என் மலர்
பெண்கள் உலகம்
- கிராமப் புறங்களில் வசிப்பவர்களைத் தவிர, நகரங்களில் வசிக்கும் மக்கள் நீச்சல் குளங்களுக்குச் செல்கிறார்கள்.
- பல மணி நேரம் தண்ணீரில் குளிக்கிறார்கள்.
கோடை காலம் வந்துவிட்டால், சிலர் வெயிலைத் தாங்க முடியாமல் தங்கள் உடலைக் குளிர்விக்க ஏதாவது தேடுகிறார்கள். இன்னும் சிலர் நீச்சலை நாடுகிறார்கள்.
கிராமப் புறங்களில் வசிப்பவர்களைத் தவிர, நகரங்களில் வசிக்கும் மக்கள் நீச்சல் குளங்களுக்குச் செல்கிறார்கள். பல மணி நேரம் தண்ணீரில் குளிக்கிறார்கள்.
நீச்சல் குளங்களில் நீந்துவது, மணிக்கணக்கில் தண்ணீரில் இருப்பது கூட ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கண் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆண், பெண் பாலினங்களுக்கு இடையே செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.
- ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
செல்போன்கள் தற்போது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போன்களில் திரையை தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.
ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் என எப்போது பார்த்தாலும் அதிக அளவில் இளைஞர்கள் இதில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
இதில் யாருக்கு அதிக அளவில் ஆபத்து மற்றும் மன அளவில் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இதில் 25 வயது உடைய 104 ஆண்கள் 293 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த சிலரை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் 100 சதவீதம் தொடர்ந்து ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வந்தனர் .
இந்த ஆய்வின் முடிவில் ஆண், பெண் பாலினங்களுக்கு இடையே செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.
அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இளம்பெண்கள் மனம் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட்போன் அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள் அதிக துன்பங்களை எதிர்கொள்ள கூடும். ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் போன் பயன்படுத்துவதால் சமூகப் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிக அளவில் ஏற்படுவது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் மன உளைச்சல், தீங்கு விளைவிக்கும் நடத்தை, தற்கொலை எண்ணம் அதிகரிப்பதற்கு இந்த ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணங்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
சிக்கலான ஸ்மார்ட்போன் பயன்பாடு இளைய தலைமுறையினர் இடையே உள்ள பிரச்சனையை தீர்ப்பதற்கும் அதன் காரணம் மற்றும் விளவுகளை கண்டறிய தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
- அடினோ வைரஸ் என்ற வைரஸ் பாதிப்பால் ஏற்படுகிறது.
- தும்மல், இருமல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.
சென்னை:
சென்னையில் மெட்ராஸ் - ஐ கண்நோய் பாதிப்பு வேகமாக பரவுகிறது. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருபவர்களில் 50 சதவீதம் பேர் மெட்ராஸ் - ஐ பாதிப்புக்கு சிகிச்சை பெற வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
கோடை காலம் தொடங்கி இருப்பதால் தற்போது சென்னையில் மெட்ராஸ் - ஐ எனப்படும் கண் தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கண் எரிச்சல், வெளிப்பகுதி சிவந்து காணப்படுதல், கண்ணில் இருந்து நீர் வந்து கொண்டே இருப்பது, இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் ஆகியவை மெட்ராஸ்-ஐ பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.
இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக கண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், சென்னையில் கண் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருபவர்களில் 50 சதவீதம் பேர் மெட்ராஸ் - ஐ பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் யஷ்வந்த் ஆர்.ராஜகோபால் கூறியதாவது:-
மழை மற்றும் வெயில் காலத்தில் காலநிலை மாறும்போது மெட்ராஸ் - ஐ பாதிப்பு பரவுகிறது. அடினோ வைரஸ் என்ற வைரஸ் பாதிப்பால் இது ஏற்படுகிறது. தும்மல், இருமல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.
நோய் பாதிப்பு ஏற்பட்டவரின் கண்களை பார்ப்பதால் இந்த நோய் பரவாது. தொடுதல் மூலமாகவே பரவும். மெட்ராஸ்-ஐ தொண்டை மற்றும் கண் ஆகிய 2 உறுப்புகளையும் பாதிக்கும்.
10 முதல் 14 நாட்களில் இது தானாகவே சரியாகிவிடும். இதை தடுக்க கைகளை கழுவுதல், முகக் கவசம் அணிவது, சத்தான உணவுகளை எடுத்தல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.
மெட்ராஸ் - ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தானாக மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது. சிலர் கண்களுக்கு தாய்ப்பால் ஊற்றினால் சரியாகிவிடும் என்று நினைத்து அதை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு செய்தால் பாதிப்பு அதிகரித்துவிடும்.
கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்லுவதை தவிர்க்க வேண்டும். தற்போது பள்ளி மாணவர்கள் மூலம் அதிகமாக பரவுகிறது. எனவே, மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணிப்பது அவசியம். மெட்ராஸ் - ஐ பாதிப்பு அறிகுறி தெரியும் பட்சத்தில் அவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது.
- சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் ஏற்படுகிறது.
கை, கால் மற்றும் வாய் நோய் என்று அழைக்கப்படும் `தக்காளி காய்ச்சல்' பெரும்பாலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. குறிப்பாக, கோடை காலங்களில் இந்த காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
உடலில் சிவப்பு நிறத்தில் தக்காளி போல் சிறிய கொப்புளங்கள் தோன்றுவதால் இந்த பாதிப்பை தக்காளி காய்ச்சல் என பேச்சு வழக்கில் அழைக்கின்றனர்.

இதுதொடர்பாக குழந்தைகள் நல டாக்டர் ஒருவர் கூறியதாவது:-
கை, கால் மற்றும் வாய் நோயால், குழந்தைகளுக்கு தோல் வெடிப்பு மற்றும் எரிச்சல், அதிக காய்ச்சல் மற்றும் சிலருக்கு மூட்டு வலி, உடல் வலி, கடுமையான நீரிழப்பு, சோர்வு, வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இந்த காய்ச்சல் ஒரு வாரத்தில் தானாகவே சரி ஆகிவிடும்.
மேலும், இதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கை, கால் மற்றும் வாய் நோய் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் ஏற்படுகிறது.
பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள், நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு வரும்போதும் அவர்கள் கை, கால், முகம் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருப்பதை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்த காய்ச்சலை தவிர்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தோல் மூன்று அடுக்காக நமக்கு இருக்கிறது.
- பேண்டேஜ் போடுவதால் புதுத்தோல், புது செல்கள் உயிரோடு இருக்க உதவும்.
உடலில் ஏற்பட்ட ஒரு காயத்தை, ஒரு புண்ணை திறந்து விட்டு மருந்து போட்டுக் கொண்டிருப்பது சரியா அல்லது மருந்து தடவி கட்டு கட்டி மூடி வைத்திருப்பது சரியா?

காயம் ,சாதாரண புண், அடிபட்டு தையல் போட்ட இடத்தில் ரணம் இவை எல்லாமே நமது உடலின் ஏதாவதொரு இடத்திலுள்ள தோலில் தான் ஏற்பட்டிருக்கும். தோல் நமது மொத்த உடலையும் மூடியிருக்கும் ஒரு மிகப்பெரிய உறுப்பு ஆகும். தோல் மூன்று அடுக்காக நமக்கு இருக்கிறது. மேல்தோல், நடுத்தோல் மற்றும் அடித்தோல் ஆகும்.
மேலோட்டமான காயம் அதாவது வெறும் மேல்தோலில் மட்டும் தோல் கிழிந்து காயம் ஆகியிருக்கிறது, உதாரணத்திற்கு- சுடுதண்ணீர் உடம்பில் கொட்டி அதனால் ஏற்பட்ட காயம் என்றால் அதை திறந்து விடுவது தான் நல்லது. அதே நேரம் ஒரு ஆழமான காயம் என்றால் மருந்து வைத்து கட்டுகட்டி மூடி வைப்பதுதான் நல்லது.

சில புண்களிலிருந்து சீழ், ரத்தம், நீர் போன்றவை வடிவதுண்டு. இம்மாதிரி ரணங்களை மூடி வைப்பதுதான் சிறந்தது. சிறிய காயங்கள், கீறல்கள், சிராய்ப்புகள் போன்றவற்றுக்கு தினமும் மருந்து தடவி மூடாமல் விட்டுவிட்டால் சீக்கிரம் ஆறிவிடும்.
ஆனால் அந்த காயம் அழுக்கு, தூசி படாமல், துணி உரசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விபத்தினால் ஏற்பட்ட மேலோட்டமான காயங்கள், செல்லப்பிராணிகள், காட்டு விலங்குகள் கடித்ததினால் ஏற்பட்ட காயங்களை திறந்து வைத்து சிகிச்சை அளித்தால் சீக்கிரம் ஆறிவிடும்.

கடுமையான தீப்புண் முதலியவைகளை கிருமிகள் சுத்தமாக நீக்கப்பட்ட பேண்டேஜ் கொண்டு மூடிவைப்பது நல்லது. ஆழமான காயங்களை கிருமிநாசினி சேர்க்கப்பட்ட வெதுவெதுப்பான நீரில் நன்கு பலமுறை கழுவி பின் பாக்டீரியா எதிர்ப்பு ஆயின்ட்மென்டை தடவி சுத்தமான பேண்டேஜ் வைத்து கட்டு கட்டி விடுவதுதான் மிகவும் நல்லது.
மருந்து தடவி பேண்டேஜ் போடுவதால் புதுத்தோல், புது செல்கள் உயிரோடு இருக்க உதவும். தூசி அழுக்கு படாது. கிருமிகள் உள்ளே நுழையாது.
காயம் மேல்தோல், நடுத்தோல், அடித்தோல் தாண்டி மிக ஆழமாக தசைகளுக்கு போய்விட்டிருந்தால் கட்டு கட்டி மூடி வைப்பதுதான் சிறந்தது.
- புளிப்பான உணவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
- எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.
ருமட்டாய்டு ஆர்தரைடிஸ் நோய் என்பது சித்த மருத்துவத்தில் 'வளி அழல் கீஸ் வாயு' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தன்னுடல் எதிர்ப்பு நோய்.
நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு, மூட்டுகள் மற்றும் இணைப்புத் திசுக்களை சேதப்படுத்துவதால் வருவதாகும். கை, கால், மணிக்கட்டு, கணுக்கால், விரல்கள் ஆகிய இடங்களில் நாள்பட்ட அழற்சியுடன் வீக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் அவ்விடங்களில் வெப்பம், சிவப்பு நிறம், எரிச்சல் அல்லது வலியையும் உண்டாக்கும். இந்நோய் எளிதில் மருத்துவத்திற்கு அடங்காமலும், மருத்துவத்திற்கு அடங்கினும் மீண்டும் திரும்பி வருவதுமாயிருந்து, பாதிக்கப்பட்ட கீல்கள் கரடு கட்டினது போல நீட்டவும், நன்றாய் மடக்கவும், முடியாத வண்ணம் நிலைத்து விடச் செய்வதுண்டு.

இந்நோயில் தூக்கமின்மை, சிறு சுரம், காலையில் எழுந்தவுடன் கை விரல்கள், மூட்டுகளில் விறைப்புத்தன்மை, விரல்களை மடக்க இயலாத நிலை, நடப்பதற்கு சிரமம், உடல் பலவீனம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

இந்நோயை ஆர்.ஏ மற்றும் 'சைக்ளிக் சிட்ருலினேடட் பெப்டைடு' (சி.சி.பி), 'நியூக்ளியர்' (ஏ.என்.ஏ) போன்ற ரத்த பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.
இந்த நோய் பாதிப்பு உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பது, புளிப்பான உணவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவர்களது உடலில் வாதமும், பித்தமும் அதிகரித்திருக்கும். எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.
- ஆண்களை விட இது பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
- உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவை குறைக்கவும்.
மெட்டபாலிக் சிண்ட்ரோம்' என்பது தமிழில் 'வளர்சிதை மாற்ற நோய்க்குறி என்று அழைக்கப்படு கிறது. இதற்கு சிண்ட்ரோம் எக்ஸ், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் சிண்ட்ரோம், டிஸ்மெட்டபாலிக் சிண்ட்ரோம் போன்ற வேறு பெயர்களும் உண்டு.
வளர்சிதை மாற்றம் நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டசத்துக்களை உறிஞ்சி, அதனை ஆற்றலாக மாற்றி உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கொண்டு செல்கிறது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பேர் வளர்சிதை மாற்ற நோய் பிரச்சினையால் (குறிப்பாக இளம் வயதினர்) பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களை விட இது பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோய் கீழ்குறிப்பிட்டுள்ள ஐந்து நிலைகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.
உடல் பருமன் (குறிப்பாக தொப்பையை சுற்றிகொழுப்பு படிதல்), உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக டிரைகிளசரைடு அளவு, இன்சுலின் எதிர்மறை நிலையால் (இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்) ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, ரத்தத்தில் குறைவான அளவு நல்ல கொலஸ்ட்ரால்(எச்.டி.எல்).
வளர்சிதை மாற்ற நோய்க்குறி ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் பிளேக் படிதலை உண்டாக்கி பக்கவாதம், நீரிழிவு மற்றும் இதய நோய் ஏற்படக்கூடிய அபாயத்தை அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
வளர்சிதை மாற்ற நோய்க்குறி மீள்மாற்றம் சாத்தியம் உள்ள ஒரு நிலையாகும். இந்நோய்க்குறி வராமல் தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள், முழுதானியங்கள், காய்கறிகள், கீரைகள், புரதங்கள் நிறைந்த கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றை அதிகம் உண வில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எண்ணெய்யில் வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை குளிர் பானங்கள், பேஸ்ட்ரி, சாக்லெட் போன்ற அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவை குறைக்கவும். தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும். குறிப்பாக இடுப்பின் சுற்றளவை ஆண்கள் 94 சென்டிமீட்டருக்கு மிகாமலும், பெண்கள் 80 சென்டி மீட்டருக்கு மிகாமலும் பார்த்து கொள்ள வேண்டும்.
யோகா, சுவாசப்பயிற்சி, தியானம் போன்றவையும் நல்ல பலனளிக்கும். ரத்தத்தில் குளுக்கோஸ், டிரைகிளசரைடு மற்றும் எச்.டி.எல் அளவையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். மன அழுத்தத்தை குறைத்து கொள்ள வேண்டும். தினமும் குறைந்த பட்சம் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
- ஒவ்வொரு நாளும் 15,000 அடிகள் நடக்க வேண்டும்.
- 5 முதல் 7 மணி நேரம் நல்ல தூக்கம் அவசியம்.
ஒவ்வொரு மனிதனும் 100 ஆண்டுகள் முழுமையாக வாழ விரும்புகிறான். ஆனால் பலர் பல்வேறு நோய்களால் 70 வயதிற்கு முன்பே இறக்கின்றனர். சுகாதார அமைப்பான லான்செட் கமிஷன் தனது உலக சுகாதாரம்-2050 அறிக்கையில், தற்போதைய அகால மரணங்களின் எண்ணிக்கையை 2050-ம் ஆண்டுக்குள் பாதியாகக் குறைக்க முடியும் என்று வெளிப்படுத்தியுள்ளது.
இது சாத்தியமாக, அந்தந்த நாடுகள் சுகாதாரப் பராமரிப்புக்காக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
அனைவரையும் சுகாதார விழிப்புணர்வுடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் பல முறையான மாற்றங்களைச் செய்வதன் மூலமும் அகால மரணங்களைக் கணிசமாகக் குறைக்க அரசாங்கங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விரிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது.

2001 முதல் 2018 வரை இந்தியாவில் சுமார் 37 மில்லியன் மக்கள் அகால மரணமடைந்துள்ளனர். இந்த இறப்புகளுக்கு 4 தொற்றா நோய்கள் முக்கிய காரணமாகும்.
அதிக எண்ணிக்கை யிலான இறப்புகள் இதய நோய் (58.3 சதவீதம்), புற்றுநோய் (18.6 சதவீதம்), நாள்பட்ட சுவாச நோய்கள் (15.5 சதவீதம்) மற்றும் நீரிழிவு நோய் (5.6 சதவீதம்) ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளன.
காற்று மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவை இதற்குக் காரணங்களாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவற்றுடன் சாலை விபத்துகளும் நாட்டில் அகால மரணங்களுக்கு வழிவகுக்கும். தற்கொலைகளும் அதிக அளவில் உள்ளன.
எச்.ஐ.வி., காசநோய் நீரிழிவு நோய் உயர் ரத்த அழுத்தம் சாலை விபத்துகள் கடுமையான சுவாச நோய்கள் மற்றும் குழந்தை இறப்பு போன்ற 15 காரணிகள் சராசரி ஆயுட்காலத்தைக் குறைக்கின்றன.
8 வகையான தொற்றுகள் தாய்வழி சிக்கல்கள் மற்றும் 7 தொற்றாத நோய்கள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு அதிக நிதி செலவிடப்பட வேண்டும்.
புகைபிடித்தல் மற்றும் மது பழக்கங்களை விட்டுவிடுங்கள்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் 15,000 அடிகள் நடக்க வேண்டும். உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும் மன அழுத்தத்தைக் குறைக்கவும். குறைந்தது 5 முதல் 7 மணி நேரம் நல்ல தூக்கம் அவசியம்.

கார்போஹைட்ரே ட்டுகள் அதிகமாகவும் புரதம் அதிகமாகவும் உள்ள உணவை உண்ணுங்கள் பருவகால பழங்கள். கீரைகள் மற்றும் காய்கறிகள் உணவில் அதிகமாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும்
பெண்கள் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனையைப் பெற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீனை மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.
- இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் உபயோகிப்பது நல்லது.
கோடை காலத்துக்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கும் நிலையில் சருமத்தை பாதுகாப்பதற்கு பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். சன்ஸ்கிரீன், பேஷியல், மாய்ச்சுரைசரிங் கிரீம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறார்கள். இதில் சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் விஷயத்தில் நிறைய கட்டுக்கதைகள் உலாவருகின்றன. அவை பற்றியும் அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.

கட்டுக்கதை:
மேகமூட்டமாக இருக்கும் நாட்களில் சன்ஸ்கிரீன் பயன்படுத்த தேவையில்லை.
உண்மை:
சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்கள் மேகங்கள் வழியாகவும் ஊருடுவும் அபாரசக்தி படைத்தவை. அதனால் சூரியனே தெரியாத அளவுக்கு வெயிலே இல்லாமல் இருள் சூழ்ந்த காலநிலை நிலவினாலும் கூட சருமத்திற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்தாவிட்டால் பாதிப்புதான் ஏற்படும்.
முன்கூட்டியே வயதாகும் தோற்றம் எட்டிப்பார்ப்பதற்கும் வழிவகுத்துவிடும். அதனால் மேகமூட்டமான நாட்களிலும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள மறக்காதீர்கள்.
கட்டுக்கதை:
கருமையான சரும நிறம் கொண்டவர்கள் சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க தேவையில்லை.
உண்மை:
மெலனின் என்னும் நிறமி கருமையான சருமத்திற்கு இயற்கையாகவே பாதுகாப்பு அளிக்கும் என்றாலும் சூரியனிடம் இருந்து முழுமையான பாதுகாப்பை வழங்காது. எந்த நிற சருமம் கொண்டவர்களாக இருந்தாலும் சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அதிலும் கருமை நிற சருமம் கொண்டவர்கள் போதிய சரும பராமரிப்பை மேற்கொள்ளாவிட்டால் சரும எரிச்சல், கரும்புள்ளிகள் தோன்றுதல், சரும புற்றுநோய் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும். எனவே ஒவ்வொருவரும் சரும நிறத்தை பொருட்படுத்தாமல் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீனை மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.

கட்டுக்கதை:
அதிக எஸ்.பி.எப் கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் நீண்ட நேரம் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.
உண்மை:
எஸ்.பி.எப் 50 கொண்ட சன்ஸ்கிரீன் 'சூப்பர் பவர்' போல் செயல்பட்டு சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்தான். ஆனால் நாள் முழுவதும் வெயிலில் இருந்து பாதுகாப்பை வழங்காது. அதிக வியர்வை வெளிப்பட்டாலோ, நீச்சல் பயிற்சி மேற்கொண்டாலோ மீண்டும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது அவசியமானது.
குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் உபயோகிப்பது நல்லது.
கட்டுக்கதை:
முகத்தில் மட்டும் சன்ஸ்கிரீன் உபயோகித்தால் போதும். மற்ற சரும பகுதிகளுக்கு சன்ஸ்கிரீன் தேவையில்லை.
உண்மை:
சன்ஸ்கிரீன் என்பது முகத்திற்கு மட்டுமே உபயோகிக்கக்கூடிய கிரீம் அல்ல. கழுத்து, காது, கை, கால்கள் என எல்லா பகுதிகளிலும் சன்ஸ்கிரீனை பூசிக்கொள்ள வேண்டும். ஏனெனில் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்கள் சருமத்தின் எந்த பகுதிக்கும் பாகுபாடு காண்பிக்காது. ஆடை அணிந்த பிறகு மறைக்காத உடல் பாகங்கள் அனைத்திற்கும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள வேண்டும்.
கட்டுக்கதை:
எஸ்.பி.எப் அதிகம் கொண்ட சன்ஸ்கிரீன் உடன் ஒப்பனை அணிவது போதுமானது.
உண்மை:
மேக்கப்புடன் எஸ்.பி.எப் அதிகம் கொண்ட சன்ஸ்கிரீனை பூசினால் மட்டும் போதாது. பெரும்பாலானோர் போதுமான அளவுக்கு ஒப்பனை மேற்கொள்வதில்லை. மேக்கப் செய்வதற்கு முன்பாக முதலில் பிராட் ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள வேண்டும். அதன்பின்பு மேக்கப் செய்து கொள்வது நல்லது.

கட்டுக்கதை:
சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் மட்டுமே போதுமானது.
உண்மை:
சன்ஸ்கிரீன் சிறந்ததுதான். ஆனால் அதுமட்டுமே சூரியனிடம் இருந்து பாதுகாப்பு தருவதற்கு ஏற்றதல்ல. சிறந்த சன்ஸ்கிரீனை பயன்படுத்திய பிறகு சன்கிளாஸ் அணிந்து கொள்ள வேண்டும்.
அதுபோல் அகலமான தொப்பி அணிந்து கொள்வதும், பருத்தி ஆடை உடுத்துவதும் அவசியமானது. சூரியனின் ஆதிக்கம் உச்சத்தில் இருக்கும் நேரமான காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.
கோடை கால மாதங்களில் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- வைட்டமின் ‘ஏ’ குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும்.
- சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல்லை கரைப்பதுடன் கல் உருவாவதையும் தடுக்கும்.
சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழல்கள், சிறுநீர்ப்பை இவைகளில் தாதுக்கள், உப்புக்கள் போன்றவை படிந்து கடினமாக உருவாவதைத் தான் பொதுவாக சிறுநீரகக் கற்கள் என்கின்றோம்.
சிறுநீரக கற்கள் கீழ்க்கண்ட வகைப்படும், அவை: 1. கால்சியம் ஆக்சலேட் வகைக் கற்கள், 2. யூரிக் அமிலக் கற்கள், 3. ஸ்டுரைட் கற்கள், 4. கால்சியம் பாஸ்பேட் வகைக்கற்கள், 5. சிஸ்டீன் கற்கள், 6. ஷேந்தீன் கற்கள்.

நோயின் அறிகுறிகள்
கடுமையான முதுகு வலி மற்றும் விலாப்பக்கம் வலி பரவுதல், அடி வயிற்றில் இருந்து வலி பரவி, அடித்தொடை பகுதி வரை காணப்படல், சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல், வாந்தி அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வு, வலியானது அலை அலையாக முதுகு, விலா, அடிவயிறு போன்ற இடங்களில் பரவுதல் மற்றும் சிறுநீர் அடர் நிறத்தில் வெளியேறுதல்.

தடுப்புமுறைகள்
விட்டமின் 'ஏ' குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும். ஆகவே, கேரட், பப்பாளி, முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பதாலும், சிறுநீரக கற்களை கரைப்பதாலும் பொட்டாசியம் சத்து நிறைந்த இளநீர், பீன்ஸ், கொய்யா, வாழைப்பழம், தர்பூசணி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல்லை கரைப்பதுடன் கல் உருவாவதையும் தடுக்கும். ஆகவே, எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவைகளை உணவில் சேர்க்க வேண்டும். கால்சியம், வைட்டமின் 'டி' சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.

இறைச்சி வகைகள், எலும்பு சூப், முட்டைக்கோஸ், காலிபிளவர், தக்காளி விதைகள், பீட்ரூட், உப்பில் ஊறிய பொருட்கள் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும். நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை தோல் நீக்கி சாறாக குடிக்கலாம். இவைகளின் தோலில் அதிகளவு ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட்டுகள் உள்ளதால், தோலை நீக்கி உணவில் சேர்க்க வேண்டும்.
வெண்பூசணி, கோவைக்காய், முள்ளங்கிக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு, பீன்ஸ் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பார்லி தண்ணீர் காலை, இரவு வேளைகளில் குடிப்பது நல்லது. தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிறுநீரை அடக்காமல் அவ்வப்போது கழிக்க வேண்டும். உடல் வெப்பத்தை நீக்க, வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்.
- ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சி குறைபாட்டால் குழந்தைகளுக்கு உண்டாகும் புற உலகச் சிந்தனை குறைபாடு ஆகும்.
- அது ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது.
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்
உலக ஆட்டிசம் குறைபாடு விழிப்புணர்வு தினம் இன்று (ஏப்ரல் 2) கடைபிடிக்கப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு முதல், ஐ.நா. சபை ஏப்ரல் 2 -ந் தேதியை உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக அறிவித்தபோது இருந்ததை விட தற்போது ஆட்டிசம் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிக புரிதல் ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரியாவை சேர்த்த லியோ கன்னர் என்பவர்தான் முதன் முதலாக ஆட்டிசம் என்பதை தெரியப்படுத்தியவர். இவர் 1943-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், ஆட்டிசம் பாதிப்பு கொண்ட குழந்தைகளின் பிரச்சினைகளை பற்றி கூறியிருந்தார்.
ஆட்டிசம் (Autism spectrum disorder) என்பது மூளை வளர்ச்சி குறைபாட்டால் குழந்தைகளுக்கு உண்டாகும் புற உலகச் சிந்தனை குறைபாடு ஆகும். மதியிறுக்கம் அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு என்றும் கூறலாம்.
இது ஒரு மூளை நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடாக இருந்தாலும், மனஅளவில் பல சிக்கல்களால் இக்குழந்தைகள் இடர்படுகிறார்கள். உலக அளவில் 68-க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது.
இந்தியாவில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் உள்ளிட்ட பிரபல விஞ்ஞானிகள் முதல் கலைஞர்கள் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் பலருக்கும் ஆட்டிசம் குறைபாடு இருந்துள்ளது.

ஆட்டிசம் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் என்ன?
குழந்தை பிறந்து மூன்று வயது நிறைவடைவதற்கு முன் இக்குறைபாடு ஏற்படும். இக்குறைபாடுடையக் குழந்தைகளின் உடலில் எந்த விதமான குறைபாடும் இருக்காது. அவர்களின் நடத்தையிலேயே குறைபாடுகள் காணப்படும்.
இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மற்றவர்களுடன் பேசும் மற்றும் பழகும் திறனில் வேறுபாடு இருக்கும். ஒரே மாதிரியான செயலைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள்.
தனது உணவுர்களை அழுகை, முனுமுனுத்தல், கூக்குரல்கள் மூலம் வெளிப்படுத்துதல் வாய்மொழியற்ற பிற உணர்வுகள் மூலம் வெளிப்படுத்துதல், இயந்திரக் குரலில் பேசுதல், சமூக தொடர்புகளில் பிரச்சினை மற்றும் மொழித் தொடர்பில் பிரச்சினை, கண்களைப் பார்த்து பேச முடியாதது போன்றவை ஆட்டிசத்துக்கான அறிகுறிகள்.
இதைதவிர்த்து ஆட்டிசத்தைக் கண்டறிய இதற்கென்று தனிப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் ஏதும் இல்லை. பெற்றோர், ஆசிரியர், உறவினர், குழந்தைகள் நலமருத்துவர், மூளை நரம்பியல் நிபுணர், மனநல மருத்துவர் போன்றவர்களே இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்து சொல்ல முடியும். நரம்பியல் தொடர்பான ஆட்டிசக் குறைபாடுகளை சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் என்ன குறைபாட்டினால் ஆட்டிசம் ஏற்பட்டது என்பதைக் கண்டறியலாம்.
இது ஒரு நோய் கிடையாது. குறைபாடு மட்டுமே. சாதாரண குழந்தைகளுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்பதை, கூடுதலாக இரண்டு மூன்று முறை சொல்லிக்கொடுக்கும்போது, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளும் அதைக் கற்றுக்கொள்வார்கள்.

ஆட்டிசம் குறைபாடு ஏற்பட காரணங்கள் என்ன?
ஆட்டிசம் வருவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் கிடையாது. மரபு ரீதியாக வரலாம். மதுப்பழக்கம், கருவில் குழந்தையை சுமக்கும்போது ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றாலும் ஆட்டிசம் குறைபாடு ஏற்படலாம்.
கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல் தைராய்டு பிரச்சினை உள்ள பெண்கள், வலிப்பு நோய்க்கு மாத்திரை எடுத்து கொள்ளும் பெண்கள், போலிக் அமிலம் குறைவாக இருக்கும் பெண்களுக்கும், ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆட்டிசம் குறைபாட்டுக்கான தீர்வு என்ன?
ஆட்டிசம் ஒரு நோய் அல்ல என்பதால் அதற்கான முழுமையான குணப்படுத்தும் முறை கிடையாது. மாறாக பயிற்சிகள் மற்றும் அதிக கவனம் செலுத்தி வளர்ப்பதே ஆட்டிசத்தின் பின்விளைவுகளை குறைப்பதற்கான வழிமுறைகள்
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மன இறுக்கத்தை புரிந்து கொண்டு அவர்களை பராமரிப்பு செய்வது நமது கடமை. சமூகத்தில் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர் சமூக அழுத்தங்களை பொருட்படுத்தாமல் தங்கள் குழந்தைகள் மேல் கவனம் செலுத்துதல் வேண்டும்.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் குறைபாட்டின் விரைவுத்தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். எனவே, அவர்களுக்கு உள்ள குறைபாடு என்ன? என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை மற்றும் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
அவர்களின் அதிகப்படியான துறுதுறுப்புத் தன்மையைக் குறைப்பதற்கான மாத்திரைகள் உள்ளன. அதேபோல் அவர்களுக்கென்று சில பயிற்சி முறைகளும் உள்ளன.
பயிற்சி முறைகள்:
ஆக்குபேஷனல் தெரபி: பல் தேய்த்தல், குளித்தல், சாப்பிடுதல், தூக்கம் போன்ற தினசரிப் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தப் பயிற்சிகள் தர வேண்டும். இவைகளைச் சிறு வயதிலேயே குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதன் மூலம் மற்றவர்களைப் போல் தாமாக இயங்க முடியும்.
பேச்சுப் பயிற்சி: மொழி மற்றும் பேச்சுப் பயிற்சிகளைச் சிறுவயதிலேயே தொடங்கிவிட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைக்குப் புரியும் விதமாக நிறையவே பேச வேண்டும்.
ஆட்டிசத்தில் பேச்சுப் பயிற்சியாளின் பங்கு: பயிற்சியின் மூலம் தொடர்புத் திறனை மேம்படுத்துதல், சரளமாக தடையின்றி பேச பயிற்சி அளித்தல், ஒரு வார்த்தை பேசுவதற்கு நாக்கு, மேல்வாய், தாடை மற்றும் உதடுக்கான தொடர்புகளை புரிய வைத்தல் (Aritculaction Skills), உடல் மொழியையும் முக பாவனையும் மேம்படுத்துதல், செய்யும் வேலைகளை குவிந்த கவனத்துடன் செய்யவைப்பது, சமூக தொடர்புகளை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும்.
உளவியல் சார்ந்த பயிற்சிகள்: குழந்தைகளுக்கு உடலளவில் மட்டுமல்லாமல், மனத்தளவிலும் நெகிழ்வுத்தன்மை, மற்றவர்களோடு பழகும்முறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
கல்விக்கான பயிற்சிகள்: ஐ.ஈ.பி முறை ஆட்டிசக் குழந்தைகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். அதாவது, கல்வித் திட்டத்தை, ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் திறன், அதை வெளிப்படுத்தும் திறன் உட்பட, பலவற்றை ஆராய்ந்து அதற்குத் தகுந்தாற்போல் வடிவமைத்துக் கொடுப்பதே ஐ.ஈ.பி ஆகும். இதற்கென்று சிறப்புப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சேர்த்துக் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும்.

பெற்றோரின் பங்கு
ஆட்டிச பாதிப்பு கொண்ட ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறுவிதமான சவால்களைச் சந்திக்கிறது என்பதால், பெற்றோரும் நிபுணர்களும் சேர்ந்து விவாதித்து, அந்தக் குழந்தைக்குச் சிறந்த, பலன்தரக்கூடிய சிகிச்சை எது என்று தீர்மானிக்கிறார்கள், அதனைத் தொடர்ந்து செயல்படுத்துகிறார்கள்.
இங்கே கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயம், ஒரு குழந்தைக்கு நல்ல பலனைத் தரும் ஒரு சிகிச்சை இன்னொரு குழந்தைக்குப் பலன் தராமல் இருக்கலாம், இதற்குக் காரணம் ஆட்டிசம் வெவ்வேறு குழந்தைகளை வெவ்வேறு விதமாகப் பாதிக்கிறது.
பள்ளியோ, பயிற்சி வகுப்புகளோ குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தையும் முழுமையாகக் கற்றுக் கொடுத்துவிட முடியாது. பெற்றோரின் பங்கே முதன்மையானது என்பதை, ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர்கள் உணரவேண்டும்.
என்னதான் ஆட்டிசத்திற்கு என்று மாத்திரைகள் பல இருந்தாலும் அன்பும், அரவணைப்புமே இதற்கான மருந்துகள். இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போதுதான், அவர்கள் நம்மை நெருங்கி வருவார்கள்.
எனவே, இவர்களோடு நாம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்; பூங்கா, கோயில், கடற்கரை, பொருட்காட்சி போன்ற வெளி இடங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும். நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல், யோகா, நடனம் போன்ற பயிற்சிகளை ஆட்டிசக் குழந்தைகளுக்கு அளிக்கும்போது அவர்களின் உடல் திறனை அதிகப்படுத்துவதுடன், தத்தம் வேலைகளைத் தாமே செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும் வளர்கிறது.
- எல்லா வகை பிஸ்கெட்டுகளிலும் சர்க்கரை அளவு அதிகமாகத் தான் இருக்கும்.
- நேரம் கெட்ட நேரத்தில் பசியை தூண்டிவிடும்.
அதிகாலையில் பசித்தால், அவசரத்துக்கு பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அதுவே பழக்கமாகிவிடக் கூடாது. சிலபேர் காலையில் காபியுடன் ஒன்று அல்லது இரண்டு பிஸ்கெட் சாப்பிடுவார்கள். பரவாயில்லை. ஆனால் சிலபேர் ஒரு பாக்கெட் பிஸ்கெட்டையே காலி பண்ணிவிடுவார்கள். அது மிகப்பெரிய தவறு.

பிஸ்கெட்டில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துப் பொருட்கள் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். அநேகமாக எல்லா வகை பிஸ்கெட்டுகளிலும் சர்க்கரை அளவு அதிகமாகத் தான் இருக்கும்.
உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும். தினமும் தொடர்ந்து பிஸ்கெட் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலை உண்டுபண்ணிவிடும். நேரம் கெட்ட நேரத்தில் பசியை தூண்டிவிடும்.
பிஸ்கெட்டில் அதிக கலோரி இருப்பதால் தினமும் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடையை கூட்டிவிடும். பிஸ்கெட்டில் 'ட்ரான்ஸ்ஃபேட்' என்று சொல்லக்கூடிய மாறுபட்ட கொழுப்பு இருக்கும். இந்த மாறுபட்ட கொழுப்பு தீய கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகமாக்கியும் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்தும்விடும்.

அதிக கலோரி, அதிக மாவுச்சத்து, அதிக கொழுப்பு, அதிக அளவில் சோடியம் உப்பு, அதிக சர்க்கரை ஆகியவை இருப்பதால் அன்றாடம் பிஸ்கெட் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன், அஜீரணம், மந்தம், மலச்சிக்கல், சில சமயங்களில் இதயக் கோளாறைக் கூட உண்டுபண்ணிவிடும்.
வைட்டமின் சத்து இல்லாத, சத்துப் பொருட்கள் இல்லாத, நார்ச்சத்து இல்லாத சில பிஸ்கெட்டுகளை தவிர்ப்பது நல்லது. ஆனால் பார்த்தவுடனே சாப்பிடத் தூண்டும் சில அழகழகான, கவர்ச்சியான, ருசியான பிஸ்கெட்டுகளை வேண்டாம் என்று யார் சொல்வார்கள்?
அனைத்து உலக மக்களும் விரும்பி சாப்பிடும் ஒரே உணவாகிய பிஸ்கெட்டை எப்பொழுதாவது சாப்பிடுங்கள். வழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம். இரவு நேரங்களில் பசிக்கும் போதும் சரி, ரத்த சர்க்கரை அளவு குறைந்துவிட்ட போதும் சரி பயணங்களின் போதும் சரி சாப்பிட உணவே கிடைக்காத இடத்தில் சிக்கி அவஸ்தைப்படும்போதும் சரி பிஸ்கெட் மாதிரி ஒரு சிறப்பான உணவு வேறெதுவும் இல்லை.






