என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கடலூர் பாதிரிக்குப்பம் திரவுபதை அம்மன் கோவிலில் இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவம் நடக்கிறது. வருகிற 1-ந்தேதி பட்டாபிஷேகத்துடன் விழா முடிகிறது.
கடலூர் பாதிரிக்குப்பத்தில் திரவுபதை அம்மன் உடனுறை தர்மராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் திரவுபதை அம்மன், தர்மராஜா சாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாணம், கரக திருவிழா நடந்தது. நேற்று சிகர நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் கைக்குழந்தைகளுடனும் தீ மிதித்தனர். முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடந்தது.
விழாவை காண பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, அரிசிபெரியாங்குப்பம், கே.என்.பேட்டை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இது தவிர திடலில் இன்னிசை கச்சேரியும் நடந்ததால், ஏராளமானோர் குவிந்தனர். சாலையோர இருபுறமும் தற்காலிக கடைகளும் வைக்கப்பட்டதால், மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கடலூர் - திருவந்திபுரம் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. பொதுமக்களும் திரண்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் ஒழுங்குப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். இருப்பினும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து சென்றதை பார்க்க முடிந்தது.
விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவம் நடக்கிறது. வருகிற 1-ந்தேதி பட்டாபிஷேகத்துடன் விழா முடிகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜேஸ்வரன், தக்கார் சுபத்ரா மற்றும் பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, அரிசிபெரியாங்குப்பம், கே.என்.பேட்டை ஊர் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
விழாவை காண பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, அரிசிபெரியாங்குப்பம், கே.என்.பேட்டை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இது தவிர திடலில் இன்னிசை கச்சேரியும் நடந்ததால், ஏராளமானோர் குவிந்தனர். சாலையோர இருபுறமும் தற்காலிக கடைகளும் வைக்கப்பட்டதால், மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கடலூர் - திருவந்திபுரம் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. பொதுமக்களும் திரண்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் ஒழுங்குப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். இருப்பினும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து சென்றதை பார்க்க முடிந்தது.
விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவம் நடக்கிறது. வருகிற 1-ந்தேதி பட்டாபிஷேகத்துடன் விழா முடிகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜேஸ்வரன், தக்கார் சுபத்ரா மற்றும் பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, அரிசிபெரியாங்குப்பம், கே.என்.பேட்டை ஊர் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
இத்தலத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கின்ற பெருமையுடைய தலம். சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்ற தலம்.
இறைவர் திருப்பெயர் : திருகோடீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி
தல மரம் : பிரம்பு
தீர்த்தம் : சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரிநதி
தல வரலாறு:
சிவனின் தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 37வது தலம். ஒரு சமயம் கைலாசத்தையும், திருகோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய்விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட தலம் இது என்று சிவபெருமானால் சிலாகித்து கூறப்பட்ட தலம்.
திருகோடிக்கா என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் சிவபெருமான் கட்டளையிடுகிறார். காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இன்றுவரை இவ்வூரில் மயானம் தனியாக இல்லை இங்கு இறப்பவர்களுக்கு அமைதியான மரணம் தான் நிகழ்கின்றது, துர் மரணங்கள் இல்லை, இங்கு இறப்பவர்களை இன்றுவரை பக்கத்து ஊரில் தான் அடக்கம் செய்கிறார்கள்.
எமனின் கை மற்றும் கால்கள் விலங்கால் கட்டப்பட்டுள்ளது. இத்தலத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கின்ற பெருமையுடைய தலம். சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்ற தலம். அதேபோல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ள தலம்.
தலத்தின் தீர்த்தமான் காவேரி நதி உத்திரவாஹினியாக தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது. கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் இத்தலத்தில் காவிரியில் நீராடினால், எல்லா பாவங்களும் தொலைந்துவிடும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் உள்ள சனிபகவான் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன்மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கற்றளியாக திரும்பக் கட்டப்பட்ட சிறப்பையுடைய தலம்.
மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக மந்தரங்களை உச்சரித்து சாப விமோசனம் பெற்ற தலம். மந்திரங்கள் தவறான கொள்கைக்கு பயன்படுத்தப் பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்ட துர்வாசர் மந்திரத்திற்கு சாபம் கொடுத்தார். மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக உச்சிக்கப்பட்டு சாபவிமோசனம் பெற்றன.
அதேபோல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை செய்துள்ளனர். எனவே இத்தல இறைவனின் திருநாமம் "கோடீஸ்வரர்' என்றும், ஊர் "திருக்கோடிக்கா' அழைக்கப்பட்டது.
திரிகோடி மந்திரங்களுக்கு சாயுஜ்ய முக்தி கிடைத்தல் இத்தலத்தின் மகிமையை விளக்கும் வரலாறு " ஆதிசைவ ருத்ரகோடி ஸம்ஹிந்தை' என்ற சிவபுராணத்தில் சாயுஜ்ய காண்டத்தில், முப்பத்தி மூன்று அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. நைமிசாரணியத்தில், சனகாதி முனிவர்களுக்கு, சூத பௌராணிகர் நிகழ்ச்சிகளை விவரிப்பதாக அமைந்துள்ளது. அதைச் சுருக்கமாகக் காண்போம்.
க்ரத யுகத்தில், பன்னீராயிரம் ரிஷிகளும் (வாலகில்ய மற்றும் வைகானஸ் முனிவர்கள்), மூன்று கோடி மந்திர தேவதைகளும், "சாயுஜ்' முக்தி (ஞானமுக்தி) அடையும் பொருட்டு, வேங்கடகிரியில், திருவேங்கடமுடையான் (வெங்கடேசப் பெருமாள்) திருச்சன்னதியில், மந்திரங்களைக் கோஷித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் அங்குவந்த "துர்வாச மகரிஷி' இவர்களின் நோக்கத்தை அறிந்து, பரிகசித்தார். பின் அவர்களைப் பார்த்து ""சாயுஜ்ய முக்தியை தவத்தாலோ அல்லது மந்திர சக்தியாலோ பெற முடியாது. ஞானத்தால் மட்டும் தான் பெறமுடியும் குருவிற்கு பணிவிடை செய்து, அவரது ஆசியைப் பெற்ற அத்யாத்ம வித்தையைப் பயின்று, பிரம்ம ஞானம் பெற்று, பின் பரமேஸ்வரனின் அனுக்கிரஹத்தால் மட்டும் தான் "ஞானமுக்தி' பெற முடியும் என்று கூறினார்.
இதைக் கேட்ட மந்திர தேவதைகளுக்கு கடும் கோபம் வந்தது. தங்கள் வலிமையைப்பழித்த துர்வாசரைத் தூற்றினர். ""முக்தியடைய எங்களுக்கு சக்தியில்லை என்கிறீர்களா? வெங்கடாஜலபதியை குறித்து தவம் செய்து, இக்கணமே தாங்கள் முக்தியடையவோம்'' என்று சூளுரைத்தனர். தம்மையும் பிரம்ம வித்தையையும் அவமதித்த மந்திர தேவதைகளை நீங்கள் பலப்பல ஜென்மங்கள் எடுத்து துன்பப்பட்டு இறுதியில்தான் முக்தி பெறுவீர்கள். அதுவும் இந்த ஷேத்திரத்தில் கிடைக்காது. வெங்கடேசப் பெருமாளும் அதை உங்களுக்கு அளிக்க முடியாது. என்று துர்வாசர் சபித்தார்.
துர்வாசருடைய கோபத்தைப் பொருட்படுத்தாத மந்திர தேவதைகள், தாங்கள் சபதம் செய்ததுபோல், திருமயிலையிலேயே தங்கி புஷ்கரணியில் ஸ்ரீ நாராயணனைத் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினர். ஆனால் பன்னீராயிரம் ரிஷிகள், துர்வாசருடைய அறிவுரையை ஏற்று, அவரைப் பின் தொடர்ந்து காசிக்குச் சென்றனர். அங்கு மணிகர்ணிகையில் நீராடி, டுண்டிகணபதி, விஸ்வேஸ்வரர், விசாலாட்சி, பிந்துமாதவர் மற்றும் காலபைரவரை தரிசனம் செய்தனர். மகரிஷிகளுக்கு எதை உபதேசம் செய்வது என்று துர்வாசர் சிந்தித்துக் கொண்டிருக்கும் சமயம், ஸ்ரீ விஸ்வநாதரான வேத்ரவனேஸ்வரர் (திருக்கோடீஸ்வரர்) அவரது கனவில் தோன்றி, மகரிஷிகளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து "அத்யாத்ம' வித்தையை கற்றுத் தரும்படியும், ஒரு மாதம் காசியில் தங்கிவிட்டு பின் மகரிஷிகளுடன் வேத்ரவனத்திற்கு (திருக்கோடிக்கா) வரும்படியும் கட்டளையிடுகிறார்.
அவ்வாறே துர்வாசர் திருக்கோடிக்கா தலத்திற்கு வந்து சேர்ந்தார். பின் திருக்கோடீஸ்வரரின் ஆனைப்படி, மகரிஷிகளுக்கு சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து, அத்தீர்த்தத்தை சிறிது கையில் எடுத்துக்கொண்டு, அவர்களுடன் முக்கோடி மந்திரமந்திரதேவதைகள் கடுந்தவம் புரியும் இடமான திருமயிலைக்கு வந்தார்.
அப்போது ஸ்ரீதிருக்கோடீஸ்வரர், அம்பாள் திரிபுரசுந்தரி மற்றும் இரு புத்திரர்கள், பரிவாரங்களுடன் வந்து திவ்யதரிசனம் கொடுத்தார். ஸ்வாமியின் முன்னிலையில் துர்வாசர் தன் கையில் கொண்டு வந்திருந்த, சிருங்கோத்பவ தீர்த்தத்தை, பன்னீராயிரம் ரிஷிகளுக்கும் தலையில் தெளிக்க, அப்போது ஓர் ஜோதி தோன்றி முனிவர்கள் யாவரும் அதில் ஐக்கியமானர்கள். அவர்களுக்கு ஞான முக்தி கிட்டிவிட்டது.
இதைக் கண்ணுற்ற மந்திரதேவதைகள், துர்வாசரைப் பார்த்து, ""உங்கள் முயற்சியாலோ, பரமேஸ்வரனின் அருளாலோ மகரிஷிகளுக்கு ஞானமுக்தி கிடைக்கவில்லை. அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மபலன்களால் தான் அது கிட்டியது. நாங்கள் எப்படியாவது, ஸ்ரீ நாராயணனிடமிருந்தே சாயுஜ்ய முக்தியை பெருவோம் பாருங்கள்'' என்று சூளுரைத்தார்கள். மந்திரதேவதைகளின் கர்வம் இன்னும் அடங்கவில்லை என்பதைக் கண்ணுற்ற துர்வாசர் மிக்க கோபம் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
சுவாமி புஷ்கரணியின் கரையில் தவமிருந்த திரிகோடி மந்திரதேவதைகளுக்கு பல இடையூறுகள் ஏற்படவே, அவை அங்கிருந்து புறப்பட்டு பத்ரிகாச்சரம், நைமிசாரணியம், துவாரகை, கோஷ்டிபுரம் முதலிய வைணவ தலங்களுக்குச் சென்று தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் முன் ஸ்ரீ நாராயணன் தோன்றி ""நீங்கள் துர்வாசரை விரோதித்துக்கொண்டு, அவரது கோபத்திற்கு ஆளானது மிகத்தவறு. என்னால் உங்களுக்கு சாயுஜ்ய முக்தி தர இயலாது. பரமசிவனால் மட்டும்தான் அது சாத்தியம். ஆகவே அவரை வழிபடுங்கள்'' எனக் கூறுகிறார்.
மாற்றமடைந்த முக்கோடி மந்திர தேவதைகள், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல், திகைத்து நின்றபோது நாரத முனிவர் தோன்றி ""பரமேஸ்வர பிரசாதத்தால் மட்டுமே ஞான முக்தி பெறமுடியும்.'' என வலியுறுத்துகிறார். துர்வாசர் போன்றே, இவரும் கூறியதைக்கேட்டு, கோபமடைந்த மந்திரதேவதைகள், நாரதரையும் இழிவாகப் பேசினர். நாரதர் அவர்களைப் பார்த்து நீங்கள் நூறு ஜென்மங்கள், மீண்டும் பிராம்மணர்களாகப் பிறந்து, கடைசி ஜென்மத்தில் ஸ்ரீ நாராயணனின் அனுக்கிரஹத்தால் முக்தி பெறுவீர்கள்'' என்று கூறி மறைந்து விடுகிறார். இதைக் கேட்டு ஓரளவு சமாதானம் அடைந்த மந்திரதேவதைகள் பிராம்மண வடிவம் ஏற்று, நூற்றெட்டு திவ்ய தேசங்களிலும், ஸ்ரீ நாராயணனைக்குறித்து, தவமிருந்து விட்டு, கடைசியாக, சுவேத தீவிற்கு வந்தனர். இவர்களது தீவிர தவத்தைக் கண்டு, என்ன செய்வது என்று புரியாத ஸ்ரீ நாராயணன், வீரபத்திரரிடம் செய்தியைக் கூறி, ஆலோசனை கேட்கிறார். வீரபத்திரர் அவரிடம் திருக்கோடிக்கா தலத்தின் மகிமையை எடுத்துக் கூறுகிறார்.
இந்த ஜகத்தில் பாவக ஷேத்திரம் ஒன்று உள்ளது. அதில் பிப்பல விருட்சம் (அரசமரம்) அதிக உத்தமமாக விளங்குகிறது. அங்கு ஸர்வேஸ்வரன், திருக்கோடீஸ்வரர் என்ற நாமதேயத்துடன் ஸ்ரீ திரிபுரசுந்தரி தேவியுடன், ஆவிர்பவித்து இருக்கிறார். அங்கே சிருங்கோத்பவ தீர்த்தம், சித்ர குப்த தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், குபேரதீர்த்தம், அக்னி தீர்த்தம், துர்கா தீர்த்தம், பூத தீர்த்தம், காளி தீர்த்தம், நிர்நதி தீர்த்தம் என்ற மஹா தீர்த்தங்கள் உள்ளன. இங்கு பரமசிவனை ஆராதித்து, தர்ம, அர்த்த, காம, மோஷ என்கிற நான்கு புருஷார்த்த தேவதைகள் ஸித்தி பெற்றன. மேலும் ஸப்தரிஷிகளும், ஸனாகதி முனிவர்களும் மற்றும் அநேக மகான்களும் சித்தி பெற்றுள்ளார்கள். தவிர, ஜமதக்னி முனிவரின் புதல்வரான பரசுராமர், தன் தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஸத்தி தோஷம், ஸ்ரீ ராமருக்கு ஏற்பட்ட "பிரம்மஹத்தி' தோஷம், பிரலம்பாசுரனைக் கொன்றதால் பலராமனுக்கு நேர்ந்த பாவம், தட்சயாகத்தில் பலபேரைக் கொன்றதால் எனக்கும், காளிக்கும் ஏற்பட்ட "மஹா ஹத்யா பாபம்,' இவற்றிற்கெல்லாம், திருக்கோடிக்கா ஸ்தலத்தில்தான் பாப நிவர்த்தி கிடைத்தது.
இறைவியார் திருப்பெயர் : வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி
தல மரம் : பிரம்பு
தீர்த்தம் : சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரிநதி
தல வரலாறு:
சிவனின் தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 37வது தலம். ஒரு சமயம் கைலாசத்தையும், திருகோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய்விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட தலம் இது என்று சிவபெருமானால் சிலாகித்து கூறப்பட்ட தலம்.
திருகோடிக்கா என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் சிவபெருமான் கட்டளையிடுகிறார். காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இன்றுவரை இவ்வூரில் மயானம் தனியாக இல்லை இங்கு இறப்பவர்களுக்கு அமைதியான மரணம் தான் நிகழ்கின்றது, துர் மரணங்கள் இல்லை, இங்கு இறப்பவர்களை இன்றுவரை பக்கத்து ஊரில் தான் அடக்கம் செய்கிறார்கள்.
எமனின் கை மற்றும் கால்கள் விலங்கால் கட்டப்பட்டுள்ளது. இத்தலத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கின்ற பெருமையுடைய தலம். சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்ற தலம். அதேபோல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ள தலம்.
தலத்தின் தீர்த்தமான் காவேரி நதி உத்திரவாஹினியாக தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது. கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் இத்தலத்தில் காவிரியில் நீராடினால், எல்லா பாவங்களும் தொலைந்துவிடும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் உள்ள சனிபகவான் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன்மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கற்றளியாக திரும்பக் கட்டப்பட்ட சிறப்பையுடைய தலம்.
மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக மந்தரங்களை உச்சரித்து சாப விமோசனம் பெற்ற தலம். மந்திரங்கள் தவறான கொள்கைக்கு பயன்படுத்தப் பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்ட துர்வாசர் மந்திரத்திற்கு சாபம் கொடுத்தார். மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக உச்சிக்கப்பட்டு சாபவிமோசனம் பெற்றன.
அதேபோல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை செய்துள்ளனர். எனவே இத்தல இறைவனின் திருநாமம் "கோடீஸ்வரர்' என்றும், ஊர் "திருக்கோடிக்கா' அழைக்கப்பட்டது.
திரிகோடி மந்திரங்களுக்கு சாயுஜ்ய முக்தி கிடைத்தல் இத்தலத்தின் மகிமையை விளக்கும் வரலாறு " ஆதிசைவ ருத்ரகோடி ஸம்ஹிந்தை' என்ற சிவபுராணத்தில் சாயுஜ்ய காண்டத்தில், முப்பத்தி மூன்று அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. நைமிசாரணியத்தில், சனகாதி முனிவர்களுக்கு, சூத பௌராணிகர் நிகழ்ச்சிகளை விவரிப்பதாக அமைந்துள்ளது. அதைச் சுருக்கமாகக் காண்போம்.
க்ரத யுகத்தில், பன்னீராயிரம் ரிஷிகளும் (வாலகில்ய மற்றும் வைகானஸ் முனிவர்கள்), மூன்று கோடி மந்திர தேவதைகளும், "சாயுஜ்' முக்தி (ஞானமுக்தி) அடையும் பொருட்டு, வேங்கடகிரியில், திருவேங்கடமுடையான் (வெங்கடேசப் பெருமாள்) திருச்சன்னதியில், மந்திரங்களைக் கோஷித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் அங்குவந்த "துர்வாச மகரிஷி' இவர்களின் நோக்கத்தை அறிந்து, பரிகசித்தார். பின் அவர்களைப் பார்த்து ""சாயுஜ்ய முக்தியை தவத்தாலோ அல்லது மந்திர சக்தியாலோ பெற முடியாது. ஞானத்தால் மட்டும் தான் பெறமுடியும் குருவிற்கு பணிவிடை செய்து, அவரது ஆசியைப் பெற்ற அத்யாத்ம வித்தையைப் பயின்று, பிரம்ம ஞானம் பெற்று, பின் பரமேஸ்வரனின் அனுக்கிரஹத்தால் மட்டும் தான் "ஞானமுக்தி' பெற முடியும் என்று கூறினார்.
இதைக் கேட்ட மந்திர தேவதைகளுக்கு கடும் கோபம் வந்தது. தங்கள் வலிமையைப்பழித்த துர்வாசரைத் தூற்றினர். ""முக்தியடைய எங்களுக்கு சக்தியில்லை என்கிறீர்களா? வெங்கடாஜலபதியை குறித்து தவம் செய்து, இக்கணமே தாங்கள் முக்தியடையவோம்'' என்று சூளுரைத்தனர். தம்மையும் பிரம்ம வித்தையையும் அவமதித்த மந்திர தேவதைகளை நீங்கள் பலப்பல ஜென்மங்கள் எடுத்து துன்பப்பட்டு இறுதியில்தான் முக்தி பெறுவீர்கள். அதுவும் இந்த ஷேத்திரத்தில் கிடைக்காது. வெங்கடேசப் பெருமாளும் அதை உங்களுக்கு அளிக்க முடியாது. என்று துர்வாசர் சபித்தார்.
துர்வாசருடைய கோபத்தைப் பொருட்படுத்தாத மந்திர தேவதைகள், தாங்கள் சபதம் செய்ததுபோல், திருமயிலையிலேயே தங்கி புஷ்கரணியில் ஸ்ரீ நாராயணனைத் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினர். ஆனால் பன்னீராயிரம் ரிஷிகள், துர்வாசருடைய அறிவுரையை ஏற்று, அவரைப் பின் தொடர்ந்து காசிக்குச் சென்றனர். அங்கு மணிகர்ணிகையில் நீராடி, டுண்டிகணபதி, விஸ்வேஸ்வரர், விசாலாட்சி, பிந்துமாதவர் மற்றும் காலபைரவரை தரிசனம் செய்தனர். மகரிஷிகளுக்கு எதை உபதேசம் செய்வது என்று துர்வாசர் சிந்தித்துக் கொண்டிருக்கும் சமயம், ஸ்ரீ விஸ்வநாதரான வேத்ரவனேஸ்வரர் (திருக்கோடீஸ்வரர்) அவரது கனவில் தோன்றி, மகரிஷிகளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து "அத்யாத்ம' வித்தையை கற்றுத் தரும்படியும், ஒரு மாதம் காசியில் தங்கிவிட்டு பின் மகரிஷிகளுடன் வேத்ரவனத்திற்கு (திருக்கோடிக்கா) வரும்படியும் கட்டளையிடுகிறார்.
அவ்வாறே துர்வாசர் திருக்கோடிக்கா தலத்திற்கு வந்து சேர்ந்தார். பின் திருக்கோடீஸ்வரரின் ஆனைப்படி, மகரிஷிகளுக்கு சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து, அத்தீர்த்தத்தை சிறிது கையில் எடுத்துக்கொண்டு, அவர்களுடன் முக்கோடி மந்திரமந்திரதேவதைகள் கடுந்தவம் புரியும் இடமான திருமயிலைக்கு வந்தார்.
அப்போது ஸ்ரீதிருக்கோடீஸ்வரர், அம்பாள் திரிபுரசுந்தரி மற்றும் இரு புத்திரர்கள், பரிவாரங்களுடன் வந்து திவ்யதரிசனம் கொடுத்தார். ஸ்வாமியின் முன்னிலையில் துர்வாசர் தன் கையில் கொண்டு வந்திருந்த, சிருங்கோத்பவ தீர்த்தத்தை, பன்னீராயிரம் ரிஷிகளுக்கும் தலையில் தெளிக்க, அப்போது ஓர் ஜோதி தோன்றி முனிவர்கள் யாவரும் அதில் ஐக்கியமானர்கள். அவர்களுக்கு ஞான முக்தி கிட்டிவிட்டது.
இதைக் கண்ணுற்ற மந்திரதேவதைகள், துர்வாசரைப் பார்த்து, ""உங்கள் முயற்சியாலோ, பரமேஸ்வரனின் அருளாலோ மகரிஷிகளுக்கு ஞானமுக்தி கிடைக்கவில்லை. அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மபலன்களால் தான் அது கிட்டியது. நாங்கள் எப்படியாவது, ஸ்ரீ நாராயணனிடமிருந்தே சாயுஜ்ய முக்தியை பெருவோம் பாருங்கள்'' என்று சூளுரைத்தார்கள். மந்திரதேவதைகளின் கர்வம் இன்னும் அடங்கவில்லை என்பதைக் கண்ணுற்ற துர்வாசர் மிக்க கோபம் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
சுவாமி புஷ்கரணியின் கரையில் தவமிருந்த திரிகோடி மந்திரதேவதைகளுக்கு பல இடையூறுகள் ஏற்படவே, அவை அங்கிருந்து புறப்பட்டு பத்ரிகாச்சரம், நைமிசாரணியம், துவாரகை, கோஷ்டிபுரம் முதலிய வைணவ தலங்களுக்குச் சென்று தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் முன் ஸ்ரீ நாராயணன் தோன்றி ""நீங்கள் துர்வாசரை விரோதித்துக்கொண்டு, அவரது கோபத்திற்கு ஆளானது மிகத்தவறு. என்னால் உங்களுக்கு சாயுஜ்ய முக்தி தர இயலாது. பரமசிவனால் மட்டும்தான் அது சாத்தியம். ஆகவே அவரை வழிபடுங்கள்'' எனக் கூறுகிறார்.
மாற்றமடைந்த முக்கோடி மந்திர தேவதைகள், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல், திகைத்து நின்றபோது நாரத முனிவர் தோன்றி ""பரமேஸ்வர பிரசாதத்தால் மட்டுமே ஞான முக்தி பெறமுடியும்.'' என வலியுறுத்துகிறார். துர்வாசர் போன்றே, இவரும் கூறியதைக்கேட்டு, கோபமடைந்த மந்திரதேவதைகள், நாரதரையும் இழிவாகப் பேசினர். நாரதர் அவர்களைப் பார்த்து நீங்கள் நூறு ஜென்மங்கள், மீண்டும் பிராம்மணர்களாகப் பிறந்து, கடைசி ஜென்மத்தில் ஸ்ரீ நாராயணனின் அனுக்கிரஹத்தால் முக்தி பெறுவீர்கள்'' என்று கூறி மறைந்து விடுகிறார். இதைக் கேட்டு ஓரளவு சமாதானம் அடைந்த மந்திரதேவதைகள் பிராம்மண வடிவம் ஏற்று, நூற்றெட்டு திவ்ய தேசங்களிலும், ஸ்ரீ நாராயணனைக்குறித்து, தவமிருந்து விட்டு, கடைசியாக, சுவேத தீவிற்கு வந்தனர். இவர்களது தீவிர தவத்தைக் கண்டு, என்ன செய்வது என்று புரியாத ஸ்ரீ நாராயணன், வீரபத்திரரிடம் செய்தியைக் கூறி, ஆலோசனை கேட்கிறார். வீரபத்திரர் அவரிடம் திருக்கோடிக்கா தலத்தின் மகிமையை எடுத்துக் கூறுகிறார்.
இந்த ஜகத்தில் பாவக ஷேத்திரம் ஒன்று உள்ளது. அதில் பிப்பல விருட்சம் (அரசமரம்) அதிக உத்தமமாக விளங்குகிறது. அங்கு ஸர்வேஸ்வரன், திருக்கோடீஸ்வரர் என்ற நாமதேயத்துடன் ஸ்ரீ திரிபுரசுந்தரி தேவியுடன், ஆவிர்பவித்து இருக்கிறார். அங்கே சிருங்கோத்பவ தீர்த்தம், சித்ர குப்த தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், குபேரதீர்த்தம், அக்னி தீர்த்தம், துர்கா தீர்த்தம், பூத தீர்த்தம், காளி தீர்த்தம், நிர்நதி தீர்த்தம் என்ற மஹா தீர்த்தங்கள் உள்ளன. இங்கு பரமசிவனை ஆராதித்து, தர்ம, அர்த்த, காம, மோஷ என்கிற நான்கு புருஷார்த்த தேவதைகள் ஸித்தி பெற்றன. மேலும் ஸப்தரிஷிகளும், ஸனாகதி முனிவர்களும் மற்றும் அநேக மகான்களும் சித்தி பெற்றுள்ளார்கள். தவிர, ஜமதக்னி முனிவரின் புதல்வரான பரசுராமர், தன் தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஸத்தி தோஷம், ஸ்ரீ ராமருக்கு ஏற்பட்ட "பிரம்மஹத்தி' தோஷம், பிரலம்பாசுரனைக் கொன்றதால் பலராமனுக்கு நேர்ந்த பாவம், தட்சயாகத்தில் பலபேரைக் கொன்றதால் எனக்கும், காளிக்கும் ஏற்பட்ட "மஹா ஹத்யா பாபம்,' இவற்றிற்கெல்லாம், திருக்கோடிக்கா ஸ்தலத்தில்தான் பாப நிவர்த்தி கிடைத்தது.
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இன்று தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி நடக்கிறது.
மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த உபகோவிலாகும். இந்த கோவிலில் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்தாண்டு பங்குனி திருவிழா இன்று தொடங்கி அடுத்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இவ்விழாவையொட்டி மாரியம்மன் நேற்று (24-ந் தேதி) கோவிலில் இருந்து புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைந்தது.
நேற்று இரவு தங்கி இன்று(25-ந் தேதி) கோவிலில் இருந்து புறப்பட்டு தெப்பக்குளம் பகுதியில் உள்ள கோவிலை சென்றடைவார். அதை தொடர்ந்து இன்று இரவு 11 மணிக்கு பங்குனித்திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா நடைபெறும்.
விழாவில் 4-ம் நாள் 28-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெறும். 29-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பங்குனி விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடக்கிறது.
அதை தொடர்ந்து 2-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் சட்டத்தேரில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 3-ந் தேதி இரவு 7.15 மணிக்கு தீர்த்தவாரியுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
நேற்று இரவு தங்கி இன்று(25-ந் தேதி) கோவிலில் இருந்து புறப்பட்டு தெப்பக்குளம் பகுதியில் உள்ள கோவிலை சென்றடைவார். அதை தொடர்ந்து இன்று இரவு 11 மணிக்கு பங்குனித்திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா நடைபெறும்.
விழாவில் 4-ம் நாள் 28-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெறும். 29-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பங்குனி விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடக்கிறது.
அதை தொடர்ந்து 2-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் சட்டத்தேரில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 3-ந் தேதி இரவு 7.15 மணிக்கு தீர்த்தவாரியுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
திருக்குறுங்குடியில் நடைபெற்ற பங்குனி திருவிழாவில், சித்தர்களுக்கு நம்பி சுவாமிகள் காட்சி கொடுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 நம்பி சுவாமிகள், சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் 5-ம் நாளான நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதையொட்டி நம்பி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி ஆகிய 5 நம்பிசுவாமிகளும் தனித்தனியாக 5 கருட வாகனங்களில் எழுந்தருளி நிகழ்ச்சிக்காக புறப்பட்டனர்.
ரதவீதிகள் வழியாக திருவீதி உலா வந்த 5 நம்பிகளும் நேற்று அதிகாலை 4.40 மணிக்கு மேலரதவீதியில் மேற்கு நோக்கி எழுந்தருளி, மகேந்திரகிரி மலையை கடாஷித்து அங்கு வாழும் தேவகந்தர்வ சித்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி திருக்குறுங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 நம்பி சுவாமிகள், சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் 5-ம் நாளான நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதையொட்டி நம்பி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி ஆகிய 5 நம்பிசுவாமிகளும் தனித்தனியாக 5 கருட வாகனங்களில் எழுந்தருளி நிகழ்ச்சிக்காக புறப்பட்டனர்.
ரதவீதிகள் வழியாக திருவீதி உலா வந்த 5 நம்பிகளும் நேற்று அதிகாலை 4.40 மணிக்கு மேலரதவீதியில் மேற்கு நோக்கி எழுந்தருளி, மகேந்திரகிரி மலையை கடாஷித்து அங்கு வாழும் தேவகந்தர்வ சித்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி திருக்குறுங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் உலாவந்து உற்சவர் சன்னதிக்கு சென்றனர். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.
தமிழ் கடவுள் முருகப் பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாள் பங்குனிப் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனிப் பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி கைப்பாரமும், 18-ந் தேதி பங்குனி உத்திரமும், 20-ந்தேதி பட்டாபிஷேகமும், 21-ந்தேதி திருக்கல்யாணமும், நேற்று முன்தினம் தேரோட்டமும் நடந்தது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று தீர்த்த உற்சவம் நடந்தது
தீர்த்த உற்சவத்தையொட்டி நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, விநாயகர், அஸ்திரதேவர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளினர். அங்கு யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனிதநீர் கொண்டு சுவாமி, அம்பாளுக்கு உச்சிகால சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதனையடுத்து மதியம் 1 மணியளவில் மேளதாளங்கள் முழங்க தங்க மயில் வாகனத்தில் முருகப்பெருமான், தெய்வானையும், மூஞ்சுறு வாகனத்தில் விநாயகரும், பல்லக்கில் அஸ்தரதேவர் எழுந்தருளி சரவணப்பொய்கைக்கு சென்றனர்.
இதனையடுத்து சரவணப் பொய்கை புனித நீரில் அஸ்திரதேவருக்கு தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சரவண பொய்கை வளாகத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவில் தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் உலாவந்து உற்சவர் சன்னதிக்கு சென்றனர். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக திருவிழாவின் நிறைவாக கொடியிறக்கப்பட்டது.
தீர்த்த உற்சவத்தையொட்டி நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, விநாயகர், அஸ்திரதேவர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளினர். அங்கு யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனிதநீர் கொண்டு சுவாமி, அம்பாளுக்கு உச்சிகால சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதனையடுத்து மதியம் 1 மணியளவில் மேளதாளங்கள் முழங்க தங்க மயில் வாகனத்தில் முருகப்பெருமான், தெய்வானையும், மூஞ்சுறு வாகனத்தில் விநாயகரும், பல்லக்கில் அஸ்தரதேவர் எழுந்தருளி சரவணப்பொய்கைக்கு சென்றனர்.
இதனையடுத்து சரவணப் பொய்கை புனித நீரில் அஸ்திரதேவருக்கு தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சரவண பொய்கை வளாகத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவில் தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் உலாவந்து உற்சவர் சன்னதிக்கு சென்றனர். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக திருவிழாவின் நிறைவாக கொடியிறக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழாவை முன்னிட்டு அம்மன் கோவில் (உட்பிரகாரம், அம்மன் சன்னதி மட்டும்) ஒருவாரம் அடைக்கப்பட்டிருக்கும்.
சுவாமி : மதுரைகாளியம்மன் (அம்மன்)
தீர்த்தம் : காவிரி
தலச்சிறப்பு : இத்தலத்தில் ஆண்டு தோறும் ஆனித் திருமஞ்சனவிழா வெகு விமரிசையாக நடைபெறும். திருமஞ்சனவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொட்டியம் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம், சந்தனக்குடம், அக்னி சட்டி எடுத்து அலகு குத்தி மதுரைகாளியம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர்.
மதுரை காளியம்மன் கோவில் பங்குனித் “தேர்த் திருவிழா” காப்புகட்டுதல் மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழாவை முன்னிட்டு அம்மன் கோவில் (உட்பிரகாரம், அம்மன் சன்னதி மட்டும்) ஒருவாரம் அடைக்கப்பட்டிருக்கும். அப்படி அடைக்கப்படும் அம்மன் கருவறையில் இரண்டு பெரிய பானைகளில் நெய் ஊற்றி எட்டு வேட்டியால் ஆன இரண்டு பெரிய திரிகள் தயாரிக்கப்பட்டு விளக்கு ஏற்றப்படும். இதை தொடர்ந்து அடைத்த கோயிலுக்கு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து, மதுரை காளியம்மன் கோயில் முன்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்படும்.
முக்கிய நிகழ்ச்சியான சுமார் முப்பதடி உயரம் உள்ள ஓலை பிடாரி அம்மன், சுமார் இருபத்து ஒன்பது அடி உயரமுள்ள சின்ன தேர் மதுரைகாளியம்மன், திருத்தேர் தலை அலங்காரமும், அதன் பின் இரண்டு தேர்த்தூக்கும் நிகழ்ச்சி மூலம் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.
தல வரலாறு : இத்தலத்தை 400 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியினை ஆட்சி செய்த பாளையக்காரர் கெஜ்ஜன்ன நாயக்கர் கட்டியுள்ளார். மதுரை மாநகரில் வீற்றிருந்த மகாகாளியம்மன் தொட்டியத்திலிருந்து பறை இசைக்க சென்ற இருவரின் இசையில் மயங்கி, தொட்டியம் சங்கம் புதரில் வந்து அமர்ந்தாள், அப்போது எசங்கராயண் பட்டியில் இருந்த மாடுகள் மேய்ந்து விட்டு பால் கொடுக்கும் நேரத்தில் சங்கம் புதருக்கு சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தது. இதனை அறியாத ஊர் மக்கள் மாட்டில் பால் கறந்தால் பால் வருவதில்லை. எனவே சங்கம் புதரில் கள்வர்கள் யாரோ பாலை கறந்து விடுகிறார்கள் என்று அரசனிடம் முறையிட்டனர்.
அரசன் தன் படை வீரர்களுடன் சங்கம் புதர் சென்று கள்வனை தேடினார். அரசன் புதருக்குள் வாளை சொருகினான். சற்று நேரத்தில் புதரிலிருந்து ரத்தம் பீரிட்டது. உடனே மன்னன் அதிர்ந்து போனான். அவன் முன் ஸ்ரீ மதுரைகாளியம்மன் தோன்றினாள் (இன்றும் கருவறையில் உள்ள மதுரைகாளியம்மன் மேனியில் இக்காயத்தின் வடு உள்ளது). மனம் உருகி மன்னிக்கும்படி வேண்டி, தாயே உனக்கு என்ன வேண்டும்? ஏன் இப்படி அமர்ந்து இருக்கிறாய்? என்று மன்னன் கேட்டான்.
மதுரைகாளியம்மன் அரசனுடைய பட்டியிலிருந்து ஒரு மாட்டை காட்டி இந்த மாடு எங்கெல்லாம் சென்று சுற்றி வருகிறதோ? அதெல்லாம் எனக்கு சொந்தம், அதுவே எனது எல்லை என்று மதுரைகாளியம்மன் கூறினாள். மாடு பதினெட்டு பட்டி கிராமம் சுற்றி வந்து புதரில் நின்றது. 18 பட்டி மக்களும் என் பிள்ளைகள் என் அருள்பெற ஒரு அழகான கோவிலை அமைத்து என்னை வழிபட வகை செய்வாயாக என்று கூறி ஸ்ரீ மதுரைகாளியம்மன் மறைந்தாள். அம்மனின் வாக்கை கனிவுடன் ஏற்ற அரசன் உடனே “தொட்டியம் ஸ்ரீ மதுரைகாளியம்மன் திருக்கோவிலை” கட்டினார்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 வரை, மாலை 2.00 மணி முதல் இரவு 9.00 வரை.
கோயில் முகவரி :
அருள்மிகு மதுரைகாளியம்மன் திருக்கோவில்,
தொட்டியம்,
திருச்சி மாவட்டம்.
தீர்த்தம் : காவிரி
தலச்சிறப்பு : இத்தலத்தில் ஆண்டு தோறும் ஆனித் திருமஞ்சனவிழா வெகு விமரிசையாக நடைபெறும். திருமஞ்சனவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொட்டியம் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம், சந்தனக்குடம், அக்னி சட்டி எடுத்து அலகு குத்தி மதுரைகாளியம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர்.
மதுரை காளியம்மன் கோவில் பங்குனித் “தேர்த் திருவிழா” காப்புகட்டுதல் மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழாவை முன்னிட்டு அம்மன் கோவில் (உட்பிரகாரம், அம்மன் சன்னதி மட்டும்) ஒருவாரம் அடைக்கப்பட்டிருக்கும். அப்படி அடைக்கப்படும் அம்மன் கருவறையில் இரண்டு பெரிய பானைகளில் நெய் ஊற்றி எட்டு வேட்டியால் ஆன இரண்டு பெரிய திரிகள் தயாரிக்கப்பட்டு விளக்கு ஏற்றப்படும். இதை தொடர்ந்து அடைத்த கோயிலுக்கு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து, மதுரை காளியம்மன் கோயில் முன்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்படும்.
முக்கிய நிகழ்ச்சியான சுமார் முப்பதடி உயரம் உள்ள ஓலை பிடாரி அம்மன், சுமார் இருபத்து ஒன்பது அடி உயரமுள்ள சின்ன தேர் மதுரைகாளியம்மன், திருத்தேர் தலை அலங்காரமும், அதன் பின் இரண்டு தேர்த்தூக்கும் நிகழ்ச்சி மூலம் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.
தல வரலாறு : இத்தலத்தை 400 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியினை ஆட்சி செய்த பாளையக்காரர் கெஜ்ஜன்ன நாயக்கர் கட்டியுள்ளார். மதுரை மாநகரில் வீற்றிருந்த மகாகாளியம்மன் தொட்டியத்திலிருந்து பறை இசைக்க சென்ற இருவரின் இசையில் மயங்கி, தொட்டியம் சங்கம் புதரில் வந்து அமர்ந்தாள், அப்போது எசங்கராயண் பட்டியில் இருந்த மாடுகள் மேய்ந்து விட்டு பால் கொடுக்கும் நேரத்தில் சங்கம் புதருக்கு சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தது. இதனை அறியாத ஊர் மக்கள் மாட்டில் பால் கறந்தால் பால் வருவதில்லை. எனவே சங்கம் புதரில் கள்வர்கள் யாரோ பாலை கறந்து விடுகிறார்கள் என்று அரசனிடம் முறையிட்டனர்.
அரசன் தன் படை வீரர்களுடன் சங்கம் புதர் சென்று கள்வனை தேடினார். அரசன் புதருக்குள் வாளை சொருகினான். சற்று நேரத்தில் புதரிலிருந்து ரத்தம் பீரிட்டது. உடனே மன்னன் அதிர்ந்து போனான். அவன் முன் ஸ்ரீ மதுரைகாளியம்மன் தோன்றினாள் (இன்றும் கருவறையில் உள்ள மதுரைகாளியம்மன் மேனியில் இக்காயத்தின் வடு உள்ளது). மனம் உருகி மன்னிக்கும்படி வேண்டி, தாயே உனக்கு என்ன வேண்டும்? ஏன் இப்படி அமர்ந்து இருக்கிறாய்? என்று மன்னன் கேட்டான்.
மதுரைகாளியம்மன் அரசனுடைய பட்டியிலிருந்து ஒரு மாட்டை காட்டி இந்த மாடு எங்கெல்லாம் சென்று சுற்றி வருகிறதோ? அதெல்லாம் எனக்கு சொந்தம், அதுவே எனது எல்லை என்று மதுரைகாளியம்மன் கூறினாள். மாடு பதினெட்டு பட்டி கிராமம் சுற்றி வந்து புதரில் நின்றது. 18 பட்டி மக்களும் என் பிள்ளைகள் என் அருள்பெற ஒரு அழகான கோவிலை அமைத்து என்னை வழிபட வகை செய்வாயாக என்று கூறி ஸ்ரீ மதுரைகாளியம்மன் மறைந்தாள். அம்மனின் வாக்கை கனிவுடன் ஏற்ற அரசன் உடனே “தொட்டியம் ஸ்ரீ மதுரைகாளியம்மன் திருக்கோவிலை” கட்டினார்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 வரை, மாலை 2.00 மணி முதல் இரவு 9.00 வரை.
கோயில் முகவரி :
அருள்மிகு மதுரைகாளியம்மன் திருக்கோவில்,
தொட்டியம்,
திருச்சி மாவட்டம்.
பைரவப் பெருமானுக்கு சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நல்லெண்ணெய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும்.
பைரவப் பெருமானை விரதம் இருந்து காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும்.
பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும்.
மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும்.
இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம் பொருளான பைரவப் பெருமானை அடையும். சாகாக் கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும்.
பைரவப் பெருமானுக்கு சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நல்லெண்ணெய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.
பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயாசம், அவல் பாயாசம் நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.
பிடித்த மாலைகள்
பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.
பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும்.
மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும்.
இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம் பொருளான பைரவப் பெருமானை அடையும். சாகாக் கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும்.
பைரவப் பெருமானுக்கு சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நல்லெண்ணெய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.
பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயாசம், அவல் பாயாசம் நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.
பிடித்த மாலைகள்
பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் யாக சாலை பூஜைகள் தொடங்கின. இதற்காக 72 குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாக சாலை பூஜைகள் நடைபெறும் என தருமபுரம் ஆதீனம் கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் குடமுழுக்கு 27- ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. குடமுழுக்கையொட்டி 100 கால் மண்டபம் அருகில் பிரமாண்டமான முறையில் யாகசாலை அமைக்கப்பட்டு முதல் கால யாக பூஜைகள் நேற்று தொடங்கியது. யாக சாலை பூஜைகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கையொட்டி 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாக சாலை பூஜைகள் நடைபெறும். அபிராமி அம்மன் காலசம்ஹார மூர்த்தி ஆகிய சாமிக்கு நவாக்கினி ஹோமம், முருகன், விநாயகர் உள்ளிட்டோருக்கு பஞ்சாக்னி ஹோமம், மற்றும் பரிவார சாமிக்கு ஏகாக்னி ஹோமம் நடைபெறும். மேலும் 120 வேத விற்பன்னர்கள் யாகசாலை பூஜைகளை செய்வார்கள். 27 திருமுறை ஓதுவார்கள் தேவாரம், திருப்பதிகம் பாடுவார்கள். மேலும் பொதுமக்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி போன்றவை செய்யப்படும். குடமுழுக்கில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கையொட்டி 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாக சாலை பூஜைகள் நடைபெறும். அபிராமி அம்மன் காலசம்ஹார மூர்த்தி ஆகிய சாமிக்கு நவாக்கினி ஹோமம், முருகன், விநாயகர் உள்ளிட்டோருக்கு பஞ்சாக்னி ஹோமம், மற்றும் பரிவார சாமிக்கு ஏகாக்னி ஹோமம் நடைபெறும். மேலும் 120 வேத விற்பன்னர்கள் யாகசாலை பூஜைகளை செய்வார்கள். 27 திருமுறை ஓதுவார்கள் தேவாரம், திருப்பதிகம் பாடுவார்கள். மேலும் பொதுமக்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி போன்றவை செய்யப்படும். குடமுழுக்கில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீ பந்தம் நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் பங்குனி மாதம் இக்கோவிலில் பொங்கல் விழா நடைபெறும். அதன்படி இந்தாண்டு பொங்கல் விழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தினசரி பொன்காளியம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வந்தன. 20-ந் தேதி வேலாயுத சுவாமி கோவிலில் இருந்து பொன் காளியம்மன் கோவிலுக்கு அம்மன் அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து நள்ளிரவு 1 மணி அளவில் குதிரை துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது கோவிலை சுற்றி உள்ள நான்கு சாலைகளிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் சிறியவர் முதல் பெரியவர் வரை கைகளில் தீ பந்தம் ஏந்தி அம்மனை வழிபட்டனர்.
இந்த தீ பந்தம் நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தினசரி பொன்காளியம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வந்தன. 20-ந் தேதி வேலாயுத சுவாமி கோவிலில் இருந்து பொன் காளியம்மன் கோவிலுக்கு அம்மன் அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து நள்ளிரவு 1 மணி அளவில் குதிரை துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது கோவிலை சுற்றி உள்ள நான்கு சாலைகளிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் சிறியவர் முதல் பெரியவர் வரை கைகளில் தீ பந்தம் ஏந்தி அம்மனை வழிபட்டனர்.
இந்த தீ பந்தம் நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நாம் ஒரு வேண்டுதலை சாய்பாபாவிடம் வைத்து கீழே உள்ள சாய்பாபா மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர அந்த வேண்டுதல் நிறைவேறும்.
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
மந்திரத்தின் பொது பொருள்:
ஓம் – உலகில் உள்ள விஞ்ஞானிகள் பலரால் ஏற்கப்பட்ட உலகின் மூல ஓசை தான் ஓம். கரடு முரடான மனம் கொண்டவரை கூட ஆழ்நிலை தியானத்திற்கு அழைத்துச்செல்லக்கூடிய ஒரே மூல மந்திரம் ஓம்.
ஸ்ரீ – ஸ்ரீ என்ற சொல்லுக்கு திரு என்ற பொருளும் உண்டு. தெய்வீக சக்தி பெற்ற ஒரு அறிய சொல் ஸ்ரீ ஜெய ஜெய – வெற்றியை குறிக்கும் ஜெயம் என்ற சொல்லின் சுருக்கமே ஜெய.
சாயி – அர்த்தமற்ற வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் ஒரு அற்புத மகான். ஞானத்தின் ஒளி. உலக பொதுக்கடவுள். இப்படி என்னிடலங்க பல அர்த்தங்களை கொண்டு ஒரு அற்புத சொல் சாயி. நாம் ஒரு வேண்டுதலை சாய் பாபாவிடம் வைத்து மேலே உள்ள சாய் பாபா மந்திரம் அதை தொடர்ந்து தினமும் 108 முறை ஜபித்து வர அந்த வேண்டுதல் நிறைவேறும்.
தினந்தோறும் ஜபிக்க முடியாதவர்கள் வியாழக்கிழமைகளில் ஜபிக்கலாம். வெகு சிலருக்கு வேண்டுதல் நிறைவேறாமல் போகும். இதற்க்கு காரணம் அந்த வேண்டுதலை காட்டிலும் ஒரு பெரிய பரிசை சாய் பாபா தரவிருக்கிறார் என்பதே. ஆகையால் விடா முயற்சியோடு சாய் பாபா மகா மந்திரம் அதை ஜபித்து பயன் பெறுங்கள்.
மந்திரத்தின் பொது பொருள்:
ஓம் – உலகில் உள்ள விஞ்ஞானிகள் பலரால் ஏற்கப்பட்ட உலகின் மூல ஓசை தான் ஓம். கரடு முரடான மனம் கொண்டவரை கூட ஆழ்நிலை தியானத்திற்கு அழைத்துச்செல்லக்கூடிய ஒரே மூல மந்திரம் ஓம்.
ஸ்ரீ – ஸ்ரீ என்ற சொல்லுக்கு திரு என்ற பொருளும் உண்டு. தெய்வீக சக்தி பெற்ற ஒரு அறிய சொல் ஸ்ரீ ஜெய ஜெய – வெற்றியை குறிக்கும் ஜெயம் என்ற சொல்லின் சுருக்கமே ஜெய.
சாயி – அர்த்தமற்ற வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் ஒரு அற்புத மகான். ஞானத்தின் ஒளி. உலக பொதுக்கடவுள். இப்படி என்னிடலங்க பல அர்த்தங்களை கொண்டு ஒரு அற்புத சொல் சாயி. நாம் ஒரு வேண்டுதலை சாய் பாபாவிடம் வைத்து மேலே உள்ள சாய் பாபா மந்திரம் அதை தொடர்ந்து தினமும் 108 முறை ஜபித்து வர அந்த வேண்டுதல் நிறைவேறும்.
தினந்தோறும் ஜபிக்க முடியாதவர்கள் வியாழக்கிழமைகளில் ஜபிக்கலாம். வெகு சிலருக்கு வேண்டுதல் நிறைவேறாமல் போகும். இதற்க்கு காரணம் அந்த வேண்டுதலை காட்டிலும் ஒரு பெரிய பரிசை சாய் பாபா தரவிருக்கிறார் என்பதே. ஆகையால் விடா முயற்சியோடு சாய் பாபா மகா மந்திரம் அதை ஜபித்து பயன் பெறுங்கள்.
நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா, கடந்த 7-ந்ேததி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினர். மேலும் ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக கருதப்படும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்தநிலையில் நேற்று காலை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதையொட்டி மாரியம்மன், பல்லக்கில் அம்மன்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பிறகு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதையொட்டி மாரியம்மன், பல்லக்கில் அம்மன்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பிறகு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் வருடம் தோறும் மீன பரணி நாளில் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருட திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லை பகுதியில் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 2 கோவில்கள் அம்மனுக்கு உள்ளது. ஒன்று வட்டவிளை கோவில் மற்றொன்று திருவிழா கோவிலான வெங்கஞ்சி கோவில் ஆகும்.
இங்கு வருடம் தோறும் மீன பரணி நாளில் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருட திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5.30 மணிக்கு பிரதான கோவிலில் மகா கணபதி ஹோமம், காலை 6.30 மணிக்கு வெங்கஞ்சி திருவிழா கோவிலில் மகா கணபதி ஹோமம், 7 மணிக்கு மேளதாளங்களுடன் கோவிலுக்கு கொடிமரம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடக்கிறது,
பின்னர் இரவு 7 மணிக்கு தேவஸ்தான தந்திரி கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.
இரவு 8 மணிக்கு தூக்க திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை பள்ளியுணர்த்தல், நிர்மல்ய தரிசனம், அபிஷேகம், கணபதிஹோமம், சோபனசங்கீதம், மதிய பூஜை, அன்னதானம், மாலை தீபாராதனை, இரவு பூஜை, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது. அதை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது,
28-ந்தேதி காலை 8 மணி முதல் தூக்க காரர்களின் மருத்துவ பரிசோதனை நடக்கிறது. 29-ந்தேதி காலை 9 மணி முதல் தூக்க நேர்ச்சை நடத்த பதிவு செய்திருந்த குழந்தைகளின் தூக்க நேர்ச்சை குலுக்கல் நடக்கிறது, 30-ந்தேதியில் இருந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தூக்கக்காரர்களின் நமஸ்காரம் நடக்கிறது.
ஏப்ரல் 4-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளல் நடக்கிறது. அதை தொடர்ந்து பரிபாவனமும் பக்தி பரவசமும் வரலாற்று சிறப்புமிக்கதுமான தூக்க நேர்ச்சை நடக்கிறது. தொடர்ந்து தூக்ககாரர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுகிறது. திருவிழாவை காண தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். பக்தர்கள் வசதிக்காக தமிழக-கேரள போக்குவரத்துக்கழகத்தினர் சிறப்பு பஸ்களை இயக்குகிறார்கள்.
இங்கு வருடம் தோறும் மீன பரணி நாளில் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருட திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5.30 மணிக்கு பிரதான கோவிலில் மகா கணபதி ஹோமம், காலை 6.30 மணிக்கு வெங்கஞ்சி திருவிழா கோவிலில் மகா கணபதி ஹோமம், 7 மணிக்கு மேளதாளங்களுடன் கோவிலுக்கு கொடிமரம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடக்கிறது,
பின்னர் இரவு 7 மணிக்கு தேவஸ்தான தந்திரி கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.
இரவு 8 மணிக்கு தூக்க திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை பள்ளியுணர்த்தல், நிர்மல்ய தரிசனம், அபிஷேகம், கணபதிஹோமம், சோபனசங்கீதம், மதிய பூஜை, அன்னதானம், மாலை தீபாராதனை, இரவு பூஜை, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது. அதை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது,
28-ந்தேதி காலை 8 மணி முதல் தூக்க காரர்களின் மருத்துவ பரிசோதனை நடக்கிறது. 29-ந்தேதி காலை 9 மணி முதல் தூக்க நேர்ச்சை நடத்த பதிவு செய்திருந்த குழந்தைகளின் தூக்க நேர்ச்சை குலுக்கல் நடக்கிறது, 30-ந்தேதியில் இருந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தூக்கக்காரர்களின் நமஸ்காரம் நடக்கிறது.
ஏப்ரல் 4-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளல் நடக்கிறது. அதை தொடர்ந்து பரிபாவனமும் பக்தி பரவசமும் வரலாற்று சிறப்புமிக்கதுமான தூக்க நேர்ச்சை நடக்கிறது. தொடர்ந்து தூக்ககாரர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுகிறது. திருவிழாவை காண தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். பக்தர்கள் வசதிக்காக தமிழக-கேரள போக்குவரத்துக்கழகத்தினர் சிறப்பு பஸ்களை இயக்குகிறார்கள்.






