search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரஸ்"

    சுடிதார் என்றால் ஒரு டாப்சும், பேண்டும் சேர்ந்து அதனுடன் துப்பட்டாவும் இணைந்தது என்ற காலம் போய் தற்போது பல வகைகளில் சுடிதார்கள் தைக்கப்படுகின்றன.
    தீபாவ‌ளி‌க்கு து‌ணி எடு‌க்க‌ச் செ‌ன்றா‌ல் அ‌திக நேர‌ம் ஆகு‌ம் எ‌ன்பது எ‌ல்லோரு‌க்கு‌ம் தெ‌ரி‌ந்ததே. ஆனா‌ல் து‌ணியை‌த் தை‌க்க‌க் கொடு‌க்கவு‌ம் நேர‌ம் ஆ‌கிறது இ‌ப்போதெ‌ல்லா‌ம். ஏ‌ன் எ‌ன்றா‌ல் அ‌‌த்தனை மாட‌ல்க‌ள் வ‌ந்து‌வி‌ட்டன. எ‌ந்த மாட‌லி‌ல் சுடிதாரையோ, ஜா‌க்கெ‌ட்டையோ தை‌ப்பது எ‌ன்று முடிவெடு‌‌ப்பது எ‌ன்பது பெ‌ண்களு‌க்கு பெரு‌ம் ‌பிர‌ச்‌‌சினையா‌கிறது.

    சுடிதார் என்றால் ஒரு டாப்சும், பேண்டும் சேர்ந்து அதனுடன் துப்பட்டாவும் இணைந்தது என்ற காலம் போய் தற்போது பல வகைகளில் சுடிதார்கள் தைக்கப்படுகின்றன. பஞ்சாபி, குஜராத்தி, மார்வாடி, ஷாட் டாப்ஸ், சல்வார் கமிஸ், கேதரிங், காலர் டைப், கட் வைத்த டாப்ஸ், ‌ஸ்‌லீ‌ப் லெ‌ஸ் (கை‌யி‌ல் இ‌ல்லாத டா‌ப்‌ஸ்) என தையல் எந்திரங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்துகின்றன சுடிதார்களில்.

    ஆயத்த ஆடைகளின் மோகம் மெல்ல மெல்ல குறைந்து, தற்போது சுடிதார் துணிகள் எடுக்கப்பட்டு தங்களுக்கு வேண்டிய வகையில் தைத்து அணிகின்றனர் இளசுகள். அதிலும் தையல் கடைக்குச் சென்றால் ஒரு சுடிதார் தைப்பதற்கு எத்தனை விஷயங்களை முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.

    முதலில் கழுத்து வடிவம். அதில் எத்தனை வடிவங்கள். எல்லாவற்றையும் பார்த்தால் நமக்கு மயக்கமே வருகிறது. அதில் ஏதாவது ஒன்றை முடிவு செய்த பின்னர் கட் வைத்ததா, இல்லையா என்ற கேள்வி. பேண்ட் மாடல் எப்படி என்று அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிக்கும் போது நாம் எப்படிப்பட்ட உடையைத் தைக்கச் சொல்லியிருக்கிறோம் என்றே புரியாமல் போய் விடுகிறது.

    அத்தனை வகையில் மாடல்களும், வகைகளும் வந்துவிட்டன. பு‌திதாக வரு‌ம் மாட‌ல்களை‌த்தா‌ன் இளசுகளு‌ம் ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர். அதனா‌ல் தா‌ங்க‌ள் தவறாக தை‌த்து ‌விடு‌ம் பே‌ன்டினை‌க் கூட மாட‌ல் எ‌ன்று அ‌றிமுக‌ப்படு‌த்‌தி ‌விடு‌கி‌ன்றன‌ர் தைய‌ல்கார‌ர்க‌ள்.

    தற்போது இளசுகள் விரும்பி அணியும் வகையில் பஞ்சா‌பி மாடல்தான் முன்னணியில் உள்ளது. அதாவது இறுக்கமான, நீளம் குறைந்த டாப்சும், தொள தொள வென்ற பேண்டும் தான் பேஷனாகிவிட்டது. அதற்கு அடுத்தபடியாக காலர் மாடல் அதிகரித்துள்ளது. காலர் வைத்த சுடிதாருக்கு என்ன விசேஷம் என்றால் துப்பட்டா அணியத் தேவையில்லை. மேலும் அதனை ஜீன்ஸிற்கும் போட்டுக் கொள்ளலாம்.

    கைகளிலும், கழுத்தின் முன் அல்லது பின் புறத்தில் முடிச்சுகள் போடும் புதிய வடிவம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த மோகம் சுடிதார்களையும் தாண்டி பெண்கள் அணியும் ஜாக்கெட்டுக்கும் சென்றுள்ளதுதான் கூடுதல் தகவல்.
    குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி நகைகள், உடைகள் போட வேண்டும் என்று நிறைய தாய்மார்களுக்கு தெரிவதில்லை. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    பெண் குழந்தைகளுக்கு டிரஸ் பண்ண பெரிய போராட்டம் நடக்கும். அம்மாவும், மகளும் ஒரே கலர் டிரஸ் என்று கூட சொல்லி, அவர்களை நம் வழிக்கு கொண்டு வர, டிரஸ் செலக்ட் செய்து வாங்கினால், அதை கருத்தில் கொண்டு நாம் கொடுக்கும் டிரஸ்சை அணிந்து கொள்வர். குழந்தைகளுக்கு நாம் எது நல்லது, எது கெட்டது என்று எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வர்.

    குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி நகைகள், உடைகள் போட வேண்டும் என்று நிறைய தாய்மார்களுக்கு தெரிவதில்லை.

    திருமண விழாக்களில்: திருமண விழாவுக்கு ஏற்ற உடை பட்டுப் பாவாடைதான். அந்த நேரங்களில் அவர்களுக்கு கழுத்தை ஒட்டி நெக் செயினும், ஒரு சிறிய காசு மாலை அல்லது செயின் போடவும். நெற்றிக்கு சின்ன நெத்திச்சுத்தி, கைக்கு வங்கி, வளையல், கைகளுக்கு மெஹ ந்தி, மோதிரம் செட், இடுப்புக்கு ஒட்டியாணம் போட்டால், ரொம்ப அழகாக இருக்கும். எந்த வகை நகையாக இருந்தாலும், ஒரே மாதிரி போடவும். பிளைன் நகைகள் திருமண விழாவிற்கு அழகாக இருக்கும். முடிந்தவரை குழந்தைகளுக்கு தங்க நகை போடாமல், ஒரு கிராம் கோல்டு நகைகளை போடுவது நல்லது.

    ரிசப்ஷனுக்கு : மாலை நேர ரிசப்ஷனுக்கு, குழந்தைகளுக்கு கல் நகைகள் அழகாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏற்ற உடைகள் எது என்றால் காக்ராசோளி, அனார்கலி, சகாரா போன்ற நல்ல ஒர்க் செய்த ஆடைகள் மிகவும் அழகாக இருக்கும். இந்த மாதிரி ஆடைகள் போடும் போது, டிரஸ்க்கு மேட்சாக நகைகள் போடவும். கைகள் நிறைய வளையல் போடவும்.

    பர்த் டே பார்ட்டி: அடிக்கடி போவது இங்குதான். பார்ட்டிக்கு போகும் போது சிம்பிளாக, மார்டனாக டிரஸ் போடவும். அந்த டிரசுக்கு மேட்சாக மெல்லிய செயின், வளையல், கம்மல் போடலாம். கைகளில் டாட்டூஸ் ஒட்டினால், அழகாக இருக்கும்.

    ×