என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
இந்த ஆசனம் கால்களுக்கு வலிமை தரும். உங்கள் முதுகு தசைகளை பலப்படுத்த மிகவும் பயனுள்ள ஆசனம் இது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
பாதாகுஸ்தாசனம் அல்லது கால்விரல்கள் நிலைப்பாடு என்பது உங்கள் உள்தொடைகள், இடுப்பு மற்றும் உங்கள் முழங்கால்களின் பின்புறத்தை நீட்டிப்பு செய்ய சிறந்த ஆசனமாகும். இந்த ஆசனம் உங்கள் முதுகு தசைகளை பலப்படுத்த மிகவும் பயனுள்ள ஆசனம். இது இனப்பெருக்க அமைப்பு ஒழுங்குபடுத்த மற்றும் செரிமான அமைப்பு சீராக இயங்கவும் உதவுகிறது.
செய்முறை :
விரிப்பில் வசதியாக சுகாசனம் அல்லது சுலபமான அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் இடது காலை வளைத்து, உங்கள் இடது பாதம் உங்கள் இடது பிட்டத்தின் அருகில் வரும் படி வையுங்கள். பின்பு உங்கள் வலது பாதத்தை வளைத்து அதை உங்கள் இடது பாதத்தின் அருகில் வரும் படி வையுங்கள்.
மெதுவாக உங்கள் எடை முழுவதையும் உங்கள் கால்விரல்களில் மாற்றி உங்கள் கைகளை உங்கள் உடலின் பக்கவாட்டில் ஆதரவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் முதுகை நேராக வைத்துக் கொள்ள நினைவில் கொள்ளுங்கள்.
மெதுவாக உங்கள் இடது பாதத்தை தூக்கி அதை உங்கள் வலது தொடை மீது வையுங்கள். உங்கள் வலது தொடை தரைக்கு இணையாக இருக்க வேண்டும் என்று நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் முழு உடலின் எடை இப்போது உங்கள் கால்விரல்களில் மற்றும் வலது பாதத்தின் பந்தில் இருக்கிறது. சமநிலை படுத்த முயலும் போது உங்கள் உடலை மிகவும் அதிகமாக நகர்த்தாதீர்கள்.
நீங்கள் நிலையில் உங்களை சமப்படுத்திய பின், உங்கள் உள்ளங்கைகளை இங்கள் மார்புக்கு முன் இணைத்து சில அடுத்தடுத்த ஆழமான மூச்சுகளை எடுங்கள். நீங்கள் நிலையில் இருக்கும் போது உங்கள் மூச்சை பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள்.
அதிலிருந்து விடுபட, மெதுவாக உங்கள் கைகளை உடலின் பக்கவாட்டில் எடுத்து மெதுவாக உங்கள் இடது காலை இறக்குங்கள். இந்த நிலைகளை உங்கள் மற்றொரு காலுடன் திரும்ப செய்யுங்கள். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யவும்.
செய்முறை :
விரிப்பில் வசதியாக சுகாசனம் அல்லது சுலபமான அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் இடது காலை வளைத்து, உங்கள் இடது பாதம் உங்கள் இடது பிட்டத்தின் அருகில் வரும் படி வையுங்கள். பின்பு உங்கள் வலது பாதத்தை வளைத்து அதை உங்கள் இடது பாதத்தின் அருகில் வரும் படி வையுங்கள்.
மெதுவாக உங்கள் எடை முழுவதையும் உங்கள் கால்விரல்களில் மாற்றி உங்கள் கைகளை உங்கள் உடலின் பக்கவாட்டில் ஆதரவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் முதுகை நேராக வைத்துக் கொள்ள நினைவில் கொள்ளுங்கள்.
மெதுவாக உங்கள் இடது பாதத்தை தூக்கி அதை உங்கள் வலது தொடை மீது வையுங்கள். உங்கள் வலது தொடை தரைக்கு இணையாக இருக்க வேண்டும் என்று நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் முழு உடலின் எடை இப்போது உங்கள் கால்விரல்களில் மற்றும் வலது பாதத்தின் பந்தில் இருக்கிறது. சமநிலை படுத்த முயலும் போது உங்கள் உடலை மிகவும் அதிகமாக நகர்த்தாதீர்கள்.
நீங்கள் நிலையில் உங்களை சமப்படுத்திய பின், உங்கள் உள்ளங்கைகளை இங்கள் மார்புக்கு முன் இணைத்து சில அடுத்தடுத்த ஆழமான மூச்சுகளை எடுங்கள். நீங்கள் நிலையில் இருக்கும் போது உங்கள் மூச்சை பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள்.
அதிலிருந்து விடுபட, மெதுவாக உங்கள் கைகளை உடலின் பக்கவாட்டில் எடுத்து மெதுவாக உங்கள் இடது காலை இறக்குங்கள். இந்த நிலைகளை உங்கள் மற்றொரு காலுடன் திரும்ப செய்யுங்கள். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யவும்.
கோடைக்காலத்தில் வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான பானங்களே பலரும் விரும்புகின்றனர். தேங்காய் பாலும் உடலின் உஷ்ணத்தை வெகுவாக குறைக்கக் கூடியது.
பசும் பாலுடன் ஒப்பிடும் போது தேங்காய் பால் அதிகம் வயிறு அடைத்த உணர்வைக் கொடுக்காது, லைட்டாக இருக்கும். தேங்காய் பாலின் நன்மைகளை தெரிந்து கொண்டால் நிச்சயம் அதை உணவில் சேர்த்துக் கொள்வீர்கள். தேங்காய் பாலில் உள்ள லாரிக் ஆசிட் உள்ளது. இது தாய்ப்பாலில் மட்டுமே இருக்கக் கூடியது. குழந்தை உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கோடைக்காலத்தில் ஸ்மூத்தி செய்யும் போது பசும் பாலுக்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்து மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரியுடன் சியா விதைகள் சேர்த்து மிக்ஸியில் அடித்து குடிக்கலாம். உடல் எடை குறைப்புக்கான சரியான பானமாக இருக்கும்.
1. வெயிலினால் ஏற்படும் வெப்பத் தாக்கம், இதய பிரச்னைகள், சோர்வு, தசை வலி அல்லது கோளாறுகள் மற்றும் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
2. உடலில் உள்ள எலெக்ட் ரோலைட்ஸ் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
3. எளிதில் செரிக்கக் கூடியது. லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களும் இதை அருந்தலாம்.
4. தேங்காய் பால் இரத்த அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. பொட்டாசியம் மிகவும் அதிகம்.
5. தேங்காய் பாலில் இருக்கு இரும்புச் சத்து இரத்த சோகை நீங்க உதவுகிறது.
6. தேங்காய் பாலில் உள்ள நார்ச்சத்து பசியை வெகுநேரம் தாங்கக்கூடியது. உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது.
7. தேங்காய் பால் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
8. உடலில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க தேங்காய் பால் மிகவும் உதவுகிறது. ஒரு டம்ளர் தேங்காய் பால் நாள் முழுவதும் உடலை நீர்ச்சத்து வற்றாமல் வைத்துக் கொள்ள உதவுகிறது.
9. தேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்து தலை முடிக்கும் சருமத்திற்கும் மிகவும் ஏற்றது.
1. வெயிலினால் ஏற்படும் வெப்பத் தாக்கம், இதய பிரச்னைகள், சோர்வு, தசை வலி அல்லது கோளாறுகள் மற்றும் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
2. உடலில் உள்ள எலெக்ட் ரோலைட்ஸ் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
3. எளிதில் செரிக்கக் கூடியது. லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களும் இதை அருந்தலாம்.
4. தேங்காய் பால் இரத்த அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. பொட்டாசியம் மிகவும் அதிகம்.
5. தேங்காய் பாலில் இருக்கு இரும்புச் சத்து இரத்த சோகை நீங்க உதவுகிறது.
6. தேங்காய் பாலில் உள்ள நார்ச்சத்து பசியை வெகுநேரம் தாங்கக்கூடியது. உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது.
7. தேங்காய் பால் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
8. உடலில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க தேங்காய் பால் மிகவும் உதவுகிறது. ஒரு டம்ளர் தேங்காய் பால் நாள் முழுவதும் உடலை நீர்ச்சத்து வற்றாமல் வைத்துக் கொள்ள உதவுகிறது.
9. தேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்து தலை முடிக்கும் சருமத்திற்கும் மிகவும் ஏற்றது.
பிடித்த நிறத்தில் தலைமுடியை மாற்றி கொள்கிறோம். ஹேர் கலரை நீங்கள் விரும்பாதபோது அதனை எப்படி நீக்குவதென்பது தெரியாமல் இருப்பவர்களுக்காகவே இந்த குறிப்புகள்.
தலைமுடியை நாம் இஷ்டப்பட்டதை போல் எப்படி எப்படியோ அலங்கரித்து கொள்கிறோம். நமக்கு பிடித்தவாறு முடி வெட்டி கொள்கிறோம். பிடித்த நிறத்தில் தலைமுடியை மாற்றி கொள்கிறோம். பல ஷேட்களில் இருக்கும் நிறங்களை தலைமுடியில் ஏற்றும்போது கூந்தல் வலுவிழந்து போகும். ஹேர் கலரை நீங்கள் விரும்பாதபோது அதனை எப்படி நீக்குவதென்பது தெரியாமல் இருப்பவர்களுக்காகவே இந்த குறிப்புகள்.
* ஒரு பௌலில் எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் சேர்த்து கலக்கவும். இதனை தலைமுடிக்கு தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து தலைமுடியை அலசி விடவும். எலுமிச்சை தலைமுடியில் உள்ள செயற்கை நிறத்தை அகற்றி கூந்தலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். பேக்கிங் சோடா கூந்தலை வலுவலுப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும். இந்த கலவையை தலைமுடியில் தடவி அலசியது, மீண்டும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு தலைமுடியை பராமரிக்கவும்.
* எப்சம் சால்ட் மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் கலந்து தலைமுடியில் தடவினால், செயற்கை நிறம் நீங்கிவிடும். இந்த கலவையை 20 நிமிடங்கள் வைத்திருந்து தலைமுடியை அலசவும். பின் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தவும்.
* நீங்கள் ஹேர் கலர் செய்ததும் ஒருவேளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், 24 மணிநேரத்திற்குள் வினிகரை பயன்படுத்தி அந்த செயற்கை நிறத்தை நீக்கிவிட முடியும். தலைமுடியில் தடவி 10 நிமிடங்கள் வைத்திருந்து அலசிவிடவும். இதுபோன்று தொடர்ச்சியாக செய்து வருவதனால் அந்த நிறத்தின் அடர்த்தி குறைய வாய்ப்பு இருக்கிறது.
* ஒரு பௌலில் எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் சேர்த்து கலக்கவும். இதனை தலைமுடிக்கு தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து தலைமுடியை அலசி விடவும். எலுமிச்சை தலைமுடியில் உள்ள செயற்கை நிறத்தை அகற்றி கூந்தலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். பேக்கிங் சோடா கூந்தலை வலுவலுப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும். இந்த கலவையை தலைமுடியில் தடவி அலசியது, மீண்டும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு தலைமுடியை பராமரிக்கவும்.
* எப்சம் சால்ட் மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் கலந்து தலைமுடியில் தடவினால், செயற்கை நிறம் நீங்கிவிடும். இந்த கலவையை 20 நிமிடங்கள் வைத்திருந்து தலைமுடியை அலசவும். பின் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தவும்.
* நீங்கள் ஹேர் கலர் செய்ததும் ஒருவேளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், 24 மணிநேரத்திற்குள் வினிகரை பயன்படுத்தி அந்த செயற்கை நிறத்தை நீக்கிவிட முடியும். தலைமுடியில் தடவி 10 நிமிடங்கள் வைத்திருந்து அலசிவிடவும். இதுபோன்று தொடர்ச்சியாக செய்து வருவதனால் அந்த நிறத்தின் அடர்த்தி குறைய வாய்ப்பு இருக்கிறது.
குழந்தைகளுக்கு சரும பிரச்னைகள் எதுவும் வராமல் இருக்க குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க வேண்டியதும் முக்கியம். அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
குழந்தையின் சருமத்தில் நேரடியாக படும் துணியை மிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும். கிருமிகள் இல்லாத துணியாக இருப்பின், குழந்தைக்கு கிருமி தாக்குதல், சரும பிரச்னைகள் போன்றவை பெரிதும் தாக்காமல் தடுக்கலாம்.
புதிய ஆடைகளை குழந்தைக்கு அணிவிப்பதற்கு முன் கட்டாயம் துவைத்துவிட்டு குழந்தைகளுக்கு அணிவிப்பதுதான் சரி. துவைக்காத புத்தம் புதிய ஆடையோ துவைக்காத ஆடையோ குழந்தைக்கு அணிவித்தால் பிரச்னை ஆரம்பிக்கும். சரும பிரச்னைகள் வரலாம். துணியில் உள்ள தூசு, ஸ்டார்ச், கெமிக்கல்கள், துணியை தயாரிக்க பயன்படுத்தும் நிறங்கள் ஆகியவற்றால் பாதிப்பு வரும்.
குழந்தை துணிகளுக்கு என பிரத்யேக டிடர்ஜென்ட் பவுடர்கள் எதுவும் தேவையில்லை. குடும்பத்தில் அனைவருக்கும் பயன்படுத்த கூடிய அதே டிடர்ஜென்ட் பயன்படுத்தினாலே போதும்.
குழந்தைகளின் துணியில் நீங்காத கறை படிந்துவிட்டால், அதை துவைப்பதற்கு முன் அந்த கறையை நீக்கி விட்டு குழந்தையின் துணியை துவைப்பது நல்லது. இதனால் துணியும் புதிதாகவே இருக்கும்.
குழந்தையின் துணிகளை துவைக்கும்போது மற்றவர்களின் துணியுடன் சேர்த்து ஊறவைத்து துவைக்க கூடாது. அதுபோல் மெஷினில் மற்றவர்களது துணியுடன் குழந்தைகளுடைய துணியையும் போட வேண்டாம்.
பெரியவர்களது துணியில் உள்ள கிருமிகள், குழந்தைகளின் துணியில் பரவும் என்பதால் குழந்தைகளின் துணியை தனியாக துவைப்பதே சரி.
1 - 2 துளிகள் கிருமி நீக்கும் திரவங்களை துவைக்கையில் பயன்படுத்தலாம்.

குழந்தையின் துணியை கட்டாயமாக வெயிலில் காயவைத்து உலர்த்த வேண்டும். வீட்டுக்குள்ளே குழந்தையின் உலர்த்த கூடாது. இதனால் கிருமிகள் நீங்காது.
சூரிய வெளிச்சம் மற்றும் சுத்தமான காற்றும் குழந்தைகளின் துணியில் பட வேண்டும் என்பதால் வெயில் வரும் இடங்களில் துணியை உலர்த்த வேண்டியது அவசியம்.
குழந்தையின் துணியை துவைப்பதற்கு முன் இளஞ்சூடான தண்ணீரில் துணிகளை ஊறவைக்க வேண்டியது அவசியம். இதனால் தூசு, கிருமிகள் ஆகியவை எளிதில் நீங்க உதவும்.
தனியாக துவைத்த குழந்தைகளின் துணிகளை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டியதும் முக்கியம்.
மழை காலத்தில் குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க, கிருமிகளை நீக்க அயன் செய்வது சிறந்த வழி.
முடிந்தவரை குழந்தைக்கு பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட உடைகளை மட்டுமே அணிவிப்பது நல்லது.
குழந்தையின் துணியை துவைத்து முடித்த பின் இறுதியாக கிருமி நீக்கும் திரவங்களை தெளித்த நீரில் அலசுவது நல்லது.
புதிய ஆடைகளை குழந்தைக்கு அணிவிப்பதற்கு முன் கட்டாயம் துவைத்துவிட்டு குழந்தைகளுக்கு அணிவிப்பதுதான் சரி. துவைக்காத புத்தம் புதிய ஆடையோ துவைக்காத ஆடையோ குழந்தைக்கு அணிவித்தால் பிரச்னை ஆரம்பிக்கும். சரும பிரச்னைகள் வரலாம். துணியில் உள்ள தூசு, ஸ்டார்ச், கெமிக்கல்கள், துணியை தயாரிக்க பயன்படுத்தும் நிறங்கள் ஆகியவற்றால் பாதிப்பு வரும்.
குழந்தை துணிகளுக்கு என பிரத்யேக டிடர்ஜென்ட் பவுடர்கள் எதுவும் தேவையில்லை. குடும்பத்தில் அனைவருக்கும் பயன்படுத்த கூடிய அதே டிடர்ஜென்ட் பயன்படுத்தினாலே போதும்.
குழந்தைகளின் துணியில் நீங்காத கறை படிந்துவிட்டால், அதை துவைப்பதற்கு முன் அந்த கறையை நீக்கி விட்டு குழந்தையின் துணியை துவைப்பது நல்லது. இதனால் துணியும் புதிதாகவே இருக்கும்.
குழந்தையின் துணிகளை துவைக்கும்போது மற்றவர்களின் துணியுடன் சேர்த்து ஊறவைத்து துவைக்க கூடாது. அதுபோல் மெஷினில் மற்றவர்களது துணியுடன் குழந்தைகளுடைய துணியையும் போட வேண்டாம்.
பெரியவர்களது துணியில் உள்ள கிருமிகள், குழந்தைகளின் துணியில் பரவும் என்பதால் குழந்தைகளின் துணியை தனியாக துவைப்பதே சரி.
1 - 2 துளிகள் கிருமி நீக்கும் திரவங்களை துவைக்கையில் பயன்படுத்தலாம்.

குழந்தையின் துணியை கட்டாயமாக வெயிலில் காயவைத்து உலர்த்த வேண்டும். வீட்டுக்குள்ளே குழந்தையின் உலர்த்த கூடாது. இதனால் கிருமிகள் நீங்காது.
சூரிய வெளிச்சம் மற்றும் சுத்தமான காற்றும் குழந்தைகளின் துணியில் பட வேண்டும் என்பதால் வெயில் வரும் இடங்களில் துணியை உலர்த்த வேண்டியது அவசியம்.
குழந்தையின் துணியை துவைப்பதற்கு முன் இளஞ்சூடான தண்ணீரில் துணிகளை ஊறவைக்க வேண்டியது அவசியம். இதனால் தூசு, கிருமிகள் ஆகியவை எளிதில் நீங்க உதவும்.
தனியாக துவைத்த குழந்தைகளின் துணிகளை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டியதும் முக்கியம்.
மழை காலத்தில் குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க, கிருமிகளை நீக்க அயன் செய்வது சிறந்த வழி.
முடிந்தவரை குழந்தைக்கு பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட உடைகளை மட்டுமே அணிவிப்பது நல்லது.
குழந்தையின் துணியை துவைத்து முடித்த பின் இறுதியாக கிருமி நீக்கும் திரவங்களை தெளித்த நீரில் அலசுவது நல்லது.
வெயில் காலத்தில் கூழ், களி சாப்பிடுவது உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும். இன்று அரிசி மாவுடன் மோர் சேர்த்து களி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 1 கப்
மோர் - ½ கப்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
நல்லெண்ணெய் - சிறிதளவு
இந்துப்பு - சிறிதளவு

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் மோர் சேர்த்து நன்கு கரைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும்.
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டுத் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் கரைத்து வைத்துள்ள அரிசி மாவை ஊற்றி கிளறவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். கட்டி சேராமல் பார்த்துக் கொள்ளவும்.
சரியானப் பதத்துக்கு வந்த பிறகு இறக்கி பரிமாறவும்.
அரிசி மாவு - 1 கப்
மோர் - ½ கப்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
நல்லெண்ணெய் - சிறிதளவு
இந்துப்பு - சிறிதளவு
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - சிறிதளவு

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் மோர் சேர்த்து நன்கு கரைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும்.
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டுத் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் கரைத்து வைத்துள்ள அரிசி மாவை ஊற்றி கிளறவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். கட்டி சேராமல் பார்த்துக் கொள்ளவும்.
சரியானப் பதத்துக்கு வந்த பிறகு இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சத்தான அரிசி மாவு மோர் களி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.
இரத்தத்தில் இரும்பு சத்து (Iron), விட்டமின் பி (Vitamin A) சத்துகள் குறைவாக இருந்தாலோ இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்து காணப்பட்டாலோ இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதாலோ இரத்தசோகை ஏற்படுகிறது. உடலுக்கு கொண்டு செல்லும் ஆக்சிஜனை உடலின் மற்ற உடல் உறுப்புகள் மற்றும் அனைத்து பாகங்களுக்கும் எடுத்து செல்லாமல் தடை ஏற்பட்டு விடுகிறதல்லவா இதனால்தான் இதை ‘இரத்தசோகை நோய்’ என்கிறார்கள்.
* பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் இரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் இரத்தசோகை.
* மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்தசோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.
* இரத்தசோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
* இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
* இரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.
* பல்வேறு ஆய்வுகளின் படி, ஒரு நாடு அல்லது ஒரு மாநிலம் இரத்தசோகையின் காரணமாக தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-4% வரை இழக்கும்.
* இரும்பு சத்து குறைபாடு (Iron deficiency) காரணமாக ஏற்படும் உடல் ரீதியான மற்றும் அறிவு ரீதியான இழப்புகளை ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05%.
* வளரும் நாடுகளில் இரும்பு சத்து குறைவு, அயோடின் குறைபாடு (Iodine deficiency) மற்றும் விட்டமின் ஏ குறைபாடு (Vitamin A deficiency) ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் அவற்றின் பொருளாதார செலவு உள்நாட்டு உற்பத்தியில் 5% அளவு இருக்கும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.
* பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் இரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் இரத்தசோகை.
* மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்தசோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.
* இரத்தசோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
* இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
* இரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.
* பல்வேறு ஆய்வுகளின் படி, ஒரு நாடு அல்லது ஒரு மாநிலம் இரத்தசோகையின் காரணமாக தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-4% வரை இழக்கும்.
* இரும்பு சத்து குறைபாடு (Iron deficiency) காரணமாக ஏற்படும் உடல் ரீதியான மற்றும் அறிவு ரீதியான இழப்புகளை ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05%.
* வளரும் நாடுகளில் இரும்பு சத்து குறைவு, அயோடின் குறைபாடு (Iodine deficiency) மற்றும் விட்டமின் ஏ குறைபாடு (Vitamin A deficiency) ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் அவற்றின் பொருளாதார செலவு உள்நாட்டு உற்பத்தியில் 5% அளவு இருக்கும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.
போக்குவரத்து நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் காட்டும் உக்கிரம், பிற மனிதர்களின் பாதுகாப்பில் வெளிப்படுத்தும் உதாசீனம், கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது; தண்டிக்கப்பட வேண்டியதும் கூட.
உலக நாடுகளில் இந்தியா மிகவும் விசித்திரம் ஆனது. போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ‘சிக்னல்’ விளக்கு வைத்து, அதன் கீழே காவலரையும் பணியில் அமர்த்துகிற நாடு உலகிலேயே அநேகமாக இந்தியா மட்டுமாகத்தான் இருக்கும். சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதில் நாம் காட்டும் மெத்தனம், அலட்சியம் மிகவும் அலாதியானது. விதி மீறல், ஒழுங்கீனம் ஆகியன நாடு முழுதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. இந்த விஷயத்தில், எந்த ஒரு மாநிலமும் விதிவிலக்கு இல்லை தமிழகம் உள்பட.
இது தொடர்பாக சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம், தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறது. இரு சக்கர வாகனங்களில் இரண்டுக்கும் மேற்பட்டோர் பயணித்தால், போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதனைக் கண்டும் காணாதது போல் அமைதியாக இருந்து விடுவதாகத் தனது கண்டனத்தையும் பதிவு செய்து இருக்கிறது உயர் நீதி மன்றம்.
இதேபோன்று, இந்தப் பிரச்சினையின் மறு பக்கத்தையும் நீதிமன்றம் கடுமையாகச் சாடி இருக்கலாம் என்று தோன்றுகிறது. பொதுத் தெருக்களில், போக்குவரத்து நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் காட்டும் உக்கிரம், பிற மனிதர்களின் பாதுகாப்பில் வெளிப்படுத்தும் உதாசீனம், கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது; தண்டிக்கப்பட வேண்டியதும் கூட.
சென்னை உள்பட பல நகரங்களில், சாலையைக் கடப்பது, மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறி விட்டது. சிறுவர், முதியோர், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் படும் இன்னல்கள் சொல்லி முடியாது. தெருவின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் செல்வதற்குள் உயிர் போய் வந்து விடுகிறது.
ஒருவர் சாலையைக் கடக்க யத்தனிக்கிறார் என்றால் அவருக்கு முதலில் வழி விட்டுத்தான், வாகன ஓட்டி செல்ல வேண்டும். ஆனால், சீறிப் பாய்கிற வாகனங்கள் எதுவும் சாலையைக் கடக்கிற ஒருவருக்காக வேகத்தைக் குறைத்துக் கொள்வது கூட இல்லை. மித மிஞ்சிப் போனால், காதைத் துளைக்கிற அளவுக்கு, ‘ஹாரன்’ அடிப்பது மட்டுமே நடக்கிறது.
இரவு நேரங்களில் கண்களில் ஊடுருவிச் செல்லும் அதிக வெளிச்சம் தரும் முகப்பு விளக்குகளைப் போடுவது;
அல்லது, முகப்பு விளக்குகளை அணைத்து விட்டு வண்டி ஓட்டுவது, எதிர்த் திசையில் வேகமாக வருவது;
மூன்று, நான்கு பேர் ஒரே வண்டியில் குழுவாக சவாரி செய்வது; வலது, இடது இரண்டு பக்கமும் ‘ஓவர்டேக்’ செய்வது;
குறுக்கும் நெடுக்குமாக வண்டி ஓட்டுவது... என்று எல்லா வகை சாகசங்களையும் சாலைகளில் சர்வ சாதாரணமாக காண முடிகிறது.
ஒரு வாசகம் உண்டு ‘உண்பது நமக்கு; உடுத்துவது பிறருக்கு’. அதாவது, நம் உடல் நலனுக்கு எது ஏற்றதோ அதைத்தான் சாப்பிட வேண்டும்; அதேபோல, மற்றவர்கள் எதை ஏற்கிறார்களோ அந்த உடையைத்தான் அணிந்து கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகளுக்கும் இது பொருந்தும்.
நமக்கு எது ஏற்றதாக இருக்கிறதோ அந்த வாகனம்தான் வைத்துக் கொள்ள வேண்டும்; மற்றவர்களுக்கு எது இடையூறு தராமல் இருக்கிறதோ, அதுதான் ஓட்டுகிற ‘ஸ்டைல்’ஆக இருத்தல் வேண்டும். அளவுக்கு அதிகமான வேகம், நம்மை மட்டுமன்று; பிறரையும் துன்பத்துக்கு உள்ளாக்கும் என்பதை உணர வேண்டும்.
ஒருவரின் அஜாக்கிரதைக்கு வேறு யாரோ ஒருவர் ஏன் பாதிக்கப்பட வேண்டும்...? ஒருவரை அச்சுறுத்துகிற வகையில் வண்டி ஓட்டுவதால் பிறரைக் ‘கவர்ந்து’ விடலாம் என்கிற சினிமாத் தனமான கற்பனை மாற வேண்டும். பேச்சில், செயலில், நடத்தையில் காட்டுகிற கண்ணியம்தான் நிரந்தரமாக எவரையும் கவரக் கூடிய ஆற்றல் படைத்தது.
சாலையில் நாம் காணும் ஒழுங்கீனத்துக்கு, இளைஞர்களை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. எட்டு, ஏழு, ஆறு வயதுள்ள சிறுவர்கள்,
இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது இல்லையா...? நெருக்கடி நிறைந்த சாலைகளில், நண்பர்களை ஏற்றிக்கொண்டு, இரு சக்கர வாகனங்களை பள்ளி மாணவர்கள் ஓட்டிச் செல்வது இல்லையா...? இவை எல்லாம் பெற்றோருக்குத் தெரியாமல்தான் நடக்கின்றனவா...? வேதனையான உண்மை பெற்றோரே தம் கண்ணெதிரில் இதனை அனுமதிக்கிறார்கள். இது தவறு; குற்றம்; ஆபத்து. யார் சொல்லிப் புரிய வைப்பது...?
தம் பிள்ளைகளுக்கு நல்லனவற்றை எடுத்துச் சொல்ல வேண்டியது, பெற்றோரின் தலையாய கடமை. அவர்களே தவறான வழியைக் காண்பித்து விட்டுப் பிறகு மற்றவரைக் குறை சொல்லலாமா...? கடைக்குச் செல்ல, நண்பர்களைப் பார்த்து வர, பொழுதுபோக்காக ஊர் சுற்றி வர, இயன்றவரை பிள்ளைகளை நடந்தே செல்ல அறிவுறுத்த வேண்டும். செலவும் குறையும்; ஆரோக்கியமும் கூட. சற்றே தொலைவில் செல்வதானால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
சாலைப் போக்குவரத்தில் நாம் காணும் ஒழுங்கீனம், விதிமீறல்கள், நமது கலாசாரம், பண்பாட்டு அடையாளமாக மாறி விடுகிற அபாயமும் இருக்கிறது. நாளை, இதுதான் தமிழரின் வாழ்க்கை முறை என்று சொல்கிற நிலைக்கு நாம் வந்து விடாமல் தடுத்தாக வேண்டும்.
“பெயத் தக்க நஞ்சுண்டு அமைகிற நயத் தக்க நாகரிகம்” தமிழ் மறை காட்டுகிற பழம் பெரும் பண்பாடு. இது மட்டுமல்ல; ‘இன்னா செய்தார்க்கும், அவர் நாண நன்னயம் செய்து விடுகிற’, சமுதாயமாக நாம் இருந்து இருக்கிறோம்.
இன்று நாம் காணும் சாலை சாகசங்கள், இவற்றுக்கு எல்லாம் முற்றிலும் மாறானவை; நம் இனத்துக்கே களங்கம் விளைவிப்பவை.
‘இப்படித்தான் நடந்து கொள்வேன்’ என்று சொல்லவோ, ‘நீ யார் என்னைக் கேட்க..?’ என்று வினவவோ, யாருக்கும் அதிகாரம் இல்லை. யாருக்கும் ஊறு விளைவிக்காமல் வண்டி ஓட்டுதல் நமது கடமை; அதனைப் பிறரிடம் எதிர்பார்த்தல் நமது உரிமை.
சாலை விதிமீறல்கள் தயவு தாட்சண்யம் இன்றி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் தனது கடமையைச் செய்யட்டும்; அதே போன்று, பெற்றோரும் பொறுப்பு உணர்ந்து செயல் படட்டும். இனியொரு சாலை விபத்தில் யாரும் உயிர் இழப்பதோ, காயம் உறுவதோ கூடாது.
‘பாதுகாப்பான போக்குவரத்து’ தமிழ்நாட்டின் தனி அடையாளமாகத் திகழட்டும்!
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமானவரித்துறை அலுவலர்
இது தொடர்பாக சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம், தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறது. இரு சக்கர வாகனங்களில் இரண்டுக்கும் மேற்பட்டோர் பயணித்தால், போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதனைக் கண்டும் காணாதது போல் அமைதியாக இருந்து விடுவதாகத் தனது கண்டனத்தையும் பதிவு செய்து இருக்கிறது உயர் நீதி மன்றம்.
இதேபோன்று, இந்தப் பிரச்சினையின் மறு பக்கத்தையும் நீதிமன்றம் கடுமையாகச் சாடி இருக்கலாம் என்று தோன்றுகிறது. பொதுத் தெருக்களில், போக்குவரத்து நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் காட்டும் உக்கிரம், பிற மனிதர்களின் பாதுகாப்பில் வெளிப்படுத்தும் உதாசீனம், கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது; தண்டிக்கப்பட வேண்டியதும் கூட.
சென்னை உள்பட பல நகரங்களில், சாலையைக் கடப்பது, மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறி விட்டது. சிறுவர், முதியோர், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் படும் இன்னல்கள் சொல்லி முடியாது. தெருவின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் செல்வதற்குள் உயிர் போய் வந்து விடுகிறது.
ஒருவர் சாலையைக் கடக்க யத்தனிக்கிறார் என்றால் அவருக்கு முதலில் வழி விட்டுத்தான், வாகன ஓட்டி செல்ல வேண்டும். ஆனால், சீறிப் பாய்கிற வாகனங்கள் எதுவும் சாலையைக் கடக்கிற ஒருவருக்காக வேகத்தைக் குறைத்துக் கொள்வது கூட இல்லை. மித மிஞ்சிப் போனால், காதைத் துளைக்கிற அளவுக்கு, ‘ஹாரன்’ அடிப்பது மட்டுமே நடக்கிறது.
இரவு நேரங்களில் கண்களில் ஊடுருவிச் செல்லும் அதிக வெளிச்சம் தரும் முகப்பு விளக்குகளைப் போடுவது;
அல்லது, முகப்பு விளக்குகளை அணைத்து விட்டு வண்டி ஓட்டுவது, எதிர்த் திசையில் வேகமாக வருவது;
மூன்று, நான்கு பேர் ஒரே வண்டியில் குழுவாக சவாரி செய்வது; வலது, இடது இரண்டு பக்கமும் ‘ஓவர்டேக்’ செய்வது;
குறுக்கும் நெடுக்குமாக வண்டி ஓட்டுவது... என்று எல்லா வகை சாகசங்களையும் சாலைகளில் சர்வ சாதாரணமாக காண முடிகிறது.
ஒரு வாசகம் உண்டு ‘உண்பது நமக்கு; உடுத்துவது பிறருக்கு’. அதாவது, நம் உடல் நலனுக்கு எது ஏற்றதோ அதைத்தான் சாப்பிட வேண்டும்; அதேபோல, மற்றவர்கள் எதை ஏற்கிறார்களோ அந்த உடையைத்தான் அணிந்து கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகளுக்கும் இது பொருந்தும்.
நமக்கு எது ஏற்றதாக இருக்கிறதோ அந்த வாகனம்தான் வைத்துக் கொள்ள வேண்டும்; மற்றவர்களுக்கு எது இடையூறு தராமல் இருக்கிறதோ, அதுதான் ஓட்டுகிற ‘ஸ்டைல்’ஆக இருத்தல் வேண்டும். அளவுக்கு அதிகமான வேகம், நம்மை மட்டுமன்று; பிறரையும் துன்பத்துக்கு உள்ளாக்கும் என்பதை உணர வேண்டும்.
ஒருவரின் அஜாக்கிரதைக்கு வேறு யாரோ ஒருவர் ஏன் பாதிக்கப்பட வேண்டும்...? ஒருவரை அச்சுறுத்துகிற வகையில் வண்டி ஓட்டுவதால் பிறரைக் ‘கவர்ந்து’ விடலாம் என்கிற சினிமாத் தனமான கற்பனை மாற வேண்டும். பேச்சில், செயலில், நடத்தையில் காட்டுகிற கண்ணியம்தான் நிரந்தரமாக எவரையும் கவரக் கூடிய ஆற்றல் படைத்தது.
சாலையில் நாம் காணும் ஒழுங்கீனத்துக்கு, இளைஞர்களை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. எட்டு, ஏழு, ஆறு வயதுள்ள சிறுவர்கள்,
இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது இல்லையா...? நெருக்கடி நிறைந்த சாலைகளில், நண்பர்களை ஏற்றிக்கொண்டு, இரு சக்கர வாகனங்களை பள்ளி மாணவர்கள் ஓட்டிச் செல்வது இல்லையா...? இவை எல்லாம் பெற்றோருக்குத் தெரியாமல்தான் நடக்கின்றனவா...? வேதனையான உண்மை பெற்றோரே தம் கண்ணெதிரில் இதனை அனுமதிக்கிறார்கள். இது தவறு; குற்றம்; ஆபத்து. யார் சொல்லிப் புரிய வைப்பது...?
தம் பிள்ளைகளுக்கு நல்லனவற்றை எடுத்துச் சொல்ல வேண்டியது, பெற்றோரின் தலையாய கடமை. அவர்களே தவறான வழியைக் காண்பித்து விட்டுப் பிறகு மற்றவரைக் குறை சொல்லலாமா...? கடைக்குச் செல்ல, நண்பர்களைப் பார்த்து வர, பொழுதுபோக்காக ஊர் சுற்றி வர, இயன்றவரை பிள்ளைகளை நடந்தே செல்ல அறிவுறுத்த வேண்டும். செலவும் குறையும்; ஆரோக்கியமும் கூட. சற்றே தொலைவில் செல்வதானால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
சாலைப் போக்குவரத்தில் நாம் காணும் ஒழுங்கீனம், விதிமீறல்கள், நமது கலாசாரம், பண்பாட்டு அடையாளமாக மாறி விடுகிற அபாயமும் இருக்கிறது. நாளை, இதுதான் தமிழரின் வாழ்க்கை முறை என்று சொல்கிற நிலைக்கு நாம் வந்து விடாமல் தடுத்தாக வேண்டும்.
“பெயத் தக்க நஞ்சுண்டு அமைகிற நயத் தக்க நாகரிகம்” தமிழ் மறை காட்டுகிற பழம் பெரும் பண்பாடு. இது மட்டுமல்ல; ‘இன்னா செய்தார்க்கும், அவர் நாண நன்னயம் செய்து விடுகிற’, சமுதாயமாக நாம் இருந்து இருக்கிறோம்.
இன்று நாம் காணும் சாலை சாகசங்கள், இவற்றுக்கு எல்லாம் முற்றிலும் மாறானவை; நம் இனத்துக்கே களங்கம் விளைவிப்பவை.
‘இப்படித்தான் நடந்து கொள்வேன்’ என்று சொல்லவோ, ‘நீ யார் என்னைக் கேட்க..?’ என்று வினவவோ, யாருக்கும் அதிகாரம் இல்லை. யாருக்கும் ஊறு விளைவிக்காமல் வண்டி ஓட்டுதல் நமது கடமை; அதனைப் பிறரிடம் எதிர்பார்த்தல் நமது உரிமை.
சாலை விதிமீறல்கள் தயவு தாட்சண்யம் இன்றி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் தனது கடமையைச் செய்யட்டும்; அதே போன்று, பெற்றோரும் பொறுப்பு உணர்ந்து செயல் படட்டும். இனியொரு சாலை விபத்தில் யாரும் உயிர் இழப்பதோ, காயம் உறுவதோ கூடாது.
‘பாதுகாப்பான போக்குவரத்து’ தமிழ்நாட்டின் தனி அடையாளமாகத் திகழட்டும்!
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமானவரித்துறை அலுவலர்
காற்றில் கலந்திருக்கும் `பிராண வாயு‘ என்ற `ஆக்சிஜன்‘ வாயு தான், நாம் உயிர்வாழ பெரிதும் உதவுகிறது. இந்த கண்ணுக்கு தெரியாத காற்றில், ஆக்சிஜன் தவிர, இன்னும் நிறைய வாயுக்கள் இயற்கையாக கலந்துள்ளன.
நம்மை அறியாமலே, இயற்கையாக, தன்னிச்சையாக, சுவாசித்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதைப் பற்றி நாம் யாரும் கண்டுகொள்வதில்லை. கணக்கில் எடுத்துக் கொள்வதும் இல்லை. சுவாசித்தல், நுரையீரல் என்கிற உறுப்பு மூலமாகத்தான் நடைபெறுகிறது. நுரையீரல் நமது உடலில் மார்பின் இரண்டு பக்கமும் நிறைந்திருக்கிறது.
நமது மார்பில் உள்ள இரண்டு நுரையீரல்களிலும் கண்ணுக்குத் தெரியாத அளவில் மிக மிகச் சிறிய பலூன் போன்ற காற்றுப் பைகள் சுமார் முப்பது கோடி எண்ணிக்கையில் இருக்கின்றன. வெளியில் இருந்து உள்ளே இழுக்கப்படும் காற்று, இந்த முப்பது கோடி காற்றுப் பைகளுக்குள்ளும் சென்றுதான், மாற்றமாகி, மறுபடியும் வெளியே வருகிறது.
உலகமெங்கும் பரவியிருக்கும் காற்றைத்தான், நாம் பிறந்த நாளில் இருந்து இறக்கும் நாள் வரை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். காற்று, கண்ணுக்கு தெரியாதது. ஆனால் எங்கும் நிறைந்து இருப்பது. செடி, கொடிகள் அசையும்போது நாம் காற்று அடிக்கிறது என்று சொல்கிறோம். காற்றை நம்மால் உணர மட்டும் தான் முடியும். காற்றை நாம் சுவாசிப்பதனால்தான் உயிர் வாழ்கிறோம்.

சுவாசித்தல் நின்று விட்டால், உயிரும் நின்று விட்டதாக அர்த்தம். காற்றில் கலந்திருக்கும் `பிராண வாயு‘ என்ற `ஆக்சிஜன்‘ வாயு தான், நாம் உயிர்வாழ பெரிதும் உதவுகிறது. இந்த கண்ணுக்கு தெரியாத காற்றில், ஆக்சிஜன் தவிர, இன்னும் நிறைய வாயுக்கள் இயற்கையாக கலந்துள்ளன. அதாவது, காற்றில் சுமார் 78 சதவீதம் நைட்ரஜன் வாயுவும், 21 சதவீதம் ஆக்சிஜன் வாயுவும் இருக்கின்றன. மீதமுள்ள ஒரு சதவீதத்தில் 0.93 சதவீதம் ஆர்கான் உள்ளது. மேலும் கார்பன்-டை ஆக்ஸைடு மற்றும் நியான், ஹீலியம், மீத்தேன், கிரிப்டான், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன்-டை ஆக்ஸைடு, ஓசோன், அயோடின், அம்மோனியா போன்ற சுமார் 16 விதமான வாயுக்கள் கலந்திருக்கின்றன.
காற்றில் 21 சதவீதம் இருக்கும் ஆக்சிஜன் வாயுதான், நம்மை உயிர் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த 21 சதவீத ஆக்சிஜனில் 1 சதவீதம் குறைந்தால் கூட, உடலில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும். சுமார் ஐந்து சதவீதம் குறைந்தால் அனைத்து உயிருக்கும் ஆபத்துதான். இந்த 21 சதவீத ஆக்சிஜனே உலகிலுள்ள அனைவரும் உயிர்வாழ போதுமானது. இதைக் கெடுக்காமல், இது இன்னும் குறையாமல் பார்த்துக் கொண்டால் சரிதான்.
காற்றின் அழுத்தமும், காற்றின் அடர்த்தியும் உயரம் போகப்போக குறைந்துகொண்டே போகும். சுமார் பத்தாயிரம் மீட்டருக்கு மேலே போகும்போது, காற்றில் உள்ள வாயுக்களின் சதவீதம் மாறும். மனிதன் ஆக்சிஜன் வாயுவை சுவாசித்து, கார்பன்-டை ஆக்ஸைடு என்கிற வாயுவை வெளியே விடுகிறான். இதற்கு நேர்மாறாக, எல்லா செடி, கொடிகளும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளே இழுத்து, ஆக்சிஜன் வாயுவை வெளியே விடுகிறது. சூரிய வெளிச்சம் இருந்தால்தான் இப்படி நடக்கும். சூரிய வெளிச்சம் இல்லாத நேரத்தில் அதாவது இரவில், மனிதனைப் போல தாவரங்களும் ஆக்சிஜன் வாயுவை உள்ளே இழுத்து, கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியே விடுகிறது.
நமது மார்பில் உள்ள இரண்டு நுரையீரல்களிலும் கண்ணுக்குத் தெரியாத அளவில் மிக மிகச் சிறிய பலூன் போன்ற காற்றுப் பைகள் சுமார் முப்பது கோடி எண்ணிக்கையில் இருக்கின்றன. வெளியில் இருந்து உள்ளே இழுக்கப்படும் காற்று, இந்த முப்பது கோடி காற்றுப் பைகளுக்குள்ளும் சென்றுதான், மாற்றமாகி, மறுபடியும் வெளியே வருகிறது.
உலகமெங்கும் பரவியிருக்கும் காற்றைத்தான், நாம் பிறந்த நாளில் இருந்து இறக்கும் நாள் வரை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். காற்று, கண்ணுக்கு தெரியாதது. ஆனால் எங்கும் நிறைந்து இருப்பது. செடி, கொடிகள் அசையும்போது நாம் காற்று அடிக்கிறது என்று சொல்கிறோம். காற்றை நம்மால் உணர மட்டும் தான் முடியும். காற்றை நாம் சுவாசிப்பதனால்தான் உயிர் வாழ்கிறோம்.

சுவாசித்தல் நின்று விட்டால், உயிரும் நின்று விட்டதாக அர்த்தம். காற்றில் கலந்திருக்கும் `பிராண வாயு‘ என்ற `ஆக்சிஜன்‘ வாயு தான், நாம் உயிர்வாழ பெரிதும் உதவுகிறது. இந்த கண்ணுக்கு தெரியாத காற்றில், ஆக்சிஜன் தவிர, இன்னும் நிறைய வாயுக்கள் இயற்கையாக கலந்துள்ளன. அதாவது, காற்றில் சுமார் 78 சதவீதம் நைட்ரஜன் வாயுவும், 21 சதவீதம் ஆக்சிஜன் வாயுவும் இருக்கின்றன. மீதமுள்ள ஒரு சதவீதத்தில் 0.93 சதவீதம் ஆர்கான் உள்ளது. மேலும் கார்பன்-டை ஆக்ஸைடு மற்றும் நியான், ஹீலியம், மீத்தேன், கிரிப்டான், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன்-டை ஆக்ஸைடு, ஓசோன், அயோடின், அம்மோனியா போன்ற சுமார் 16 விதமான வாயுக்கள் கலந்திருக்கின்றன.
காற்றில் 21 சதவீதம் இருக்கும் ஆக்சிஜன் வாயுதான், நம்மை உயிர் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த 21 சதவீத ஆக்சிஜனில் 1 சதவீதம் குறைந்தால் கூட, உடலில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும். சுமார் ஐந்து சதவீதம் குறைந்தால் அனைத்து உயிருக்கும் ஆபத்துதான். இந்த 21 சதவீத ஆக்சிஜனே உலகிலுள்ள அனைவரும் உயிர்வாழ போதுமானது. இதைக் கெடுக்காமல், இது இன்னும் குறையாமல் பார்த்துக் கொண்டால் சரிதான்.
காற்றின் அழுத்தமும், காற்றின் அடர்த்தியும் உயரம் போகப்போக குறைந்துகொண்டே போகும். சுமார் பத்தாயிரம் மீட்டருக்கு மேலே போகும்போது, காற்றில் உள்ள வாயுக்களின் சதவீதம் மாறும். மனிதன் ஆக்சிஜன் வாயுவை சுவாசித்து, கார்பன்-டை ஆக்ஸைடு என்கிற வாயுவை வெளியே விடுகிறான். இதற்கு நேர்மாறாக, எல்லா செடி, கொடிகளும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளே இழுத்து, ஆக்சிஜன் வாயுவை வெளியே விடுகிறது. சூரிய வெளிச்சம் இருந்தால்தான் இப்படி நடக்கும். சூரிய வெளிச்சம் இல்லாத நேரத்தில் அதாவது இரவில், மனிதனைப் போல தாவரங்களும் ஆக்சிஜன் வாயுவை உள்ளே இழுத்து, கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியே விடுகிறது.
குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட் ஐஸ்கிரீமை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஹெவி கிரீம் - 1 1/2 கப்
பால் - 1/2 கப்
கோகோ பவுடர் - 1/4 கப்
இன்ஸ்டன்ட் காபி தூள் - 1/2 தேக்கரண்டி
சக்கரை - 1/2 கப்
நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை) - 1/4 கப்
உப்பு - 1/4 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி
சாக்லேட் சிப்ஸ் - விருப்பத்திற்கு ஏற்ப.

செய்முறை :
பாலை நன்றாக காய்ச்சி பிரிட்ஜில் 2 மணி நேரம் குளிர வைத்து கொள்ளவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் கோகோ பவுடர், சக்கரை, நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை), இன்ஸ்டன்ட் காபி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அனைத்து நன்றாக கலந்த பின்னர் அதனுடன் காய்ச்சி குளிர வைத்த பால் சேர்த்து கைவிடாமல் கலக்கவும்.
அடுத்து அதனுடன் ஹெவி கிரீம் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்தக் கலவையை ஒரு காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜ் ப்ரீசரில் 3 மணி நேரம் வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து ஐஸ்கிரீம் கலவையை எடுத்து அதை மிக்சியில் போட்டு 30 நொடிகள் வரை குறைவான வேகத்தில் அடித்து மீண்டும் டப்பாவில் போட்டு ப்ரீசரில் வைக்க வேண்டும்.
இதே போல் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து பிரிட்ஜ் ப்ரீசரில் வைக்கவும். இது போன்று 3 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் கட்டி சேராமல் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும்.
கடைசியாக இதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்கி ஒரு இரவு முழுவதும் பிரிட்ஜ் பிரீசரில் வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார்!
குறிப்பு:
1. பிரீசரை அதிகமான குளிர்ச்சியில் வைக்கவும்.
2. மிக்ஸியில் போட்டு 15 - 30 நொடி வரை சுற்றினால் போதுமானது. அதற்கு மேல் சுற்றினால் கிரீம் வெண்ணை ஆவதற்கு வாய்ப்புகள் அதிக வாய்ப்புள்ளது.
ஹெவி கிரீம் - 1 1/2 கப்
பால் - 1/2 கப்
கோகோ பவுடர் - 1/4 கப்
இன்ஸ்டன்ட் காபி தூள் - 1/2 தேக்கரண்டி
சக்கரை - 1/2 கப்
நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை) - 1/4 கப்
உப்பு - 1/4 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி
சாக்லேட் சிப்ஸ் - விருப்பத்திற்கு ஏற்ப.

செய்முறை :
பாலை நன்றாக காய்ச்சி பிரிட்ஜில் 2 மணி நேரம் குளிர வைத்து கொள்ளவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் கோகோ பவுடர், சக்கரை, நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை), இன்ஸ்டன்ட் காபி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அனைத்து நன்றாக கலந்த பின்னர் அதனுடன் காய்ச்சி குளிர வைத்த பால் சேர்த்து கைவிடாமல் கலக்கவும்.
அடுத்து அதனுடன் ஹெவி கிரீம் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்தக் கலவையை ஒரு காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜ் ப்ரீசரில் 3 மணி நேரம் வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து ஐஸ்கிரீம் கலவையை எடுத்து அதை மிக்சியில் போட்டு 30 நொடிகள் வரை குறைவான வேகத்தில் அடித்து மீண்டும் டப்பாவில் போட்டு ப்ரீசரில் வைக்க வேண்டும்.
இதே போல் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து பிரிட்ஜ் ப்ரீசரில் வைக்கவும். இது போன்று 3 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் கட்டி சேராமல் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும்.
கடைசியாக இதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்கி ஒரு இரவு முழுவதும் பிரிட்ஜ் பிரீசரில் வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார்!
குறிப்பு:
1. பிரீசரை அதிகமான குளிர்ச்சியில் வைக்கவும்.
2. மிக்ஸியில் போட்டு 15 - 30 நொடி வரை சுற்றினால் போதுமானது. அதற்கு மேல் சுற்றினால் கிரீம் வெண்ணை ஆவதற்கு வாய்ப்புகள் அதிக வாய்ப்புள்ளது.
3. அமுல் ஹெவி கிரீம் கொண்டு செய்து பாருங்கள். இல்லையெனில் 35% மேல் கொழுப்புள்ள எந்த கிரீம் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகள் தத்தெடுப்பு என்பது ஒரு நீண்ட கால நடைமுறையாகும். அதை மிகப் பொறுமையோடு செய்ய வேண்டும். குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அரசாங்கத்தின் வழிமுறைகளை பார்க்கலாம்.
குழந்தைகள் தத்தெடுப்பு என்பது ஒரு நீண்ட கால நடைமுறையாகும். அதை மிகப் பொறுமையோடு செய்ய வேண்டும். வளரப் போகும் குழந்தையின் பாதுகாப்புக்காக தான் இதில் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை விரும்பாதவர்கள் நாமக்கல் சம்பவம் போன்று குறுக்கு வழியில் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு சில அரசு ஊழியர்களும் துணை போகிறார்கள் என்பதுதான் பேரதிர்ச்சியாக உள்ளது.
குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அரசாங்கத்தின் வழிமுறைகள் பின்வருமாறு:-
* குழந்தை தேவைப்படுபவர் யாராக இருந்தாலும் இணையத்தின் வழியே மட்டுமே விண்ணப்பித்து பெற முடியும்.
* தம்பதியின் திருமண சான்றிதழ் தேவை.
* தம்பதியினர் இருவரின் வயது சான்றிதழ் தேவை.
* தம்பதியரில் யாருக்கேணும் 45 வயதுக்கு மேல் ஆகியிருக்குமானால் தத்தெடுக்கும் தகுதியில்லை.
* இனி தங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும்.
* வருமான சான்றிதழ் தேவை.
* சொத்து கண்டிப்பாக இருக்க வேண்டும்.
* 3 பேர் சிபாரிசு செய்ய வேண்டும்.
* தாய், தந்தைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் அதன் பிறகு “குழந்தையை பொறுப்பெடுத்து வளர்க்க நாங்கள் தயார்” என வேறு ஒரு தம்பதி வாக்குறுதி தர வேண்டும். வாக்குறுதி கொடுக்கும் தம்பதியினருக்கும் சொத்து இருக்க வேண்டும்.
* இதில் ஏதேனும் ஒன்றை தர முடியாவிட்டாலும் அவர்களுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பில்லை.
குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அரசாங்கத்தின் வழிமுறைகள் பின்வருமாறு:-
* குழந்தை தேவைப்படுபவர் யாராக இருந்தாலும் இணையத்தின் வழியே மட்டுமே விண்ணப்பித்து பெற முடியும்.
* தம்பதியின் திருமண சான்றிதழ் தேவை.
* தம்பதியினர் இருவரின் வயது சான்றிதழ் தேவை.
* தம்பதியரில் யாருக்கேணும் 45 வயதுக்கு மேல் ஆகியிருக்குமானால் தத்தெடுக்கும் தகுதியில்லை.
* இனி தங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும்.
* வருமான சான்றிதழ் தேவை.
* சொத்து கண்டிப்பாக இருக்க வேண்டும்.
* 3 பேர் சிபாரிசு செய்ய வேண்டும்.
* தாய், தந்தைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் அதன் பிறகு “குழந்தையை பொறுப்பெடுத்து வளர்க்க நாங்கள் தயார்” என வேறு ஒரு தம்பதி வாக்குறுதி தர வேண்டும். வாக்குறுதி கொடுக்கும் தம்பதியினருக்கும் சொத்து இருக்க வேண்டும்.
* இதில் ஏதேனும் ஒன்றை தர முடியாவிட்டாலும் அவர்களுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பில்லை.
இந்த ஷண்முகி முத்ரா ஆசனம் செய்வதன் மூலம் நரம்பு மண்டலத்திற்கும், மனதிற்கும் அமைதி கிடைக்கும். பதட்டம், எரிச்சல் உணர்வைத் தவிர்க்க உதவும்.
செய்முறை
விரிப்பில் நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். கை மூட்டியைத் தோள் வரை தூக்கி காதுகளை பெருவிரல்களால் மூடிக்கொள்ள வேண்டும்.
ஆட்காட்டி விரல் மூலம், கண்களை மூடிக்கொள்ள வேண்டும். நடுவிரல்கள் மூலம் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். மூச்சை நன்கு இழுத்து வைத்து, விட வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.
பயன்கள்
இந்த ஆசனம் செய்வதன் மூலம் நரம்பு மண்டலத்திற்கும், மனதிற்கும் அமைதி கிடைக்கும். பதட்டம், எரிச்சல் உணர்வைத் தவிர்க்க உதவும்.
விரிப்பில் நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். கை மூட்டியைத் தோள் வரை தூக்கி காதுகளை பெருவிரல்களால் மூடிக்கொள்ள வேண்டும்.
ஆட்காட்டி விரல் மூலம், கண்களை மூடிக்கொள்ள வேண்டும். நடுவிரல்கள் மூலம் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். மூச்சை நன்கு இழுத்து வைத்து, விட வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.
பயன்கள்
இந்த ஆசனம் செய்வதன் மூலம் நரம்பு மண்டலத்திற்கும், மனதிற்கும் அமைதி கிடைக்கும். பதட்டம், எரிச்சல் உணர்வைத் தவிர்க்க உதவும்.
இயற்கை உணவுகள் உங்கள் சருமத்தை இளமை தோற்றத்துடனும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ என்ன அருந்துகிறீர்களோ அதை பொருத்துதான் உங்கள் சருமம் பிரகாசிக்கும்.
நம் முன்னோர்கள் இயற்கை உணவுகளையே உண்டனர் என்பதாலேயே ஆரோக்கியமாக இருந்தார்கள். பழங்கள், சாலட், முளைக்கட்டிய தானியங்கள், பருப்புகள், விதைகள், கொட்டைகள் மற்றும் தயிர் ஆகியவை இயற்கையான உணவுகள். உடலுக்கு உடனடியாக ஆற்றல் தரக்கூடியவை. இவையே நம் தினசரி உணவில் அதிகளவு இருக்க வேண்டும். கொழுப்பு மற்றும் இனிப்பு உணவுகளை தவிர்ப்பது நல்லது.
இந்த இயற்கை உணவுகள் உங்கள் சருமத்தை இளமை தோற்றத்துடனும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ என்ன அருந்துகிறீர்களோ அதை பொருத்துதான் உங்கள் சருமம் பிரகாசிக்கும். கொழுப்பு, சர்க்கரை மற்றும் இறைச்சி ஆகியவற்றை குறைத்து, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம். சரும ஆரோக்கியத்திற்கு யோகர்ட், ஸ்கிம்டு மில்க் மற்றும் பன்னீர் ஆகியவை சிறந்தது. காய்கறிகளை எப்போது முழுமையாக வேக வைக்கக்கூடாது. கீரைகள் மற்றும் லீட்யூஸ், சூப் ஆகியவற்றை சாப்பிடலாம்.
அந்தந்த பருவநிலை மாற்றத்தின்போது விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது சிறந்தது. கோடை காலத்தின்போது உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால் தர்பூசணி, முலாம்பழம் மற்றும் வெள்ளரி ஆகியவற்றை சாப்பிடலாம். நீராகாரம் அதிகம் உட்கொண்டால் மட்டுமே, இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். உடலில் கழிவுகள் தேங்கும்போது சருமம் தன் பொலிவை இழந்துவிடும். மேலும் உப்பு சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும். அப்படியில்லாவிட்டால், சருமம் அதன் இளமை தோற்றத்தை இழந்துவிடும்.
காலை எழுந்தவுடன் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வரலாம். இதனால் சருமம் பிரகாசமாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும். குளிர்பானங்கள் குடிப்பதை குறைத்துவிட்டு, பழச்சாறுகளை அடிக்கடி குடிக்கலாம். கோடை காலத்தில் டீ, காபி குடிப்பதை தவிர்த்து லெமன் ஐஸ்டு டீ, ஜல்ஜீரா, லஸ்ஸி, மோர், தேன் சேர்க்கப்பட்ட யோகர்ட் அல்லது பழச்சாறுகளை குடிக்கலாம்.
சரும பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்திட வேண்டும். ஆர்கானிக் உணவுகளை சாப்பிட்டால் தான் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும். அழகு பராமரிப்பின் ஆயுர்வேதத்திற்கு முக்கிய பங்கு உண்டு. நம் பாரம்பரியத்தை பின்பற்றினாலே போதும். ஆரோக்கியமாக வாழலாம்.
இந்த இயற்கை உணவுகள் உங்கள் சருமத்தை இளமை தோற்றத்துடனும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ என்ன அருந்துகிறீர்களோ அதை பொருத்துதான் உங்கள் சருமம் பிரகாசிக்கும். கொழுப்பு, சர்க்கரை மற்றும் இறைச்சி ஆகியவற்றை குறைத்து, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம். சரும ஆரோக்கியத்திற்கு யோகர்ட், ஸ்கிம்டு மில்க் மற்றும் பன்னீர் ஆகியவை சிறந்தது. காய்கறிகளை எப்போது முழுமையாக வேக வைக்கக்கூடாது. கீரைகள் மற்றும் லீட்யூஸ், சூப் ஆகியவற்றை சாப்பிடலாம்.
அந்தந்த பருவநிலை மாற்றத்தின்போது விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது சிறந்தது. கோடை காலத்தின்போது உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால் தர்பூசணி, முலாம்பழம் மற்றும் வெள்ளரி ஆகியவற்றை சாப்பிடலாம். நீராகாரம் அதிகம் உட்கொண்டால் மட்டுமே, இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். உடலில் கழிவுகள் தேங்கும்போது சருமம் தன் பொலிவை இழந்துவிடும். மேலும் உப்பு சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும். அப்படியில்லாவிட்டால், சருமம் அதன் இளமை தோற்றத்தை இழந்துவிடும்.
காலை எழுந்தவுடன் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வரலாம். இதனால் சருமம் பிரகாசமாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும். குளிர்பானங்கள் குடிப்பதை குறைத்துவிட்டு, பழச்சாறுகளை அடிக்கடி குடிக்கலாம். கோடை காலத்தில் டீ, காபி குடிப்பதை தவிர்த்து லெமன் ஐஸ்டு டீ, ஜல்ஜீரா, லஸ்ஸி, மோர், தேன் சேர்க்கப்பட்ட யோகர்ட் அல்லது பழச்சாறுகளை குடிக்கலாம்.
சரும பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்திட வேண்டும். ஆர்கானிக் உணவுகளை சாப்பிட்டால் தான் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும். அழகு பராமரிப்பின் ஆயுர்வேதத்திற்கு முக்கிய பங்கு உண்டு. நம் பாரம்பரியத்தை பின்பற்றினாலே போதும். ஆரோக்கியமாக வாழலாம்.






