search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சீரடி சாய்பாபா
    X
    சீரடி சாய்பாபா

    நம் வேண்டுதல்களை நிறைவேற்றும் சாய் பாபா மகா மந்திரம்

    நாம் ஒரு வேண்டுதலை சாய்பாபாவிடம் வைத்து கீழே உள்ள சாய்பாபா மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர அந்த வேண்டுதல் நிறைவேறும்.
    ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி

    மந்திரத்தின் பொது பொருள்:

    ஓம் – உலகில் உள்ள விஞ்ஞானிகள் பலரால் ஏற்கப்பட்ட உலகின் மூல ஓசை தான் ஓம். கரடு முரடான மனம் கொண்டவரை கூட ஆழ்நிலை தியானத்திற்கு அழைத்துச்செல்லக்கூடிய ஒரே மூல மந்திரம் ஓம்.

    ஸ்ரீ – ஸ்ரீ என்ற சொல்லுக்கு திரு என்ற பொருளும் உண்டு. தெய்வீக சக்தி பெற்ற ஒரு அறிய சொல் ஸ்ரீ ஜெய ஜெய – வெற்றியை குறிக்கும் ஜெயம் என்ற சொல்லின் சுருக்கமே ஜெய.

    சாயி – அர்த்தமற்ற வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் ஒரு அற்புத மகான். ஞானத்தின் ஒளி. உலக பொதுக்கடவுள். இப்படி என்னிடலங்க பல அர்த்தங்களை கொண்டு ஒரு அற்புத சொல் சாயி. நாம் ஒரு வேண்டுதலை சாய் பாபாவிடம் வைத்து மேலே உள்ள சாய் பாபா மந்திரம் அதை தொடர்ந்து தினமும் 108 முறை ஜபித்து வர அந்த வேண்டுதல் நிறைவேறும்.

    தினந்தோறும் ஜபிக்க முடியாதவர்கள் வியாழக்கிழமைகளில் ஜபிக்கலாம். வெகு சிலருக்கு வேண்டுதல் நிறைவேறாமல் போகும். இதற்க்கு காரணம் அந்த வேண்டுதலை காட்டிலும் ஒரு பெரிய பரிசை சாய் பாபா தரவிருக்கிறார் என்பதே. ஆகையால் விடா முயற்சியோடு சாய் பாபா மகா மந்திரம் அதை ஜபித்து பயன் பெறுங்கள்.
    Next Story
    ×