என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    மாதவிடாய் வலி, ஒழுங்கற்ற மாதவிடாய், உதிரப்போக்கு பிரச்சினை, கருப்பைக் கட்டி, குழந்தைப்பேறின்மை போன்ற பிரச்சினைகளுக்கு கல்யாண முருங்கை சிறந்த தீர்வாகும்.
    முள் முருக்கை, கல்யாண முருக்கன், முள் முருக்கு என பல பெயர்களில் அழைக்கப்படும் கல்யாண முருங்கைக்கு எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உண்டு. இதன் இலை, விதை, பூ, பட்டை போன்ற அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டவை.

    இது காரச்சுவையும், வெப்பத்தன்மையும் உடையது. அகலமான, பச்சை நிற இலைகளையும், வெளிர் சிவப்பு நிறப் பூக்களையும் கொண்டது. சுமார் அறுபது அடியில் இருந்து எண்பது அடி வரை வளரும். ஜூலை முதல் நவம்பர் மாதத்திற்குள் பூக்கள் பூக்கும்.

    இலைகளை அரைத்து கிடைக்கும் சாற்றை, தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்பு பருகி வந்தால் கருத்தரித்தல் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். பெண்களின் கருப்பையில் உண்டாகும் அனைத்து கோளாறுகளுக்கும் கல்யாண முருங்கை சிறந்த தீர்வாகும்.

    எனவே தான் இதை ‘பெண்களுக்கான மரம்’ எனக் குறிப்பிடுகிறார்கள். அந்தக் காலத்தில், கன்னிப்பெண்கள் இருக்கும் வீடுகளில் கல்யாண முருங்கை மரத்தை வளர்ப்பது வழக்கமாகவே இருந்திருக்கிறது. இதை உணவாகவும், சிற்றுண்டியாகவும் தயார் செய்து சாப்பிடலாம்.

    கல்யாண முருங்கை இலையை வெங்காயம், தேங்காய், நெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இலையை அரைத்து உடலில் பூசி, உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சரும நோய்கள் நீங்கும்.

    உடல் பருமன் குறைவதற்கு இதன் இலைச்சாறு உதவும். மாதவிடாய் வலி, ஒழுங்கற்ற மாதவிடாய், உதிரப்போக்கு பிரச்சினை, கருப்பைக் கட்டி, குழந்தைப் பேறின்மை போன்ற பிரச்சினைகளுக்கு கல்யாண முருங்கை சிறந்த தீர்வாகும்.

    வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்றுவதற்கு கல்யாண முருங்கை இலையை அரைத்து, மாதம் ஒரு முறை மருந்தாகச் சிறுவர்களுக்கு கொடுக்கலாம். அடையாகவும், சூப் தயார் செய்தும் மாலை நேரச் சிற்றுண்டியாக சாப்பிடலாம். கீரை வடை போன்று கல்யாண முருங்கை இலையையும் வடையில் சேர்த்து தயாரிக்கலாம்.

    பிரசவத்திற்குப் பின்பு கருப்பையை தூய்மைப்படுத்தவும், வலுப்படுத்தவும் கல்யாண முருங்கை இலையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் கலந்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி தொடர்ந்து முப்பது நாட்கள் பருகி வரலாம்.

    இந்த மரத்தை வீட்டுத் தோட்டத்தில் சுலபமாக வளர்க்கலாம். விதைகளைப் பதியம் போட்டு வளர்ப்பது மிகவும் சிறந்த முறை. கல்யாண முருங்கை மரத்தின் கிளைகளை ஒடித்து நட்டு வைத்தாலே நன்றாக துளிர் விட்டு வளர்ந்து விடும். எல்லா மண்ணிலும் சுலபமாக வளரும்.
    எளிதாக செரிக்கக்கூடிய, மலச்சிக்கலை ஏற்படுத்தாத உணவு வகைகளை சாப்பிடுவதால் மனதின் அழுத்தம் குறைவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
    தற்போதைய வாழ்க்கை முறையில் மன அழுத்தம் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதித்து வருகிறது. எவ்வளவுதான் முயற்சித்தாலும் பல்வேறு காரணங்களால் மன அமைதி சீர்குலைந்து மன அழுத்தம் ஏற்பட்டுவிடுகிறது. இந்தப் பிரச்சினைக்கு எளிதான தீர்வாக இருப்பவை நார்ச்சத்து உள்ள உணவுகள். இவற்றை தினசரி உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது நன்மை அளிக்கும்.

    எளிதாக செரிக்கக்கூடிய, மலச்சிக்கலை ஏற்படுத்தாத உணவு வகைகளை சாப்பிடுவதால் மனதின் அழுத்தம் குறைவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    உடல் ஆரோக்கியத்திற்கு எல்லா வகையான சத்துக்களும் அவசியம். உள் உறுப்புகள் சீராக செயல்பட வேண்டுமானால், அதற்கு தேவையான சக்தியை உணவு மூலமாக பெற வேண்டும். அந்த வகையில் நார்ச்சத்து உள் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது; மலச்சிக்கலை அகற்றுகிறது.

    நார்ச்சத்து நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம் பெறப்படுகிறது. இது முழுமையாக செரிமானம் ஆவது இல்லை. மாறாக, செரிமானத்தை துரிதப்படுத்தி உடலின் கழிவுகள் எளிதாக வெளியேற உதவுகிறது.

    பெண்களுக்கு சராசரியாக ஒரு நாளுக்கு 25 கிராம் நார்ச்சத்து தேவைப்படும். இது கரையும் தன்மை கொண்டது மற்றும் கரையாத தன்மை கொண்டது என இரண்டு வகைப்படும். ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, அரிசி, பார்லி, சாத்துக்குடி, ஆரஞ்சு, கோதுமை, பருப்பு ஆகிய உணவு வகைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது.

    கரையாத நார்ச்சத்து செல்லுலோஸ், செமி செல்லுலோஸ், லிக்னின் ஆகியவை அடங்கிய உணவுகளில் உள்ளது. இவை பழங்கள், காய்கறிகள் தானியங்கள், ஆப்பிள், முட்டைக்கோஸ், பீட்ரூட், காலிபிளவர், கேரட் ஆகியவற்றில் உள்ளது. இது உணவை நல்ல முறையில் ஜீரணிக்க உதவுவதுடன், மலச்சிக்கலையும் தடுக்கிறது.

    கரையாத தன்மை கொண்ட நார்ச்சத்து வயிறு நிரம்பிய திருப்தியை உண்டாக்குகிறது. உணவை 4 முதல் 6 மணி நேரம் வரை வயிற்றில் இருக்கச் செய்வதால், பசியை தூண்டும் இன்சுலின் சுரப்பியை கட்டுப்படுத்தி, பசி உணர்வைத் தடுக்கிறது. இதன் மூலம் அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்க முடியும்; உடல் எடையைச் சீராக பராமரிக்க முடியும்.

    கரையும் நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. உப்பு, கொழுப்பு ஆகியவற்றை உறிஞ்சி, மலத்துடன் வெளியேற்றுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் குறையும். மேலும், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படுவதால் உடலும், மனமும் சீராக செயல்பட ஏதுவாக அமைகிறது.
    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று தினை வைத்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தினை அரிசி - 1 கப்
    வெங்காயம் - 1
    கேரட்  - 1
    ப.மிளகாய் - 2
    தேங்காய் - 1 துண்டு
    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுந்து - 2 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கைப்பிடி
    கொத்தமல்லி - 2 கைப்பிடி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    தேங்காய், கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தினை அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்த பின்னர் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்..

    ஓரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், கேரட், தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்..

    பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்..

    காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அரைத்த அரிசி மாவை ஊற்றி கிளறவும்.

    மாவு நன்கு வெந்து சுருண்டு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் 15 வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான தினை வெஜிடபிள் கொழுக்கட்டை ரெடி.

    பள்ளிச்சூழலை மறந்து ஆன்லைன் வழியே வீட்டு கல்வி முறைக்கு பழகிவிட்ட மாணவர்களை பள்ளிச் சூழலுக்கு பழக்கப்படுத்தும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
    கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. பள்ளிச்சூழலை மறந்து ஆன்லைன் வழியே வீட்டு கல்வி முறைக்கு பழகிவிட்ட மாணவர்களை பள்ளிச் சூழலுக்கு பழக்கப்படுத்தும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். கேரளாவில் இருக்கும் பள்ளி ஒன்று மாணவர்களை ஈர்க்கும் நோக்கத்தில் ‘மகிழ்ச்சி’ பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளது. மாணவர்களுக்கு வீட்டுச் சூழலை வழங்கு வதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

    இதுநாள் வரை படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என வீட்டிலேயே பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு பழகி விட்டதால் சட்டென்று அவர்களை பள்ளிச் சூழலுக்கு தயார்படுத்துவது சிரமமானது. அதனை கருத்தில் கொண்டே இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    இதில் இசை, நடனம், கலை வேலைப்பாடுகள் மற்றும் கைவினை, திரைப்பட விமர்சனங்கள், புகைப்பட விளக்கக்காட்சிகள், தோட்டக்கலை, புத்தக வாசிப்பு என பல விஷயங்கள் சொல்லித்தரப்படுகின்றன.

    இந்த பாடத்திட்டம் பள்ளி நேரத்திற்கு அப்பால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருப்பதால் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    இந்த பள்ளிக்கூடம் ஆலுவாவில் உள்ள கீழ்மாட் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது. ‘‘எங்கள் பள்ளிக்கூடம் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக இயங்குகிறது. இங்கு படிப்பவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் விடுதியில் தங்கி படிக்கிறார்கள். கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டதால் நீண்ட நாட்களாக வீட்டிலேயே தங்கிவிட்டார்கள். மீண்டும் பள்ளிக்கு திரும்பும்போது வீட்டுச்சூழலை மறப்பது சற்று சிரமமானது. திடீரென்று குடும்பத்தில் இருந்து துண்டிக்கப்பட்டதைப்போல அவர்கள் உணருவதையும் நாங்கள் விரும்பவில்லை. மீண்டும் பள்ளி வாழ்க்கைக்கு திரும்புவதற்கு பழக்கப்படுத்தும் நோக்கத்தில் மகிழ்ச்சி பாடத்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்.

    மகிழ்ச்சி பாடத்திட்டங்களை உருவாக்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. அதனை பின்பற்றி இரண்டு வாரங்களுக்கு இந்த பாடத்திட்டத்தை நடத்த இருக்கிறோம். மாணவர்கள் மீண்டும் கற்றல் சூழலுக்குத் திரும்ப உதவுவதற்கான சிறந்த வழியாக மகிழ்ச்சி பாடத்திட்டமும் அமைந்திருக்கிறது’’ என்கிறார்கள், ஆசிரியர்கள்.
    சிலர் தயக்கம் காரணமாக முயற்சி செய்யாமல் வெற்றியைத் தவற விடுவார்கள். இவ்வாறு வெற்றிக்குத் தடைக்கல்லாக இருக்கும் தயக்கத்தை தவிர்ப்பதற்கான சில வழிகள் இதோ..
    வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். சிலர் தான் செய்ய நினைத்ததை முழு மனதோடு முயற்சி செய்து வெற்றி பெறுவார்கள். சிலரோ தயக்கம் காரணமாக முயற்சி செய்யாமல் வெற்றியைத் தவற விடுவார்கள். இவ்வாறு வெற்றிக்குத் தடைக்கல்லாக இருக்கும் தயக்கத்தை தவிர்ப்பதற்கான சில வழிகள் இதோ..

    * ஏன் வருகிறது தயக்கம்?

    ‘மற்றவர்களை போல நாம் இல்லை’ என தோற்றத்தையும், திறமையையும் வைத்து பலருக்கும் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் யார் முன்னிலையிலோ, சங்கடப்படுத்தும் பேச்சோ, கேலிகளுக்கோ உள்ளாகி இருந்தால் அது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இவ்வாறான தருணங்கள் உண்டாக்கும் தயக்கம் பயமாக மாறிவிடலாம். எந்தச் சூழல் அல்லது எந்த விஷயம் உங்களுக்கு தயக்கத்தை, பயத்தை தருகிறதோ அதில் இருந்து விலகிப் போகாதீர்கள். அதை முடிந்த அளவிற்கு எதிர்கொண்டு, வரும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

    உதாரணமாக, உங்களுக்கு மேடை ஏறி பேசுவதில் தயக்கம் என்றால், கண்ணாடி முன் நின்று அதற்கான தொடர் பயிற்சி எடுக்கலாம். ஆங்கிலம் பேசுவதில் தயக்கம் என்றால் அதற்கான தீர்வை யோசிக்கலாம். இது போன்ற எளிய பயிற்சிகளை பின்பற்றுங்கள்.

    பலருக்கு தங்களது வசிப்பிடத்திலோ, வேலை செய்யும் சூழலிலோ இது போன்ற தயக்கத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும் நபர்கள் இருப்பார்கள். அவர்களை எதிர்கொள்ள முடியாத சூழல் இருந்தால், அந்த இடத்தை விட்டு விலகுவதோ அல்லது இருப்பிடத்தை மாற்றுவதோ நல்லது.

    மேலே சொன்ன விஷயங்கள் எதுவும் கை கூடவில்லை என்றால் தயங்காமல் மருத்துவர்களையோ அல்லது இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு கொடுக்கும் நபரையோ சந்தித்து உரையாடுங்கள். இது தயக்கம் தகர்க்கும் வழியாக உங்களுக்கு அமையும்.
    நரம்பு மண்டலம் உறுதியாக இருக்க கால்சியம் உதவும். இதே போன்று இதயம், இதயத் தசைகள் வலுப்பெறவும், உயர் ரத்த அழுத்த அளவினை குறைக்கவும் கால்சியம் அவசியம் ஆகும்.
    குழந்தைகள், இளம் பருவத்தினர் உள்பட அனைவருக்கும் கால்சியம் சத்து அவசியமாகும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களிலும், காய்கறிகள், பழங்களிலும் கால்சியம் சத்து உள்ளது. கால்சியம் சத்து உடலில் சேருவதால் எலும்புகள் வலுப்பெறும்.

    நரம்பு மண்டலம் உறுதியாக இருக்க கால்சியம் உதவும். இதே போன்று இதயம், இதயத் தசைகள் வலுப்பெறவும், உயர் ரத்த அழுத்த அளவினை குறைக்கவும் கால்சியம் அவசியம் ஆகும். பொதுவாக ஒன்று முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு 500 மில்லி கிராம் அளவில் கால்சியம் சத்து தேவைப்படும்.

    இதேபோல் 4 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு 800 கிராமும், 9 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு 1,300 கிராமும், 19 வயது முதல் 50 வயது வரையுள்ளவர்களுக்கு 1000 கிராமும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1,200 கிராமும், கர்ப்பிணிகளுக்கு 1,300 கிராமும் கால்சியம் சத்தும் தேவையாக உள்ளது.
    பிள்ளைகளுக்கு பார்வைக் குறைபாடு இருந்தால் கல்வி கற்பது பெரும் பிரச்னையாக அமையும். அவ்வாறு பார்வைக் குறைபாடு உள்ளவர்களை அவர்களது செயல்பாடுகளை வைத்தே, நாம் எளிதில் கண்டு கொள்ளலாம்.
    மழலைப்பள்ளி மாணவர்கள்

    பத்து மழலைப்பள்ளி மாணவர்களில் ஒருவருக்கு மருத்துவரீதியான பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. மற்றவர்களை விட, இவர்களையே நாம் அதிகம் கவனிக்க வேண்டும். ஏனெனில், அதுதான் கற்கத் தொடங்கும் பருவம். இவர்களுக்குப் பார்வைக் குறைபாடு இருந்தால் கல்வி கற்பது பெரும் பிரச்னையாக அமையும். அவ்வாறு பார்வைக் குறைபாடு உள்ளவர்களை அவர்களது செயல்பாடுகளை வைத்தே, நாம் எளிதில் கண்டு கொள்ளலாம்.

    அவர்களால் ஓவியம் தீட்ட முடியாது. அவர்களது கவனிக்கும் திறன் குறைந்திருக்கும். உதாரணத்துக்கு, உட்கார்ந்து ஒரு கதை கேட்கக்கூட அவர்களால் இயலாது. பள்ளியில் செயல்திறன் குறைவாக இருக்கும். இவற்றை வைத்தே நாம் அறிந்து கொள்ளலாம்.

    மழலைப் பள்ளி மாணவர்கள்

    பள்ளி மாணவர்கள்

    மூன்று வயதில் பார்வைக்குறைபாடு இருக்கிறதா எனப் பரிசோதனை செய்தபிறகு, ஆறு வயதில் மீண்டும் கண் பரிசோதனை செய்வது மிகவும் அவசியமாகும். இந்த வயதில் ஐந்தில் ஒரு மாணவருக்குப் பார்வை தொடர்பான பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவர்கள் அடிப்படை கண் சோதனையிலும்கூட தேறிவிடுவார்கள். ஆனால் பார்வைக் குறைபாட்டை உரிய நேரத்தில் கண்டுபிடிக்கவில்லை என்றால், அவர்களது பள்ளிப் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

    பார்வைக் குறைபாட்டை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்

    * அடிக்கடி வரும் தலைவலி

    * அதிகப்படியாக கண்களைத் தேய்ப்பது

    * புத்தகம் அல்லது செல்போனை அருகிலோ அல்லது தொலைவிலோ வைத்துப் பயன்படுத்துவது.

    * ஒரு கண்ணை மூடிக்கொண்டு படிப்பது.

    * கண்களைச் சுழற்றுவது

    * வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகள்

    * கவனம் செலுத்த இயலாமை

    * திடீரென மதிப்பெண்கள் குறைவது

    * வகுப்பறையில் கரும்பலகையில் உள்ள எழுத்துகளைப் பார்ப்பதில் பிரச்னை.

    இவை அனைத்தும் பார்வைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக இருப்பதால், இந்த செயல்பாடுகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

    கண்ணாடி

    சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளைத் தவிர்க்கும் வழிமுறைகள்!

    * சிறுவர்களுக்கு பார்வைப் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை உடனே கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, முழுமையாகப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.

    * இரண்டு அடிக்கும் குறைவான தூரத்தில் அமர்ந்து டி.வி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அரைமணி நேரத்துக்கு மேல் இடைவிடாமல் தொடர்ச்சியாக புத்தகம் படிப்பதையும், அதிக நேரம் தொலைபேசி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

    * பிறந்த குழந்தைக்கு கட்டாயம் கண் பரிசோதனையை நாம் மேற்கொள்ளவேண்டும். அதன் பிறகு 6 முதல் 12 மாதத்துக்குள் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. மூன்று வயது அடையும்போதும், பிறகு பள்ளிப்பருவ வயதிலும் நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இப்படி குழந்தைப் பருவம் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் கண் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

    * பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை வைத்தே பார்வைக் குறைபாடுகளை கண்டறியலாம். பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளின் பார்வை தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்படவேண்டும். ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், பிள்ளைகளுக்கு பார்வைக்குறைபாடு ஏற்படாமல் நாம் பாதுகாக்கலாம்.

    கண் பரிசோதனை

    பார்வைக் குறைபாடுகளைத் தவிர்க்கும் பொதுவான வழிமுறைகள்!

    * கண்களுக்கோ அல்லது பார்வைக்கோ எந்த ஒரு பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக கண் மருத்துவரை அணுகவும். இதனால், குளூக்கோமா எனும் கண் அழுத்த நோய் போன்ற பார்வை இழப்பு நிலையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த உதவும்.

    * கண்களுக்கு எவ்விதக் கேடும் ஏற்படாதவகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பணிகளை நாம் மேற்கொள்ளும்போது, அதற்கான பாதுகாப்பு முறைகளைக் கையாளவேண்டும்.
    நோய் முற்றிய நிலையில் குழாய் வெடித்து உள்ளேயே ரத்தம் வெளியேறிகொண்டு இருக்கும். சில சமயம் (eczema) மற்றும் தோல் சம்மந்தமான பிரச்சனை ஏற்படும்.
    நீண்ட நேரம் நிற்க முடியாமை, கால்களில் சிலந்தி வலை போன்று நரம்புகள் சுருண்டு குடைச்சல் தருவதை நரம்பு சுருட்டல் அல்லது நரம்புசுளிவு (varicosis veins) என்கிறோம்.

    இதனை கவனிக்காமல் விட்டால் இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும். இதனை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறுவதை பார்ப்போம்.

    பொதுவாக இடுப்பிற்கு கீழ் தொடையின் பின்புறமாக கீழ் நோக்கி பாதம் வரைக்கும் சிலந்தி வலை தோற்றம் போன்று காணப்படும். பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் பெரிதாகவும், தடிமனுடனும், அதிக வளைவுடனும் தனித்து தென்படும்.

    பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் இயல்பாக ரத்தத்தின் வேகம் குறைந்தும் மேல் நோக்கி நகர்ந்து போக முடியாத நிலையும் அங்கேயே தங்கி பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.

    10 முதல் 20 சதவீத மக்கள் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு வெளியில் காட்டாத சிறிய நிலையிலும், சிலருக்கு எளிதில் வெளியில் தெரியும் நிலையிலும் உள்ளது.

    குறிப்பாக 30 முதல் 70 வயதினரிடையே இந்நோய் தாக்கம் அதிகம் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் உள்ளது.

    தற்போதைய ஆராய்ச்சியில் பாதிப்பிற்குள்ளான 50 சதவீத மக்களிடம் பாரம்பரியமாக இந்நோய் இருப்பதாக கூறுகிறார்கள். நமது கால்களில் ரத்த ஓட்டம் சீராக ஓடாமல் இருப்பதால் ஏற்படுகிறது.

    அதுமட்டும் இல்லாமல் ரத்தகுழாய்களில் உள்ள வால்வுகளின் செயல்பாடுகளில் தளர்ச்சி மிகுதியால் ரத்தம் பின்நோக்கி சென்று ஒரே இடத்தில் அதிலும் தோலுக்கு அடியில் உள்ள ரத்த குழாயில் வீக்கம் ஏற்பட்டு தென்படும்.

    இதனையே வெரிக்கோசிஸ்வெயின் என்கிறோம். பொதுவாக செக்யூரிட்டி நபர்கள், தள்ளுவண்டி ஓட்டுநர், போர் வீரர்கள், துணி துவைப்பவர்கள், ஓட்டுநர் போன்றவர்களையும், அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்யும் பெண்களையும் பாதிக்கிறது.

    காரணங்கள்: அதிக நேரம் நிற்பது, நடப்பது, உட்காருவது, அதிக உடல் எடை, கர்ப்பகாலத்தில் வருவது பிரசவத்திற்கு பின்னர் இருப்பது இல்லை.

    ரத்தநாளங்களில் உள்ள வால்வுகள் செயல் இழப்பதாலும், ரத்த குழாய் மெல்லியதாகி தளதளஎன ஆகிவிடுகிறது. வெட்டுகாயம், அடிபட்டாலும் வரலாம்.

    அறிகுறி: இடுப்பிற்கு கீழ் ஒன்றுக்கு அதிகமான நரம்புகள் சுருண்டும், வீங்கியும் சிலந்தி கூடு போன்று தென்படும். சில சமயம் இரவுநேரம் வலி வீக்கம், பாதம் மரத்து போகும் நிலை ஏற்படுகிறது.

    நோய் முற்றிய நிலையில் குழாய் வெடித்து உள்ளேயே ரத்தம் வெளியேறிகொண்டு இருக்கும். சில சமயம் (eczema) மற்றும் தோல் சம்மந்தமான பிரச்சனை ஏற்படும்.

    கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டால் வால்வுகளில் கோளாறு இருப்பதாக கருதலாம். நோயினால் வரும்

    பிரச்னைகள்: தோலுக்கடியில் உள்ள ரத்த நாளங்களில் வலி. தோல் சிவந்து காணப்படும். இதற்கு காரணம் ரத்தம் உறைந்து கட்டி ஆவதே. உள்ளேயே ரத்தநாளம் உடைந்து உள்ளேயே கட்டி நின்று தீரா காரணங்களையும் ஏற்படுத்தி விடும்.

    டிவிடி (deepveinthromfosis) என அழைக்கப்படும் சிறிய ரத்த உறைவுகள் பல ரத்த குழாய்களின் உள் ஒட்டி கொண்டு இருக்கும். இது ரத்தத்தோடு மேல் நோக்கி போய் இருதயம் மற்றும் மூளையில் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இதனை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே உதவியுடன் கண்டறியலாம்.

    சிகிச்சை: ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் கால்களில், பெருந்தொடையில் இருந்து சிறு தொடை வரை நீளகால் உறை அணிவதன் மூலம் குணம்கிடைக்கிறது.

    ரத்த குழாய் சிலந்தி வலை போன்று காணப்பட்டால் மைக்ரோஸ்கிளிரோதெரபி எனும் அறுவை சிகிச்சை மூலமும், லேசர், ஆம்புலேட்டரி பிளப்பக்டமி மூலம் குழாய்களை வெட்டி அகற்றியும் சிகிச்சை மூலம் பலன்பெறலாம்.

    ஆயுர்வேத சிகிச்சை: தோல் மருந்துகளான மஞ்சள். சுக்கு, பெருங்காயம், மிளகு, அந்தி மந்தாரை, வெண்தேக்கு, திப்பிலி, சகச்சரம், சிறுவில்வம், புங்கை, குகுலு, மூக்கிரட்டை, கொடுவேலி, மாவிலங்கம், வாய்விடங்கம், வில்வம், நெருஞ்சிள், திரிபலா, பூண்டு, நன்னாரி, சீந்தில், தசமூலம், அக்கினிமந்தை, மூங்கில் உப்பு, இந்துப்பு போன்றவை நல்ல பயன்களை தருகிறது. ரத்தத்தை வெளியில் எடுக்கும் ரத்தமோட்சணம் மற்றும் வஸ்தி போன்ற சிகிச்சை சிறந்தது.

    தவிர்ப்பு முறை: அதிக நேரம்நிற்ககூடாது. இருக்கவும் கூடாது. சீரான உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாகவும், உடல் எடையை குறைத்தும், உயர்ந்த காலனிகளை தவிர்க்கவேண்டும். இறுகிய உடை அணிவதையும் தவிர்க்க வேண்டும்.

    ஒரு நாள் ஒரு முறையேனும் கால்களை இருதய மட்டத்திற்கு மேல் வைக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் நீண்ட கால் உறைகளை அணிவதன் மூலம் வீக்கம், வலியை தவிர்க்கலாம். தயிர், வறுத்த, பொறித்த, துரித, குளிர்ந்த உணவுகளை தவிர்க்கவேண்டும்.

    வீட்டு வைத்தியம்: வசம்பு, மஞ்சள், துளசி, சமபங்கு எடுத்து சோற்றுக் கற்றாளையில் அரைத்து பூசலாம். இரண்டு மணி நேரம் உலர விட்டு 20 நாள் வரை செய்ய வேண்டும்.

    புங்கன் விதை மற்றும் ஆமணக்கு எண்ணெய் 10 மில்லி உடன் 5 மில்லி தேன் சேர்த்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். வலி வீக்கம் இருந்தால் பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.
    எண்ணெய் சருமம் கொண்டவர்கள் மாம்பழத்துடன் தயிர் கலந்து உபயோகிக்கலாம். முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்குவதற்கும் மாம்பழத்தை பயன்படுத்தலாம்.
    மாம்பழங்களை ருசித்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் சரும அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம். ஒருசிலருக்கு தோலின் நிறம் சீரற்ற தன்மையுடன் காணப்படும். அவர்கள் சரும அழகை சீராக்குவதற்கு மாம்பழத்தை கூழாக தயாரித்து பயன்படுத்தலாம். மாம்பழத்தின் தோல் மற்றும் கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் கூழாக அரைத்து சருமத்தில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தின் நிறம் மேம்படும்.

    மாம்பழக் கூழுடன் கடலை மாவு, தேன், அரைத்த பாதாம் சேர்த்தும் பயன்படுத் தலாம். ஒரு பவுலில் மாம் பழக்கூழை கொட்டி அதனுடன் இரண்டு டீஸ்பூன் கடலை மாவு, அரை டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கூழ் கலவையுடன் பாதாமை அரைத்து சேர்த்து முகத்தில் பூச வேண்டும். கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவி விடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சருமத்தில் நல்ல மாற்றம் தென்படும். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் மாம்பழத்துடன் தயிர் கலந்து உபயோகிக்கலாம். மாம்பழத்தை கூழாக்கி அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் பூசி வரலாம்.

    முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்குவதற்கும் மாம்பழத்தை பயன்படுத்தலாம். மாம்பழ தோலை உலரவைத்து பொடித்து அதனுடன் முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.
    காலையில் அல்லது மாலையில் சத்தான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் இந்த பொரி வெஜிடபிள் சாலட் செய்து சாப்பிடலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள்

    பொரி - 1 கப்
    வெங்காயம் - 2
    கொத்தமல்லி சட்னி - 2 ஸ்பூன்
    கேரட் - 2
    வேர்க்கடலை - கால் கப்
    ப.மிளகாய் - 2
    பீட்ரூட் - 2
    கொத்தமல்லி தழை - 1 கையளவு
    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை :

    ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும்.

    வேர்கடலையை வேக வைத்து  கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொரியை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், வேர்க்கடலை, கொத்தமல்லி சட்னி, துருவிய கேரட், பீட்ரூட் மற்றும் கொத்தமல்லி தழை ஆகியற்றை சேர்த்து, நன்கு கலந்துகொள்ளவும்.

    பின், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து, உடன் எலுமிச்சை சாறு கலந்தால் சுவையான பொரி வெஜிடபிள் சாலட் தயார்.

    வீகன் உணவு முறையுடன், தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, சீரான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றுவது அவசியம்.
    உடல் எடையைக் குறைப்பதற்காக ஒவ்வொருவரும் பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர். இதற்காகவே பல விதமான உணவு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. அதில் ‘வீகன்' உணவு முறையும் ஒன்று.

    ‘வீகன்' என்பது அசைவ உணவுகளைத் தவிர்த்து, தாவர உணவுகளை சாப்பிடுவதாகும். இந்த உணவு முறை ஒவ்வொருவர் விருப்பத்திற்கு ஏற்றது போல அமையும்.

    வீகன் உணவு முறையில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற தாவர உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும். இவற்றில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது.

    இந்த உணவு முறையை பின்பற்றுபவர்கள், விலங்குகளின் தோலில் இருந்து தயாரிக்கும் பொருட்களைக் கூட தவிர்த்து விடுவார்கள். பால், நெய், மாமிச உணவுகள், முட்டை, தேன் ஆகியவற்றைத் தவிர்ப்பார்கள்.

    ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைப்பதற்கு வீகன் முறை சிறந்தது. உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் வயதுக்கு ஏற்ப எவ்வளவு எடையைக் குறைக்க  வேண்டும்? என்ன காரணத்தினால் எடை அதிகமாகி இருக்கிறது? ஏதேனும் உடல் நலக்குறைபாடு இருக்கிறதா? போன்ற அனைத்து விஷயங்களையும் பரிசோதித்த பின்னர் மருத்துவரின் ஆலோசனையோடு வீகன் உணவு முறையைப் பின்பற்றலாம்.

    ஒரு நாளில் இரண்டு முறை தானியங்கள், மூன்று முறை காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் அல்லது பாலுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருட்களை சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள்,  சரியான நேரத்திற்கு சாப்பிடுவது முக்கியமானது.

    சாப்பிடும் உணவில் ஒரு நாளுக்கு தேவையான கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டும். இவை உடல் சீராக இயங்குவதற்கு அத்தியாவசியமானதாகும்.

    வீகன் உணவு முறையுடன், தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, சீரான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றுவது அவசியம். அப்போது தான் உடல் எடை எளிதாக குறையும். மேலும், அதிக இனிப்புகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், சோடா போன்றவற்றை தவிர்க்க
    வேண்டும்

    சேலை மட்டுமல்லாமல் சுடிதார், சல்வார் உள்ளிட்ட நவீன ஆடைகளுக்கு ஏற்றபடி அணிய கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கலாம். இவற்றை இளம்பெண்கள் விரும்பி வாங்குவார்கள்.
    இன்றைய காலக்கட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் கிரிஸ்டல் நகைகளை விரும்பி அணிகிறார்கள். பார்ப்பதற்கு ஆடம்பரமாக காட்சியளிப்பதால் இது அனைவரையும் கவர்கிறது. விலை மிகவும் குறைவாக இருப்பதோடு விரும்பிய மாடலில் கிடைப்பதால், பல பெண்கள் ஆர்வத்தோடு வாங்குகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகள் அவரவர் உடைக்கேற்ப மேட்சிங்காக அணிய, பல்வேறு வண்ணங்களில் கிரிஸ்டல் நகைகளுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். பெண்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய ஏற்ற தொழில் கிரிஸ்டல் நகை தயாரிப்பாகும். பெரியளவில் பயிற்சி எதுவும் தேவையில்லை.

    கிரிஸ்டல் நகை தயாரிப்பு என்பது தங்க, வெள்ளி நகைகளைபோல் உருக்கி, தட்டி செய்வதல்ல. ரெடிமேடாக உள்ள பல வண்ண கிரிஸ்டல் மற்றும் இணைப்பு பொருட்களான சக்கரியா, பால் ஆகியவற்றை சேர்த்து கோர்ப்பதுதான். சிறுமிகள், இளம்பெண்கள், வயதானவர்கள் அணிவதற்கேற்ப குறைந்த நீளம், நடுத்தர நீளம், அதிக நீளம் ஆகிய அளவுகளில் கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. முதலில் கிரிஸ்டல் வயர் கம்பியை கட்டரை கொண்டு தேவையான அளவுகளில் வெட்டிக்கொள்ள வேண்டும். 2 பேர் கூட்டாக செய்தால், முதலில் டாலரை கோர்த்து நடுவில் தொங்கவிட்டு, இரு முனைகளில் ஒரு பால், ஒரு சக்கரியா, ஒரு கிரிஸ்டல் கல் ஆகியவற்றை வரிசைப்படி கோர்க்க வேண்டும்.

    அதே பாணியில் தொடர்ந்து கோர்த்து வரவேண்டும். இவ்வாறு இருபுறமும் கோர்த்து முடிக்கும் இடத்தில் கியர் லாக்கை கோர்த்து கட்டிங் பிளேயர் மூலம் முடிச்சுபோட வேண்டும். இங்கு ஊக்கு, காந்தம் அல்லது ஸ்க்ரூ பொருத்தினால் கிரிஸ்டர் நகை ரெடியாகி விடும்.

    சேலை மட்டுமல்லாமல் சுடிதார், சல்வார் உள்ளிட்ட நவீன ஆடைகளுக்கு ஏற்றபடி அணிய கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கலாம். இவற்றை இளம்பெண்கள் விரும்பி வாங்குவார்கள். இந்த கிரிஸ்டல் நகை குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.300 வரை கிடைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பொலிவு குன்றாமல் காட்சியளிக்கும். கலைநயத்தோடு இருப்பதால் வயதானவர்களும் விரும்பி வாங்குவார்கள்.

    தோழிகளுக்கு பரிசளிக்கவும் பெண்கள் இவற்றை விரும்பி வாங்குகின்றனர். கிரிஸ்டல் செயின் மட்டுமல்லாமல் கிரிஸ்டல் தோடு, கிரிஸ்டல் கொலுசு ஆகியவற்றையும் எளிதில் தயாரிக்கலாம். தனிப்பட்ட முறையில் விற்பது மட்டுமல்லாமல் பேன்சி ஸ்டோர்கள், கவரிங் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். ஒளியை பிரதிபலித்து மின்னுவதால் லைட் கலர் கிரிஸ்டல் நகைகளை இளம்பெண்கள் வாங்குகின்றனர். பெரியவர்கள் அடர்வண்ண கிரிஸ்டல் நகைகளை விரும்புகிறார்கள். பொறுமையும், அழகுணர்ச்சியும் உள்ளவர்கள் புதுப்புது டிசைன்களில் கிரிஸ்டல் நகையை உருவாக்கலாம். இதன்மூலம் எளிதில் வாடிக்கையாளர்களை பெருக்க முடியும்.

    ஒரு நாள் உற்பத்தியாகும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கிரிஸ்டல் நகைகளை குறைந்தபட்சம் 30 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்க முடியும். இதன்மூலம் ஒரு நாள் வருவாய் ரூ.6,500. இதில் லாபம் ரூ.1,500 கிடைக்கும். ஒருநாள் தயாரித்ததை விற்றபின் அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு அடுத்த உற்பத்தியை தொடங்கலாம். விற்பனை அளவுக்கேற்ப உற்பத்தியை அதிகரித்தால் வருவாய் கூடும்.
    ×