப் போடுகிறது. இதில் பெண்களும் இருப்பது அவர்களுக்குக் கூடுதலான ஆபத்துகளை உருவாக்கும் என்பதால் அவர்களை அதிகமாக எச்சரிக்க வேண்டியிருக்கிறது.
மற்றபடி பெண்கள் இப்படி போனால். ஆண்கள் வீடியோ எடுக்கத் தான் செய்வார்கள் என்று பேசுகிறவர்கள். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இப்படியே நாம் பேசிக் கொண்டிருந்தால், எங்கோ நடந்து போகிற பெண்ணைத் தூக்கிக் கொண்டு போய் விட்டு அவள் தான் விரும்பி வந்தாள் என்று சொல்லும் குற்றவாளிகளை உருவாக்குவதற்கு தான் நீங்கள் துணை போகிறீர்கள்.
ஏனெனில் எந்தச் சீரழிவும் தனியே நிலவில் இருந்து புவியில் குதிப்பதில்லை. சமூகத்தின் போலிச் சிந்தனையில் தான் குற்றம் நடக்கிறது. அதைத் திருத்தும் சிந்தனையில் தான் அறமும் பிறக்கிறது. ஆண் என்பவன் குற்றங்களின் இருப்பிடம் என்ற தவறான மனப்பான்மையில் இருந்து விடுபட்டு ஆண்கள் பெண்கள் இருவரையும் அறம் நோக்கி வழிநடத்த நமது சிந்தனையில் மாற்றம் ஏற்படுவது தான் இன்றைய தேவையாக இருக்கிறது. அதுதான் இத்தகைய சீரழிவுகளின் ஊற்றுக் கண்ணை மூடும். அறம் செய்ய விரும்பும் மனநிலையை ஏற்படுத்தும்.
அ.அருள்மொழி, வக்கீல், சென்னை உயர்நீதிமன்றம்.
இரண்டு நாட்களில் மற்றொரு அதிரடி சோதனை நடந்தது. இம்முறை மாமல்லபுரத்தில், அதே போல் இன்னொரு கேளிக்கை ஓய்வு விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் அவர்களுடன் ஏழு பெண்களும் போதையேறி சத்தம்போட்டு போலீசுக்கு புகார் சொல்வது போல நடந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் மாவட்ட காவல்துறை அதிகாரி ஒரு மண்டபத்தில் வைத்து விசாரித்து, எச்சரித்து அனுப்பியுள்ளார். பொள்ளாச்சியிலும் இது தான் நடந்துள்ளது.
இரண்டு கேளிக்கை இடங்களிலும் கூடி இருந்த இளைஞர்களின் வயது 18 முதல் 28 வயது வரை. பெரும்பாலானவர்கள் மாணவர்கள்; பலர் தகவல் தொழில் நுட்பத்துறை ஊழியர்கள். சிலர் தனியார் நிறுவனப் பணியாளர்கள். அவர்களின் வயது, எதிர்காலம் குடும்பம் ஆகியவற்றைக் கருதி அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ள காவல்துறை அதிகாரிகள், அந்த இடங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
இந்த செய்தியைப் படிக்கும்போது நமக்குக் கவலை ஏற்படுகிறது. தொலைக்காட்சியில் பார்க்கும் போது மனம் பதறுகிறது. வளரும் தலைமுறையின் ஒரு பகுதி இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை போக்கைத் தான் விரும்புகிறதா? இதில் பெண்கள் வேறு இவர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடுகிறார்களே, இது எங்கு போய் விடும்? என்றெல்லாம் கேள்விகள் சங்கிலித் தொடராய் வந்து கொண்டே இருக்கின்றது. அந்தக் கேள்விகள் விடையற்றவையா? இல்லை. அதற்கு விடை இருக்கிறது.
இந்த நிலைக்கு என்ன காரணம்? இதை எப்படிச் சீர்படுத்துவது? என்ற இரண்டு கேள்விகளை ஒவ்வொருவரும் தன்னைத் தானே கேட்டுக் கொண்டால், கொஞ்சம் தெளிவு பிறக்கும். அதற்கு முன்னால், நாம் சிந்திக்க வேண்டிய சில பிரச்சினைகள் உள்ளன. இந்த செய்திகளைப் படித்த, பார்த்த கொஞ்சம் உலகியல் அறிவுள்ள எவருக்கும் ஒரு சந்தேகம் எழுகிறது. இப்போது தான் முதல் முறையாக இப்படி ஒரு விருந்து நடைபெறுகிறதா? இது வரையில் எத்தனை நாட்கள் இந்தக் கொண்டாட்டங்கள் நடந்திருக்கும்? இப்படி இன்னும் எத்தனை ரிசாட்டுகள் உள்ளன. அவற்றில் எத்தனை ஆயிரம் ஆண்கள், பெண்கள் இப்படி விருந்துகளில் பங்கு பெற்று இருப்பார்களா? இது வரையில் ஏன் இவை காவல்துறையின் கவனத்திற்கு வரவில்லை? அல்லது நடவடிக்கை எடுக்கவில்லை? இவை அனைத்தும் அந்த சந்தேகத்தில் முளைக்கும் கிளைக் கேள்விகள்.
இதைப் பண்பாட்டுச் சீரழிவு என்று சொல்லலாமா? சொல்லலாம். ஆனால் அதற்கு முன்னால் நமது பண்பாடு எது என்று புரிந்து கொள்வது அவசியம் அல்லவா? இதுவரையில் நம் நாட்டு ஆண்கள் கூடி குடித்து கும்மாளம் போட்டதே இல்லையா? “கிழக்குக் சீமையிலே“ என்ற திரைப் படத்தில் தென் தமிழ் நாட்டு மண்வாசனையை கிராமத்துப் புழுதி கிளம்ப அப்படியே திரையில் வரைந்திருப்பார் இயக்குனர் பாரதிராஜா. அந்த திரைப்படத்தில் கையில் சாராய பாட்டில் இல்லாத ஒரே ஆண், கதாநாயகியின் அண்ணன் மட்டுமே.
பெண் பார்க்க வருகிற மாப்பிள்ளை மாட்டு வண்டியிலேயே குடித்துக் கொண்டு வருகிறான். பெண் வீட்டின் பின்புற முற்றத்தில் உட்கார்ந்து குடிக்கிறான். அவனுக்குப் பெண் கொடுப்பதில் எந்தப் பிரச்சினையுமில்லை. “மற்றபடி அவன் நல்லவன் தான்“. பிறகு கொங்கு நாட்டுப் பேச்சு மற்றும் பழக்க வழக்கத்துடன் “கிழக்கு வாசல்“ வந்தது. தோட்டத்திற்கு நடுவில் பண்ணை வீடு கட்டி அதில் ஒரு வைப்பாட்டியை வைத்து குடித்தனம் நடத்துபவர் தான் ஊர்ப் பெரிய மனிதர். இவை இரண்டும் எடுத்துக் காட்டுக்கு மட்டுமே.
இதைப் போல எத்தனையோப் படங்கள், எவ்வளவு அருவருப்பான காட்சிகள். ஆனால் அவையெல்லாம் எங்கள் சமூகத்தை இழிவுபடுத்தி விட்டன என்றோ யாரும் வருத்தப்படவில்லை. மாறாக அதை ஒரு பெருமையுடன் அங்கீகரித்தார்கள். அந்தப் பின்னணியில் இருந்து வரும் ஆண்கள் கல்லூரிக்குச் சென்ற பிறகு, படிக்காமல், குடிகாரனாக வலம் வந்தாலும் கூட, குடித்து உடலை கெடுத்துக் கொள்கிறான் என்று தான் கவலைப் பட்டார்களே தவிர அது நம் குலத்தின் பெருமைக்கு அடுக்குமா என்று கேட்டதில்லை. கறி விருந்து வைத்து போதையில் கட்டிப் புரண்ட காட்சிகளை தமது பெருமையாக நினைத்த ஆணாதிக்க மனக் கோளாறு, கேளிக்கை விடுதியில் கூடிக் கும்மாளம் போடும் கூட்டத்தைத் தானே உருவாக்கும். அதனால் ஏதோ மேல் நாட்டில் இருந்து கம்ப்யூட்டர், செல்போன் சிப். புளூடூத் மாதிரி இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு என்று கட்டமைப்பது தவறு.
இன்று எந்த நாட்டிலும் நமது இளைஞர்கள் வேலை செய்கிறார்கள் என்றால் அதற்கு காரணம்? இந்த ஐ.டி. எனப்படும் தகவல் தொழில் நுட்ப பன்னாட்டு கம்பெனிகள் தான். ஆனால் இந்த நிறுவனங்களின் சுயநலக் கட்டமைப்பு, இவர்கள் இப்படிக் கூடிக் களிப்பதை தங்கள் அலுவலகத்தில் சிறந்த நிர்வாக நடைமுறைகளில் ஒன்றாகவே வைத்திருக்கிறது. அவர்கள் நம் இளைஞர்களை ரத்தம் சுண்ட, மூளை வறண்டு போகும் அளவுக்கு உழைப்பைச் சுரண்டுகிறார்கள்.
கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பல மணி நேரங்கள் வேலை செய்யும் ஆண்களும், பெண்களும் முப்பத்தைந்து வயதிற்குள் தலையில் வழுக்கையோ, சொட்டையோ விழும் அளவிற்கு சத்திழந்து போகிறார்கள். தூங்குவதென்றால் மரக் கட்டைகளைப் போல் மணிக்கணக்காய்க் கிடப்பார்கள். தூங்கி எழுந்த பின் பார்த்தால் முன்னை விட களைப்பாகத் தெரிவார்கள். இவர்களை உசுப்பி விட்டு வேலை வாங்குவற்காக அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கியது தான் இந்த பார்ட்டி கல்ச்சர். இது எந்த வகையில் அவர்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்? மேலும் அவர்களை பலவீனமாகத் தான் ஆக்கும்.
இவர்களை இதிலிருந்து மீட்பதற்கு நமது அரசும், குடும்பங்களும் என்ன முயற்சி செய்கிறோம் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு தொழிலாளிக்குக் கொடுக்க வேண்டிய குறைந்த பட்ச அல்லது அதிக பட்ச வேலை நேரம் குறித்த எந்த சட்டமும் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு செல்லாது. வேலைக்குப் பாதுகாப்பு இல்லை. எட்டு ஆண்டு கடின வேலை செய்த ஒருவரை இரண்டே “ரிவ்யூ மீட்டிங்“ வைத்து வேலையை விட்டு நீக்கிவிடலாம். கேள்வி முறை இல்லை. இந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் போது, இந்த சட்டங்கள் ஒழுங்குபடுத்த இந்திய அரசு எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. ஒரு வேளை ஏதாவது எழுத்தில் இருந்தாலும் அதை நிறைவேற்ற முயல்வதில்லை.
சரி இவர்களது குடும்பத்தைப் பாருங்கள். பெற்றோராகிய நாம் என் மகனோ, மகளோ அமெரிக்க டாலர் கணக்கில் ரூ.70 ஆயிரம் சம்பளம் வாங்க வேண்டாம். ஏழு, எட்டு மணி நேரம், வேறு கம்பெனியில் நிம்மதியாக வேலை செய்து 20 ஆயிரம் வாங்கினால் போதும் என்று நினைக்கிறோமோ? இவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு பயந்து, அவர்களின் பிள்ளைகளுக்கு ஆயா வேலை பார்க்க வயதான காலத்தில் ஒன்றாக இருக்க முடியாமல் அப்பா ஆறு மாதம், அம்மா ஆறு மாதம் அமெரிக்காவில் பேரக் குழந்தையை பார்த்துக் கொள்வார்கள் என்கிறோம். அப்பாவும் அம்மாவும் இப்படிப் பிரிந்திருக்கலாமா என்று பிள்ளைகள் நினைப்பதில்லை.
இந்த வலைப் பின்னலை உருவாக்கிய அந்த பணம் எனும் சிலந்தி தான் தன் இரையாக இந்த இளைஞர் கூட்டத்தை வளைத்துப் போடுகிறது. இதில் பெண்களும் இருப்பது அவர்களுக்குக் கூடுதலான ஆபத்துகளை உருவாக்கும் என்பதால் அவர்களை அதிகமாக எச்சரிக்க வேண்டியிருக்கிறது.
மற்றபடி பெண்கள் இப்படி போனால். ஆண்கள் வீடியோ எடுக்கத் தான் செய்வார்கள் என்று பேசுகிறவர்கள். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இப்படியே நாம் பேசிக் கொண்டிருந்தால், எங்கோ நடந்து போகிற பெண்ணைத் தூக்கிக் கொண்டு போய் விட்டு அவள் தான் விரும்பி வந்தாள் என்று சொல்லும் குற்றவாளிகளை உருவாக்குவதற்கு தான் நீங்கள் துணை போகிறீர்கள்.
ஏனெனில் எந்தச் சீரழிவும் தனியே நிலவில் இருந்து புவியில் குதிப்பதில்லை. சமூகத்தின் போலிச் சிந்தனையில் தான் குற்றம் நடக்கிறது. அதைத் திருத்தும் சிந்தனையில் தான் அறமும் பிறக்கிறது. ஆண் என்பவன் குற்றங்களின் இருப்பிடம் என்ற தவறான மனப்பான்மையில் இருந்து விடுபட்டு ஆண்கள் பெண்கள் இருவரையும் அறம் நோக்கி வழிநடத்த நமது சிந்தனையில் மாற்றம் ஏற்படுவது தான் இன்றைய தேவையாக இருக்கிறது. அதுதான் இத்தகைய சீரழிவுகளின் ஊற்றுக் கண்ணை மூடும். அறம் செய்ய விரும்பும் மனநிலையை ஏற்படுத்தும்.
அ.அருள்மொழி, வக்கீல், சென்னை உயர்நீதிமன்றம்.
நமது உடம்பிலுள்ள நிணநீர் மண்டலம் நம்மை தொற்று மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதுவே உடலிலுள்ள நச்சுப்பொருள், கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்களை வெளியேற்ற வகை செய்கிறது.
நமது உடம்பிலுள்ள நிணநீர் மண்டலம் (Human Lymphatic System) நம்மை தொற்று மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் நம் உடம்பிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி நம் உடலிலுள்ள திரவ சமநிலையைப் பாதுகாக்கிறது.
நமது நிணநீர் மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்கள் சேர்ந்த வலைப்பின்னல் ஆகும். இதுவே உடலிலுள்ள நச்சுப்பொருள், கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்களை வெளியேற்ற வகை செய்கிறது. இம்மண்டலம் நம் உடலின் நோய் எதிர்ப்புசக்தி செயல்பாட்டிற்கு பெரும் பங்கு வகிக்கிறது. மண்ணீரல் மற்றும் தைமஸ் நிணநீர் மண்டலத்தின் முக்கிய உறுப்புகள் ஆகும்.
மண்ணீரல் ரத்த சுத்திகரிப்பு பணியில் தீவிரமாக செயல்படுகிறது. இது ஆபத்தான பாக்டீரியா, வைரஸ் மற்றும் நுண்ணுயிர்களைக் கண்டுபிடிக்கிறது. உடனே நோய் எதிர்ப்பு தரும் ரத்த உயிரணுக்களான ‘லிம்போசைட்ஸ்’ என்னும் நிணநீர்க் கலங்களை உற்பத்தி செய்கிறது. இது உடலினுள் நுழைந்த நோய் தரும் படையை எதிர்க்கும் பாதுகாவலர்களாக செயல்பட்டு நோய் மேலும் பரவாமல் தடுக்கிறது.
தைமஸ் முதிர்ச்சியடையாத நிணநீர்க் கலங்களை சேமித்து அதை செயல்படும் நிணநீர்க் கலங்களாக தயார் செய்கிறது.
நிணநீர் நாளங்களின் வலைப்பின்னல் நம் உடம்பின் அனைத்துப் பகுதிகளிலும் விநியோகிக்க ஏதுவாய் பரந்துள்ளது. மேலும் இதனுள் தெளிந்த நிறமற்ற நிணநீர் திரவம் ஓடிக்கொண்டிருக்கும். இந்த நிணநீரே நோய் எதிர்கொண்ட பகுதிக்கு நிணநீர் கலங்களைக் கொண்டு செல்லும்.

எப்போது நம் உடலில் பாக்டீரியாக்கள், வைரஸ் உள் நுழை கிறதோ அப்போது இந்த நிணநீர்க்கலங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த நிணநீர்க்கலங்கள் அந்த நுண்ணுயிரிகளைக் கொல்லக்கூடிய எதிர்ப்புப் பொருளான ஆண்டிபாடிஸ் (Antibodies) களை உருவாக்கும். நிணநீர் மண்டலம் உடலின் வேண்டாப் பொருட்களை வெளியேற்றும் வடிகாலாகவும் செயல்படுகிறது.
உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புக்களில் தேங்கியுள்ள, அதிகமாயிருக்கும் வேண்டா திரவப் பொருட்களை சேகரிக்கிறது. பின்னர் அதை ரத்த ஓட்டத்தில் திருப்பி அனுப்புகிறது. இந்த அதிகமுள்ள திரவத்தை நிணநீர் மண்டலம் வெளி யேற்றாதபோது அத்திரவம் உடலினுள் சேர்ந்து ஒரு வீக்கத்தை உருவாக்குகிறது. இதற்கு “நிணநீர் தேக்க வீக்கம்” (Lymphedema) என்பர்.
மேலும் நிணநீர் மண்டலம் உணவு செரிமான மண்டலத்திலுள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பைக் கரைக்கும் வைட்டமின்களையும் உறிஞ்சும் தன்மை பெற்றது. இவ்வாறு உறிஞ்சப்பட்ட ஊட்டச்சத்துப் பொருளை உடலிலுள்ள எந்தெந்தப் பகுதியிலுள்ள செல்களுக்கு சத்து தேவையோ அங்கு வழங்குகிறது.
மேலும் நிணநீர் மண்டலம் உடலுக்குத் தேவையற்ற நச்சு மற்றும் மாசு தரக்கூடிய பொருட்களை உடலில்இருந்து வெளியேற்றவும் உதவுகிறது. உதாரணமாக கார்பன்-டை-ஆக்ஸைடு, சோடியம் மற்றும் அதிகமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமங்களை சுவாசம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் உடலில் இருந்து வெளியேற்றுகிறது.
நவீன ஆராய்ச்சிகளில் மனித மூளையிலும் நிணநீர் நாளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூளையை சுற்றியுள்ள மிகவும் வெளிப்புறத்திலுள்ள ‘டியூரா’ (dura) என்னும் ஜவ்வில் இந் நாளங்கள் உள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிணநீர் நாளங்கள் மூளையின் உட்பகுதியிலுள்ள தனி அறைகளிலிருந்து திரவத்தை எடுப்பதாகவும் அதை நிணநீர் மண்டல உதவியுடன் திரவ வெளியேற்றம் நடப்பதாகவும் கண்டு பிடித்துள்ளனர்.
முனைவர் ராஜன் ராமசுவாமி, சென்னை.
நமது நிணநீர் மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்கள் சேர்ந்த வலைப்பின்னல் ஆகும். இதுவே உடலிலுள்ள நச்சுப்பொருள், கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்களை வெளியேற்ற வகை செய்கிறது. இம்மண்டலம் நம் உடலின் நோய் எதிர்ப்புசக்தி செயல்பாட்டிற்கு பெரும் பங்கு வகிக்கிறது. மண்ணீரல் மற்றும் தைமஸ் நிணநீர் மண்டலத்தின் முக்கிய உறுப்புகள் ஆகும்.
மண்ணீரல் ரத்த சுத்திகரிப்பு பணியில் தீவிரமாக செயல்படுகிறது. இது ஆபத்தான பாக்டீரியா, வைரஸ் மற்றும் நுண்ணுயிர்களைக் கண்டுபிடிக்கிறது. உடனே நோய் எதிர்ப்பு தரும் ரத்த உயிரணுக்களான ‘லிம்போசைட்ஸ்’ என்னும் நிணநீர்க் கலங்களை உற்பத்தி செய்கிறது. இது உடலினுள் நுழைந்த நோய் தரும் படையை எதிர்க்கும் பாதுகாவலர்களாக செயல்பட்டு நோய் மேலும் பரவாமல் தடுக்கிறது.
தைமஸ் முதிர்ச்சியடையாத நிணநீர்க் கலங்களை சேமித்து அதை செயல்படும் நிணநீர்க் கலங்களாக தயார் செய்கிறது.
நிணநீர் நாளங்களின் வலைப்பின்னல் நம் உடம்பின் அனைத்துப் பகுதிகளிலும் விநியோகிக்க ஏதுவாய் பரந்துள்ளது. மேலும் இதனுள் தெளிந்த நிறமற்ற நிணநீர் திரவம் ஓடிக்கொண்டிருக்கும். இந்த நிணநீரே நோய் எதிர்கொண்ட பகுதிக்கு நிணநீர் கலங்களைக் கொண்டு செல்லும்.

எப்போது நம் உடலில் பாக்டீரியாக்கள், வைரஸ் உள் நுழை கிறதோ அப்போது இந்த நிணநீர்க்கலங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த நிணநீர்க்கலங்கள் அந்த நுண்ணுயிரிகளைக் கொல்லக்கூடிய எதிர்ப்புப் பொருளான ஆண்டிபாடிஸ் (Antibodies) களை உருவாக்கும். நிணநீர் மண்டலம் உடலின் வேண்டாப் பொருட்களை வெளியேற்றும் வடிகாலாகவும் செயல்படுகிறது.
உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புக்களில் தேங்கியுள்ள, அதிகமாயிருக்கும் வேண்டா திரவப் பொருட்களை சேகரிக்கிறது. பின்னர் அதை ரத்த ஓட்டத்தில் திருப்பி அனுப்புகிறது. இந்த அதிகமுள்ள திரவத்தை நிணநீர் மண்டலம் வெளி யேற்றாதபோது அத்திரவம் உடலினுள் சேர்ந்து ஒரு வீக்கத்தை உருவாக்குகிறது. இதற்கு “நிணநீர் தேக்க வீக்கம்” (Lymphedema) என்பர்.
மேலும் நிணநீர் மண்டலம் உணவு செரிமான மண்டலத்திலுள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பைக் கரைக்கும் வைட்டமின்களையும் உறிஞ்சும் தன்மை பெற்றது. இவ்வாறு உறிஞ்சப்பட்ட ஊட்டச்சத்துப் பொருளை உடலிலுள்ள எந்தெந்தப் பகுதியிலுள்ள செல்களுக்கு சத்து தேவையோ அங்கு வழங்குகிறது.
மேலும் நிணநீர் மண்டலம் உடலுக்குத் தேவையற்ற நச்சு மற்றும் மாசு தரக்கூடிய பொருட்களை உடலில்இருந்து வெளியேற்றவும் உதவுகிறது. உதாரணமாக கார்பன்-டை-ஆக்ஸைடு, சோடியம் மற்றும் அதிகமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமங்களை சுவாசம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் உடலில் இருந்து வெளியேற்றுகிறது.
நவீன ஆராய்ச்சிகளில் மனித மூளையிலும் நிணநீர் நாளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூளையை சுற்றியுள்ள மிகவும் வெளிப்புறத்திலுள்ள ‘டியூரா’ (dura) என்னும் ஜவ்வில் இந் நாளங்கள் உள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிணநீர் நாளங்கள் மூளையின் உட்பகுதியிலுள்ள தனி அறைகளிலிருந்து திரவத்தை எடுப்பதாகவும் அதை நிணநீர் மண்டல உதவியுடன் திரவ வெளியேற்றம் நடப்பதாகவும் கண்டு பிடித்துள்ளனர்.
முனைவர் ராஜன் ராமசுவாமி, சென்னை.
நாம் வீணாக்கும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் நம் அடுத்ததலைமுறை பிள்ளைகளுக்கு நாம் மறுக்கும் வாய்ப்பு என்பதை மறவாதிருப்போம்.
ஒருகுடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்துச்சாம் என்று சிறுவர்களால் பூத்துக் குலுங்கிய தெருக்கள் இன்று தண்ணீர் லாரிகளுக்காகத் தவமிருந்து கொண்டிருக்கின்றன.
நம் உடல் 75 சதவீதம் நீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. தாயின் தண்ணீர்க் குடத்தில் மிதந்து பிறந்து பொத்தல் செய்யப்பட்ட நீர் நிறைந்த மண்குடத்தோடு நம் வாழ்வை முடிக்கிறோம். உலகம் 97 சதவீதம் உப்பு நீர் நிறைந்த கடலால் சூழப்பட்டிருக்கிறது. 2 சதவீதம் தண்ணீர் உறைபனிப்பாறைகளுக்குள் பனிக்கட்டியாக உறைந்து கிடக்கிறது. எஞ்சிய ஒரு சதவீதம் நல்ல தண்ணீரைத் தான் இந்த உலகில் வாழும் கோடிக் கணக்கான மக்கள் குடி தண்ணீராகப் பயன்படுத்துகின்றனர்.
முன்பு ஆடி பதினெட்டு எனும் பதினெட்டாம் பெருக்கு வந்தால் ஆறுவகை அன்னங்களோடு ஆறு, அருவி போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று வயிறார உணவு உண்டு அந்தத் தண்ணீரை இருகைகளால் அள்ளிப்பருகி வீட்டிற்கு வருவோம். இன்று அப்படிச் செய்ய முடியுமா? இருபது ஆண்டுகளுக்குள் குடிதண்ணீரைப் பெரும் லாபம் தரும் விற்பனைப் பொருளாக மாற்றியது யார்? அறிவியலில் முன்னேறிவிட்டோம் என்று நாம் ஒருபுறம் சொல்லிக்கொண்டிருக்க குடிதண்ணீருக்காக மக்கள் பல மைல்தூரம் தலையிலும் கையிலும் குடங்களோடு நடப்பதைக் காண்கிறோம்.
நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 500 அடியைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது. உணவு உண்டுவிட்டு நாம் கைகழுவும்போது திறக்கப்படும் தண்ணீர் குழாய்களால் ஒவ்வொரு முறையும் இரண்டு லிட்டர் நன்னீர் வீணாகிறது. வெஸ்டர்ன் கழிவறைகளால் ஒவ்வொரு முறையும் பத்துலிட்டர் நீர் கழிவுத்தொட்டிக்கு வீணாகச் சென்று சேர்கிறது. துணிதுவைப்பு எந்திரம் ஒவ்வொரு முறையும் இருபது லிட்டர் தண்ணீரைச் சோப்புக் கழிவுடன் வெளியேற்றுகிறது.
சரிவரப் பராமரிக்காத தண்ணீர் குழாய்களிலிருந்து சொட்டும் தண்ணீர் ஒருநாளைக்கு ஒரு வாளி வீணாகிறது. கவனமில்லாமல் தண்ணீர் மோட்டரை இயக்குவதன் காரணமாக ஒவ்வொரு வீட்டிலும் ஒருமுறைக்கு முப்பது லிட்டர் தண்ணீர் தரையில் கொட்டி வீணாகிக்கொண்டிருக்கிறது. முன்பு வாளியில் தண்ணீர் நிரப்பி பாத்திரங்களைக் கழுவிய நாம் தண்ணீர் குழாய்களை அருவியாய் திறந்துவிட்டு பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கிறோம். குளியலறை ஷவர்களால் ஒவ்வொரு முறையும் நான்குவாளி தண்ணீர் வீணாகிறது.
நாம் வீணாக்கும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் நம் அடுத்ததலைமுறை பிள்ளைகளுக்கு நாம் மறுக்கும் வாய்ப்பு என்பதை மறவாதிருப்போம். தமிழகத்து நதிகள் யாவும் வறண்டு ஒருதுளி நீரின்றி வற்றிக்கிடக்க இந்த சுட்டெரிக்கும் கோடையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி உற்பத்தியாகும் பாபநாசம் பொதிகை மலையின் காரையார் எனும் மலைப்பகுதிக்குச் சென்றபோது பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணித் தண்ணீரை வாகனங்களைக் கழுவியும் உண்ட உணவுப்பொருட்களின் மீதத்தை நதியில் கொட்டியும் சோப்புபோட்டு துணிகளைத் துவைப்பதையும் காணமுடிந்தது.
மின்சாரத்திற்கு மீட்டர் வைத்து செலவழித்த அளவுக்கு மின்கட்டணம் செலுத்துவதுபோல் ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் நாம் பணம் செலுத்திப் பயன்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது.
எல்லாப் பயணங்களும் ஒரு தனிமனிதனின் காலடித் தொடக்கத்திலிருந்துதான் தொடங்குகிறது. சமுதாயம் மாற முதலில் நாம் மாறவேண்டும், சிறுதுளிதான் பெரு வெள்ளமாகிறது. ஊர்கூடினால் தண்ணீரைப் பெருமளவு சேமித்து விடமுடியும். கர்மவீரர் காமராஜர் செய்ததுபோல் தமிழக ஆறுகளில் மழைக்காலத்தில் பெருகி வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை புதிய அணைகள்கட்டி சேமித்து மக்களுக்குத் தேவையான காலங்களில் வழங்கவேண்டும். நாம் வீணாக்காமல் சேமிக்கும் ஒவ்வொரு துளி தண்ணீரும் அடுத்ததலைமுறைக்கு நாம் தரும் சொத்து என்பதை உணர்வோம்.
முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி.
சப்பாத்தி, நாண், சாம்பார் சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை பட்டாணி பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
முட்டை - 4
பட்டாணி - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகுப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
பட்டாணியை உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வெந்தும் தக்காளி, மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.
முட்டை - 4
பட்டாணி - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகுப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
பட்டாணியை உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வெந்தும் தக்காளி, மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான முட்டை, பட்டாணி பொரியல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






