search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தையின் துணியை துவைக்கும் போது கவனிக்க வேண்டியவை
    X

    குழந்தையின் துணியை துவைக்கும் போது கவனிக்க வேண்டியவை

    குழந்தைகளுக்கு சரும பிரச்னைகள் எதுவும் வராமல் இருக்க குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க வேண்டியதும் முக்கியம். அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
    குழந்தையின் சருமத்தில் நேரடியாக படும் துணியை மிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும். கிருமிகள் இல்லாத துணியாக இருப்பின், குழந்தைக்கு கிருமி தாக்குதல், சரும பிரச்னைகள் போன்றவை பெரிதும் தாக்காமல் தடுக்கலாம்.

    புதிய ஆடைகளை குழந்தைக்கு அணிவிப்பதற்கு முன் கட்டாயம் துவைத்துவிட்டு குழந்தைகளுக்கு அணிவிப்பதுதான் சரி. துவைக்காத புத்தம் புதிய ஆடையோ துவைக்காத ஆடையோ குழந்தைக்கு அணிவித்தால் பிரச்னை ஆரம்பிக்கும். சரும பிரச்னைகள் வரலாம். துணியில் உள்ள தூசு, ஸ்டார்ச், கெமிக்கல்கள், துணியை தயாரிக்க பயன்படுத்தும் நிறங்கள் ஆகியவற்றால் பாதிப்பு வரும்.

    குழந்தை துணிகளுக்கு என பிரத்யேக டிடர்ஜென்ட் பவுடர்கள் எதுவும் தேவையில்லை. குடும்பத்தில் அனைவருக்கும் பயன்படுத்த கூடிய அதே டிடர்ஜென்ட் பயன்படுத்தினாலே போதும்.

    குழந்தைகளின் துணியில் நீங்காத கறை படிந்துவிட்டால், அதை துவைப்பதற்கு முன் அந்த கறையை நீக்கி விட்டு குழந்தையின் துணியை துவைப்பது நல்லது. இதனால் துணியும் புதிதாகவே இருக்கும்.

    குழந்தையின் துணிகளை துவைக்கும்போது மற்றவர்களின் துணியுடன் சேர்த்து ஊறவைத்து துவைக்க கூடாது. அதுபோல் மெஷினில் மற்றவர்களது துணியுடன் குழந்தைகளுடைய துணியையும் போட வேண்டாம்.

    பெரியவர்களது துணியில் உள்ள கிருமிகள், குழந்தைகளின் துணியில் பரவும் என்பதால் குழந்தைகளின் துணியை தனியாக துவைப்பதே சரி.

    1 - 2 துளிகள் கிருமி நீக்கும் திரவங்களை துவைக்கையில் பயன்படுத்தலாம்.



    குழந்தையின் துணியை கட்டாயமாக வெயிலில் காயவைத்து உலர்த்த வேண்டும். வீட்டுக்குள்ளே குழந்தையின் உலர்த்த கூடாது. இதனால் கிருமிகள் நீங்காது.

    சூரிய வெளிச்சம் மற்றும் சுத்தமான காற்றும் குழந்தைகளின் துணியில் பட வேண்டும் என்பதால் வெயில் வரும் இடங்களில் துணியை உலர்த்த வேண்டியது அவசியம்.

    குழந்தையின் துணியை துவைப்பதற்கு முன் இளஞ்சூடான தண்ணீரில் துணிகளை ஊறவைக்க வேண்டியது அவசியம். இதனால் தூசு, கிருமிகள் ஆகியவை எளிதில் நீங்க உதவும்.

    தனியாக துவைத்த குழந்தைகளின் துணிகளை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டியதும் முக்கியம்.

    மழை காலத்தில் குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க, கிருமிகளை நீக்க அயன் செய்வது சிறந்த வழி.

    முடிந்தவரை குழந்தைக்கு பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட உடைகளை மட்டுமே அணிவிப்பது நல்லது.

    குழந்தையின் துணியை துவைத்து முடித்த பின் இறுதியாக கிருமி நீக்கும் திரவங்களை தெளித்த நீரில் அலசுவது நல்லது.
    Next Story
    ×