
பொடியாக நறுக்கிய முளைக்கீரை - ஒரு கைப்பிடி
பொடியாக நறுக்கிய சிறுகீரை - ஒரு கைப்பிடி
பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - ஒரு கைப்பிடி
பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி
சோள மாவு - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
வெண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
முதலில் சோள மாவை 250 மில்லி தண்ணீர் விட்டுக் கரைத்து கொள்ள வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முளைக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரையை நெய் விட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.
கீரை நன்கு வதங்கியதும் அதில் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் அதில் கரைத்து வைத்த சோள மாவை ஊற்றி கொதிக்கவிட்டு, வெண்ணெய் சேர்த்து இறக்கி பரிமாறவும்.
சத்தான மல்டி கீரை சூப் ரெடி.