என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
காலையில் சாலட் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இன்று சத்தான தக்காளி ஆலிவ் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தக்காளி - 2
வெள்ளரிக்காய் - 1
பிளாக் ஆலிவ் - 6
வெங்காயம் - 2
உப்பு - சுவைக்க
மிளகு தூள் - சுவைக்க
துளசி இலை - 3-4

செய்முறை :
வெங்காயம், பிளாக் ஆலிவ், தக்காளியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
துளசி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பிளாக் ஆலிவ், வெள்ளரிக்காய், தக்காளியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகு தூள், பால்சமிக் வினிகர் (Balsamic vinegar) சேர்த்து நன்றாக கலந்து துளசி இலை தூவி பரிமாறவும்.
தக்காளி - 2
வெள்ளரிக்காய் - 1
பிளாக் ஆலிவ் - 6
வெங்காயம் - 2
உப்பு - சுவைக்க
மிளகு தூள் - சுவைக்க
துளசி இலை - 3-4
பால்சமிக் வினிகர்(Balsamic vinegar) - 2 மேஜைக்கரண்டி

செய்முறை :
வெங்காயம், பிளாக் ஆலிவ், தக்காளியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
துளசி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பிளாக் ஆலிவ், வெள்ளரிக்காய், தக்காளியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகு தூள், பால்சமிக் வினிகர் (Balsamic vinegar) சேர்த்து நன்றாக கலந்து துளசி இலை தூவி பரிமாறவும்.
சூப்பரான சத்தான சத்தான தக்காளி ஆலிவ் சாலட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இ.பி.எப் சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து பிளாட் வாங்குவதற்கு அல்லது மனையில் வீடு கட்டுவதற்கான தவணைத்தொகை செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.
வீடு மற்றும் வீட்டுமனை வாங்க ஊழியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து 90 சதவிகித தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற திட்டம் சொந்த வீட்டு கனவில் உள்ள பலருக்கும் பயனளிப்பதாக உள்ளது. அதாவது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், மத்திய அரசின் விதிமுறைகளின்கீழ் அவர்களது இ.பி.எப் சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து பிளாட் வாங்குவதற்கு அல்லது மனையில் வீடு கட்டுவதற்கான தவணைத்தொகை செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.
மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின் மூலம் 2022-ல் அனைவருக்கும் வீடு என்ற பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் 4 கோடி இ.பி.எப் உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே பதிவு செய்யப்பட்ட ஒரு கூட்டுறவு சங்கம் முலமாகவோ அல்லது இ.பி.எப் உறுப்பினர்கள் தாங்களாகவே தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கம் மூலமாகவோ அவர்களது சேமிப்பிலிருந்தே சொந்த வீடு வாங்கலாம் அல்லது வீட்டின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.
வீட்டுமனை திட்டத்தில் அல்லது வீட்டு கட்டுமான திட்டத்தில் பதிவு பெற்ற ஒரு கூட்டுறவு சங்கம் மூலம் வாங்கும்போது அதில் இ.பி.எப் கணக்கு வைத்துள்ள 9 நபர்களாவது வீடு வாங்கும் உறுப்பினரோடு இணைந்து வாங்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச பயன்பாடு
இதற்கு முன்னதாக 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்கள் அவர்களது 36 மாத சம்பளத்துக்கு (பேசிக் மற்றும் டி.ஏ சேர்ந்த தொகை) இணையான தொகையை பி.எப் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சமீபத்திய அறிவிப்பில் இ.பி.எப் திட்டத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சேமிப்பு செய்து வந்த உறுப்பினர்கள் சொந்த வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்காக 90 சதவிகித தொகையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், கடன் தொகையை முழுவதுமாகவோ அல்லது பகுதி அளவிலோ திருப்பி செலுத்துவதற்காக அவர்களது மாதாந்திர பி.எப் தொகையை பயன்படுத்திக்கொள்ளும் விருப்பத் தேர்வு அனுமதியும் அளிக்கப்படுவதாக இ.பி.எப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடு
குறிப்பாக, வீட்டு மனைகள் வாங்குவதற்கு அல்லது சொந்த வீடு கட்டுவதற்கு இ.பி.எப்.ஓ அலுவலகம் நேரடியாக தொகையை இ.பி.எப் உறுப்பினர்களிடம் தராது. அதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கம், ஹவுசிங் ஏஜென்சி அல்லது சம்பந்தப்பட்ட பில்டர் ஆகியவர்களிடம் மட்டுமே வீடு அல்லது வீட்டு மனைக்கான தொகை தரப்படும்.
அவ்வாறு அளிக்கப்பட்ட பணம் மூலம் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வீடுகளின் கட்டுமான பணிகள் முடிக்கப்படவில்லை அல்லது குறிப்பிட்ட வீட்டு மனை ஒதுக்கப்படவில்லை என்ற நிலை ஏற்படலாம்.
அந்த நிலையில் இ.பி.எப் சேமிப்பிலிருந்து பெறப்பட்ட தொகையை மீண்டும் உறுப்பினர் கணக்கில் 15 நாட்களுக்குள் டெபாசிட் செய்யப்படுவதை அவர்கள் உறுதி செய்ய உரிமை பெற்றவர்கள் ஆவார்கள் என்றும் இ.பி.எப் தலைமை அலுவலக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின் மூலம் 2022-ல் அனைவருக்கும் வீடு என்ற பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் 4 கோடி இ.பி.எப் உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே பதிவு செய்யப்பட்ட ஒரு கூட்டுறவு சங்கம் முலமாகவோ அல்லது இ.பி.எப் உறுப்பினர்கள் தாங்களாகவே தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கம் மூலமாகவோ அவர்களது சேமிப்பிலிருந்தே சொந்த வீடு வாங்கலாம் அல்லது வீட்டின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.
வீட்டுமனை திட்டத்தில் அல்லது வீட்டு கட்டுமான திட்டத்தில் பதிவு பெற்ற ஒரு கூட்டுறவு சங்கம் மூலம் வாங்கும்போது அதில் இ.பி.எப் கணக்கு வைத்துள்ள 9 நபர்களாவது வீடு வாங்கும் உறுப்பினரோடு இணைந்து வாங்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச பயன்பாடு
இதற்கு முன்னதாக 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்கள் அவர்களது 36 மாத சம்பளத்துக்கு (பேசிக் மற்றும் டி.ஏ சேர்ந்த தொகை) இணையான தொகையை பி.எப் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சமீபத்திய அறிவிப்பில் இ.பி.எப் திட்டத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சேமிப்பு செய்து வந்த உறுப்பினர்கள் சொந்த வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்காக 90 சதவிகித தொகையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், கடன் தொகையை முழுவதுமாகவோ அல்லது பகுதி அளவிலோ திருப்பி செலுத்துவதற்காக அவர்களது மாதாந்திர பி.எப் தொகையை பயன்படுத்திக்கொள்ளும் விருப்பத் தேர்வு அனுமதியும் அளிக்கப்படுவதாக இ.பி.எப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடு
குறிப்பாக, வீட்டு மனைகள் வாங்குவதற்கு அல்லது சொந்த வீடு கட்டுவதற்கு இ.பி.எப்.ஓ அலுவலகம் நேரடியாக தொகையை இ.பி.எப் உறுப்பினர்களிடம் தராது. அதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கம், ஹவுசிங் ஏஜென்சி அல்லது சம்பந்தப்பட்ட பில்டர் ஆகியவர்களிடம் மட்டுமே வீடு அல்லது வீட்டு மனைக்கான தொகை தரப்படும்.
அவ்வாறு அளிக்கப்பட்ட பணம் மூலம் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வீடுகளின் கட்டுமான பணிகள் முடிக்கப்படவில்லை அல்லது குறிப்பிட்ட வீட்டு மனை ஒதுக்கப்படவில்லை என்ற நிலை ஏற்படலாம்.
அந்த நிலையில் இ.பி.எப் சேமிப்பிலிருந்து பெறப்பட்ட தொகையை மீண்டும் உறுப்பினர் கணக்கில் 15 நாட்களுக்குள் டெபாசிட் செய்யப்படுவதை அவர்கள் உறுதி செய்ய உரிமை பெற்றவர்கள் ஆவார்கள் என்றும் இ.பி.எப் தலைமை அலுவலக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும்.
பெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் ஒரு விஷயம் அழகு. அதிலும் முக அழகுக்கு ரொம்ப அதிகமாகவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். முகத்தில் சின்னப் பரு வந்துவிட்டாலே வருத்தப்படுவார்கள். அழகை பெரிய அளவில் பாதிக்கும் வேறு ஏதாவது பிரச்சினை என்றால் சொல்லவே வேண்டாம், உடைந்து போய் விடுவார்கள். முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும்.
நம் மூளையில் இருந்து முகத்திற்கு செல்லும் 12 நரம்புகளில் முகத்தசைகளுக்குச் செல்லும் 7-வது நரம்பு பாதிக்கும்போது இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினை ஏற்பட்டவர்களுக்கு எந்த பக்கத்து நரம்பு பாதிக்கப்படுகிறதோ அந்தப் பக்க தசைகள் செயல்படாது. இதனால் ஒரு பக்கம் கண் திறந்தே இருக்கும். சிரிக்கும் போது வாய் ஒரு பக்கம் கோணலாக போகும். காரணம், சிரிப்பின்போது வாய்க்கு இரண்டு பக்கமும் உள்ள தசைகளும் விரிய வேண்டும். ஆனால் ஒரு பக்கம் உள்ள நரம்பு பாதிக்கப்படும் போது அந்த பக்கம் உள்ள முகத்தசைகள் செயல்படாது.
இதனால் சிரிக்கும்போது ஒரு பக்கம் மட்டும் முகத்தசைகள் விரிவடையும். இன்னொரு பக்கம் அப்படியே இருக்கும். அதனால் சிரித்தால் முகம் கோணலாக இருக்கும். இந்தப் பிரச்சினை சில சமயம் கடுமையான வியாதிகளாலும் வரலாம். அல்லது சாதாரணமாகவும் வரலாம். சாதாரணமாக, இந்தப் பிரச்சினை ஏற்படும்போது இதனை முழுவதுமாக சரி செய்துவிட முடியும். அதற்கு சரியான வைத்தியமும், முகத்திற்கான பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். முறையாக இவ்விரண்டையும் செய்யும்போது குறைந்தபட்சம் இரண்டு வாரத்தில் இந்தப் பிரச்சினையை சரி செய்துவிட முடியும்.
பெலெப்ரோபசம் என்பதும் ஒரு நரம்பு வியாதி தான். சிலருக்கு ஒரு பக்கம் முகம் சுருங்கி கண் அடித்து, பின் முகம் விரியும். கண்ணடிப்பது போல் ஒரு கண் அடித்துக்கொண்டே இருக்கும். பொதுவாக ஏற்படும் பிரச்சினை இது. இவர்களுக்குக் குறிப்பாக அதிக டென்சன் ஏற்படும் போதோ, கூட்டத்தில் இருக்கும்போதோ தொடர்ச்சியாக இது போல் வரும். தூக்கத்தில் வராது. இதற்கும் மருத்துவம் இருக்கிறது.
முழுவதுமாக குணப்படுத்தமுடியாவிட்டாலும் இதனை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இது உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. எனினும் இந்த வியாதி அதிக அளவில் பாதிக்கும்போது கண்கள் பாதிக்கப்படும். அதனால் சிலருக்கு அன்றாட வாழ்வே பிரச்சினையாகத்தான் இருக்கும். உதாரணமாக கார் ஓட்டுதல், படித்தல், சமைத்தல் என்பது போன்ற பல வேலைகளை செய்தல் மிகச் சிரமமான ஒன்றாக இருக்கும். எனவே நரம்புகளை பாதிக்கும் விஷயங்களை நாம் தவிர்த்து விட்டாலே இது போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.
நம் மூளையில் இருந்து முகத்திற்கு செல்லும் 12 நரம்புகளில் முகத்தசைகளுக்குச் செல்லும் 7-வது நரம்பு பாதிக்கும்போது இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினை ஏற்பட்டவர்களுக்கு எந்த பக்கத்து நரம்பு பாதிக்கப்படுகிறதோ அந்தப் பக்க தசைகள் செயல்படாது. இதனால் ஒரு பக்கம் கண் திறந்தே இருக்கும். சிரிக்கும் போது வாய் ஒரு பக்கம் கோணலாக போகும். காரணம், சிரிப்பின்போது வாய்க்கு இரண்டு பக்கமும் உள்ள தசைகளும் விரிய வேண்டும். ஆனால் ஒரு பக்கம் உள்ள நரம்பு பாதிக்கப்படும் போது அந்த பக்கம் உள்ள முகத்தசைகள் செயல்படாது.
இதனால் சிரிக்கும்போது ஒரு பக்கம் மட்டும் முகத்தசைகள் விரிவடையும். இன்னொரு பக்கம் அப்படியே இருக்கும். அதனால் சிரித்தால் முகம் கோணலாக இருக்கும். இந்தப் பிரச்சினை சில சமயம் கடுமையான வியாதிகளாலும் வரலாம். அல்லது சாதாரணமாகவும் வரலாம். சாதாரணமாக, இந்தப் பிரச்சினை ஏற்படும்போது இதனை முழுவதுமாக சரி செய்துவிட முடியும். அதற்கு சரியான வைத்தியமும், முகத்திற்கான பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். முறையாக இவ்விரண்டையும் செய்யும்போது குறைந்தபட்சம் இரண்டு வாரத்தில் இந்தப் பிரச்சினையை சரி செய்துவிட முடியும்.
பெலெப்ரோபசம் என்பதும் ஒரு நரம்பு வியாதி தான். சிலருக்கு ஒரு பக்கம் முகம் சுருங்கி கண் அடித்து, பின் முகம் விரியும். கண்ணடிப்பது போல் ஒரு கண் அடித்துக்கொண்டே இருக்கும். பொதுவாக ஏற்படும் பிரச்சினை இது. இவர்களுக்குக் குறிப்பாக அதிக டென்சன் ஏற்படும் போதோ, கூட்டத்தில் இருக்கும்போதோ தொடர்ச்சியாக இது போல் வரும். தூக்கத்தில் வராது. இதற்கும் மருத்துவம் இருக்கிறது.
முழுவதுமாக குணப்படுத்தமுடியாவிட்டாலும் இதனை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இது உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. எனினும் இந்த வியாதி அதிக அளவில் பாதிக்கும்போது கண்கள் பாதிக்கப்படும். அதனால் சிலருக்கு அன்றாட வாழ்வே பிரச்சினையாகத்தான் இருக்கும். உதாரணமாக கார் ஓட்டுதல், படித்தல், சமைத்தல் என்பது போன்ற பல வேலைகளை செய்தல் மிகச் சிரமமான ஒன்றாக இருக்கும். எனவே நரம்புகளை பாதிக்கும் விஷயங்களை நாம் தவிர்த்து விட்டாலே இது போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.
மூக்கில் ரத்த ஒழுக்கு பொதுவாக பலருக்கும் ஏற்படுகிறது. இது ஏன் ஏற்படுகிறது, எப்படி நிறுத்துவது? என்பதில் பிரச்சினையும் மருத்துவமும் இணைந்தே காணப்படுகிறது.
மூக்கில் ரத்த ஒழுக்கு பொதுவாக பலருக்கும் ஏற்படுகிறது. இது அதிகம் தொல்லை கொடுக்கக் கூடியதெனினும் இது மிகப்பெரிய மருத்துவப் பிரச்சினை அல்ல. ஆனால், இது ஏன் ஏற்படுகிறது, எப்படி நிறுத்துவது? என்பதில் பிரச்சினையும் மருத்துவமும் இணைந்தே காணப்படுகிறது.
குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் மூக்கினுள் உள்ள நடுச்சுவரில் ரத்தக்கசிவு ஆரம்பமாகிறது. இந்த நடுச்சுவரே உங்கள் மூக்குக் குழியினை இரண்டாகப் பிரிக்கிறது. நடு வயதினருக்கும் வயதானவர்களுக்கும் நடுச்சுவரில் ரத்தக்கசிவு ஏற்படுவதுடன், உள் மூக்கிலும் ரத்தக்கசிவு ஏற்படலாம். ஆனால், இவ்வகை ரத்தக்கசிவுகள் அரிதானவையே. இவை தடித்த ரத்த நாளங்களாலும் ரத்த மிகை அழுத்தத்தாலும் ஏற்படலாம்.
சில சமயம் மூக்கில் ரத்த ஒழுக்கு தானாக ஏற்படுகிறது. இதனை நிறுத்துவது மிகவும் சிரமமான காரியமாகும். இதற்கு மருத்துவரின் உதவி தேவைப்படும். மூக்கில் ரத்த ஒழுக்கு ஏற்பட்டவுடன் உட்கார்ந்து விடுங்கள். இது மூக்கு உறுப்புகளில் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன் ரத்தம் வெளியேறுவதையும் குறைக்கும். மூக்கைப் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலால் அமுக்கிப் பிடித்துக் கொண்டு, வாயால் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் சுவாசிக்க வேண்டும். இது நடுச்சுவரில் அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்த வெளியேற்றத்தை நிறுத்தும்.

மீண்டும் ரத்தப்போக்கு இருப்பின் மேலே கூறியபடி மீண்டும் மூக்கை அழுத்திப் பிடித்து வாயால் சுவாசிப்பதுடன் மருத்துவ உதவியை நாடவும். 15 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் ரத்தக்கசிவு நீடித்தாலோ, பாதிப்புக்குள்ளானவர் தளர்வாகவோ மயக்கம் வருவதுபோல உணர்ந்தாலோ மருத்துவ உதவி அவசியம். அடிக்கடி மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் மருத்துவரை அணுகி என்ன காரணம் எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒருவருக்கு அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் கொட்டினால் நாசித் துவாரங்களினுள் தினமும் உப்பு நீரை முகரவும். ஆரஞ்சு, தக்காளி போன்ற (வைட்டமின் சி அடங்கிய) பழங்களைச் சாப்பிடுவது நல்லது. குழந்தைகளுக்கு அடிக்கடி மூக்கில் ரத்தக்கசிவு ஏற்படுவது ஆபத்தில்லா கட்டிகளின் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.
இது பெண்களைக் காட்டிலும் பருவ வயது ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. பருவ வயதை தாண்டியதும் இது தானாக சரியாகிவிடும். ஆனால், சிலருக்குக் கட்டிகள் வளர்ந்து மூக்குத் துவாரத்தையும், சுவாசப் பாதையையும் அடைத்து வேறு அறிகுறிகளையும், ரத்த ஒழுக்கையும் ஏற்படுத்தலாம். மூக்கில் ஏற்படும் கட்டிகள் தானாக சுருங்காதபோது மருத்துவரை அணுகவும். அவர் அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றுவார்.
குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் மூக்கினுள் உள்ள நடுச்சுவரில் ரத்தக்கசிவு ஆரம்பமாகிறது. இந்த நடுச்சுவரே உங்கள் மூக்குக் குழியினை இரண்டாகப் பிரிக்கிறது. நடு வயதினருக்கும் வயதானவர்களுக்கும் நடுச்சுவரில் ரத்தக்கசிவு ஏற்படுவதுடன், உள் மூக்கிலும் ரத்தக்கசிவு ஏற்படலாம். ஆனால், இவ்வகை ரத்தக்கசிவுகள் அரிதானவையே. இவை தடித்த ரத்த நாளங்களாலும் ரத்த மிகை அழுத்தத்தாலும் ஏற்படலாம்.
சில சமயம் மூக்கில் ரத்த ஒழுக்கு தானாக ஏற்படுகிறது. இதனை நிறுத்துவது மிகவும் சிரமமான காரியமாகும். இதற்கு மருத்துவரின் உதவி தேவைப்படும். மூக்கில் ரத்த ஒழுக்கு ஏற்பட்டவுடன் உட்கார்ந்து விடுங்கள். இது மூக்கு உறுப்புகளில் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன் ரத்தம் வெளியேறுவதையும் குறைக்கும். மூக்கைப் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலால் அமுக்கிப் பிடித்துக் கொண்டு, வாயால் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் சுவாசிக்க வேண்டும். இது நடுச்சுவரில் அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்த வெளியேற்றத்தை நிறுத்தும்.
சுவாசிக்கும் காற்றில் ஈரப்பதம் அதிகம் உள்ளவாறு பார்த்துக் கொள்வது, மூக்கின் சளிச்சவ்வுப் படலத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள பயன்படும். ஒருமுறை மூக்கில் ரத்த ஒழுக்கு ஏற்பட்டு நின்ற பிறகு, மூக்கைக் குடைவது, சீந்துவது போன்ற வேலைகளைச் செய்யக் கூடாது. சில மணி நேரங்களுக்கு குனியக்கூடாது. இதயத்தைவிட தலையை உயரமாக வைத்துக் கொள்ளவும். மீண்டும் ரத்த ஒழுக்கு ஏற்பட்டால், அழுத்தமாக மூக்கை உள்புறமாக உறிஞ்சுவதால் உள்ளே ரத்த உறைவு கட்டிகள் நீங்கிவிடும்.

மீண்டும் ரத்தப்போக்கு இருப்பின் மேலே கூறியபடி மீண்டும் மூக்கை அழுத்திப் பிடித்து வாயால் சுவாசிப்பதுடன் மருத்துவ உதவியை நாடவும். 15 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் ரத்தக்கசிவு நீடித்தாலோ, பாதிப்புக்குள்ளானவர் தளர்வாகவோ மயக்கம் வருவதுபோல உணர்ந்தாலோ மருத்துவ உதவி அவசியம். அடிக்கடி மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் மருத்துவரை அணுகி என்ன காரணம் எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒருவருக்கு அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் கொட்டினால் நாசித் துவாரங்களினுள் தினமும் உப்பு நீரை முகரவும். ஆரஞ்சு, தக்காளி போன்ற (வைட்டமின் சி அடங்கிய) பழங்களைச் சாப்பிடுவது நல்லது. குழந்தைகளுக்கு அடிக்கடி மூக்கில் ரத்தக்கசிவு ஏற்படுவது ஆபத்தில்லா கட்டிகளின் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.
இது பெண்களைக் காட்டிலும் பருவ வயது ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. பருவ வயதை தாண்டியதும் இது தானாக சரியாகிவிடும். ஆனால், சிலருக்குக் கட்டிகள் வளர்ந்து மூக்குத் துவாரத்தையும், சுவாசப் பாதையையும் அடைத்து வேறு அறிகுறிகளையும், ரத்த ஒழுக்கையும் ஏற்படுத்தலாம். மூக்கில் ஏற்படும் கட்டிகள் தானாக சுருங்காதபோது மருத்துவரை அணுகவும். அவர் அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றுவார்.
லஸ்ஸியில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் கோடையில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தைக் கொண்டும் லஸ்ஸி செய்யலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தயிர் - 2 கப்
நறுக்கிய மாம்பழம் - 2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
பிஸ்தா - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
குங்குமப்பூ - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் பிளெண்டர் அல்லது மிக்ஸியில் நறுக்கிய மாம்பழத் துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தயிர், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு 1 நிமிடம் அடித்துக் கொள்ள வேண்டும்.
தயிர் - 2 கப்
நறுக்கிய மாம்பழம் - 2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
பிஸ்தா - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
குங்குமப்பூ - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் பிளெண்டர் அல்லது மிக்ஸியில் நறுக்கிய மாம்பழத் துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தயிர், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு 1 நிமிடம் அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை டம்ளரில் ஊற்றி, அதன் மேல் பிஸ்தா தூவி பரிமாறினால், சுவையான மாம்பழ லஸ்ஸி ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது.
நமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும் கொண்டு உள்ளது. பொட்டாசியம், சுண்ணாம்பு சத்துகளும் அடங்கி உள்ளன. தமிழ்நாட்டில் மோதகம், கொழுக்கட்டை, லட்டு, பாயாசம், கஞ்சி, சாம்பார் போன்றவை செய்ய பச்சை பயிறை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
உடல் எடை குறைக்க:
உடல் எடையை குறைப்பதில் பச்சை பயிறு பிரதான பங்கு வகிக்கிறது. இது அதிக அளவு பசியைத் தாங்கும் சக்தி கொண்டது. எனவே குண்டானவர்கள் சிறுபயிறை ஒரு நேர உணவாக பயன்படுத்தலாம். அதனை சாப்பிடுவதால் நொறுக்குத்தீனி தின்பது குறையும். இதனால் அவர்களது உடல் எடை படிப்படியாக குறையும்.
ரத்தசோகையை தடுக்க:
பச்சை பயிறு ரத்தசோகையையும் தடுக்க வல்லது. இதனை முளைக்கட்டி சாப்பிடும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும். இதனால் ரத்த சோகை வராமல் காக்கும்.
சிறுபயிறை 8 மணி நேரம் ஊறவைத்து பின் அதனை வெள்ளை துணியில் கட்டி வைக்க வேண்டும். இடையிடையே சிறிதளவு தண்ணீர் தெளிக்க வேண்டும். 8 அல்லது 10 மணி நேரம் கழித்து பார்த்தால் நன்றாக முளைவிட்டிருக்கும். அதை காலையில் ஒருவேளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் அதிகரிக்க:
முளைகட்டிய பாசிப்பயிறு - 1 கைப்பிடி
சர்க்கரை, ஏலக்காய் - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1/2 கைப்பிடி
பயிறு, தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றை நன்கு அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டுவர பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
வயிற்றுப்புண் குணமாக:
வயிற்றுப்புண்ணை குணப்படுத்துவதில் பாசிப்பயிறு மகத்தானது. இது காரத்தன்மையை கட்டுப்படுத்தும். அதனால்தான் அல்சர் ஏற்பட்டவர்களுக்கு பாசிப்பயிறு குழம்பு வைத்து கொடுப்பார்கள். அதுபோல் கூடுதலான இனிப்பு தன்மையையும் குறைக்கும். பாயாசம் திகட்டாமல் இருப்பதற்காக பாசிப்பருப்பைதான் சேர்ப்பார்கள்.
உடல் எடை குறைக்க:
உடல் எடையை குறைப்பதில் பச்சை பயிறு பிரதான பங்கு வகிக்கிறது. இது அதிக அளவு பசியைத் தாங்கும் சக்தி கொண்டது. எனவே குண்டானவர்கள் சிறுபயிறை ஒரு நேர உணவாக பயன்படுத்தலாம். அதனை சாப்பிடுவதால் நொறுக்குத்தீனி தின்பது குறையும். இதனால் அவர்களது உடல் எடை படிப்படியாக குறையும்.
ரத்தசோகையை தடுக்க:
பச்சை பயிறு ரத்தசோகையையும் தடுக்க வல்லது. இதனை முளைக்கட்டி சாப்பிடும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும். இதனால் ரத்த சோகை வராமல் காக்கும்.
சிறுபயிறை 8 மணி நேரம் ஊறவைத்து பின் அதனை வெள்ளை துணியில் கட்டி வைக்க வேண்டும். இடையிடையே சிறிதளவு தண்ணீர் தெளிக்க வேண்டும். 8 அல்லது 10 மணி நேரம் கழித்து பார்த்தால் நன்றாக முளைவிட்டிருக்கும். அதை காலையில் ஒருவேளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் அதிகரிக்க:
முளைகட்டிய பாசிப்பயிறு - 1 கைப்பிடி
சர்க்கரை, ஏலக்காய் - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1/2 கைப்பிடி
பயிறு, தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றை நன்கு அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டுவர பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
வயிற்றுப்புண் குணமாக:
வயிற்றுப்புண்ணை குணப்படுத்துவதில் பாசிப்பயிறு மகத்தானது. இது காரத்தன்மையை கட்டுப்படுத்தும். அதனால்தான் அல்சர் ஏற்பட்டவர்களுக்கு பாசிப்பயிறு குழம்பு வைத்து கொடுப்பார்கள். அதுபோல் கூடுதலான இனிப்பு தன்மையையும் குறைக்கும். பாயாசம் திகட்டாமல் இருப்பதற்காக பாசிப்பருப்பைதான் சேர்ப்பார்கள்.
கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம்.
யூட்ரஸ் கேன்சர் அல்லது கருப்பை புற்றுநோய் என்பது கருப்பையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியைக் குறிக்கிறது, இதன் விளைவாகக் கருப்பை புற்றுநோய் உருவாகிறது. கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்படும். கருப்பை புற்றுநோய் இருந்தால் பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அசாதாரண எடை இழப்பும் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறி.
இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வர முடியும். ஆனால் பெரும்பாலும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களைக் கருப்பை புற்றுநோய் தாக்குகிறது. வல்லுநர்கள் இந்த நோய்க்கான சரியான காரணங்களை இன்னும் அறியவில்லை.

1. அசாதாரண ரத்தப்போக்கு
கருப்பை புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு இருக்கும். உங்களுக்கு மாதவிடாய் நின்றபிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்புநிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.
2. சிறுநீர் கழிப்பதில் சிரமம்
சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும்.
3. உடலுறவின்போது வலி
பொதுவாகச் சில பெண்கள் உடல் உறவு கொள்ளும்போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும். கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்படும். கருப்பை புற்றுநோய் இருந்தால் பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அசாதாரண எடை இழப்பும் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறி.
இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வர முடியும். ஆனால் பெரும்பாலும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களைக் கருப்பை புற்றுநோய் தாக்குகிறது. வல்லுநர்கள் இந்த நோய்க்கான சரியான காரணங்களை இன்னும் அறியவில்லை.
கருப்பை புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள்.

1. அசாதாரண ரத்தப்போக்கு
கருப்பை புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு இருக்கும். உங்களுக்கு மாதவிடாய் நின்றபிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்புநிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.
2. சிறுநீர் கழிப்பதில் சிரமம்
சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும்.
3. உடலுறவின்போது வலி
பொதுவாகச் சில பெண்கள் உடல் உறவு கொள்ளும்போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும். கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம்.
உண்மையில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பல்வேறு நம்பிக்கைகளையும், கனவுகளையும் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயங்களை பெற்றோர் கவனத்தில் கொண்டால், நீங்களும் ஒரு மிகச்சிறந்த பெற்றோர்தான்!
பொதுவாக எல்லா பெற்றோர்களும் தத்தம் குழந்தைகளுக்கு வளமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். அவர்களில் ஒரு தரப்பினர், தங்களால் விதவிதமான விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் வாங்கித் தர முடியும் என்பதால் அதை வாடிக்கையாகவும் கொண்டு உள்ளனர்.
மேலும், இவர்கள் தங்களுடைய குழந்தைகள், அவரவர் விருப்பமானவற்றைத் தேர்ந்து எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி தந்து, முக்கியமான தருணங்களில், அவர்களாகவே, தங்களுக்கு எது தேவை எது தேவையில்லை? என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறார்கள்.
மற்றொரு தரப்பு பெற்றோரோ, தங்களுடைய மகள்/மகன் ஒழுக்க நெறியில் சிறந்தவராகவும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டுமென கருதுகின்றனர்.
இதற்காக, இவ்வகை பெற்றோர் தங்களுடைய வாரிசுகளிடம், கண்டிப்பு மிக்கவராக நடந்து கொள்கின்றனர். இரண்டு தரப்பு பெற்றோரும்/குடும்பத்தினரும் தத்தம் குழந்தைகளை வளர்த்தெடுப்பதன் பின்னணியில், தனித்தனி பாணிகளைக் கையாண்டாலும் ஒருவிதத்தில் இணைந்துப் போகத்தான் செய்கின்றனர்.
அவர்களை அறியாமல் செய்திடும் ‘தவறுகள்’ தான் அந்த இணைப்புத் தளம். அந்த தவறுகள் என்னென்ன என்பதையும், அவற்றால், எந்தெந்த மாதிரியான வேண்டாத விளைவுகள் ஏற்படும் என்பதையும் சற்று காண்போம்நேரம் செலவிடுவதை விரும்பாத மனப்பான்மைஎந்தவொரு பெற்றோரும் குழந்தைகளுடன் விளையாடியும், கதைகள் சொல்லியும் பொழுதைப் போக்கவே விரும்புகின்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக, பெற்றோர் இருவருக்கும் வீட்டில் குறைவான ஓய்வு நேரமே கிடைக்கிறது.

எனவே, மென்மையான அரவணைப்பு, தலையை வருடிக் கொடுத்தல் என உடலளவில் குழந்தையோடு நெருக்கமாக இருக்க முயற்சி செய்யாமல், மனதளவிலும் நெருங்கி இருங்கள். அப்போதுதான் நீங்கள் சேர்ந்து இருக்கும் பொழுதுகளை ரசித்து அனுபவிக்க முடியும்.
மழலை போன்ற நெருக்கமான உறவுகளைக் கட்டித்தழுவி கொஞ்சுதல் நல்ல அனுபவம் என்றாலும், ஒருசில பெற்றோர் சில நேரங்களில் இதைச் செய்ய விரும்புவது இல்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பழமைவாதம் அல்லது வழக்கத்தில் இருந்து மறைந்தவை காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன.
நீங்கள் மகள்-மகன் இருவருடன் படைப்பாற்றலை உருவாக்கும் கேம்ஸ்களை விளையாடுவதால், ‘அவர்கள் தலைசிறந்த கலைஞனாகவோ, இசை மேதையாகவோ வருவார்கள்’ என நாங்கள் சொல்லவில்லை. அதே வேளையில், அவ்வதிசயம் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கு பெற்றோராக, தாங்கள் ஓடுதல், கால்பந்தாட்டம், சிலம்பம், நீச்சல், ஆடல்-பாடல் என பல்வேறு செயல்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்; இவ்வாறு செய்வதால், அவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளது? எந்தெந்த விளையாட்டுக்களில் அவர்கள் தன்னிகரற்று உள்ளார்கள் என்பதை நீங்கள் கண்டறிய முடியும். மேலும், எதிர்காலங்களில் குழந்தைகளுடைய ஆற்றலை வளர்த்தெடுக்கும் விதமாகவும் உங்களால் செயல்பட முடியும்.
இரண்டாவதாக, எந்தவொரு தனித்திறனைத் தூண்டும் விளையாட்டாக இருந்தாலும், உதாரணத்துக்கு, அவர்களுடன் சேர்ந்து உரக்கப் படித்தல், பொம்மைகள் வைத்து விளையாடுதல் போன்ற எதுவாக இருந்தாலும், குழந்தைகளுடைய அறிவாற்றல், கற்பனைத்திறன் மற்றும் மொழியறிவை வளரச் செய்யும். இறுதியாக, குழந்தைகளின் ஆற்றலுடன் நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியும். மேலும், நீங்கள் இருவரும் சேர்ந்து சிலவற்றை செய்ய இது போதுமானதாக இருக்கும்.
குழந்தை வளர்ப்பில் அனுபவம் உள்ள பெற்றோர், தத்தம் வாரிசுகளின் திறமைகளை கவனிக்காமல் இருந்ததற்கு வருத்தம் கொள்வார்கள். இருப்பினும், ஒரு சில திறமைகள் மிகச்சிறு வயதிலேயே கண்காணிக்கப்படும்போது, குழந்தைகள் புதுப்புது விளையாட்டுக்களில் ஈடுபடுவதை முயற்சி செய்வார்கள்; மேலும், குறுகிய காலத்துக்குள் வாசிக்கவும் செய்வார்கள்.
மேலும், இவர்கள் தங்களுடைய குழந்தைகள், அவரவர் விருப்பமானவற்றைத் தேர்ந்து எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி தந்து, முக்கியமான தருணங்களில், அவர்களாகவே, தங்களுக்கு எது தேவை எது தேவையில்லை? என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறார்கள்.
மற்றொரு தரப்பு பெற்றோரோ, தங்களுடைய மகள்/மகன் ஒழுக்க நெறியில் சிறந்தவராகவும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டுமென கருதுகின்றனர்.
இதற்காக, இவ்வகை பெற்றோர் தங்களுடைய வாரிசுகளிடம், கண்டிப்பு மிக்கவராக நடந்து கொள்கின்றனர். இரண்டு தரப்பு பெற்றோரும்/குடும்பத்தினரும் தத்தம் குழந்தைகளை வளர்த்தெடுப்பதன் பின்னணியில், தனித்தனி பாணிகளைக் கையாண்டாலும் ஒருவிதத்தில் இணைந்துப் போகத்தான் செய்கின்றனர்.
அவர்களை அறியாமல் செய்திடும் ‘தவறுகள்’ தான் அந்த இணைப்புத் தளம். அந்த தவறுகள் என்னென்ன என்பதையும், அவற்றால், எந்தெந்த மாதிரியான வேண்டாத விளைவுகள் ஏற்படும் என்பதையும் சற்று காண்போம்நேரம் செலவிடுவதை விரும்பாத மனப்பான்மைஎந்தவொரு பெற்றோரும் குழந்தைகளுடன் விளையாடியும், கதைகள் சொல்லியும் பொழுதைப் போக்கவே விரும்புகின்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக, பெற்றோர் இருவருக்கும் வீட்டில் குறைவான ஓய்வு நேரமே கிடைக்கிறது.
இத்தகைய சூழலில், குழந்தை விளையாடுகிற நேரங்களில் பெற்றோர் தங்களது பணிகளைச் செய்து கொள்வது வாடிக்கை ஆகிவிட்டால் ஏற்கனவே, வளரத் தொடங்கிய குழந்தை தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க ஆரம்பிக்கிறது. கடந்துபோன மணித்துளிகளை மீட்டெடுக்க எந்தவொரு வழியும் கிடையாது.

எனவே, மென்மையான அரவணைப்பு, தலையை வருடிக் கொடுத்தல் என உடலளவில் குழந்தையோடு நெருக்கமாக இருக்க முயற்சி செய்யாமல், மனதளவிலும் நெருங்கி இருங்கள். அப்போதுதான் நீங்கள் சேர்ந்து இருக்கும் பொழுதுகளை ரசித்து அனுபவிக்க முடியும்.
மழலை போன்ற நெருக்கமான உறவுகளைக் கட்டித்தழுவி கொஞ்சுதல் நல்ல அனுபவம் என்றாலும், ஒருசில பெற்றோர் சில நேரங்களில் இதைச் செய்ய விரும்புவது இல்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பழமைவாதம் அல்லது வழக்கத்தில் இருந்து மறைந்தவை காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன.
நீங்கள் மகள்-மகன் இருவருடன் படைப்பாற்றலை உருவாக்கும் கேம்ஸ்களை விளையாடுவதால், ‘அவர்கள் தலைசிறந்த கலைஞனாகவோ, இசை மேதையாகவோ வருவார்கள்’ என நாங்கள் சொல்லவில்லை. அதே வேளையில், அவ்வதிசயம் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கு பெற்றோராக, தாங்கள் ஓடுதல், கால்பந்தாட்டம், சிலம்பம், நீச்சல், ஆடல்-பாடல் என பல்வேறு செயல்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்; இவ்வாறு செய்வதால், அவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளது? எந்தெந்த விளையாட்டுக்களில் அவர்கள் தன்னிகரற்று உள்ளார்கள் என்பதை நீங்கள் கண்டறிய முடியும். மேலும், எதிர்காலங்களில் குழந்தைகளுடைய ஆற்றலை வளர்த்தெடுக்கும் விதமாகவும் உங்களால் செயல்பட முடியும்.
இரண்டாவதாக, எந்தவொரு தனித்திறனைத் தூண்டும் விளையாட்டாக இருந்தாலும், உதாரணத்துக்கு, அவர்களுடன் சேர்ந்து உரக்கப் படித்தல், பொம்மைகள் வைத்து விளையாடுதல் போன்ற எதுவாக இருந்தாலும், குழந்தைகளுடைய அறிவாற்றல், கற்பனைத்திறன் மற்றும் மொழியறிவை வளரச் செய்யும். இறுதியாக, குழந்தைகளின் ஆற்றலுடன் நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியும். மேலும், நீங்கள் இருவரும் சேர்ந்து சிலவற்றை செய்ய இது போதுமானதாக இருக்கும்.
குழந்தை வளர்ப்பில் அனுபவம் உள்ள பெற்றோர், தத்தம் வாரிசுகளின் திறமைகளை கவனிக்காமல் இருந்ததற்கு வருத்தம் கொள்வார்கள். இருப்பினும், ஒரு சில திறமைகள் மிகச்சிறு வயதிலேயே கண்காணிக்கப்படும்போது, குழந்தைகள் புதுப்புது விளையாட்டுக்களில் ஈடுபடுவதை முயற்சி செய்வார்கள்; மேலும், குறுகிய காலத்துக்குள் வாசிக்கவும் செய்வார்கள்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சருமம் வறண்டு போகும். கோடையின் போது நம் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வு குறித்து அறிந்து கொள்ளலாம்.
‘கோடையில் சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் சூரியக் கதிர்களில் இருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்கள் சருமத்தை பாதிக்கும். இதனால் எரிச்சல், வெள்ளைத் தழும்பு, வெடிப்பு ஏற்படும். சருமம் கருப்பாகவும் மாறும். மங்கு பிரச்சனையும் ஏற்படும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சருமம் வறண்டு போகும்.
அதை தடுக்க இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது துப்பட்டாவால் முகத்தை மூடிக் கொள்ளலாம். கை மற்றும் கால்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பருத்தியாலான கிளவுஸ் மற்றும் சாக்ஸ் அணியலாம். ஹெல்மேட் அணிவதால் அது தலைமுடி வறண்டு போகாமல் பாதுகாக்கும். அதே சமயம் ஹெல்மெட் அணியும் போது தலையில் ஒரு பருத்தி துணியை போட்டு அதற்கு மேல் ஹெல்மெட்டை அணியலாம்.

பெண்கள் மத்தியில் தலைமுடிக்கு டை பூசுவது அதிகரித்துவிட்டது. அவ்வாறு பூசும் போது ரசாயன டைகளை தவிர்த்து விட்டு மருதாணி மற்றும் ஆர்கானிக் டைகளை பயன்படுத்தலாம். உடைகளில், உடலை இறுக்கிப் பிடிக்காத மற்றும் உறுத்தாத பருத்தி ஆடைகள் அணியலாம். பனியன் துணியாலான டிஷர்ட் இந்த காலத்தின் சிறந்த உடை. வெளியே செல்லும் போது பிங்க், நீலம், வெளிர் மஞ்சள் போன்ற மெல்லிய நிற உடைகளை அணியலாம். கோடைக் காலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக அணியும் உடை உள்ளாடைகள் தான்.
சரியான முறையில் தேர்வு செய்து அணியாவிட்டால் சரும பிரச்னைகள் வரும். கருப்பு, சிவப்பு மற்றும் அடர்த்தியான நிறங்கள் கொண்ட உள்ளாடைகளை அணியக்கூடாது. வெள்ளை மற்றும் சரும நிற பருத்தி உள்ளாடைகளை அணிவதே நல்லது. குறிப்பாக வியர்வை அதிகமாக வெளியாகும் போது மங்கு, அரிப்பு போன்ற பிரச்சனை ஏற்படும். எலாஸ்டிக் மற்றும் வயரிங் கொண்ட உள்ளாடைகளை தவிர்ப்பது நல்லது. தினமும் இரண்டு வேளை குளிக்கலாம். உள்ளாடைகளையும் மாற்றுங்கள்’’.
அதை தடுக்க இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது துப்பட்டாவால் முகத்தை மூடிக் கொள்ளலாம். கை மற்றும் கால்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பருத்தியாலான கிளவுஸ் மற்றும் சாக்ஸ் அணியலாம். ஹெல்மேட் அணிவதால் அது தலைமுடி வறண்டு போகாமல் பாதுகாக்கும். அதே சமயம் ஹெல்மெட் அணியும் போது தலையில் ஒரு பருத்தி துணியை போட்டு அதற்கு மேல் ஹெல்மெட்டை அணியலாம்.

பெண்கள் மத்தியில் தலைமுடிக்கு டை பூசுவது அதிகரித்துவிட்டது. அவ்வாறு பூசும் போது ரசாயன டைகளை தவிர்த்து விட்டு மருதாணி மற்றும் ஆர்கானிக் டைகளை பயன்படுத்தலாம். உடைகளில், உடலை இறுக்கிப் பிடிக்காத மற்றும் உறுத்தாத பருத்தி ஆடைகள் அணியலாம். பனியன் துணியாலான டிஷர்ட் இந்த காலத்தின் சிறந்த உடை. வெளியே செல்லும் போது பிங்க், நீலம், வெளிர் மஞ்சள் போன்ற மெல்லிய நிற உடைகளை அணியலாம். கோடைக் காலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக அணியும் உடை உள்ளாடைகள் தான்.
சரியான முறையில் தேர்வு செய்து அணியாவிட்டால் சரும பிரச்னைகள் வரும். கருப்பு, சிவப்பு மற்றும் அடர்த்தியான நிறங்கள் கொண்ட உள்ளாடைகளை அணியக்கூடாது. வெள்ளை மற்றும் சரும நிற பருத்தி உள்ளாடைகளை அணிவதே நல்லது. குறிப்பாக வியர்வை அதிகமாக வெளியாகும் போது மங்கு, அரிப்பு போன்ற பிரச்சனை ஏற்படும். எலாஸ்டிக் மற்றும் வயரிங் கொண்ட உள்ளாடைகளை தவிர்ப்பது நல்லது. தினமும் இரண்டு வேளை குளிக்கலாம். உள்ளாடைகளையும் மாற்றுங்கள்’’.
இரத்தசோகை நோய் ஏற்படாமல் இருக்க ராஜ்மா அடிக்கடி உபயோகிக்கலாம். இன்று ராஜ்மாவை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ராஜ்மா - 1/4 கப்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பூண்டு - 3 பல்,
பிரிஞ்சி இலை - 1,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
ஃப்ரெஷ் கிரீம் - 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்),
உப்பு - தேவையான அளவு,

செய்முறை :
ராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.
தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் சேர்த்து, பிரிஞ்சி இலை, பூண்டைப் போட்டு வதக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கிய பின்னர் ஊற வைத்த ராஜ்மா, 2 கப் தண்ணீர் சேர்த்து 7 விசில் வரும் வரை வேக விடவும்.
விசில் போனவுடன் ராஜ்மாவை ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதில் தேவையான தண்ணீர் சேர்த்து, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து 2 கொதி வந்ததும், ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும். ஃப்ரெஷ் கிரீமுக்கு பதிலாக 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்தும் கொதிக்க விடலாம்.
சத்தான சுவையான ராஜ்மா சூப் ரெடி.
ராஜ்மா - 1/4 கப்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பூண்டு - 3 பல்,
பிரிஞ்சி இலை - 1,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
ஃப்ரெஷ் கிரீம் - 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்),
உப்பு - தேவையான அளவு,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்.

செய்முறை :
ராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.
தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் சேர்த்து, பிரிஞ்சி இலை, பூண்டைப் போட்டு வதக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கிய பின்னர் ஊற வைத்த ராஜ்மா, 2 கப் தண்ணீர் சேர்த்து 7 விசில் வரும் வரை வேக விடவும்.
விசில் போனவுடன் ராஜ்மாவை ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதில் தேவையான தண்ணீர் சேர்த்து, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து 2 கொதி வந்ததும், ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும். ஃப்ரெஷ் கிரீமுக்கு பதிலாக 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்தும் கொதிக்க விடலாம்.
சத்தான சுவையான ராஜ்மா சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த ஆசனம் உங்களுக்கு உடல் ரீதியான மற்றும் உளவியல் நன்மைகளை தருகிறது. நரம்புகளை தூண்டுகிறது. நரம்பு கோளாறுகளை குணமாக்குகிறது..
செய்முறை
விரிப்பில் நேராக நின்று கொண்டு கால்களை 2 அடி இடைவெளி விட்டு நிற்கவும். வலது கால் பாதத்தை வலது பக்கமாக திருப்பி வைக்கவும். பின்னர் வலது பக்கமாக குனிந்து வலது கையை வலது கால் பாதத்திற்கு முன்பாகவும், இடது கையை வலது காலின் பின்புறமும் வைத்து தலையால் கால் முட்டியை தொட வேண்டும். இவ்வாறு 30 விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும். பின்னர் கால்களை மாற்றி இடது காலில் இவ்வாறு செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை 2 முதல் 3 முறை செய்ய வேண்டும்.
பயன்கள்
இந்த ஆசனம் உங்களுக்கு உடல் ரீதியான மற்றும் உளவியல் நன்மைகளை தருகிறது. மேலும் விந்தணு கோளாறுகள் மற்றும் பாலியல் செயல்திறனை மேம்படுத்துகிறது. நரம்புகளை தூண்டுகிறது. நரம்பு கோளாறுகள் குணமாகின்றன.
இடுப்பு பகுதியை வலுவூட்டுகிறது, இடுப்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கிறது. தொடை, கால்கள், கால் மூட்டுகளுக்கு வலிமை தருகிறது. முதுகெலும்பு வலுவடைகிறது.
தூக்கமின்மை குணப்படுத்துகிறது. இந்த ஆசனம் ஆரம்ப கட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
விரிப்பில் நேராக நின்று கொண்டு கால்களை 2 அடி இடைவெளி விட்டு நிற்கவும். வலது கால் பாதத்தை வலது பக்கமாக திருப்பி வைக்கவும். பின்னர் வலது பக்கமாக குனிந்து வலது கையை வலது கால் பாதத்திற்கு முன்பாகவும், இடது கையை வலது காலின் பின்புறமும் வைத்து தலையால் கால் முட்டியை தொட வேண்டும். இவ்வாறு 30 விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும். பின்னர் கால்களை மாற்றி இடது காலில் இவ்வாறு செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை 2 முதல் 3 முறை செய்ய வேண்டும்.
பயன்கள்
இந்த ஆசனம் உங்களுக்கு உடல் ரீதியான மற்றும் உளவியல் நன்மைகளை தருகிறது. மேலும் விந்தணு கோளாறுகள் மற்றும் பாலியல் செயல்திறனை மேம்படுத்துகிறது. நரம்புகளை தூண்டுகிறது. நரம்பு கோளாறுகள் குணமாகின்றன.
இடுப்பு பகுதியை வலுவூட்டுகிறது, இடுப்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கிறது. தொடை, கால்கள், கால் மூட்டுகளுக்கு வலிமை தருகிறது. முதுகெலும்பு வலுவடைகிறது.
தூக்கமின்மை குணப்படுத்துகிறது. இந்த ஆசனம் ஆரம்ப கட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
எந்த உறவிலும் பாசமும், பரிவும், அன்பும் ஒருவழிப் பாதை அல்ல! நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அதையே பெறுவீர்கள். ஆகவே, நிறைய அன்பைக் கொடுங்கள்.
நாளை (மே 15-ந்தேதி) உலக குடும்ப தினம்.
குடும்பம் என்பது அதிகாரம் தூள்பறக்கும் நிறுவனமல்ல. அன்பும், அருளும் தவழும் கோவில். குடும்பம் என்பது உருவங்கள் நடமாடும் இடம் அல்ல, உள்ளங்கள் உறவாடும் இடம். வீடு என்பது தங்குமிடமல்ல. இன்பம் பொங்குமிடம். எல்லா நாடுகளுக்கும் ஒவ்வொரு வகையான பெருமை உண்டு என்றால் இந்தியாவின் பெருமை இனிய குடும்பம்.
தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்திருந்த ஒரு வெளிநாட்டு தம்பதியிடம் ஒரு நிருபர் பேட்டி எடுத்தார். “இங்குள்ள கோவில்களையெல்லாம் பார்த்தீர்களா?” “பார்த்தோம். அதிசயமாக இருந்தது. அதைவிட அதிசயம் இங்குள்ள குடும்பங்களெல்லாம் கோவிலாக இருப்பது” இதுதான் நமக்குப் பெருமை. அந்தப் பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். கால ஓட்டத்தில் நிலைமை மாறி வருவதாகச் சொல்லப்படுகிறது. முன்பெல்லாம் உடைந்த வீடுகள் உடையாத உள்ளங்கள்.
இப்போது உடையாத வீடுகள் ஆனால் உடைந்த உள்ளங்கள். இல்லறத்தில் மகிழ்ச்சி எப்போது வரும்? புடவை, பட்டுக் கொடுத்தால் வருமா? நகை நட்டு கொடுத்தால் வருமா? பணக்கட்டு கொடுத்தால் வருமா? சீர்வரிசை தட்டு கொடுத்தால் வருமா? அப்போதெல்லாம் விட ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் வரும். விட்டுக் கொடுப்பதென்பது வீழ்ச்சியல்ல விதைப்பது. உலகின் மிக உன்னதமானது கணவன் மனைவி உறவு. முன்பின் அறிமுகம் இல்லாத, ரத்த உறவாகப் பிறந்திடாத இரண்டு பேருக்கு இடையே அறிமுகம் முளைத்து, அது நட்பாக வளர்ந்து, இனிய அன்பாகப் பிரவாகம் எடுத்து, இரண்டு உடல்களில் ஓர் உயிர் இருப்பது போல நெருக்கமாகி, ஆயுள் முழுவதும் இணைந்திருக்கும் இனிய பந்தம். அது அழகாக இருக்க சில உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
கணவனுக்கும், மனைவிக்கும் நடக்கும் விவாதங்களில் ஜெயிப்பதற்கு ஆர்வம் காட்டாதீர்கள். யார் ஜெயித்தாலும், தோற்றவர் வாழ்க்கைத் துணைதானே. ஒருவர் தோல்வியின் விரக்தியில் இருக்கும்போது, மற்றவர் வெற்றியைக் கொண்டாட முடியுமா? விட்டுக்கொடுங்கள். அன்பை வெளிப்படுத்தவும், ஆறுதல் சொல்லவும் அவ்வப்போது அரவணைப்பையும் அன்பான வார்த்தைகளையும் பயன்படுத்துங்கள். நெடுநாள் இனிமையாக உறவு நீடிக்க இந்த “மந்திரச் செயல்” அவசியம்.
பணம்தான் பல குடும்பங்களில் உறவை உடைக்கும் கருவியாக இருக்கிறது. வருமானம், கடன், செலவுகள், வீடு வாங்குவது போன்ற உங்கள் பொருளாதார இலக்குகள் என எதையும் வாழ்க்கைத்துணையிடம் மறைக்காதீர்கள். வாழ்க்கையில் யாராவது ஒருவரிடமாவது ஒளிவு மறைவின்றி உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். அது உங்களது வாழ்க்கைத்துணையாக இருக்கட்டும்.
எந்த உறவிலும் பாசமும், பரிவும், அன்பும் ஒருவழிப் பாதை அல்ல! நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அதையே பெறுவீர்கள். ஆகவே, நிறைய அன்பைக் கொடுங்கள். வாழ்க்கைத்துணை கச்சிதமான நபரான, எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்பவராக, நூறு சதவீதம் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்பவராக இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். பலங்களும், பலவீனங்களும் இணைந்தவர்களே ஒவ்வொருவரும். நீங்களும் அப்படித்தானே. வாழ்க்கைத் துணையிடம் மட்டும் நூறு சதவீத கச்சிதத்தை எதிர்பார்ப்பது நியாயமா?
யாரோடும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஒப்பிட்டால் அந்த நிமிடத்தில் இருந்து நிம்மதியைத் தொலைத்துவிடுவீர்கள். ஒவ்வொரு தனிநபரும் தனிப்பட்ட குணங்களின், திறமைகளின், விருப்பங்களின் கலவை. அந்தத் தனித் திறமையைக் கண்டறிந்து, அதை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் பல சிந்தனைகளில் மூழ்காதீர்கள். “டைனிங் டேபிளில்” அமர்ந்து சாப்பிட்டபடி அலுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலையை மனதில் நினைத்துக்கொண்டு, உதட்டளவில் வாழ்க்கைத் துணையிடம் பேசாதீர்கள். நீங்கள் உதிர்க்கும் வார்த்தைகளில் அக்கறை குறைவதை, வேறு யாரையும்விட வாழ்க்கைத் துணையால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.
வாழ்க்கைத்துணையின் உறவினரோ, நண்பரோ, உங்களை ஏமாற்றி இருக்கலாம்; ஏதாவது நஷ்டத்துக்கு ஆளாக்கி இருக்கலாம். அதை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கைத்துணையை விமர்சிக்காதீர்கள். யாரோ செய்த தவறுக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும்? உங்கள் உடன்பிறந்தவர்களே கூட உங்களைப் போல இருக்க முடியாது என்கிறபோது, யாரோ ஒருவர் எப்படி உங்களின் வாழ்க்கைத் துணைபோல அக்கறையாக இருப்பார்?
வாழ்க்கைத்துணை மீது கோபமோ, வருத்தமோ ஏற்படும்போது என்ன செய்யலாம்? எதுவுமே செய்யாமல் அமைதியாக இருப்பதுதான் நல்லவழி. கோபத்தில் திட்டுவதோ, போனில் கத்துவதோ பிரச்சினைகளைத் தீர்க்காது. அவசரத்தில் உதிர்க்கும் வார்த்தைகள், இன்னொரு புது பிரச்சினையை உருவாக்கிவிடும். உணர்ச்சிவசப்பட்டு மனதால் முடிவு எடுக்காதீர்கள்; நிதானமாக யோசித்து அறிவால் முடிவெடுங்கள். இன்றைய கோபத்தை இன்றே மறந்துவிடுங்கள். அதை சுமந்துகொண்டு படுக்கைக்குப் போகாதீர்கள். மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்காதீர்கள். கோபத்தில் வரும் யோசனைகள், பலூன் மாதிரி பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்கிவிடும். அன்பு எனும் ஊசியால் அதை உடைத்துவிடுங்கள். கருத்து வேறுபாடுகளும், விவாதங்களும் பிரச்சினையை பெரிதாக்காமல் தீர்க்கும் போக்கில் அமைய வேண்டும். சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?
ஒருவர், தன் மகள் திருமணத்துக்காக ஒரு ஜோசியரைப் பார்த்து, இரண்டு ஜாதகங்களைக் கொடுத்து பொருத்தம் பார்க்கச் சொன்னார். இரண்டும் பெண்களின் ஜாதகமாயிருந்தால் அதிர்ச்சியடைந்த ஜோசியர் காரணம் கேட்டார். “ஒன்று என் மகள் ஜாதகம், இன்னொன்று அவளுக்கு மாமியாராக வரப்போறவங்க ஜாதகம். இரண்டும், பொருந்தி வருதா பாருங்க”.
இந்த நிலைமை ஏன்? தன்னுடைய மகள் கட்டிக்கொடுத்த இடத்தில் கண்கலங்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிற தாய், தன்னை நம்பி வந்திருக்கும் ஒரு பெண்ணை கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டாமா? தன் அம்மாவை நேசிக்கும் ஒரு பெண், தனது மாமியாரும் தாய்மாதிரித்தான் என்று எண்ணத் தொடங்கினால் குடும்பம் கோவிலாகி விடும். மாமியாரின் அனுபவத்தை மருமகளும், படித்த மருமகளின் அறிவாற்றலை மாமியாரும் மதிக்கத் தொடங்கிவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்.
நமது குடும்பத்தின் வலிமையே கூட்டுக்குடும்பம்தான். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா அடடா? எத்தனை உறவுமுறைகள். தாய்மாமன் உறவு என்பது தனித்துவமானது. தாத்தா சரித்திரம் சொல்ல, பாட்டி கதைகள் சொல்ல, அத்தையும், மாமாவும் அரவணைக்க அந்த வளர்ப்பின் அனுபவமே அற்புதமானது. நட்ட நடுநிசியில் தொட்டில் குழந்தை, நிதானத்துக்கு அதிகமாக அழுது துடித்தால் எந்த டாக்டரிடம் கொண்டு செல்வது? இருக்கவே இருக்கிறது பாட்டி வைத்தியம்.
இப்போது அவசர உலகத்தில் இந்த கூட்டுக்குடும்ப தத்துவம் தகர்ந்து கொண்டிருக்கிறது. தனிக்குடித்தனம் என்ற சுயநலத் தேவை அதிகரித்துவிட்டது. வேலை நிமித்தம் தவிர்க்க முடியாத சூழ்நிலை தவிர, மற்ற காலகட்டத்தில் ஒன்றாக வாழ்வதே நல்லது. அப்போதும் இல்லறங்கள் வேறாக இருந்தாலும் இதயங்கள் நெருங்கியிருந்தால் உறவுகள் மேம்படும். “வீட்டுக்குப் பெயர் அன்னை இல்லம். அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்” என்ற நிலையும் உள்ளது. ஒரு பெரியவர் சொன்னார்: எனக்கு ஐந்து சன்ஸ் உண்டு. ஆனால் நான் பெற்றெடுக்காத இன்னொரு சன்தான் என்னைக் காப்பாற்றுகிறான். அவன்தான் பென்சன்.
பெரியவர்கள் வீட்டில் இருந்தால் பெருமை என்று கருதுவோம். அவர்களை வழிபடுவதே சிறந்த ஆன்மிகம் என்ற நிலை வந்தால் குடும்பம் கோவிலாகிவிடும். குடும்ப தினத்தில் அதைப்பற்றி அதிகம் யோசிப்போம்.
முனைவர் இளசை சுந்தரம், வானொலி நிலைய முன்னாள் இயக்குனர், மதுரை.
குடும்பம் என்பது அதிகாரம் தூள்பறக்கும் நிறுவனமல்ல. அன்பும், அருளும் தவழும் கோவில். குடும்பம் என்பது உருவங்கள் நடமாடும் இடம் அல்ல, உள்ளங்கள் உறவாடும் இடம். வீடு என்பது தங்குமிடமல்ல. இன்பம் பொங்குமிடம். எல்லா நாடுகளுக்கும் ஒவ்வொரு வகையான பெருமை உண்டு என்றால் இந்தியாவின் பெருமை இனிய குடும்பம்.
தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்திருந்த ஒரு வெளிநாட்டு தம்பதியிடம் ஒரு நிருபர் பேட்டி எடுத்தார். “இங்குள்ள கோவில்களையெல்லாம் பார்த்தீர்களா?” “பார்த்தோம். அதிசயமாக இருந்தது. அதைவிட அதிசயம் இங்குள்ள குடும்பங்களெல்லாம் கோவிலாக இருப்பது” இதுதான் நமக்குப் பெருமை. அந்தப் பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். கால ஓட்டத்தில் நிலைமை மாறி வருவதாகச் சொல்லப்படுகிறது. முன்பெல்லாம் உடைந்த வீடுகள் உடையாத உள்ளங்கள்.
இப்போது உடையாத வீடுகள் ஆனால் உடைந்த உள்ளங்கள். இல்லறத்தில் மகிழ்ச்சி எப்போது வரும்? புடவை, பட்டுக் கொடுத்தால் வருமா? நகை நட்டு கொடுத்தால் வருமா? பணக்கட்டு கொடுத்தால் வருமா? சீர்வரிசை தட்டு கொடுத்தால் வருமா? அப்போதெல்லாம் விட ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் வரும். விட்டுக் கொடுப்பதென்பது வீழ்ச்சியல்ல விதைப்பது. உலகின் மிக உன்னதமானது கணவன் மனைவி உறவு. முன்பின் அறிமுகம் இல்லாத, ரத்த உறவாகப் பிறந்திடாத இரண்டு பேருக்கு இடையே அறிமுகம் முளைத்து, அது நட்பாக வளர்ந்து, இனிய அன்பாகப் பிரவாகம் எடுத்து, இரண்டு உடல்களில் ஓர் உயிர் இருப்பது போல நெருக்கமாகி, ஆயுள் முழுவதும் இணைந்திருக்கும் இனிய பந்தம். அது அழகாக இருக்க சில உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
கணவனுக்கும், மனைவிக்கும் நடக்கும் விவாதங்களில் ஜெயிப்பதற்கு ஆர்வம் காட்டாதீர்கள். யார் ஜெயித்தாலும், தோற்றவர் வாழ்க்கைத் துணைதானே. ஒருவர் தோல்வியின் விரக்தியில் இருக்கும்போது, மற்றவர் வெற்றியைக் கொண்டாட முடியுமா? விட்டுக்கொடுங்கள். அன்பை வெளிப்படுத்தவும், ஆறுதல் சொல்லவும் அவ்வப்போது அரவணைப்பையும் அன்பான வார்த்தைகளையும் பயன்படுத்துங்கள். நெடுநாள் இனிமையாக உறவு நீடிக்க இந்த “மந்திரச் செயல்” அவசியம்.
பணம்தான் பல குடும்பங்களில் உறவை உடைக்கும் கருவியாக இருக்கிறது. வருமானம், கடன், செலவுகள், வீடு வாங்குவது போன்ற உங்கள் பொருளாதார இலக்குகள் என எதையும் வாழ்க்கைத்துணையிடம் மறைக்காதீர்கள். வாழ்க்கையில் யாராவது ஒருவரிடமாவது ஒளிவு மறைவின்றி உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். அது உங்களது வாழ்க்கைத்துணையாக இருக்கட்டும்.
எந்த உறவிலும் பாசமும், பரிவும், அன்பும் ஒருவழிப் பாதை அல்ல! நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அதையே பெறுவீர்கள். ஆகவே, நிறைய அன்பைக் கொடுங்கள். வாழ்க்கைத்துணை கச்சிதமான நபரான, எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்பவராக, நூறு சதவீதம் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்பவராக இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். பலங்களும், பலவீனங்களும் இணைந்தவர்களே ஒவ்வொருவரும். நீங்களும் அப்படித்தானே. வாழ்க்கைத் துணையிடம் மட்டும் நூறு சதவீத கச்சிதத்தை எதிர்பார்ப்பது நியாயமா?
யாரோடும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஒப்பிட்டால் அந்த நிமிடத்தில் இருந்து நிம்மதியைத் தொலைத்துவிடுவீர்கள். ஒவ்வொரு தனிநபரும் தனிப்பட்ட குணங்களின், திறமைகளின், விருப்பங்களின் கலவை. அந்தத் தனித் திறமையைக் கண்டறிந்து, அதை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் பல சிந்தனைகளில் மூழ்காதீர்கள். “டைனிங் டேபிளில்” அமர்ந்து சாப்பிட்டபடி அலுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலையை மனதில் நினைத்துக்கொண்டு, உதட்டளவில் வாழ்க்கைத் துணையிடம் பேசாதீர்கள். நீங்கள் உதிர்க்கும் வார்த்தைகளில் அக்கறை குறைவதை, வேறு யாரையும்விட வாழ்க்கைத் துணையால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.
வாழ்க்கைத்துணையின் உறவினரோ, நண்பரோ, உங்களை ஏமாற்றி இருக்கலாம்; ஏதாவது நஷ்டத்துக்கு ஆளாக்கி இருக்கலாம். அதை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கைத்துணையை விமர்சிக்காதீர்கள். யாரோ செய்த தவறுக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும்? உங்கள் உடன்பிறந்தவர்களே கூட உங்களைப் போல இருக்க முடியாது என்கிறபோது, யாரோ ஒருவர் எப்படி உங்களின் வாழ்க்கைத் துணைபோல அக்கறையாக இருப்பார்?
வாழ்க்கைத்துணை மீது கோபமோ, வருத்தமோ ஏற்படும்போது என்ன செய்யலாம்? எதுவுமே செய்யாமல் அமைதியாக இருப்பதுதான் நல்லவழி. கோபத்தில் திட்டுவதோ, போனில் கத்துவதோ பிரச்சினைகளைத் தீர்க்காது. அவசரத்தில் உதிர்க்கும் வார்த்தைகள், இன்னொரு புது பிரச்சினையை உருவாக்கிவிடும். உணர்ச்சிவசப்பட்டு மனதால் முடிவு எடுக்காதீர்கள்; நிதானமாக யோசித்து அறிவால் முடிவெடுங்கள். இன்றைய கோபத்தை இன்றே மறந்துவிடுங்கள். அதை சுமந்துகொண்டு படுக்கைக்குப் போகாதீர்கள். மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்காதீர்கள். கோபத்தில் வரும் யோசனைகள், பலூன் மாதிரி பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்கிவிடும். அன்பு எனும் ஊசியால் அதை உடைத்துவிடுங்கள். கருத்து வேறுபாடுகளும், விவாதங்களும் பிரச்சினையை பெரிதாக்காமல் தீர்க்கும் போக்கில் அமைய வேண்டும். சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?
ஒருவர், தன் மகள் திருமணத்துக்காக ஒரு ஜோசியரைப் பார்த்து, இரண்டு ஜாதகங்களைக் கொடுத்து பொருத்தம் பார்க்கச் சொன்னார். இரண்டும் பெண்களின் ஜாதகமாயிருந்தால் அதிர்ச்சியடைந்த ஜோசியர் காரணம் கேட்டார். “ஒன்று என் மகள் ஜாதகம், இன்னொன்று அவளுக்கு மாமியாராக வரப்போறவங்க ஜாதகம். இரண்டும், பொருந்தி வருதா பாருங்க”.
இந்த நிலைமை ஏன்? தன்னுடைய மகள் கட்டிக்கொடுத்த இடத்தில் கண்கலங்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிற தாய், தன்னை நம்பி வந்திருக்கும் ஒரு பெண்ணை கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டாமா? தன் அம்மாவை நேசிக்கும் ஒரு பெண், தனது மாமியாரும் தாய்மாதிரித்தான் என்று எண்ணத் தொடங்கினால் குடும்பம் கோவிலாகி விடும். மாமியாரின் அனுபவத்தை மருமகளும், படித்த மருமகளின் அறிவாற்றலை மாமியாரும் மதிக்கத் தொடங்கிவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்.
நமது குடும்பத்தின் வலிமையே கூட்டுக்குடும்பம்தான். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா அடடா? எத்தனை உறவுமுறைகள். தாய்மாமன் உறவு என்பது தனித்துவமானது. தாத்தா சரித்திரம் சொல்ல, பாட்டி கதைகள் சொல்ல, அத்தையும், மாமாவும் அரவணைக்க அந்த வளர்ப்பின் அனுபவமே அற்புதமானது. நட்ட நடுநிசியில் தொட்டில் குழந்தை, நிதானத்துக்கு அதிகமாக அழுது துடித்தால் எந்த டாக்டரிடம் கொண்டு செல்வது? இருக்கவே இருக்கிறது பாட்டி வைத்தியம்.
இப்போது அவசர உலகத்தில் இந்த கூட்டுக்குடும்ப தத்துவம் தகர்ந்து கொண்டிருக்கிறது. தனிக்குடித்தனம் என்ற சுயநலத் தேவை அதிகரித்துவிட்டது. வேலை நிமித்தம் தவிர்க்க முடியாத சூழ்நிலை தவிர, மற்ற காலகட்டத்தில் ஒன்றாக வாழ்வதே நல்லது. அப்போதும் இல்லறங்கள் வேறாக இருந்தாலும் இதயங்கள் நெருங்கியிருந்தால் உறவுகள் மேம்படும். “வீட்டுக்குப் பெயர் அன்னை இல்லம். அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்” என்ற நிலையும் உள்ளது. ஒரு பெரியவர் சொன்னார்: எனக்கு ஐந்து சன்ஸ் உண்டு. ஆனால் நான் பெற்றெடுக்காத இன்னொரு சன்தான் என்னைக் காப்பாற்றுகிறான். அவன்தான் பென்சன்.
பெரியவர்கள் வீட்டில் இருந்தால் பெருமை என்று கருதுவோம். அவர்களை வழிபடுவதே சிறந்த ஆன்மிகம் என்ற நிலை வந்தால் குடும்பம் கோவிலாகிவிடும். குடும்ப தினத்தில் அதைப்பற்றி அதிகம் யோசிப்போம்.
முனைவர் இளசை சுந்தரம், வானொலி நிலைய முன்னாள் இயக்குனர், மதுரை.






