என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய். இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ள முடியும்.
உடல் உள்ளே இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும்போதும் உறைதலும் ரத்தத்தின் இயல்பு. உயிர் காக்கும் இந்த நிலை இயற்கை தந்த பரிசு. சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. இது உயிர் பறிக்கும் பிரச்சினை. அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய். உடலுக்குள் ரத்தக் குழாய்க்குள் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம், எப்போதும் உறையக்கூடாது. அது முழு திரவ நிலையில் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான ஓட்டத்துடன் இருக்கும். ஆனால் இதே ரத்தம் உடலைவிட்டு வெளியேறும் போது, வெளிக்காற்று பட்டவுடன் உறைய வேண்டும். அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். இதன் மூலம் ரத்தம் வீணாகாமல் உயிர் காக்கப்படும். அப்படி இல்லாமல், ரத்தம் உறையாமலே இருக்கும் பிரச்சினைதான் ஹீமோபீலியா. பத்தாயிரத்தில் ஒருவருக்கு வரும் இந்நோய், பரம்பரை சம்பந்தப்பட்டது.
பொதுவாக அடிபட்டு மூன்று நிமிடங்களில் ரத்தம் உறையத் தொடங்கும். ஆனால், இந்நோய் உள்ளவர்களுக்கு 30 நிமிடங்கள் ஆனாலும் உறையாது. பல் பிடுங்குதல் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற நேரங்களில் இந்நோய் உள்ளவர்கள் மருத்துவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். இதனால் ஆபத்தில் இருந்து தப்பிவிடலாம். மேலும் இந்நோய் உள்ளவர்கள் வலிநிவாரண மருந்துகளைச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் வயிற்றுக்குள் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ள முடியும். பாலினத்தை நிர்ணயிப்பவை மரபணுக்கள். இது ஆண்கள் உடலில் எக்ஸ் ஒய் குரோமோசோம்களாகவும், பெண்கள் உடலில் எக்ஸ் எக்ஸ் குரோமோசோம்களாகவும் இருக்கும்.
எக்ஸ் குரோமோசோமில் உள்ள குறைபாடுதான் இதற்கு முதன்மை காரணம் என்பதால், ஆண்களுக்கு, இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் சமாளிக்க முடியாது. இந்நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மகாராணி விக்டோரியா பெண் என்பதால் இந்நோயின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொண்டார். ஆனால் இவரது சந்ததியை அது பாதித்தது. அவருக்கு வந்ததோ மிக மோசமான ஹீமோபீலியா ‘பி’ நோய் வகை. அவரது ஐந்து குழந்தைகளில் இரண்டு பெண் குழந்தைகள் மூலம், அரச வம்சத்து ஆண் குழந்தைகளுக்கு இந்நோய் பரவ விக்டோரியா காரணமாக இருந்தார். இதனால் இந்நோய் அரச நோய் என்ற பெயரையும் பெற்றது.
ரத்த உறவில் திருமணம் செய்வதால்தான் இந்நோய் அதிகம் பரவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். மரபணுவில் உள்ள இந்தச் சிக்கல், ரத்த சொந்தங்களுக்குள் நடைபெறும் திருமணங்கள் மூலமே பரவுகிறது. மரபணு காரணமாவதால் இந்நோய்க்குத் தீர்வு இல்லை. ஆனால், இதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
பொதுவாக அடிபட்டு மூன்று நிமிடங்களில் ரத்தம் உறையத் தொடங்கும். ஆனால், இந்நோய் உள்ளவர்களுக்கு 30 நிமிடங்கள் ஆனாலும் உறையாது. பல் பிடுங்குதல் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற நேரங்களில் இந்நோய் உள்ளவர்கள் மருத்துவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். இதனால் ஆபத்தில் இருந்து தப்பிவிடலாம். மேலும் இந்நோய் உள்ளவர்கள் வலிநிவாரண மருந்துகளைச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் வயிற்றுக்குள் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ள முடியும். பாலினத்தை நிர்ணயிப்பவை மரபணுக்கள். இது ஆண்கள் உடலில் எக்ஸ் ஒய் குரோமோசோம்களாகவும், பெண்கள் உடலில் எக்ஸ் எக்ஸ் குரோமோசோம்களாகவும் இருக்கும்.
எக்ஸ் குரோமோசோமில் உள்ள குறைபாடுதான் இதற்கு முதன்மை காரணம் என்பதால், ஆண்களுக்கு, இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் சமாளிக்க முடியாது. இந்நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மகாராணி விக்டோரியா பெண் என்பதால் இந்நோயின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொண்டார். ஆனால் இவரது சந்ததியை அது பாதித்தது. அவருக்கு வந்ததோ மிக மோசமான ஹீமோபீலியா ‘பி’ நோய் வகை. அவரது ஐந்து குழந்தைகளில் இரண்டு பெண் குழந்தைகள் மூலம், அரச வம்சத்து ஆண் குழந்தைகளுக்கு இந்நோய் பரவ விக்டோரியா காரணமாக இருந்தார். இதனால் இந்நோய் அரச நோய் என்ற பெயரையும் பெற்றது.
ரத்த உறவில் திருமணம் செய்வதால்தான் இந்நோய் அதிகம் பரவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். மரபணுவில் உள்ள இந்தச் சிக்கல், ரத்த சொந்தங்களுக்குள் நடைபெறும் திருமணங்கள் மூலமே பரவுகிறது. மரபணு காரணமாவதால் இந்நோய்க்குத் தீர்வு இல்லை. ஆனால், இதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
தேர்வில் தோல்வி அடைந்தால், அது தனக்கும் தன் குடும்பத்தாருக்கும், மாபெரும் இழுக்கு, தாங்க முடியாத அவமானம் என்று நம்மை நாமே வஞ்சித்துக்கொள்கிறோம்.
இந்த ஆண்டும் ‘நீட்’ தேர்வு முடிவு, மூன்று இளம் சாதனையாளர்களை, தம் வாழ்க்கையின் முடிவுக்குத் தள்ளி இருக்கிறது. மிகுந்த மன அதிர்ச்சி, மன வலியைத் தந்துள்ள, இந்தச் சோக நிகழ்வுகளுக்கு, ‘நீட்’ தேர்வு மட்டும்தான் காரணமா...?
மன்னிக்கவும் ஏதோ ஒரு வகையில் நம் எல்லாருக்குமே இதில் பங்கு இருக்கிறது. பொதுத்தேர்வு அல்லது போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெறுவதை, உலக மகா சாதனையாக உருவகப்படுத்தியது.. இதுவன்றி வாழ்க்கையில் சாதிப்பதற்கு எதுவுமே இல்லை என்கிற மாயத் தோற்றத்தைப் பதிவு செய்தது... ‘உலகம் உந்தன் கையிலே; வானம் உந்தன் பையிலே’ என்று சினிமா வசனம் பேசி, பொய்யான நம்பிக்கையை விதைத்தது...
வழிமுறைகளைச் சொல்லித் தயாரிப்பதை விடுத்து, வெறுமனே அறிவுரைகளை மட்டுமே வழங்கி, இளைய மனங்களைத் தனியே தவிக்கவிட்டது... யார் செய்த தவறு..?
தேர்வு நோக்கிய, நம்முடைய பொதுவான அணுகுமுறை அத்தனை சரியானதாக இல்லை. போருக்குப் போகிற வீரனைப் போல, அபாயகரமான அறுவை சிகிச்சைக்குச் செல்கிற நோயாளியைப் போல, சிறுவர்களைத் தேர்வுக்குத் தயார் செய்கிற போக்கு உடனடியாக மாறியாக வேண்டும். மணமேடைக்கு வருவதற்கு முன்னால், மணமகன், மணமகளைத் தயார் செய்கிறபோது, சுற்றிலும் எத்தனை மகிழ்ச்சியான சூழல் நிலவும்..? இதே போன்றுதான், எந்தத் தேர்வுக்கான தயாரிப்பும் இருத்தல் வேண்டும். மாறாக, அடிப்படையற்ற அச்சம், தேவையற்ற பதற்றம் உருவாக நாமே காரணமாகி விடுகிறோம்.
அளவுக்கு அதிகமான மிகப் பெரிய முக்கியத்துவம் தந்து, ஒவ்வொரு தேர்வையும், வாழ்க்கையின் அதி முக்கியமான சவாலாக மாற்றி வைத்துவிட்டோம். இதன் விளைவாய், தேர்வில் தோல்வி அடைந்தால், அது தனக்கும் தன் குடும்பத்தாருக்கும், மாபெரும் இழுக்கு, தாங்க முடியாத அவமானம் என்று நம்மை நாமே வஞ்சித்துக்கொள்கிறோம். தேர்வு ஒரு படிக்கட்டு. அவ்வளவுதான். அதற்கு மேல் அதில் வேறு ஒன்றும் இல்லை. ஓர் அடிப்படை உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஓர் எதிர்பார்ப்பு, ஏமாற்றமாக மாறுகிறபோது, அதனை இயல்பாக ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் அத்தனை எளிதில் எல்லாருக்கும் வந்துவிடாது. வயதில் மூத்த, பெற்றோருக்கே அது மிகவும் கடினமான சவால்தான்.
எனில், இளைஞர்களின் மனநிலை என்னவாக இருக்கும்...? அதிலும், அடிமட்டத்தில், இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிற நிலையில் இருந்து, போராடி வெற்றி பெறத் துடிக்கிற பிஞ்சு மனங்களில், ஏமாற்றம் எத்தனை பெரிய சுமையாக, பேரிடியாக இறங்கும்..? இது ஏதோ ஒரு நாள், ஒரு கணத்தில் ஏற்பட்ட வலி, வேதனை அல்ல. பிறந்தது முதல் ஒவ்வொரு நாளும் அடிக்கடி சந்தித்த, எண்ணற்ற வேதனைகளை விட்டு வெளியே வர ஏங்குகிற அப்பாவி உயிர்களின் இதயத் துடிப்பு. வாழ்க்கையின் யதார்த்தம், உலகின் சவால்களை எதிர்கொள்வதற்கான மன வலிமை, வேறு யாரையும் விட மிக அதிகமாக, இவர்களுக்குத் தேவை. ஆனால், நாம் என்ன தந்து வருகிறோம்...?
ஒவ்வொரு முறை ‘பயிலரங்கம்’ சென்று வருகிறபோதும், இளைஞர்கள் கூட்டமாக வந்து கூறுவது இதுதான். எங்களுக்கு தன்னம்பிக்கை எல்லாம் வேண்டாம். அதெல்லாம் நிறையவே இருக்கு. நாங்க என்ன படிக்கணும்..? எப்படித் தயார் ஆவணும்..? இப்போ என்ன நடந்துக்கிட்டு இருக்கு...? உண்மையான நிலவரம் என்ன..? எங்களுக்கு இது கிடைக்கிறதுக்கு எவ்வளவு வாய்ப்புகள் இருக்கு....?’
ஆக்கப்பூர்வமான ஆரோக்கியமான வழிமுறைகள், செய்முறைகளை விளக்குவோம். அப்படி எதுவும், சொல்ல முடியவில்லையா...? தயவு செய்து விலகி இருப்போம். உன்னால் முடியாதது ஒன்றுமே இல்லை என்று சொல்லி, உசுப்பேற்றி விடுகிற நற்பணியை மட்டும் யாரும் செய்யாமல் இருப்போம். வெற்றி பெறுவதற்கு, கட்டாயம் எல்லாரும் உழைக்க வேண்டி இருக்கிறது. சிலர், இன்னும் அதிகமாகவே பாடுபட வேண்டி உள்ளது. அதற்கான உடல், மன வலிமையை அவர்களுக்குத் தருவது எது...? வெற்று வார்த்தைகள் அல்ல.
களத்தில் அவர்களோடு நின்று நாம் அளிக்கும் ஒத்துழைப்பு; அவர்களின் முயற்சிக்கு நாம் தரும் பங்களிப்பு. பத்து பேர், நூறு பேர் சேர்ந்து ஒரே ஒரு தேர்வருக்கு நேர்மையாக உதவி செய்தால் கூடப் போதும். அதை விடுத்து, ஆயிரம் பேர் நடுவே நின்றுகொண்டு, எழுச்சியுரை ஆற்றி, கைத்தட்டல் வாங்குவதால், இளைஞர்களுக்கு என்ன பயன்...?
வைஸ்யா, ரிதுஸ்ரீ, மோனிஷா ஆகியோர் எடுத்த விபரீத முடிவுகளின் பின்னால், இந்தச் சமுதாயம் அவர்கள் மீது ஏற்றி வைத்த, ‘அபார வெற்றி, அல்லது அவமானகரமான தோல்வி’ தந்த அழுத்தம் மிக முக்கிய காரணம். ஒரு தேர்வு, அதன் முடிவு ஆகியன கல்வித்துறையை தாண்டி, பெற்றோர், பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால், அரசியல் வடிவம் பெறுவது நல்லதற்கு அல்ல. இதனை அனைவரும் உணர்ந்து கொண்டு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியது மிக அவசரம், அவசியம். தவறான கற்பித்தல்கள், தரமற்ற வழிகாட்டுதல்கள், தன்னம்பிக்கை எனும் பெயரில் புகட்டப்படும் செயற்கை இலக்குகள்... இளைய தலைமுறையை, கண நேர வெளிச்சத்தைக் காட்டி, நிரந்தரமாய் இருட்டுக்குள் தள்ளி விடும்.எச்சரிக்கை.
யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்; யாரைக் கண்டும் வியக்கவும் வேண்டாம்; யாரையும் ஏளனமாய் நினைக்கவும் வேண்டாம்.
பழந்தமிழ்ப் பாடல் அழகாய்ச் சொல்கிறது: “பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”.
வெற்றியும் அது தரும் புகழும் இருக்கட்டும்.
அதனினும் பெரிது, அதனினும் இனிது வாழ்க்கையை வாழ்ந்து காட்டுதல். இந்தச் செய்தி, இளைஞர்களுக்குச் சொல்லப்படுகிறதா...?
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமான வரி அலுவலர்.
மன்னிக்கவும் ஏதோ ஒரு வகையில் நம் எல்லாருக்குமே இதில் பங்கு இருக்கிறது. பொதுத்தேர்வு அல்லது போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெறுவதை, உலக மகா சாதனையாக உருவகப்படுத்தியது.. இதுவன்றி வாழ்க்கையில் சாதிப்பதற்கு எதுவுமே இல்லை என்கிற மாயத் தோற்றத்தைப் பதிவு செய்தது... ‘உலகம் உந்தன் கையிலே; வானம் உந்தன் பையிலே’ என்று சினிமா வசனம் பேசி, பொய்யான நம்பிக்கையை விதைத்தது...
வழிமுறைகளைச் சொல்லித் தயாரிப்பதை விடுத்து, வெறுமனே அறிவுரைகளை மட்டுமே வழங்கி, இளைய மனங்களைத் தனியே தவிக்கவிட்டது... யார் செய்த தவறு..?
தேர்வு நோக்கிய, நம்முடைய பொதுவான அணுகுமுறை அத்தனை சரியானதாக இல்லை. போருக்குப் போகிற வீரனைப் போல, அபாயகரமான அறுவை சிகிச்சைக்குச் செல்கிற நோயாளியைப் போல, சிறுவர்களைத் தேர்வுக்குத் தயார் செய்கிற போக்கு உடனடியாக மாறியாக வேண்டும். மணமேடைக்கு வருவதற்கு முன்னால், மணமகன், மணமகளைத் தயார் செய்கிறபோது, சுற்றிலும் எத்தனை மகிழ்ச்சியான சூழல் நிலவும்..? இதே போன்றுதான், எந்தத் தேர்வுக்கான தயாரிப்பும் இருத்தல் வேண்டும். மாறாக, அடிப்படையற்ற அச்சம், தேவையற்ற பதற்றம் உருவாக நாமே காரணமாகி விடுகிறோம்.
அளவுக்கு அதிகமான மிகப் பெரிய முக்கியத்துவம் தந்து, ஒவ்வொரு தேர்வையும், வாழ்க்கையின் அதி முக்கியமான சவாலாக மாற்றி வைத்துவிட்டோம். இதன் விளைவாய், தேர்வில் தோல்வி அடைந்தால், அது தனக்கும் தன் குடும்பத்தாருக்கும், மாபெரும் இழுக்கு, தாங்க முடியாத அவமானம் என்று நம்மை நாமே வஞ்சித்துக்கொள்கிறோம். தேர்வு ஒரு படிக்கட்டு. அவ்வளவுதான். அதற்கு மேல் அதில் வேறு ஒன்றும் இல்லை. ஓர் அடிப்படை உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஓர் எதிர்பார்ப்பு, ஏமாற்றமாக மாறுகிறபோது, அதனை இயல்பாக ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் அத்தனை எளிதில் எல்லாருக்கும் வந்துவிடாது. வயதில் மூத்த, பெற்றோருக்கே அது மிகவும் கடினமான சவால்தான்.
எனில், இளைஞர்களின் மனநிலை என்னவாக இருக்கும்...? அதிலும், அடிமட்டத்தில், இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிற நிலையில் இருந்து, போராடி வெற்றி பெறத் துடிக்கிற பிஞ்சு மனங்களில், ஏமாற்றம் எத்தனை பெரிய சுமையாக, பேரிடியாக இறங்கும்..? இது ஏதோ ஒரு நாள், ஒரு கணத்தில் ஏற்பட்ட வலி, வேதனை அல்ல. பிறந்தது முதல் ஒவ்வொரு நாளும் அடிக்கடி சந்தித்த, எண்ணற்ற வேதனைகளை விட்டு வெளியே வர ஏங்குகிற அப்பாவி உயிர்களின் இதயத் துடிப்பு. வாழ்க்கையின் யதார்த்தம், உலகின் சவால்களை எதிர்கொள்வதற்கான மன வலிமை, வேறு யாரையும் விட மிக அதிகமாக, இவர்களுக்குத் தேவை. ஆனால், நாம் என்ன தந்து வருகிறோம்...?
ஒவ்வொரு முறை ‘பயிலரங்கம்’ சென்று வருகிறபோதும், இளைஞர்கள் கூட்டமாக வந்து கூறுவது இதுதான். எங்களுக்கு தன்னம்பிக்கை எல்லாம் வேண்டாம். அதெல்லாம் நிறையவே இருக்கு. நாங்க என்ன படிக்கணும்..? எப்படித் தயார் ஆவணும்..? இப்போ என்ன நடந்துக்கிட்டு இருக்கு...? உண்மையான நிலவரம் என்ன..? எங்களுக்கு இது கிடைக்கிறதுக்கு எவ்வளவு வாய்ப்புகள் இருக்கு....?’
ஆக்கப்பூர்வமான ஆரோக்கியமான வழிமுறைகள், செய்முறைகளை விளக்குவோம். அப்படி எதுவும், சொல்ல முடியவில்லையா...? தயவு செய்து விலகி இருப்போம். உன்னால் முடியாதது ஒன்றுமே இல்லை என்று சொல்லி, உசுப்பேற்றி விடுகிற நற்பணியை மட்டும் யாரும் செய்யாமல் இருப்போம். வெற்றி பெறுவதற்கு, கட்டாயம் எல்லாரும் உழைக்க வேண்டி இருக்கிறது. சிலர், இன்னும் அதிகமாகவே பாடுபட வேண்டி உள்ளது. அதற்கான உடல், மன வலிமையை அவர்களுக்குத் தருவது எது...? வெற்று வார்த்தைகள் அல்ல.
களத்தில் அவர்களோடு நின்று நாம் அளிக்கும் ஒத்துழைப்பு; அவர்களின் முயற்சிக்கு நாம் தரும் பங்களிப்பு. பத்து பேர், நூறு பேர் சேர்ந்து ஒரே ஒரு தேர்வருக்கு நேர்மையாக உதவி செய்தால் கூடப் போதும். அதை விடுத்து, ஆயிரம் பேர் நடுவே நின்றுகொண்டு, எழுச்சியுரை ஆற்றி, கைத்தட்டல் வாங்குவதால், இளைஞர்களுக்கு என்ன பயன்...?
வைஸ்யா, ரிதுஸ்ரீ, மோனிஷா ஆகியோர் எடுத்த விபரீத முடிவுகளின் பின்னால், இந்தச் சமுதாயம் அவர்கள் மீது ஏற்றி வைத்த, ‘அபார வெற்றி, அல்லது அவமானகரமான தோல்வி’ தந்த அழுத்தம் மிக முக்கிய காரணம். ஒரு தேர்வு, அதன் முடிவு ஆகியன கல்வித்துறையை தாண்டி, பெற்றோர், பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால், அரசியல் வடிவம் பெறுவது நல்லதற்கு அல்ல. இதனை அனைவரும் உணர்ந்து கொண்டு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியது மிக அவசரம், அவசியம். தவறான கற்பித்தல்கள், தரமற்ற வழிகாட்டுதல்கள், தன்னம்பிக்கை எனும் பெயரில் புகட்டப்படும் செயற்கை இலக்குகள்... இளைய தலைமுறையை, கண நேர வெளிச்சத்தைக் காட்டி, நிரந்தரமாய் இருட்டுக்குள் தள்ளி விடும்.எச்சரிக்கை.
யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்; யாரைக் கண்டும் வியக்கவும் வேண்டாம்; யாரையும் ஏளனமாய் நினைக்கவும் வேண்டாம்.
பழந்தமிழ்ப் பாடல் அழகாய்ச் சொல்கிறது: “பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”.
வெற்றியும் அது தரும் புகழும் இருக்கட்டும்.
அதனினும் பெரிது, அதனினும் இனிது வாழ்க்கையை வாழ்ந்து காட்டுதல். இந்தச் செய்தி, இளைஞர்களுக்குச் சொல்லப்படுகிறதா...?
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமான வரி அலுவலர்.
வீட்டில் சுவையான இனிப்பு செய்ய விரும்பினால் ஷீர் குர்மா செய்யலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - 1 லிட்டர்,
சேமியா - 1 கப்,
நெய் - 2 ஸ்பூன்,
முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரிச்சை - தேவையான அளவு,
ஏலக்காய் பொடி - ஒரு சீட்டிகை,
சர்க்கரை - 1/2 கப்,
ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்,

செய்முறை :
நெய்யை நன்கு காய வைத்து நட்ஸை போட்டு வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
சேமியாவையும் நன்கு உடைத்து நெய்யில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சவும். பால் நன்குக் காய்ந்ததும் வறுத்த சேமியாவை போட்டு கிளறவும்.
அடுத்து அதில் சர்க்கரை சேர்க்கவும்.
சேமியா வெந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
பின் அதில் வறுத்து வைத்துள்ள நட்ஸ், ரோஸ் வாட்டர், ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.
பால் - 1 லிட்டர்,
சேமியா - 1 கப்,
நெய் - 2 ஸ்பூன்,
முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரிச்சை - தேவையான அளவு,
ஏலக்காய் பொடி - ஒரு சீட்டிகை,
சர்க்கரை - 1/2 கப்,
ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்,
குங்குமப் பூ - 1/4 ஸ்பூன்

செய்முறை :
நெய்யை நன்கு காய வைத்து நட்ஸை போட்டு வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
சேமியாவையும் நன்கு உடைத்து நெய்யில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சவும். பால் நன்குக் காய்ந்ததும் வறுத்த சேமியாவை போட்டு கிளறவும்.
அடுத்து அதில் சர்க்கரை சேர்க்கவும்.
சேமியா வெந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
பின் அதில் வறுத்து வைத்துள்ள நட்ஸ், ரோஸ் வாட்டர், ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.
சுவையான ஷீர் குர்மா தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி தலைமுடிக்கு ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்து கொள்ள முடியும். இயற்கையான முறைகள் நாம் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
இப்போதெல்லாம் பெண்கள் கூந்தலை ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதற்கு, அதிகமாக அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர், இருந்தாலும் அழகு நிலையங்களுக்கு சென்று ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்தாலும் அதற்கு தகுந்த பராமரிப்பு இருந்தால் தான் தலைமுடி நேராக இருக்கும்.
அதேபோல் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்ய பயன்படுத்தும் கருவிகளின் விளைவுகளினால் சிலருக்கு அதிக முடி உதிர்வு ஏற்படும். மேலும் பல பக்க விளைவுகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
எனவே நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி தலைமுடிக்கு ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்து கொள்ள முடியும். இயற்கையான முறைகள் நாம் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
தேவையான பொருட்கள்:
சோளமாவு அல்லது மைதா மாவு - இரண்டு ஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
சாதம் வடித்த கஞ்சி - 1/2 டம்ளர்
வாசலின் - 1/2 ஸ்பூன் அல்லது 1 ஸ்பூன்
ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் சோளமாவு அல்லது மைதா மாவு சேர்த்து 200 மில்லி தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.
இதனுடன் சாதம் வடித்த கஞ்சி 200 மில்லி மற்றும் தேங்காய் பால் 1/2 டம்ளர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கலந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கட்டிகள் விழாதவாறு கிளறிவிடவும்.
கலவை நன்றாக கெட்டியானதும், 1/2 ஸ்பூன் அல்லது 1 ஸ்பூன் வாசலின் கலந்து கலவையை ஆறவிடவும்.
இந்த பேக்கை பயன்படுத்தும் போது தலை முடியில் எண்ணெய் பசை இருக்க கூடாது, ஆகையால் முதல் நாளே தலைமுடியை நன்கு அலசி, எண்ணெய் பசை இல்லாதவாறு தலை முடியை வைத்து கொள்ளவும். தயாரித்த பேக் ஆறியதும் கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து தலைமுடியில் அப்ளை செய்ய வேண்டும், அதாவது தலைமுடியின் உச்சந்தலையில் இருந்து நுனி முடி வரை நன்றாக இந்த பேக்கை அப்ளை செய்ய வேண்டும்.
இவ்வாறு நன்றாக அப்ளை செய்த பிறகு சீப்பை பயன்படுத்தி தலைமுடியை நேராக சீவிவிட வேண்டும். பின்பு இரண்டு மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்பு தலைமுடியை ஷாம்போ போட்டு அலசி விடுங்கள் இவ்வாறு செய்வதினால் நாம் இயற்கையான முறையில் மிக எளிமையாகவே தலைமுடிக்கு ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்து விட முடியும்.
அதேபோல் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்ய பயன்படுத்தும் கருவிகளின் விளைவுகளினால் சிலருக்கு அதிக முடி உதிர்வு ஏற்படும். மேலும் பல பக்க விளைவுகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
எனவே நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி தலைமுடிக்கு ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்து கொள்ள முடியும். இயற்கையான முறைகள் நாம் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
தேவையான பொருட்கள்:
சோளமாவு அல்லது மைதா மாவு - இரண்டு ஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
சாதம் வடித்த கஞ்சி - 1/2 டம்ளர்
வாசலின் - 1/2 ஸ்பூன் அல்லது 1 ஸ்பூன்
ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் சோளமாவு அல்லது மைதா மாவு சேர்த்து 200 மில்லி தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.
இதனுடன் சாதம் வடித்த கஞ்சி 200 மில்லி மற்றும் தேங்காய் பால் 1/2 டம்ளர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கலந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கட்டிகள் விழாதவாறு கிளறிவிடவும்.
கலவை நன்றாக கெட்டியானதும், 1/2 ஸ்பூன் அல்லது 1 ஸ்பூன் வாசலின் கலந்து கலவையை ஆறவிடவும்.
இந்த பேக்கை பயன்படுத்தும் போது தலை முடியில் எண்ணெய் பசை இருக்க கூடாது, ஆகையால் முதல் நாளே தலைமுடியை நன்கு அலசி, எண்ணெய் பசை இல்லாதவாறு தலை முடியை வைத்து கொள்ளவும். தயாரித்த பேக் ஆறியதும் கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து தலைமுடியில் அப்ளை செய்ய வேண்டும், அதாவது தலைமுடியின் உச்சந்தலையில் இருந்து நுனி முடி வரை நன்றாக இந்த பேக்கை அப்ளை செய்ய வேண்டும்.
இவ்வாறு நன்றாக அப்ளை செய்த பிறகு சீப்பை பயன்படுத்தி தலைமுடியை நேராக சீவிவிட வேண்டும். பின்பு இரண்டு மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்பு தலைமுடியை ஷாம்போ போட்டு அலசி விடுங்கள் இவ்வாறு செய்வதினால் நாம் இயற்கையான முறையில் மிக எளிமையாகவே தலைமுடிக்கு ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்து விட முடியும்.
பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு அறிகுறிகள் என்ன என்பதையும் அவற்றை தடுக்கும் முறைகளை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு அறிகுறிகள் என்ன என்பதையும் அவற்றை தடுக்கும் முறைகளை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.
பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
பெண்களுக்கு மாரடைப்பு அறிகுறிகள்:
பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும்பாலான நேரங்களில் தெரிவதில்லை என்றும் வாஷிங்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு கூறுகிறது.
மிகத் தீவிரமாக மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், அது மாரடைப்புதான் என்று தெரிந்தால் மட்டுமே அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
நோயாளிகளின் அறிகுறிகளை வைத்தே டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்பதால், பெண்களுக்கு மாரடைப்புக்கான சிகிச்சை தெரிய வராமல் போய் விடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
முதுகின் மேல்புறம் வலி, வாந்தி, சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம், மூக்கடைப்பு, அஜீரணம் போன்றவை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக மாரடப்பு விகிதம் பெண்களுக்கு குறைவு என்ற போதிலும், அவை ஏற்படும் அறிகுறிகள் தெரியாத போது, சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலாமல் போவதால், திடீர் மரணம் ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
மாரடைப்பு ஏற்படும் பெண்களுக்கு, அதற்கான அறிகுறிகள் வெகுநேரம் முன்பாகவே வந்திருக்கக்கூடும். எனவே மாரடைப்பு என்று தெரிய வந்தவுடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய ஆம்புலன்ஸில் செல்வதே சிறந்தது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
அப்போது தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களைப் பொருத்தவரை அவர்களுக்கும், சிகிச்சை அளிப்பவர்களுக்கும் மாரடைப்பு என்று அறிந்து கொள்வதற்கே தாமதம் ஆவதாலேயே சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு வருவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தடுப்பு முறைகளைக் கட்டாயம் கடைபிடிக்கவும். மாரடைப்பு ஏற்படுவத்தை தடுத்துவிட முடியும்.
1. அவர்கள் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமாகவும், உப்பு - கொழுப்புப் பொருட்கள் குறைவாகவும் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் - நார்ச்சத்துகள் அதிகமாகவும் இருக்க வேண்டும்.
2. அளவு மீறிய உடல் எடை உடையவர்கள் உடல் எடையைக் குறைத்தல் அவசியம்.
3. உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்தல் கட்டாயம் மாரடைப்பு ஏற்படுவத்தை தடுத்துவிட முடியும்.
4. புகைப்பிடித்தலை முழுவதுமாகக் கட்டாயம் நிறுத்த வேண்டும்.
5. நீரிழிவு நோய், அதிக அளவு இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்புச்சத்து உடையவர்கள் மருந்துகளை முறையாக உட்கொண்டு, உடல்நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.
பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.
பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
பெண்களுக்கு மாரடைப்பு அறிகுறிகள்:
பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும்பாலான நேரங்களில் தெரிவதில்லை என்றும் வாஷிங்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு கூறுகிறது.
மிகத் தீவிரமாக மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், அது மாரடைப்புதான் என்று தெரிந்தால் மட்டுமே அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
நோயாளிகளின் அறிகுறிகளை வைத்தே டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்பதால், பெண்களுக்கு மாரடைப்புக்கான சிகிச்சை தெரிய வராமல் போய் விடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
முதுகின் மேல்புறம் வலி, வாந்தி, சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம், மூக்கடைப்பு, அஜீரணம் போன்றவை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக மாரடப்பு விகிதம் பெண்களுக்கு குறைவு என்ற போதிலும், அவை ஏற்படும் அறிகுறிகள் தெரியாத போது, சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலாமல் போவதால், திடீர் மரணம் ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
மாரடைப்பு ஏற்படும் பெண்களுக்கு, அதற்கான அறிகுறிகள் வெகுநேரம் முன்பாகவே வந்திருக்கக்கூடும். எனவே மாரடைப்பு என்று தெரிய வந்தவுடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய ஆம்புலன்ஸில் செல்வதே சிறந்தது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
அப்போது தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களைப் பொருத்தவரை அவர்களுக்கும், சிகிச்சை அளிப்பவர்களுக்கும் மாரடைப்பு என்று அறிந்து கொள்வதற்கே தாமதம் ஆவதாலேயே சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு வருவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தடுப்பு முறைகளைக் கட்டாயம் கடைபிடிக்கவும். மாரடைப்பு ஏற்படுவத்தை தடுத்துவிட முடியும்.
1. அவர்கள் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமாகவும், உப்பு - கொழுப்புப் பொருட்கள் குறைவாகவும் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் - நார்ச்சத்துகள் அதிகமாகவும் இருக்க வேண்டும்.
2. அளவு மீறிய உடல் எடை உடையவர்கள் உடல் எடையைக் குறைத்தல் அவசியம்.
3. உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்தல் கட்டாயம் மாரடைப்பு ஏற்படுவத்தை தடுத்துவிட முடியும்.
4. புகைப்பிடித்தலை முழுவதுமாகக் கட்டாயம் நிறுத்த வேண்டும்.
5. நீரிழிவு நோய், அதிக அளவு இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்புச்சத்து உடையவர்கள் மருந்துகளை முறையாக உட்கொண்டு, உடல்நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.
தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.
தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.
உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம்.காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.
காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.
பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.
உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் – சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம்.
உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.
மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.
உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம்.காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.
காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.
பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.
உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் – சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம்.
உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.
மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.
அரைக்கீரை குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. இன்று சத்து நிறைந்த அரைக்கீரை பருப்பு குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரைக்கீரை - ஒரு கட்டு
எண்ணெய் - 1/4 குழிகரண்டி
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
துவரம்பருப்பு - 1/2 ஆழாக்கு
வறுத்து அரைக்க :
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8
தாளிக்க :

செய்முறை :
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
துவரம்பருப்பை நன்கு வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
அரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொண்டு, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி குழைய வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள அரைக்கீரையை சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.
அரைக்கீரை வெந்ததும் மசித்து அதனுடன், வேகவைத்த துவரம்பருப்பை சேர்க்க நன்றாக கிளற வேண்டும்.
கீரையை இறக்கும் போது வறுத்து அரைத்த பருப்பு பொடியை தூவி இறக்கவும்.
அரைக்கீரை - ஒரு கட்டு
எண்ணெய் - 1/4 குழிகரண்டி
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
துவரம்பருப்பு - 1/2 ஆழாக்கு
வறுத்து அரைக்க :
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8
தாளிக்க :
கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
துவரம்பருப்பை நன்கு வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
அரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொண்டு, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி குழைய வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள அரைக்கீரையை சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.
அரைக்கீரை வெந்ததும் மசித்து அதனுடன், வேகவைத்த துவரம்பருப்பை சேர்க்க நன்றாக கிளற வேண்டும்.
கீரையை இறக்கும் போது வறுத்து அரைத்த பருப்பு பொடியை தூவி இறக்கவும்.
சுவையான அரைகீரை பருப்பு குழம்பு தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாணவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து இருப்பார்கள். அதில் இருந்து வெளியே வந்து பள்ளிச்சூழலுக்குள் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் கல்வியில் மீண்டும் கவனம் செலுத்த முடியும்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டன. விடுமுறையில் பொழுதுபோக்கிய மாணவ- மாணவிகள் புதிய கல்வி ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றனர். இதையொட்டி பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போதுமான அளவில் செய்ய வேண்டும். அதே போல் பள்ளியின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வெயில் மற்றும் மழை பெய்யும் போது மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பள்ளி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாடப்புத்தகம், பள்ளிக்கூடம் ஆகியவற்றை மறந்து மாணவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து இருப்பார்கள். அதில் இருந்து வெளியே வந்து பள்ளிச்சூழலுக்குள் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் கல்வியில் மீண்டும் கவனம் செலுத்த முடியும்.
பள்ளிக்கூடம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே மாணவ- மாணவிகளுக்கு தேவையான சீருடை, காலணி, நோட்டு, புத்தகம் போன்றவற்றை பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையில் வாங்கிக் கொடுத்து இருப்பார்கள். இதை உணர்ந்து மாணவ-மாணவிகள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். பாடங்களை ஆசிரியர்கள் நடத்திய அன்றே படித்து விட வேண்டும். படிப்பில் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த உறுதி மொழியை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும். படிப்போடு மாணவ- மாணவிகள் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும். உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு உடல் நலத்தையும் பேண வேண்டும். தீய, தவறான பழக்கங்களுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது. நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்போது தான் தவறுகளில் ஈடுபடாமலும், நல்வழியில் பயணிக்கவும் முடியும்.
பள்ளிக்கூடத்தில் பாடங்களை படிப்பது என்பதை தாண்டி, சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போது தான் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே செல்லும் போது வாழ்க்கையின் சவால்களை சந்திக்கவும், வெற்றி பெறவும் முடியும். பாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும்.
அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு அக்கறையும், அர்ப்பணிப்பும் வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு சிரமத்தை ஏற்றுக் கொள்கிறோமோ, அந்த அளவிற்கு வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு மனரீதியாக தயார்படுத்திக் கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும்.
செல்போன் செயலி மற்றும் கணினி விளையாட்டுகளில் மாணவ-மாணவிகள் மூழ்கி விடாமல் இருக்க பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம். அதோடு அவர்களும் செல்போனை அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் முன்மாதிரியாக நடந்து கொண்டால் குழந்தைகளும் அதை பின்பற்றுவார்கள். நேரத்தை நல்ல முறையில் கையாள கற்றுக்கொண்டதால் எந்த வேலையையும் எளிதாக செய்து விட முடியும். எந்த செயலும் கடினமான ஒன்றாகவே தோன்றும். ஆனால் அதையே தொடர்ந்து செய்து பழக்கப்படுத்திக் கொண்டால் சாதிக்க முடியும்.
பாடப்புத்தகம், பள்ளிக்கூடம் ஆகியவற்றை மறந்து மாணவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து இருப்பார்கள். அதில் இருந்து வெளியே வந்து பள்ளிச்சூழலுக்குள் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் கல்வியில் மீண்டும் கவனம் செலுத்த முடியும்.
பள்ளிக்கூடம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே மாணவ- மாணவிகளுக்கு தேவையான சீருடை, காலணி, நோட்டு, புத்தகம் போன்றவற்றை பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையில் வாங்கிக் கொடுத்து இருப்பார்கள். இதை உணர்ந்து மாணவ-மாணவிகள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். பாடங்களை ஆசிரியர்கள் நடத்திய அன்றே படித்து விட வேண்டும். படிப்பில் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த உறுதி மொழியை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும். படிப்போடு மாணவ- மாணவிகள் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும். உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு உடல் நலத்தையும் பேண வேண்டும். தீய, தவறான பழக்கங்களுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது. நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்போது தான் தவறுகளில் ஈடுபடாமலும், நல்வழியில் பயணிக்கவும் முடியும்.
பள்ளிக்கூடத்தில் பாடங்களை படிப்பது என்பதை தாண்டி, சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போது தான் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே செல்லும் போது வாழ்க்கையின் சவால்களை சந்திக்கவும், வெற்றி பெறவும் முடியும். பாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும்.
அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு அக்கறையும், அர்ப்பணிப்பும் வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு சிரமத்தை ஏற்றுக் கொள்கிறோமோ, அந்த அளவிற்கு வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு மனரீதியாக தயார்படுத்திக் கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும்.
செல்போன் செயலி மற்றும் கணினி விளையாட்டுகளில் மாணவ-மாணவிகள் மூழ்கி விடாமல் இருக்க பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம். அதோடு அவர்களும் செல்போனை அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் முன்மாதிரியாக நடந்து கொண்டால் குழந்தைகளும் அதை பின்பற்றுவார்கள். நேரத்தை நல்ல முறையில் கையாள கற்றுக்கொண்டதால் எந்த வேலையையும் எளிதாக செய்து விட முடியும். எந்த செயலும் கடினமான ஒன்றாகவே தோன்றும். ஆனால் அதையே தொடர்ந்து செய்து பழக்கப்படுத்திக் கொண்டால் சாதிக்க முடியும்.
மருத்துவ மூலிகையான வெற்றிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்துள்ளதால் நச்சை முறிக்கும், ஜீரணசக்தியை தூண்டும், உடலுக்கு உற்சாகத்தை ஊட்டும்.
சித்தா மற்றும் ஆயுர்வேதத்தின்படி மனிதர்களுக்கு நோய் வரக்காரணம் மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சரியான விகிதத்தில் இல்லாமல் இருப்பதே ஆகும். அவை கூடும் போதோ அல்லது குறையும் போதோ நோய் வருகிறது.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலையில் வைத்து ஆரோக்கியத்தை பேணுவதில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவதால் இந்த நன்மை கிட்டுகிறது.
மருத்துவ மூலிகையான வெற்றிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்துள்ளதால் நச்சை முறிக்கும், ஜீரணசக்தியை தூண்டும், உடலுக்கு உற்சாகத்தை ஊட்டும். இப்படி பல்வேறு நன்மைகள் அதில் உள்ளன.
வெற்றிலையிலும் ஆண், பெண் பேதம் உள்ளது. கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண்வெற்றிலைகள் என்றும் இளம்பச்சை வெற்றிலைகள் பெண்வெற்றிலைகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
வெற்றிலையில் நீர்ச்சத்து, புரதச்சத்து, இரும்பு சத்து, கால்சியம், கரோட்டின், தயமின், வைட்டமின் சி மற்றும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் என்னும் பொருளும் உள்ளது.
அதனால்தான் நமது கலாச்சாரத்தில் தாம்பூலம் தரித்தல் எனும் வெற்றிலை போடும் பழக்கம் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த காலத்தில் நம் முன்னோர்கள் சாப்பிட்டதும் வெற்றிலை போடுவார்கள். அது ஜீரண சக்தியை மேம்படுத்தும். மேலும் சாப்பாட்டில் ஒவ்வாமை இருந்தாலும் அதனை போக்கும். இப்போது அந்த பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. பண்டிகை, திருமணம் போன்ற விழாக்களின் போதே பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் வெற்றிலை போடுகின்றனர். மற்ற நாட்களில் கடைப்பிடிப்பதில்லை.
வெற்றிலையுடன் புகையிலை சேர்த்து மெல்லும் பழக்கம் ஏற்பட்ட பின்னரே வெற்றிலை போடுவது கெட்ட பழக்கம் என்ற கருத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டது இதற்கு முக்கிய காரணமாகும். புகையிலை இல்லாமல் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவது உடல்நலத்திற்கு உகந்ததே. வெற்றிலை போடும் போது முதல் இரண்டு முறை சுரக்கும் உமிழ்நீரை உமிந்துவிட வேண்டும். அதுதான் நல்லது.
நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் வெற்றிலை போடுவது அவர்களின் உடல் நலத்திற்கு நல்லது. ஏன்னெனில் அவர்களின் ஜீரண சக்தி குறைந்திருக்கும். வெற்றிலை போடுவதால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.
இன்றைய காலக்கட்டத்தில் சின்னஞ் சிறார் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எலும்பு தேய்மானம், மூட்டுவலி பிரச்சினை உள்ளது. கீழே விழுந்து லேசான அடிபட்டாலும் எலும்பு முறிவு ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். இதற்கு காரணம் கால்சியம் சத்து குறைபாடே. சுண்ணாம்பில் கால்சியம் அதிக அளவு உள்ளது. வெற்றிலை போடும் போது நமக்கு கால்சியம் சத்து கிடைக்கிறது.
பண்டைய காலத்தில் அனைவரும் வெற்றிலை போடும் பழக்கம் இருந்ததால் அவர்கள் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கப் பெற்று வயதானாலும் எலும்பு தேய்மானம், மூட்டுவலி பிரச்சினையின்றி திடமாக இருந்தார்கள்.
வெற்றிலை மிகச்சிறந்த மூலிகை என்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
குழந்தை பெற்ற பின்னர் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒமக்களி, சுக்கு களி, பூண்டுகளி ஆகிய லேகியங்கள் இரவில் சாப்பிட கொடுப்பார்கள். அது செரிமானமாகவும் பால் சுரப்பை அதிகமாக்கவும் அவர்களுக்கு வெற்றிலையை மெல்ல கொடுப்பார்கள். அது மட்டும் அல்லாமல் வெற்றிலையை விளக்கெண்ணையில் வதக்கி மார்பில் வைத்துக் கட்டுவார்கள். இவ்வாறு செய்வதால் பால் சுரப்பது அதிகரிக்கும்.
வெற்றிலையுடன் துளசி இலை சேர்த்து சாப்பிட சளி மறையும். சிறு குழந்தைகளாக இருக்கும் போது அவித்து அதனை வடிகட்டி ஒரு சங்கு கொடுக்க சளி, இருமல், மூச்சு திணறல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.
சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம். சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். வாயில் தூர்நாற்றம் வீசும் பிரச்சினை உடையவர்கள் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, ஏலம், கிராம்பு, ஜாதிபத்தரி போன்றவைகள் சேர்த்து மெல்லும் போது வாயில் உள்ள கிருமிகளை அழித்து தூர்நாற்றத்தை நீக்கும்.
தேங்காய் எண்ணெயில் வெற்றிலையை போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலிட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படும். வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும். தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கிப் புண்ணின் மீது பற்றாகப் போட விரைவில் குணமாகும்.
வெற்றிலை விஷக்கடியை குணமாக்க வல்லது. சாதாரணமான வண்டு கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று தின்றால் விஷம் எளிதில் இறங்கும்.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலையில் வைத்து ஆரோக்கியத்தை பேணுவதில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவதால் இந்த நன்மை கிட்டுகிறது.
மருத்துவ மூலிகையான வெற்றிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்துள்ளதால் நச்சை முறிக்கும், ஜீரணசக்தியை தூண்டும், உடலுக்கு உற்சாகத்தை ஊட்டும். இப்படி பல்வேறு நன்மைகள் அதில் உள்ளன.
வெற்றிலையிலும் ஆண், பெண் பேதம் உள்ளது. கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண்வெற்றிலைகள் என்றும் இளம்பச்சை வெற்றிலைகள் பெண்வெற்றிலைகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
வெற்றிலையில் நீர்ச்சத்து, புரதச்சத்து, இரும்பு சத்து, கால்சியம், கரோட்டின், தயமின், வைட்டமின் சி மற்றும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் என்னும் பொருளும் உள்ளது.
வெற்றிலை போடும் போது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு சுவை பித்தத்தை கட்டுப்படுத்தும். சுண்ணாம்பில் உள்ள காரச் சுவை வாதத்தை கட்டுப்படுத்தும். இதனால் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகியன சம நிலையில் இருந்து நோய் வராமல் காக்கும்.
அந்த காலத்தில் நம் முன்னோர்கள் சாப்பிட்டதும் வெற்றிலை போடுவார்கள். அது ஜீரண சக்தியை மேம்படுத்தும். மேலும் சாப்பாட்டில் ஒவ்வாமை இருந்தாலும் அதனை போக்கும். இப்போது அந்த பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. பண்டிகை, திருமணம் போன்ற விழாக்களின் போதே பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் வெற்றிலை போடுகின்றனர். மற்ற நாட்களில் கடைப்பிடிப்பதில்லை.
வெற்றிலையுடன் புகையிலை சேர்த்து மெல்லும் பழக்கம் ஏற்பட்ட பின்னரே வெற்றிலை போடுவது கெட்ட பழக்கம் என்ற கருத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டது இதற்கு முக்கிய காரணமாகும். புகையிலை இல்லாமல் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவது உடல்நலத்திற்கு உகந்ததே. வெற்றிலை போடும் போது முதல் இரண்டு முறை சுரக்கும் உமிழ்நீரை உமிந்துவிட வேண்டும். அதுதான் நல்லது.
நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் வெற்றிலை போடுவது அவர்களின் உடல் நலத்திற்கு நல்லது. ஏன்னெனில் அவர்களின் ஜீரண சக்தி குறைந்திருக்கும். வெற்றிலை போடுவதால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.
இன்றைய காலக்கட்டத்தில் சின்னஞ் சிறார் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எலும்பு தேய்மானம், மூட்டுவலி பிரச்சினை உள்ளது. கீழே விழுந்து லேசான அடிபட்டாலும் எலும்பு முறிவு ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். இதற்கு காரணம் கால்சியம் சத்து குறைபாடே. சுண்ணாம்பில் கால்சியம் அதிக அளவு உள்ளது. வெற்றிலை போடும் போது நமக்கு கால்சியம் சத்து கிடைக்கிறது.
பண்டைய காலத்தில் அனைவரும் வெற்றிலை போடும் பழக்கம் இருந்ததால் அவர்கள் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கப் பெற்று வயதானாலும் எலும்பு தேய்மானம், மூட்டுவலி பிரச்சினையின்றி திடமாக இருந்தார்கள்.
வெற்றிலை மிகச்சிறந்த மூலிகை என்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
குழந்தை பெற்ற பின்னர் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒமக்களி, சுக்கு களி, பூண்டுகளி ஆகிய லேகியங்கள் இரவில் சாப்பிட கொடுப்பார்கள். அது செரிமானமாகவும் பால் சுரப்பை அதிகமாக்கவும் அவர்களுக்கு வெற்றிலையை மெல்ல கொடுப்பார்கள். அது மட்டும் அல்லாமல் வெற்றிலையை விளக்கெண்ணையில் வதக்கி மார்பில் வைத்துக் கட்டுவார்கள். இவ்வாறு செய்வதால் பால் சுரப்பது அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலை காம்பை விளக்கெண்ணையில் தடவி ஆசன வாயில் செலுத்த மலம் உடனே வெளிவரும்.
சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம். சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். வாயில் தூர்நாற்றம் வீசும் பிரச்சினை உடையவர்கள் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, ஏலம், கிராம்பு, ஜாதிபத்தரி போன்றவைகள் சேர்த்து மெல்லும் போது வாயில் உள்ள கிருமிகளை அழித்து தூர்நாற்றத்தை நீக்கும்.
தேங்காய் எண்ணெயில் வெற்றிலையை போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலிட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படும். வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும். தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கிப் புண்ணின் மீது பற்றாகப் போட விரைவில் குணமாகும்.
வெற்றிலை விஷக்கடியை குணமாக்க வல்லது. சாதாரணமான வண்டு கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று தின்றால் விஷம் எளிதில் இறங்கும்.
தற்போது பலரும் மொபைலில் வங்கி சேவையைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். உள்ளங்கையில் வங்கிச் சேவை வருவதுதான் இதற்கு காரணம்.
தற்போது பலரும் மொபைலில் வங்கி சேவையைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். உள்ளங்கையில் வங்கிச் சேவை வருவதுதான் இதற்கு காரணம். அதேநேரம், சரி, மொபைல் பாங்கிங் வசதிக்குக் கட்டணம் உண்டா, இல்லையா? என்ற கேள்வி அவர்கள் மனதில் எழுந்து நிற்கிறது.
உலகத்தில் எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு கட்டணம் உண்டு என்ற விதி, ‘மொபைல் பாங்கிங்’குக்கும் பொருந்தும். ஆனால் இந்தச் சேவையை அளிப்பதற்காக வங்கிகள் எந்தக் கட்டணத்தையும் விதிப்பதில்லை. மாறாக, நீங்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.களுக்காக செல்போன் சேவை நிறுவனத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கான கட்டணம், வழக்கமானதை விட சற்று கூடுதலாக இருக்கும். தவிர, நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலும் இரண்டாகக் கருதப்படும். உங்கள் எஸ்.எம்.எஸ்.சுக்கு வங்கி அனுப்பும் பதில் எஸ்.எம்.எஸ்.சையும் சேர்த்து இப்படிக் கணக்கிடுகிறார்கள். நீங்கள் இணையத்தின் வாயிலாக ‘மொபைல் பாங்கிங்’ வசதியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதற்கு உங்கள் செல்போன் நிறுவனம் பின்பற்றும் கட்டண முறைப்படி கட்டணம் செலுத்த வேண்டும்.

‘மொபைல் பாங்கிங்’ சேவையில் உங்கள் செல்போன் எண்ணுடன் உங்களது வங்கிக் கணக்கு இணைக்கப்படுவதால், நீங்கள் செல்போன் எண்ணை மாற்றினால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு உடனே தெரிவிக்க வேண்டும். நீங்கள் உங்கள் செல்போனை தொலைத்துவிட்டால் அல்லது திருட்டுக் கொடுத்துவிட்டால் செய்ய வேண்டிய முதல் காரியம், உங்கள் செல்போன் நிறுவனத்துக்குத் தொடர்புகொண்டு ‘டீஆக்டிவேட்’ செய்யக் கோருவது. வங்கிக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்மூலம், உங்கள் கணக்கு தொடர்பான விஷயங்கள், தகவல்களை குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்புவதை அவர்கள் நிறுத்துவார்கள்.
நீங்கள் உங்கள் மொபைல் ‘பின்’னை (‘எம் பின்’) ரகசியமாகப் பாதுகாக்க வேண்டும். மறந்துவிடாமல் இருக்க வேண்டும். மறந்துவிட்டால், உங்களைப் பற்றிய ரகசியம் குறித்த ஒரு கேள்வி கேட்கப்படும். அதற்கு சரியாக பதிலளிக்கும்போது, நீங்கள் மறுபடி ‘எம் பின்’னை பெறுவீர்கள்.
உலகத்தில் எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு கட்டணம் உண்டு என்ற விதி, ‘மொபைல் பாங்கிங்’குக்கும் பொருந்தும். ஆனால் இந்தச் சேவையை அளிப்பதற்காக வங்கிகள் எந்தக் கட்டணத்தையும் விதிப்பதில்லை. மாறாக, நீங்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.களுக்காக செல்போன் சேவை நிறுவனத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கான கட்டணம், வழக்கமானதை விட சற்று கூடுதலாக இருக்கும். தவிர, நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலும் இரண்டாகக் கருதப்படும். உங்கள் எஸ்.எம்.எஸ்.சுக்கு வங்கி அனுப்பும் பதில் எஸ்.எம்.எஸ்.சையும் சேர்த்து இப்படிக் கணக்கிடுகிறார்கள். நீங்கள் இணையத்தின் வாயிலாக ‘மொபைல் பாங்கிங்’ வசதியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதற்கு உங்கள் செல்போன் நிறுவனம் பின்பற்றும் கட்டண முறைப்படி கட்டணம் செலுத்த வேண்டும்.

‘மொபைல் பாங்கிங்’ சேவையில் உங்கள் செல்போன் எண்ணுடன் உங்களது வங்கிக் கணக்கு இணைக்கப்படுவதால், நீங்கள் செல்போன் எண்ணை மாற்றினால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு உடனே தெரிவிக்க வேண்டும். நீங்கள் உங்கள் செல்போனை தொலைத்துவிட்டால் அல்லது திருட்டுக் கொடுத்துவிட்டால் செய்ய வேண்டிய முதல் காரியம், உங்கள் செல்போன் நிறுவனத்துக்குத் தொடர்புகொண்டு ‘டீஆக்டிவேட்’ செய்யக் கோருவது. வங்கிக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்மூலம், உங்கள் கணக்கு தொடர்பான விஷயங்கள், தகவல்களை குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்புவதை அவர்கள் நிறுத்துவார்கள்.
நீங்கள் உங்கள் மொபைல் ‘பின்’னை (‘எம் பின்’) ரகசியமாகப் பாதுகாக்க வேண்டும். மறந்துவிடாமல் இருக்க வேண்டும். மறந்துவிட்டால், உங்களைப் பற்றிய ரகசியம் குறித்த ஒரு கேள்வி கேட்கப்படும். அதற்கு சரியாக பதிலளிக்கும்போது, நீங்கள் மறுபடி ‘எம் பின்’னை பெறுவீர்கள்.
மட்டன் சேர்த்து செய்யும் கஞ்சி அருமையாக இருக்கும். இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 2 கப்
வறுத்த சிறு பருப்பு - 1 கப்
மட்டன் - அரை கிலோ
பெ.வெங்காயம் - 3
கேரட் - 4
உருளைக்கிழங்கு - 2
பட்டாணி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
மசாலா தூள் - தேவைக்கு
மிளகாய் தூள் - தேவையான அளவு
தக்காளி - 4
பட்டை, ஏலக்காய் - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
அரிசி - 2 கப்
வறுத்த சிறு பருப்பு - 1 கப்
மட்டன் - அரை கிலோ
பெ.வெங்காயம் - 3
கேரட் - 4
உருளைக்கிழங்கு - 2
பட்டாணி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
மசாலா தூள் - தேவைக்கு
மிளகாய் தூள் - தேவையான அளவு
தக்காளி - 4
பட்டை, ஏலக்காய் - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு

செய்முறை:
பெரிய வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை சிறிதுநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
குக்கரில் இறைச்சி, மிளகாய்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உருளைக்கிழங்கு, பட்டாணி, தக்காளி, கேரட், உப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும் குக்கரை திறந்து அரிசி, பருப்பு சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும் ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் ஏலக்காய், கருவா பட்டை, வெங்காயம், மசாலா தூள் சேர்த்து வதக்கி அரைத்துவைத்த கலவையில் சேர்க்கவும்.
பின்னர் அதனை அடுப்பில் வைத்து தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம்.
சுவையான மட்டன் கஞ்சி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காலையிலும் மாலையிலும் சிறிதளவு பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படும்.
இன்றைய உடல் சிக்கல்களை தீர்க்கவல்லது என போகர் அருளிய பழனி பஞ்சாமிர்தத்தை கூறலாம். இதனை வெறும் பூஜைப் பொருளாக பார்ப்பது முறையா?
வாழ்வியல் மாற்றங்கள், அதிகப்படியான குளிர்சாதனப் பயன்பாடு, உணவுமுறை மாற்றங்கள் என அனைத்தும் பல உடல் கோளாறுகள் ஏற்படக் காரணிகளாகின்றன. இவையே அதிகப்படியான உடல் சோர்வு, தொடர்ச்சியான சளி, காய்ச்சல், தைராய்டு என பல உடல் சிக்கல்களை தோற்றுவிக்க அடிப்படை காரணம்.
மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை இன்று கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் பொதுவானதாக ஆகிவிட்டது. இவற்றை மிக எளிமையாக கையாளும் வழிமுறையினை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். பழனியில் நவபாஷான சிலையை நிறுவிய போகர் ஒரு மிகச்சிறந்த அருமருந்தினையும் நமக்கு அளித்துள்ளார். ஆம், மலை வாழை, சுத்தமான நெய், நல்ல தேன் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சாமிர்தம் தான் அது. பக்தி, உணவு என அனைத்தும் அன்று வாழ்வியல் சிக்கல்களை தீர்க்கவே இருந்தது என்பதற்கு பஞ்சாமிர்தம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
காலையிலும் மாலையிலும் சிறிதளவு பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படும்.

காய்ச்சல் சூட்டினைக் கூட கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டது நம் பாரம்பரிய பஞ்சாமிர்தம். இவ்வளவு உறுதியாக பஞ்சாமிர்தத்தை பற்றி கூறக் காரணம் இன்றும் பழனியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பங்குனி மாதம் விழா எடுத்து பஞ்சாமிர்தம் செய்து ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கும் பழக்கம் இருந்து வருகிறது. இது பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம்.
இவ்வளவு அரிய பண்டமான பஞ்சாமிர்தம் பற்றி நாம் அனைவரும் அறிந்தாலும் சுத்தமான பஞ்சாமிர்தம் கிடைப்பதில்தான் இன்று சிக்கல். தேவை அதிகரித்ததற்கு ஈடாக மலை வாழை கிடைப்பதில்லை என்பதால் வேறு பழங்கள் வைத்து செய்யப்படுகின்றன. அதனால் 15 நாட்களில் இவை கெட்டு விடுகிறது. மேலும் தனது மருத்துவ குணங்களையும் இழந்து விடுகிறது. ஆனால் மலை வாழையில் செய்த பஞ்சாமிர்தம் குறைந்தது ஆறு மாதம் தன்னிலை மாறாமல் இருக்குமாம். இதற்கு காரணம் மலை வாழையில் தண்ணீர் பதம் அறவே இல்லாததுதான்.
தமிழர் பண்பாட்டில் ஆயிரம் ஆயிரம் உணவுப்பண்டங்கள், பானங்கள் இருந்தும் பஞ்சாமிர்தத்திற்கு மட்டுமே அமிர்தம் என்ற பெயர் உள்ளது. இது ஒன்றின் மூலமே அதன் சிறப்பை புரிந்துகொள்ள முடியும்.
வாழ்வியல் மாற்றங்கள், அதிகப்படியான குளிர்சாதனப் பயன்பாடு, உணவுமுறை மாற்றங்கள் என அனைத்தும் பல உடல் கோளாறுகள் ஏற்படக் காரணிகளாகின்றன. இவையே அதிகப்படியான உடல் சோர்வு, தொடர்ச்சியான சளி, காய்ச்சல், தைராய்டு என பல உடல் சிக்கல்களை தோற்றுவிக்க அடிப்படை காரணம்.
மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை இன்று கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் பொதுவானதாக ஆகிவிட்டது. இவற்றை மிக எளிமையாக கையாளும் வழிமுறையினை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். பழனியில் நவபாஷான சிலையை நிறுவிய போகர் ஒரு மிகச்சிறந்த அருமருந்தினையும் நமக்கு அளித்துள்ளார். ஆம், மலை வாழை, சுத்தமான நெய், நல்ல தேன் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சாமிர்தம் தான் அது. பக்தி, உணவு என அனைத்தும் அன்று வாழ்வியல் சிக்கல்களை தீர்க்கவே இருந்தது என்பதற்கு பஞ்சாமிர்தம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
காலையிலும் மாலையிலும் சிறிதளவு பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படும்.

காய்ச்சல் சூட்டினைக் கூட கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டது நம் பாரம்பரிய பஞ்சாமிர்தம். இவ்வளவு உறுதியாக பஞ்சாமிர்தத்தை பற்றி கூறக் காரணம் இன்றும் பழனியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பங்குனி மாதம் விழா எடுத்து பஞ்சாமிர்தம் செய்து ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கும் பழக்கம் இருந்து வருகிறது. இது பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம்.
இவ்வளவு அரிய பண்டமான பஞ்சாமிர்தம் பற்றி நாம் அனைவரும் அறிந்தாலும் சுத்தமான பஞ்சாமிர்தம் கிடைப்பதில்தான் இன்று சிக்கல். தேவை அதிகரித்ததற்கு ஈடாக மலை வாழை கிடைப்பதில்லை என்பதால் வேறு பழங்கள் வைத்து செய்யப்படுகின்றன. அதனால் 15 நாட்களில் இவை கெட்டு விடுகிறது. மேலும் தனது மருத்துவ குணங்களையும் இழந்து விடுகிறது. ஆனால் மலை வாழையில் செய்த பஞ்சாமிர்தம் குறைந்தது ஆறு மாதம் தன்னிலை மாறாமல் இருக்குமாம். இதற்கு காரணம் மலை வாழையில் தண்ணீர் பதம் அறவே இல்லாததுதான்.
தமிழர் பண்பாட்டில் ஆயிரம் ஆயிரம் உணவுப்பண்டங்கள், பானங்கள் இருந்தும் பஞ்சாமிர்தத்திற்கு மட்டுமே அமிர்தம் என்ற பெயர் உள்ளது. இது ஒன்றின் மூலமே அதன் சிறப்பை புரிந்துகொள்ள முடியும்.






