என் மலர்
ஆரோக்கியம்
சண்டை போடுவதும், வாக்குவாதம் செய்வதும் காதலை நிச்சயமாக வளர்க்கும் என்றால் நம்புவீர்களா? ஆம். இது உண்மை என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
காதலர்கள் இடையே சண்டை நடப்பது சாதாரணம். சில நேரங்களில் சிறிய சண்டையானது மிகப் பெரிய பிரச்சனைகளை வழிவகுக்கும். சிலர் சண்டை போட்டுக்கொண்டாலும் சிறிது நேரத்தில் சமாதானம் ஆகிவிடுவார்கள். சிலர் வாரக்கணக்கில், மாசக்கணக்கில் கூட பேசாமல் இருப்பார்கள். அது காதலர்களுக்கு இடையேயான புரிதலை அடிப்படையாக கொண்டது. சண்டை போடுவதும், வாக்குவாதம் செய்வதும் காதலை நிச்சயமாக வளர்க்கும் என்றால் நம்புவீர்களா? ஆம். இது உண்மை என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரச்சனைகளை உடனுக்குடன் விவாதித்து சண்டை போட்டு முடிப்பவர்கள் மற்றவர்களைவிட 10 மடங்கு அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களாம். பிரச்சனைகளை அப்படியே விட்டுவிட்டு பேசாமல் இருப்பது தான் காதலர்கள் செய்யும் பெரிய தவறு. அப்போதைக்கு சண்டை வேண்டாம் எனத் தள்ளிப்போடுவது பிரச்சனையின் வீரியத்தை அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது.
காதலில் ஒவ்வொரு சூழலிலும் நமது உணர்வுகளின் மாறுபாடுதல்களை நாம் புரிந்துகொள்ளாமல் நமது துணை மீது பழிபோடுவது தான் காதலில் செய்யும் மிகப்பெரும் தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளை மட்டுமின்றி சில பழக்கவழக்கங்களும் ஜோடிகளுக்குள் சச்சரவுகளைக் கொண்டு வருமாம்.
காதல் உணர்வு குறைவாக உள்ளவர்களிடம், மனஅழுத்த உணர்வு அதிகமாக இருக்கும். அதிக மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள், தங்கள் மீதே காதல் இல்லாதவர்களாகவும், மற்றவர்கள் மீது பாசம் காட்ட தயங்குபவர்களாகவும் இருப்பார்கள். அவர்களிடம் சுயநலம் அதிகமாக இருக்கும். அவர்கள் காதலிக்கப்படாததற்கு அதுவே காரணமாக இருக்கிறதாம்.
எனினும் கோபத்தால் ஏற்படும் சிறு சண்டைகளால் ப்ரேக்அப் எனப்படும் நிரந்தர பிரிவுகள் கூட ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மாதிரியான சூழ்நிலையைத் தவிர்க்க இருவரும் சிறிது நாட்கள் பிரிந்து இருப்பது காதல் வாழ்க்கையை வளமாக வைத்துக் கொள்ளும். ஏனெனில் பிரிந்து இருக்கும் போது தான் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக தவறு யார் செய்தார்களோ, அதை பிரிந்திருக்கும் காலத்தில் உணர முடியும்.
மேலும் இந்த பிரிவு காலங்களில் இருவருக்கும் இடையில் காதலானது அதிகம் பெருக்கெடுக்கும். ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருக்கும். இதனால் கோபம், சண்டைகள் அனைத்தும் நீங்கி இருவரும் அமைதியான காதல் வாழ்க்கையை வாழலாம். காதல் நீண்ட கால உறவுக்கு வழிவகுக்கும். அதனால், மனம்விட்டு அனைத்தையும் பேசிவிடுவது காதலுக்கு நல்லது என்றே கூறப்படுகிறது.
பிரச்சனைகளை உடனுக்குடன் விவாதித்து சண்டை போட்டு முடிப்பவர்கள் மற்றவர்களைவிட 10 மடங்கு அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களாம். பிரச்சனைகளை அப்படியே விட்டுவிட்டு பேசாமல் இருப்பது தான் காதலர்கள் செய்யும் பெரிய தவறு. அப்போதைக்கு சண்டை வேண்டாம் எனத் தள்ளிப்போடுவது பிரச்சனையின் வீரியத்தை அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது.
காதலில் ஒவ்வொரு சூழலிலும் நமது உணர்வுகளின் மாறுபாடுதல்களை நாம் புரிந்துகொள்ளாமல் நமது துணை மீது பழிபோடுவது தான் காதலில் செய்யும் மிகப்பெரும் தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளை மட்டுமின்றி சில பழக்கவழக்கங்களும் ஜோடிகளுக்குள் சச்சரவுகளைக் கொண்டு வருமாம்.
காதல் உணர்வு குறைவாக உள்ளவர்களிடம், மனஅழுத்த உணர்வு அதிகமாக இருக்கும். அதிக மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள், தங்கள் மீதே காதல் இல்லாதவர்களாகவும், மற்றவர்கள் மீது பாசம் காட்ட தயங்குபவர்களாகவும் இருப்பார்கள். அவர்களிடம் சுயநலம் அதிகமாக இருக்கும். அவர்கள் காதலிக்கப்படாததற்கு அதுவே காரணமாக இருக்கிறதாம்.
எனினும் கோபத்தால் ஏற்படும் சிறு சண்டைகளால் ப்ரேக்அப் எனப்படும் நிரந்தர பிரிவுகள் கூட ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மாதிரியான சூழ்நிலையைத் தவிர்க்க இருவரும் சிறிது நாட்கள் பிரிந்து இருப்பது காதல் வாழ்க்கையை வளமாக வைத்துக் கொள்ளும். ஏனெனில் பிரிந்து இருக்கும் போது தான் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக தவறு யார் செய்தார்களோ, அதை பிரிந்திருக்கும் காலத்தில் உணர முடியும்.
மேலும் இந்த பிரிவு காலங்களில் இருவருக்கும் இடையில் காதலானது அதிகம் பெருக்கெடுக்கும். ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருக்கும். இதனால் கோபம், சண்டைகள் அனைத்தும் நீங்கி இருவரும் அமைதியான காதல் வாழ்க்கையை வாழலாம். காதல் நீண்ட கால உறவுக்கு வழிவகுக்கும். அதனால், மனம்விட்டு அனைத்தையும் பேசிவிடுவது காதலுக்கு நல்லது என்றே கூறப்படுகிறது.
கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சூப்பில் பல கீரைகளை சேர்ப்பதால், அதன் அனைத்து சத்துக்களும் முழுமையாக குழந்தைகளுக்கு கிடைக்கும்.
தேவையான பொருட்கள் :
பொடியாக நறுக்கிய முளைக்கீரை - ஒரு கைப்பிடி
பொடியாக நறுக்கிய சிறுகீரை - ஒரு கைப்பிடி
பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - ஒரு கைப்பிடி
பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி
சோள மாவு - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
வெண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
முதலில் சோள மாவை 250 மில்லி தண்ணீர் விட்டுக் கரைத்து கொள்ள வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முளைக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரையை நெய் விட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.
கீரை நன்கு வதங்கியதும் அதில் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் அதில் கரைத்து வைத்த சோள மாவை ஊற்றி கொதிக்கவிட்டு, வெண்ணெய் சேர்த்து இறக்கி பரிமாறவும்.
சத்தான மல்டி கீரை சூப் ரெடி.
பொடியாக நறுக்கிய முளைக்கீரை - ஒரு கைப்பிடி
பொடியாக நறுக்கிய சிறுகீரை - ஒரு கைப்பிடி
பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - ஒரு கைப்பிடி
பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி
சோள மாவு - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
வெண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
முதலில் சோள மாவை 250 மில்லி தண்ணீர் விட்டுக் கரைத்து கொள்ள வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முளைக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரையை நெய் விட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.
கீரை நன்கு வதங்கியதும் அதில் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் அதில் கரைத்து வைத்த சோள மாவை ஊற்றி கொதிக்கவிட்டு, வெண்ணெய் சேர்த்து இறக்கி பரிமாறவும்.
சத்தான மல்டி கீரை சூப் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த பயன்படுத்தப்படும் சில செல்போன் செயலிகள் குறித்து சைபர் புலனாய்வு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு மேலாண்மை மற்றும் பயன்பாட்டு தொழில்நுட்ப நிறுவனம் சார்பில், ‘சைபர்வெளியில் குழந்தைகளை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் ஆன்லைன் கருத்தரங்கு ஒன்று நடந்தது. இதில் டோரண்டோவில் உள்ள சைபர் புலனாய்வுப்பிரிவு தலைவர் கெயித் எலியட் உரையாற்றினார். அப்போது அவர் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த பயன்படுத்தப்படும் சில செல்போன் செயலிகள் குறித்து பட்டியலிட்டார்.
இதில் முதலாவதாக ‘ஐ.எம்.வி.யு.’ என்ற செயலியை அவர் சுட்டிக்காட்டினார். 3டி தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இந்த செயலி பாலியல் வக்கிர குணம் கொண்டவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதைப்போல ‘விஸ்பர்’ என்ற செயலி இளம்பருவத்தினர், பதின்ம வயதினர் தங்கள் ரகசியங்களை பகிரும் தளமாக உள்ளதாகவும், இதைப்போல ‘கிக்ஸ் ஆப்’ எனப்படும் தகவல் அனுப்பும் செயலி, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்பப்படுத்தும் பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதாகவும் எச்சரித்தார்.
இதைத்தவிர ‘திண்டர் டேட்டிங் செயலி’, ‘ஓகேகியுபிட’, ‘சாட்ஸ்பின்’ ஆகிய செல்போன் செயலிகளால் குழந்தைகளுக்கு ஆபத்து நேருவதாகவும், எனவே இவற்றை குழந்தைகள் பயன்படுத்தாமல் இருப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் எனவும் கெயித் எலியட் வலியுறுத்தினார்.
இதில் முதலாவதாக ‘ஐ.எம்.வி.யு.’ என்ற செயலியை அவர் சுட்டிக்காட்டினார். 3டி தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இந்த செயலி பாலியல் வக்கிர குணம் கொண்டவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதைப்போல ‘விஸ்பர்’ என்ற செயலி இளம்பருவத்தினர், பதின்ம வயதினர் தங்கள் ரகசியங்களை பகிரும் தளமாக உள்ளதாகவும், இதைப்போல ‘கிக்ஸ் ஆப்’ எனப்படும் தகவல் அனுப்பும் செயலி, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்பப்படுத்தும் பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதாகவும் எச்சரித்தார்.
இதைத்தவிர ‘திண்டர் டேட்டிங் செயலி’, ‘ஓகேகியுபிட’, ‘சாட்ஸ்பின்’ ஆகிய செல்போன் செயலிகளால் குழந்தைகளுக்கு ஆபத்து நேருவதாகவும், எனவே இவற்றை குழந்தைகள் பயன்படுத்தாமல் இருப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் எனவும் கெயித் எலியட் வலியுறுத்தினார்.
நம்மில் பலரும் சந்திக்கும் தலையாய பிரச்சினை தலை முடி உதிர்வுதான். இதை தீர்க்கவல்ல ஹேர்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வெங்காய ஹேர்பேக் தலைமுடி உதிர்வுப் பிரச்சினையை போக்குகிறது. நம்மில் பலரும் சந்திக்கும் தலையாய பிரச்சினை தலை முடி உதிர்வுதான். இதை தீர்க்க வெங்காய ஹேர்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை:
வெங்காயம்- 2
மயோனைஸ்- 3 ஸ்பூன்
தயிர்- 25 மில்லி
செய்முறை: வெங்காயத்தினை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்துடன் நீர் சேர்த்து மிக்சியில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் தயிர் மற்றும் மயோனைஸ் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவிட்டுப் பயன்படுத்தவும். இந்த வெங்காய ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினை தீர்வுக்கு வரும்.
தேவையானவை:
வெங்காயம்- 2
மயோனைஸ்- 3 ஸ்பூன்
தயிர்- 25 மில்லி
செய்முறை: வெங்காயத்தினை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்துடன் நீர் சேர்த்து மிக்சியில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் தயிர் மற்றும் மயோனைஸ் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவிட்டுப் பயன்படுத்தவும். இந்த வெங்காய ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினை தீர்வுக்கு வரும்.
மாத்திரை, மருந்துகள் சிலவற்றை உட்கொள்ளும்போது, சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும்போது, சில நேரங்களில் நோய்க்கு மருந்தாவதற்கு பதிலாக, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
ஆரோக்கியம் குறித்த விழிப்புஉணர்வு இன்று அதிகமாகிவிட்டது... உண்மை! உடல்நலம் குறித்த அக்கறையோடு பார்த்துப் பார்த்து காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து, அளவு பார்த்துச் சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களேகூட ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள். அது, மாத்திரை, மருந்துகள் சாப்பிடும் தருணம். `இவற்றில் சிலவற்றை உட்கொள்ளும்போது, சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும்போது, மாத்திரை, மருந்தின் தன்மை பாதிக்கப்படும்; அவற்றின் பணி தடைப்படும்; சில நேரங்களில் நோய்க்கு மருந்தாவதற்கு பதிலாக, ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.
அதேபோல காபி, குளிர்ப்பானங்களைக்கூட மாத்திரை சாப்பிடும் நேரத்தில் அருந்தக் கூடாது. அதனால், மாத்திரை பயனற்றதாகிவிடும்; சில நேரங்களில் பக்கவிளைவுகள் ஏற்படும்’ என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி, எந்தெந்த உணவுகளுடன் எந்தெந்த மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என்பது குறித்து பொதுநல மருத்துவர் எம்.அருணாச்சலம் விவரிக்கிறார்.
பாக்டீரியா தொற்றுக்காக உட்கொள்ளும் பென்சிலின் (Penicillin) டெட்ராசைக்லின் (Tetracycline), சிப்ரோஃப்ளாக்ஸின் (Ciprofloxacin) போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளுடன், பால் மற்றும் பால் பொருள்களைச் சாப்பிடக் கூடாது. இவை மருந்து செயல்படும் தன்மையை குறைத்துவிடக்கூடியவை.
தலைவலி, தசைபிடிப்பு, தசை வீக்கத்துக்காக உட்கொள்ளும் இபுப்ரோஃபென் (Ibuprofen) மருந்தை உட்கொள்ளும்போது, கண்டிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்ப்பானங்களைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் அமிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மருந்தை உடல் உறிஞ்சுக்கொள்ளும் தன்மையைப் பாதிக்கும். மேலும், நச்சுச்தன்மை அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தையும் பாதிக்கக்கூடும்.
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி (Broncities) மற்றும் நுரையீரல் பிரச்சனைக்கு தியோபைலின் (Theophylline), அல்புட்ரால் (Albuterol) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, குளிர்ப்பானங்களை குடிக்கக் கூடாது. இவற்றில் உள்ள 'காஃபின்' நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது.
சிறுநீரகக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் கேட்டோப்ரில் (Captopril), எனாலாப்ரில் (Enalapril), ராமிப்ரில் (Ramipril) போன்ற மாத்திரைகளுடன் வாழைப்பழம், சோயா, தக்காளி, கீரைகளைச் சாப்பிடக்கூடாது. இவற்றில் பொட்டாசியம் அதிகம் என்பதால், ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகளை உட்கொள்வது நல்லது.
ஐசோசோபைடு டினிட்ரேட் ( Isosorbide dinitrate), நைட்ரோகிளிசரின் (Nitroglycerine) போன்ற மாத்திரைகளை, கார்டியாக் அரெஸ்ட், இதயத் துடிப்பில் பாதிப்பு போன்ற இதயநோய் பிரச்னைகளுக்காக கொடுக்கப்படுபவை. 'ஆன்டி ஆர்த்திமிக் மருந்து' என்னும் இந்த வகை மருந்துகளை மது அருந்திய பிறகு உட்கொண்டால், குறைந்த ரத்த அழுத்த நிலையை உருவாகும். இந்த மாத்திரைகள் மட்டுமல்ல எந்த மாத்திரையை உட்கொண்டாலும் மது அருந்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து உணவுகளையும் சாப்பிட்டிருந்தாலும், மருந்தின் செயல்படும் தன்மையைக் குறைக்கும். எனவே, நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ சாப்பிடலாம்.
கொழுப்பைக் குறைப்பதற்கு உட்கொள்ளும் ஆட்ரோவாஸ்டேட்டின்,(Atorvastatin) ஃப்ளூவாஸ்டட்டின் (Fluvastatin) லோவஸ்டட்டின் (Lovastatin), சிம்வஸ்ட்டட்டின் (Simvastatin), ரோசுவஸ்டட்டின் (Rosuvastatin), ப்ராவஸ்டாட்டின் (Pravastatin) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, அவற்றுடன் திராட்சைப்பழ ஜூஸ் சாப்பிடக் கூடாது; சிட்ரஸ் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த மருந்துகளை உட்கொள்ளும்போதும் மருத்துவர் ஆலோசனை அவசியம்.
தைராய்டு பிரச்சனைகளுக்காக உட்கொள்ளும் லிவோதைராக்ஸின் (Levothyroxine) போன்ற உணவுகளுடன் சோயா மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால், உடல் மருந்தை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையை பாதிக்கும்.
ரத்தம் உறைதல் போன்ற ரத்தம் தொடர்பான நோய்களுக்கு வார்ஃபாரின் (Warfarin) மருந்துகளை உட்கொள்ளும்போது, பூண்டு, இஞ்சி மற்றும் சில மசாலாப் பொருள்கள் (சிவப்பு மிளகு, பட்டை, மஞ்சள்) சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணக் கூடாது. அதேபோல வைட்டமின் கே சத்துள்ள கீரை, முட்டைக்கோஸ் மற்றும் புரோக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளக் கூடாது. இவை மருந்தின் வீரியத்தை குறைத்துவிடும்.
பொதுவாக நோய்க்காக மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளும்போது, சாப்பிடக் கூடாதவை...
* பழச்சாறு, சோடா கலந்த பானம், காஃபின் கலந்த குளிர்பானத்துடன் மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்த்து, தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
* மருந்து, மாத்திரை உட்கொள்ளும்போது, மது அல்லது புகை பிடித்தல் கூடவே கூடாது.
* மருந்தை, உணவு சாப்பிடும் முன்னர் சாப்பிட வேண்டுமா அல்லது உணவுக்கு பிறகு சாப்பிட வேண்டுமா என்பது குறித்த மருத்துவர்களின் அறிவுரைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
அதேபோல காபி, குளிர்ப்பானங்களைக்கூட மாத்திரை சாப்பிடும் நேரத்தில் அருந்தக் கூடாது. அதனால், மாத்திரை பயனற்றதாகிவிடும்; சில நேரங்களில் பக்கவிளைவுகள் ஏற்படும்’ என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி, எந்தெந்த உணவுகளுடன் எந்தெந்த மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என்பது குறித்து பொதுநல மருத்துவர் எம்.அருணாச்சலம் விவரிக்கிறார்.
பாக்டீரியா தொற்றுக்காக உட்கொள்ளும் பென்சிலின் (Penicillin) டெட்ராசைக்லின் (Tetracycline), சிப்ரோஃப்ளாக்ஸின் (Ciprofloxacin) போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளுடன், பால் மற்றும் பால் பொருள்களைச் சாப்பிடக் கூடாது. இவை மருந்து செயல்படும் தன்மையை குறைத்துவிடக்கூடியவை.
தலைவலி, தசைபிடிப்பு, தசை வீக்கத்துக்காக உட்கொள்ளும் இபுப்ரோஃபென் (Ibuprofen) மருந்தை உட்கொள்ளும்போது, கண்டிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்ப்பானங்களைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் அமிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மருந்தை உடல் உறிஞ்சுக்கொள்ளும் தன்மையைப் பாதிக்கும். மேலும், நச்சுச்தன்மை அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தையும் பாதிக்கக்கூடும்.
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி (Broncities) மற்றும் நுரையீரல் பிரச்சனைக்கு தியோபைலின் (Theophylline), அல்புட்ரால் (Albuterol) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, குளிர்ப்பானங்களை குடிக்கக் கூடாது. இவற்றில் உள்ள 'காஃபின்' நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது.
சிறுநீரகக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் கேட்டோப்ரில் (Captopril), எனாலாப்ரில் (Enalapril), ராமிப்ரில் (Ramipril) போன்ற மாத்திரைகளுடன் வாழைப்பழம், சோயா, தக்காளி, கீரைகளைச் சாப்பிடக்கூடாது. இவற்றில் பொட்டாசியம் அதிகம் என்பதால், ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகளை உட்கொள்வது நல்லது.
ஐசோசோபைடு டினிட்ரேட் ( Isosorbide dinitrate), நைட்ரோகிளிசரின் (Nitroglycerine) போன்ற மாத்திரைகளை, கார்டியாக் அரெஸ்ட், இதயத் துடிப்பில் பாதிப்பு போன்ற இதயநோய் பிரச்னைகளுக்காக கொடுக்கப்படுபவை. 'ஆன்டி ஆர்த்திமிக் மருந்து' என்னும் இந்த வகை மருந்துகளை மது அருந்திய பிறகு உட்கொண்டால், குறைந்த ரத்த அழுத்த நிலையை உருவாகும். இந்த மாத்திரைகள் மட்டுமல்ல எந்த மாத்திரையை உட்கொண்டாலும் மது அருந்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து உணவுகளையும் சாப்பிட்டிருந்தாலும், மருந்தின் செயல்படும் தன்மையைக் குறைக்கும். எனவே, நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ சாப்பிடலாம்.
கொழுப்பைக் குறைப்பதற்கு உட்கொள்ளும் ஆட்ரோவாஸ்டேட்டின்,(Atorvastatin) ஃப்ளூவாஸ்டட்டின் (Fluvastatin) லோவஸ்டட்டின் (Lovastatin), சிம்வஸ்ட்டட்டின் (Simvastatin), ரோசுவஸ்டட்டின் (Rosuvastatin), ப்ராவஸ்டாட்டின் (Pravastatin) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, அவற்றுடன் திராட்சைப்பழ ஜூஸ் சாப்பிடக் கூடாது; சிட்ரஸ் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த மருந்துகளை உட்கொள்ளும்போதும் மருத்துவர் ஆலோசனை அவசியம்.
தைராய்டு பிரச்சனைகளுக்காக உட்கொள்ளும் லிவோதைராக்ஸின் (Levothyroxine) போன்ற உணவுகளுடன் சோயா மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால், உடல் மருந்தை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையை பாதிக்கும்.
ரத்தம் உறைதல் போன்ற ரத்தம் தொடர்பான நோய்களுக்கு வார்ஃபாரின் (Warfarin) மருந்துகளை உட்கொள்ளும்போது, பூண்டு, இஞ்சி மற்றும் சில மசாலாப் பொருள்கள் (சிவப்பு மிளகு, பட்டை, மஞ்சள்) சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணக் கூடாது. அதேபோல வைட்டமின் கே சத்துள்ள கீரை, முட்டைக்கோஸ் மற்றும் புரோக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளக் கூடாது. இவை மருந்தின் வீரியத்தை குறைத்துவிடும்.
பொதுவாக நோய்க்காக மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளும்போது, சாப்பிடக் கூடாதவை...
* பழச்சாறு, சோடா கலந்த பானம், காஃபின் கலந்த குளிர்பானத்துடன் மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்த்து, தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
* மருந்து, மாத்திரை உட்கொள்ளும்போது, மது அல்லது புகை பிடித்தல் கூடவே கூடாது.
* மருந்தை, உணவு சாப்பிடும் முன்னர் சாப்பிட வேண்டுமா அல்லது உணவுக்கு பிறகு சாப்பிட வேண்டுமா என்பது குறித்த மருத்துவர்களின் அறிவுரைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
நமது உடலில் கொலாஜென் புரதம் குறைவதால் இளவயதில் முதிர் தோற்றம், சருமச் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் சருமத்தில் ஏற்படலாம். இதை தடுக்கும் உணவுகளை இங்கே பார்க்கலாம்.
கொலாஜென் என்பது, நமது உடலில் தசைகள், எலும்பு, தோல், ரத்தக்குழாய்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றில் உள்ள ஒருவகை புரதம். இது எலும்பு, தோல் போன்றவற்றை இறுக்கமாகவும் சக்தியுடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் மூட்டுகளுக்கு ஒட்டும் பசைத்தன்மையைத் தருகிறது. ஆனால், நமக்கு வயதாகும்போது இந்தப் புரதத்தின் உற்பத்தி குறையும்.
அதனால்தான் வயதானவர்களுக்கு சருமத்தில் சுருக்கம் ஏற்படுதல், தசை தளர்ந்து போதல், மூட்டுகளில் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும், இனிப்பு அதிகம் உண்ணுதல், புகைபிடித்தல், வெயிலில் அதிக நேரம் சுற்றுதல் போன்ற பழக்கங்களாலும் நமது உடலில் கொலாஜென் உற்பத்தி குறையும்.
கொலாஜென் உற்பத்திக்கு உதவும் உணவுப்பொருட்கள்:- முட்டைக்கோஸ், சிவப்பு கோஸ், அவகேடோ பழம், மீன், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு முள்ளங்கி, பீட்ரூட், கேரட், முளைகட்டிய பயறு வகைகள், பூண்டு, சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆளி விதை, கீரை வகைகள், சோயா பால், சோயா உணவுகள்
கொலாஜென் குறைவால் ஏற்படும் பிரச்சினைகள்:- இளவயதில் முதிர் தோற்றம், வயிற்று உபாதைகள், அஜீரணம், அடிக்கடி மலம் கழித்தல், உணவு உண்ட உடனே மலம் கழித்தல், வளர்சிதை மாற்றம் குறைதல், சோர்வு, சருமச் சுருக்கம், மூட்டுவலி.
ஒருநாளைக்கு எவ்வளவு கொலாஜென் தேவை? இந்தப் புரதத்தின் ஒரு நாளையத் தேவை சரியாகப் பரிந்துரைக்கப்படவில்லை. எனினும் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்தும் இந்தப் புரதம் நிறைந்த உணவுப் பொருட்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.
அதனால்தான் வயதானவர்களுக்கு சருமத்தில் சுருக்கம் ஏற்படுதல், தசை தளர்ந்து போதல், மூட்டுகளில் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும், இனிப்பு அதிகம் உண்ணுதல், புகைபிடித்தல், வெயிலில் அதிக நேரம் சுற்றுதல் போன்ற பழக்கங்களாலும் நமது உடலில் கொலாஜென் உற்பத்தி குறையும்.
கொலாஜென் உற்பத்திக்கு உதவும் உணவுப்பொருட்கள்:- முட்டைக்கோஸ், சிவப்பு கோஸ், அவகேடோ பழம், மீன், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு முள்ளங்கி, பீட்ரூட், கேரட், முளைகட்டிய பயறு வகைகள், பூண்டு, சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆளி விதை, கீரை வகைகள், சோயா பால், சோயா உணவுகள்
கொலாஜென் குறைவால் ஏற்படும் பிரச்சினைகள்:- இளவயதில் முதிர் தோற்றம், வயிற்று உபாதைகள், அஜீரணம், அடிக்கடி மலம் கழித்தல், உணவு உண்ட உடனே மலம் கழித்தல், வளர்சிதை மாற்றம் குறைதல், சோர்வு, சருமச் சுருக்கம், மூட்டுவலி.
ஒருநாளைக்கு எவ்வளவு கொலாஜென் தேவை? இந்தப் புரதத்தின் ஒரு நாளையத் தேவை சரியாகப் பரிந்துரைக்கப்படவில்லை. எனினும் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்தும் இந்தப் புரதம் நிறைந்த உணவுப் பொருட்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.
விவாகரத்துப் பெற்றுப் பிரிந்த அல்லது துணையை இழந்த கணவன் அல்லது மனைவி, தமது குழந்தைகளை வளர்ப்பது எளிதான காரியமல்ல. அதிலும் தனியாக பெண் குழந்தைகளை வளர்க்கும் தந்தைகளின் தவிப்புகளை தனிப் பட்டியலே போடலாம்.
விவாகரத்துப் பெற்றுப் பிரிந்த அல்லது துணையை இழந்த கணவன் அல்லது மனைவி, தமது குழந்தைகளை வளர்ப்பது எளிதான காரியமல்ல. அதிலும் தனியாக பெண் குழந்தைகளை வளர்க்கும் தந்தைகளின் தவிப்புகளை தனிப் பட்டியலே போடலாம்.
அதிகம் விவாதிக்கப்படாத ஒற்றைப் பெற்றோரின் கஷ்டங்கள் ஒரு மவுன சோகமாகவே நீடித்து வருகின்றன.
தனியாக பெண் குழந்தையை வளர்ப்பதற்குத் தடுமாறும் தந்தையர், தாங்கள் அன்றாடம் சந்திக்கும் சங்கடங்கள் அதிகம் என்கின்றனர். குறிப்பாக, ஒரு பெண் குழந்தை, சிறுமி என்ற நிலையில் இருந்து பெண் என்ற நிலைக்கு மாறும் பருவம். அந்தப் பருவத்து விஷயங்களை அவர்களுடன் பேசுவதற்கும், அவர்களுடன் போதுமான நேரத்தைக் கழிப்பதற்கும் தாங்கள் தடுமாறுவதாக ஒற்றைப் பெற்றோராக உள்ள தந்தையர் கூறுகின்றனர். இதற்கு உதாரணம், மனைவியைப் பிரிந்து 14 ஆண்டுகாலமாக தனது மகள், மகனை தனியாக வளர்ந்துவரும் ஷியாம்குமார். கட்டிடக் கலை நிபுணரான இவர், ‘‘எனது மகள் ஒன்பதாம் வகுப்பும், மகன் ஏழாம் வகுப்பு படிக்கின்றனர். அவர்கள் சிறுகுழந்தைகளாக இருந்தபோதே நானும் என் மனைவியும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்துவிட்டோம். அதன்பிறகு குழந்தைகளை நான் மட்டும்தான் வளர்த்து வருகிறேன். எனது பெற்றோர் கொஞ்சம் உதவி செய்கின்றனர்’’ என்கிறார்.
ஷியாம்குமார் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்துவதால், அவரால் தனது குழந்தைகளுக்கு ஏற்ப பணி நேரத்தை மாற்றிக்கொள்ள முடிகிறது. ‘‘நான் எப்போதுமே வீட்டுக்கு சீக்கிரமாகத் திரும்பி குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்’’ என்கிறார். ஆனாலும் அவருக்குப் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை.
அவர் மகள் ‘பெரியவளாகி’ விட்டாள். ‘‘ஆரம்பத்தில், மாதவிலக்கு போன்ற விஷயங்களை அவளிடம் பேசுவது கடினமாக இருந்தது. அந்த விஷயத்தில் எங்கம்மாவும், எனது சக பெண் ஊழியர்களும்தான் உதவினர். தற்போது நானும் இதுகுறித்து அவளிடம் படிப்படியாகப் பேச ஆரம்பித்துவிட்டேன்.’’
தற்போது இவர்களின் தந்தை - மகள் உறவு, உலகில் எந்த விஷயத்தைப் பற்றியும் பேசும் அளவுக்கு அழகாக மலர்ந்திருக்கிறது.
‘‘மகள் எந்த விஷயம் பற்றியும் என்னிடம் பேசுவதற்கும் தயங்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். தற்போது மாதந்தோறும் நான்தான் அவளுக்கு சானிடரி நாப்கின் வாங்கிக் கொடுக்கிறேன். முதலில், நான் அதை வித்தியாசமாக நினைக்கக்கூடாது அல்லவா?’’ என்கிறார் ஷியாம்.
மகளுக்காக சின்னச் சின்ன அழகுசாதனப் பொருட்களைக்கூட தேடித் தேடி வாங்குவதில் ஆனந்தப்படுகிறார், ஷியாம். மகளைப் பற்றிப் பேசும்போதே அவர் முகம் பூரிக்கிறது.
‘‘அவளை முதன்முதலில் சலூனுக்கு முடி வெட்ட கூட்டிப்போனது ஞாபகம் இருக்கிறது. அவள் ரொம்பச் சுட்டி. சலூன் இருக்கையில் அவளை அமரவைப்பதற்கே மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. சரி, இனி நாம் அவளுக்கு வீட்டிலேயே முடிவெட்டி விடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். யூடியூப் பார்த்துத்தான் முடிவெட்டக் கற்றுக்கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக, நன்றாகவே முடிவெட்ட ஆரம்பித்துவிட்டேன். மகளுக்கு எட்டு வயதாகும் வரை நான்தான் முடிவெட்டி விட்டேன்’’ என்று பழைய நினைவுகளை மீட்டெடுக்கிறார், ஷியாம்.
தனியாக குழந்தைகளை வளர்க்கும் மற்றொரு நபர், சங்கர். அவர் கூறுகையில்,
‘‘என்னை அறிந்த பலரும் சொல்வது, நான் குழந்தை வளர்க்கும்விதம் வித்தியாசமாக இருக்கிறது என்பது. நான் என் மகளை குழந்தை போலக் கொஞ்ச மாட்டேன், அதேநேரம் அவளது அறிவைச் சீண்டவும் மாட்டேன்’’ என்கிறார்.
குழந்தை வளர்ப்பில் முக்கியமான விஷயம், நேர்மை என்பது சங்கரின் கருத்து. குழந்தைகளிடம் தான் ஒருபோதும் பொய் சொல்வதில்லை என்பதுடன், அவர்களையும் எதையும் மறைக்காமல் சொல்லும்படி ஊக்குவிப்பதாகக் கூறுகிறார்.
‘‘எனது இந்தப் பழக்கம், அப்பாவிடம் எதையும் மனந்திறந்து பேசலாம் என்ற தைரியத்தை என் மகளுக்குத் தந்திருக்கிறது’’ என்கிறார்.
‘‘என் மகள் சாதனாவுக்கு ஒன்பது வயதாகிறது. ரொம்பப் புத்திசாலி. விண்வெளி விஷயங்கள் தொடங்கி, சுற்றுச்சூழல் மாசுபாடு வரை எல்லாவற்றைப் பற்றியும் நாங்கள் பேசுவோம். ஏன், சிலநேரங்களில் சில தத்துவங்கள் பற்றிக்கூட நாங்கள் விவாதிப்போம்’’ - சங்கரின் குரலில் ஒரு தந்தையின் பெருமிதம் தெரிகிறது.
இவர் தனது ஒரே மகளுடன் சமீபத்தில் புதுவீட்டுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். அப்போது, சாதனா தனது அறையைக் காலி செய்தபோது, தனக்குத் தேவையில்லை என்று பல பொருட்களை அவளாகவே ஒதுக்கிவிட்டாளாம்.
‘‘நான் அதுபற்றி அவளிடம் எதுவும் சொல்லவில்லை. அவளாகவே முடிவெடுத்துச் செயல்பட்டாள். அப்போதுதான், நாம் நமது குழந்தைகளுக்குப் பலவற்றைப் போதிக்க முயல்கிறோம், ஆனால் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என உணர்ந்தேன்’’ - மனப்பூர்வமாகச் சொல்கிறார், சங்கர்.
மனோவியல் மருத்துவரான ஸ்ரீதேவி, ‘‘தனியாக பெண் குழந்தையை வளர்க்கும் தந்தையும் அப்பெண் குழந்தையும் மனந்திறந்து பேசத் தயங்கும் இடங்கள் இருக்கின்றன. இயல்பாகவே, பெண் குழந்தைகள் தங்கள் உடம்பில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை தாயிடம்தான் எளிதாகப் பகிர்ந்துகொள்வார்கள். இயல்பாக, சரளமாகப் பேசுவதும், உறவாடுவதும், தந்தை- மகள் உறவு பரஸ்பர புரிதலுடன், வலுவாக வளர உதவும். தனியாக குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை வளர்க்கும் தந்தையர், அதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஒரு நிபுணரின் ஆலோசனை தேவை என்றால், அதைப் பெறத் தயங்கக் கூடாது. காரணம், தந்தைகளால் பெண் குழந்தைகளின் சில பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்’’ என்று எடுத்துரைக்கிறார்.
முதலில் தந்தை... அப்புறம் தோழன்
தாயின்றிக் குழந்தைகளை வளர்க்கிறோம் என்று ரொம்ப செல்லம் கொடுக்கக் கூடாது, தோழன் போல நடக்கிறேன் என்று ஓவராக போகக்கூடாது என்று சங்கர் கூறுகிறார். ‘‘நாம் முதலில் அவர்களின் பெற்றோர் என்பதை உணர்த்த வேண்டும். கண்டிப்பாக இருக்க வேண்டிய விஷயங்களில் நிச்சயம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது, சில நேரங்களில் நாமே வியக்கும்படி அவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்துவார்கள்’’ என்கிறார். ஆண், பெண் குழந்தைகள் இடையே பாகுபாடு கூடாது என்பது ஷியாம்குமார் கருத்து. ‘‘நான் என் மகனையும் மகளையும் ஒன்றுபோல நடத்துவதில் கவனமாக இருக்கிறேன். நாங்கள் ஒன்றாக கால்பந்து ஆடுவோம், நீச்சல்குளத்துக்குச் செல்வோம், புதிர் விளையாட்டுகள் விளையாடுவோம்’’ என்கிறார்.
அதிகம் விவாதிக்கப்படாத ஒற்றைப் பெற்றோரின் கஷ்டங்கள் ஒரு மவுன சோகமாகவே நீடித்து வருகின்றன.
தனியாக பெண் குழந்தையை வளர்ப்பதற்குத் தடுமாறும் தந்தையர், தாங்கள் அன்றாடம் சந்திக்கும் சங்கடங்கள் அதிகம் என்கின்றனர். குறிப்பாக, ஒரு பெண் குழந்தை, சிறுமி என்ற நிலையில் இருந்து பெண் என்ற நிலைக்கு மாறும் பருவம். அந்தப் பருவத்து விஷயங்களை அவர்களுடன் பேசுவதற்கும், அவர்களுடன் போதுமான நேரத்தைக் கழிப்பதற்கும் தாங்கள் தடுமாறுவதாக ஒற்றைப் பெற்றோராக உள்ள தந்தையர் கூறுகின்றனர். இதற்கு உதாரணம், மனைவியைப் பிரிந்து 14 ஆண்டுகாலமாக தனது மகள், மகனை தனியாக வளர்ந்துவரும் ஷியாம்குமார். கட்டிடக் கலை நிபுணரான இவர், ‘‘எனது மகள் ஒன்பதாம் வகுப்பும், மகன் ஏழாம் வகுப்பு படிக்கின்றனர். அவர்கள் சிறுகுழந்தைகளாக இருந்தபோதே நானும் என் மனைவியும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்துவிட்டோம். அதன்பிறகு குழந்தைகளை நான் மட்டும்தான் வளர்த்து வருகிறேன். எனது பெற்றோர் கொஞ்சம் உதவி செய்கின்றனர்’’ என்கிறார்.
ஷியாம்குமார் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்துவதால், அவரால் தனது குழந்தைகளுக்கு ஏற்ப பணி நேரத்தை மாற்றிக்கொள்ள முடிகிறது. ‘‘நான் எப்போதுமே வீட்டுக்கு சீக்கிரமாகத் திரும்பி குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்’’ என்கிறார். ஆனாலும் அவருக்குப் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை.
அவர் மகள் ‘பெரியவளாகி’ விட்டாள். ‘‘ஆரம்பத்தில், மாதவிலக்கு போன்ற விஷயங்களை அவளிடம் பேசுவது கடினமாக இருந்தது. அந்த விஷயத்தில் எங்கம்மாவும், எனது சக பெண் ஊழியர்களும்தான் உதவினர். தற்போது நானும் இதுகுறித்து அவளிடம் படிப்படியாகப் பேச ஆரம்பித்துவிட்டேன்.’’
தற்போது இவர்களின் தந்தை - மகள் உறவு, உலகில் எந்த விஷயத்தைப் பற்றியும் பேசும் அளவுக்கு அழகாக மலர்ந்திருக்கிறது.
‘‘மகள் எந்த விஷயம் பற்றியும் என்னிடம் பேசுவதற்கும் தயங்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். தற்போது மாதந்தோறும் நான்தான் அவளுக்கு சானிடரி நாப்கின் வாங்கிக் கொடுக்கிறேன். முதலில், நான் அதை வித்தியாசமாக நினைக்கக்கூடாது அல்லவா?’’ என்கிறார் ஷியாம்.
மகளுக்காக சின்னச் சின்ன அழகுசாதனப் பொருட்களைக்கூட தேடித் தேடி வாங்குவதில் ஆனந்தப்படுகிறார், ஷியாம். மகளைப் பற்றிப் பேசும்போதே அவர் முகம் பூரிக்கிறது.
‘‘அவளை முதன்முதலில் சலூனுக்கு முடி வெட்ட கூட்டிப்போனது ஞாபகம் இருக்கிறது. அவள் ரொம்பச் சுட்டி. சலூன் இருக்கையில் அவளை அமரவைப்பதற்கே மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. சரி, இனி நாம் அவளுக்கு வீட்டிலேயே முடிவெட்டி விடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். யூடியூப் பார்த்துத்தான் முடிவெட்டக் கற்றுக்கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக, நன்றாகவே முடிவெட்ட ஆரம்பித்துவிட்டேன். மகளுக்கு எட்டு வயதாகும் வரை நான்தான் முடிவெட்டி விட்டேன்’’ என்று பழைய நினைவுகளை மீட்டெடுக்கிறார், ஷியாம்.
தனியாக குழந்தைகளை வளர்க்கும் மற்றொரு நபர், சங்கர். அவர் கூறுகையில்,
‘‘என்னை அறிந்த பலரும் சொல்வது, நான் குழந்தை வளர்க்கும்விதம் வித்தியாசமாக இருக்கிறது என்பது. நான் என் மகளை குழந்தை போலக் கொஞ்ச மாட்டேன், அதேநேரம் அவளது அறிவைச் சீண்டவும் மாட்டேன்’’ என்கிறார்.
குழந்தை வளர்ப்பில் முக்கியமான விஷயம், நேர்மை என்பது சங்கரின் கருத்து. குழந்தைகளிடம் தான் ஒருபோதும் பொய் சொல்வதில்லை என்பதுடன், அவர்களையும் எதையும் மறைக்காமல் சொல்லும்படி ஊக்குவிப்பதாகக் கூறுகிறார்.
‘‘எனது இந்தப் பழக்கம், அப்பாவிடம் எதையும் மனந்திறந்து பேசலாம் என்ற தைரியத்தை என் மகளுக்குத் தந்திருக்கிறது’’ என்கிறார்.
‘‘என் மகள் சாதனாவுக்கு ஒன்பது வயதாகிறது. ரொம்பப் புத்திசாலி. விண்வெளி விஷயங்கள் தொடங்கி, சுற்றுச்சூழல் மாசுபாடு வரை எல்லாவற்றைப் பற்றியும் நாங்கள் பேசுவோம். ஏன், சிலநேரங்களில் சில தத்துவங்கள் பற்றிக்கூட நாங்கள் விவாதிப்போம்’’ - சங்கரின் குரலில் ஒரு தந்தையின் பெருமிதம் தெரிகிறது.
இவர் தனது ஒரே மகளுடன் சமீபத்தில் புதுவீட்டுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். அப்போது, சாதனா தனது அறையைக் காலி செய்தபோது, தனக்குத் தேவையில்லை என்று பல பொருட்களை அவளாகவே ஒதுக்கிவிட்டாளாம்.
‘‘நான் அதுபற்றி அவளிடம் எதுவும் சொல்லவில்லை. அவளாகவே முடிவெடுத்துச் செயல்பட்டாள். அப்போதுதான், நாம் நமது குழந்தைகளுக்குப் பலவற்றைப் போதிக்க முயல்கிறோம், ஆனால் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என உணர்ந்தேன்’’ - மனப்பூர்வமாகச் சொல்கிறார், சங்கர்.
மனோவியல் மருத்துவரான ஸ்ரீதேவி, ‘‘தனியாக பெண் குழந்தையை வளர்க்கும் தந்தையும் அப்பெண் குழந்தையும் மனந்திறந்து பேசத் தயங்கும் இடங்கள் இருக்கின்றன. இயல்பாகவே, பெண் குழந்தைகள் தங்கள் உடம்பில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை தாயிடம்தான் எளிதாகப் பகிர்ந்துகொள்வார்கள். இயல்பாக, சரளமாகப் பேசுவதும், உறவாடுவதும், தந்தை- மகள் உறவு பரஸ்பர புரிதலுடன், வலுவாக வளர உதவும். தனியாக குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை வளர்க்கும் தந்தையர், அதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஒரு நிபுணரின் ஆலோசனை தேவை என்றால், அதைப் பெறத் தயங்கக் கூடாது. காரணம், தந்தைகளால் பெண் குழந்தைகளின் சில பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்’’ என்று எடுத்துரைக்கிறார்.
முதலில் தந்தை... அப்புறம் தோழன்
தாயின்றிக் குழந்தைகளை வளர்க்கிறோம் என்று ரொம்ப செல்லம் கொடுக்கக் கூடாது, தோழன் போல நடக்கிறேன் என்று ஓவராக போகக்கூடாது என்று சங்கர் கூறுகிறார். ‘‘நாம் முதலில் அவர்களின் பெற்றோர் என்பதை உணர்த்த வேண்டும். கண்டிப்பாக இருக்க வேண்டிய விஷயங்களில் நிச்சயம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது, சில நேரங்களில் நாமே வியக்கும்படி அவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்துவார்கள்’’ என்கிறார். ஆண், பெண் குழந்தைகள் இடையே பாகுபாடு கூடாது என்பது ஷியாம்குமார் கருத்து. ‘‘நான் என் மகனையும் மகளையும் ஒன்றுபோல நடத்துவதில் கவனமாக இருக்கிறேன். நாங்கள் ஒன்றாக கால்பந்து ஆடுவோம், நீச்சல்குளத்துக்குச் செல்வோம், புதிர் விளையாட்டுகள் விளையாடுவோம்’’ என்கிறார்.
குழந்தைகளுக்கு மிகவும பிடித்த சிற்றுண்டி தான் மசாலா கார்ன் சாலட். மாலை வேளையில் எண்ணெயில் பொரித்த பலகாரங்களுக்கு பதிலாக இதை செய்து கொடுத்தால் குழந்தைகள் மிக விருப்பமாக சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
ஸ்வீ ட் கார்ன் - கப்
சாட் மசாலா - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
பிளாக் சால்ட் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி ? சிறிதளது
செய்முறை
கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஸ்வீ ட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.
முதலில் வாணலியில் வெண்ணெய்யை உருக்கி அதில் வேகவைத்த ஸ்வீட்கார்னை போட்டு மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். பிறகு அதை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றி அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கும் மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்போது மசாலா கார்ன் சால்ட் ரெடி.
விருப்பமிருந்தால் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், குடைமிளகாய், வெள்ளரிக்காய் போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடலுக்கு அதிக சத்துக்கள் கிடைக்கும்.
ஸ்வீ ட் கார்ன் - கப்
சாட் மசாலா - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
பிளாக் சால்ட் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி ? சிறிதளது
செய்முறை
கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஸ்வீ ட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.
முதலில் வாணலியில் வெண்ணெய்யை உருக்கி அதில் வேகவைத்த ஸ்வீட்கார்னை போட்டு மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். பிறகு அதை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றி அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கும் மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்போது மசாலா கார்ன் சால்ட் ரெடி.
விருப்பமிருந்தால் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், குடைமிளகாய், வெள்ளரிக்காய் போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடலுக்கு அதிக சத்துக்கள் கிடைக்கும்.
இனிப்பு, புளிப்பு, காரம், ஆகிய மூன்று சுவைகளும் ஒன்று சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும் சிற்றுண்டி இது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்கள், பல துறைகளில் ஈடுபட்டு சாதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் கவனத்தை செலுத்தவேண்டும்.
பெண்கள், பல துறைகளில் ஈடுபட்டு சாதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் கவனத்தை செலுத்தவேண்டும். சொந்த வாழ்க்கையில் சறுக்கல் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். ஏன்என்றால் சொந்த வாழ்க்கை வெற்றி என்பது தொழில் வாழ்க்கை வெற்றிக்கு அடித்தளமிட்டுக் கொடுத்து, அவர்களை ஈடுபட்ட துறையில் சாதிக்கவைக்கும் சக்திகொண்டது.
சரி.. தனிப்பட்ட வாழ்க்கையை வெற்றிகரமாக, சறுக்கலின்றி அமைத்துக்கொள்வது அத்தனை எளிதான காரியமா?
எளிதான காரியம் இல்லைதான்! எல்லாப் பெண்களின் குடும்பச் சூழலும் ஒரே மாதிரி அமைவதில்லை. வெவ்வேறு சூழலில் வளர்ந்த பெண்கள் திருமணமாகி புதிய சூழலுக்குள் வரும்போது சற்று திகைத்துப் போகிறார்கள். புது மனிதர்கள், புது உறவுகள், புதிய வழக்கங்கள் என்று எல்லாம் புதிதாக உருவெடுக்கும்போது அவளும் புதிதாக மாற முயற்சிக்கிறாள்.
புகுந்த வீட்டில் இருக்கும் உறவுகள் சில நேரங்களில் அவளுக்கு அதற்கான அவகாசத்தைகூட அளிப்பதில்லை. கணவர் குடும்பத்தினர் சில விஷயங்களை அவள் மீது திணிக்கிறார்கள். கணவரது குடும்பத்தினர் அனைவரையும் தனது செயல்பாடுகள் மூலம் திருப்திப்படுத்துவது என்பது, பெரும்பாலான பெண்களுக்கு இயலாத காரியம். அதை நினைத்து பெண்கள் சோர்வடைந்துவிடக் கூடாது. சோர்வடைந்தால் அவர்களது மனநலமும், உடல்நலமும் பாதிக்கப்படும். அவர்களது குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படும். அதே நேரத்தில் மனக்குழப்பமடைந்து, குடும்ப உறவுகளில் இருந்து பிரிந்துசெல்லவும் முயற்சிக்கக்கூடாது.
பெண்களால் எதுவும் முடியும். புதிய உறவுகளை அவர்களால் அன்பாலும் வெல்லமுடியும். அதை நிரூபிக்க பெண்கள் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பெண்கள் முன்பு பொறுமைமிக்கவர்களாகத்தான் இருந்தார்கள். பொறுமையின் சிகரங்களாக இருந்த அவர்களை குமுறும் எரிமலைகளாக மாற்றிவிட்டது இன்றைய வாழ்க்கைச் சூழல். அவர்களுடைய கல்வி அவர்களுக்கு சம்பாதிக்க கற்றுக் கொடுத்ததே தவிர, மணவாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள கற்றுத் தரவில்லை. அழகை, ஆரோக்கியத்தை மேம்படுத்த அவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அன்பை மேம்படுத்த அவர்கள் கற்றுக்கொண்டிருக்கவில்லை.
வெளியுலக பிரச்சினைகளை எப்படி வேண்டுமானாலும் எதிர்கொண்டு ஜெயிக்கலாம். ஆனால் குடும்ப வாழ்க்கை என்று வரும்போது பொறுமையாகத்தான் எதையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த பொறுமை பிந்தைய நாட்களில் நிச்சயம் பல நன்மைகளை ஏற்படுத்தித் தரும். பொறுமை ஏமாளித்தனமோ, கோழைத்தனமோ அல்ல. பொறுமை விலைமதிப்பற்றது. பெண்களுக்கு நிறைந்த பலனை தரத்தக்கது.
பெண்கள் மிகசிறந்த அன்பு என்ற ஆயுதத்தோடு புதிய உறவுகளை அணுக வேண்டும். கணவரது குடும்பத்தினர் உங்களை புரிந்து ஏற்றுக்கொள்ளும் வரை அமைதி காக்க வேண்டும். அவர்கள் ஒருவேளை உங்களை தவறாக புரிந்துகொண்டு செயல் படத் தொடங்கினால் தவறுகளை புரியவைக்க புத்திசாலித்தனத்தை துணையாக்கிக்கொள்ளவேண்டும். ஆத்திரமான பேச்சுக்கள், கோபம் போன்றவை உறவுகளை சீர்குலைக்க மட்டுமே உதவும்.
‘நான் நிறைய படித்தவள். அதிகம் சம்பாதிப்பவள். தகுதிமிக்க எனக்கு புத்தி சொல்ல இவர்கள் யார்?’ என்ற கர்வம் தலைதூக்கினால் ஆபத்து. அதனால் ஒட்டுமொத்த உறவுகளும் காலப்போக்கில் உங்களுக்கு தூரமாகி விடும் அபாயம் உண்டு.
அன்பு என்பது அனைவரின் இதயத்தையும் பிரகாசமாக்கும். அந்த பிரகாசம் பெண்களின் வாழ்க்கையை அழகாக்கும். முகத்துக்கு நேராக நடக்கும் சச்சரவுகளுக்கு உங்கள் அமைதியை பங்களிப்பாக கொடுத்துப் பாருங்கள். உங்களை எதிர்த்தவர்கள் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அந்த சிந்தனையே உங்களைப் பற்றிய பல உண்மைகளை புலப்படுத்தும்.
பல பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் அன்பிற்கு இருக்கிறது. அதன் வல்லமையை நீங்கள் உணர்ந்து மற்றவர்களுக்கு புரிய வையுங்கள். அன்பு என்ற பிரம்மாஸ்திரத்திற்கு விழாத மனிதர்களே இல்லை. பெண்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை சிறப்பாக வடிவமைக்க அதிக அன்பை செலுத்தவேண்டும்.
உங்கள் அன்புக்கு கட்டுப்படாதவர்கள் யாராவது இருந்தால், அவர்களுடைய பேச்சு மற்றும் நடவடிக்கைகள் மூலம் அவர்களுடைய மனதில் உள்ளதை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். எப்படி அணுகினால் அவர்களுக்கு உங்களை புரியவைக்க முடியும் என்று சிந்தித்து செயல்படுங்கள். மற்றவர்களின் கருத்துக் களுக்கு மதிப்பு கொடுங்கள். கூடுமானவரை ஒருவரைப் பற்றி மற்றவரிடம் குறை பேசாதீர்கள். யாரையும் குறை கூறிப் பழக்கப்படாதீர்கள். மற்றவர்களின் நிறைகளை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். அது உங்களைப்பற்றிய தவறான அபிப்ராயங்களை தவிர்க்கும். உங்கள் கடமைகளை உணர்ந்து செய்யுங்கள். அது மற்றவர்கள் முன் உங்களை உயர்த்திக்காட்டும். நியாயமான காரணங்களுக்காக நீங்கள் கோபப்படுவதாக இருந்தாலும் அதை அளவோடு நிறுத்திக் கொண்டு, உங்கள் பக்க நியாயத்தை பொறுமையாக வெளிப்படுத்துங்கள். அன்பால் அகிலத்தை வென்ற புத்தரை அடிக்கடி நினைத்துப்பார்த்துக்கொள்ளுங்கள்.
சரி.. தனிப்பட்ட வாழ்க்கையை வெற்றிகரமாக, சறுக்கலின்றி அமைத்துக்கொள்வது அத்தனை எளிதான காரியமா?
எளிதான காரியம் இல்லைதான்! எல்லாப் பெண்களின் குடும்பச் சூழலும் ஒரே மாதிரி அமைவதில்லை. வெவ்வேறு சூழலில் வளர்ந்த பெண்கள் திருமணமாகி புதிய சூழலுக்குள் வரும்போது சற்று திகைத்துப் போகிறார்கள். புது மனிதர்கள், புது உறவுகள், புதிய வழக்கங்கள் என்று எல்லாம் புதிதாக உருவெடுக்கும்போது அவளும் புதிதாக மாற முயற்சிக்கிறாள்.
புகுந்த வீட்டில் இருக்கும் உறவுகள் சில நேரங்களில் அவளுக்கு அதற்கான அவகாசத்தைகூட அளிப்பதில்லை. கணவர் குடும்பத்தினர் சில விஷயங்களை அவள் மீது திணிக்கிறார்கள். கணவரது குடும்பத்தினர் அனைவரையும் தனது செயல்பாடுகள் மூலம் திருப்திப்படுத்துவது என்பது, பெரும்பாலான பெண்களுக்கு இயலாத காரியம். அதை நினைத்து பெண்கள் சோர்வடைந்துவிடக் கூடாது. சோர்வடைந்தால் அவர்களது மனநலமும், உடல்நலமும் பாதிக்கப்படும். அவர்களது குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படும். அதே நேரத்தில் மனக்குழப்பமடைந்து, குடும்ப உறவுகளில் இருந்து பிரிந்துசெல்லவும் முயற்சிக்கக்கூடாது.
பெண்களால் எதுவும் முடியும். புதிய உறவுகளை அவர்களால் அன்பாலும் வெல்லமுடியும். அதை நிரூபிக்க பெண்கள் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பெண்கள் முன்பு பொறுமைமிக்கவர்களாகத்தான் இருந்தார்கள். பொறுமையின் சிகரங்களாக இருந்த அவர்களை குமுறும் எரிமலைகளாக மாற்றிவிட்டது இன்றைய வாழ்க்கைச் சூழல். அவர்களுடைய கல்வி அவர்களுக்கு சம்பாதிக்க கற்றுக் கொடுத்ததே தவிர, மணவாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள கற்றுத் தரவில்லை. அழகை, ஆரோக்கியத்தை மேம்படுத்த அவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அன்பை மேம்படுத்த அவர்கள் கற்றுக்கொண்டிருக்கவில்லை.
வெளியுலக பிரச்சினைகளை எப்படி வேண்டுமானாலும் எதிர்கொண்டு ஜெயிக்கலாம். ஆனால் குடும்ப வாழ்க்கை என்று வரும்போது பொறுமையாகத்தான் எதையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த பொறுமை பிந்தைய நாட்களில் நிச்சயம் பல நன்மைகளை ஏற்படுத்தித் தரும். பொறுமை ஏமாளித்தனமோ, கோழைத்தனமோ அல்ல. பொறுமை விலைமதிப்பற்றது. பெண்களுக்கு நிறைந்த பலனை தரத்தக்கது.
பெண்கள் மிகசிறந்த அன்பு என்ற ஆயுதத்தோடு புதிய உறவுகளை அணுக வேண்டும். கணவரது குடும்பத்தினர் உங்களை புரிந்து ஏற்றுக்கொள்ளும் வரை அமைதி காக்க வேண்டும். அவர்கள் ஒருவேளை உங்களை தவறாக புரிந்துகொண்டு செயல் படத் தொடங்கினால் தவறுகளை புரியவைக்க புத்திசாலித்தனத்தை துணையாக்கிக்கொள்ளவேண்டும். ஆத்திரமான பேச்சுக்கள், கோபம் போன்றவை உறவுகளை சீர்குலைக்க மட்டுமே உதவும்.
‘நான் நிறைய படித்தவள். அதிகம் சம்பாதிப்பவள். தகுதிமிக்க எனக்கு புத்தி சொல்ல இவர்கள் யார்?’ என்ற கர்வம் தலைதூக்கினால் ஆபத்து. அதனால் ஒட்டுமொத்த உறவுகளும் காலப்போக்கில் உங்களுக்கு தூரமாகி விடும் அபாயம் உண்டு.
அன்பு என்பது அனைவரின் இதயத்தையும் பிரகாசமாக்கும். அந்த பிரகாசம் பெண்களின் வாழ்க்கையை அழகாக்கும். முகத்துக்கு நேராக நடக்கும் சச்சரவுகளுக்கு உங்கள் அமைதியை பங்களிப்பாக கொடுத்துப் பாருங்கள். உங்களை எதிர்த்தவர்கள் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அந்த சிந்தனையே உங்களைப் பற்றிய பல உண்மைகளை புலப்படுத்தும்.
பல பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் அன்பிற்கு இருக்கிறது. அதன் வல்லமையை நீங்கள் உணர்ந்து மற்றவர்களுக்கு புரிய வையுங்கள். அன்பு என்ற பிரம்மாஸ்திரத்திற்கு விழாத மனிதர்களே இல்லை. பெண்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை சிறப்பாக வடிவமைக்க அதிக அன்பை செலுத்தவேண்டும்.
உங்கள் அன்புக்கு கட்டுப்படாதவர்கள் யாராவது இருந்தால், அவர்களுடைய பேச்சு மற்றும் நடவடிக்கைகள் மூலம் அவர்களுடைய மனதில் உள்ளதை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். எப்படி அணுகினால் அவர்களுக்கு உங்களை புரியவைக்க முடியும் என்று சிந்தித்து செயல்படுங்கள். மற்றவர்களின் கருத்துக் களுக்கு மதிப்பு கொடுங்கள். கூடுமானவரை ஒருவரைப் பற்றி மற்றவரிடம் குறை பேசாதீர்கள். யாரையும் குறை கூறிப் பழக்கப்படாதீர்கள். மற்றவர்களின் நிறைகளை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். அது உங்களைப்பற்றிய தவறான அபிப்ராயங்களை தவிர்க்கும். உங்கள் கடமைகளை உணர்ந்து செய்யுங்கள். அது மற்றவர்கள் முன் உங்களை உயர்த்திக்காட்டும். நியாயமான காரணங்களுக்காக நீங்கள் கோபப்படுவதாக இருந்தாலும் அதை அளவோடு நிறுத்திக் கொண்டு, உங்கள் பக்க நியாயத்தை பொறுமையாக வெளிப்படுத்துங்கள். அன்பால் அகிலத்தை வென்ற புத்தரை அடிக்கடி நினைத்துப்பார்த்துக்கொள்ளுங்கள்.
சிலருக்கு மெடிக்கல் முறைப்படி கருக்கலைப்பு செய்யாமல் தாமாகவே கருக்கலைந்துவிடும். இதை மிஸ்கேரேஜ் என்போம். பொதுவாக, மிஸ்கேரேஜ் ஏற்படக்கூடிய காரணங்கள் சில…
சிலருக்கு மெடிக்கல் முறைப்படி கருக்கலைப்பு செய்யாமல் தாமாகவே கருக்கலைந்துவிடும். இதை மிஸ்கேரேஜ் என்போம். இந்த கேஸ்களில் கருத்தரித்த இருபது வாரங்களுக்குள் கரு தானாகவே கலைந்துவிடும். பொதுவாக, மிஸ்கேரேஜ் ஏற்படக்கூடிய காரணங்கள் சில…
* நாற்பது வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பது.
* ஏற்கெனவே மிஸ்கேரேஜ் ஏற்பட்டிருப்பது.
* டயாபடீஸ், ஹைபோதைராய்டிஸம் போன்ற கேஸ்களில்.
* உடல் ஹார்மோன்களில் கோளாறுகள்.
* தாய்க்கு புகை, மது போன்ற பழக்கங்கள் இருந்தால்.
* கருப்பையின் ஷேப் சரியாக இல்லையென்றாலும், பொதுவாக கருப்பை வீக்காக இருந்தாலும் தானாகவே கர்ப்பம் கலையலாம்.
* தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், எதிர்பாராத விபத்துகளாலும் ஏற்படலாம்.
பிளீடிங், வயிற்றுப் பகுதியில் சதைப் பிடிப்பு, முதுகுத் தண்டின் அடிபாகத்தில் வலி போன்றவை மிஸ்கேரேஜ் ஏற்படுவதற்கு முன்பு தெரியும் சில அறிகுறிகள்.
வைட்டமின் பி சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், கருத்தரித்த பெண்ணின் உடல் நிலை சரியில்லையென்றால் ரொம்ப கவனமாக, ஸ்பெஷலாகப் பார்த்துக்கொள்வதன் மூலமும் தானாகவே கருக்கலைப்பு ஏற்படுவதை ஓரளவுக்குத் தடுக்கலாம்.
கருக்கலைப்பு செய்துகொள்வதில் குழப்பம் ஏற்பட்டால், கவுன்சிலிங் மையங்களை அணுகி தகுந்த கவுன்சிலிங் எடுத்துக்கொண்டால், கருக்கலைப்புப் பற்றி ஒரு தெளிவு கிடைக்கும். மருத்துவர்களும் பெரும்பாலும் கருவை தக்கவைத்துக் கொள்வதில்தான் கவுன்சிலிங் அளிப்பார்கள். இதையும் தாண்டி கருக்கலைப்பு செய்ய திட்டமிட்டால், கருக்கலைப்புக்கு அரசு அங்கீகரித்து, லைஸென்ஸ் பெற்ற மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துகொள்வதே சட்டப்படி சரியான முறை!
* நாற்பது வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பது.
* ஏற்கெனவே மிஸ்கேரேஜ் ஏற்பட்டிருப்பது.
* டயாபடீஸ், ஹைபோதைராய்டிஸம் போன்ற கேஸ்களில்.
* உடல் ஹார்மோன்களில் கோளாறுகள்.
* தாய்க்கு புகை, மது போன்ற பழக்கங்கள் இருந்தால்.
* கருப்பையின் ஷேப் சரியாக இல்லையென்றாலும், பொதுவாக கருப்பை வீக்காக இருந்தாலும் தானாகவே கர்ப்பம் கலையலாம்.
* தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், எதிர்பாராத விபத்துகளாலும் ஏற்படலாம்.
பிளீடிங், வயிற்றுப் பகுதியில் சதைப் பிடிப்பு, முதுகுத் தண்டின் அடிபாகத்தில் வலி போன்றவை மிஸ்கேரேஜ் ஏற்படுவதற்கு முன்பு தெரியும் சில அறிகுறிகள்.
வைட்டமின் பி சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், கருத்தரித்த பெண்ணின் உடல் நிலை சரியில்லையென்றால் ரொம்ப கவனமாக, ஸ்பெஷலாகப் பார்த்துக்கொள்வதன் மூலமும் தானாகவே கருக்கலைப்பு ஏற்படுவதை ஓரளவுக்குத் தடுக்கலாம்.
கருக்கலைப்பு செய்துகொள்வதில் குழப்பம் ஏற்பட்டால், கவுன்சிலிங் மையங்களை அணுகி தகுந்த கவுன்சிலிங் எடுத்துக்கொண்டால், கருக்கலைப்புப் பற்றி ஒரு தெளிவு கிடைக்கும். மருத்துவர்களும் பெரும்பாலும் கருவை தக்கவைத்துக் கொள்வதில்தான் கவுன்சிலிங் அளிப்பார்கள். இதையும் தாண்டி கருக்கலைப்பு செய்ய திட்டமிட்டால், கருக்கலைப்புக்கு அரசு அங்கீகரித்து, லைஸென்ஸ் பெற்ற மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துகொள்வதே சட்டப்படி சரியான முறை!
அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற கோணத்தில் பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விவாகரத்து என்பது பிரச்சினைக்கு தீர்வு அல்ல, அடுத்த பிரச்சினைகளின் தொடக்கம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
‘பிடிக்கலேன்னா உன்ன விவாகரத்து பண்ணிடுவேன் அவ்வளவுதான்’ என்று ஆணும், பெண்ணும் இயல்பாக பேசும் சூழல் இப்போது உருவாகியிருக்கிறது. குழந்தைகள்கூட சிரித்துக்கொண்டே, ‘இந்த அம்மா சரியில்லேப்பா.. பேசமா விவாகரத்து பண்ணிடுங்க’ என்று சொல்லும் நிலையும் தோன்றியிருக்கிறது. விளையாட்டாக இருந்தாலும், வினையாக இருந்தாலும் ‘விவாகரத்து’ என்ற வார்த்தை இப்போது அதிகமாக புழக்கத்தில் வந்திருக்கிறது. அதே நேரத்தில் விவாகரத்தின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற கோணத்தில் பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குமாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல்களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநிலையில் இல்லை என்பதைதான் இது காட்டுகிறது.
ஆண், பெண் இருவரும் சரிசமம் என்று சொல்லிக் கொண்டு அசுர வேக வளர்ச்சியை காட்டும் இன்றைய தலைமுறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. தற்போதைய காலகட்டத்தில் விவாகரத்து என்பது எளிதாக கிடைத்து விடும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் விவாகரத்துக்குப் பிறகு வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அதைப் பற்றி யாரும் யோசிப்பது இல்லை. கையில் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற மனோபாவத்தில் விவாகரத்து முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை என்பதை உணரும்போது, அவர்கள் மனம்நொந்து போகிறார்கள்.
தவறுகளே செய்யாத மனிதர்கள் இல்லை. அதை திருத்திக் கொள்ளும் முயற்சி தான் வாழ்க்கை. திருமணத்துக்கு முன் செய்யும் தவறுகளுக்காக பெற்றோர் பிள்ளைகளை தூக்கி எறிவது இல்லை. ஆனால் திருமணத்துக்கு பிறகு செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கணவன்-மனைவி இருவரில் யாராவது ஒருவரை தூக்கி எறியும் முடிவுக்கு இன்னொருவர் வந்துவிடுகிறார்.
திருமணத்துக்கு முன்பு- திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு- பின்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள். அதில் பிந்தைய காலம் அனேகமாக பெண்களுக்கு இருண்ட காலம் ஆகிவிடுகிறது.
விவாகரத்துக்கு பிறகு ஆண்களும் அதிக மனநெருக்கடிக்கு உள்ளாகி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தொழில் பாதிப்படைகிறது. ‘தன்னைப் பற்றி தனக்கு பின்னால் என்ன பேசிக்கொள்வார்களோ!’ என்ற எண்ணம் அவர்களுடைய நட்பு வட்டாரத்தை குறைக்கிறது அல்லது சிதைக்கிறது. அப்போது, தான் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட, பெரிய வடிவத்தில் தன் கண்முன்னே வந்து நிற்கும். அந்த நேரத்தில் தன்மீதே தனக்கு கோபமும், டென்ஷனும் ஏற்பட்டு மன அழுத்தம் எல்லைமீறும். அப்போது அவர்கள் முரண்பாடான நடத்தை கொண்டவர்களாகிவிடுகிறார்கள். அப்போது அவரது மாண்பும், மரியாதையும் அவருடைய வாழ்க்கையில் இருந்து விடைபெற்று சென்றுகொண்டே இருக்கும். அதை பணத்தாலோ, பதவியாலோ ஈடுசெய்ய முடியாது.
பெண்கள் விவாகரத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். என்னதான் மனதளவில் அவள் தைரியமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய சமூக அந்தஸ்து குறைந்து விடும். அதற்கு தக்கபடி அவள் தன் மனதை பக்குவப்படுத்திக்கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்து போவாள். அப்போது தனக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தனக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்வாள்.
உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும். அது, ‘நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?’ என்ற கேள்வி! அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும். தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கேள்விக்குறியும் தோன்றும். தன் வயதை ஒத்தவர்கள் வாழும் சந்தோஷ வாழ்க்கையும் கண்களை உறுத்தி, கண்ணீர் வரச்செய்யும். அப்போது தேவையற்ற டென்ஷனும், கோபமுமே மிஞ்சும். மனதில் பரவியிருக்கும் சூன்யம் வார்த்தைகளில் வெறுப்பாக வெளிவரும். அது சில நேரங்களில் நெருக்கமான குடும்பத்தினரையும் புண்படுத்திவிடும்.
அதனால் முடிந்த அளவு விவாகரத்துக்களை தள்ளிப்போட முயற்சி செய்யுங்கள். பிரச்சினையை பேசித்தீர்க்க முன்வாருங்கள். கணவன்- மனைவி இருவரும் தங்கள் மூர்க்கத்தனத்தை தள்ளிவைத்துவிட்டு உறவை சீர்செய்வது பற்றி பேசுங்கள். ஏன்என்றால் உறவு சீர்கெட்டு, விவாகரத்து வரை சென்றுவிட்டால் பாதிப்பு இருவருக்குமே ஏற்படும். குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள். விவாகரத்து என்பது பிரச்சினைக்கு தீர்வு அல்ல, அடுத்த பிரச்சினைகளின் தொடக்கம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். இன்று சுற்றி நின்றுகொண்டு, ‘விவாகரத்து செய்துவிடலாம்’ என்று ஆலோசனை சொல்பவர்கள்கூட நாளை, ‘உன் வாழ்க்கையை நீயே முடித்துக்கொண்டாய். நாங்கள் என்ன செய்வது?’ என்று கேட்டபடி விலகிச்சென்றுவிடுவார்கள் என்பதையும் உணர்ந்து நடந்துகொள்ளுங்கள்!
அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற கோணத்தில் பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குமாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல்களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநிலையில் இல்லை என்பதைதான் இது காட்டுகிறது.
ஆண், பெண் இருவரும் சரிசமம் என்று சொல்லிக் கொண்டு அசுர வேக வளர்ச்சியை காட்டும் இன்றைய தலைமுறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. தற்போதைய காலகட்டத்தில் விவாகரத்து என்பது எளிதாக கிடைத்து விடும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் விவாகரத்துக்குப் பிறகு வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அதைப் பற்றி யாரும் யோசிப்பது இல்லை. கையில் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற மனோபாவத்தில் விவாகரத்து முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை என்பதை உணரும்போது, அவர்கள் மனம்நொந்து போகிறார்கள்.
தவறுகளே செய்யாத மனிதர்கள் இல்லை. அதை திருத்திக் கொள்ளும் முயற்சி தான் வாழ்க்கை. திருமணத்துக்கு முன் செய்யும் தவறுகளுக்காக பெற்றோர் பிள்ளைகளை தூக்கி எறிவது இல்லை. ஆனால் திருமணத்துக்கு பிறகு செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கணவன்-மனைவி இருவரில் யாராவது ஒருவரை தூக்கி எறியும் முடிவுக்கு இன்னொருவர் வந்துவிடுகிறார்.
திருமணத்துக்கு முன்பு- திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு- பின்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள். அதில் பிந்தைய காலம் அனேகமாக பெண்களுக்கு இருண்ட காலம் ஆகிவிடுகிறது.
விவாகரத்துக்கு பிறகு ஆண்களும் அதிக மனநெருக்கடிக்கு உள்ளாகி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தொழில் பாதிப்படைகிறது. ‘தன்னைப் பற்றி தனக்கு பின்னால் என்ன பேசிக்கொள்வார்களோ!’ என்ற எண்ணம் அவர்களுடைய நட்பு வட்டாரத்தை குறைக்கிறது அல்லது சிதைக்கிறது. அப்போது, தான் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட, பெரிய வடிவத்தில் தன் கண்முன்னே வந்து நிற்கும். அந்த நேரத்தில் தன்மீதே தனக்கு கோபமும், டென்ஷனும் ஏற்பட்டு மன அழுத்தம் எல்லைமீறும். அப்போது அவர்கள் முரண்பாடான நடத்தை கொண்டவர்களாகிவிடுகிறார்கள். அப்போது அவரது மாண்பும், மரியாதையும் அவருடைய வாழ்க்கையில் இருந்து விடைபெற்று சென்றுகொண்டே இருக்கும். அதை பணத்தாலோ, பதவியாலோ ஈடுசெய்ய முடியாது.
பெண்கள் விவாகரத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். என்னதான் மனதளவில் அவள் தைரியமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய சமூக அந்தஸ்து குறைந்து விடும். அதற்கு தக்கபடி அவள் தன் மனதை பக்குவப்படுத்திக்கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்து போவாள். அப்போது தனக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தனக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்வாள்.
உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும். அது, ‘நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?’ என்ற கேள்வி! அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும். தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கேள்விக்குறியும் தோன்றும். தன் வயதை ஒத்தவர்கள் வாழும் சந்தோஷ வாழ்க்கையும் கண்களை உறுத்தி, கண்ணீர் வரச்செய்யும். அப்போது தேவையற்ற டென்ஷனும், கோபமுமே மிஞ்சும். மனதில் பரவியிருக்கும் சூன்யம் வார்த்தைகளில் வெறுப்பாக வெளிவரும். அது சில நேரங்களில் நெருக்கமான குடும்பத்தினரையும் புண்படுத்திவிடும்.
அதனால் முடிந்த அளவு விவாகரத்துக்களை தள்ளிப்போட முயற்சி செய்யுங்கள். பிரச்சினையை பேசித்தீர்க்க முன்வாருங்கள். கணவன்- மனைவி இருவரும் தங்கள் மூர்க்கத்தனத்தை தள்ளிவைத்துவிட்டு உறவை சீர்செய்வது பற்றி பேசுங்கள். ஏன்என்றால் உறவு சீர்கெட்டு, விவாகரத்து வரை சென்றுவிட்டால் பாதிப்பு இருவருக்குமே ஏற்படும். குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள். விவாகரத்து என்பது பிரச்சினைக்கு தீர்வு அல்ல, அடுத்த பிரச்சினைகளின் தொடக்கம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். இன்று சுற்றி நின்றுகொண்டு, ‘விவாகரத்து செய்துவிடலாம்’ என்று ஆலோசனை சொல்பவர்கள்கூட நாளை, ‘உன் வாழ்க்கையை நீயே முடித்துக்கொண்டாய். நாங்கள் என்ன செய்வது?’ என்று கேட்டபடி விலகிச்சென்றுவிடுவார்கள் என்பதையும் உணர்ந்து நடந்துகொள்ளுங்கள்!
பெண்களுக்கான ‘வயாகரா’ தற்போது அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் அதனுடன் கூடவே சர்ச்சைகளும் வந்திருக்கின்றன. இந்த மருந்துகளைச் சாப்பிடுவதால் பெண்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சில மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
பெண்களுக்கான ‘வயாகரா’ தற்போது அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் அதனுடன் கூடவே சர்ச்சைகளும் வந்திருக்கின்றன. இப்போதைக்கு அமெரிக்க மருந்தகங்களில், பெண்களுக்கு பாலுணர்வை அதிகரிக்கக் கூடிய அந்த மருந்து கிடைக்கிறது. அந்த மருந்தின் பெயர் ‘வைலீசி’ என்றாலும், அதை ‘பெண்களின் வயாகரா’ என்றே குறிப்பிடுகிறார்கள்.
அமெரிக்காவில் பயன்பாட்டுக்குப் பாதுகாப்பானவை என மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் அரசு அமைப்பான உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம், ‘வைலீசி’க்கு அனுமதி அளித்தபோது, பெண்களின் பாலுறவு ஆரோக்கியத்துக்குக் கிடைத்த வெற்றி என்று ஆரம்பத்தில் அமோக வரவேற்புக் கிடைத்தது. ஆனால் சில வாரங்களிலேயே புதிய சர்ச்சைகள் தலைதூக்கின. பாலுணர்வு விருப்பம் போன்ற சிக்கலான விஷயங்களில் மருந்துகளின் பங்கு என்ன என்பது பற்றி விவாதங்கள் எழத் தொடங்கின.
உண்மையில் பிரமெலனோடைட் பலன் தருமா? அதனால் ஏற்படக்கூடிய ஆரோக்கியப் பிரச்சினைகள் என்ன?
தானாகவே ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் மருந்தாக வைலீசி உள்ளது. இந்த மருந்து, பதற்றத்தைத் தணித்து, பாலுறவு ஆசையை அதிகரிக்கச் செய்கிறது. டேபோமைன் அளவை அதிகரிக்கச்செய்யும் இரண்டு நரம்பியல் கடத்திகளின் அளவைக் கட்டுப்படுத்தி, செரோட்டோனின் வெளியாவதைக் குறைத்து இது செயல்படுகிறது.
ஏற்கனவே சந்தையில் உள்ள, இதேபோன்ற ‘ஆட்யி’ என்ற மாத்திரையுடன், இந்தப் புதிய மருந்து போட்டியிட வேண்டியிருக்கும். ‘ஆட்யி’ மாத்திரை, 2015-ல் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாத்திரை ஆகும். அதை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். ஆட்யி மாத்திரையால் குறைந்த பலன்தான் உள்ளது என்றும், அநேகமாக பாதுகாப்பற்றது என்றும் சில நிபுணர்கள் கூறிவரும் நிலையில், புதிய மருந்துக்கு அங்கீகாரம் அளித்தது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
ஆட்யி மாத்திரையைப் பயன்படுத்தும்போது மதுப் பயன்பாடு கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் வைலீசி பயன்படுத்துபவர்கள் மதுப் பழக்கத்தைக் கைவிட வேண்டிய அவசியம் இல்லை என்று அதைத் தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது லேசான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றாலும், வேகமான செயல்பாடு கொண்டது, தினசரி எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என அந்நிறுவனம் உத்தரவாதம் அளிக்கிறது.
ஆனால், மருந்து மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத் துறைகள் பற்றி செய்திகளை எழுதிவரும் பத்திரிகையாளர் மேடலெய்ன் ஆர்ம்ஸ்டிராங், ‘‘பாலுறவு கொள்வதற்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு முன்னதாக வைலீசி மருந்தை ஊசி மூலம் செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போது குமட்டல் போன்ற உணர்வு ஏற்படுவதாக இதைப் பயன்படுத்திய 40 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் ஒரு மணி நேரத்துக்குள் அப்படி ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்’’ என்கிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடத்திய ஓர் ஆய்வின்படி, பாலியல் நாட்டமின்மை அமெரிக்கப் பெண்களில் 10-ல் ஒருவருக்கு உள்ளது. அவர்களில் பலர், ஒருபோதும் சிகிச்சையை நாடியதில்லை என்றும் தெரியவந்துள்ளது.
அதுகுறித்து ஆர்ம்ஸ்டிராங், ‘‘பெண்கள் பாலியல் நாட்டமில்லாமல் இருப்பது நோயா என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. சுமார் 60 லட்சம் பெண்களுக்கு மாதவிலக்குக்கு முந்தைய பருவத்தில் இந்தப் பாதிப்பு இருக்கிறது என்றும், தங்களுக்கு மருத்துவக் குறைபாடு இருப்பதையே 95 சதவீதம் பெண்கள் அறிந்திருக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்’’ என்கிறார்.
வைலீசி மருந்தின் பரிசோதனைக் காலத்தில் கவனிக்கப்பட்ட பெரும்பாலான பக்க விளைவுகளில், இதைப் பயன்படுத்திய 40 சதவீதம் பேருக்கு ஓரளவு முதல் தீவிர குமட்டல் இருந்திருக்கிறது. காய்ச்சல் மற்றும் தலைவலி உள்ளிட்ட பக்கவிளைவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. வைலீசி மருந்தின் நீண்டகாலப் பாதிப்புகள் பற்றி மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் பரிசீலிக்கவில்லை என்று மகளிர் ஆரோக்கிய அமைப்புகள் பலவும் குற்றஞ்சாட்டுகின்றன.
இப்போதைக்கு, பாலியல் நாட்டமின்மை பிரச்சினை உள்ள பலர், மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் ஒரு வாரத்தில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தவில்லை. இந்த மருந்து எடுத்துக்கொண்டவர்களில் 25 சத வீதம் பேர் பாலுறவு விருப்பம் அதிகரித்ததாகவும் கூறியுள்ளனர்.
‘உல்லாசத்துக்கான’ இந்த மாத்திரை குறித்த வாத, பிரதிவாதங்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால் மறுபுறம் இதன் விற்பனையும் கூடிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் பயன்பாட்டுக்குப் பாதுகாப்பானவை என மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் அரசு அமைப்பான உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம், ‘வைலீசி’க்கு அனுமதி அளித்தபோது, பெண்களின் பாலுறவு ஆரோக்கியத்துக்குக் கிடைத்த வெற்றி என்று ஆரம்பத்தில் அமோக வரவேற்புக் கிடைத்தது. ஆனால் சில வாரங்களிலேயே புதிய சர்ச்சைகள் தலைதூக்கின. பாலுணர்வு விருப்பம் போன்ற சிக்கலான விஷயங்களில் மருந்துகளின் பங்கு என்ன என்பது பற்றி விவாதங்கள் எழத் தொடங்கின.
உண்மையில் பிரமெலனோடைட் பலன் தருமா? அதனால் ஏற்படக்கூடிய ஆரோக்கியப் பிரச்சினைகள் என்ன?
தானாகவே ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் மருந்தாக வைலீசி உள்ளது. இந்த மருந்து, பதற்றத்தைத் தணித்து, பாலுறவு ஆசையை அதிகரிக்கச் செய்கிறது. டேபோமைன் அளவை அதிகரிக்கச்செய்யும் இரண்டு நரம்பியல் கடத்திகளின் அளவைக் கட்டுப்படுத்தி, செரோட்டோனின் வெளியாவதைக் குறைத்து இது செயல்படுகிறது.
ஏற்கனவே சந்தையில் உள்ள, இதேபோன்ற ‘ஆட்யி’ என்ற மாத்திரையுடன், இந்தப் புதிய மருந்து போட்டியிட வேண்டியிருக்கும். ‘ஆட்யி’ மாத்திரை, 2015-ல் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாத்திரை ஆகும். அதை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். ஆட்யி மாத்திரையால் குறைந்த பலன்தான் உள்ளது என்றும், அநேகமாக பாதுகாப்பற்றது என்றும் சில நிபுணர்கள் கூறிவரும் நிலையில், புதிய மருந்துக்கு அங்கீகாரம் அளித்தது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
ஆட்யி மாத்திரையைப் பயன்படுத்தும்போது மதுப் பயன்பாடு கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் வைலீசி பயன்படுத்துபவர்கள் மதுப் பழக்கத்தைக் கைவிட வேண்டிய அவசியம் இல்லை என்று அதைத் தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது லேசான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றாலும், வேகமான செயல்பாடு கொண்டது, தினசரி எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என அந்நிறுவனம் உத்தரவாதம் அளிக்கிறது.
ஆனால், மருந்து மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத் துறைகள் பற்றி செய்திகளை எழுதிவரும் பத்திரிகையாளர் மேடலெய்ன் ஆர்ம்ஸ்டிராங், ‘‘பாலுறவு கொள்வதற்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு முன்னதாக வைலீசி மருந்தை ஊசி மூலம் செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போது குமட்டல் போன்ற உணர்வு ஏற்படுவதாக இதைப் பயன்படுத்திய 40 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் ஒரு மணி நேரத்துக்குள் அப்படி ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்’’ என்கிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடத்திய ஓர் ஆய்வின்படி, பாலியல் நாட்டமின்மை அமெரிக்கப் பெண்களில் 10-ல் ஒருவருக்கு உள்ளது. அவர்களில் பலர், ஒருபோதும் சிகிச்சையை நாடியதில்லை என்றும் தெரியவந்துள்ளது.
அதுகுறித்து ஆர்ம்ஸ்டிராங், ‘‘பெண்கள் பாலியல் நாட்டமில்லாமல் இருப்பது நோயா என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. சுமார் 60 லட்சம் பெண்களுக்கு மாதவிலக்குக்கு முந்தைய பருவத்தில் இந்தப் பாதிப்பு இருக்கிறது என்றும், தங்களுக்கு மருத்துவக் குறைபாடு இருப்பதையே 95 சதவீதம் பெண்கள் அறிந்திருக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்’’ என்கிறார்.
வைலீசி மருந்தின் பரிசோதனைக் காலத்தில் கவனிக்கப்பட்ட பெரும்பாலான பக்க விளைவுகளில், இதைப் பயன்படுத்திய 40 சதவீதம் பேருக்கு ஓரளவு முதல் தீவிர குமட்டல் இருந்திருக்கிறது. காய்ச்சல் மற்றும் தலைவலி உள்ளிட்ட பக்கவிளைவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. வைலீசி மருந்தின் நீண்டகாலப் பாதிப்புகள் பற்றி மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் பரிசீலிக்கவில்லை என்று மகளிர் ஆரோக்கிய அமைப்புகள் பலவும் குற்றஞ்சாட்டுகின்றன.
இப்போதைக்கு, பாலியல் நாட்டமின்மை பிரச்சினை உள்ள பலர், மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் ஒரு வாரத்தில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தவில்லை. இந்த மருந்து எடுத்துக்கொண்டவர்களில் 25 சத வீதம் பேர் பாலுறவு விருப்பம் அதிகரித்ததாகவும் கூறியுள்ளனர்.
‘உல்லாசத்துக்கான’ இந்த மாத்திரை குறித்த வாத, பிரதிவாதங்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால் மறுபுறம் இதன் விற்பனையும் கூடிக்கொண்டிருக்கிறது.






