என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
Byமாலை மலர்25 March 2022 1:30 AM GMT (Updated: 24 March 2022 4:15 AM GMT)
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இன்று தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி நடக்கிறது.
மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த உபகோவிலாகும். இந்த கோவிலில் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்தாண்டு பங்குனி திருவிழா இன்று தொடங்கி அடுத்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இவ்விழாவையொட்டி மாரியம்மன் நேற்று (24-ந் தேதி) கோவிலில் இருந்து புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைந்தது.
நேற்று இரவு தங்கி இன்று(25-ந் தேதி) கோவிலில் இருந்து புறப்பட்டு தெப்பக்குளம் பகுதியில் உள்ள கோவிலை சென்றடைவார். அதை தொடர்ந்து இன்று இரவு 11 மணிக்கு பங்குனித்திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா நடைபெறும்.
விழாவில் 4-ம் நாள் 28-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெறும். 29-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பங்குனி விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடக்கிறது.
அதை தொடர்ந்து 2-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் சட்டத்தேரில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 3-ந் தேதி இரவு 7.15 மணிக்கு தீர்த்தவாரியுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
நேற்று இரவு தங்கி இன்று(25-ந் தேதி) கோவிலில் இருந்து புறப்பட்டு தெப்பக்குளம் பகுதியில் உள்ள கோவிலை சென்றடைவார். அதை தொடர்ந்து இன்று இரவு 11 மணிக்கு பங்குனித்திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா நடைபெறும்.
விழாவில் 4-ம் நாள் 28-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெறும். 29-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பங்குனி விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடக்கிறது.
அதை தொடர்ந்து 2-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் சட்டத்தேரில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 3-ந் தேதி இரவு 7.15 மணிக்கு தீர்த்தவாரியுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X