
விழாவை காண பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, அரிசிபெரியாங்குப்பம், கே.என்.பேட்டை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இது தவிர திடலில் இன்னிசை கச்சேரியும் நடந்ததால், ஏராளமானோர் குவிந்தனர். சாலையோர இருபுறமும் தற்காலிக கடைகளும் வைக்கப்பட்டதால், மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கடலூர் - திருவந்திபுரம் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. பொதுமக்களும் திரண்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் ஒழுங்குப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். இருப்பினும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து சென்றதை பார்க்க முடிந்தது.
விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவம் நடக்கிறது. வருகிற 1-ந்தேதி பட்டாபிஷேகத்துடன் விழா முடிகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜேஸ்வரன், தக்கார் சுபத்ரா மற்றும் பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, அரிசிபெரியாங்குப்பம், கே.என்.பேட்டை ஊர் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.