என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    முதியவர்களின் பொறுமையும், அனுபவமும் வாழ்விற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. முதியவர்கள் சாதித்ததை சந்ததிகள் கற்றுக்கொள்வதற்கு சாட்சிகளாய் விட்டு செல்லுங்கள்.
    இயற்கையின் நியதிகளில் பரிணாம வளர்ச்சிகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. மனித வாழ்விலும் பிறப்பு, இறப்பு என்பது தொடர் சங்கிலியாய் நிகழும் ஓர் செயல்பாடு. இதில் இளமையும், முதுமையும் கூட நாம் விரும்பியோ, விரும்பாமலோ வந்து போகும். இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஓர் வரைமுறை இதனை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் அல்லது ஏற்றுக்கொள்கிறோம் என்பதை பொறுத்தே அது இனிமையானதா அல்லது கசப்பானதா என்று அறிய முடியும்.

    வாழ்வில் எதையுமே நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் அதற்கான சக்தியும், சந்தர்ப்பமும் நமக்கு வழங்கப்படவில்லை என்பதே யதார்த்தம். அது மட்டுமல்ல எல்லாமே கடந்து செல்லும் மேக கூட்டங்கள் தான். அதை நாம் எப்படி கடந்து செல்கிறோம் என்பதை தான் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சமீப காலங்களில் நம்மிடையே வாழ்பவர்கள் பலர் முதுமையை ஓர் சுமையாய் கருதுபவர்களாகவோ அல்லது சுற்றியிருப்பவர்களால் அப்படி ஒரு கருத்தை திணிக்கப்படுபவர்களாகவோ இருப்பதை காண முடிகிறது. உண்மை அதுவல்ல, முதுமை ஒரு வரம். அது குறிப்பிட்ட சிலரைத் தவிர எல்லோருக்கும் வாய்க்காத அது ஒரு அருள்.

    எந்த மனிதனாயினும் இறைவனிடம் கையேந்தும் போது, “எனக்கு நல்ல வாழ்வைத் தந்தருள். நீண்ட ஆயுளை வழங்கியருள்” என்று கேட்காதவர்கள் இருக்க முடியாது. அப்படி வேண்டி பெற்ற அந்த வயோதிகத்தை ஒருவன் கடினம் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதனை நம் மனம் தான் முடிவு செய்ய வேண்டும். மனதை நாம் எப்படி பக்குவப்படுத்தி வைத்துள்ளோமோ, அந்த பக்குவம் தான் நம் வாழ்வை சரியான திசையில் முன்னெடுத்து செல்லும் உந்து சக்தியாகும். சுற்றிச் சூழ்ந்த உறவுகளின் பங்களிப்பும் அதில் குறிப்பிட்ட சதவீதத்தில் அமையும்.

    மனைவியைத் தவிர மற்ற அத்தனை உறவுகளும் நம் வாழ்வின் எல்லைக்கோட்டை தாண்டியே நிற்கும் தன்மை கொண்டதுதான். பெற்ற பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள் கூட எட்ட நின்று பார்க்கும் ஒரு வாழ்வியல் முறையே நம்மை சுற்றி சிலந்தி வலையாய் பின்னியிருப்பது அகக் கண்களுக்கு மட்டுமே புலப்படும் உண்மை. இது யதார்த்தம்.

    இப்படிப்பட்ட ஓர் சூழ்நிலையில், வாழ்வின் பெரும் பகுதியை கடந்துவிட்ட வாழ்வியல், இன்னும் ஏன் குடும்பத்தினருக்காகவோ, பிறருக்காகவோ, சமுதாயத்திற்காகவோ வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அந்த நினைப்பே உங்கள் மகிழ்ச்சியை ஏன், ஆரோக்கியத்தையே சிதைத்து விடும். எந்த ஒரு உயிரினமும் தன் உணவை தானே சுமந்து செல்வதில்லை. எந்த உயிருக்கும் இந்த உலகில் யாரும் யாருக்கும் பொறுப்பாளர்கள் இல்லை. படைத்த இறைவனே பொறுப்பு ஏற்றுக்கொள்கிறான். உனக்கு நிர்ணயித்தது போல் உங்கள் பிள்ளைகளுக்கும் நிர்ணயித்ததை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். இதில் நீங்கள் அலட்டிக்கொள்வதில் என்ன மாறிவிடப்போகிறது.

    முதுமை ஒரு வரம்...

    வாழ்வில் குறிப்பிட்ட பகுதியை பிறருக்காகவும், பெற்ற பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்து விட்டோம். கடமைகளை நிறைவேற்றி அவர்களை கரையேற்றிவிட்டு விட்டோம். இனி நம் வாழ்வு கலங்கரை விளக்கு தான். நாம் காட்டும் திசையில் அவர்கள் பயணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அவர்களுக்கும் நல்லது.

    முதியவர்களின் பொறுமையும், அனுபவமும் வாழ்விற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. முதியவர்கள் சாதித்ததை சந்ததிகள் கற்றுக்கொள்வதற்கு சாட்சிகளாய் விட்டு செல்லுங்கள். சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு ராஜபாட்டையை விரித்து செல்லுங்கள்

    முதியவர்கள் மூன்று விஷயங்களை முத்தாய்ப்பாய் தெரிந்துகொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம், மனமகிழ்ச்சி, பொருளாதார பின்புலம். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி, உணவு பழக்கங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த வயதில் ஓடி ஆட முடியாமல் போகலாம். ஆனால் சின்னச் சின்ன எளிமையான உடற்பயிற்சிகள் எதிர்பார்ப்பைவிட அதிக பயன்தரலாம். நடை பயிற்சிகள், மிதிவண்டி ஓட்டுதல், மனைவியுடன் காலார பேசிக்கொண்டே வலம் வருவது நன்மையை பயக்கும். மனம் லேசாகும் அந்த உணர்வே உற்சாகத்தைத் தரும் மன மகிழ்ச்சியின் முக்கிய காரணம். எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்வதே எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றங்கள் இல்லை. ஏமாற்றங்கள் இல்லா மனங்களின் வெற்றிடங்களில் மகிழ்ச்சி அழையா விருந்தாளியாய் வந்து குடியேறிவிடும். மகிழ்ச்சியும் கூட உடலில் ஒரு துள்ளுதலை, உணர்ச்சிகளின் உத்வேகத்தைத் தரும். புத்துணர்ச்சி ஏற்படும்போது புது புது துறைகளில் ஆர்வம் மிகுந்து நிற்கும்.

    கவிதைகள் எழுதலாம், கதை கட்டுரைகள் வரையலாம், ஓவியங்கள் தீட்டலாம். முதியவர்கள் தங்கள் கடைசி மூச்சு நிற்கும் வரை யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். பொருளாதார பின்புலத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டாம். நம்மைச் சார்ந்தவர்களின் சூழ்நிலைகள் மாறலாம். ஏற்றத்தாழ்வுகள் வரலாம். அவர்களுக்கு எல்லையை வகுத்து உதவி செய்யலாம். அதற்காக இருப்பதை இழந்து அல்லல் பட வேண்டாம். இப்படி இருந்து பாருங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாய் தெரியமாட்டீர்கள். அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருப்பீர்கள். அவர்களின் அன்பு தாராளமாய் கிடைத்து கொண்டிருக்கும்.

    மனைவியை முந்திச் செல்ல பிரார்த்தனை செய்யுங்கள். ஆயிரம் குணாதிசயங்கள் மாறுபட்டிருந்தாலும் அவளின் அன்பை, அரவணைப்பை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. அந்த வெற்றிடம் அவளே அவளுக்கே சொந்தம். இருவரும் தனித்தனியாய் பிள்ளைகளோடு வாழ்வதை முற்றிலும் தவிர்த்திடுங்கள். முதுமையில் தான் துணையின் முக்கியத்துவம் உணரப்படும்.

    இருப்பவற்றிக்கு கண்மூடுவதற்கு முன்பாகவே கடமையுணர்வோடு கண்ணியமாய் பிரித்துக்கொடுக்க உயில் எழுதுங்கள். இது உலகில் நீங்கள் விட்டுச்செல்லும் சிறந்த நன்மையை மறுவுலகில் கொண்டு வந்து சேர்க்கும்.

    முடிந்தது வாழ்வு என்றாலும் வானமே எல்லை என்று சிறகுகளை விரியுங்கள். ஆங்காங்கே சில இறகுகள் இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் உயர உயர பறக்க முடியும். இன்பங்கள், துன்பங்கள், சோகங்கள் எல்லாவற்றையும் ரசிக்கப் பழகி கொள்ளுங்கள். எதுவுமே உங்கள் மனதை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். உலகம் உங்கள் கைவசப்படும்.

    எழுத்தாளர் மு.முகமது யூசுப். உடன்குடி.
    தொடர்ந்து ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு போரடித்துவிட்டதா? வித்தியாசமான உருளைக்கிழங்கு பிரட் வடையை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக் கிழங்கு - 2
    பிரெட் துண்டுகள் - 10
    வறுத்த ரவை - அரை கப்
    அரிசி மாவு - இரு டேபிள் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    கேரட் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 2
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது

    பிரெட் உருளைக்கிழங்கு வடை

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பிரெட்டை போட்டு உதிர்த்துக்கொள்ளுங்கள்.

    இதனுடன் வறுத்த ரவை, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

    சூப்பரான பிரெட் உருளைக்கிழங்கு வடை ரெடி.

    விருப்பப்பட்டால் சாஸ், தேங்காய் சட்னி, மல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அளவில்லாமல் நிறைய வேர்க்கடலை சாப்பிட்டால் கொழுப்பு அதிகரித்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிகளவு வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.
    அளவில்லாமல் நிறைய வேர்க்கடலை சாப்பிட்டால் அது எடையை அதிகரித்துவிடும். சாதரணமாக வறுத்த கடலையில் 166 கலோரி இருக்கும் இதே எண்ணெயில் வறுத்தால் 170 கலோரிகள் அதிகரித்திருக்கும். இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது கொழுப்பு அதிகரித்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    நிறைய கடலையை சாப்பிட்டுவிட்டு குறைந்த அளவிலான உணவுகளை எடுத்துக்கொண்டால் சத்துக்குறைபாடு ஏற்படும். வேர்க்கடலையில் அதிகளவு ப்ரோட்டின் இருக்கிறது என தொடர்ந்து எடுப்பவர்கள் நிலக்கடையில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சத்தான டயட் என்பது எல்லாச் சத்துக்களும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டியது அவசியம். உடலில் ஒரு சத்து மட்டும் அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அது தீங்கையே ஏற்படுத்திடும்.

    வேர்க்கடலையில் அதிகப்படியான போஸ்போரஸ், ஃபைட்டிக் ஆசிட் இருக்கிறது. இந்த பைட்டிக் ஆசிட் நம் உடலுக்கு தேவையான மற்ற மினரல்ஸ்களை உறிஞ்சிவிடும். உடலியல் இயக்கங்களுக்கு எல்லாவிதமான சத்துக்களும் அவசியம். ஏற்கனவே குறைவான சத்துக்கள் தான் நம் உடலில் இருக்கும் தொடர்ந்து சாப்பிடும் பட்சத்தில் வேர்க்கடலையால் பாதிப்புகள் உண்டாகும்.

    வேர்க்கடலையில் சோடியம் குறைவாகத்தான் இருக்கிறது. 28 கிராம் வேர்க்கடலையில் 1500 மில்லி கிராம் சோடியம் இருக்கும். இதே உப்புக்கடலையோ அல்லது எண்ணெயில் வறுத்த கடலை என்றால் இதன் அளவு இன்னும் அதிகரிக்கும். இதனை தொடர்ந்து எடுக்கும் போது சோடியம் அளவு கூடிடும். அப்படி கூடினால் அவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் . இதனால் மாரடைப்பு, வாதம் போன்றவை ஏற்படக்கூடும்.

    வேர்க்கடலையில் அதிகப்படியான லெக்டீன் இருக்கிறது. இதனை எளிதாக ஜீரணிக்க முடியாது. மற்ற உணவுகளையும் செரிக்க விடாமல் தானும் செரியாமல் அடைத்துக் கொண்டு விடும் இதனால் எலும்புகளில் வீக்கம், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படும்.

    வேர்க்கடலையில் ஒமேகா 6 இருக்கிறது. இதனைச் சாப்பிடுவது நல்லது தான் என்றாலும் நம் உடலுக்கு ஒமேகா 3 மற்றும் 6 இரண்டுமே தேவை. ஒமேகா 3 குறைவாக இருக்கும் வேர்க்கடலையை அதிகப்படியாக எடுத்துக் கொண்டால் உடலில் ஒமேகா 3 சத்து குறைந்திடும். இதனால் உடல்நலக்குறைவு ஏற்படும். 
    உங்கள் குழந்தை கருவிலிருக்கும்போதே விரல் சப்ப ஆரம்பித்துவிடும். கட்டைவிரலை சப்புவது அவர்களின் பல்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடு ஆகும்.
    உங்கள் குழந்தை கருவிலிருக்கும்போதே விரல் சப்ப ஆரம்பித்துவிடும். இது அவர்கள் பிறந்த பின்னும் தொடரும். கட்டைவிரலை சப்புவது அவர்களின் பல்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடு ஆகும். உங்கள் குழந்தை பயப்படும்போதோ, பசி வரும்போதோ, அல்லது தூக்கம் வரும்போதோ முதலில் செய்வது இதாகத்தான் இருக்கும். சிறு வயதில் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த பழக்கம் இருக்கும். அப்படி செய்யும் போது அவர்களை தடுக்காதீர்கள், அது அவர்களுக்கு நன்மை பயப்பதாகும்.  

    விரல் சப்பும் பழக்கம் அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும். அவர்களை இந்த பழக்கத்தை நிறுத்தச்சொல்லி நீங்கள் கட்டாயப்படுத்தும் போது அவர்கள் அதை அதிகம் செய்ய தொடங்குவார்கள். எந்தவொரு காரியத்தையும் செய்வதற்கு அவர்களை கட்டாயப்படுத்துவது அவர்களை சிறு வயதிலியே அதிகம் கோபப்படுபவர்களாக மாற்றிவிடும்.

    அவர்களை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக அவர்கள் வாயில் விரலை வைக்கும் நேரங்களை கண்காணியுங்கள். அவர்கள் வாயில் விரல் வைக்க முனையும்போதெல்லாம் அவர்களின் கவனத்தை திசைதிருப்புங்கள். உங்கள் குழந்தை அவர்கள் கைச்செலுத்துவதைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் ஏன் அதை செய்கிறார்கள் என்று கவனியுங்கள். ஆரம்பத்தில் சிறியதாக தொடங்குபவர்கள் பின்னர் நாக்கு மற்றும் பற்களின் செயல்பாட்டால் முழுநேரமும் விரல் சப்ப ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் விரலை கவனித்துக்கொண்டே இருங்கள். அவர்கள் இந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிப்பதுபோல் உங்களுக்கு தெரிந்தால் 4 வயதுக்கு முன்னாடியே நிறுத்த முயற்சி செய்யுங்கள்.

    பற்கள் நிலையாக வளர தொடங்கியபின் விரல் சப்புவது அவர்களின் பல் அமைப்பையே சிதைத்துவிடும். 4 வயதுக்கு முன்னரே இந்த பழக்கத்தில் இருந்து விடுபட அவர்களை ஊக்கப்படுத்துங்கள். ஒருவேளை உங்கள் குழந்தை அதை தொடர முடிவு எடுத்திருந்தாலும் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு அதை தடுக்க முயற்சி செய்யுங்கள்.

    அவர்கள் விரல் சப்ப போகிறார்கள் என்று தெரியும்போதெல்லாம் அவர்களை திசைதிருப்புங்கள். அவர்கள் பல் நிலையாக முளைப்பதற்கு முன் இதை நிறுத்தவேண்டும். மறந்துவிடாதீர்கள், எந்தவித கடுமையான நடவடிக்கையையும் எடுத்துவிடாதீர்கள், இது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.
    மெனோபாஸ் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானது. அதைப் பற்றிக் கவலை கொள்கிற பெண்களே அதிகம். ஆனால், பெண்கள் பூப்பு சுழற்சி நிற்றலையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ளலாம்.
    மெனோபாஸ் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானது. அதைப் பற்றிக் கவலை கொள்கிற பெண்களே அதிகம். ஆனால், பெண்கள் பூப்பு சுழற்சி நிற்றலையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ளலாம். தொடர்ந்து 12 மாதவிடாய் வராமலிருந்தால் அந்தப் பெண் மெனோபாஸ் அடைந்துவிட்டாள் என்று அர்த்தம். ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பு குறைவதால்பெண்ணுடலில் பூப்பு நிற்றல் நிகழ்கிறது. இத்துடன் பெண்ணின் இனப்பெருக்கம் முடிவுக்கு வருகிறது. பெண்ணின் 45 வயது முதல் 52 வயதுக்குள் நிகழும் இதையும் சுப நிகழ்வாகவே கொள்ளலாம்.

    பயிற்சியும், அன்பும், கவனிப்பும் இருக்கும் பட்சத்தில் பூப்புநிற்றலும் சுப நிகழ்வாகிறது. பெண்ணின் கருமுட்டைகள் பாலுறவால் கருவுற்றால் அவள் கர்ப்பமாகிறாள். கருவுறாவிட்டால் மாதவிடாய் நிகழ்கிறது. பெண்ணின் வயது அதிகமாகும்போது கரு முட்டை எண்ணிக்கை குறையத் தொடங்கி பூப்பு முடிவில் அவை உற்பத்தியாவதில்லை. பெண் பூப்பு எய்தும் முன் படிப்படியாக அவள் வளர்ந்து பூப்பெய்துகிறாள். அதற்கு மாறாக பூப்பு முடிவுக்கு வரும் போது படிப்படியாக அவள் உடல் முதிர்ச்சியடைந்து முழுமையை அடைகிறாள்.

    இந்த நிறைவு போற்றப்பட வேண்டிய ஒன்று. இந்த கால கட்டத்தில் பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவதால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். மாதவிடாய் நிகழ்வில் மாற்றம் ஏற்படும். மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்போது சில மாதம் முன்பும், பின்பும் பல உடல் மற்றும் உளவியல் மாற்றங்கள் பெண்ணுக்குள் நிகழ்கின்றன. இவை அவர்களின் சமூகச் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. உணவுப் பழக்கங்கள், பாலியல் நடத்தைகள், மரபியல் போன்ற காரணங்களால் அவை மாறுபடுகின்றன.

    வேறு சில உடல் நலக்காரணங்களாலும் பெண்களுக்கு மாதவிடாய் மாற்றங்கள் ஏற்படலாம். புதிய இடங்களுக்குக் குடியேறுதல், புதிய சூழல், அதிக கவலை, டென்ஷன் போன்ற காரணங்களால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கரு முட்டை வெளிப்படாத நிலை ஏற்பட்டு மாதவிடாய் வராமலிருக்கலாம். சில நோய்நிலைகள், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல் பருமன், நரம்புத்தளர்ச்சி, நோய் ஆகியவற்றாலும் மாதவிடாய் வராமலிருக்கலாம். இதனைப் பூப்பு முடிவு என்று எடுத்துக் கொள்ள முடியாது.

    நம் நாட்டைப் பொறுத்தவரை பெண்களுக்கு உள்ளங்கால் முதல் தலை வரை வெப்பம் பரவல், சிலசமயம் காது வழியாக வெப்பம் வேகமாக வெளிவருவது போல உணர முடியும். எலும்புத் தேய்மானம், எலும்பு எளிதில் முறியும் நிலை, இரவில் திடீரென்று அதிக வியர்வை, படபடப்பு, மன அழுத்தம், மனதை ஒருமைப்படுத்த முடியாத நிலை, தூக்கமின்மை, பிறப்புறுப்புகளில் ஒருவித வறட்சி, சிறுநீரை அடக்க முடியாமை, தோலில் மாற்றம், நீட்சித்தன்மை குறைதல், இதயக் கோளாறுகள் ஆகிய தொந்தரவுகள் பெண்களுக்கு ஏற்படுகிறது.

    பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுவதால் உடலுறவின்போது வலி ஏற்படலாம். ஹார்மோன் சிகிச்சை, நெய்ப்புத் தன்மையுள்ள கிரீம்களை உபயோகித்து தாம்பத்யத்தில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கலாம். பெண் பூப்பெய்தல் எதிர்பார்க்கப்படுகிறதோ, அப்படித்தான் பூப்பு முடிவும் எதிர்பார்க்கப்பட வேண்டும். அதற்குத் தற்காப்புகள் செய்யப்படுவது அவசியம். பெண் பூப்பெய்திய உடன் நல்ல ஓய்வு, ஊட்டச்சத்து உணவுகள் தரப்படுகிறது. மனமகிழ்ச்சியானநிகழ்வுகள் நடக்கின்றன.

    ஆனால், பூப்பு முடிவின்போது ஏற்படும் மாற்றங்களை அந்தப் பெண் மட்டும் மனதுக்குள் புதைத்துக் கொள்கிறாள். அதையும் ஒரு முக்கிய நிகழ்வாக நினைத்து சிறிது ஓய்வு, ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், கால்சியம் சத்துள்ள உணவுகளை உண்ணுதல், உளுந்தங்களி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். உற்றார், உறவினர்கள் அவர்கள் மீது கவனம் செலுத்தினால் பூப்பு முடிவும் ஒரு சுப நிகழ்வாகவே அமையும். பூப்பு முடிவுக்குப் பின்னரும் பெண்கள் பல வெற்றிகளை, சாதனைகளைச் செய்ய முடியும்.

    பூப்பு எய்தியது முதல் தியானம், பிராணாயாமம், யோகா போன்ற பயிற்சிகளை முறையாக செய்து வந்தால் ஒழுங்கான மாதவிடாய், பிற கருப்பைக் கோளாறுகள் இல்லாமல் இருக்கலாம். பூப்பு முடிவின் போது அதிக ரத்தப்போக்கு இன்றி மகிழ்ச்சியாக வாழ முடியும். தாய்மார்கள் ஒரு ஆண்டு வரை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதியின் செயல் திறனைப் பாதுகாக்க சலபாசனம், புஜங்காசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இவ்வாசனங்கள் கருப்பை தன் தொழிலைத் திறம்படச் செய்யத் தூண்டப்படுகிறது. இத்துடன் சில வாழ்வியல் ஒழுங்குகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

    அதிகாலையில் எழுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக் கொள்ளுதல், பகலில் சுறுசுறுப்பாக செயல்படுதல், இரவில் உணவு உண்ட ஒரு மணி நேரத்தில் உறங்கச் செல்லுதல் மற்றும் இரவில் நல்ல தூக்கம் ஆகியவை அவசியம். ரசாயனம் கலந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

    உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை இரண்டிலும் பூப்பு நிற்றலின் போது ஏற்படும் பிரச்னைகளை முன்கூட்டியே தீர்மானித்து அதற்கான பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பெண் தன்னை ஃபிரஷ்ஷாக உணர வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும்படியான வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொள்வதும் அவசியம். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும், ரொமான்டிக் மனநிலையும் உங்களை இளமையாக உணர வைக்கும்.

    மெனோபாஸ் வந்துவிட்டால் உடல் ஒத்துழைக்காது, செக்ஸ் உணர்வுகள் வற்றிப்போய்விடும் என்பதெல்லாம் கற்பனையே. கூர்ந்து கவனித்தால் மாதவிடாய்க்கு முந்தைய காலம், மாதவிடாய் முடிந்த பின்னர் என பெண் மனதில் தாம்பத்திய உறவுக்கான வேட்கை இருக்கும். பெண்ணின் மன நிலையை ஆண்கள் புரிந்து கொண்டு ரொமாண்டிக்காகவே இருங்கள். தனக்கு செக்ஸ் உணர்வு வராது, குழந்தைகள் வளர்ந்துவிட்டால் இதெல்லாம் தேவையா என்ற எண்ணங்கள் பெண்களை இறுக்கமான மனநிலைக்குத் தள்ளுகிறது.

    இதனால் உடலுறவின் போது வலியை அனுபவிக்கின்றனர். வழக்கமான உற்சாகத்தைப் பெண்கள் இழக்கின்றனர். இது பொதுவாக மூட நம்பிக்கையே. வயதானாலும், ஹார்மோன் கண்ணாமூச்சியாடினாலும் ரொமான்டிக்காக உணருங்கள்.

    சர்க்கரை நோயாளிக்கு மிகவும் உகந்தது அகத்திக்கீரை சூப்.. இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அகத்திக்கீரை - 1 கப்
    வெங்காயம் - 1
    மிளகு தூள் - அரை தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    உப்பு - சுவைக்கு

    அகத்திக்கீரை சூப்

    செய்முறை :


    அகத்திக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் வெங்காயம், சீரகம், மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    5 நிமிடம் நன்றாக கொதித்ததும் அதில் கழுவி வைத்த கீரையை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    தண்ணீர் 2 கப்பாக வற்றியதும் வடிகட்டி பருகவும்.

    சத்தான அகத்திக்கீரை சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த ஆசனம் செய்வதால் முதுகுத்தண்டுவடம் மற்றும் கழுத்துக்கு வலு கிடைக்கிறது. இடுப்பு, அடிவயிறு மற்றும் முதுகிற்கு நல்ல நெகிழ்வுத்தன்மை கிடைக்கிறது.
    ஒரே நேரத்தில் மர்ஜரியாசனம் மற்றும் பிடிலாசனம் இரண்டையும் இணைத்து செய்யும் இந்த ஆசனம் சக்ரவாகாசனம் ஆகும். விரிப்பில் கால்களை முழங்காலிட்டு அமர்ந்து மெதுவாக இரண்டு கைகளையும் முன்னோக்கி குனிந்து தரையில் ஊன்ற வேண்டும். இப்போது மூச்சை வெளியேற்றி, உடலை ஒரு மேஜையைப்போல் சமமாக வைக்கவும்.

    வயிற்றை உட்பக்கமாக இழுத்துக் கொண்டு தலை தரையை நோக்கி குனிந்து பார்க்கவேண்டும். இது மர்ஜரியாசனம். பின்னர் முதுகை வளைத்து தலையை அண்ணாந்து பார்க்க வேண்டும். இப்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இது பிடிலாசனம். இதுபோல் மாற்றி, மாற்றி இரண்டு நிலைகளையும் 3 முதல் 5 வரை செய்யலாம்.

    பலன்கள்


    உடலுக்கு சமநிலை கிடைப்பதால் கூனில்லாத நல்ல தோற்றத்தை கொடுக்கும். முதுகுத்தண்டுவடம் மற்றும் கழுத்துக்கு வலு கிடைக்கிறது. இடுப்பு, அடிவயிறு மற்றும் முதுகிற்கு நல்ல நெகிழ்வுத்தன்மை கிடைக்கிறது. உடல்முழுவதும் ஒருங்கிணைப்பதால் உணர்வுகளை சமநிலைப்படுத்துகிறது. வயிறு, சிறுநீரகம் மற்றும் அட்ரினல் சுரப்பிகளை தூண்டுகிறது.
    பெண்கள் தங்களின் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்களைக் கூட தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை.
    பெண்கள் தங்களின் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்களைக் கூட தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்சினை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும் இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக்கொள்பவர்கள் ஏராளம்.

    விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட்போல் செய்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.

    வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் பித்த வெடிப்பு முற்றிலும் நீங்கும்.

    பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு சரியாகும். இதேபோல் மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பிறகு தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.

    வேப்ப எண்ணெய்யில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் செய்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம். இரவு நேரத்தில் தூங்கப் போவதற்கு முன் காலை நன்றாக தேய்த்து கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்க போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் நீங்கள் தடுக்கலாம்.

    குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
    பிறர் உங்களுக்குள் ஏற்படுத்திய காயங்களை எண்ணிக் கவலைப்படாதீர்கள். அவை யாவும் காலம் உங்களுக்கருளிய பாடங்கள். எனவே உங்களை பக்குவப்படுத்திய காயங்களுக்கு நன்றி சொல்லுங்கள்.
    இதயத்தோலை உரித்தெடுப்பதுபோல் சிலர் நம்மை காயப்படுத்திவிடுவார்கள். குத்தீட்டி போன்ற வார்த்தைகளால் அல்லது கீழ்த்தரமான செயல்களால் பிறரை ரணப்படுத்தி வேடிக்கை பார்ப்பதில் சிலருக்கு அலாதி பிரியம்.

    தெருவில் சும்மா ஓடிக் கொண்டிருக்கின்ற நாய் மீது கல்லெடுத்து எறிகின்றவனுக்குப் பிற உயிர்களின் வாதை புரியாது. கையில் ஒரு குச்சி கிடைத்துவிட்டால் அதைக் கொண்டு சிற்றெறும்புகளைக் குத்தி மகிழ்கின்றவனுக்கு ‘ஜீவ காருண்யம்’ என்றால் என்னவென்றே தெரியாது.

    காரணமே இல்லாமல் உங்களைக் காயப்படுத்துகிறார்களா? அவர்களுக்கு உங்கள் மீது காழ்ப்புணர்ச்சி என்று அர்த்தம். உங்கள் வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சியின் மீது அவர்களுக்கு வயிற்றெரிச்சல் என்று பொருள்.

    உங்கள் மீது பொறாமை கொள்வதற்கு ஒருவர் கூட இல்லையென்றால் நீங்கள் வாழ்வதே வீண் அல்லவா! எனவே பொறாமையினால் உங்களை காயப்படுத்துகின்றவர்களுக்கு நீங்கள் நன்றி சொல்லுங்கள். ஏனெனில் அவர்கள் ஏற்படுத்தும் காயங்கள் உங்களை மென்மேலும் வலுப்படுத்தும்; வேகப்படுத்தும். உங்கள் வளர்ச்சியை அவர்கள் கண்முன்னே பலமடங்கு பெருகப் பண்ணும்.

    அற்ப சிந்தை கொண்டவர்கள் அற்பமாகத்தான் நடந்து கொள்வார்கள். அவர்களின் வாக்கும் போக்கும் அப்படித்தான் இருக்கும். தரக்குறைவாகப் பேசுவார்கள். விஷமத்தனமாக விமர்சிப்பதில் மனநிறைவு கொள்வார்கள்.

    நேர்மையற்று விமர்சிக்கின்ற வாய்களுக்கு நாம் பூட்டுப்போட முடியாது. நீதியற்ற நெஞ்சங்களில் வஞ்சம் நிறைந்திருக்குமே அன்றி, துளியளவும் நன்றியுணர்வு இருக்காது. அவர்களைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் நம் மனம்தான் பலவீனப்பட்டுப் போகும் வாழ்வின் வளர்ச்சிக் குன்றிவிடும்.

    எனவே பொல்லாதாரின் வார்த்தைகளைத் தூசியைத் தட்டிவிடுவதுபோல் தட்டிவிட்டுச் சென்றால்தான், அவை நம் மனதில் ஒட்டிக் கொள்ளாமல் வாழ்வின் வளர்ச்சியில் நாம் கவனம் செலுத்த முடியும்; நிம்மதியாகவும் வாழ முடியும்.

    உங்களை வீழ்ச்சியடையச் செய்வதற்காகவே சிலர் உங்களை வேதனைப்படுத்த முயற்சிப்பார்கள். உங்கள் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே பாதைகளில் முட்களைப் பரப்புவார்கள். அலட்டிக் கொள்ளாமல் அவற்றைத் தாண்டிச் செல்லுங்கள். உங்கள் வளர்ச்சியின்பால் நீங்கள் பெறுகின்ற மகிழ்ச்சியும், தொடர் வெற்றிகளுமே அவர்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற மாபெரும் தண்டனையாக இருக்கும்.

    அதே சமயம் நம்முடைய செயற்பாடுகளோ, வார்த்தைகளோ யாரையும் சிறிதளவுகூட புண்படுத்திவிடக்கூடாது என்பதில் நாம் மிகமிக கவனமாக இருக்கவேண்டும். நமது சுயமரியாதை நமக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல் மற்றவர்களின் தன்மானம் அவர்களுக்கு முக்கியம் என்பதை கருத்தில் வைத்துக் கொண்டால் பிறரை அவமதிக்கும் எண்ணம் வராது.

    அதியமான் நெடுமான் அஞ்சியை நேரில் கண்டு பரிசில் பெற பெருஞ்சித்திரனார் சென்றார். காடு, மலைகளைக் கடந்து தன்னிடம் வந்த பெருஞ்சித்திரனாரை பார்க்காமலேயே அவருக்கு வேறு ஒருவர் மூலம் பரிசு கொடுத்தனுப்பினான் அதியமான். அச்செயலை அவமானமாகக் கருதி தன்மானம் காக்க அப்பரிசை ஏற்க மறுத்துவிட்டார் பெருஞ்சித்திரனார்.

    யாங்கு அறிந்தனனோ தங்குருங் காவலன்

    காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்

    வாணிகப் பரிசிலன் அல்லன் என்று அவர் பாடிய பாடல் புறநானூறில் இடம் பெற்றுள்ளது.

    நாம் ஒருவருக்கு ஓர் உதவியைச் செய்கின்ற போது, பெறுகின்ற நபரை அலட்சியமாகப் பார்ப்பதும், ஏனோதானோவென்று மரியாதையின்றிக் கொடுப்பதும் தர்மம் ஆகாது. அப்படிச் செய்வதைவிட செய்யாமலிருப்பது உத்தமம். எதையும் மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். யாரையும் மரியாதையுடன் நடத்த வேண்டும். நம்மிடம் உதவி கேட்டு ஒருவன் வந்துவிட்டான் என்பதற்காக, நமக்கு ஓர் அடிமை சிக்கிக்கொண்டான் என்று எண்ணிவிடக்கூடாது. அவமானப்படுத்துதல் என்பது படுகொலைக்குச் சமம்.

    நாம் எவ்விதம் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படியேதான் மற்றவர்களும் விரும்புவார்கள் என்ற உணர்வு நமக்கு வேண்டும். மனம் செம்மையாக இருந்தால் அதில் பிறக்கின்ற எண்ணங்களும் செம்மையானவையாக இருக்கும். அவற்றிலிருந்து தீமைகள் ஒருபோதும் பிறப்பதில்லை.

    ஊமைக்காயங்களே உயர்வுக்கு தூண்டுதல்கள்...

    வசைபாடும் வாய்களுக்கு வாழ்த்திப் பாடத் தெரியாது. வாழ்த்துகின்ற நெஞ்சங்களுக்கு வசைபாடத் தெரியாது. கலீல் ஜிப்ரானைவிட பத்து வயது மூத்தவள் மேரி எலிசபெத். இருவரும் நெருங்கிப் பழகியவர்கள். ஒருவரை ஒருவர் தீவிரமாகக் காதலித்தவர்கள். மனரீதியாக மட்டுமல்ல, உடல் ரீதியாகவும் ஒருவரை ஒருவர் ரசித்துக் களித்தவர்கள்.

    ஜிப்ரானின் படைப்புகளை உலகளாவிய தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்பதில் ஆர்வமும், அக்கறையும் காட்டியவள் மேரி. உலக இலக்கியங்கள், மதம் தொடர்பான விஷயங்கள், ஆழமான தத்துவங்கள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் மணிக்கணக்காக அவர்கள் விவாதிப்பார்கள். நீட்ஷேவையும், வில்லியம் பிளேக்கையும் அவருக்கு புரியும்படிச் சொன்னவளும் அவள்தான். ஜிப்ரானின் கையெழுத்துப் பிரதிகள் அனைத்தையும் முறைப்படிச் செப்பனிட்டுச் சீர்படுத்தி, அவற்றை உயர்த்தி நிறுத்தியவளும் அவள்தான்.

    எத்தனை அற்புதமான அன்புறவு!

    ஆனால் திடீரென மேரிக்கு அவளது உறவினர் ஒருவருடன் திருமணம் ஏற்பாடானது. அவள் என்ன செய்தாள்? ‘உன்னைவிட நான் பத்து வயது மூத்தவள். உன்னோடு குடும்பம் நடத்த இயலாது’ என்று ஜிப்ரானுக்குக் கடிதம் எழுதினாள். அதற்கு ஜிப்ரான் ‘உன் உடலைப் பார்க்குமுன்னே உன் மனதைப் பார்த்தவன் நான். உன்னைவிட நெருக்கமானவர் எனக்கு யாருமில்லை இருக்கவும் முடியாது. நீ ஏழுமுறை வெவ்வேறு ஆடவரை திருமணம் செய்துகொண்டாலும் சரி நம் அன்புறவு அறுபடாமல் அர்த்தமுள்ளதாகவே இருக்கும்’ என்று பதில் எழுதினார்.

    அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஜிப்ரான் உயிர் வாழ்ந்தார். எனினும் தனது மனதைவிட்டு அவர் மேரியை இறக்கி வைக்கவே இல்லை.

    இறுதியாக மேரிக்கு ஜிப்ரான் எழுதிய கடிதத்தின் கடைசி வரி, ‘கடவுள் உன்னை நேசிப்பாராக’ என்பதுதான்.

    வாழ்த்துகின்ற உள்ளம் எப்போதும் வாழ்த்திக்கொண்டுதான் இருக்கும். காயப்பட்டுத் துடிக்கின்ற தருணங்களிலும் அது தன்னிலை இழந்துவிடாது; யாரையும் திட்டித் தீர்க்காது.

    போர்க்களத்தில் ஏற்படுகின்ற காயங்கள் வீரனுக்கு அழகானவை. உள்ளத்தில் ஏற்படுகின்ற காயங்கள் வாழ்க்கைக்குப் பாடமானவை.

    காயங்களை வெறும் காயங்களாக நாம் எண்ணிவிடக்கூடாது. ஏனெனில், அவை நமக்கு ஞானத்தைப் போதிக்கின்றன. மனிதர்களின் சுயரூபங்களை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. வாழ்வின் யதார்த்தங்களை நமக்கு விளக்குகின்றன.

    நம்முடைய அலட்சியப் பார்வைகள், மிதமிஞ்சிய பெருமைப் பேச்சுகள் மற்றவர்களை எரிச்சலூட்டி பொல்லாத பகையை உருவாக்கிவிடக்கூடும். எனவே எச்சரிக்கை அவசியம்.

    யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவோம். யார் உணர்வுகளையும் காயப்படுத்தாமல் பழகுவோம். மனித நேயத்துடன் உறவு பாராட்டுவோம்.

    பிறர் உங்களுக்குள் ஏற்படுத்திய காயங்களை எண்ணிக் கவலைப்படாதீர்கள். அவை யாவும் காலம் உங்களுக்கருளிய பாடங்கள். எனவே உங்களை பக்குவப்படுத்திய காயங்களுக்கு நன்றி சொல்லுங்கள். தெளிந்த சிந்தனையுடன் எழுந்து நில்லுங்கள். அப்படியெனில், உங்கள் வாழ்வில் எந்நாளும் சுகநாளே.

    -கவிஞர் தியாரூ. (தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர்)
    இப்போதெல்லாம் இளம் வயதிலேயே முகப்பரு, இளநரை பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.. இதைத் தவிர்க்க எளிய சிகிச்சை முறையை அறிந்து கொள்ளலாம்.
    ‘‘மருதாணி இலை, கறிவேப்பிலை, வெந்தயக் கீரை, வெள்ளை கரிசலாங்கண்ணி இவை எல்லாமும் தலா 4 கைப்பிடி, பெரிய நெல்லிக்காய் அரை கிலோ.. இவற்றை நன்றாக அரைத்துச் சாறெடுங்கள். இதனுடன் தண்ணீர் கலக்காத திக்கான தேங்காய்ப் பால் 4 லிட்டர் அல்லது தேங்காய் எண்ணெய் 1 கிலோ கலந்து நன்கு காய்ச்சினால் கரும்பச்சை நிறத்தில் எண்ணெய் கிடைக்கும்.

    இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் சில வாரங்களிலேயே நரை கூந்தல் அத்தனையும் கருங்கூந்தலாக மாறிவிடும். சிறு வயது முதலே குழந்தைகளுக்குத் தடவி வந்தால் கூந்தல் அத்தனை சீக்கிரத்தில் நரைக்காது..’’

    உங்கள் செல்ல மகளின் பெரிய பெரிய ஆசைகளில் பரு இல்லாத முகமும் ஒன்றுதானே.. நீங்களும்தான் மார்க்கெட்டில் அறிமுகமாகிற எல்லா க்ரீம்களையும் போட்டுப் பார்த்துவிட்டீர்கள். அப்படியும் பரு இன்னும் அதிகரித்திருப்பது மாதிரிதான் தோன்றுகிறதே தவிர, ஒருபலனும் இல்லை என்றா கவலைப்படுகிறீர்கள்?

    ‘‘கவலைவேண்டாம்.. அதற்கும் எளிய சிகிச்சை ஒன்று இருக்கிறது.

    ‘‘துளசி, புதினா, வேப்பிலை மூன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஜூஸ் ஆக்குங்கள். பச்சை பயறு மாவுடன் கொஞ்சம் வேப்பிலையை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து முகத்தைத் துடையுங்கள். பிறகு, துளசி + புதினா + வேப்பிலை சாற்றினை எடுத்து முகத்தில் தடவி மிகமிக மென்மையாக பத்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். கவனம்.. அழுத்தித் தேய்த்துவிடக்கூடாது.

    பிறகு, பச்சைப் பயறுடன் கலந்த வேப்பிலையை முகத்தில் போட்டு, காய்ந்ததும் முகம் கழுவுங்கள். இதை வாரம் ஒருமுறை செய்தால் முகப்பருவுக்கு வைக்கலாம் ஒரு பெரிய முற்றுப்புள்ளி.

    ‘என்னால் இவ்வளவு நேரமெல்லாம் ஒதுக்க முடியாது’ என்கிறவர்களுக்கு.. தண்ணீரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதில் வேப்பிலை இலைகளைப் போட்டு ஆறியவுடன் அந்தத் தண்ணீரில் தினமும் முகம் கழுவுங்கள். அதோடு, மாதம் இருமுறை துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அந்த ஆவியில் முகத்தைக் காட்டுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தாலே நல்ல வித்தியாசம் தெரியும்.

    ஜாதிக்காய், சந்தனம் சிறிது எடுத்து நன்கு அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் போட்டு சிறிது நேரம் வைத்திருந்து முகம் அலம்பினாலும் பரு ஓடிப் போகும். ஜாதிக்காய், முகப்பருவை குறைப்பதுடன் கருமையையும் நீக்கும். முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் கிராம்பு அரைத்துப் போடுங்கள். பரு இல்லாத பகுதியில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    எவரிடத்திலும் குறைகளை மட்டும் கண்டு குற்றம் சாட்டாமல், நிறைகளை பார்த்து பாராட்டினால் வாழ்வில் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்கும்.
    மனம் எப்போதும் எதிர்மறை நிலையில்தான் செயல்படும். அதற்கு நிறைகளைவிட குறைகளே தென்படும். வெள்ளைநிற வேட்டியில் புள்ளி அளவு கறை இருந்தாலும் அதுதான் கண்ணில் படும். அதுபோல் எந்தவொரு நல்ல விசயத்திலும் அதில் இருக்கும் சிறிய குறைபாடுதான் தெரியும்.

    அதுபோன்றுதான் மக்கள் பிறரை எடை போடுகிறார்கள். குறைகளே அவர்கள் கண்ணுக்கு தெரிவதால் பிறரை குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
    ஒற்றை விரலை நீட்டி பிறரைக் குறை சொல்ல தொடங்கினால் மூன்று விரல்கள் தன்னை நோக்கி சுட்டிக்காட்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.
    உண்மையில் மேதாவிகள் பிறப்பதில்லை. நல்ல சிந்தனைகள் மூலம் உருவாக்கப்படுகிறார்கள். இதனை உணர்ந்து பிறரை குறை சொல்வதை தவிர்த்து, அவர்களது நிறைகளைச் சொல்லி தட்டிக் கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளைப் பார்த்து பெரும்பாலான பெற்றோர்கள் ‘உன் வயதுதானே அவனுக்கும்... திறமையாக இருக்கிறான்.எல்லா விசயத்திலும் முதலாவதாக வருகிறான். நீ சுத்த வேஸ்ட்’ என்று புலம்புவார்கள். ஆண்கள் மனைவிமார்களிடம் ‘என்னதான் சமைக்கிறியோ... உப்புசப்பு இல்லாம இருக்கு. சாப்பிட முடியல நாக்கு செத்துப்போச்சு’ என்று அங்கலாயிப்பார்கள்.
    அலுவலகத்தில் ‘என்னசார் பண்றீங்க? நேத்து வேலைக்கு வந்த பையன் எவ்வளவு அருமையா இந்த வேலையை செஞ்சிருக்கான் பாருங்க. நீங்க பத்து வருசமா இருக்கிறீங்க. ஒரு முன்னேற்றமும் இல்லை’ என்று மேலதிகாரிகளின் புலம்பல்.

    இப்படி மனித மனம் எங்கும் எதிலும் யாரையாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஏன் இப்படி குறை சொல்கிறீர்கள்? என்று கேட்டால் எல்லாம் அவர்கள் நன்மைக்குதான் என்று சொல்லி அதற்கு அரை மணி நேரம் பாடம் எடுப்பார்கள். இப்படி தங்களின் குறை சொல்லும் குணத்துக்கு ஆளுக்கொரு காரணம் வைத்திருப்பார்கள்.

    ஆனால் இதெல்லாம் சரிதானா? என்று கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். குறை சொல்வதால் ஒருவரை திருத்தி விட முடியாது. மாறாக அந்த நபர் மனம் நொந்து சஞ்சலப்படுவார். இதனால் மேலும் மேலும் அவர் செய்யும் வேலையில் தவறுகள் தான் ஏற்படும். உண்மையிலேயே ஒருவரது தவறை நீங்கள் திருத்த நினைத்தால் முதல் வேலையாக அவரை நீங்கள் குறை சொல்வதை நிறுத்த வேண்டும்.

    ஏன்னென்றால் ஒருவரை நீங்கள் அடிக்கடி குறை சொல்ல தொடங் கினால் “உண்மையிலேயே நாம் எதற்கும் தகுதியில்லாதவர்கள்தான் போலிருக்கிறது” என்ற தாழ்வு மனப்பான்மைக்கு அவர்கள் ஆளாகிவிடுவார்கள். தன் குறைகளை திருத்தவே முடியாது என நம்பத் தொடங்கி விடுவார்கள். அதனால்அவர்கள் தனிமைப்பட்டு போவார்கள்.

    பிள்ளைகளிடம் இருக்கும் குறைகளை சொல்லாவிட்டால் எப்படி அவர்கள் திருந்துவார்கள்? என்பது பெரும்பாலான பெற்றோர்களின் எண்ணம். ஆனால் உங்கள் குழந்தைகளை இந்த உலகம் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு முதல் வேலையாக அவர்களை நீங்கள் பாராட்ட வேண்டும்.

    ஆனால் பலரும் என்ன செய்கிறார்கள் தெரியுமா? குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளையெல்லாம் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தனது திறமையால் ஏதாவது செய்தால் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்வ தில்லை. ஆனால் சிறிய குறைகள் இருந்தாலும் அதனை உற்றுப்பார்த்து சரி செய்ய வேண்டும் என்று முனைகிறார்கள். குழந்தைகளின் மனதிலும் இது ஆழப்பதிந்து விடுவதால் அவர்களும் பிறர் குறைகளையே உற்றுப்பார்க்க தொடங்கி விடுகிறார்கள்.

    நாம் என்ன செய்கிறமோ அதுதான் பிரதிபலிக்கும். உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.

    வாழ்வியல் முகாம் ஒன்றை நடத்திய போது அதில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி எழுந்து “என் கணவர் என்னிடம் எப்போதும் ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு குறையாவது கண்டுபிடித்து என்னை மட்டம் தட்டி பேசாவிட்டால் அவருக்கு தூக்கமே வராது. திருமணமாகி இத்தனை ஆண்டுகளில் ஒரு நாள் கூட மறந்தும் அவர் என்னை பாராட்டியது கிடையாது” என்று கண்கள் கலங்க சொன்னார்.

    அவர் சொன்னதையெல்லாம் கவனமாக கேட்டுக்கொண்டிருந்த பயிற்சியாளர் சட்டென்று அவரிடம் ஒரு கேள்வியை கேட்டார். “உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் அல்லவா? அவன் எப்படி இருக்கிறான். நன்றாக படிக்கிறானா?” என்றார்.

    குடும்பத்தை மகிழ்விக்கும் சூத்திரம்

    கணவரைப்பற்றி பேசினால் அதற்கு பதில் சொல்லாமல் பையனைப்பற்றி சம்பந்தம் இல்லாமல் கேட்கிறாரே என்று குழம்பிய அந்த பெண் “அவன் எங்கே உருப்படுவான். கொஞ்சம் கூட பொறுப்பில்ல. அப்படியே அப்பா மாதிரி. எதையும் எடுத்த இடத்தில் வைப்பதில்லை. தம்பியிடம் எதற்குகெடுத்தாலும் சண்டை. என்ன சத்தம் போட்டாலும் எங்கே திருந்துறான்” என்று மகனின் குறைகளை பட்டியலிட்டார்.

    சற்றுமுன் கணவர் தன்னிடம் எதற்கெடுத்தாலும் குறை கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார் என எரிச்சல் பட்ட அந்த பெண் இப்போது தன் மகனைப்பற்றி கொஞ்சமும் சளைக்காமல் குறை சொல்லி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்.

    நீங்கள் பிறரை குறை சொல்லும் போது அவர்கள் மேல் அக்கறை எடுத்து திருத்த முனைவதாக நம்புகிறீர்கள். ஆனால் அதுவே உங்களை யாராவது குறை சொன்னால் “இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?” என்று ஆதங்கப்படுகிறீர்கள்.

    குடும்பமோ, பணியிடமோ, வெளிவட்டாரமோ எதுவாக இருந்தாலும் எந்த விசயத்திலும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை பெரிதுபடுத்துவதைவிட, அந்த விசயத்தில் பாராட்டும் படியான அம்சம் என்ன இருக்கிறது என்பதை பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மன நிறைவு ஏற்பட்டு மற்றவரை பாராட்டும் பண்பு வளரும்.

    தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் படித்த போது ஒரு நாள் அவரது ஆசிரியை ஒரு கடிதத்தை கொடுத்து அதனை அவரது அம்மாவிடம் கொடுக்க சொன்னார். அந்த கடிதத்தை வாங்கி படித்த எடிசனின் தாய் கண் கலங்கினார். மகன் திருதிருத்தப்படி நிற்க “உங்கள் மகன் ஒரு மேதாவி. அவனுக்கு கற்றுக்கொடுக்கும் அளவு திறமை வாய்ந்த ஆசிரிகளோ வசதியே இங்கு இல்லை. எனவே அவனுக்கு நீங்களே உங்கள் வீட்டில் வைத்து கற்றுக்கொடுங்கள்” என்று எழுதியிருப்பதாக தாய் சொன்னார். அதைக்கேட்ட எடிசனின் முகம் பெருமிதத்தால் மலர்ந்தது.

    பின்னர் அவர் வளர்ந்து பெரும் விஞ்ஞானியாக பேரும் புகழும் பெற்ற சமயத்தில் ஒரு நாள் வீட்டு பரணில் எதையோ தேடிய போது அந்த கடிதம் அவரது கண்ணில் பட்டது. தன்னை மேதாவி என்று அன்றே சொல்லப்பட்ட கடிதம் அல்லவா? இது என்று ஆர்வத்தோடு அதை படிக்க தொடங்கினார். அந்த கடிதத்தில் “உங்கள் மகன் அதிமுட்டாள். அவனுக்கு எங்களால் கற்பிக்க இயலாது. எனவே அவனை இனி பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என எழுதியிருந்தது”.

    அப்போதுதான் எடிசனுக்கு ஒரு விசயம் புரிந்தது. தன்னிடம் பெரும் குறை இருப்பதாக சொல்லி பள்ளியில் இருந்தே நீக்கப்பட்ட பிறகும்கூட தன்னிடம் அளப்பரிய ஆற்றல் இருப்பதாக நம்பி, என்னையும் நம்ப செய்து என் குறைகளை காணாமல் நிறைகளில் மட்டும் கவனம் வைத்து என் ஆற்றலை மேம்படுத்தியவள் தன் தாய்தான் என்பதை உணர்ந்த அவர் இப்படி சொன்னார், “ஒரு ஜீரோ தன் தாயின் நம்பிக்கையால் ஹீரோவானான்”.

    நிறைகள் சுட்டிக்காட்டப்படும் போது குறைகள் நிவர்த்தி செய்யக்கூடியவையாக ஆகிவிடும். எனவே எவரிடத்திலும் குறைகளை மட்டும் கண்டு குற்றம் சாட்டாமல், நிறைகளை பார்த்து பாராட்டினால் வாழ்வில் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்கும்.
    Email:fajila@hotmil.com
    கர்ப்ப காலத்தில் எதை வேண்டுமானால் சாப்பிடு பப்பாளி பழத்தை மட்டும் சாப்பிட்டு விடாதே! குழந்தைக்கு ஆகவே ஆகாது. என்று சொல்வதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பம் தரிக்கப் போகும் பெண்களின் வாழ்வில் இந்த விசயம் கண்டிப்பாக நடந்திருக்கும். ‘எதை வேண்டுமானால் சாப்பிடு பப்பாளி பழத்தை மட்டும் சாப்பிட்டு விடாதே! குழந்தைக்கு ஆகவே ஆகாது.’ என்ற பயமுறுத்தும் வார்த்தைகளைக் கர்ப்பிணிப் பெண்கள் கடந்திருக்காமல் இருக்கவே முடியாது.

    இதற்கு என்ன காரணம்? ஏன் பப்பாளி பழங்களைப் பற்றி இப்படி ஒரு செய்தி பரவத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பப்பாளி பழங்களைச் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்று நம்பப்பட்டது தான்.

    இன்று பல கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழத்தில் நிறைந்த ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு அதை எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். கனிந்த பப்பாளி பழங்கள் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட உகந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. நன்கு கனியாத பப்பாளி பழங்கள் சாப்பிட ஏற்றதில்லை. இந்த வகை காய் வெட்டான பழங்கள் கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    குளிர்ச்சி தன்மையான உணவுகளைச் சாப்பிடும் பொழுது கர்ப்பிணிப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது. பப்பாளி சூடு தன்மையான உணவுப் பட்டியலில் சேர்க்கிறது. அதனாலேயே கர்ப்ப காலங்களில் பப்பாளி பழங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

    கண்மூடித்தனமாக நாம் பப்பாளி பழங்களைக் கர்ப்பத்திற்கு எதிரானவையாகக் கருதக்கூடாது. உண்மையில் நன்கு கனிந்த பப்பாளி பழங்களைக் கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதால் பல நல்ல பலன்களை அடையலாம். அதே சமயம் சற்றுப் பச்சை தன்மையோடு சரியாகக் கனியாத பதத்தில் இருக்கும் பப்பாளி பழங்களை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளவே கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    கனிந்த பப்பாளி பழங்களில் விட்டமின் ஏ, விட்டமின் பி, கரோட்டின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் கருவின் வளர்ச்சிக்கு அடிப்படையான தேவைகள்.

    உண்மையில் நம் நாட்டில் குழந்தை இறப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணமே ஊட்டச்சத்துக் குறைபாடுதான்! அந்த வகையில் கனிந்த பப்பாளி பழங்கள் குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளைத் தருகின்றன. அதனால் பழைய கட்டுப்பாடுகளையே நம்பிக் கொண்டு நல்ல சத்தான உணவைத் தவிர்ப்பது உகந்ததல்ல.

    கர்ப்பகாலத்தின் முதல் நிலையில் இருக்கும் பெண்கள் இந்த வகை பப்பாளிகளைச் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இதை எடுத்துக்கொள்வதால் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் கர்ப்பப்பை சுருங்கி விரிய துணைபுரிகிறது. இதனால் கருச் சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

    கனிந்த பப்பாளி பழங்களைக் கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதால் நிறைய பலன்கள் ஏற்படுகின்றன என்பது உண்மை.பல கர்ப்பிணிப் பெண்கள் இதை முயன்று பலன் அடைந்து உள்ளனர்.இதில் நிறைந்துள்ள சத்துகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    கனிந்த பப்பாளி பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்து, கர்ப்ப காலத்தில் ஏற்படும் மசக்கை தொல்லையைத் தவிர்க்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் , மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காப்பாற்றுகின்றது.
    ×