என் மலர்
ஆன்மிகம்
- கதிர் அறுவடை செய்து சூரியனுக்கு நன்றி செலுத்த கொண்டாடப்பட்டதே பொங்கல்.
- இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகின்றது.
உலக இந்துக்களால் வருட தொடக்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகையே தைப்பொங்கல் ஆகும். உழவர்களும், உழவுக் காளைகளுமே இந்தத் திருநாளின் நாயகர்கள்.
கதிர் அறுவடை செய்து சூரியனுக்கு நன்றி செலுத்த கொண்டாடப்பட்டதே பொங்கல். சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம். இதையே மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகின்றது. இதன்படி இந்த ஆண்டு தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பது தொடர்பான விளக்கத்தை அறிந்துக்கொள்ளலாம்.
நாளை மறுநாள் தைப்பொங்கல். சூரிய பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு சூரியன் உதயமாவதற்கு முன்பு பொங்கல் வைத்து, சூரியபகவானுக்கு படைத்து வழிபடவேண்டும். இதுவே சூரிய பொங்கல் ஆகும். இதற்கு நல்ல நேரம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
காலை 6 மணிக்கு மேல் பொங்கல் வைத்து வழிபட நினைப்பவர்கள் பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரத்தை கவனிக்க வேண்டும்.
அதன்படி, காலை 6 மணிக்கு மேல் பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 7. 45 மணி முதல் 8. 45 மணி வரை, 10.35 முதல் பகல் 1 மணிவரை.
நல்ல நேரம் - காலை 10.30 முதல் 11 வரை, பிற்பகல் 1 மணி முதல் 01.30 வரை
கெளரி நல்ல நேரம் - மாலை 06.30 முதல் 07.30 வரை
எமகண்டம் - காலை 6 மணி முதல் 7.30 வரை
ராகு காலம் - பிற்பகல் 01.30 முதல் மாலை 3 வரை
- அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர்.
- குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன், வேதங்கள், ஆயகலைகள் என அனைத்து கலைகளையும் கற்று தேர்ச்சி பெற்றான்.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் உலக புகழ் பெற்ற ஆலயம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.
அந்த வகையில், சபரிமலையில் தவக்கோலத்தில் அருள்பாலிக்கும் ஐயப்பன், ஆண்டுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். கேரள முறைப்படி, மகர ராசியில் சூரியன் வரும் மாதம், 'மகர மாதம்' எனப்படுகிறது. இந்த மாதத்தின் முதல் நாளான மகர சங்கராந்தி அன்று, சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் கிடைப்பது வழக்கம். இந்த மகர ஜோதி தரிசனத்துக்கு ஒரு புராணக் கதையும் கூறப்படுகிறது.
மகிஷாசுரனின் சகோதரியான மகிஷி என்ற அரக்கி, தன் சகோதரன் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்க நினைத்தாள். இதனால் பிரம்ம தேவரை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவள் முன் தோன்றிய பிரம்மரிடம், ''சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறக்கும் புத்திரனால் மட்டுமே எனக்கு மரணம் ஏற்பட வேண்டும்'' எனும் வரத்தை கேட்டாள். அதன்படி வரத்தை பெற்ற மகிஷி, தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்தி வந்தாள்.
அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். அப்போது அமிர்தத்தை எடுத்து சென்ற அசுரர்களிடம் இருந்து அமிர்தத்தை மீட்க விஷ்ணு பகவான், மோகினியாக அவதாரம் எடுத்தார். மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும், சிவனுக்கு ஹரிஹர அம்சமாக அவதரித்தவரே, ஐயப்பன்.
அதே வேளையில், பந்தள மன்னன் ராஜசேகரன் குழந்தை இல்லாமல் மிகவும் வருந்தினான். அவன் குழந்தை பாக்கியம் வேண்டி தினமும் சிவனிடம் மனம் உருகி வேண்டி வந்தான். சிவனும், விஷ்ணுவும் குழந்தை ஐயப்பனை காட்டில் ஒரு மரத்திற்கு அடியில் விட்டுச்சென்றனர். அந்த சமயம் காட்டில் வேட்டைக்கு வந்த பந்தள மன்னன், ஒரு குழந்தை இருப்பதை கண்டான்.
அப்போது அங்கு வந்த ஒரு முனிவர், ''மன்னா, உங்களுடைய குழந்தையில்லாக் குறையை போக்கவே இவன் அவதரித்திருக்கிறான். எனவே, இவனை எடுத்து வளர்ப்பாயாக. பன்னிரெண்டு வயது வரும்போது இவன் யார் என்பதை அறிவாய்'' என்று கூறினார். அந்த குழந்தையின் கழுத்தில் துளசி மாலையுடன் மணியும் இருந்தது. எனவே அந்த குழந்தைக்கு 'மணிகண்டன்' என்று பெயரிட்ட மன்னன், குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச்சென்று ராணியிடம் கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ராணி, அந்த குழந்தையை மிகவும் பாசத்தோடு வளர்த்தாள். சிறுவயதிலேயே மணிகண்டன் பல அற்புதங்களை செய்தார்.

குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன், வேதங்கள், ஆயகலைகள் என அனைத்து கலைகளையும் கற்று தேர்ச்சி பெற்றான். குருவின் பேச முடியாத மகனை பேச வைத்து அற்புதம் நிகழ்த்தினான். இந்நிலையில் ராணிக்கு ஒரு அழகான குழந்தை பிறந்தது. அதற்கு ராஜராஜன் என பெயர் சூட்டினர். தனக்கு மகன் பிறந்தாலும், மணிகண்டனுக்கே முடிசூட்ட வேண்டும் என்று மன்னன் விருப்பம் கொண்டார். ஆனால் இதை விரும்பாத மந்திரி ஒருவர், ராணியின் மனதை மாற்றி, மணிகண்டனை விரட்ட முடிவு செய்தான்.
அதன்படி சதித்திட்டம் ஒன்றை தீட்டினான் மந்திரி. ராணியும் அதற்கேற்றார் போல் தீராத தலைவலி வந்தது போல நடித்தாள். ராணியின் தலைவலி தீர வேண்டுமானால் புலிப் பால் கொண்டு வரவேண்டும் என்று மருத்துவர்களை சொல்ல வைத்தான் மந்திரி. புலிப் பாலை கொண்டுவர முடியுமா? என அரசவையில் அனைவரும் திகைத்தனர். ஆனால், இது தனக்கு எதிரான சதித்திட்டம் என்பதை அறிந்தும், மணிகண்டன் ''நான் காட்டுக்குள் சென்று புலிப் பாலை கொண்டு வருகிறேன்'' எனப் புறப்பட்டான். காட்டுக்குள் சென்றால் நிச்சயம் திரும்பி வரமாட்டான் என்று மந்திரி பூரிப்புக்கொண்டான்.
புலிப் பால் வேண்டி காட்டிற்கு சென்ற மணிகண்டன், அங்கு மனிதர்களை துன்புறுத்தி வந்த மகிஷி அரக்கியை அம்பு எய்து வீழ்த்தினான். தன்னை வீழ்த்தியது கண்டிப்பாக சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த ஒருவராகதான் இருக்கும் என்பதை உணர்ந்த மகிஷி, மறு உருவம் பெற்று எழுந்தாள். பின்பு, மணிகண்டனை வணங்கி தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டினாள். ஆனால் மணிகண்டன், இந்த அவதாரத்தில் தான் பிரம்மச்சாரியாக வாழப்போவதாகவும், எனவே தனது இடது பக்கத்தில் சிறு தூரத்தில் நிலைக்கொள்ளும்படி செய்தார். அவளே 'மஞ்சமாதா' என்று அழைக்கப்படுகிறாள்.
இதையடுத்து, ஒரு புலியின் மீது அமர்ந்தபடி பந்தள நாட்டு அரண்மனைக்கு திரும்பினார் ஐயப்பன். இதைப் பார்த்து வியந்த அனைவரும் பயபக்தியில் வணங்கி நின்றனர். மன்னன், ஐயப்பன் தெய்வ பிறவி என்பதை உணர்ந்தான். ஐயப்பன், தான் சபரிமலையில் ஒரு அம்பை எய்வதாகவும், அந்த அம்பு எந்த இடத்தில் விழுகிறதோ அங்கே ஒரு கோவில் கட்டும்படியும் அருளினார்.
அதன்படி பந்தள நாட்டு மன்னன், சபரிமலையில் ஐயப்பன் கோவிலை கட்டினான். மகரசங்கராந்தி நாளில், பரசுராமர் உதவியுடன் கோவில் திறக்கப்பட்டது. மகரசங்கராந்தி நாளில், விரதம் இருந்து இருமுடி கட்டி தன்னை காண வரும் பக்தர்களுக்கு ஐயப்பன் ஜோதி வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம்.
ஐயப்ப சுவாமி பந்தள அரண்மனையில் வளர்ந்தவர். இருப்பினும், அதன்பின்னர் சபரிமலையில் யோக நிலையில் அமர்ந்தவர். இதனால் ஆண்டுதோறும் ஐயப்பனை காண வரும்போது பந்தள மன்னன், பந்தளத்தில் இருந்து ஆபரணங்களை எடுத்து செல்வார். பின்பு, அதை ஐயப்பனுக்கு அணிவித்து வழிபட்டு மகிழ்வதாக கூறப்படுகிறது.
இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மகர ஜோதி தினத்தில், பந்தளத்தில் இருந்து ஆபரணங்கள் கொண்டு வந்து சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிப்பார்கள். அதன்பின்பு, அன்றைய தினத்தில் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் கிடைக்கும். பொதுவாக, தை மாதம் முதல் நாள் மகர ஜோதி தரிசனம் கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்கழி மாதம் 30-ம் நாள் (14-1-2026) மாலை 6.30 மணிக்கு மேல் மகர ஜோதி தரிசனத்தை பெறலாம்.
மகர ஜோதி தரிசனத்துக்காக, சபரிமலையில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வருகை தருவார்கள். கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றார்கள். ஜோதி தரிசனத்தை காணும்போது, 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்று பக்தர்கள் எழுப்பும் முழக்கம் விண்ணை தொடும் அளவு எதிரொலிக்கும். பக்தர்கள் மகர ஜோதி தரிசனத்தை பக்தி பரவசத்துடன் கண்டு களிக்கும் காட்சியை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும்.
- தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தவாறு உள்ளனர்.
- புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மறுநாள் தைப்பொங்கல் சிறப்பு வழிபாடு செய்வதற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தவாறு உள்ளனர்.
தென் மாவட்டத்தை சேர்ந்த தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்கள் ஆண்டு தோறும் தைப் பொங்கலுக்கு முன்பு பாதயாத்திரையாக முருகன் படம் வைத்து அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்கள் முன் ஆடி பாடி வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். அந்த வகையில் தற்போது தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தவாறு உள்ளனர்.
அவர்கள் இன்று அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தைப்பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மறுநாள் (15-ந்தேதி) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.
1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- தை அமாவாசை.
13-ந் தேதி (செவ்வாய்)
* மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* சுவாமிமலை முருகனுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* குரங்கணி முத்துமாலை அம்மன் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
14-ந் தேதி (புதன்)
* சர்வ ஏகாதசி.
* போகிப் பண்டிகை.
* சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
15-ந் தேதி (வியாழன்)
* தைப் பொங்கல்.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் விழா தொடக்கம்.
* மதுரை செல்லத்தம்மன் காலை சப்பரத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் பவனி.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் நின்ற திருக்கோலம், மாலை தங்கப் பல்லக்கில் ஊஞ்சல் சேவை.
* சமநோக்கு நாள்.
16-ந் தேதி (வெள்ளி)
* மாட்டுப் பொங்கல்.
* பிரதோஷம்.
* மதுரை கூடலழகர் பெருமாள் கணு உற்சவ விழா தொடக்கம்.
* திருவரங்கம் நம்பெருமாள், மன்னார்குடி ராஜ கோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.
* கீழ்நோக்கு நாள்.
17-ந் தேதி (சனி)
* உழவர் திருநாள்.
* மதுரை செல்லத்தம்மன் விருட்சப சேவை.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமன் வாகனத்திலும் பவனி.
* கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை தலங்களில் சிவபெருமான் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
18-ந் தேதி (ஞாயிறு)
* தை அமாவாசை.
* தென்காசி விசுவநாதர், சங்கரன்கோவில் சங்கர நாராயணன் தலங்களில் லட்சதீபம்.
* மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றியருளல்.
* கீழ்நோக்கு நாள்.
19-ந் தேதி (திங்கள்)
* மதுரை செல்லத்தம்மன் ரத உற்சவம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தைலக்காப்பு.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் விழா தொடக்கம்.
* மேல்நோக்கு நாள்.
- ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.
- மகரவிளக்கு பூஜை நடக்கும் நாளைய தினம் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மகரவிளக்கு பூஜை கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது.
அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தபடி உள்ளனர். மண்டல பூஜை காலத்தை போன்றே, மகரவிளக்கு பூஜை காலத்திலும் தொடக்கத்தில் இருந்தே பக்தர்களின் வருகை மிகவும் அதிகமாக இருக்கிறது.
இந்தநிலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் சபரிமலையில் நாளை (14-ந்தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.
திருவாபரண ஊர்வலம் நேற்று இரவு ஆயரூர் புதியகாவு தேவி கோவிலில் தங்கியது. பின்னர் இன்று காலை அங்கிருந்து புறப்பட்டது. திருவாபரணங்கள் அடங்கிய பெட்டியை அதற்காக விரதமிருந்த பக்தர்கள் தூக்கி வந்தனர். வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் பக்தர்கள் திரண்டு நின்று திருவாபரணத்தை வரவேற்று வழிபட்டனர்.
திருவாபரண ஊர்வலம் இன்று இரவு தேதிலாகா வனத்துறை சத்திரத்தில் தங்குகிறது. பின்பு நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு, மதியம் பம்பை கணபதி கோவிலிக்கு வந்து சேருகிறது. அங்கிருந்து புறப்பட்டு, சன்னிதானத்திற்கு மாலை 6 மணியளவில் திருவாபரணங்கள் வந்து சேரும்.
மகரவிளக்கு பூஜை நடக்கும் நாளைய தினம் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதன்பிறகு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பின்பு 2:45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு பிற்பகல் 3:08 மணிக்கு மகர சங்கிரம பூஜை தொடங்குகிறது.
அதன் தொடர்ச்சியாக மாலை 6:30 மணியளவில் திருவாபரணங்கள் சன்னிதானத்தை வந்தடைகிறது. அவை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படும். அப்போது பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் மூன்று முறை ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
மகரஜோதி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களாகவே சபரிமலைக்கு வந்த பக்தர்கள் ஆங்காங்கே பல இடங்களில் குடில் அமைத்து தங்க தொடங்கினர். பெரியானை வட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விரிகளில் ஆயிரக்கணக்கானோர் தங்கியிருக்கின்றனர்.
அது மட்டுமின்றி பம்பை மற்றும் சன்னிதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் பக்தர்கள் டெண்ட் அமைத்து தங்கி வருகின்றனர். இன்று வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் சாமி சரிதனத்துக்கு பின் ஆங்காங்கே தங்கியிருக்கின்றனர். இதனால் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காணப்படுகின்றனர்.
- குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
- உணவுப் பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
தனுசு ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். நல்ல செய்திகள் நாளும் வந்த வண்ணமாகவே இருக்கும். 2-ம் இடத்தில் சூரியன், சுக்ரன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் இணைந்து கூட்டுக்கிரக யோகத்தை உருவாக்குகிறது. எனவே பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். பிள்ளைகளால் மீண்டும் பிரச்சனைகள் தலைதூக்கும். மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பார்க்கும் குருவைப் பலப்படுத்த வியாழன் தோறும் விரதமும், வழிபாடுகளும் தேவை.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு. அவர் வக்ரம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகம் பலம் இழக்கும் பொழுது நன்மைகளையே செய்யும். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, இடம், பூமி வாங்குவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் உங்கள் கவனம் செல்லும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும்.
குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். மருத்துவச் செலவு குறையும். மனக்கவலை மாறும். இதுவரை தடையாக இருந்த காரியங்கள் இனித் தானாக நடைபெறும். மேலும் குரு பார்வை 3, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். வழக்குகள் சாதகமாக அமையும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைப்பதோடு மேலிடத்து ஆதரவும் உண்டு.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 29.1.2026 அன்று சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது உடன்பிறப்புகளுக்கு கல்யாண முயற்சி கைகூடும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் பெருகும். கடல் கடந்து வணிகம் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். தொழில் பங்குதாரர்கள் விலகினாலும், புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். நல்ல மாற்றங்களும், பொருளாதாரத்தில் ஏற்றமும் வரும் நேரம் இது. அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடுவதற்கான சூழல் உருவாகும்.
கும்ப - சுக்ரன்
உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 7.2.2026 அன்று 3-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். தனாதிபதி சனியோடு சேருவதால் தனவரவு தாராளமாக வந்து சேரும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். அயல்நாட்டு முயற்சிகளில் இருந்த தடை அகலும். அங்கிருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வழிபிறக்கும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடை பெறும் சுபநிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் வளர்ச்சியும், பிற்பகுதியில் தளர்ச்சியும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். பெண்களுக்கு செலவுகள் கூடும். இருப்பினும் வருமானம் போதுமானதாக இருக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 20, 21, 24, 25, பிப்ரவரி: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
மகர ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும். மனக்கலக்கம் தீரும். மேலும் உங்கள் ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்ரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை இருப்பதால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். விரோதங்கள் விலகும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். சொத்துக்களால் ஆதாயமும், நன்மையும் ஏற்படும் நேரம் இது. கொடுக்கல் - வாங்கல் திருப்தி தரும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்திலேயே இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெற்று சஞ்சரிப்பதால், அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும். தக்க தருணத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவார்கள். சென்ற மாதத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் இப்பொழுது விலகும். சிறுசிறு தொல்லைகள் உடல்நிலையைத் தாக்கினாலும் மருத்துவ சிகிச்சைகள் மூலம் அவற்றை சரிசெய்துகொள்வீர்கள். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ, வாசல் தேடி வரவு வந்து சேரும். குருவின் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அவற்றிற்குரிய ஆதிபத்யங்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். 'குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் பணிபுரிய நினைத்தவர்களுக்கு அது கைகூடும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுயதொழில் ஏதேனும் செய்யலாமா? என்று சிந்திக்கும் நேரம் இது.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். உடன்பணிபுரிபவர்களுக்கு கிடைக்காத யோகம் உங்களுக்கு வரப்போகிறது. இலாகா மாற்றங்களோ, இடமாற்றங்களோ முன்னேற்றம் தரும் விதம் அமையும். பெற்றோர் வழியில் இருந்த கருத்து வேறுபாடு மாறும். பிள்ளைகளை நெறிப்படுத்திக் கொண்டு வருவீர்கள். பூர்வீக சொத்துக்களை பங்கு பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சனைகள் அகலும்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். இக்காலத்தில் இனிய பலன்கள் வந்துசேரும். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும்பொழுது பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். புகழ் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு அன்றாட வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்வீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். கூட்டு முயற்சிகளில் இருந்து விலகித் தனித்து இயங்க முற்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சனை அகலும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு பற்றாக்குறை அகன்று பணவரவு கூடும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 15, 16, 22, 23, 26, 27, பிப்ரவரி: 5, 6, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
கும்ப ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். மிதுனத்தில் இருக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் இருப்பதால் இந்த மாதம் இனிய மாதமாகவே அமையும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். திடீர் முன்னேற்றம் வந்துசேரும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உற்சாகத்தோடு செயல்பட்டு எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். ஜென்மச் சனி நடைபெறுவதால் சிறுசிறு தொல்லைகள் உடல்நலத்தில் ஏற்படலாம்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை தன - லாபாதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெற்றிருப்பதால் வருமானப் பற்றாக்குறை ஏற்படும். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முயற்சி தாமதப்பட்டாலும் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் உருவாகலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் அமைதி கிடைக்கும். குருவின் பார்வை உங்கள் ராசியில் மட்டுமல்லாமல் 9, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. எனவே பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகிறது. தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்களாக மாறும். எந்தவழியிலும் உங்களுக்கு வரவேண்டிய தொகை வந்துசேரும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பழைய கூட்டாளிகள் மீண்டும் வந்து இணைந்து உங்கள் புதிய முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். இந்நேரங்களில் குரு கவசம் பாடி குருவை வழிபடுவதன் மூலம் மேலும் நற்பலன்களைப் பெறலாம்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். பொதுவாக பஞ்சம ஸ்தானாதிபதி என்பதால் பிள்ளைகள் வழியில் மேன்மை உண்டு. அவர்களின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஒருசிலர் பழைய சொத்துக்களை விற்றுவிட்டு, புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டு. சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இம்மாதம் நடைபெறும்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு சுக்ரன் 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் ஜென்மத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தாய்வழி ஆதரவு கிடைக்கும். படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வாழ்க்கைத் தேவை படிப்படியாகப் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வீடு வாங்கிக் குடியேறும் யோகம் உண்டு. தொழிலில் சேர்ந்த பணியாளர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவர். வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமைப் பதவிகள் தேடி வரலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவு செய்யும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் எளிதில் கிடைக்கும். கலைஞர்களுக்கு, சென்ற மாதத்தில் கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி உண்டு. பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 23, 25, 28, 29, பிப்ரவரி: 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
மீன ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். மேலும் அர்த்தாஷ்டம குருவாகவும் இருக்கிறார். எனவே அடிக்கடி இடமாற்றம், ஆரோக்கியப் பாதிப்பும், அதிக விரயமும் ஏற்படலாம். பொதுவாக இதுபோன்ற நேரங்களில் வீண் விரயங்களில் இருந்து விடுபட வேண்டுமானால் சுப விரயங்களை மேற்கொள்வது நல்லது. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்குவதோ, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதிலோ கவனம் செலுத்தலாம். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். ஆதாயத்தைக் காட்டிலும் விரயங்கள் கூடும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதனாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர் குரு. அவரது வக்ர இயக்கம் நன்மைதான் என்றாலும், அர்த்தாஷ்டம குருவாக இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம். குடும்பத்தில் பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. இடம், பூமி வாங்குவதில் இருந்த பிரச்சனைகள் மேலும் நீடிக்கலாம். இடமாற்றம், வீடு மாற்றம் தானாகவே வந்து மனக்கலக்கத்தை உருவாக்கும்.
குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரலாம். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட பிரச்சனை ஒரு வழியாகத் தீரும். ஆயினும் புதிய முயற்சிகளில் தடை வந்துகொண்டே இருக்கும். தன்னம்பிக்கையைத் தளரவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நீண்டதூரப் பயணம் பலன்தரும் விதம் அமையும். சொந்த ஊரில் இருப்பவர்கள் வெளிநாடு செல்லவும், வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்பவும் எடுத்த முயற்சிகள் பலன்தரும். வாகன மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் வியாழக்கிழமை தோறும் குருவிற்குரிய சிறப்பு ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதோடு, இல்லத்திலும் குருகவசம் பாடி குருபகவானை வணங்குவது நல்லது.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே பெற்றோர் வழியிலும், களத்திர வழியிலும் செலவு ஏற்படலாம். இடம், பூமி வாங்கும் சுபச்செலவுகளும் உண்டு. பிள்ளைகளின் திருமணத்தைப் பேசி முடித்து அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைத்துக்கொடுப்பீர்கள். நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட வகையில் ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். உணவுப் பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. புதிய பொறுப்புகளை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. வியாபாரத்தில் உள்ள நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொண்டு வாழ்க்கை பாதையை சீராக்கிக்கொள்வீர்கள்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 12-ல் மறைவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப பொருளாதார நிலையில் திடீர் முன்னேற்றமும், புது முயற்சியில் வெற்றியும் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை அகலும். பயணங்களால் பலன் கிடைக்கும். பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். இக்காலத்தில் சுக்ர வழிபாடு சுகத்தை வழங்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூட்டு முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் புதிய இலக்கை நோக்கி பயணிப்பீர்கள். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விரயத்தை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 15, 20, 21, 26, 27, 30, 31, பிப்ரவரி: 10, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.
- மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை.
- பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக அகலும்.
சிம்ம ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ஜென்மத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 6-ம் இடத்தில் சூரியன், செவ்வாய், சுக்ரன், புதன் ஆகிய கிரகங்கள் இருப்பதால் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாழ்க்கை அமையும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். வீடு, இடம் வாங்குவதன் மூலமாகவோ, மணவிழா, மணிவிழா போன்றவை நடத்துவதன் மூலமாகவோ, சுப விரயங்களை மேற்கொண்டால் வீண் விரயங்களில் இருந்து தப்பிக்க இயலும். சனியின் பார்வை இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெற்றிருக்கும் இந்த நேரம், பிள்ளைகளால் பிரச்சனைகள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கும். காரியத்திலும் தாமதம் ஏற்படும். உறவினர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் முடியலாம். பிள்ளைகளாலும் பிரச்சனைகள் வந்து அலைமோதும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் வந்து மனக்கிலேசத்தை உருவாக்கும். வியாபாரத்தில் நண்பர்களால் இழப்புகள் ஏற்படலாம். குருவின் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகிறது. பஞ்சம ஸ்தானம் குரு வீடு. குரு வீட்டை குருவே பார்ப்பது யோகம்தான். பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் பயனாக கிடைக்க வேண்டிய பலன்கள் இப்பொழுது கிடைக்கும். இருந்தாலும் மனக்கசப்பு தரும் தகவல்களும் வந்துசேரும். நண்பர்களை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சில காரியங்கள் தாமதமாக வந்தாலும் முடிவில் நல்லவிதமாக முடிவடையும். இக்காலத்தில் சுபச்செலவுகள் செய்வதன் மூலம் தேவையற்ற விரயங்களை தவிர்க்க இயலும். பஞ்சாயத்துக்களில் இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். 'வியாபாரத்தில் பழைய கூட்டாளிகளை விலக்கிவிட்டு, புதிய கூட்டாளிகளைச் சேர்க்கலாமா?' என்று சிந்திப்பீர்கள்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, `வாழ்க்கைத் துணைக்கு வேலை இல்லையே' என்ற கவலை அகலும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டினால் நல்லபடி அமையும். பொதுவாக நினைத்தது நிறைவேறும் நேரம் இது. மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு திருப்தி தரும். அவர்களது இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். முக்கியப் புள்ளிகளின் வரிசையில் உங்கள் பெயர் இடம்பெறும் வண்ணம் நல்ல காரியமொன்றை செய்து முடிப்பீர்கள்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன் 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். இக்காலத்தில் உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். அவர்கள் மூலமாக ஒருசில நல்ல காரியங்கள் நடைபெறும். 'பழைய தொழிலை பைசல் செய்துவிட்டு புதிய தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று, வேறு இடத்திற்கு மாறும் எண்ணத்தை உறுதிப்படுத்திக்கொள்வர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். கலைஞர்களுக்கு பெருமை சேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்களுக்கு ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சுபச்செலவுகள் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 15, 26, 27, 30, 31, பிப்ரவரி: 5, 6, 10, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
கன்னி ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், தனாதிபதி சுக்ரனோடு இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே, பொருளாதாரத்தைப் பொறுத்தவரை நிறைவு ஏற்படும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக்கொடுப்பர். 10-ல் குரு இருப்பதால் புதிய பொறுப்புகள் வந்துசேரும். உத்தியோகத்தில் பதவி மாற்றம் ஏற்படலாம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் வீண்பழியில் இருந்து விடுபடுவர். அவர்கள் விரும்பியபடியே பதவி வாய்ப்பு கிடைக்கும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற குரு, வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கும் பொழுது இனிய பலன்கள் ஏராளம் நடைபெறும். குறிப்பாக இடம், பூமி வாங்கும் முயற்சியில் இருந்த தடை அகலும். கடன் சுமை குறைய எடுத்த முயற்சி கைகூடும். 'வரன்கள் வந்து வந்து திரும்புகின்றதே.. எதுவும் முடிவாகவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இனி வரும் வாய்ப்புகள் நல்லதாக அமையும். குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. அந்த மூன்று இடங்களுக்குரிய பலன்கள் உங்களை வந்தடையும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல் - வாங்கலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாடகைக் கட்டிடத்தில் இருந்தவர்கள் சொந்தக் கட்டிடத்திற்கு மாற எடுத்த முயற்சி கைகூடும். தாயின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரத்தை அளிப்பர். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அகல, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இருப்பினும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. பழைய பிரச்சனைக்குப் புதிய அணுகுமுறையில் தீர்வு காண்பீர்கள்.
கும்ப - புதன்
உங்கள் ராசிநாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம்' என்பார்கள். அதன்படி 6-ல் சஞ்சரிக்கும் புதனால், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக ஊதிய உயர்வுடன் நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொடர் கடனால் அவதிப்பட்டவர்களுக்கு, கொடுக்கல்- வாங்கலை ஒழுங்கு செய்துகொள்ள வழிபிறக்கும். பெற்றோரின் ஆதரவோடு பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு உத்தியோக மாற்றம் உறுதியாகும்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன் 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவரது பெயர்ச்சி மூலம் குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பழுதாகி செலவு வைக்கும் பழைய வாகனத்தால் அவதிப்பட்டவர்களுக்கு, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும். பெற்றோர் வழி ஆதரவு திருப்தி தரும் விதம் அமையும். போட்டிக்கு மத்தியில் வியாபாரம் வெற்றிநடைபோடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்பட்டு மனக்குழப்பத்தை உருவாக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பாதியில் லாபம் வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வருவதில் தாமதம் ஏற்படும். மாணவ - மாணவிகள் கல்வியில் வெற்றி பெற, கடினமாக முயற்சிக்க வேண்டியதிருக்கும். உறவினர் பகை உருவாகும் என்பதால், பெண்கள் கவனமாக செயல்படுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 25, 29, பிப்ரவரி: 1, 2, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
துலாம் ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் புதனுடன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை வழங்குகிறார். மேலும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகைக் கிரகமாவார். அவர் வக்ரம் பெற்றிருப்பது யோகம்தான். எனவே உங்கள் ராசி புனிதமடைகிறது. சென்ற மாதத்தில் தாமதப்பட்ட காரியங்கள் இப்பொழுது தடையின்றி நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முன்னேற்றம் இப்பொழுது வந்துசேரும். ஆரோக்கியத் தொல்லை அகன்று உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியிலும், 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகிறது. குரு, உங்கள் ராசியின் சகோதர ஸ்தானத்திற்கு அதிபதி. மேலும் எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களுக்கும் அதிபதி. எனவே இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். ஜீவனத்திற்கு கவலை இல்லாத சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத் தொல்லையால் அவதிப்பட்டு வந்தவர்கள், குணமடைவர். குருவின் பார்வை பலத்தால் உடன்பிறப்புகளின் திருமணம் அல்லது அவர்களின் வாரிசு திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.
பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக அகலும். இதுவரை பாகப்பிரிவினைக்கு ஒத்து வராத உடன்பிறப்புகள் இப்பொழுது மனம் மாறி ஒத்துழைப்பு தருவர். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்பொழுது மாற்றப்படுவர். 'இடம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், அதற்கு பண உதவி கிடைக்குமா?' என்று காத்திருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். தொழில் நடத்துபவர்கள் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்வர்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். 'ஐந்தும் ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்' என்பார்கள். எனவே மிதமிஞ்சிய பொருளாதாரம் ஏற்படும். துணிந்து சில முடிவுகளை எடுத்து, மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். எந்த ஒரு வேலையையும் எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் உங்கள் திறமைகளைப் பார்த்து மேலதிகாரிகள் வியப்பர். பதவி உயர்வு தானாக தேடிவரும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
கும்ப - சுக்ரன்
உங்கள் ராசிநாதன் மற்றும் அஷ்டமாதிபதியான சுக்ரன் 7.2.2026 அன்று பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் விரயம் ஏற்படும். எனவே அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களின் கல்வி சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ எடுத்த முயற்சி தடைப்பட்டு வந்திருக்கலாம். அது இப்போது கைகூடும். இடமாறுதல் இனிமை தரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரும் மாற்றம் நல்ல மாற்றமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பாதியில் ஒப்பந்தங்கள் வந்துகொண்டே இருக்கும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு குடும்பத்தில் பாசமும், நேசமும் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் முயற்சி கைகூடலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 19, 28, 29, பிப்ரவரி: 3, 4, 10, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
விருச்சிக ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரோடு லாபாதிபதி புதனும், தொழில் ஸ்தானாதிபதி சூரியனும் இணைந்திருக்கின்றனர். இதனால் செல்வ நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். முன்னேற்றத்தின் முதல்படிக்கு செல்ல கிரக நிலைகள் சாதகமாக விளங்குகின்றன. தொழில் வெற்றிநடை போடும். இதயம் மகிழும் செய்தி வந்துகொண்டே இருக்கும். தன ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். எல்லா வழிகளிலும் ஏற்றமும், நல்ல மாற்றமும் கிடைக்கும் நேரம் இது.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதால், அந்த இடங்களெல்லாம் புனிதமடைந்து அற்புதமான பலன்களை அள்ளி வழங்கப்போகிறது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை தன - பஞ்சமாதிபதியானவர் குரு. 'அவர் வக்ரம் பெற்றிருக்கிறாரே' என்று நினைக்க வேண்டாம். அவரது பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும். மதிப்பு, மரியாதை உயரும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். இல்லத்தில் இனிய நிகழ்வுகள் நடைபெற வழிபிறக்கும். நல்லவர்களின் சந்திப்பால் நலம் காண்பீர்கள். சமுதாயப் பணிகளில் ஈடுபடுவோருக்கு விருதுகளும், பாராட்டுக்களும் கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், புதிய பதவிகளும் கிடைக்கும்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கும் 8, 11-க்கும் அதிபதியான புதன் 29.1.2026 அன்று அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். குடும்ப ஒற்றுமை பலப்படும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி வெற்றிபெறும். 'புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வரவேண்டும்' என்ற எண்ணம் நிறைவேறும். 'புதிய வாகனம் வாங்க வேண்டும்' என்று நினைத்தவர்களுக்கு, அந்த வாய்ப்பு அமையும். நவீனமான வாகனத்தை வாங்கி மகிழ்வீர்கள். 'வெளிநாட்டில் பணிபுரிய வேண்டும்' என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு, நல்ல நிறுவனங்களில் இருந்து ஊதிய உயர்வுடன் கூடிய வேலை கிடைக்கும்.
கும்ப - சுக்ரன்
உங்கள் ராசிக்கு 7, 12-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது நல்ல நேரம்தான். வீடு கட்டிக் குடியேற வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கும் முயற்சியும் கைகூடும். பிள்ளைகளின் கல்யாணத்தை சிறப்பாகச் செய்து முடிக்கும் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானம் வரும் வாய்ப்பும் உண்டு. வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 19, 22, 23, பிப்ரவரி: 1, 2, 6, 7, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
- வியாழக்கிழமை விரதமும், குரு வழிபாடும் வெற்றியை வழங்கும்.
- பெண்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டு.
மேஷ ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய், தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரோடு சூரியன், புதன், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்திருக்கின்றன. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனோடு செவ்வாய் சேர்க்கை இருப்பதால், இம்மாதம் ஒரு இனிமையான மாதமாக அமையும். பூர்வ புண்ணியத்தின் பலனால் கிடைக்க வேண்டிய அத்தனை யோகமும் உங்களுக்கு வரப்போகிறது. பொருளாதார நிலை உச்சம்பெறும். புனிதப் பயணம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். லாப ஸ்தானத்தில் சனி இருப்பதால், லாபம் அதிகரிக்கும் மாதமாகவே இம்மாதம் இருக்கும்.
வக்ர குரு
மிதுன ராசியில் உள்ள குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர நிலையிலேயே இருக்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. பாக்கிய - விரயாதிபதியான குரு, வக்ரம் பெறுவதால் சுபவிரயம் அதிகரிக்கும். 'இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது சுபச்செய்திகள் வந்து மனதை மகிழ்விக்கும். அதேநேரத்தில் பூர்வீக சொத்துப் பிரச்சனை சம்பந்தமாக பாகப் பிரிவினை செய்துகொள்ள எடுத்த முயற்சி தாமதமாகும். சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பஞ்சாயத்துக்கள் முடிவடையாமல் இழுபறி நிலையில் இருக்கும்.
குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களில் பதிவதால் அந்தந்த இடங்கள் புனிதமடைகின்றன. குடும்ப ஒற்றுமை கூடும். உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ திருமணம் முடிவாக வாய்ப்புண்டு. வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தருவதாக அமையும். தந்தை வழி பிரச்சனைகள் மறையும். தனித்து இயங்க நினைத்தவர்களுக்கு இப்பொழுது நல்ல சந்தர்ப்பங்கள் வந்துசேரும். கூட்டுத்தொழிலை, தனித் தொழிலாக மாற்றும்போது லாபம் அதிகரிக்கும். வியாழக்கிழமை விரதமும், குரு வழிபாடும் வெற்றியை வழங்கும்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 29.1.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் நேரம், நல்ல நேரம்தான். சகோதர ஒற்றுமை பலப்படும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு வேலை கிடைக்கும். வியாபாரம் தொடங்க நினைத்தவர்களுக்கு அது கைகூடும். குடும்பத்தில் உதிரி வருமானங்களால், பணப்புழக்கம் அதிகரிக்கும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும் நேரம் இது.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன - சப்தமாதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது பணவரவு அதிகரிக்கும். பாராட்டும், புகழும் கூடும். மனதிற்கு இனிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது நல்லது. இளைய சகோதரருடன் இருந்த பகை மறையும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்ற முயற்சிப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பும், சுபநிகழ்வுகளும் நடைபெறக்கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 22, 23, 28, 29, பிப்ரவரி: 1, 2.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
ரிஷப ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன், தனாதிபதி புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். அதோடு செவ்வாய் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே தைரியத்தோடு எதையும் செய்ய முன்வருவீர்கள். 'கட்டிய வீட்டை விற்றுவிட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வீடு வாங்கும் யோகமும், வியக்கும் தகவல்களும் வந்த வண்ணமாக இருக்கும். கூட்டுக்கிரக யோகத்தோடு இந்த மாதம் பிறப்பதால், அதற்கு ஏற்ற விதத்தில் வாழ்க்கைத் தரம் உயரும். சுபகாரியங்கள் கைகூடும்.
வக்ர குரு
மிதுன ராசியில் உள்ள குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகைக் கிரகம் ஆவார். எனவே குரு வக்ரம் பெறுவது ஒரு வகையில் நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப திடீர் மாற்றங்களையும், திரவிய லாபத்தையும் தந்து உள்ளத்தை மகிழ்விக்கப்போகிறார். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு என்பதால், இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகளை உருவாக்குவார். இடமாற்றம் அல்லது வீடு மாற்றத்தைக் கொடுத்து நன்மைகள் பெற வழிகாட்டுவார்.
குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால், உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். ஆன்மிகப் பயணம் அதிகரிக்கும். பிரிந்துசென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவர். தொல்லை கொடுத்து வந்த தொழில் பங்குதாரர்கள், இப்பொழுது உங்கள் சொல்லுக்கு கட்டுப்படுவர். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. 'தொழிலை விரிவு செய்யவும், மேலும் முதலீடு செய்யவும் பணமில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் 29.1.2026 அன்று தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் திருப்திகரமாகவே இருக்கும். 'பழைய கூட்டாளிகளை விலக்கிவிட்டு, புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ளலாமா?' என்று சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல முடிவு கிடைக்கும். புதிய பணியாளர்கள் வந்திணைந்து பொருளாதாரநிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர். அதிக முயற்சி எடுத்தும் முடிவடையாத காரியங்கள், இப்பொழுது முடிவடையும். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உங்கள் வாழ்வில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும் மாதம் இது.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்லவிருக்கிறார். உங்கள் ராசிநாதன் தொழில் ஸ்தானத்திற்குச் செல்வது, அற்புதமான நேரமாகும். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு. ஆன்மிகச் சுற்றுலாக்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமலும், சொந்த ஊரில் இருந்து வெளிநாடு செல்ல முடியாமலும் தத்தளித்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல பதில் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு யோகமான நேரம் இது. புதிய பொறுப்புகளும், பதவி வாய்ப்புகளும் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் அதன் நெளிவு, சுளிவுகளை அறிந்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடிவரும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயர்வும், அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். பெண்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டு. கொடிகட்டிப் பறந்த குடும்ப பிரச்சனை படிப்படியாக குறையும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 20, 21, 24, 25, 30, 31, பிப்ரவரி: 3, 4.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
மிதுன ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். ஆனால் அஷ்டமத்தில் சூரியன், செவ்வாய், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரித்து வலிமை அடைவதால் திடீர் தாக்கங்கள், மன அமைதிக் குறைவு, ஆரோக்கியத் தொல்லை, கடன் நெருக்கடி, குடும்பச்சுமை அதிகரித்தல் போன்றவை ஏற்பட்டு மன வருத்தத்தை உருவாக்கும். எனவே அமைதியும், நிதானமும் தேவைப்படும் நேரம் இது. அனுபவஸ்தர்களின் ஆலோசனைப்படி நடந்தால் ஓரளவேனும் துன்பங்களில் இருந்து விடுதலை அடைய முடியும்.
வக்ர குரு
மிதுன ராசியில் உள்ள குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் குரு என்பதால், அவர் வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். ஜென்ம குருவாக இருப்பதால் இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் போன்றவை நிகழலாம். வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வது நல்லதுதான். 'உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். சகப் பணியாளர்களால் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே இந்த இடங்களுக்குரிய ஆதிபத்தியங்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண, குரு பகவான் பார்வை கைகொடுக்கும். சப்தம ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். விட்டுப்போன வரன்கள் கூட மீண்டும் வரலாம். பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். உற்றார், உறவினரின் ஆதரவு உண்டு. கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கடமையைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள்.
கும்ப - புதன்
உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் 29.1.2026 அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகிறது. கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். அவர்களின் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக மாறும். அவர்கள் மற்ற சகோதரர்களிடம் காட்டிய பாசத்தை இப்பொழுது உங்களிடமும் காட்டுவர். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் மாறும். கல்விக்காகவும், கலைக்காகவும் எடுத்த முயற்சி கைகூடும். பழைய வாகனத்தை சீர்செய்து உபயோகப்படுத்துவீர்கள்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். இக்காலத்தில் தொழில் மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். குரு-சுக்ர பார்வை இருப்பதால் குழப்பம் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் திருப்தி ஏற்படாது. 'இதெல்லாம் நடக்குமா?' என்று நினைத்த காரியம் இப்போது நடந்து முடிந்து விடும். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். இக்காலத்தில் குலதெய்வப் பிரார்த்தனை, தடைகளை அகற்றும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி வளர்ச்சியையும், பிற்பகுதி தளர்ச்சியையும் ஏற்படுத்தும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு விறுவிறுப்பான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்தும், உபயோகப்படுத்திக்கொள்ள இயலாது. மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியரின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு வீடு மாற்றம் இனிமை தரும். வேற்று இனத்தாரின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 22, 23, 26, 27, பிப்ரவரி: 1, 2, 6, 7.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
கடக ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, விரய ஸ்தானத்தில் குரு பகவான் வீற்றிருக்கிறார். அஷ்டமத்தில் சனியும், ராகுவும் பலம் பெற்று இருக்கிறார்கள். சப்தம ஸ்தானத்தில் கூட்டுக்கிரக யோகம் உள்ளது. எனவே விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் உருவாவதற்கான அறிகுறி தென்படும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை செய்வது நல்லது. இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, வாசல் தேடி வந்த வரன்களை பரிசீலனை செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். சனீஸ்வரர் வழிபாட்டினால் தடைகள் அகலும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்திலேயே இருக்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, நன்மை - தீமை இரண்டும் கலந்தே நடைபெறும். 6-க்கு அதிபதி 12-ம் இடத்தில் வக்ரம் பெறுவதால் 'விபரீத ராஜயோகம்' ஏற்படும். எனவே திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர், திடீரென எண்ணங்களும், செயல்களும் மாறும். குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவதால் தாய்வழி ஆதரவு கிடைக்கும். நோய் நொடியில் இருந்து விடுபடுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. மற்றவர்களுக்காக ஏற்றுக் கொண்ட பொறுப்பை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கு இடையூறு செய்த உயர் அதிகாரிகள் மாற்றப்படுவர். தொழிலுக்குத் தேவையான மூலதனம் நண்பர்கள் வாயிலாகக் கிடைக்கும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி தரும். 'வைத்திருக்கும் வாகனத்தால் பிரச்சனை அதிகம் வருகின்றதே.. அதை விற்று விடலாமா?' என்று யோசிப்பீர்கள்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று அஷ்டமத்தில் மறைவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, இக்காலம் ஒரு பொற்காலமாக மாறப்போகிறது. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய திருப்பங்கள் பலவற்றையும் சந்திக்கும் நேரம் இது. சகோதர வழியில் ஒற்றுமையும், பாசப்பிணைப்பும் ஏற்படும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பாராதவிதத்தில் நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். இக்காலத்தில் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். அலுவலகப் பணிகளில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. உத்தியோக மாற்றம் செய்ய நினைத்தால் அதுவும் கைகூடாது. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்காது. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தர, விட்டுக் கொடுத்துச் செல்வது உத்தமம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 23, 24, 25, 28, 29, பிப்ரவரி: 3, 4, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
- குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-29 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி மாலை 5.36 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : விசாகம் பின்னிரவு 2.20 மணி வரை பிறகு அனுஷம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், திருத்தணி, கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி வரும் காட்சி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பாலாபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், திருத்தணி, கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
திருநெல்வேலி மூன்றாம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய திருத்தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயாார் சமேத ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநாரையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தாமதம்
ரிஷபம்-செலவு
மிதுனம்-சுபம்
கடகம்-வரவு
சிம்மம்-சாந்தம்
கன்னி-நன்மை
துலாம்- மேன்மை
விருச்சிகம்-அமைதி
தனுசு- சுகம்
மகரம்-பாராட்டு
கும்பம்-இன்பம்
மீனம்-கண்ணியம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிய வேண்டிய நாள். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
ரிஷபம்
பணவரவு திருப்தி தரும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திப்பீர்கள்.
மிதுனம்
எந்த காரியத்தையும் எடுத்தோம் முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வருங்காலத்தை பற்றிய பயம் அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.
கடகம்
வாழ்க்கைத்தரம் உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
சிம்மம்
தடைகள் தானாக விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கூடும்.
கன்னி
திருப்பங்கள் மூலம் விருப்பங்கள் நிறைவேறும் நாள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள்.
துலாம்
பாசம் மிக்கவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
விருச்சிகம்
வளர்ச்சி கூடும் நாள். மங்கல செய்தியொன்று மனை தேடிவந்து சேரும். அதிக லாபம் தொழிலில் கிடைக்கும். வாகன மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.
தனுசு
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் கூட்டு முயற்சி வெற்றி பெற வழிவகுப்பர்.
மகரம்
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். புதிதாக ஏற்பாடு செய்த உத்தியோகம் அமையும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.
கும்பம்
பொறுமையோடு செயல்பட்டு பெருமை காண வேண்டிய நாள். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். திட்டமிட்ட பயணமொன்றில் மாற்றம் செய்வீர்கள்.
மீனம்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். பாதியில் பல பணிகள் நிற்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுடிபிடி அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
- செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கைத் துலக்கக்கூடாது.
- விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்.
வீட்டில் ஒவ்வொருவரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜையறையில் ஐந்துமுக விளக்கேற்றி, அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும்.
மற்ற நாட்களில் இரண்டு திரிப்போட்டு இரண்டுமுக தீபம் ஏற்ற வேண்டும். ஜோடி தீபம் ஏற்றி வழிபட்டால் தம்பதியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். விளக்கை துலக்குவதற்கு ஏற்ற நாட்கள் எவை என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கைத் துலக்கக்கூடாது. விளக்கில் குபேரனும், லட்சுமியும் குடியிருப்பதாக ஐதீகம். திங்கள் அல்லது வியாழக்கிழமை விளக்கைத் துலக்கிவைத்துக் கொண்டு, விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்.
அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரத்தில், அந்நி மாலையில் பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் குத்துவிளக்கேற்றி ஜோதிக்கே ஜோதிவழிபாடு செய்தால் சோதனைகள் அகன்று சாதனைகள் நிகழ்த்த இயலும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
இடமாற்றம் இனிமை தரும் நாள். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
ரிஷபம்
யோகமான நாள். தன வரவு தாராளமாக வந்து சேரும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
மிதுனம்
பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
கடகம்
நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
சிம்மம்
தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு.
கன்னி
தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.
துலாம்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.
விருச்சிகம்
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
தனுசு
முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளைச் செய்ய முன்வருவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
மகரம்
செல்வாக்கு மேலோங்கும் நாள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கும்பம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். திடீர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.
மீனம்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை ஒன்று முடிவதில் தாமதமாகலாம்.






