என் மலர்
பெண்கள் உலகம்
- அதிகமான உணவுகளை கொடுப்பதை விட அதை பிரித்து கொடுங்கள்.
- உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்த வடிவங்களில் செய்து கொடுங்கள்.
குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது இன்றைய பெற்றோருக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. அதனை எளிதாக்கும் ஒரு சில வழிமுறைகளை அறிந்து கொள்வோம்!

குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் நேரத்தை வழக்கப்படுத்துங்கள். ஒரே நேரத்தில் அதிகமான உணவுகளை கொடுப்பதை விட அதை பிரித்து கொடுங்கள்.
சமைக்கும்போது குழந்தைகளின் உதவியை நாடுங்கள். மாவு பிசைவது, பழங்களை துண்டுகளாக வெட்டுவது போன்ற வேலைகளை அவர்கள் செய்கிறபோது உணவை உண்பதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.
உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்த வடிவங்களில் செய்து கொடுங்கள். அவ்வாறு செய்கிறபோது விரும்பி சாப்பிடுவார்கள்.

காய்கறிகளையும், பழங்களையும் சிறிய துண்டுகளாக நறுக்கி கொடுங்கள்.
குழந்தைகள் சாப்பிடும்போது தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். இதனால் குழந்தைகள் முழு கவனத்துடனும் அதனை ரசித்து சாப்பிட முடியும்.
கூடுமானவரை குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். இதன் மூலம் மற்றவர்கள் சாப்பிடுவதை பார்த்து பிறருக்கு கொடுத்தும் குழந்தைகள் சாப்பிடுவார்கள்.

குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பிடித்தால் அவர்களைப் பயமுறுத்தாமல், அடிக்காமல் பொறுமையாக இருந்து, உணவு கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
குழந்தைகளுக்கு உணவை சிறிய உருண்டைகளாக கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் விருப்பத்துடன் உண்பார்கள்.
- பாக்டீரியாக்களால் அடைப்பு ஏற்படும் போது வேர்க்குரு உண்டாகிறது.
- காற்றோட்டமான குளிர்ந்த படுக்கை அறையில் தூங்க வேண்டும்.
வேர்க்குரு அல்லது வெப்ப சொரி என்பது மருத்துவ ரீதியாக மிலியாரியா என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. முகம், கழுத்து, மார்பு, இடுப்பு, அக்குள் மற்றும் தொடைகளில் வேர்க்குரு பொதுவாகக் காணப்படுகிறது.

கோடை காலத்தில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக வியர்வை சுரப்பிகளில் இறந்த தோல் செல்கள் மற்றும் ஸ்டெபைலோகாக்கஸ் எபிடெர்மிடிஸ் போன்ற பாக்டீரியாக்களால் அடைப்பு ஏற்படும் போது வேர்க்குரு உண்டாகிறது.
இது மிலியாரியா கிரிஸ்டலினா (படிக வேர்க்குரு), மிலியாரியா ருப்ரா (சிவப்பு வேர்க்குரு), மிலியாரியா ப்ரோஃபுண்டா (உட்புற வேர்க்குரு) என்று மூன்று வகைப்படும். வேர்க்குரு ஏற்பட கீழ்க்கண்டவை முக்கிய காரணிகளாகும்.
வியர்வை சுரப்பிகள் முதிர்ச்சி அடையாத நிலை (பிறந்த குழந்தைகள்), அதிக வெப்பமான அல்லது ஈரப்பதமான சூழல், காய்ச்சல், தீவிர உடற்பயிற்சி, மரபணு காரணங்கள், மருந்துகளின் பக்க விளைவுகள் (டையூரிடிக்ஸ்), உடல் பருமன், நீரிழிவு நோய், புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம்.
சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலோருக்கு காணப்படும் நரம்பு பாதிப்பு (நியூரோபதி) மற்றும் ரத்த நாளங்களின் அடைப்புகளால் (பெரிபெரல் வாஸ்குலர் நோய்) தோல் வறட்சி உண்டாகி வேர்க்குரு ஏற்பட வழி வகுக்கிறது.

இதனை தடுக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
காற்றோட்டமான குளிர்ந்த படுக்கை அறையில் தூங்க வேண்டும். ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை தவிர்த்து மெல்லிய பருத்தியாலான தளர்வான ஆடைகளை அணியவும். பாலியஸ்டர் துணிகளை அணிய கூடாது. சருமத்திற்கு எரிச்சலூட்டும் வாசனை சோப்பு மற்றும் இதர அழகு சாதன பொருட்களை தவிர்க்கவும்.
வெயில் காலங்களில் ஏற்படும் நீர் இழப்பைத் தடுக்க குறைந்த பட்சம் தினமும் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். வெயிலில் குறிப்பாக மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி கண்டிப்பாக செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால், குடை அல்லது தொப்பியை பயன்படுத்த வேண்டும்.

உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். நீர்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள். தினமும் குறைந்த பட்சம் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும். புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.
பெரும்பாலும் வேர்க்குரு குளிர்ந்த சூழலுக்கு மாறும் போது தானாகவே சரியாகிவிடும். அரிப்பு குறையவில்லையெனில் மருத்துவரை கலந்தா லோசித்து காலமைன் லோஷன் அல்லது ஸ்டீராய்ட் கிரீம்களை பயன்படுத்தலாம்.
- மனித உடலில் உள்ள முக்கியமான சுரப்பிகளில் ஒன்று தைராய்டு சுரப்பி.
- ரத்தத்தில் டி3,டி4 ,டி.எஸ்.ஹெச் ஹார்மோன்கள் எவ்வளவு உள்ளது என்று பார்க்கலாம்.
மனித உடலில் உள்ள முக்கியமான சுரப்பிகளில் ஒன்று தைராய்டு சுரப்பி. இது தைராக்ஸின் ஹார்மோனை தேவையான அளவு சுரக்காததைத் தான் குறை தைராய்டு நோய் என்கின்றோம். இதை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை:
சப் கிளினிக்கல் ஹைபோ தைராய்டு நோய். கிளினிக்கல் ஹைபோ தைராய்டு நோய். ஹாசிமோட்டோஸ் குறை தைராய்டு நோய்.

பரிசோதனைகள்
தைராய்டு நோய்களைக் கண்டறியப் பயன்படும் பரிசோதனைகள் வருமாறு:
1) ரத்தத்தில் டி3,டி4 ,டி.எஸ்.ஹெச் ஹார்மோன்கள் எவ்வளவு உள்ளது என்று பார்க்கலாம்
2) தைரோபெராக்சிடோஸ் ஆன்டிபாடி (டி.பி.ஓ), தைரோகுளோபுலின் ஆன்டிபாடி (டி.ஜி.ஹெச்)
3) நுண் ஊசி உறிஞ்சல் திசு பரிசோதனை (எப்.என்.ஏ.சி)
4)அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (தைராய்டு சுரப்பியில் உள்ள புற்றுநோய் சதை முடிச்சுகள், காய்டர், நீர்க்கட்டிகள், தைராய்டு சுரப்பியின் அழற்சி வீக்கம் இவைகளை கண்டறிய உதவுகிறது.)
தைராய்டு நோய்களுக்குரிய உணவுப் பழக்க வழக்கங்கள்
1) இரும்புச் சத்து குறைபாட்டிற்கும், தைராய்டு குறைபாட்டிற்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. தைராய்டு ஹார்மோன் டி4 லிருந்து டி3-க்கு மாறுவதற்கு இரும்புச் சத்து தேவை. ரத்தத்தில் 'பெரிட்டின்' அளவு சரியாக இருக்க வேண்டும். இரும்புச்சத்து உடலில் சேர்வதற்கு போலிக் அமிலம், வைட்டமின்கள் பி12 மற்றும் சி தேவை.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்:
முருங்கைக்கீரை, கறிவேப்பிலைக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பேரீட்சை, சிவப்புக் கொண்டைக் கடலை, வேர்க்கடலை, சோயா பீன்ஸ், பீன்ஸ், அவரைக்காய், இறைச்சி வகைகள், பூசணி விதை, கோதுமை, தீட்டாத சிவப்பரிசி, அத்திப்பழம், ஆப்பிள், கொய்யா, பேரிக்காய், பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு மற்றும் அனைத்துக் கீரை வகைகளிலும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
2) வைட்டமின் டி குறைவால் தைராய்டு சுரப்பியில் உள்ள தைரோ பெராக்சிடோஸ், தைரோகுளோபுலின் போன்றவை பாதிக்கப்படுகிறது. ஆகவே, விட்டமின் டி சத்துக் குறையாமல் பார்க்க வேண்டும்.
நமது தோலில் எந்த அளவுக்கு சூரிய ஒளிபடுகிறதோ, அந்த அளவிற்கு வைட்டமின் டி உடலில் உருவாகும். உணவு வகைகளில் முட்டை மஞ்சள்கரு, மத்திச்சாளை மீன், சூரை, கானாங்கெளுத்தி, இந்தியன் சால்மன் போன்ற மீன்களிலும், சிப்பி, பால் பொருட்கள், பாதாம், பிஸ்தா, இறைச்சி வகைகள் இவற்றிலிருந்தும் வைட்டமின் டி கிடைக்கும்.
3) அயோடின்: தைராய்டு சுரப்பி செயல்படுவதற்கு அயோடின் மிக முக்கியமானது. கடல் உப்பு, கடல் மீன்கள், நண்டு, இறால், கணவாய், பால் பொருட்கள், முட்டை, இறைச்சி வகைகள், கடல் பாசிகள், ஸ்ட்ராபெர்ரி, க்ரான் பெர்ரி, அன்னாசிப் பழம் இவைகளில் இச்சத்து காணப்படுகிறது.
4) செலினியம்: தைராய்டு சுரப்பியின் டி3, டி4 ஹார்மோன்கள் சுரப்பதற்கு செலினியம் ஒரு முக்கியமான பொருள். உணவுப் பொருட்களில், பூசணி விதை, பாதாம், பிரேசில் நட், முட்டை, பால் பொருட்கள், மீன், இறைச்சி இவைகளில் செலினியம் அதிகமாகக் கிடைக்கிறது.
5) மெக்னீசியம்: தைராய்டு சுரப்பி டி4 ஹார்மோன் சுரக்க மெக்னீசியம் தேவை. டி4 தேவையான அளவு சுரந்தால் தான் உடலுக்குத் தேவைப்படும் டி3 ஹார்மோனாக மாற்றப்படும். ஆகவே, உணவில் மெக்னீசியம் குறைவில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எலும்பில் கால்சியம் வலிமையாக சேர்வதற்கும் மெக்னீசியம் இன்றியமையாதது. இது உணவுகளில், பாதாம், வாழைப்பழம், பூசணி விதை, முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, கருப்பு சாக்லேட், ரொட்டி, உருளைக்கிழங்கு, பால் பொருட்கள், இறைச்சி, மீன் வகைகளில் உள்ளது.
6) துத்த நாகம்: மூளையின் ஹைப்போதலாமஸ் சுரக்கும் தைரோடிரோபின் ரிலீசிங் ஹார்மோன் சரியான அளவு சுரக்க துத்தநாகம் தேவை. கடல் சிப்பி, முந்திரிப்பருப்பு, பாதாம், வேர்க்கடலை, கொண்டக்கடலை, பூசணி விதை, கருப்பு சாக்லேட், இறைச்சி வகைகள், மீன் வகைகள், தயிர், பீன்ஸ், சோயாபீன்ஸ், மாதுளை பழம், கொய்யா, பெர்ரி வகைப் பழங்கள் இவைகளில் துத்தநாகம் அதிக அளவில் உள்ளது.
7) தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் சிகிச்சை காலங்களில் முட்டைகோஸ், காலிப்ளவர், ப்ராக்கோலி, டர்னிப் போன்ற காய்கறிகளை தவிர்ப்பது நலம்.
- சருமம், மூக்கு, தொண்டை பகுதியில் ஈரப்பதத்தை இழக்க செய்துவிடும்.
- விரைவிலேயே வயதாகும் தோற்றம் எட்டிப்பார்க்கும்.
கோடை வெயிலின் உக்கிரம் பல இடங்களில் அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், பலரும் குளிர்சாதன (ஏ.சி.) வசதியுள்ள அறைக்குள் அதிக நேரம் செலவிட தொடங்கி விட்டார்கள். அலுவலகம் மட்டுமின்றி வீடுகளிலும் ஏ.சி.யின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

அப்படி ஏ.சி.யில் அதிக நேரம் இருப்பது 6 விதமான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கக்கூடும். அவை பற்றியும், தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.
முன்கூட்டியே வயதாகும் தோற்றம்:
ஏர்கண்டிசன் (ஏ.சி.) வசதி உள்ள அறைக்குள் நிலவும் வெப்பத்தை மட்டும் குறைப்பதில்லை. ஈரப்பதத்தையும் குறைத்துவிடும். குறிப்பாக சருமம், மூக்கு, தொண்டை பகுதியில் ஈரப்பதத்தை இழக்க செய்துவிடும். சரும வறட்சி, சரும எரிச்சல், சருமம் உரிதல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
சிலருக்கு சருமம் நெகிழ்வுத்தன்மை அடைந்து மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் ஏற்படக்கூடும். இது விரைவிலேயே வயதாகும் தோற்றம் எட்டிப்பார்ப்பதற்கான அறிகுறியாக மாறக்கூடும். அத்தகைய பிரச்சனை கொண்டவர்கள் ஏ.சி. அறையில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். சரும பராமரிப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நீரிழப்பு-சோர்வு
ஏ.சி.கள் சூரியக்கதிர்கள் உமிழும் வெப்பத்தை குறைத்தாலும் சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் ஈரப்பதத்தை நீக்குகின்றன. இது நீரிழப்புக்கு வித்திடும். அதன் காரணமாக தாகம், சோம்பல், சோர்வு போன்றவை எட்டிப்பார்க்கும்.
அதனால் ஏ.சி. அறைக்குள் அதிக நேரம் செலவிடுபவர்கள் உடலில் நீரேற்றத்தை பராமரிக்க போதுமான அளவு தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் தொடர்ச்சியாக ஏ.சி.க்குள் இருக்காமல் அவ்வப்போது வெளியே நடமாட வேண்டும்.

கண் எரிச்சல் - கண் வறட்சி
சிலருக்கு கண்கள் வறட்சி நிலையிலேயே காணப்படும். அவர்களின் கண்களில் போதுமான அளவு கண்ணீர் திரவம் படர்ந்திருக்காது. அப்படி கண்களில் வறட்சி தன்மை கொண்டவர்கள் ஏ.சி.யில் அதிக நேரம் இருப்பது நிலைமையை மோசமாக்கும். கண்களில் ஈரப்பதம் குறைந்து கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் எட்டிப்பார்க்கக்கூடும்.

சுவாசப் பிரச்சனை
ஏ.சி.யில் இருந்து வெளிப்படும் குளிர்ந்த, உலர்ந்த காற்று சுவாச பாதைக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக சளி, இருமல் போன்ற நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும். குறிப்பாக நாள்பட்ட நுரையீரல் நோய் (சி.ஓ.பி.டி.), மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்புகளை கொண்டவர்களுக்கு பிரச்சினையை அதிகப்படுத்தும்.
அதிலும் ஏ.சி.யை முறையாக பராமரிக்காவிட்டால் அதில் படர்ந்திருக்கும் தூசு, அழுக்குகள், பூஞ்சை காளான் உள்ளிட்டவை ஏ.சி. வெளியிடும் குளிர் காற்றில் கலந்து ஒவ்வாமை, சுவாச நோய்களுக்கு காரணியாகிவிடும்.

இயற்கை எண்ணெய் உற்பத்தி குறைவு
ஏர் கண்டிஷனிங் செய்யப்பட்ட அறைக்குள் அதிக நேரம் இருந்தால், உடலில் வியர்வை உற்பத்தி செய்யும் திறன் குறைந்துவிடும். இதனால் இயற்கையாகவே உடலில் எண்ணெய் உற்பத்தியாகும் திறனும் பாதிப்படையும்.
அதன் காரணமாக சருமம் மந்தமாகவும், ஆரோக்கியமற்றதாகவும் தோன்றும். உடலில் எண்ணெய் இல்லாததால் முடி வறட்சி அடையும். முடி உடைவது, முடி உதிர்வது போன்ற பிரச்சினைகளும் எட்டிப்பார்க்கும்.

தோல் வியாதிகள்
எக்ஸிமா, சொரியாசிஸ், ரோசாசியா போன்ற தோல் வியாதிகளை கொண்டவர்கள் ஏ.சி. அறையில் அதிக நேரம் செலவிடும்போது ஏ.சி.யில் இருந்து வெளிப்படும் காற்று நிலைமையை மோசமாக்கக்கூடும். சருமம் ஈரப்பதத்தை இழந்து சரும வெடிப்புக்கு வித்திடும். தோல் பிரச்சனைகளை அதிகரிக்க செய்துவிடும்.
இந்த பிரச்சனைகளை தவிர்க்க ஏ.சி. அறையில் குறிப்பிட்ட நேரம் செலவிடுவது நல்லது. இடையிடையே வேறு அறைக்கோ, வெளிப்புற சூழலுக்கோ இடம் மாறிக்கொள்வது சிறப்பானது. உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர், இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், பழச்சாறுகள் உள்ளிட்டவற்றை பருகி வரலாம். ஏ.சி.யை முறையாக பராமரிப்பதும் முக்கியமானது.
- ஆய்வின் முதன்மை ஆசிரியர் ஆடம் போடே கூறுகிறார்.
- அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களை விட ஆண்களே சற்று அதிகமாக காதலில் விழுகின்றனர், ஆனால் பெண்கள் ஆண்களை விட தங்கள் துணையைப் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்கள் என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (ANU) பாலின வேறுபாடுகளை ஆராயும் ஆய்வு தெரிவிக்கிறது.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட இந்த Peer review மதிப்பாய்வில், ஆண்கள், பெண்களை விட சராசரியாக ஒரு மாதம் முன்னதாகவே காதலில் விழுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் ஆசிரியரும், ANU முனைவர் பட்ட மாணவருமான ஆடம் போடே கூறுகையில், "ஆண்கள் தங்கள் காதலியின் மனதை கவர தங்கள் அர்ப்பணிப்பைக் அதிகம் காட்ட வேண்டியிருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம்" என்று தெரிவிக்கிறார்.
ஆனால் பெண்கள் ஆண்களை விட தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றி சிந்திப்பதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
- பால் பொங்கினால் டம்ளரில் சிறிது தண்ணீரை எடுத்து ஊற்றினால் பொங்குவது அடங்கி விடும்.
- ரசம் கொதித்து விட்டதா என்று அடிக்கடி திறந்து பார்க்கத் தேவை இல்லை.
* தேநீர் தயாரிக்கும் போது சர்க்கரையையும், டீத்தூளையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடித்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையில் அசடுகள் இருக்க வாய்ப்புண்டு.
* தோசைக்கல்லில் சப்பாத்தியை போட்டதும் எவர் சில்வர் கிண்ணத்தில் சுடுநீரை ஊற்றி சப்பாத்தி மீது வைத்து மெதுவாக அழுத்தினால் சப்பாத்தி பொன் நிறமாக மாறும். சீக்கிரமே வெந்தும் விடும். சில்வர் கிண்ணத்தின் அடிப்புறம் தட்டையாகவும் சாப்பாத்தி அளவுக்கு வட்ட வடிவமாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
* கல் உப்பை பாட்டிலில் போட்டு நீர் ஊற்றி கலக்கி, அந்த தண்ணீரை வடித்து விட்டால் உப்பு சுத்தமாகி விடும். மணல் போன்ற தூசிகள் அடியில் தேங்கி விடும். மீண்டும் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்தால் மேலே தென்படும் தெளிந்த நீரை சமையலுக்குப் பயன்படுத்தலாம். அந்த உப்பு நீரை சமையலுக்குப் பயன்படுத்தும்போது ஒரு கரண்டியில் ஊற்ற வேண்டும். தூசி ஏதும் இருந்தால் எடுத்தும் விடலாம்.
* சமையல் அறையில் ஒரு நோட்டும், பேனாவும் வைத்துக் கொண்டால் மளிகைப் பொருட்கள் முடியும் தருவாயில் அவற்றை குறித்து வைத்துக்கொள்ளலாம். பின்பு கடையில் பொருள் வாங்கும் போது யோசித்து குழம்ப வேண்டாம். இந்தக் குறிப்புகள் பயன்படும்.
* இடுக்கிகள் இல்லாத போது, அடுப்புத் துணிக்கு நூல் துணியைப் பயன்படுத்த வேண்டும். நைலான் துணிகளில் தீப்பற்றினால் அணைப்பதுசிரமம். காலால் தேய்த்தால் நைலான் இழைகள் நெருப்புடன் பாதத்தில் ஒட்டிக்கொள்ளும். காய்கறிகள் கழுவிய தண்ணீர் வைத்துள்ள வாளியில் தீப்பிடித்த துணியைப் போடலாம். பதற்றமே தேவை இல்லை.
* பால் பொங்கினால் டம்ளரில் சிறிது தண்ணீரை எடுத்து ஊற்றினால் பொங்குவது அடங்கி விடும்.
* மின் அடுப்பை பயன்படுத்தும்போது அடுப்பை அணைக்காமல் மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது. அடுப்பை அணைத்த பின் மின் இணைப்பை துண்டிக்கும் வழக்கத்தை பின்பற்றினால் அடுப்பு நீடித்து உழைக்கும்.
* ரசம் கொதித்து விட்டதா என்று அடிக்கடி திறந்து பார்க்கத் தேவை இல்லை. ரசம் கொதித்து விட்டால், மூடி, கை தாங்க முடியாத அளவுக்கு சூடாகியிருக்கும். இதைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம்.
- பட்டு புடவைகள் வாஷிங்மெஷினில் சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்ய எப்போதும் கையில்தான் துவைக்க வேண்டும்.
- நேரடி சூரிய ஒளியில் இருந்து விலகி நன்கு காற்றோட்டமான பகுதியில் பட்டு புடவையை தொங்கவிடுங்கள்.
பெண்கள் பலருக்கும் தங்கள் பட்டு புடவையை பராமரிப்பது கடினமாக உள்ளது. குறிப்பாக திருமணத்திற்கு வாங்கும் பட்டு புடவைகள் கனமாகவும், பராமரிக்க கடினமாகவும் இருக்கும். இதனை கையில் துவைப்பது அவ்வளவு எளிதல்ல. பட்டு புடவைகளை வீட்டிலேயே துவைத்து பராமரிக்க சில எளிய டிப்ஸ்களை பற்றி பார்க்கலாம்.
1. குளிர்ந்த நீரை பயன்படுத்துங்கள்
பட்டு புடவைகளை துவைக்கும் போது, சூடான தண்ணீருக்கு பதிலாக குளிர்ந்த நீரை பயன்படுத்துவது முக்கியம்.
சூடான நீர் பட்டு இழைகளை சுருக்கி அதன் பளபளப்பை இழக்கச் செய்யலாம். குளிர்ந்த நீர் மென்மை தன்மை கொண்டிருக்கும் என்பதால் அதன் அசல் பிரகாசத்தை பாதுகாக்க உதவும்.
2. மென்மையான சோப்பு பயன்படுத்துங்கள்
பட்டு புடவைகளை துவைக்கும்போது, மென்மையான துணிகளுக்கு வடிவமைக்கப்பட்ட சோப்பை பயன்படுத்துவது சிறந்தது. கடுமையான சோப்பு, பட்டு இழைகளை சேதப்படுத்தி புடவையில் உள்ள நிறங்களை மங்கச்செய்யலாம். குறிப்பாக நீங்கள் பயன்படுத்தும் துணி துவைக்கும் சோப்பு, பட்டுப்புடவையை சலவை செய்ய பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சோப்பு மீதுள்ள லேபிளை படிக்கவும்.
3. மெதுவாக கையில் துவைக்க வேண்டும்
பட்டு புடவைகள் வாஷிங்மெஷினில் சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்ய எப்போதும் கையில்தான் துவைக்க வேண்டும். ஒரு பக்கெட்டில் குளிர்ந்த நீரை நிரப்பி, பட்டுப்புடவையை துவைப்பதற்கான பிரத்யேக வாஷிங் திரவத்தை சேர்க்கவும். அந்த மென்மையான தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். அப்போது பட்டு புடவையை முறுக்கவோ அல்லது திருப்பவோ கூடாது. சிறிது நேரத்துக்கு பிறகு சோப்பு நுரையை அகற்ற, பட்டு புடவையை குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும்.
4. காற்றில் உலர வேண்டும்
பட்டு புடவையை வீட்டில் துவைத்த பிறகு, ஹீட்டர் அல்லது ஸ்டீமர் பயன்படுத்துவதற்கு பதிலாக அதை காற்றில் உலர்த்துவது முக்கியமானது. நேரடி சூரிய ஒளியில் இருந்து விலகி நன்கு காற்றோட்டமான பகுதியில் பட்டு புடவையை தொங்கவிடுங்கள். இல்லாவிட்டால் வெயிலோ, வெப்பமோ மென்மையான பட்டு இழைகளை சேதப்படுத்தும். புடவை உலர்ந்தவுடன், அதில் இருக்கும் சுருக்கங்களை அகற்ற குறைந்த வெப்ப அமைப்பில் அதை அயர்ன் செய்யலாம்.
- பழுப்பு நிற கொழுப்பு திசு ஆற்றலை எரிக்கும், நம்மை சூடாக வைத்திருக்கும்.
- 'நேச்சர் மெட்டபாலிசம்' என்ற இதழில் வெளியாகி உள்ளது.
ஒருவரின் பிறந்த மாதத்திற்கும், அவரின் உடல் கொழுப்பை எவ்வாறு சேமிக்கிறது என்பதற்கும் தொடர்பு இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறா?.. ஆம் என புதிய ஆய்வு ஒன்று அடித்துக் கூறுகிறது.
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு 'நேச்சர் மெட்டபாலிசம்' என்ற இதழில் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வின்படி, குளிர் காலத்தில் கருத்தரித்தவர்களில் ஒப்பீட்டளவில் அதிக பழுப்பு நிற கொழுப்பு திசுக்களின் செயல்பாடு (brown adipose tissue activity) இருந்துள்ளது.
பழுப்பு நிற கொழுப்பு திசு என்பது ஆற்றலை எரிக்கும், நம்மை சூடாக வைத்திருக்கும் மற்றும் இரத்த சர்க்கரையை சீராக்க உதவும் ஒரு வகை கொழுப்பு ஆகும்.
இதன்படி வெப்பமான காலங்களில் கருத்தரிக்கப்பட்டவர்களை விட, குளிர்ந்த மாதங்களில் கருத்தரிக்கப்பட்டு 10 மாதங்கள் கடந்து பிரசவிக்கப்படுபவர்களுக்குக் குறைந்த BODY MASS INDEX மற்றும் உள் உறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பு குறைவாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
- 'சமூக உளவியல் மற்றும் ஆளுமை அறிவியல்' என்ற அறிவியல் இதழில் முடிவுகள் வெளியாகி உள்ளன.
- முன்னாள் காதலரை மறக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை ஆராய்ந்தது.
முன்னாள் காதலரை மறக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது.
'சமூக உளவியல் மற்றும் ஆளுமை அறிவியல்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, முன்னாள் துணையை மறக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை ஆராய்ந்தது.
சராசரியாக, முன்னாள் காதலருடனான உணர்ச்சி ரீதியான பற்றுதல் பாதியளவு மறைய சுமார் 4.18 ஆண்டுகள் ஆகலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலான காதலர்களுக்கு, சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிணைப்பு முற்றிலும் மறைந்துவிடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
- கல்லீரல் பாதிக்கப்பட்டு செயல் இழந்து விட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் செய்ய முடியும்.
- உடம்பு வீங்குவதோடு, ரத்த வாந்தி ஏற்படும். இது ஒரு வகையான பாதிப்பாகும்.
தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து உள்ளது.
மற்ற மதுவகைகளை விட தற்போது குளிர்ந்த பீருக்கு தான் தேவை அதிகமாக உள்ளது. பார்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து குளிர்ந்த பீர்களை வாங்கி குடிக்கிறார்கள்.
வெயில் தாக்கத்திற்கு பீர் இதமாக இருப்பதாக கருதி பெரும்பாலான மதுபிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். கோடை காலத்தில் எப்போதுமே பீர் விற்பனை அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது விற்பனை சூடுபிடித்து உள்ளது.
பீர் குடிப்பதால் உடலுக்கு நல்லதா? பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது பற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை பேராசிரியர் டாக்டர் மாரிமுத்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
மது குடிப்பது உடலுக்கு தீங்கானதாகும். இதனால் கல்லீரல் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. தொடர்ந்து மது பழக்கத்திற்கு ஆளாகி குடிப்பதால் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும்.
கல்லீரல் பாதிக்கப்பட்டு செயல் இழந்து விட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் செய்ய முடியும். உடம்பு வீங்குவதோடு, ரத்த வாந்தி ஏற்படும். இது ஒரு வகையான பாதிப்பாகும்.
மற்றொரு பாதிப்பு வயிற்றுப் பகுதியாகும். மது அருந்துவதால் வயிறு புண்ணாகி அதில் இருந்து ரத்தம் வரக்கூடும். 3-வதாக உடல் உறுப்பான கணையம் பாதிப்படையும். கணையம் பாதிக்கும் போது உடலில் ரத்த அழுத்தம் ஏற்பட்டு பல்ஸ் குறையும். இதனால் நுரையீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளும் பாதிக்கும்.
4-வது வகை மதுவுக்கு அடிமையாகுதல் ஆகும். தொடர்ந்து மது பழக்கத்திற்கு அடிமையாகி அவர்களால் ஒரு நாள் கூட குடிக்காமல் இருக்க முடியாது. இது போன்ற மது போதைக்கு அடிமையானவர்கள் குடிக்காமல் விட்டு விட்டால் ஒரு வலிப்பு வரும்.
திடீரென மதுபழக்கத்தை நிறுத்தும் போது இந்த பாதிப்பு ஏற்படும். இது மூளையையும் பாதிக்கும்.
5-வது வகையான பாதிப்பு தொடர்ந்து மது குடிப்பதால் கை, கால், நரம்புகள் பாதிக்கும். கை, கால் பகுதி உணர்ச்சியற்றதாகி விடும். பாதம் எரியும் அல்லது மறத்து விடும். இது போன்ற பாதிப்புகள் குடியை நிறுத்த முடியாமல் தினமும் குடிப்பவர்களுக்கு ஏற்படும்.
அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 10 முதல் 20 பேர் வரை மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள் வருகிறார்கள். இளம் வயதில் மது பழக்கத்திற்கு ஆளாகி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலை தற்போது அதிகரித்து உள்ளது. பெண்கள் கூட சிலர் மதுவுக்கு அடிமையாகி சிகிச்சை பெறுகிறார்கள்.
கோடை காலத்தில் பீர் அதிகளவில் குடிப்பதால் உடலுக்கு நல்லது எதுவும் இல்லை. அவை குளிர்ச்சியும் கிடையாது. பீர் குடிப்பதும் உடல் நலத்திற்கு பாதிப்பு தான். பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுவகைகளை விட பீரில் ஆல்கஹால் குறைவாக இருப்பதால் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது.
பீர் தினமும் குடிப்பது பாதிப்பை உண்டாக்கும். வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் இருதயத்திற்கு நல்லது.
குறைவாக குடிக்கும் போது ரத்தக் குழாய் விரிவடையும். குளிர்ந்த பீர் குடிப்பதனாலும் எந்த நன்மையும் இல்லை. கோடை காலத்திற்கு என்றோ குளிர்காலத்திற்கு என்றோ பீரை வகைப்படுத்தக் கூடாது.
எல்லா மதுபானங்களும் உடலுக்கு தீமைதான். ஆனால் பீர் வகைகள் அடிக்கடி எடுக்காமல் குறைவாக சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கறைபட்ட இடத்தை அழுத்தி தேய்க்கக் கூடாது.
- டால்கம் பவுடர் தூவி சுத்தம் செய்ய வேண்டும்.
பெண்களின் மனதுக்கு நெருக்கமான பட்டுப்புடவையில் கறை ஏற்படும்போது, அவர்கள் கலங்கிவிடுவார்கள். ஆனால், அதிகம் அலட்டிக்கொள்ளாமல், பட்டுப் புடவை கறைகளை நீக்க முடியும். அதுகுறித்து...

பூஜை போன்றவற்றின்போது பட்டுப் புடவையில் எண்ணெய் பட்டு விடலாம். அப்படி எண்ணெய்க் கறை பட்டால், நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக ஈரம் இல்லாத சுத்தமான காட்டன் துணியை கொண்டு அந்த இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். துணி கிடைக்காவிட்டால், 'டிஷ்யூ' பேப்பர் கொண்டும் குறிப்பிட்ட இடத்தில் ஒற்றி எடுக்கலாம்.

மிகவும் கவனமாக இதை செய்ய வேண்டும். கறைபட்ட இடத்தை அழுத்தி தேய்க்கக் கூடாது. அழுத்தி தேய்த்தால் மற்ற இடங்களுக்கும் கறை பரவும் வாய்ப்புள்ளது. அதனால் முடிந்தவரை எண்ணெய் பட்ட இடத்தை மட்டும் மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும்.
இந்த மாதிரி துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுத்த பின்னர், அந்த இடத்தில் டால்கம் பவுடர் தூவி சுத்தம் செய்ய வேண்டும். பவுடர் தூவியதும், கறைபட்ட இடத்தை குழாயில் ஓடும் நீரில் அலசினால் போதும். படிந்துள்ள எண்ணெய், அழுக்குகள் எல்லாமே நீங்கிவிடும். மறந்தும் கூட வெந்நீரில் கறையை நீக்க முயற்சி செய்ய வேண்டாம். வெந்நீர் பட்டால் கறை நீங்கவே நீங்காது.

சோப்பு கரைசலை வைத்தும் பட்டுப்புடவையில் உள்ள கறைகளை நீக்க முடியும். இதற்கு கடின சோப்பை பயன்படுத்தாமல் மென்மை தன்மை கொண்ட லிக்விட் சோப்பை உபயோகிக்கலாம்.
லிக்விட் சோப்பை குளிர்ந்த தண்ணீரில் கரைத்து, அதை ஒரு சுத்தமான காட்டன் துணியில் நனைத்துக்கொள்ள வேண்டும். இதை, விடாப்பிடி யான கறையின் மீது மெதுவாக வைத்து தேய்க்க வேண்டும். வேகமாகவோ அல்லது அழுத்தி துடைத்தாலோ பட்டுப்புடவையில் உள்ள நூலிழைகள் அறுந்துவிடும் வாய்ப்புள்ளது.
எனவே, மெதுவாக தேய்க்க வேண்டும். அடுத்தகட்டமாக, இந்த நுரைகளை நீக்குவதற்கு கறை உள்ள இடத்தை குளிர்ந்த நீரால் அலச வேண்டும். அப்போது கறை நீங்கி, பட்டுப் புடவை பழைய நிலைக்கு வந்துவிடும்.
- கால்களே முழு உடலின் எடையையும் தாங்குகின்றன.
- ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
வயதாகும்போது தசையின் நிறை, வலிமை, செயல்பாடுகள் படிப்படியாக பலவீனமடைய நேரிடும். இந்த நிகழ்விற்கு என்ன பெயர் தெரியுமா? இது மருத்துவ துறையில் `சர்கோபீனியா' என அழைக்கப்படுகிறது.
வயது ஏற ஏற தசை இழப்பு ஏற்படும். இதனால், நடையின் வேகம் குறையும். கைகளை ஊன்றாமல் எழுந்திருக்க முடியாது. இதன் தாக்கத்தின் தன்மை மனிதர்களுக்குள் மாறுபடும். முதுமை தவிர, புகைப்பிடித்தல், மது பழக்கம், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, வைட்டமின் டி, புரதச்சத்து குறைபாடு ஆகியவையும் காரணிகளாக கூறப்படுகிறது. சர்கோபீனியாவை எவ்வாறு தடுப்பது என்று பார்ப்போம்.
சுறுசுறுப்பாக இருங்கள்
தசை இழப்பை தடுக்க எப்பொழுதும் உடலானது இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். வயதானவர்கள் முடிந்தவரை நிற்க முடிந்தால் நில்லுங்கள், உட்கார முடியுமாயின் சிறிது நேரம் உட்காருங்கள். எப்பொழுதும் படுத்தே இருக்க அனுமதிக்காதீர்கள். தசை இழப்பை தடுப்பதற்கு சிறந்த வழி இயங்கி கொண்டே இருப்பதுதான்.

வயதானவர்களை நடக்க ஊக்கப்படுத்துங்கள்
வயதானவர்கள் வீட்டில் இருக்கும்போது, அவர்களை எப்பொழுதும் படுத்தே இருக்கவோ அல்லது ஓய்வெடுக்கவோ ஊக்கப்படுத்தாதீர்கள். அவர்கள் தடுமாற்றமின்றி நடப்பதற்கு உதவுங்கள். இல்லையெனில் அவர்கள் முன்பை விட மிகவும் பலவீனமாகிவிடுவார்கள்.

ஒரு வாரம் அவர்கள் படுக்கையில் இருந்தால், தசை நிறையில் 5 சதவீதம் வரை இழப்பு ஏற்படும். மேலும் அவர்களால் இந்த இழப்பை மீண்டும் முழுமையாக மீட்டெடுக்க முடியாது.
ஆஸ்டியோபோரோசிஸை விட பாதிப்பு அதிகம்
எலும்பின் வலிமை குறைந்து, எளிதில் உடையக்கூடியதாக மாறும் ஒரு நிலைக்கு `ஆஸ்டியோபோரோசிஸ்' என்று பெயர். இதனால் அவர்கள் எளிதில் கீழே விழுந்து எலும்பை உடைத்துக் கொள்வார்கள். ஆனால் இதை விட சர்கோபீனியா அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் நலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தசை நிறை குறைவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கும் வழிவகுத்துவிடும்.

ஓய்வில் இருந்தால் விரைவான தசை இழப்புக்கும் வழிவகுக்கும்
கால்களே முழு உடலின் எடையையும் தாங்குகின்றன. எனவே உடலின் இயக்கத்திற்கு அவை மிகவும் முக்கியமானவை. வயதானவர்கள் உட்கார்ந்து அல்லது படுத்தே இருப்பதால் கால்களின் இயக்கம் குறைகிறது. இது கால்களின் தசையை பலவீனப்படுத்துகிறது.
கால்களில் உள்ள தசைகள் எப்பொழுதும் ஓய்வில் இருந்தால், அது மோசமான விளைவை சந்திக்கிறது. நடைப்பயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகள் தசை நிறையை சரியாக பராமரிக்க உதவும் சிறந்த வழிகளாகும்.

வயதாகி முதுமை எட்டும்போது, கால்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் தசைகள் வலிமைப்படும். இரண்டு வாரங்களுக்கு கால்களை அசையாமல் வைத்திருந்தால், பத்து வருட காலத்திற்கு அதன் வலிமையை இழக்க நேரிடும்.
சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகள் தசை வலிமையை பராமரிக்க உதவிடும். எனவே கால்களின் வலிமையை பராமரிக்க ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். 60 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களில் 5 முதல் 13 சதவீதம் பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11 முதல் 50 சதவீதம் பேரும் சர்கோபீனியா பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அடுத்த 40 ஆண்டுகளில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இது பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தசை இழப்பை முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும், சுறுசுறுப்பாக இருந்தால் அதன் தீவிரத்தைக் குறைக்கலாம்.






