என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
கர்நாடகாவில் அக்கி ரொட்டி மிகவும் பிரபலம். இன்று காய்கறிகள் சேர்த்து அரிசி ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 2 கப்,
கேரட் - 1
கோஸ் - சிறிய துண்டு
தேங்காய் - 3 பத்தை,
வெள்ளரிக்காய் - பாதி,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பிலை - ஒரு கொத்து,
சீரகம் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட், கோஸ், தேங்காய், வெள்ளரிக்காயை துருவிக்கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் கேரட், கோஸ், தேங்காய், வெள்ளரிக்காய், சீரகம், சீரகப் பொடி, உப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் அதில் தேவையான அளவு நீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து அரைமணி நேரம் அப்படியே வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெலிதாகத் தட்டி தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
அரிசி மாவு - 2 கப்,
கேரட் - 1
கோஸ் - சிறிய துண்டு
தேங்காய் - 3 பத்தை,
வெள்ளரிக்காய் - பாதி,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பிலை - ஒரு கொத்து,
சீரகம் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட், கோஸ், தேங்காய், வெள்ளரிக்காயை துருவிக்கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் கேரட், கோஸ், தேங்காய், வெள்ளரிக்காய், சீரகம், சீரகப் பொடி, உப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் அதில் தேவையான அளவு நீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து அரைமணி நேரம் அப்படியே வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெலிதாகத் தட்டி தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சத்தான சுவையான வெஜிடபிள் அரிசி ரொட்டி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இளமையிலேயே நடக்கத்தொடங்கியவர்களின் இதயம் முதுமையிலும் நன்கு சுருங்கிவிரிவதாகவும் இதயத்தசைகள் பலமுடன் செயல்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகிறது.
நீண்ட தூரம் நடப்பவன் நெடுநாள் வாழ்வான் என்று ஒரு பழமொழி உண்டு. இன்றைய மனிதன் உடையைக் கவனிக்கும் அளவிற்கு நடையைக் கவனிப்பதில்லை. நடைகளில் அன்னநடை, கம்பீரநடை, பொடிநடை, ராஜநடை, ஒய்யாரநடை, வேகநடை, மிதநடை என்று பல நடைமுறைகள் இருந்தாலும் நடைமுறையில் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
நடைக்கும், உடைக்கும் எப்போதுமே ஒரு தொடர்பு இருப்பதால் தான் எல்லோருமே நடையுடையாக இருப்பதையே விரும்புகிறோம். ஏனெனில் நடக்கிற மனிதனே வெளியே புறப்படும்போது உடை உடுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பழங்காலத்தில் நடப்பதனால் உடலுக்கும் மனதிற்கும் ஏற்படும் நன்மைகளை உணர்ந்தே பாதயாத்திரை செய்தார்கள். யாத்திரை செய்யும் பாதங்களே நல்ல நித்திரையை கண்களுக்கு கொடுப்பதோடு மாத்திரைகளையும் மறக்கச்செய்கிறது. இறைநினைவோடு அவன் எடுத்துவைத்த அடிகள்தான் மனநிறைவோடு நலமுடன் வாழச்செய்தது.
குழந்தையில் நடைவண்டியில் நடக்கப்பழகிய நாம் காலங்கள் கடக்க கடக்க நடக்கவே மறந்துபோனோம். வீழ்ந்து எழும் குழந்தைகளே வீழ்ச்சிக்குப்பிறகும் வெற்றி என்பதனை உணர்ந்துகொள்கிறது. இன்று நடைவண்டிகளையும் நாகரிகம் ஆட்கொண்டதால் மழலைகள் நடக்குமுன்னே பறக்கமுனைகிறது. அல்லும் பகலும் ஆசனத்திலேயே அமர்ந்து வேலை செய்பவர்கள் யோக ஆசனங்களை செய்யத்தொடங்கிவிட்டார்கள். அசையாமல் அமர்ந்தே பணிசெய்பவர்கள் நடந்தே பிணிபோக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். உழவனுக்கும் தொழிலாளிக்கும் நடைக்குப்பயிற்சி தேவையில்லை. அவன் அசைவுகள் அத்துணையும் ஆரோக்கிய பயிற்சிகள்தான்.
வேலைகளை மூளைகளால் மட்டுமே செய்வோரும் உடல் அசைவின்றி உழைப்போரும் நாளெல்லாம் நாற்காலியில் அமர்ந்துகொண்டு சொந்தக்காலிலே நிற்கிறேன் என்று சொல்வோரும் உடல் உழைப்புக்கு நீண்ட ஓய்வு கொடுப்போரும் நடைப்பயிற்சி நாள்தோறும் செய்வது சிறந்தது. காரணம் உடல் உழைப்பு இல்லாமல்போனால் நோய்கள் நம் உள்ளுறுப்புக்களை உறுதியாகப் பிடித்துக்கொள்ளும்.
எடுத்துவைக்கும் முதல் அடியே ஆயிரம் மைல் பயணத்திற்கும் அஸ்திவாரமிடுகிறது. நடந்துகொண்டே இருப்பதால் எறும்பின் கால்களும் இரும்பாக மாறும். மான்களின் கால்கள் மலையையும் தாண்டும். நண்டுக்கால்களும் தண்ணீரிலும் தரையிலும் எதிர்நீச்சல் போடும். குதிரையின் கால்கள் பல குதிரைசக்திகளை வெளிப்படுத்தும். சிலந்தியின் கால்களும் சிற்பங்களை செதுக்கும். ஆனால் மனிதக்கால்கள் மட்டும் மறத்துப்போகலாமா?. நடக்க மறந்தும் போகலாமா?
உலக சுகாதார நிறுவனம் வாரம் 5 நாட்கள் நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் வீதம் 150 நிமிடங்கள் நடந்தாலே நல்ல பலனைப்பெறலாம் என்று பரிந்துரைக்கிறது. உடற்பயிற்சியின் அரசன் நடைப்பயிற்சிதான். எளிமையானதும் எந்த செலவுமில்லாதது. அதிகாலை எழும் பறவையே அதிக தூரம் பறந்து செல்லுமாம். நடைப்பயிற்சிக்கு காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 5 லிருந்து 6.30 மணி வரை உகந்த நேரம்.
நிசப்தமான சூழலும் பறவைகளின் பரவச ஒலியுடனும் இயற்கை காற்றை இன்பமாய் சுவாசித்து நடையைத் தொடங்குவது நாட்களுக்கே நல்ல தொடக்கமாகும். தொற்று நோய் தாக்காதவாறு பல காலணிகளை அணிந்துகொண்டு நடந்தாலும் வெறுங்கால்களால் நடக்கும் நடைப்பயிற்சியே நல்ல பலன்களை தருவதாக ஆய்வுகள் கூறுகிறது. கால்கள் மண்ணில்படும்பொழுது பூமியிலுள்ள எலக்ட்ரான்களுக்கும் உடம்பிற்கும் உறவுப்பாலம் ஏற்பட்டும் மண்ணின் சக்தி மனித சக்தியை உயரத்துகிறது.
எனவேதான் மண்ணிற்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டு என்று உணர்த்தவே மசக்கையிலும் மண்ணைத் திண்கிறார்கள் பெண் என்று கூறுவதுண்டு. டைப்-2 வகை சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சியின் போது கால்களில் காயங்கள் ஏற்படாதவாறு தடுக்கவும் நகரங்களில் உள்ளவர்களை தொற்றுநோய் தாக்காதவாறு காக்கவும் எளிய பாதுகாப்பான காலணிகளை அணிந்துகொள்வது தவிர்க்கமுடியாதது.
சகோதரர்கள் இருவர் ஒருஜோடி செருப்புவாங்கினார்கள். அண்ணன் பகலிலும் தம்பி இரவிலும் அணிந்துகொள்வதாகவும் பேச்சு. செருப்பு தேய்ந்தும் மறுஜோடி செருப்பு வாங்க அண்ணன்தம்பியிடம் கேட்டான். இரவு முழுவதும் நடந்து நடந்தே என் தூக்கம்தான் கெட்டுப்போனது என்றான் தம்பி. செருப்பை மட்டும் தேய்க்கும் நடைகள் பயனற்றது. நடக்கும்பொழுது குதிகால் முதலில் தரையில் படும்படியும் பிறகு முன்பாததசைகள் படும்படியும் நடக்க பழகிக்கொள்வது சிறந்தது. நன்கு கைகளை வீசி நிமிர்ந்து நடத்தல் அவசியம்.
கைவீசம்மா கைவீசு கடைக்குப்போறேன் கைவீசு என்ற குழந்தைப்பாடல் நடைப்பயிற்சியையே குறிக்கிறது. ‘ஓடி விளையாடு பாப்பா’ என்றான் பாரதி. இன்று வீடியோ கேம்ஸ் விளையாடு பாப்பா வீட்டைவிட்டு வெளியே விளையாடாதே பாப்பா என்று நாம் மாற்றிவிட்டதால் குழந்தைகளையும் நடைபயிற்சியில் பழக்குவது நல்லது.
பள்ளிகளில் விளையாட்டு முறைகள் குழந்தைகளின் உடல்உழைப்பினை மேம்படுத்தும் வகைளில் இருப்பது அத்தியாவசியமாகிறது. உடல் எடையை குறைப்பதில் நடைப்பயிற்சி நல்ல பலனை தருகிறது. நொறுக்குத் தீனிகளையும் காபி டீயும் இடையிடையயே சாப்பிட்டுக் கொண்டே நடப்பதனால் கலோரிசக்தி அதிகமாகும் தவிர குறையப்போவதில்லை. உடல் எடை நடைப்பயிற்சிக்குப்பிறகு குறைந்திருக்கிறதா என்று நாயுடன் நடைப்பயிற்சி செல்பவரிடம் கேட்டார்கள். 2 கிலோ குறைந்திருக்கிறது எனக்கல்ல என் நாய்க்கு என்று பதில் வந்தது.
அரைமணி நேர நடை 300 கலோரி சக்திகளை எரித்து எடையை குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தம் சீர்படவும் இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் நடைபயிற்சி உதவுகிறது. தீமை விளைவிக்கும் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து நன்மை விளைவிக்கும் எச்.டி.எல் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் அதிகரிக்கவும் நடைபயிற்சியே நன்மைபுரிகிறது. உலக சுகாதார நிறுவனம் உலகெங்கும் இதயநோயினால் ஆண்டுக்கு 25 லட்சம் மக்கள் மரணமடைகிறார்கள் என்றும் இந்தியாவில் 100ல் 14 பேருக்கு தற்போது இதயநோய்கள் இருப்பதாகவும் கூறுகிறது.
இளமையிலேயே நடக்கத்தொடங்கியவர்களின் இதயம் முதுமையிலும் நன்கு சுருங்கிவிரிவதாகவும் இதயத்தசைகள் பலமுடன் செயல்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகிறது. நுரையீரல் நன்கு விரிந்து பிராணசந்திகளின் பரிமாற்றம் நன்கு நடைபெற்று. கல்லீரல் கணையம் இதயம் செரிமான உறுப்புகள் நன்கு செயல்பட நடைபயிற்சி பயன்படுகிறது. மனிதனுக்கு மானத்தைப்போல் பராமரித்து பாதுகாக்கப்படவேண்டியது செரிமானமும் தான். என்சைம்களை அதிகளவு உற்பத்திசெய்து உடம்பின் மெட்டபாலிச செயல்பாடுகளை தூண்டி செரிமானத்தை சீராக்க நடைபயிற்சி முக்கிய பங்காற்றுகிறது.
இன்று சர்க்கரை நோயை விரட்ட அக்கறை உள்ளவர்கள் எல்லாம் நடைபயிற்சியை நங்கூரமாக வைத்திருக்கிறார்கள். சர்க்கரை எனும் நீரழிவு நோயால் இந்தியாவில் 50 பேர் இறக்கிறார்கள். உலகளவில் 51.1 கோடியாக இருக்கும் சர்க்கரை நோய் 2030-க்கும் 63.4 கோடியாக அதிகரிக்கும் என்றும் இந்தியாவில் சுமார் 1 லட்சம் குழந்தைகள் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்தியாவில் சுமார் 7 கோடி பேரும் சீனாவில் 11 கோடி பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. டைப் 2 வகை நீரழிவு நோயாளிகள் நடைப்பயிற்சியால் நல்லமுன்னேற்றம் அடைகிறார்கள். கணையத்தில் உள்ள பீட்டாசெல்கள் தூண்டப்பட்டு தடைப்பட்டிருக்கிற இன்சுலின் உற்பத்தியை அதிகப்படுத்தி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நடைபயிற்சி உதவுகிறது.
புதிதாக நடைபயிற்சி செய்வோர் எடுத்தவுடன் அதிக தூரம் நடக்காமல் முதல்நாள் 25 நிமிடங்கள் குறைந்த தூரத்தை நிர்ணயித்து நடைபயிற்சி பழக்கப்பட்டவுடன் சிறிதுசிறிதாக தூரத்தை அதிகப்படுத்தலாம். இதயநோய் அடிக்கடி மயக்கம் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறியுடையோர் மருத்துவரின் ஆலோசனை பெற்று நடைபயிற்சி செய்வது சிறந்தது தொடர்ந்து நடைபயிற்சிசெய்வோரின் தசைகள் எலும்புகள் நன்கு பலப்படுவதால் மூட்டுவலி, முதுகுவலி பிரச்சினைகள் வராது. ரிஷிகளும், முனிவர்களும், ஞானிகளும் ஞானத்துடன் விளங்க அவர்களின் நடையும் காரணமாகும்.
நடைபயிற்சியால் ஞாபகசக்தியுடன் தொடர்புடைய மூளையின் கிப்போகாம்பஸ் பகுதி தூண்டப்பட்டு நல்ல ஞாபகசக்தி பெறப்படுகிறது. அமெரிக்காவில் மனநலமையங்களில் முதியோர்களின் மனஅழுத்தம் போக்க நடைபயிற்சி முக்கிய பயிற்சியாக அளிக்கப்படுகிறது. எடுத்துவைக்கும் அடியும் மனமும் ஒரே சிந்தையுடன் இருக்கவேண்டும். கைபேசியில் பேசிக்கொண்டும் நண்பருடன் உரையாடிக்கொண்டும் நடப்பதும் செல்லாத நடைபயிற்சியாகும். கால்கள் துரிதமாக செயல்பட தொடங்கினால் நோய்கள் நம்மீது செய்பட தயங்கும்ஆகையால் நமது உடம்புக்கு நன்மை நடக்கவேண்டுமா நாம் ஒன்று செய்யவேண்டும் அதுதான் நடக்கவேண்டும். நடப்பதெல்லாம் நன்மைக்கே.
கே.கோவிந்தசாமி,
இயன்முறை மருத்துவர்,ஆலங்குடி.
நடைக்கும், உடைக்கும் எப்போதுமே ஒரு தொடர்பு இருப்பதால் தான் எல்லோருமே நடையுடையாக இருப்பதையே விரும்புகிறோம். ஏனெனில் நடக்கிற மனிதனே வெளியே புறப்படும்போது உடை உடுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பழங்காலத்தில் நடப்பதனால் உடலுக்கும் மனதிற்கும் ஏற்படும் நன்மைகளை உணர்ந்தே பாதயாத்திரை செய்தார்கள். யாத்திரை செய்யும் பாதங்களே நல்ல நித்திரையை கண்களுக்கு கொடுப்பதோடு மாத்திரைகளையும் மறக்கச்செய்கிறது. இறைநினைவோடு அவன் எடுத்துவைத்த அடிகள்தான் மனநிறைவோடு நலமுடன் வாழச்செய்தது.
குழந்தையில் நடைவண்டியில் நடக்கப்பழகிய நாம் காலங்கள் கடக்க கடக்க நடக்கவே மறந்துபோனோம். வீழ்ந்து எழும் குழந்தைகளே வீழ்ச்சிக்குப்பிறகும் வெற்றி என்பதனை உணர்ந்துகொள்கிறது. இன்று நடைவண்டிகளையும் நாகரிகம் ஆட்கொண்டதால் மழலைகள் நடக்குமுன்னே பறக்கமுனைகிறது. அல்லும் பகலும் ஆசனத்திலேயே அமர்ந்து வேலை செய்பவர்கள் யோக ஆசனங்களை செய்யத்தொடங்கிவிட்டார்கள். அசையாமல் அமர்ந்தே பணிசெய்பவர்கள் நடந்தே பிணிபோக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். உழவனுக்கும் தொழிலாளிக்கும் நடைக்குப்பயிற்சி தேவையில்லை. அவன் அசைவுகள் அத்துணையும் ஆரோக்கிய பயிற்சிகள்தான்.
வேலைகளை மூளைகளால் மட்டுமே செய்வோரும் உடல் அசைவின்றி உழைப்போரும் நாளெல்லாம் நாற்காலியில் அமர்ந்துகொண்டு சொந்தக்காலிலே நிற்கிறேன் என்று சொல்வோரும் உடல் உழைப்புக்கு நீண்ட ஓய்வு கொடுப்போரும் நடைப்பயிற்சி நாள்தோறும் செய்வது சிறந்தது. காரணம் உடல் உழைப்பு இல்லாமல்போனால் நோய்கள் நம் உள்ளுறுப்புக்களை உறுதியாகப் பிடித்துக்கொள்ளும்.
எடுத்துவைக்கும் முதல் அடியே ஆயிரம் மைல் பயணத்திற்கும் அஸ்திவாரமிடுகிறது. நடந்துகொண்டே இருப்பதால் எறும்பின் கால்களும் இரும்பாக மாறும். மான்களின் கால்கள் மலையையும் தாண்டும். நண்டுக்கால்களும் தண்ணீரிலும் தரையிலும் எதிர்நீச்சல் போடும். குதிரையின் கால்கள் பல குதிரைசக்திகளை வெளிப்படுத்தும். சிலந்தியின் கால்களும் சிற்பங்களை செதுக்கும். ஆனால் மனிதக்கால்கள் மட்டும் மறத்துப்போகலாமா?. நடக்க மறந்தும் போகலாமா?
உலக சுகாதார நிறுவனம் வாரம் 5 நாட்கள் நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் வீதம் 150 நிமிடங்கள் நடந்தாலே நல்ல பலனைப்பெறலாம் என்று பரிந்துரைக்கிறது. உடற்பயிற்சியின் அரசன் நடைப்பயிற்சிதான். எளிமையானதும் எந்த செலவுமில்லாதது. அதிகாலை எழும் பறவையே அதிக தூரம் பறந்து செல்லுமாம். நடைப்பயிற்சிக்கு காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 5 லிருந்து 6.30 மணி வரை உகந்த நேரம்.
நிசப்தமான சூழலும் பறவைகளின் பரவச ஒலியுடனும் இயற்கை காற்றை இன்பமாய் சுவாசித்து நடையைத் தொடங்குவது நாட்களுக்கே நல்ல தொடக்கமாகும். தொற்று நோய் தாக்காதவாறு பல காலணிகளை அணிந்துகொண்டு நடந்தாலும் வெறுங்கால்களால் நடக்கும் நடைப்பயிற்சியே நல்ல பலன்களை தருவதாக ஆய்வுகள் கூறுகிறது. கால்கள் மண்ணில்படும்பொழுது பூமியிலுள்ள எலக்ட்ரான்களுக்கும் உடம்பிற்கும் உறவுப்பாலம் ஏற்பட்டும் மண்ணின் சக்தி மனித சக்தியை உயரத்துகிறது.
எனவேதான் மண்ணிற்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டு என்று உணர்த்தவே மசக்கையிலும் மண்ணைத் திண்கிறார்கள் பெண் என்று கூறுவதுண்டு. டைப்-2 வகை சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சியின் போது கால்களில் காயங்கள் ஏற்படாதவாறு தடுக்கவும் நகரங்களில் உள்ளவர்களை தொற்றுநோய் தாக்காதவாறு காக்கவும் எளிய பாதுகாப்பான காலணிகளை அணிந்துகொள்வது தவிர்க்கமுடியாதது.
சகோதரர்கள் இருவர் ஒருஜோடி செருப்புவாங்கினார்கள். அண்ணன் பகலிலும் தம்பி இரவிலும் அணிந்துகொள்வதாகவும் பேச்சு. செருப்பு தேய்ந்தும் மறுஜோடி செருப்பு வாங்க அண்ணன்தம்பியிடம் கேட்டான். இரவு முழுவதும் நடந்து நடந்தே என் தூக்கம்தான் கெட்டுப்போனது என்றான் தம்பி. செருப்பை மட்டும் தேய்க்கும் நடைகள் பயனற்றது. நடக்கும்பொழுது குதிகால் முதலில் தரையில் படும்படியும் பிறகு முன்பாததசைகள் படும்படியும் நடக்க பழகிக்கொள்வது சிறந்தது. நன்கு கைகளை வீசி நிமிர்ந்து நடத்தல் அவசியம்.
கைவீசம்மா கைவீசு கடைக்குப்போறேன் கைவீசு என்ற குழந்தைப்பாடல் நடைப்பயிற்சியையே குறிக்கிறது. ‘ஓடி விளையாடு பாப்பா’ என்றான் பாரதி. இன்று வீடியோ கேம்ஸ் விளையாடு பாப்பா வீட்டைவிட்டு வெளியே விளையாடாதே பாப்பா என்று நாம் மாற்றிவிட்டதால் குழந்தைகளையும் நடைபயிற்சியில் பழக்குவது நல்லது.
பள்ளிகளில் விளையாட்டு முறைகள் குழந்தைகளின் உடல்உழைப்பினை மேம்படுத்தும் வகைளில் இருப்பது அத்தியாவசியமாகிறது. உடல் எடையை குறைப்பதில் நடைப்பயிற்சி நல்ல பலனை தருகிறது. நொறுக்குத் தீனிகளையும் காபி டீயும் இடையிடையயே சாப்பிட்டுக் கொண்டே நடப்பதனால் கலோரிசக்தி அதிகமாகும் தவிர குறையப்போவதில்லை. உடல் எடை நடைப்பயிற்சிக்குப்பிறகு குறைந்திருக்கிறதா என்று நாயுடன் நடைப்பயிற்சி செல்பவரிடம் கேட்டார்கள். 2 கிலோ குறைந்திருக்கிறது எனக்கல்ல என் நாய்க்கு என்று பதில் வந்தது.
அரைமணி நேர நடை 300 கலோரி சக்திகளை எரித்து எடையை குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தம் சீர்படவும் இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் நடைபயிற்சி உதவுகிறது. தீமை விளைவிக்கும் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து நன்மை விளைவிக்கும் எச்.டி.எல் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் அதிகரிக்கவும் நடைபயிற்சியே நன்மைபுரிகிறது. உலக சுகாதார நிறுவனம் உலகெங்கும் இதயநோயினால் ஆண்டுக்கு 25 லட்சம் மக்கள் மரணமடைகிறார்கள் என்றும் இந்தியாவில் 100ல் 14 பேருக்கு தற்போது இதயநோய்கள் இருப்பதாகவும் கூறுகிறது.
இளமையிலேயே நடக்கத்தொடங்கியவர்களின் இதயம் முதுமையிலும் நன்கு சுருங்கிவிரிவதாகவும் இதயத்தசைகள் பலமுடன் செயல்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகிறது. நுரையீரல் நன்கு விரிந்து பிராணசந்திகளின் பரிமாற்றம் நன்கு நடைபெற்று. கல்லீரல் கணையம் இதயம் செரிமான உறுப்புகள் நன்கு செயல்பட நடைபயிற்சி பயன்படுகிறது. மனிதனுக்கு மானத்தைப்போல் பராமரித்து பாதுகாக்கப்படவேண்டியது செரிமானமும் தான். என்சைம்களை அதிகளவு உற்பத்திசெய்து உடம்பின் மெட்டபாலிச செயல்பாடுகளை தூண்டி செரிமானத்தை சீராக்க நடைபயிற்சி முக்கிய பங்காற்றுகிறது.
இன்று சர்க்கரை நோயை விரட்ட அக்கறை உள்ளவர்கள் எல்லாம் நடைபயிற்சியை நங்கூரமாக வைத்திருக்கிறார்கள். சர்க்கரை எனும் நீரழிவு நோயால் இந்தியாவில் 50 பேர் இறக்கிறார்கள். உலகளவில் 51.1 கோடியாக இருக்கும் சர்க்கரை நோய் 2030-க்கும் 63.4 கோடியாக அதிகரிக்கும் என்றும் இந்தியாவில் சுமார் 1 லட்சம் குழந்தைகள் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்தியாவில் சுமார் 7 கோடி பேரும் சீனாவில் 11 கோடி பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. டைப் 2 வகை நீரழிவு நோயாளிகள் நடைப்பயிற்சியால் நல்லமுன்னேற்றம் அடைகிறார்கள். கணையத்தில் உள்ள பீட்டாசெல்கள் தூண்டப்பட்டு தடைப்பட்டிருக்கிற இன்சுலின் உற்பத்தியை அதிகப்படுத்தி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நடைபயிற்சி உதவுகிறது.
புதிதாக நடைபயிற்சி செய்வோர் எடுத்தவுடன் அதிக தூரம் நடக்காமல் முதல்நாள் 25 நிமிடங்கள் குறைந்த தூரத்தை நிர்ணயித்து நடைபயிற்சி பழக்கப்பட்டவுடன் சிறிதுசிறிதாக தூரத்தை அதிகப்படுத்தலாம். இதயநோய் அடிக்கடி மயக்கம் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறியுடையோர் மருத்துவரின் ஆலோசனை பெற்று நடைபயிற்சி செய்வது சிறந்தது தொடர்ந்து நடைபயிற்சிசெய்வோரின் தசைகள் எலும்புகள் நன்கு பலப்படுவதால் மூட்டுவலி, முதுகுவலி பிரச்சினைகள் வராது. ரிஷிகளும், முனிவர்களும், ஞானிகளும் ஞானத்துடன் விளங்க அவர்களின் நடையும் காரணமாகும்.
நடைபயிற்சியால் ஞாபகசக்தியுடன் தொடர்புடைய மூளையின் கிப்போகாம்பஸ் பகுதி தூண்டப்பட்டு நல்ல ஞாபகசக்தி பெறப்படுகிறது. அமெரிக்காவில் மனநலமையங்களில் முதியோர்களின் மனஅழுத்தம் போக்க நடைபயிற்சி முக்கிய பயிற்சியாக அளிக்கப்படுகிறது. எடுத்துவைக்கும் அடியும் மனமும் ஒரே சிந்தையுடன் இருக்கவேண்டும். கைபேசியில் பேசிக்கொண்டும் நண்பருடன் உரையாடிக்கொண்டும் நடப்பதும் செல்லாத நடைபயிற்சியாகும். கால்கள் துரிதமாக செயல்பட தொடங்கினால் நோய்கள் நம்மீது செய்பட தயங்கும்ஆகையால் நமது உடம்புக்கு நன்மை நடக்கவேண்டுமா நாம் ஒன்று செய்யவேண்டும் அதுதான் நடக்கவேண்டும். நடப்பதெல்லாம் நன்மைக்கே.
கே.கோவிந்தசாமி,
இயன்முறை மருத்துவர்,ஆலங்குடி.
வீட்டில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்று வருகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்வது அவசியம்.
பள்ளிக்கூடத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களின் குடும்ப சூழல், பொருளாதாரம், சமூக சூழல் உள்ளிட்ட அம்சங்கள் வேறுபட்டதாக இருக்கும். அது போல் குழந்தைகள் பழக்க, வழக்கங்களும் வேறுபட்டதாகவே இருக்கும். ஆனாலும் குழந்தைகள் பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஒன்று போல் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. அப்போது அவர்களிடம் வேறுபாடு ஏற்படக்கூடாது என்பதற்காக சீருடை வழங்கப்படுகிறது.
ஆனாலும் அவர்களின் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மாணவர்களை கையாளுவதில் ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் மாணவர்களின் சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், பெற விரும்பும் பதில், கேட்கும் கேள்விகள் போன்றவை மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. எனவே வீட்டில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்று வருகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்வது அவசியம்.
அதற்கு பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். பள்ளியில் நடந்த நிகழ்வுகள், நடத்தப்பட்ட பாடம், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட உணர்வுகள், தேர்வு, பாடம் ஆகியவை தொடர்பாக பெற்றோர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதையும் தாண்டி பள்ளியில் மாணவர்கள் இடையே நடைபெறும் பொதுவான நிகழ்வுகள், அதை குழந்தைகள் எதிர்கொண்ட விதம் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சமூகம் குறித்து அவர்களின் பார்வையும் மாறிக்கொண்ட இருக்கிறது. அவர்களுக்கு பெற்றோர் கற்றுக்கொடுப்பது, அதை குழந்தைகள் புரிந்து கொண்டு செயல்படுவது போன்றவற்றில் வேறுபாடு இருக்கும். அதை புரிந்து கொண்டு சரி செய்ய வேண்டியது பெற்றோரின் பெரிய கடமையாக இருக்கிறது. குழந்தைகளுடன் தொடர்ந்து பேசும் போது தான் அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள்?. எப்படிப்பட்ட சிந்தனை அவர்களிடம் மேலாங்கி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அதில் உள்ள தவறுகளை திருத்தவும் வாய்ப்பு ஏற்படும்.
பணிச்சுமை, வேலை என்று ஏதாவது காரணங்களை கூறிக்கொண்டு பெற்றோர், குழந்தைகளிடம் இருந்து ஒதுக்கி விடக் கூடாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதால் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங் கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதை நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாற்றங்களை எதிர் கொண்டு, நல்லவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு புதிய சமூகசூழலின் நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாடப்புத்தகத் தை தாண்டி பள்ளியில் கிடைக்கும் பாடம் என்பது குழந்தைகளுக்கு எந்தநாளும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளின் வாழ்வை செம்மைப்படுத்துவதில் தொடக்க கல்வி முக்கிய இடம் பெறுகிறது. அந்த பருவத்தில் குழந்தைகளை நற்பண்புகள் மிகுந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அது அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்.
குழந்தைகள் எதையும் எளிதாக கற்றுக் கொள்பவர்கள் மட்டுமல்ல யாருக்கும் எதையும் எளிதாக கற்றுக்கொடுக்கும் திறன் பெற்றவர்கள் ஆவர். அவர்களின் அணுகுமுறை யாரையும் எளிதில் ஈர்த்து விடும். அதன் மூலம் அவர்கள் சொல்லாத விஷயங்களின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியும். எனவே குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது அவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன. எனவே அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். நல்ல வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பரஸ்பரம் மரியாதை அளிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் நல்ல மனிதர்களாக மாற்ற அவர்களுடன் நேரம் செலவிடுவதே நல்ல அணுகுமுறை ஆகும்.
ஆனாலும் அவர்களின் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மாணவர்களை கையாளுவதில் ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் மாணவர்களின் சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், பெற விரும்பும் பதில், கேட்கும் கேள்விகள் போன்றவை மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. எனவே வீட்டில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்று வருகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்வது அவசியம்.
அதற்கு பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். பள்ளியில் நடந்த நிகழ்வுகள், நடத்தப்பட்ட பாடம், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட உணர்வுகள், தேர்வு, பாடம் ஆகியவை தொடர்பாக பெற்றோர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதையும் தாண்டி பள்ளியில் மாணவர்கள் இடையே நடைபெறும் பொதுவான நிகழ்வுகள், அதை குழந்தைகள் எதிர்கொண்ட விதம் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சமூகம் குறித்து அவர்களின் பார்வையும் மாறிக்கொண்ட இருக்கிறது. அவர்களுக்கு பெற்றோர் கற்றுக்கொடுப்பது, அதை குழந்தைகள் புரிந்து கொண்டு செயல்படுவது போன்றவற்றில் வேறுபாடு இருக்கும். அதை புரிந்து கொண்டு சரி செய்ய வேண்டியது பெற்றோரின் பெரிய கடமையாக இருக்கிறது. குழந்தைகளுடன் தொடர்ந்து பேசும் போது தான் அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள்?. எப்படிப்பட்ட சிந்தனை அவர்களிடம் மேலாங்கி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அதில் உள்ள தவறுகளை திருத்தவும் வாய்ப்பு ஏற்படும்.
பணிச்சுமை, வேலை என்று ஏதாவது காரணங்களை கூறிக்கொண்டு பெற்றோர், குழந்தைகளிடம் இருந்து ஒதுக்கி விடக் கூடாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதால் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங் கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதை நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாற்றங்களை எதிர் கொண்டு, நல்லவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு புதிய சமூகசூழலின் நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாடப்புத்தகத் தை தாண்டி பள்ளியில் கிடைக்கும் பாடம் என்பது குழந்தைகளுக்கு எந்தநாளும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளின் வாழ்வை செம்மைப்படுத்துவதில் தொடக்க கல்வி முக்கிய இடம் பெறுகிறது. அந்த பருவத்தில் குழந்தைகளை நற்பண்புகள் மிகுந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அது அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்.
குழந்தைகள் எதையும் எளிதாக கற்றுக் கொள்பவர்கள் மட்டுமல்ல யாருக்கும் எதையும் எளிதாக கற்றுக்கொடுக்கும் திறன் பெற்றவர்கள் ஆவர். அவர்களின் அணுகுமுறை யாரையும் எளிதில் ஈர்த்து விடும். அதன் மூலம் அவர்கள் சொல்லாத விஷயங்களின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியும். எனவே குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது அவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன. எனவே அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். நல்ல வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பரஸ்பரம் மரியாதை அளிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் நல்ல மனிதர்களாக மாற்ற அவர்களுடன் நேரம் செலவிடுவதே நல்ல அணுகுமுறை ஆகும்.
சிறுநீரக கற்களால் ஏற்படும் வலி தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். ஆனால், சிறுநீரக கற்களை நீக்க அல்லது வெளியேற்ற, சரிசெய்ய நவீன சிகிச்சைகள் உள்ளன.
வயிற்றின் மேல்பகுதியில் முதுகுப்புறமாக அவரை விதை வடிவில் 2 சிறுநீரகங்கள் உள்ளன. இந்த சிறுநீரகங்களின் முக்கிய பணியே ரத்தத்தை சுத்திகரிப்பது தான். பொதுவாக 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு ரத்தத்தில் ஆக்சலேட் உப்பு அதிகமாக காணப்படும்.
இந்த வயதினருக்கு டெஸ்டோஸ்டிரான் சுரப்பு அதிகமாக இருக்கும். எனவே இந்த வயதுடைய ஆண்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.
சிறுநீரக கற்களால் ஏற்படும் வலி தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். ஆனால், சிறுநீரக கற்களை நீக்க அல்லது வெளியேற்ற, சரிசெய்ய நவீன சிகிச்சைகள் உள்ளன. சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரின் நிறம் மஞ்சளாக இருந்தால் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு போதவில்லை என்று அர்த்தம். எனவே, தண்ணீர் நிறத்தில் சிறுநீர் போகும் அளவுக்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் வயிற்றின் மேல்பகுதியில் முதுகுபுறமாக கடுமையான வலி உண்டாகும். சிறுநீர் கழிக்கும்போது சிலருக்கு கடுமையான எரிச்சல் மற்றும் வலி இருக்கும். சில சமயங்களில் ரத்தம் கலந்து வரலாம். சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதா என்பதை பரிசோதனை மூலமாகவும், எக்ஸ்ரே மூலமாகவும் உறுதிப்படுத்தலாம். பொதுவாக சிறுநீரில் சிட்ரேட்டின் அளவு 600 மில்லி கிராம் இருக்க வேண்டும். சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி இருந்தால் சிட்ரேட்டின் அளவு குறைவாக இருக்கும். எனவே, சிட்ரேட் அதிகம் உள்ள எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழச்சாற்றை அதிகம் பருகினால் கற்கள் வளர்ச்சி அடைவதை தடுத்து விடலாம்.
பொதுவாக 90 சதவீத கற்கள் சிறுநீர் வழியாக தானாகவே வெளியேறிவிடும். 6 மில்லி மீட்டர் தடிமனுக்கு அதிகமான பெரிய கற்கள் தான் வெளியேறாது. அத்தகைய கற்களை அதிர்வலை மூலமாக சிறு சிறு துகள்களாக உடைத்து வெளியேற்றிவிடலாம். இதில் வெளியேறாவிட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்ற வேண்டும்.
இந்த வயதினருக்கு டெஸ்டோஸ்டிரான் சுரப்பு அதிகமாக இருக்கும். எனவே இந்த வயதுடைய ஆண்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.
சிறுநீரக கற்களால் ஏற்படும் வலி தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். ஆனால், சிறுநீரக கற்களை நீக்க அல்லது வெளியேற்ற, சரிசெய்ய நவீன சிகிச்சைகள் உள்ளன. சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரின் நிறம் மஞ்சளாக இருந்தால் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு போதவில்லை என்று அர்த்தம். எனவே, தண்ணீர் நிறத்தில் சிறுநீர் போகும் அளவுக்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் வயிற்றின் மேல்பகுதியில் முதுகுபுறமாக கடுமையான வலி உண்டாகும். சிறுநீர் கழிக்கும்போது சிலருக்கு கடுமையான எரிச்சல் மற்றும் வலி இருக்கும். சில சமயங்களில் ரத்தம் கலந்து வரலாம். சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதா என்பதை பரிசோதனை மூலமாகவும், எக்ஸ்ரே மூலமாகவும் உறுதிப்படுத்தலாம். பொதுவாக சிறுநீரில் சிட்ரேட்டின் அளவு 600 மில்லி கிராம் இருக்க வேண்டும். சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி இருந்தால் சிட்ரேட்டின் அளவு குறைவாக இருக்கும். எனவே, சிட்ரேட் அதிகம் உள்ள எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழச்சாற்றை அதிகம் பருகினால் கற்கள் வளர்ச்சி அடைவதை தடுத்து விடலாம்.
பொதுவாக 90 சதவீத கற்கள் சிறுநீர் வழியாக தானாகவே வெளியேறிவிடும். 6 மில்லி மீட்டர் தடிமனுக்கு அதிகமான பெரிய கற்கள் தான் வெளியேறாது. அத்தகைய கற்களை அதிர்வலை மூலமாக சிறு சிறு துகள்களாக உடைத்து வெளியேற்றிவிடலாம். இதில் வெளியேறாவிட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்ற வேண்டும்.
இரவு உணவை காலதாமதமாக சாப்பிடுவதோ அல்லது சாப்பிடாமல் தவிர்ப்பதோ உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடும். செரிமான கோளாறு பிரச்சினைகளும் ஏற்படும். வேறுசில பக்கவிளைவுகளும் ஏற்படலாம்.
காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் இரவு உணவும் இன்றியமையாதது. அதனை காலதாமதமாக சாப்பிடுவதோ அல்லது சாப்பிடாமல் தவிர்ப்பதோ உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடும். செரிமான கோளாறு பிரச்சினைகளும் ஏற்படும். வேறுசில பக்கவிளைவுகளும் ஏற்படலாம்.
இரவில் தூங்கும்போதும் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடுவதற்கும், தூக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறது. இரவில் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும். கார்போஹைட்ரேட் கலந்த உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவு வகைகளையும் தவிர்த்துவிடுங்கள்.
காய்கறிகள், சூப், சாலட் வகைகளை இரவில் சாப்பிட வேண்டும். மஞ்சள், இஞ்சி, லவங்கப்பட்டை போன்ற மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகளையும் உட்கொள்ளலாம். அவை உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவும். இரவு உணவுடன் சிறிது நெய் சேர்த்துக்கொள்வதும் நல்லது. நார்ச்சத்து கொண்ட உணவுகளை இரவில் அதிகமாக சாப்பிடலாம்.
அதேவேளையில் பசியை உணரும்போதுதான் சாப்பிட வேண்டும். அதுவும் அளவோடுதான் சாப்பிட வேண்டும். பசி இல்லாமல் சாப்பிட்டால் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இரவில் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்டு விடுவது நல்லது. ஏனெனில் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகுவதற்கு காலஅவகாசம் தேவை. சாப்பிட்ட உடனேயே தூங்கினால் செரிமான கோளாறு ஏற்படும். இரவு நேரத்தில் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு வெண்டைக்காய் சாதம் செய்து கொடுக்கலாம். இன்று இந்த சாதத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 100 கிராம்,
உதிரியாக வடித்த சாதம் - 1 கப்,
கெட்டியான புளிக்கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
பட்டை - 2,
கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,

செய்முறை :
வெண்டைக்காயை இரண்டாகப் பிளந்து வந்துவிடாமல் லாவகமாக வகிர்ந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் வெண்டைக்காயை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
லேசாக வெந்ததும், அதில் மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
குறைந்த தணலில் வைத்து, மசாலா வெண்டைக்காய் முழுவதும் படிகிற படி வதக்கித் தனியே எடுத்து வைக்கவும்.
இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, பட்டை, மஞ்சள் தூள் சேர்த்துப் பொன்னிறத்துக்கு வறுக்கவும்.
இதில் சாதம், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி, வெண்டைக்காய் மசாலாவையும் சேர்த்துக் கிளறவும்.
குறைந்த தணலில், சாதம், மசாலா எல்லாம் சேர்ந்து வரும்படி 5 நிமிடங்களுக்குக் கலந்து பரிமாறவும்.
வெண்டைக்காய் - 100 கிராம்,
உதிரியாக வடித்த சாதம் - 1 கப்,
கெட்டியான புளிக்கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
பட்டை - 2,
கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை :
வெண்டைக்காயை இரண்டாகப் பிளந்து வந்துவிடாமல் லாவகமாக வகிர்ந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் வெண்டைக்காயை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
லேசாக வெந்ததும், அதில் மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
குறைந்த தணலில் வைத்து, மசாலா வெண்டைக்காய் முழுவதும் படிகிற படி வதக்கித் தனியே எடுத்து வைக்கவும்.
இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, பட்டை, மஞ்சள் தூள் சேர்த்துப் பொன்னிறத்துக்கு வறுக்கவும்.
இதில் சாதம், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி, வெண்டைக்காய் மசாலாவையும் சேர்த்துக் கிளறவும்.
குறைந்த தணலில், சாதம், மசாலா எல்லாம் சேர்ந்து வரும்படி 5 நிமிடங்களுக்குக் கலந்து பரிமாறவும்.
சூப்பரான வெண்டைக்காய் சாதம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
டான்சில் பொதுவாகவே உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. சரியான உணவுமுறையும், முறையான உடற்பயிற்சியும் இருந்தாலே அதன் மேல் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.
டான்சில் என்பதையே நோய் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், டான்சில் என்பது நம் உடலின் ஓர் உறுப்பு. இது தொண்டையின் பின் பகுதியில் இருக்கும் ஒரு பகுதி. இது சில சமயங்களில் புண் ஆகும்போது தான் தொந்தரவு ஏற்படுகிறது. டான்சிலால் ஏற்படும் பிரச்னைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று உடனடியாக திடீரென்று புண்ணாவது, மற்றொன்று திரும்பத் திரும்ப புண்ணாவது. இது நபருக்கு நபர் மாறுபடும்.
ஒருவருக்கு திடீரென்று தொண்டை வலி ஏற்பட்டு அவர்கள் நாக்கின் அடியில் இரண்டு பக்கமும் சிவப்பாக வீக்கத்துடன் இருக்கும். மேற்பாகத்தில் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருக்கும். தொண்டையில் எரிச்சல் இருக்கும். எச்சில் முழுங்குவதில் சிரமம் இருக்கும். இவையனைத்தும் திடீரென்று ஏற்படும் டான்சில் தொந்தரவுகள்.
இது குளிர்ந்த நீர் அல்லது ஐஸ்க்ரீம் போன்றவற்றை உட்கொண்டதால் ஏற்பட்டிருக்கும். அல்லது காற்று மாசுபாடு, அசுத்தமான தண்ணீர் அருந்தியது போன்ற காரணங்களாலும் உண்டாகலாம். இதற்கு முறையான ஆன்டிபயாடிக்குகள், கூடுதலாக வைட்டமின் சி மற்றும் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் குணப்படுத்திவிட முடியும்.
மற்றொன்று திரும்பத் திரும்ப வருவது. இதை செப்டிக் டான்சில்(Tonsillitis) என்கிறோம். இதில் தொண்டை வலி இல்லாமல் இருந்தாலும் தொண்டையில் கழலை இருந்துகொண்டே இருக்கும். தொண்டையை சுற்றியுள்ள உறுப்புகள் அனைத்தும் சிவப்பாகவே இருக்கும். இதற்கு டான்சில் புண் ஆகியிருப்பதே காரணம். இதற்கு அறுவை சிகிச்சை அவசியம். இதன் மூலம் அந்த செப்டிக் அகற்றப்படும்.
இயற்கையாகவே பார்த்தோமானால் டான்சில் உடலுக்கு நல்லது. இது உடலுக்கு ஆன்டிபயாடிக்குகளை தருகிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதுபோன்ற நல்ல விஷயங்கள் டான்சிலால் நமக்கு கிடைத்தாலும் அதன் மேல் சீழ் பிடிக்கும்போது அறுவை சிகிச்சை அவசியமாகிறது.

டான்சில் பொதுவாகவே உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. சரியான உணவுமுறையும், முறையான உடற்பயிற்சியும் இருந்தாலே அதன் மேல் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும். மிகவும் குளிர்ச்சியான உணவுப்பண்டங்கள் அல்லது ஐஸ்க்ரீம் போன்றவற்றை குழந்தைகள் சாப்பிடும்போது டான்சில் புண் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது உண்மைதான் என்றாலும் குழந்தைகள் ஐஸ்க்ரீம் போன்றவற்றை விரும்பி உண்பர்.
அதனால் அவர்கள் உண்பதை தடுக்காமல் அதை சாப்பிடக்கூடிய அளவுக்கு அவர்கள் உடலை தயார்படுத்த வேண்டும். டான்சில் தொற்றுக்கான எதிர்ப்பு சக்தியை உடலுக்கு ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக டான்சில் தொற்றுக்கு மூச்சுப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி இருந்தாலே டான்சில் தொந்தரவுகள் உண்டாகாமல் இருக்கும்.
முக்கியமாக ஓடுதல், குதித்தல் போன்றவையான உடற்பயிற்சிகள் செய்தாலே டான்சிலுக்கு நல்ல தீர்வு தரும். கார, அமில உணவுகள் மற்றும் ஃபாஸ்ட்ஃபுட் வகையான உணவுகளை தவிர்த்து அனைத்து வகையான பழ வகைகளும், நார்ச்சத்து மிகுந்துள்ள உணவுகளும் எடுத்துக் கொள்வது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
டான்சில் பிரச்னை இருக்கும் அனைவருக்குமே அறுவை சிகிச்சை தேவைப்படுவது கிடையாது. செப்டிக் டான்சில் இருப்பவர்களுக்கும், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுபவர்களுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை அவசியம். இது குழந்தைகளுக்கும் பொருந்தும். ஆனால் குழந்தைப் பருவத்தில் டான்சில் தொந்தரவுகள் இருப்பவர்களுக்கு 15 வயதிற்கு மேல் முற்றிலுமாக குணமடையவும் வாய்ப்புகள் அதிகம். இதற்கு உடற்பயிற்சி இருந்தாலே போதுமானது.
ஒருவருக்கு திடீரென்று தொண்டை வலி ஏற்பட்டு அவர்கள் நாக்கின் அடியில் இரண்டு பக்கமும் சிவப்பாக வீக்கத்துடன் இருக்கும். மேற்பாகத்தில் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருக்கும். தொண்டையில் எரிச்சல் இருக்கும். எச்சில் முழுங்குவதில் சிரமம் இருக்கும். இவையனைத்தும் திடீரென்று ஏற்படும் டான்சில் தொந்தரவுகள்.
இது குளிர்ந்த நீர் அல்லது ஐஸ்க்ரீம் போன்றவற்றை உட்கொண்டதால் ஏற்பட்டிருக்கும். அல்லது காற்று மாசுபாடு, அசுத்தமான தண்ணீர் அருந்தியது போன்ற காரணங்களாலும் உண்டாகலாம். இதற்கு முறையான ஆன்டிபயாடிக்குகள், கூடுதலாக வைட்டமின் சி மற்றும் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் குணப்படுத்திவிட முடியும்.
மற்றொன்று திரும்பத் திரும்ப வருவது. இதை செப்டிக் டான்சில்(Tonsillitis) என்கிறோம். இதில் தொண்டை வலி இல்லாமல் இருந்தாலும் தொண்டையில் கழலை இருந்துகொண்டே இருக்கும். தொண்டையை சுற்றியுள்ள உறுப்புகள் அனைத்தும் சிவப்பாகவே இருக்கும். இதற்கு டான்சில் புண் ஆகியிருப்பதே காரணம். இதற்கு அறுவை சிகிச்சை அவசியம். இதன் மூலம் அந்த செப்டிக் அகற்றப்படும்.
இயற்கையாகவே பார்த்தோமானால் டான்சில் உடலுக்கு நல்லது. இது உடலுக்கு ஆன்டிபயாடிக்குகளை தருகிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதுபோன்ற நல்ல விஷயங்கள் டான்சிலால் நமக்கு கிடைத்தாலும் அதன் மேல் சீழ் பிடிக்கும்போது அறுவை சிகிச்சை அவசியமாகிறது.

டான்சில் பொதுவாகவே உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. சரியான உணவுமுறையும், முறையான உடற்பயிற்சியும் இருந்தாலே அதன் மேல் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும். மிகவும் குளிர்ச்சியான உணவுப்பண்டங்கள் அல்லது ஐஸ்க்ரீம் போன்றவற்றை குழந்தைகள் சாப்பிடும்போது டான்சில் புண் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது உண்மைதான் என்றாலும் குழந்தைகள் ஐஸ்க்ரீம் போன்றவற்றை விரும்பி உண்பர்.
அதனால் அவர்கள் உண்பதை தடுக்காமல் அதை சாப்பிடக்கூடிய அளவுக்கு அவர்கள் உடலை தயார்படுத்த வேண்டும். டான்சில் தொற்றுக்கான எதிர்ப்பு சக்தியை உடலுக்கு ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக டான்சில் தொற்றுக்கு மூச்சுப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி இருந்தாலே டான்சில் தொந்தரவுகள் உண்டாகாமல் இருக்கும்.
முக்கியமாக ஓடுதல், குதித்தல் போன்றவையான உடற்பயிற்சிகள் செய்தாலே டான்சிலுக்கு நல்ல தீர்வு தரும். கார, அமில உணவுகள் மற்றும் ஃபாஸ்ட்ஃபுட் வகையான உணவுகளை தவிர்த்து அனைத்து வகையான பழ வகைகளும், நார்ச்சத்து மிகுந்துள்ள உணவுகளும் எடுத்துக் கொள்வது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
டான்சில் பிரச்னை இருக்கும் அனைவருக்குமே அறுவை சிகிச்சை தேவைப்படுவது கிடையாது. செப்டிக் டான்சில் இருப்பவர்களுக்கும், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுபவர்களுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை அவசியம். இது குழந்தைகளுக்கும் பொருந்தும். ஆனால் குழந்தைப் பருவத்தில் டான்சில் தொந்தரவுகள் இருப்பவர்களுக்கு 15 வயதிற்கு மேல் முற்றிலுமாக குணமடையவும் வாய்ப்புகள் அதிகம். இதற்கு உடற்பயிற்சி இருந்தாலே போதுமானது.
தாயும், தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தையை வளர்ப்பில் தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
குழந்தை வளர்ப்பில் தாயானவள் கட்டாயமாக இருப்பார். ஆனால், பெரும்பாலும் தந்தையானவர் இதில் இணையாமல் இருக்கிறார். தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம். குழந்தையைத் தாயானவள் பார்த்துக்கொள்வதுபோல, குழந்தையின் தாயை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
* குழந்தைக்கு எப்போது எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவைக் கொடுத்து பழக்க வேண்டும்.
* தண்ணீர் பாட்டிலும் ஸ்டீல் அல்லது காப்பரில் வாங்கலாம்.
* வாய் சிறிதாக உள்ள பாட்டிலை வாங்குவது நல்லது.
* பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிற்றுகிழமையாவது முழு நேரத்தையும் குழந்தையிடம் செலவிட வேண்டும்.
* வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது. பாதுகாப்பும்கூட.
* பஸ், வேன்களில் நீண்ட தூரம் குழந்தை பயணம் செய்தால், முதுகுத்தண்டுவடம் சார்ந்த பிரச்னைகள் வரக்கூடும்.
* குழந்தையை படி, படி என அடிக்கடி கட்டாயப்படுத்தாமல், புரியும்படி சொல்வது நல்லது. விளையாட்டும் படிப்பும் இரண்டுமே குழந்தைக்கு இருப்பது நல்லது.
* ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறன் இருக்கும். அந்த தனித்துவ திறனை கண்டுபிடிக்க முயலுங்கள்.
* பிடிக்காத விஷயத்தை செய்ய சொல்லி குழந்தையை வற்புறுத்த கூடாது.
* டிவி, மொபைல் விளையாட்டுகளைவிட உடலுழைப்பு தரும் விளையாட்டுகளை விளையாட குழந்தையை ஊக்குவியுங்கள்.
* அன்றாடம் தாயும் தந்தையும் காலை முதல் இரவு வரை என்ன நடந்தது எனக் குழந்தைகளிடம் தினமும் கேட்க வேண்டும். ஏனெனில் காலம் மிகவும் மோசமாக இருப்பதால் குழந்தையைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை.
குழந்தை என்ன நடந்தாலும் தாய், தந்தையரிடம் பயம் இல்லாமல் சொல்லும் அளவுக்கு உங்களது வளர்ப்புமுறை இருந்தால் எல்லாக் குழந்தைகளும் பாதுகாப்புடன் இருக்கும். குழந்தையின் பாதுகாப்பு பெற்றோர் கையிலே.
* குழந்தைக்கு எப்போது எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவைக் கொடுத்து பழக்க வேண்டும்.
* தண்ணீர் பாட்டிலும் ஸ்டீல் அல்லது காப்பரில் வாங்கலாம்.
* வாய் சிறிதாக உள்ள பாட்டிலை வாங்குவது நல்லது.
* பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிற்றுகிழமையாவது முழு நேரத்தையும் குழந்தையிடம் செலவிட வேண்டும்.
* வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது. பாதுகாப்பும்கூட.
* பஸ், வேன்களில் நீண்ட தூரம் குழந்தை பயணம் செய்தால், முதுகுத்தண்டுவடம் சார்ந்த பிரச்னைகள் வரக்கூடும்.
* குழந்தையை படி, படி என அடிக்கடி கட்டாயப்படுத்தாமல், புரியும்படி சொல்வது நல்லது. விளையாட்டும் படிப்பும் இரண்டுமே குழந்தைக்கு இருப்பது நல்லது.
* ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறன் இருக்கும். அந்த தனித்துவ திறனை கண்டுபிடிக்க முயலுங்கள்.
* பிடிக்காத விஷயத்தை செய்ய சொல்லி குழந்தையை வற்புறுத்த கூடாது.
* டிவி, மொபைல் விளையாட்டுகளைவிட உடலுழைப்பு தரும் விளையாட்டுகளை விளையாட குழந்தையை ஊக்குவியுங்கள்.
* அன்றாடம் தாயும் தந்தையும் காலை முதல் இரவு வரை என்ன நடந்தது எனக் குழந்தைகளிடம் தினமும் கேட்க வேண்டும். ஏனெனில் காலம் மிகவும் மோசமாக இருப்பதால் குழந்தையைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை.
குழந்தை என்ன நடந்தாலும் தாய், தந்தையரிடம் பயம் இல்லாமல் சொல்லும் அளவுக்கு உங்களது வளர்ப்புமுறை இருந்தால் எல்லாக் குழந்தைகளும் பாதுகாப்புடன் இருக்கும். குழந்தையின் பாதுகாப்பு பெற்றோர் கையிலே.
புதிதாக திருமணம் ஆனவர்கள் குழந்தை பெறுவதை தள்ளிப்போட வேண்டுமென்று தோன்றும். கர்ப்பமாவதை தவிர்த்து, பாதுகாப்பாக தாம்பத்தியம் வைத்துக்கொள்ள ஏற்ற நேரம் எதுவென்று அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு திருமணமான தம்பதியினருக்கும், ஒருகட்டத்தில் குழந்தை பெறுவதை தள்ளிப்போட வேண்டுமென்று தோன்றும். அதுவே குழந்தை பெற்றவர்களுக்கோ அடுத்த குழந்தை வேண்டாமென்றோ, சில நாட்கள் போகட்டுமென்றோ நினைப்பார்கள். இந்நிலையில் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால், குழந்தை உருவாக்கி விடுமோ என்ற பயத்துடனேயே இருப்பார்கள். இந்த பயத்தினால் செக்ஸையே சிலர் தவிர்த்தும் விடுகிறார்கள். மேலும் இதில் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. கண்டிப்பாக இதை அறியாமை என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு பெண் கர்ப்பமாவதை தவிர்த்து, பாதுகாப்பாக செக்ஸ் உறவுவைத்துக்கொள்ள ஏற்ற நேரம் என்பது ஓவுலேஷன் ஏற்படுவதற்கு சரியாக பாதியில் இருக்கும் நேரம் தான். அதாவது கருமுட்டை, கருப்பையிலிருந்து வெளியேறும் அந்த காலகட்டமே ஓவுலேஷன் என்கிறார்கள்.
எனினும், சில தருணங்களில், எதிர்பாராத விதமாக சில பெண்களுக்கு கர்ப்பம் ஏற்பட்டு விடுகின்றது. இது குறிப்பாக, எப்போது முட்டை வெளியேறுகின்றது என்ற கணிப்பு தவறாகும் போது நடக்கின்றது. மேலும் ஓவுலேஷனுக்கு பின், பல பெண்கள் சில நாட்களுக்கு கருவுறும் தன்மையோடு திடமாக இருப்பதும் மற்றுமொரு காரணமாக உள்ளது.

இதன் காரணமாகவே தம்பதியினர் போதுமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, கர்ப்பத்தை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை விட, ஆணுறை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும். இதனால் உடல் உபாதைகளும் ஏற்படாது.
செக்ஸ்க்கு பிறகு கர்ப்பமாகாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு கர்ப்பத்தடை ஊசி, மாத்திரைகளையோ அல்லது வேறு அசௌகரியத்தை உண்டாக்கும் வழிகளோ தேவையில்லை. இதனால் உங்களுக்கு தேவையற்ற உடல் உபாதைகளும், மன சங்கடங்களும் தான் ஏற்படும்.
நீங்கள் இயற்கையாகவே, கர்ப்பமாவதை தவிர்க்க சில பாதுகாப்பான வழிகள் உள்ளது. அது, பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தை கணக்கிட்டு, அதன் பின் பாதுகாப்பான (safe period) சில நாட்களை மட்டுமே செக்ஸ்க்குத் தேர்ந்தெடுப்பது தான்.
ஒரு பெண் கர்ப்பமாவதை தவிர்த்து, பாதுகாப்பாக செக்ஸ் உறவுவைத்துக்கொள்ள ஏற்ற நேரம் என்பது ஓவுலேஷன் ஏற்படுவதற்கு சரியாக பாதியில் இருக்கும் நேரம் தான். அதாவது கருமுட்டை, கருப்பையிலிருந்து வெளியேறும் அந்த காலகட்டமே ஓவுலேஷன் என்கிறார்கள்.
எனினும், சில தருணங்களில், எதிர்பாராத விதமாக சில பெண்களுக்கு கர்ப்பம் ஏற்பட்டு விடுகின்றது. இது குறிப்பாக, எப்போது முட்டை வெளியேறுகின்றது என்ற கணிப்பு தவறாகும் போது நடக்கின்றது. மேலும் ஓவுலேஷனுக்கு பின், பல பெண்கள் சில நாட்களுக்கு கருவுறும் தன்மையோடு திடமாக இருப்பதும் மற்றுமொரு காரணமாக உள்ளது.

இதன் காரணமாகவே தம்பதியினர் போதுமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, கர்ப்பத்தை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை விட, ஆணுறை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும். இதனால் உடல் உபாதைகளும் ஏற்படாது.
செக்ஸ்க்கு பிறகு கர்ப்பமாகாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு கர்ப்பத்தடை ஊசி, மாத்திரைகளையோ அல்லது வேறு அசௌகரியத்தை உண்டாக்கும் வழிகளோ தேவையில்லை. இதனால் உங்களுக்கு தேவையற்ற உடல் உபாதைகளும், மன சங்கடங்களும் தான் ஏற்படும்.
நீங்கள் இயற்கையாகவே, கர்ப்பமாவதை தவிர்க்க சில பாதுகாப்பான வழிகள் உள்ளது. அது, பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தை கணக்கிட்டு, அதன் பின் பாதுகாப்பான (safe period) சில நாட்களை மட்டுமே செக்ஸ்க்குத் தேர்ந்தெடுப்பது தான்.
காய்கறி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு காய்கறிகளை சப்பாத்தியில் சேர்த்து செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - இரண்டு கப்,
கேரட் - 1,
கோஸ் - சிறிய துண்டு,
வெங்காயம் - 1,
துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,

செய்முறை:
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கோஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவில் உப்பு, துருவிய காய்கறிகள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
இந்த மாவில் சிறிது எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக தேய்த்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
கோதுமை மாவு - இரண்டு கப்,
கேரட் - 1,
கோஸ் - சிறிய துண்டு,
வெங்காயம் - 1,
துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கோஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவில் உப்பு, துருவிய காய்கறிகள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
இந்த மாவில் சிறிது எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக தேய்த்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சத்தான சுவையான வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காட்டன் சேலைகளைப் பராமரிப்பது என்பது சற்று சிரமமாக இருந்தாலும் சரியான பராமரிப்பு இருந்தால் இது போன்ற காட்டன் சேலைகளை என்றும் புதியதாக வாங்கிய சேலைகளைப் போல வைத்துக் கொள்ள முடியும்.
பட்டுச் சேலைகளுக்கு அடுத்த படியாக பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படுபவை காட்டன் சேலைகள்தான். காட்டன் சேலைகளில் எத்தனையோ விதமான காட்டன் சேலைகள் உள்ளன. அதிலும் ப்யூர் காட்டன் சேலைகளைப் பராமரிப்பது என்பது சற்று சிரமமாக இருந்தாலும் சரியான பராமரிப்பு இருந்தால் இது போன்ற காட்டன் சேலைகளை என்றும் புதியதாக வாங்கிய சேலைகளைப் போல வைத்துக் கொள்ள முடியும்.
காட்டன் சேலைகளைக் கட்டும் போது வெகு சீக்கிரத்திலேயே அச்சேலைகளில் சுருக்கங்கள் வந்து விடுகின்றன. ஸின்தடிக் சேலைகளை எவ்வளவு நேரம் கட்டியிருந்தாலும் இது போன்ற சுருக்கங்கள் வருவதில்லை. தூய பருத்திச் சேலைகள் மிகவும் மிருதுவாக மென்மைத் தன்மையுடன் இருப்பதே இதற்குக் காரணம். காட்டன் சேலைகளை அணிந்து கொள்ள வயது வரம்போ, உடல் கட்டோ அல்லது தோலின் நிறமோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
அனைத்துப் பெண்களின் துணி அலமாரியில் தனக்கென்று சிறப்பான இடத்தை பிடித்து வைத்திருப்பவை காட்டன் சேலைகள் என்றால் அது மிகையாகாது.
பராமரிப்பு முறைகள்:
* விலையுயர்ந்த காட்டன் சேலைகளை ஒவ்வொரு முறையும் வெளியில் அணிந்து சென்று வந்தவுடன் துவைக்க வேண்டிய அவசியமில்லை. அவற்றைக் கொடியில் காற்றாட உலரவிட்டு பின்பு அயர்ன் செய்து மடித்து வைக்கலாம்.
* புதிய காட்டன் சேலைகளை முதல்முறை துவைப்பதற்கு பத்திலிருந்து பதினைந்து நிமிடத்திற்கு முன்னால் ராக் சால்ட் கலந்த வெது வெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். இதனால் சேலையில் இருக்கும் அதிகப்படியான கஞ்சி மொடமொடப்பு மற்றும் அதிகப்படியான கலரானது முதல் துவைப்பிலேயே சேலையை விட்டு நீங்கி விடும். அடுத்தடுத்து துவைக்கும் பொழுது சேலையிலிருந்து கலர் செல்வது என்பது அதிக அளவில் தடுக்கப்படுகின்றது.
* மிருதுவான சோப்பு மற்றும் சோப்புத்தூள் கொண்டு காட்டன் சேலைகளைத் துவைக்க வேண்டும். அதே போல் கார்ட்ன் சேலைகளைப் பலம் கொண்டு மட்டும் அடித்துத் துவைப்பதோ முருக்கிப் பிழிவதோ கூடாது. நீரில் சேலையை அலசிய பிறகு சேலையில் இருக்கும் நீர் வடிவதற்கு வாட்டர் டேப் அல்லது துணி உலர்த்தும் கொடியில் தொங்கவிட்டு நீர் முற்றிலும் வடிந்த பிறகு சேலையை காய வைக்க வேண்டும்.

* சேலையில் உள்ள நீர் வடிந்த பிறகு வடித்த கஞ்சி அல்லது ஸ்டார்ச் பெளடர் கலந்த நீரில் சேலையை நனைத்துப் பிழியாமல் காய வைக்க வேண்டும்.
* மேலும் சூரிய வெயில் படாதவாறு நிழலில் சேலையை உலர்த்துவது மிகவும் முக்கியமாகும். சூரிய ஒளி நேரடியாக படும் பொழுது சேலையின் நிறமானது மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
* காட்டன் சேலையானது நன்கு உலர்ந்த பிறகு சரியாக மடித்து பெட்டின் அடியில் வைக்கலாம். அல்லது அயர்ன் செய்து அணிந்து கொள்ளலாம். காட்டன் சேலைகளை அயர்ன் செய்து அணிந்து கொள்ளலாம். சேலைகளை அயர்ன் செய்யும் பொழுது மிதமான வெப்பத்தில் மெதுவாக அயர்ன் செய்ய வேண்டும்.
* இரண்டு, மூன்று காட்டன் சேலைகளை ஒன்றாக துவைக்கக் கூடாது. ஒன்றாக துவைக்கும் பொழுது ஒரு சேலையில் இருக்கும் கலரானது மற்றொரு சேலையில் ஒட்டிக் கொள்ள வாய்ப்பிருப்பதால் தனித்தனியாகச் சேலைகளைத் துவைப்பதே சிறந்தது.
* காட்டன் சேலைகளை வாஷிங் மெஷினில் போட்டுத் துவைப்பது என்றால் மென்மையான துணிகளை துவைக்கும் ஆப்ஷனைத் தேர்வு செய்து துவைப்பது நல்லது. கைகளில் துவைப்பது மிகச்சிறந்த வழிஎன்றே சொல்லலாம்.
* காட்டன் சேலைகளில் கறைகள் ஏதாவது இருந்தால் அவற்றை ப்ரஷ் போட்டு கடினமாகத் துவைப்பதிற்கு பதிலாக வொய்ட் பெட்ரோல் கொண்டு கறைகளை நீக்கலாம் அல்லது டிரைகிளனர்களிடம் கொடுத்து கறைகளை நீக்கலாம்.
* கஞ்சி போட்டு அயர்ன் செய்த காட்டன் சேலைகளை மடித்து ஒரு துணியின் மேல் மற்றொன்று வைப்பதற்கு பதிலாக ஹேங்கரில் தொங்க விட்டு உபயோகமாக பயன்படுத்தலாம்.
காட்டன் சேலைகளைக் கட்டும் போது வெகு சீக்கிரத்திலேயே அச்சேலைகளில் சுருக்கங்கள் வந்து விடுகின்றன. ஸின்தடிக் சேலைகளை எவ்வளவு நேரம் கட்டியிருந்தாலும் இது போன்ற சுருக்கங்கள் வருவதில்லை. தூய பருத்திச் சேலைகள் மிகவும் மிருதுவாக மென்மைத் தன்மையுடன் இருப்பதே இதற்குக் காரணம். காட்டன் சேலைகளை அணிந்து கொள்ள வயது வரம்போ, உடல் கட்டோ அல்லது தோலின் நிறமோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
அனைத்துப் பெண்களின் துணி அலமாரியில் தனக்கென்று சிறப்பான இடத்தை பிடித்து வைத்திருப்பவை காட்டன் சேலைகள் என்றால் அது மிகையாகாது.
பராமரிப்பு முறைகள்:
* விலையுயர்ந்த காட்டன் சேலைகளை ஒவ்வொரு முறையும் வெளியில் அணிந்து சென்று வந்தவுடன் துவைக்க வேண்டிய அவசியமில்லை. அவற்றைக் கொடியில் காற்றாட உலரவிட்டு பின்பு அயர்ன் செய்து மடித்து வைக்கலாம்.
* புதிய காட்டன் சேலைகளை முதல்முறை துவைப்பதற்கு பத்திலிருந்து பதினைந்து நிமிடத்திற்கு முன்னால் ராக் சால்ட் கலந்த வெது வெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். இதனால் சேலையில் இருக்கும் அதிகப்படியான கஞ்சி மொடமொடப்பு மற்றும் அதிகப்படியான கலரானது முதல் துவைப்பிலேயே சேலையை விட்டு நீங்கி விடும். அடுத்தடுத்து துவைக்கும் பொழுது சேலையிலிருந்து கலர் செல்வது என்பது அதிக அளவில் தடுக்கப்படுகின்றது.
* மிருதுவான சோப்பு மற்றும் சோப்புத்தூள் கொண்டு காட்டன் சேலைகளைத் துவைக்க வேண்டும். அதே போல் கார்ட்ன் சேலைகளைப் பலம் கொண்டு மட்டும் அடித்துத் துவைப்பதோ முருக்கிப் பிழிவதோ கூடாது. நீரில் சேலையை அலசிய பிறகு சேலையில் இருக்கும் நீர் வடிவதற்கு வாட்டர் டேப் அல்லது துணி உலர்த்தும் கொடியில் தொங்கவிட்டு நீர் முற்றிலும் வடிந்த பிறகு சேலையை காய வைக்க வேண்டும்.

* சேலையில் உள்ள நீர் வடிந்த பிறகு வடித்த கஞ்சி அல்லது ஸ்டார்ச் பெளடர் கலந்த நீரில் சேலையை நனைத்துப் பிழியாமல் காய வைக்க வேண்டும்.
* மேலும் சூரிய வெயில் படாதவாறு நிழலில் சேலையை உலர்த்துவது மிகவும் முக்கியமாகும். சூரிய ஒளி நேரடியாக படும் பொழுது சேலையின் நிறமானது மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
* காட்டன் சேலையானது நன்கு உலர்ந்த பிறகு சரியாக மடித்து பெட்டின் அடியில் வைக்கலாம். அல்லது அயர்ன் செய்து அணிந்து கொள்ளலாம். காட்டன் சேலைகளை அயர்ன் செய்து அணிந்து கொள்ளலாம். சேலைகளை அயர்ன் செய்யும் பொழுது மிதமான வெப்பத்தில் மெதுவாக அயர்ன் செய்ய வேண்டும்.
* இரண்டு, மூன்று காட்டன் சேலைகளை ஒன்றாக துவைக்கக் கூடாது. ஒன்றாக துவைக்கும் பொழுது ஒரு சேலையில் இருக்கும் கலரானது மற்றொரு சேலையில் ஒட்டிக் கொள்ள வாய்ப்பிருப்பதால் தனித்தனியாகச் சேலைகளைத் துவைப்பதே சிறந்தது.
* காட்டன் சேலைகளை வாஷிங் மெஷினில் போட்டுத் துவைப்பது என்றால் மென்மையான துணிகளை துவைக்கும் ஆப்ஷனைத் தேர்வு செய்து துவைப்பது நல்லது. கைகளில் துவைப்பது மிகச்சிறந்த வழிஎன்றே சொல்லலாம்.
* காட்டன் சேலைகளில் கறைகள் ஏதாவது இருந்தால் அவற்றை ப்ரஷ் போட்டு கடினமாகத் துவைப்பதிற்கு பதிலாக வொய்ட் பெட்ரோல் கொண்டு கறைகளை நீக்கலாம் அல்லது டிரைகிளனர்களிடம் கொடுத்து கறைகளை நீக்கலாம்.
* கஞ்சி போட்டு அயர்ன் செய்த காட்டன் சேலைகளை மடித்து ஒரு துணியின் மேல் மற்றொன்று வைப்பதற்கு பதிலாக ஹேங்கரில் தொங்க விட்டு உபயோகமாக பயன்படுத்தலாம்.
தினந்தோறும் நம் வாழ்வில் சந்திக்கும் ஆயிரம் ஆயிரம் நகைச்சுவைகளை ரசித்து வாழ்ந்தால் கவலை கொள்ளத் தேவை இல்லை. எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
“நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் எப்போதோ தற்கொலை செய்திருப்பேன்” என்றார் காந்தியடிகள். நகைச்சுவை உணர்வு மிக்கவர் காந்தியடிகள். காந்தியடிகளை திட்டி ஒருவர் மடல் அனுப்பி இருந்தார். அதனைப் படித்துப் பார்த்து காந்தியடிகள் கோபம் கொள்ளவில்லை. அம்மடலை கிழித்துவிட்டு, அதில் இணைத்திருந்த பின்னை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டார். இது மட்டுமே எனக்கு பயன்படும் என்றார். ஆம், சினம் காத்திட, மனநிம்மதி கிடைத்திட உதவுவது நகைச்சுவை உணர்வு.
கல்வி அதிகாரி, பள்ளிக்கு ஆய்வு சென்று இருந்தார். ஒரு மாணவனைப் பார்த்து ஜனகனின் வில்லை உடைத்தது யார்? என்றார். நான் உடைக்கவில்லை என்று அழுதான் மாணவன். அருகிலிருந்த ஆசிரியரிடம் கேட்டார் என்ன இது? என்று. கோபி நல்லவன் உடைத்து இருக்க மாட்டான். முனியாண்டி வரவில்லை இன்று. அவன் உடைத்து இருப்பான் என்றார் ஆசிரியர்.
தலைமையாசிரியர் அறைக்குச் சென்று நடந்ததைக் கூறினார் கல்வி அதிகாரி. நான் ஓய்வு பெற இரண்டு மாதங்களே உள்ளன. அந்த ஜனகன் வில் எவ்வளவு என்று சொல்லுங்கள். நான் வாங்கித் தந்து விடுகிறேன் என்றார். சிரித்துக்கொண்டே சென்று வீட்டில் மனைவியிடம் நடந்ததைச் சொல்லி சிரித்தார். கடைசி வரை ஜனகனின் வில்லை உடைத்தது லட்சுமணன் என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை என்றார். உடன் மனைவி நீங்களும் தப்பா சொல்றீங்க, ஜனகனின் வில்லை உடைத்தது அனுமன் அல்லவா? என்றார். கடைசி வரை ராமன் என்பதை யாருமே சொல்லவில்லை.
சாக்ரடீஸ் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தபோது அவரைத் திட்டிக்கொண்டே இருந்தார் அவரது மனைவி. திடீரென கோபம் அதிகமாகி மேலே இருந்து தண்ணீரை ஊற்றினார். சாக்ரடீஸ் கோபம் கொள்ளாமல் சொன்னார், இதுவரை இடி இடித்தது, இப்போது மழை பொழிகிறது என்றார்.
சைவ விடுதியில் மதிய உணவு சாப்பிட்டு முடித்தப்பின் சர்வர் கேட்டார். சாப்பாடு எப்படி இருந்தது என்று. இதுவரை இப்படி ஒரு முருங்கைக்காய் சாப்பிட்டதே இல்லை. சாம்பாரில் இருந்த முருங்கைக்காய் சூப்பர் என்றார். என் காதிலிருந்து தவறி விழுந்த பென்சில் அது, முருங்கைக்காய் அல்ல என்றார் சர்வர்.
அசைவ விடுதிக்கு சாப்பிடச் சென்றனர். நண்பனிடம் சொன்னான். சர்வரை கிண்டல் செய்கிறேன் பார் என்று சொல்லிவிட்டு, மூளை இருக்கா? என்றான். இதற்குமுன் வந்தவர்களுக்கு எல்லாம் இருந்தது. உங்களுக்குத்தான் இல்லை. தீர்ந்து விட்டது என்றார் சர்வர்.
ஒரு மரத்தில் சின்ன மணி, பெரிய மணி என வரிசையாக மணியாக கட்டி இருந்தன. இது என்ன என்று கேட்டதற்கு, சின்னப் பொய் சொன்னால் சின்ன மணி அடிக்கும், பெரிய பொய் சொன்னால் பெரிய மணி அடிக்கும் என்றனர். ஒரு நேரம் சின்ன மணி பெரிய மணி எல்லா மணியும் டொய் டொய் என்று அடித்ததாம். என்ன? என்று கேட்டதற்கு மரத்தின் அடியில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. அதில் ஒரு கட்சி சார்புடைய தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக்கொண்டு இருந்தார்களாம்.
குடிகாரன் குடித்து விட்டு வந்து மனைவியிடம் கண்ணே உனக்கு தாஜ்மஹால் கட்டவா? வசந்த மாளிகை கட்டவா? என்றான். அதெல்லாம் வேண்டாம். முதலில் உன் இடுப்பில் வேட்டியை ஒழுங்காகக்கட்டு என்றாள் மனைவி.
உலக வரைபடத்தில் இந்தியா எங்கு உள்ளது? என்று கேட்டார் ஆசிரியர். அதற்கு மாணவன் மாட்டேன், மாட்டேன் என்று சொன்னான். தெரியாது என்று சொல்லு, பரவாயில்லை, மாட்டேன், மாட்டேன் என்கிறாயே ஏன்? என்றார்.’ நான் என் நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டேன், என்றான் மாணவன். வகுப்பறையே சிரித்து மகிழ்ந்தது.
உங்களுக்கு காய்ச்சலே இல்லையே? எதுக்கு வந்தீங்க என்றாள் நர்சு. நான் கூரியர் தபால் கொடுக்க வந்தேன். அதை சொல்வதற்குள் தர்மா மீட்டரை நீங்கள் தான் வைத்து வீட்டீர்களே? என்றார்.
போன வருடம் தீபாவளிக்கு தந்த அல்வா மாதிரியே கொடுங்க தம்பி. கவலைப்படாதீங்க அதே அல்வாவே இன்னும் இருக்கு தாரேன் என்றார்.
இப்படி தினந்தோறும் நம் வாழ்வில் சந்திக்கும் ஆயிரம் ஆயிரம் நகைச்சுவைகளை ரசித்து வாழ்ந்தால் கவலை கொள்ளத் தேவை இல்லை. எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வாழ்வில் கோபம் என்பதை அகற்றி சிரித்து வாழ வேண்டும்.
கவிஞர் ரா.ரவி,
உதவி சுற்றுலா அலுவலர்,
விமான நிலையம் மதுரை.
கல்வி அதிகாரி, பள்ளிக்கு ஆய்வு சென்று இருந்தார். ஒரு மாணவனைப் பார்த்து ஜனகனின் வில்லை உடைத்தது யார்? என்றார். நான் உடைக்கவில்லை என்று அழுதான் மாணவன். அருகிலிருந்த ஆசிரியரிடம் கேட்டார் என்ன இது? என்று. கோபி நல்லவன் உடைத்து இருக்க மாட்டான். முனியாண்டி வரவில்லை இன்று. அவன் உடைத்து இருப்பான் என்றார் ஆசிரியர்.
தலைமையாசிரியர் அறைக்குச் சென்று நடந்ததைக் கூறினார் கல்வி அதிகாரி. நான் ஓய்வு பெற இரண்டு மாதங்களே உள்ளன. அந்த ஜனகன் வில் எவ்வளவு என்று சொல்லுங்கள். நான் வாங்கித் தந்து விடுகிறேன் என்றார். சிரித்துக்கொண்டே சென்று வீட்டில் மனைவியிடம் நடந்ததைச் சொல்லி சிரித்தார். கடைசி வரை ஜனகனின் வில்லை உடைத்தது லட்சுமணன் என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை என்றார். உடன் மனைவி நீங்களும் தப்பா சொல்றீங்க, ஜனகனின் வில்லை உடைத்தது அனுமன் அல்லவா? என்றார். கடைசி வரை ராமன் என்பதை யாருமே சொல்லவில்லை.
சாக்ரடீஸ் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தபோது அவரைத் திட்டிக்கொண்டே இருந்தார் அவரது மனைவி. திடீரென கோபம் அதிகமாகி மேலே இருந்து தண்ணீரை ஊற்றினார். சாக்ரடீஸ் கோபம் கொள்ளாமல் சொன்னார், இதுவரை இடி இடித்தது, இப்போது மழை பொழிகிறது என்றார்.
சைவ விடுதியில் மதிய உணவு சாப்பிட்டு முடித்தப்பின் சர்வர் கேட்டார். சாப்பாடு எப்படி இருந்தது என்று. இதுவரை இப்படி ஒரு முருங்கைக்காய் சாப்பிட்டதே இல்லை. சாம்பாரில் இருந்த முருங்கைக்காய் சூப்பர் என்றார். என் காதிலிருந்து தவறி விழுந்த பென்சில் அது, முருங்கைக்காய் அல்ல என்றார் சர்வர்.
அசைவ விடுதிக்கு சாப்பிடச் சென்றனர். நண்பனிடம் சொன்னான். சர்வரை கிண்டல் செய்கிறேன் பார் என்று சொல்லிவிட்டு, மூளை இருக்கா? என்றான். இதற்குமுன் வந்தவர்களுக்கு எல்லாம் இருந்தது. உங்களுக்குத்தான் இல்லை. தீர்ந்து விட்டது என்றார் சர்வர்.
ஒரு மரத்தில் சின்ன மணி, பெரிய மணி என வரிசையாக மணியாக கட்டி இருந்தன. இது என்ன என்று கேட்டதற்கு, சின்னப் பொய் சொன்னால் சின்ன மணி அடிக்கும், பெரிய பொய் சொன்னால் பெரிய மணி அடிக்கும் என்றனர். ஒரு நேரம் சின்ன மணி பெரிய மணி எல்லா மணியும் டொய் டொய் என்று அடித்ததாம். என்ன? என்று கேட்டதற்கு மரத்தின் அடியில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. அதில் ஒரு கட்சி சார்புடைய தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக்கொண்டு இருந்தார்களாம்.
குடிகாரன் குடித்து விட்டு வந்து மனைவியிடம் கண்ணே உனக்கு தாஜ்மஹால் கட்டவா? வசந்த மாளிகை கட்டவா? என்றான். அதெல்லாம் வேண்டாம். முதலில் உன் இடுப்பில் வேட்டியை ஒழுங்காகக்கட்டு என்றாள் மனைவி.
உலக வரைபடத்தில் இந்தியா எங்கு உள்ளது? என்று கேட்டார் ஆசிரியர். அதற்கு மாணவன் மாட்டேன், மாட்டேன் என்று சொன்னான். தெரியாது என்று சொல்லு, பரவாயில்லை, மாட்டேன், மாட்டேன் என்கிறாயே ஏன்? என்றார்.’ நான் என் நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டேன், என்றான் மாணவன். வகுப்பறையே சிரித்து மகிழ்ந்தது.
உங்களுக்கு காய்ச்சலே இல்லையே? எதுக்கு வந்தீங்க என்றாள் நர்சு. நான் கூரியர் தபால் கொடுக்க வந்தேன். அதை சொல்வதற்குள் தர்மா மீட்டரை நீங்கள் தான் வைத்து வீட்டீர்களே? என்றார்.
போன வருடம் தீபாவளிக்கு தந்த அல்வா மாதிரியே கொடுங்க தம்பி. கவலைப்படாதீங்க அதே அல்வாவே இன்னும் இருக்கு தாரேன் என்றார்.
இப்படி தினந்தோறும் நம் வாழ்வில் சந்திக்கும் ஆயிரம் ஆயிரம் நகைச்சுவைகளை ரசித்து வாழ்ந்தால் கவலை கொள்ளத் தேவை இல்லை. எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வாழ்வில் கோபம் என்பதை அகற்றி சிரித்து வாழ வேண்டும்.
கவிஞர் ரா.ரவி,
உதவி சுற்றுலா அலுவலர்,
விமான நிலையம் மதுரை.






