என் மலர்
நீங்கள் தேடியது "Green gram"
- ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொள்முதல் செய்ய தமிழக அரசு மறுப்பதால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
- மத்திய அரசிடம் பேசி கொள்முதல் அளவை குறைந்தது 5 மடங்கு, அதாவது 7,000 டன்களாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பச்சைப்பயறு சாகுபடி மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவற்றை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொள்முதல் செய்ய தமிழக அரசு மறுப்பதால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் இழப்பை சந்தித்து கடன் வலையில் சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதைத் தடுக்க மத்திய அரசிடம் பேசி கொள்முதல் அளவை குறைந்தது 5 மடங்கு, அதாவது 7,000 டன்களாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழக அரசே அதன் சொந்த செலவில் பச்சைப் பயறை உச்சவரம்பின்றி கொள்முதல் செய்து உழவர்களின் துயரத்தைப் போக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- தஞ்சை மாவட்டத்தில் அடுத்தமாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் ஜூன் 29-ந் தேதி வரை உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 2022-23-ம் ஆண்டு ராபி பருவத்தில் பயறு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் நோக்கில் மத்தியஅரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நடப்பு ஆண்டு தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் 3,110 டன் உளுந்தும், 820 டன் பச்சைப்பயறும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உளுந்து மற்றும் பச்சைப்பயறுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்குமாறு நன்கு உலர வைத்து அயல்பொருட்கள் கலப்பின்றி விவசாயிகள் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு நன்கு உலர வைக்கப்பட்ட தரமான உளுந்து கிலோ ஒன்றிற்கு ரூ.66 வீதமும், பச்சைப்பயறு கிலோ ஒன்றிற்கு ரூ.77.55 வீதமும் வழங்கப்படும். கொள்முதல் செய்யப்படும் உளுந்து மற்றும் பச்சைப் பயறுக்கான கிரயத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
தஞ்சை மாவட்டத்தில் அடுத்தமாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் ஜூன் 29-ந் தேதி வரை உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம் மற்றும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி பதிவு செய்து தங்களது உளுந்து மற்றும் பச்சைப்பயறை விற்பனை செய்து பயன் அடையலாம். பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல லாபகரமான விலை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்த திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உடல் எடை குறைக்க:
உடல் எடையை குறைப்பதில் பச்சை பயிறு பிரதான பங்கு வகிக்கிறது. இது அதிக அளவு பசியைத் தாங்கும் சக்தி கொண்டது. எனவே குண்டானவர்கள் சிறுபயிறை ஒரு நேர உணவாக பயன்படுத்தலாம். அதனை சாப்பிடுவதால் நொறுக்குத்தீனி தின்பது குறையும். இதனால் அவர்களது உடல் எடை படிப்படியாக குறையும்.
ரத்தசோகையை தடுக்க:
பச்சை பயிறு ரத்தசோகையையும் தடுக்க வல்லது. இதனை முளைக்கட்டி சாப்பிடும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும். இதனால் ரத்த சோகை வராமல் காக்கும்.
சிறுபயிறை 8 மணி நேரம் ஊறவைத்து பின் அதனை வெள்ளை துணியில் கட்டி வைக்க வேண்டும். இடையிடையே சிறிதளவு தண்ணீர் தெளிக்க வேண்டும். 8 அல்லது 10 மணி நேரம் கழித்து பார்த்தால் நன்றாக முளைவிட்டிருக்கும். அதை காலையில் ஒருவேளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் அதிகரிக்க:
முளைகட்டிய பாசிப்பயிறு - 1 கைப்பிடி
சர்க்கரை, ஏலக்காய் - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1/2 கைப்பிடி
பயிறு, தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றை நன்கு அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டுவர பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
வயிற்றுப்புண் குணமாக:
வயிற்றுப்புண்ணை குணப்படுத்துவதில் பாசிப்பயிறு மகத்தானது. இது காரத்தன்மையை கட்டுப்படுத்தும். அதனால்தான் அல்சர் ஏற்பட்டவர்களுக்கு பாசிப்பயிறு குழம்பு வைத்து கொடுப்பார்கள். அதுபோல் கூடுதலான இனிப்பு தன்மையையும் குறைக்கும். பாயாசம் திகட்டாமல் இருப்பதற்காக பாசிப்பருப்பைதான் சேர்ப்பார்கள்.

பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.
பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.






