என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் என்ற பெயர், இங்கு அமைந்துள்ள நாகராஜா கோவிலின் பெயரால் உருவானது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் என்ற பெயர், இங்கு அமைந்துள்ள நாகராஜா கோவிலின் பெயரால் உருவானது.
நாகர் வழிபாடு மிக தொன்மையானது. நாட்டுப்புற தெய்வங்களின் கூறுகளை உள்ளடக்கிய இந்த வழிபாட்டை பிற்கால புராணங்கள் பெரிய அளவில் உள்வாங்கி கொண்டிருக்கின்றன. கேரளத்தில் சர்ப்ப(பாம்பு)க்காவுகள் குறித்த நம்பிக்கை பரவலாக உள்ளது.
நாகராஜா கோவிலை பற்றி கதையொன்றும் வழக்கில் இருந்து வருகிறது. புல்லும், புதரும் நிறைந்திருந்த இந்த இடத்தில் இளம்பெண் ஒருத்தி புல் அறுத்த போது, அவளது அரிவாள் ஐந்து தலை நாகத்தின் தலையில் பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அதை கண்டு அஞ்சிய பெண் பக்கத்து கிராமத்தில் இருந்து சிலரை அழைத்து வர அவர்களும், இந்த அதிசயத்தை பார்த்து அந்த இடத்தில் ஒரு சிறு கோவிலை அமைத்து வணங்கி வந்தனர். இதை கேள்விப்பட்டு பல இடங்களில்இருந்தும் மக்கள் திரண்டு வந்து வணங்கினர் என்று அதில் கூறப்படுகிறது.
தொழுநோயால் பாதிக்கப்பட்ட களக்காட்டு மன்னர் இந்த கோவிலை பற்றி கேள்விப்பட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் இங்கு வந்து வழிபட வியத்தகு முறையில் அவரது நோய் பூரணமாக குணம் அடைந்தது.
இதனால் இந்தஆலயத்தின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது. மகிழ்ச்சியடைந்த மன்னர் இன்றிருக்கும் ஆலயத்தை கட்டினார் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தில் அனந்த கிருஷ்ணனுக்கு தனி சன்னதி உள்ளது. அங்கும் வழிபாடு நடைபெறும். அனந்த கிருஷ்ணனுக்கே தைத்திருவிழாவும், அதையொட்டிய தேரோட்டமும் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தைத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தைத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சாமி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடந்தது. காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.
இந்த தேர் 4 ரத வீதிகளிலும் வலம் வந்து, தேரடியை அடையும். அங்கு சாமிக்கு பூஜை, தீபாராதனை நடைபெறும். இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு நாகராஜா கோவில் குளத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. ஒழுகினசேரி ஆராட்டுத்துறையில் இருந்து 7.15 மணிக்கு சாமி எழுந்தருளுகிறார்.
இரவு 9.30 மணிக்கு ஆராட்டுத்துறையில் இருந்து சாமி கோவிலில் எழுந்தருளுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினருடன் விழாக்குழுவினர் இணைந்து செய்து வருகிறார்கள்.
நாகர் வழிபாடு மிக தொன்மையானது. நாட்டுப்புற தெய்வங்களின் கூறுகளை உள்ளடக்கிய இந்த வழிபாட்டை பிற்கால புராணங்கள் பெரிய அளவில் உள்வாங்கி கொண்டிருக்கின்றன. கேரளத்தில் சர்ப்ப(பாம்பு)க்காவுகள் குறித்த நம்பிக்கை பரவலாக உள்ளது.
நாகராஜா கோவிலை பற்றி கதையொன்றும் வழக்கில் இருந்து வருகிறது. புல்லும், புதரும் நிறைந்திருந்த இந்த இடத்தில் இளம்பெண் ஒருத்தி புல் அறுத்த போது, அவளது அரிவாள் ஐந்து தலை நாகத்தின் தலையில் பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அதை கண்டு அஞ்சிய பெண் பக்கத்து கிராமத்தில் இருந்து சிலரை அழைத்து வர அவர்களும், இந்த அதிசயத்தை பார்த்து அந்த இடத்தில் ஒரு சிறு கோவிலை அமைத்து வணங்கி வந்தனர். இதை கேள்விப்பட்டு பல இடங்களில்இருந்தும் மக்கள் திரண்டு வந்து வணங்கினர் என்று அதில் கூறப்படுகிறது.
தொழுநோயால் பாதிக்கப்பட்ட களக்காட்டு மன்னர் இந்த கோவிலை பற்றி கேள்விப்பட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் இங்கு வந்து வழிபட வியத்தகு முறையில் அவரது நோய் பூரணமாக குணம் அடைந்தது.
இதனால் இந்தஆலயத்தின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது. மகிழ்ச்சியடைந்த மன்னர் இன்றிருக்கும் ஆலயத்தை கட்டினார் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தில் அனந்த கிருஷ்ணனுக்கு தனி சன்னதி உள்ளது. அங்கும் வழிபாடு நடைபெறும். அனந்த கிருஷ்ணனுக்கே தைத்திருவிழாவும், அதையொட்டிய தேரோட்டமும் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தைத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தைத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சாமி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடந்தது. காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.
இந்த தேர் 4 ரத வீதிகளிலும் வலம் வந்து, தேரடியை அடையும். அங்கு சாமிக்கு பூஜை, தீபாராதனை நடைபெறும். இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு நாகராஜா கோவில் குளத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. ஒழுகினசேரி ஆராட்டுத்துறையில் இருந்து 7.15 மணிக்கு சாமி எழுந்தருளுகிறார்.
இரவு 9.30 மணிக்கு ஆராட்டுத்துறையில் இருந்து சாமி கோவிலில் எழுந்தருளுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினருடன் விழாக்குழுவினர் இணைந்து செய்து வருகிறார்கள்.
தைப்பூசம் அன்று காவடி எடுத்தால் தீராத பிரச்சனைகளை கந்தன் தீர்த்து தீர்த்து வைப்பார். சகல சௌபாக்யமும், செல்வ வளத்தையும் கொடுப்பார்.
தைப்பூசம் விரதம் இருப்பது மிகவும் எளிமையானதாகும். இதனை செய்து வர தீராத பிரச்சனைகளை கந்தன் தீர்த்து தீர்த்து வைப்பார். சகல சௌபாக்யமும், செல்வ வளத்தையும் கொடுப்பார். தைப்பூசம் அன்று காவடி எடுத்தால் நன்மைகள் ஏராளம்.
பல வித காவடிகளும் அதன் பலன்களும்!
காவடிகளில் பல வித காவடிகள் இருக்கின்றது. சிலர் தங்கள் சக்திக்கேற்ப காவடி எடுப்பதும் உண்டு. கந்தன் எப்பொழுதும் எதையும் எதிர்பாராதவர். காவடி எடுக்க இயலாவிட்டாலும் தைப்பூசம் நன்னாளில் மனதார வணங்கினால் போதும்.
பால் காவடி
தைப்பூசம் நன்னாளில் பால் காவடி எடுத்து அதனை முருகனுக்கு அபிஷேகத்திற்கு கொடுத்தால் செல்வம் நிலைக்கும். ஒரு சிலர் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் சேர்க்க இயலாமல் இருக்கும். இவர்கள் எந்திரம், மந்திரம் என்று தேடி கொண்டு இருக்காமல் இறைவனை வணங்கினாலே போதுமானது.
சந்தன காவடி:
சந்தன காவடி எடுப்பதால் தீராத சண்டை, சச்சரவு என்று இருப்பவர்களின் வீட்டில் ஒரு முடிவு பிறக்கும்.
மயில் காவடி:
மயில் காவடி எடுத்தால் சிறப்பான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
பன்னீர் காவடி
பன்னீர் காவடி எடுத்தால் கடன் பிரச்சனை இருப்பவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.
பல வித காவடிகளும் அதன் பலன்களும்!
காவடிகளில் பல வித காவடிகள் இருக்கின்றது. சிலர் தங்கள் சக்திக்கேற்ப காவடி எடுப்பதும் உண்டு. கந்தன் எப்பொழுதும் எதையும் எதிர்பாராதவர். காவடி எடுக்க இயலாவிட்டாலும் தைப்பூசம் நன்னாளில் மனதார வணங்கினால் போதும்.
பால் காவடி
தைப்பூசம் நன்னாளில் பால் காவடி எடுத்து அதனை முருகனுக்கு அபிஷேகத்திற்கு கொடுத்தால் செல்வம் நிலைக்கும். ஒரு சிலர் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் சேர்க்க இயலாமல் இருக்கும். இவர்கள் எந்திரம், மந்திரம் என்று தேடி கொண்டு இருக்காமல் இறைவனை வணங்கினாலே போதுமானது.
சந்தன காவடி:
சந்தன காவடி எடுப்பதால் தீராத சண்டை, சச்சரவு என்று இருப்பவர்களின் வீட்டில் ஒரு முடிவு பிறக்கும்.
மயில் காவடி:
மயில் காவடி எடுத்தால் சிறப்பான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
பன்னீர் காவடி
பன்னீர் காவடி எடுத்தால் கடன் பிரச்சனை இருப்பவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.
காலை 9 மணிக்கு முதலில் சிறிய தேரோட்டம் நடந்தது. இதனை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். அதன்பின்னர் பெரிய தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தென் மாவட்டங்களில் உள்ள சிவ ஆலயங்களில் பழமையானது நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் ஆகும். இந்த கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வழக்கமாக 9-ம் திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறும். அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று காலை பா.ஜனதா மற்றும் இந்து முன்னணியினர் கோவில் முன்பு திரண்டு கஞ்சி காய்ச்சும் போராட்டம், சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் அதிகாரிகள் இன்று தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கினர்.
மேலும் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களிலும் 200 பேர் மட்டுமே இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர். இதையடுத்து கோவில் தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் தேரோட்டத்திற்கு தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் கோவில் தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், தேர் திருப்பணிக்குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், உவரி பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜன் கிருபாநிதி, நெல்லை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் விக்னேஷ், கோட்ட செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டனர்.
காலை 9 மணிக்கு முதலில் சிறிய தேரோட்டம் நடந்தது. இதனை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். அதன்பின்னர் பெரிய தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக பெரிய தேரில் சுவாமி சந்திரசேகர்- மனோன்மணியம்பிகை ஆகியோர் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையொட்டி கோவில் மற்றும் அதனை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வழக்கமாக 9-ம் திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறும். அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று காலை பா.ஜனதா மற்றும் இந்து முன்னணியினர் கோவில் முன்பு திரண்டு கஞ்சி காய்ச்சும் போராட்டம், சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் அதிகாரிகள் இன்று தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கினர்.
மேலும் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களிலும் 200 பேர் மட்டுமே இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர். இதையடுத்து கோவில் தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் தேரோட்டத்திற்கு தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் கோவில் தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், தேர் திருப்பணிக்குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், உவரி பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜன் கிருபாநிதி, நெல்லை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் விக்னேஷ், கோட்ட செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டனர்.
காலை 9 மணிக்கு முதலில் சிறிய தேரோட்டம் நடந்தது. இதனை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். அதன்பின்னர் பெரிய தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக பெரிய தேரில் சுவாமி சந்திரசேகர்- மனோன்மணியம்பிகை ஆகியோர் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையொட்டி கோவில் மற்றும் அதனை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இன்று காலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து விடலை கோவில் பிள்ளையார் சன்னதி வரை வந்து கோபுரத்தை நோக்கி கும்பிட்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், இன்று தைப்பூச திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் என அனைத்து நிகழ்வுகளும் ஆகம விதிப்படி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய கடந்த 14-ந்தேதியில் இருந்து இன்று வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 5 நாட்களுக்கு தரிசனத்திற்கு தடை என்பதால் லட்சக்கணக்கான பக்தர் கடந்த 13-ந்தேதியே கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
வழக்கமாக தைப்பூசத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தம் வழிபாடு நடத்துவது வழக்கம். இன்று காலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து விடலை கோவில் பிள்ளையார் சன்னதி வரை வந்து கோபுரத்தை நோக்கி கும்பிட்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் என அனைத்து நிகழ்வுகளும் ஆகம விதிப்படி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய கடந்த 14-ந்தேதியில் இருந்து இன்று வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 5 நாட்களுக்கு தரிசனத்திற்கு தடை என்பதால் லட்சக்கணக்கான பக்தர் கடந்த 13-ந்தேதியே கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
வழக்கமாக தைப்பூசத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தம் வழிபாடு நடத்துவது வழக்கம். இன்று காலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து விடலை கோவில் பிள்ளையார் சன்னதி வரை வந்து கோபுரத்தை நோக்கி கும்பிட்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் கோயில் வளாகத்துக்கு வந்து விடாமல் இருப்பதற்காக கோவில் நுழைவு வாயில் டோல் கேட்டில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்...தைப்பூசமான இன்று சொல்ல வேண்டிய முருகன் 108 போற்றி
தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. தைப்பூசம் குறித்த 40 சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.
1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.
3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.
4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.
5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான். அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.
6. சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான் தரிசனம் கொடுத்தார்.
7. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
8. தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்த பாடல்கள் ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன.
9. தைப்பூசத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து தீர்த்தக் காவடியாக வருவதை கொங்கு மண்டல மக்கள் மிகவும் சிறப்பாக நினைக்கிறார்கள்.
10. முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.
11. தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
12. தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.
13. தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.
14. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்.
15. தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். அன்றுதான் முருகன் வள்ளியை மணம் புரிந்து கொண்டான்.
16. சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.
17. தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
18. தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார். இதையட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.
19. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.
20. தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார். இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத் தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.
21. தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.
22. குளித்தலை கடம்பவன நாதர் ஆலயம் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. சப்த கன்னி யருக்கு ஒரு தைப்பூச நாளில்தான் இங்கு ஈசன் காட்சி அளித்தார்.
23. தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது.
24. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம்.
25. தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார். உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப் படுவது மலேசியாவில் மட்டுமே.
26. மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.
27. விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார். தைப்பூசத்தன்று இங்கு தேரோட்டம் நடைபெறும்.
28. ஆய்குடி ஹரிராம சுப்பிரமணியர் ஆலயத்தில் தை மாதம் புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறும். அன்று பாலசுப்பிரமணியர் கருவறையை பூக்களால் நிரப்புவர். தைப்பூசத்தன்று நடத்தப்படும் பரிவேட்டை உற்சவம் இங்கு மிகவும் புகழ் பெற்றது.
29. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
30. நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள குமரக்கோவிலில் தைப்பூச நன்னாளில், முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும் அதனைத் தரிசிப் பதும் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். மேலும், செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கோவிலில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமிக்கு பால் வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வந்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
31. நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வள்ளி மலை. வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப் படுகிறது. அந்த நாள் சைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.
32. கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரி யானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெரு மாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.
33. இலங்கையில் நல்லூர் என்னும் திருத் தலத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் வேலாயுதத்தை கருவறையில் எழுந்தருளச் செய்து, அதை முருகப் பெருமானாகக் கருதி வழிபடு கிறார்கள். வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள். இங்கு தைப்பூச விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.
34. மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பத்து குகை என்னும் இடம். இந்தக் குகைக் கோவிலின் முகப்பில் 42.7 மீட்டர் (141 அடி) உயரமுள்ள முருகப்பெருமான் அருள் புரிகிறார். இந்தச்சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட முருகன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழி வார்கள். இங்கு தைப்பூசம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
35. திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் தவிமிருந்த காந்திமதியம்மன் தைப்பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம். எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும்.
36. திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது. வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங்குள்ள புனிதத்தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம். இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பர்.
37. சூரனை அழிக்க பராசக்தி தன் ஆற்றல் முழுவதையும் ஒன்று திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை முருகனிடம் கொடுத்த நாள் தைப்பூச நாள்தான். இந்த வேல்தான் சக்திவேல். இது பிரம்ம பித்யா சொரூபமானது. இதை முருகனின் தங்கை எனவும் கூறுவர்.
38. எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறும். இருந்தாலும் பழனியில் நடைபெறும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளைக் கண்டுவழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். தைப்பூச நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர். பூசத்தன்று விரதமிருக்க வேண்டும். பழைய உணவுகளை உண்ணக்கூடாது. ‘பூசத்தன்று பூனைகூட பழையதை உண்ணாது’ என்பது பழமொழி.
39.சனி பகவான் தொடாத கடவுள் முருகனே. சனியின் ஆதிக்க நட்சத்திரமான பூசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா எடுக்கின்றனர். வேல் வகுப்பு என்ற பாடலையும் தைப்பூசத்தன்று பஜனைப் பாடலாக வள்ளி மலையில் பக்தர்கள் பாடுகின்றனர்.
40. திருவிடைமருதூரில் உள்ள காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை என்று பெயர். இதற்கு கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசத்தன்று சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் இப்பூசத் துறைக்கு வந்து, தீர்த்தவாரி கண்டு வீதி வழி ஆலயம் வருவார்கள். இக்காட்சி காணக்கிடைக்காதது. அத்துடன் இப்பூச நன்னாளில் இங்கு மூன்று நாட்கள் ஆரியக் கூத்து நடத்துவார்கள். ஆலயத்தில் அன்று விசேஷ பூஜை நடைபெறும்.
2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.
3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.
4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.
5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான். அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.
6. சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான் தரிசனம் கொடுத்தார்.
7. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
8. தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்த பாடல்கள் ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன.
9. தைப்பூசத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து தீர்த்தக் காவடியாக வருவதை கொங்கு மண்டல மக்கள் மிகவும் சிறப்பாக நினைக்கிறார்கள்.
10. முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.
11. தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
12. தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.
13. தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.
14. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்.
15. தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். அன்றுதான் முருகன் வள்ளியை மணம் புரிந்து கொண்டான்.
16. சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.
17. தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
18. தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார். இதையட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.
19. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.
20. தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார். இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத் தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.
21. தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.
22. குளித்தலை கடம்பவன நாதர் ஆலயம் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. சப்த கன்னி யருக்கு ஒரு தைப்பூச நாளில்தான் இங்கு ஈசன் காட்சி அளித்தார்.
23. தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது.
24. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம்.
25. தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார். உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப் படுவது மலேசியாவில் மட்டுமே.
26. மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.
27. விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார். தைப்பூசத்தன்று இங்கு தேரோட்டம் நடைபெறும்.
28. ஆய்குடி ஹரிராம சுப்பிரமணியர் ஆலயத்தில் தை மாதம் புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறும். அன்று பாலசுப்பிரமணியர் கருவறையை பூக்களால் நிரப்புவர். தைப்பூசத்தன்று நடத்தப்படும் பரிவேட்டை உற்சவம் இங்கு மிகவும் புகழ் பெற்றது.
29. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
30. நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள குமரக்கோவிலில் தைப்பூச நன்னாளில், முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும் அதனைத் தரிசிப் பதும் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். மேலும், செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கோவிலில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமிக்கு பால் வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வந்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
31. நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வள்ளி மலை. வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப் படுகிறது. அந்த நாள் சைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.
32. கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரி யானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெரு மாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.
33. இலங்கையில் நல்லூர் என்னும் திருத் தலத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் வேலாயுதத்தை கருவறையில் எழுந்தருளச் செய்து, அதை முருகப் பெருமானாகக் கருதி வழிபடு கிறார்கள். வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள். இங்கு தைப்பூச விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.
34. மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பத்து குகை என்னும் இடம். இந்தக் குகைக் கோவிலின் முகப்பில் 42.7 மீட்டர் (141 அடி) உயரமுள்ள முருகப்பெருமான் அருள் புரிகிறார். இந்தச்சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட முருகன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழி வார்கள். இங்கு தைப்பூசம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
35. திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் தவிமிருந்த காந்திமதியம்மன் தைப்பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம். எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும்.
36. திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது. வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங்குள்ள புனிதத்தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம். இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பர்.
37. சூரனை அழிக்க பராசக்தி தன் ஆற்றல் முழுவதையும் ஒன்று திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை முருகனிடம் கொடுத்த நாள் தைப்பூச நாள்தான். இந்த வேல்தான் சக்திவேல். இது பிரம்ம பித்யா சொரூபமானது. இதை முருகனின் தங்கை எனவும் கூறுவர்.
38. எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறும். இருந்தாலும் பழனியில் நடைபெறும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளைக் கண்டுவழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். தைப்பூச நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர். பூசத்தன்று விரதமிருக்க வேண்டும். பழைய உணவுகளை உண்ணக்கூடாது. ‘பூசத்தன்று பூனைகூட பழையதை உண்ணாது’ என்பது பழமொழி.
39.சனி பகவான் தொடாத கடவுள் முருகனே. சனியின் ஆதிக்க நட்சத்திரமான பூசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா எடுக்கின்றனர். வேல் வகுப்பு என்ற பாடலையும் தைப்பூசத்தன்று பஜனைப் பாடலாக வள்ளி மலையில் பக்தர்கள் பாடுகின்றனர்.
40. திருவிடைமருதூரில் உள்ள காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை என்று பெயர். இதற்கு கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசத்தன்று சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் இப்பூசத் துறைக்கு வந்து, தீர்த்தவாரி கண்டு வீதி வழி ஆலயம் வருவார்கள். இக்காட்சி காணக்கிடைக்காதது. அத்துடன் இப்பூச நன்னாளில் இங்கு மூன்று நாட்கள் ஆரியக் கூத்து நடத்துவார்கள். ஆலயத்தில் அன்று விசேஷ பூஜை நடைபெறும்.
கடவுள்களில் தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் நமது முப்பாட்டன் முருகப்பெருமானை வணங்கும் பொழுது இந்த 108 முருகன் போற்றியை தவறாமல் உச்சரியுங்கள்.
கடவுள்களில் தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் நமது முப்பாட்டன் முருகப்பெருமானை வணங்கும் பொழுது இந்த 108 முருகன் போற்றியை தவறாமல் உச்சரியுங்கள்.
1. ஓம் ஆறுமுகனே போற்றி
2. ஓம் ஆண்டியே போற்றி
3. ஓம் அரன்மகனே போற்றி
4. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி
5. ஓம் அழகா போற்றி
6. ஓம் அபயா போற்றி
7. ஓம் ஆதிமூலமே போற்றி
8. ஓம் ஆவினன் குடியோய் போற்றி
9. ஓம் இறைவனே போற்றி
10. ஓம் இளையவனே போற்றி
11. ஓம் இடும்பனை வென்றவா போற்றி
12. ஓம் இடர் களைவோனே போற்றி
13. ஓம் ஈசன் மைந்தா போற்றி
14. ஓம் ஈராறு கண்ணனே போற்றி
15. ஓம் உமையவள் மகனே போற்றி
16. ஓம் உலக நாயகனே போற்றி
17. ஓம் ஐயனே போற்றி
88. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
19. ஓம் ஐயப்பன் தம்பியே போற்றி
20. ஓம் ஒப்பிலாதவனே போற்றி
21. ஓம் ஒங்காரனே போற்றி
22. ஓம் ஓதுவார்க்கினியவனே போற்றி
23. ஓம் அவ்வைக்கு அருளியவனே போற்றி
24. ஓம் கருணாகரரே போற்றி
25. ஓம் கதிர்வேலவனே போற்றி
26. ஓம் கந்தனே போற்றி
27. ஓம் கடம்பனே போற்றி
28. ஓம் கவசப்பிரியனே போற்றி
29. ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
30. ஓம் கிரிராஜனே போற்றி
31. ஓம் கிருபாநிதியே போற்றி
32. ஓம் குகனே போற்றி
33. ஓம் குமரனே போற்றி
34. ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
35. ஓம் குறத்தி நாதனே போற்றி
36. ஓம் குணக்கடலே போற்றி
37. ஓம் குருபரனே போற்றி
38. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
39. ஓம் சஷ்டி நாயகனே போற்றி
40. ஓம் சரவணபவனே போற்றி
41. ஓம் சரணாகதியே போற்றி
42. ஓம் சத்ரு சங்காரனே போற்றி
43. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
44. ஓம் சிக்கல்பதியே போற்றி
45. ஓம் சிங்காரனே போற்றி
46. ஓம் சுப்பிரமணியனே போற்றி
47. ஓம் சரபூபதியே போற்றி
48. ஓம் சுந்தரனே போற்றி
49. ஓம் சுகுமாரனே போற்றி
50. ஓம் சுவாமிநாதனே போற்றி
51. ஓம் சுகம் தருபவனே போற்றி
52. ஓம் சூழ் ஒளியே போற்றி
53. ஓம் சூரசம்ஹாரனே போற்றி
54. ஓம் செல்வனே போற்றி
55. ஓம் செந்தூர் காவலனே போற்றி
56. ஓம் சேவல் கொடியோனே போற்றி
57. ஓம் சேவகனே போற்றி
58. ஓம் சேனாபதியே போற்றி
59. ஓம் சேனைத்தலைவனே போற்றி
60. ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி
61. ஓம் சோலையப்பனே போற்றி
62. ஓம் ஞானியே போற்றி
63. ஓம் ஞாயிறே போற்றி
64. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
65. ஓம் ஞான உபதேசியே போற்றி
66. ஓம் தணிகாசலனே போற்றி
67. ஓம் தயாபரனே போற்றி
68. ஓம் தண்டாயுதாபாணியே போற்றி
69. ஓம் தகப்பன் சுவாமியே போற்றி
70. ஓம் திருவே போற்றி
71. ஓம் திங்களே போற்றி
72. ஓம் திருவருளே போற்றி
73. ஓம் திருமலை நாதனே போற்றி
74. ஓம் தினைப்புனம் புகுந்தோய் போற்றி
75. ஓம் துணைவா போற்றி
76. ஓம் துரந்தரா போற்றி
77. ஓம் தென்பரங்குன்றனே போற்றி
78. ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
79. ஓம் தேவாதி தேவனே போற்றி
80. ஓம் தேவை அருள்வாய் போற்றி
81. ஓம் தேரேறி வருவோய் போற்றி
82. ஓம் தேசத் தெய்வமே போற்றி
83. ஓம் நாதனே போற்றி
84. ஓம் நிலமனே போற்றி
85. ஓம் நீறணிந்தவனே போற்றி
86. ஓம் பரபிரம்மமே போற்றி
87. ஓம் பழனியாண்டவனே போற்றி
88. ஓம் பாலகுமரனே போற்றி
89. ஓம் பன்னிரு கையனே போற்றி
90. ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
91. ஓம் பிரணவமே போற்றி
92. ஓம் போகர் நாதனே போற்றி
93. ஓம் போற்றப்படுவோனே போற்றி
94. ஓம் மறைநாயகனே போற்றி
95. ஓம் மயில் வாகனனே போற்றி
96. ஓம் மகா சேனனே போற்றி
97. ஓம் மருத மலையானே போற்றி
98. ஓம் மால் மருகனே போற்றி
99. ஓம் மாவித்தையே போற்றி
100. ஓம் முருகனே போற்றி
101. ஓம் யோக சித்தியே போற்றி
102. ஓம் வயலூரானே போற்றி
103. ஓம் வள்ளி நாயகனே போற்றி
104. ஓம் விராலிமலையானே போற்றி
105. ஓம் விநாயகன் சோதரனே போற்றி
106. ஓம் வினைகளைக் களைவாய் போற்றி
107. வேலவனே போற்றி
108. ஓம் வேத முதல்வனே போற்றி போற்றி
1. ஓம் ஆறுமுகனே போற்றி
2. ஓம் ஆண்டியே போற்றி
3. ஓம் அரன்மகனே போற்றி
4. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி
5. ஓம் அழகா போற்றி
6. ஓம் அபயா போற்றி
7. ஓம் ஆதிமூலமே போற்றி
8. ஓம் ஆவினன் குடியோய் போற்றி
9. ஓம் இறைவனே போற்றி
10. ஓம் இளையவனே போற்றி
11. ஓம் இடும்பனை வென்றவா போற்றி
12. ஓம் இடர் களைவோனே போற்றி
13. ஓம் ஈசன் மைந்தா போற்றி
14. ஓம் ஈராறு கண்ணனே போற்றி
15. ஓம் உமையவள் மகனே போற்றி
16. ஓம் உலக நாயகனே போற்றி
17. ஓம் ஐயனே போற்றி
88. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
19. ஓம் ஐயப்பன் தம்பியே போற்றி
20. ஓம் ஒப்பிலாதவனே போற்றி
21. ஓம் ஒங்காரனே போற்றி
22. ஓம் ஓதுவார்க்கினியவனே போற்றி
23. ஓம் அவ்வைக்கு அருளியவனே போற்றி
24. ஓம் கருணாகரரே போற்றி
25. ஓம் கதிர்வேலவனே போற்றி
26. ஓம் கந்தனே போற்றி
27. ஓம் கடம்பனே போற்றி
28. ஓம் கவசப்பிரியனே போற்றி
29. ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
30. ஓம் கிரிராஜனே போற்றி
31. ஓம் கிருபாநிதியே போற்றி
32. ஓம் குகனே போற்றி
33. ஓம் குமரனே போற்றி
34. ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
35. ஓம் குறத்தி நாதனே போற்றி
36. ஓம் குணக்கடலே போற்றி
37. ஓம் குருபரனே போற்றி
38. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
39. ஓம் சஷ்டி நாயகனே போற்றி
40. ஓம் சரவணபவனே போற்றி
41. ஓம் சரணாகதியே போற்றி
42. ஓம் சத்ரு சங்காரனே போற்றி
43. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
44. ஓம் சிக்கல்பதியே போற்றி
45. ஓம் சிங்காரனே போற்றி
46. ஓம் சுப்பிரமணியனே போற்றி
47. ஓம் சரபூபதியே போற்றி
48. ஓம் சுந்தரனே போற்றி
49. ஓம் சுகுமாரனே போற்றி
50. ஓம் சுவாமிநாதனே போற்றி
51. ஓம் சுகம் தருபவனே போற்றி
52. ஓம் சூழ் ஒளியே போற்றி
53. ஓம் சூரசம்ஹாரனே போற்றி
54. ஓம் செல்வனே போற்றி
55. ஓம் செந்தூர் காவலனே போற்றி
56. ஓம் சேவல் கொடியோனே போற்றி
57. ஓம் சேவகனே போற்றி
58. ஓம் சேனாபதியே போற்றி
59. ஓம் சேனைத்தலைவனே போற்றி
60. ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி
61. ஓம் சோலையப்பனே போற்றி
62. ஓம் ஞானியே போற்றி
63. ஓம் ஞாயிறே போற்றி
64. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
65. ஓம் ஞான உபதேசியே போற்றி
66. ஓம் தணிகாசலனே போற்றி
67. ஓம் தயாபரனே போற்றி
68. ஓம் தண்டாயுதாபாணியே போற்றி
69. ஓம் தகப்பன் சுவாமியே போற்றி
70. ஓம் திருவே போற்றி
71. ஓம் திங்களே போற்றி
72. ஓம் திருவருளே போற்றி
73. ஓம் திருமலை நாதனே போற்றி
74. ஓம் தினைப்புனம் புகுந்தோய் போற்றி
75. ஓம் துணைவா போற்றி
76. ஓம் துரந்தரா போற்றி
77. ஓம் தென்பரங்குன்றனே போற்றி
78. ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
79. ஓம் தேவாதி தேவனே போற்றி
80. ஓம் தேவை அருள்வாய் போற்றி
81. ஓம் தேரேறி வருவோய் போற்றி
82. ஓம் தேசத் தெய்வமே போற்றி
83. ஓம் நாதனே போற்றி
84. ஓம் நிலமனே போற்றி
85. ஓம் நீறணிந்தவனே போற்றி
86. ஓம் பரபிரம்மமே போற்றி
87. ஓம் பழனியாண்டவனே போற்றி
88. ஓம் பாலகுமரனே போற்றி
89. ஓம் பன்னிரு கையனே போற்றி
90. ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
91. ஓம் பிரணவமே போற்றி
92. ஓம் போகர் நாதனே போற்றி
93. ஓம் போற்றப்படுவோனே போற்றி
94. ஓம் மறைநாயகனே போற்றி
95. ஓம் மயில் வாகனனே போற்றி
96. ஓம் மகா சேனனே போற்றி
97. ஓம் மருத மலையானே போற்றி
98. ஓம் மால் மருகனே போற்றி
99. ஓம் மாவித்தையே போற்றி
100. ஓம் முருகனே போற்றி
101. ஓம் யோக சித்தியே போற்றி
102. ஓம் வயலூரானே போற்றி
103. ஓம் வள்ளி நாயகனே போற்றி
104. ஓம் விராலிமலையானே போற்றி
105. ஓம் விநாயகன் சோதரனே போற்றி
106. ஓம் வினைகளைக் களைவாய் போற்றி
107. வேலவனே போற்றி
108. ஓம் வேத முதல்வனே போற்றி போற்றி
இந்த ஆண்டு கொரோனா பரவலால் தைப்பூச தினமான இன்று முருகர் கோவில் உள்ளிட்ட அனைத்து மத வழிப்பாட்டு தலங்களும் மூடப்படும் என்று அரசு அறிவித்தது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகத் சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் விளங்குகிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றது. வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசித்து செல்வர். பலர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வருவர்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலால் தைப்பூச தினமான இன்று முருகர் கோவில் உள்ளிட்ட அனைத்து மத வழிப்பாட்டு தலங்களும் மூடப்படும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி இன்று சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவில் மூடப்பட்டிருந்தது. இருந்தாலும் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு வந்தனர். பலர் பாத யாத்திரையாக வந்திருந்தனர்.
கோவில் மூடப்பட்டிருந்ததால் வாசல் முன்பு தீபங்கள் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். தங்களது நேர்த்திகடனையும் செலுத்தினர். அப்போது மனமுருகி முருகரை வழிப்பட்டனர். கொரோனா தொற்று முற்றிலும் நீங்க பிரார்த்தித்தனர்.
தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு நின்று வழிப்பட்டு செல்கின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றது. வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசித்து செல்வர். பலர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வருவர்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலால் தைப்பூச தினமான இன்று முருகர் கோவில் உள்ளிட்ட அனைத்து மத வழிப்பாட்டு தலங்களும் மூடப்படும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி இன்று சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவில் மூடப்பட்டிருந்தது. இருந்தாலும் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு வந்தனர். பலர் பாத யாத்திரையாக வந்திருந்தனர்.
கோவில் மூடப்பட்டிருந்ததால் வாசல் முன்பு தீபங்கள் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். தங்களது நேர்த்திகடனையும் செலுத்தினர். அப்போது மனமுருகி முருகரை வழிப்பட்டனர். கொரோனா தொற்று முற்றிலும் நீங்க பிரார்த்தித்தனர்.
தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு நின்று வழிப்பட்டு செல்கின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
அல்லாஹ் நம்மைக் கவனிக்கின்றான், கண்காணிக்கின்றான், பார்க்கின்றான் என்ற அச்சம் இருந்தால் உலக மோகத்தில் மூழ்கிட மாட்டோம். தீய செயல்களில் ஈடுபடமாட்டோம்.
இறைவன் இவ்வுலகைப் படைத்து அவற்றில் உயிரினங்களையும், மனிதர்களையும் படைத்தான். ஏனைய படைப்புகளுக்கு சாதாரண அறிவைக்கொடுத்த இறைவன் மனிதனுக்கு மட்டும் பகுத்தறிவைக் கொடுத்தான். காரணம், அனைத்தையும் மனிதன் பகுத்துணர்ந்து அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக. ஆயினும் ஏனைய உயிரினங்கள் எல்லாம் தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவின் அடிப்படையில் இறைவனுக்கு கீழ்படிகின்றன. ஆனால் பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன் ஏனோ இறைவனுக்குக் கீழ்ப்படியத் தயங்குகின்றான்.
காரணம் என்ன?
உலக ஆசைகள்தான் மனிதனை இறைவனுக்குக் கீழ்படிய அனுமதிப்பதில்லை. உலகமே நிரந்தரம் என்றும், இனிஒருபோதும் இறைவனிடம் திரும்ப மாட்டோம் என்று கருதுவதும், தன்னைத் தானே ஏமாற்றுவதாகும். காரணம், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தெரியும், யாரும் இங்கே நிரந்தரமாக வாழ முடியாது என்று. பிறந்தவர் எவரேனும் இறக்காமல் இருந்திருக்கின்றார்களா? பின் எதற்காக இந்த உலகின் மீதும் உலகில் உள்ள எல்லா பொருட்கள் மீதும் வெறிகொண்டவர் போல் மோகம் கொள்ள வேண்டும்?
எப்போது மனித உள்ளத்தில் உலக மோகம் வருகின்றதோ, அப்பொழுது அவன் தன்னையே மறந்து விடுகிறான். அந்த ஆசை அவனை மிருகத்தன்மை கொண்டவனாக மாற்றிவிடுகிறது.
பேரறிஞர் ரூமி (ரஹ்) ஓர் உதாரணத்தின் மூலம் இதனை இவ்வாறு விளக்குகிறார்:
மனிதன் உலகில் வாழ்வதற்கு எண்ணற்ற விஷயங்கள் தேவைப்படுகின்றன. உலகம் கடல் நீருக்கு ஒப்பானது. அந்த நீரில் ஓடும் கப்பல் போன்றதுதான் மனித வாழ்வு. நீரின்றி கப்பல் எவ்வாறு செயல்படாதோ, அவ்வாறே பொருட்களின்றி உலகில் வாழ முடியாது. கப்பலுக்கு வெளியே நாலாபுறமும் தண்ணீர் சூழ்ந்திருக்கும் வரைதான் அந்த நீரால் கப்பலுக்குப் பயன். அதேவேளை அந்த நீர் கப்பலுக்குள் வந்துவிட்டால் முழுக் கப்பலும் மூழ்கிவிடும். அவ்வாறுதான் உலகமும். நமது பயன்பாட்டையும், தேவையையும் தாண்டி பேராசை உள்ளங்களுள் வந்துவிட்டால், அந்தக் கப்பலுக்கு ஏற்படும் நிலைதான் மனிதனுக்கும் ஏற்படும். பின்னர் பாவங்களில் மூழ்கி வாழ்க்கையே நிம்மதியற்றதாகி, இவ்வுலகையும் மறுமையையும் ஒருசேர இழக்கும் நிலை ஏற்படும்.
செல்வத்தைத் தேடும் வேகத்தில் கட்டாயக் கடமைகளைக்கூட நாம் கண்டுகொள்வதில்லை. தொழுகையையும், நோன்பையும் தவற விடுகின்றோம். குர்ஆனை தலைகுனிந்து ஓதி இருக்கின்றோமா? நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான வழிகாட்டி நூல் அல்லவா அது. ஆனால் செல்போனை, எவ்வளவு நேரமாக இருந்தாலும் தலைகுனிந்து பார்க்கின்றோம்!
அல்லாஹ் நம்மைக் கவனிக்கின்றான், கண்காணிக்கின்றான், பார்க்கின்றான் என்ற அச்சம் இருந்தால் உலக மோகத்தில் மூழ்கிட மாட்டோம். தீய செயல்களில் ஈடுபடமாட்டோம்.
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தோழர்களுடன் ஒரு வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அங்கு ஓர் ஆட்டுக்குட்டி காது அறுபட்டு இறந்த நிலையில் துர்நாற்றத்துடன் கிடந்தது. நபி (ஸல்) அவர்கள் அந்த செத்த ஆட்டுக் குட்டியை யாரேனும் ஒரு திர்ஹத்திற்கு வாங்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார்கள்.
அதற்கு தோழர்கள் இந்த ஆட்டுக்குட்டி உயிருடன் இருந்தாலும் இதன் காது அறுபட்டிருப்பதால் இதனை யாரும் வாங்க விரும்பமாட்டோம். ஆயினும் இது இறந்து கிடக்கிறது. இதை எவ்வாறு நாங்கள் வாங்க விரும்புவோம் என்று கூறினார். அதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், இந்த செத்த ஆட்டுக்குட்டி (உங்களிடத்தில்) எவ்வாறு மதிப்பற்றதோ, அதைவிடவும் அல்லாஹ்விடத்தில் இந்த உலகம் மதிப்பற்றது என்று கூறினார்கள்.
உலகில் வாழும் நாம், வாழ்வதற்காகவும் தேவைக்காகவும் மட்டுமே உலக ஆசைகொள்ள வேண்டும். அதுவே வெறியாக மாறக்கூடாது. தேவைக்கும் அவசியத்திற்கும் உலக ஆசை கொள்வது வேறு. உலகே கதியென்று கிடப்பது வேறு. வாழும் காலம்வரை ஆசைக்கு அணைபோட்டு தடுத்துக்கொள்வோம். காரணம், மறுமை வெற்றிக்கு உலக மோகம் ஒருபோதும் தடையாக மாறிவிடக் கூடாது.
உலகம் நிலையானது அல்ல. மறுமை மட்டுமே நிலையானது. மறுமை வெற்றிதான் ஓர் இறைநம்பிக்கையாளனின் ஒரே இலக்காக இருக்க வேண்டும்.
அம்ஜத் கான், திருச்சி.
காரணம் என்ன?
உலக ஆசைகள்தான் மனிதனை இறைவனுக்குக் கீழ்படிய அனுமதிப்பதில்லை. உலகமே நிரந்தரம் என்றும், இனிஒருபோதும் இறைவனிடம் திரும்ப மாட்டோம் என்று கருதுவதும், தன்னைத் தானே ஏமாற்றுவதாகும். காரணம், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தெரியும், யாரும் இங்கே நிரந்தரமாக வாழ முடியாது என்று. பிறந்தவர் எவரேனும் இறக்காமல் இருந்திருக்கின்றார்களா? பின் எதற்காக இந்த உலகின் மீதும் உலகில் உள்ள எல்லா பொருட்கள் மீதும் வெறிகொண்டவர் போல் மோகம் கொள்ள வேண்டும்?
எப்போது மனித உள்ளத்தில் உலக மோகம் வருகின்றதோ, அப்பொழுது அவன் தன்னையே மறந்து விடுகிறான். அந்த ஆசை அவனை மிருகத்தன்மை கொண்டவனாக மாற்றிவிடுகிறது.
பேரறிஞர் ரூமி (ரஹ்) ஓர் உதாரணத்தின் மூலம் இதனை இவ்வாறு விளக்குகிறார்:
மனிதன் உலகில் வாழ்வதற்கு எண்ணற்ற விஷயங்கள் தேவைப்படுகின்றன. உலகம் கடல் நீருக்கு ஒப்பானது. அந்த நீரில் ஓடும் கப்பல் போன்றதுதான் மனித வாழ்வு. நீரின்றி கப்பல் எவ்வாறு செயல்படாதோ, அவ்வாறே பொருட்களின்றி உலகில் வாழ முடியாது. கப்பலுக்கு வெளியே நாலாபுறமும் தண்ணீர் சூழ்ந்திருக்கும் வரைதான் அந்த நீரால் கப்பலுக்குப் பயன். அதேவேளை அந்த நீர் கப்பலுக்குள் வந்துவிட்டால் முழுக் கப்பலும் மூழ்கிவிடும். அவ்வாறுதான் உலகமும். நமது பயன்பாட்டையும், தேவையையும் தாண்டி பேராசை உள்ளங்களுள் வந்துவிட்டால், அந்தக் கப்பலுக்கு ஏற்படும் நிலைதான் மனிதனுக்கும் ஏற்படும். பின்னர் பாவங்களில் மூழ்கி வாழ்க்கையே நிம்மதியற்றதாகி, இவ்வுலகையும் மறுமையையும் ஒருசேர இழக்கும் நிலை ஏற்படும்.
செல்வத்தைத் தேடும் வேகத்தில் கட்டாயக் கடமைகளைக்கூட நாம் கண்டுகொள்வதில்லை. தொழுகையையும், நோன்பையும் தவற விடுகின்றோம். குர்ஆனை தலைகுனிந்து ஓதி இருக்கின்றோமா? நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான வழிகாட்டி நூல் அல்லவா அது. ஆனால் செல்போனை, எவ்வளவு நேரமாக இருந்தாலும் தலைகுனிந்து பார்க்கின்றோம்!
அல்லாஹ் நம்மைக் கவனிக்கின்றான், கண்காணிக்கின்றான், பார்க்கின்றான் என்ற அச்சம் இருந்தால் உலக மோகத்தில் மூழ்கிட மாட்டோம். தீய செயல்களில் ஈடுபடமாட்டோம்.
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தோழர்களுடன் ஒரு வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அங்கு ஓர் ஆட்டுக்குட்டி காது அறுபட்டு இறந்த நிலையில் துர்நாற்றத்துடன் கிடந்தது. நபி (ஸல்) அவர்கள் அந்த செத்த ஆட்டுக் குட்டியை யாரேனும் ஒரு திர்ஹத்திற்கு வாங்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார்கள்.
அதற்கு தோழர்கள் இந்த ஆட்டுக்குட்டி உயிருடன் இருந்தாலும் இதன் காது அறுபட்டிருப்பதால் இதனை யாரும் வாங்க விரும்பமாட்டோம். ஆயினும் இது இறந்து கிடக்கிறது. இதை எவ்வாறு நாங்கள் வாங்க விரும்புவோம் என்று கூறினார். அதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், இந்த செத்த ஆட்டுக்குட்டி (உங்களிடத்தில்) எவ்வாறு மதிப்பற்றதோ, அதைவிடவும் அல்லாஹ்விடத்தில் இந்த உலகம் மதிப்பற்றது என்று கூறினார்கள்.
உலகில் வாழும் நாம், வாழ்வதற்காகவும் தேவைக்காகவும் மட்டுமே உலக ஆசைகொள்ள வேண்டும். அதுவே வெறியாக மாறக்கூடாது. தேவைக்கும் அவசியத்திற்கும் உலக ஆசை கொள்வது வேறு. உலகே கதியென்று கிடப்பது வேறு. வாழும் காலம்வரை ஆசைக்கு அணைபோட்டு தடுத்துக்கொள்வோம். காரணம், மறுமை வெற்றிக்கு உலக மோகம் ஒருபோதும் தடையாக மாறிவிடக் கூடாது.
உலகம் நிலையானது அல்ல. மறுமை மட்டுமே நிலையானது. மறுமை வெற்றிதான் ஓர் இறைநம்பிக்கையாளனின் ஒரே இலக்காக இருக்க வேண்டும்.
அம்ஜத் கான், திருச்சி.
பழனியில் இன்று மாலை தைப்பூசத் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் அரசு விதித்த தடையையும் மீறி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடியுடன் மலைக்கோவிலில் குவிந்தனர்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூசம் முதன்மையானதாகும். இந்த விழாவின் போது பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழனி முருகனை வழிபட்டு செல்வார்கள்.
அவ்வாறு வரும் பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துவது வழக்கம். இந்த வருட திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6ம் நாள் திருவிழாவாக நேற்று இரவு பெரியநாயகி அம்மன் கோவிலில் நடந்தது. வள்ளிதெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு பால், பஞ்சாமிர்தம், பழங்கள் விபூதி, உள்ளிட்ட 16 வகை பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டு வஸ்திரம், நகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது.
வழக்கமாக திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபடுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் பங்கேற்ற திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெள்ளித் தேரில் 4 ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் நேற்று கொரோனா பரவல் காரணமாக வெள்ளி மயில் வாகனத்தில் தம்பதி சமேதராக முத்துக்குமார சுவாமி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது. இதற்காக சிறிய அளவிலான தேரில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து தேரோட்டமும் நடத்தப்படுகிறது. முன்னதாக இன்று காலை 5 மணிக்கு தீர்த்தம் தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பகல் 12.40 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4.45 மணிக்கு கோவில் வளாகத்துக்குள் சுவாமி வீதிஉலா எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தைப்பூச தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த சில நாட்களாகவே பாத யாத்திரையாக பழனி நோக்கி பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். காரைக்குடியில் இருந்து வந்த நகரத்தார் குழுவினர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாதயாத்திரை பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இவர்கள் கிரி வீதிகளில் காவடியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
மேலும் அடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் ஏராளமான பக்தர்கள் தங்கியுள்ளனர். தைப்பூச நாளான இன்று மலையடிவாரத்தில் சாரைசாரையாக பக்தர்கள் திரண்டனர். பாதவிநாயகர் கோவிலில் வழிபட்டு அங்கிருந்தவாறே பழனி முருகனை தரிசனம் செய்து மனமுருக வேண்டிக் கொண்டனர். மேலும் கிரி வீதிகளிலும் சுற்றி வந்து வழிபட்டனர்.
தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட போதிலும் பழனியில் குவிந்துள்ள பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க அடிவாரத்தில் இருந்தபடியே சூடம் ஏற்றியும், தீபம் ஏற்றியும் வழிபட்டுச் சென்றனர்.
இதையும் படிக்கலாம்....ஆசைகளை நிறைவேற்றும் தைப்பூச விரதம்
அவ்வாறு வரும் பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துவது வழக்கம். இந்த வருட திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6ம் நாள் திருவிழாவாக நேற்று இரவு பெரியநாயகி அம்மன் கோவிலில் நடந்தது. வள்ளிதெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு பால், பஞ்சாமிர்தம், பழங்கள் விபூதி, உள்ளிட்ட 16 வகை பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டு வஸ்திரம், நகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது.
வழக்கமாக திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபடுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் பங்கேற்ற திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெள்ளித் தேரில் 4 ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் நேற்று கொரோனா பரவல் காரணமாக வெள்ளி மயில் வாகனத்தில் தம்பதி சமேதராக முத்துக்குமார சுவாமி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது. இதற்காக சிறிய அளவிலான தேரில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து தேரோட்டமும் நடத்தப்படுகிறது. முன்னதாக இன்று காலை 5 மணிக்கு தீர்த்தம் தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பகல் 12.40 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4.45 மணிக்கு கோவில் வளாகத்துக்குள் சுவாமி வீதிஉலா எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தைப்பூச தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த சில நாட்களாகவே பாத யாத்திரையாக பழனி நோக்கி பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். காரைக்குடியில் இருந்து வந்த நகரத்தார் குழுவினர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாதயாத்திரை பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இவர்கள் கிரி வீதிகளில் காவடியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
மேலும் அடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் ஏராளமான பக்தர்கள் தங்கியுள்ளனர். தைப்பூச நாளான இன்று மலையடிவாரத்தில் சாரைசாரையாக பக்தர்கள் திரண்டனர். பாதவிநாயகர் கோவிலில் வழிபட்டு அங்கிருந்தவாறே பழனி முருகனை தரிசனம் செய்து மனமுருக வேண்டிக் கொண்டனர். மேலும் கிரி வீதிகளிலும் சுற்றி வந்து வழிபட்டனர்.
தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட போதிலும் பழனியில் குவிந்துள்ள பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க அடிவாரத்தில் இருந்தபடியே சூடம் ஏற்றியும், தீபம் ஏற்றியும் வழிபட்டுச் சென்றனர்.
இதையும் படிக்கலாம்....ஆசைகளை நிறைவேற்றும் தைப்பூச விரதம்
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி இந்த நிகழ்ச்சி நடந்தது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் புகழ்பெற்ற தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமிக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது.
பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. அதையடுத்து வள்ளி-தெய்வானைக்கு பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். மாங்கல்யம் அணிவித்தலை அடுத்து மலர்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ப
பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் எழுந்தருளினார். இரவில் வெள்ளி மயில் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று நடந்த திருக்கல்யாணத்திலும் பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
வழக்கமாக திருக்கல்யாண நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அப்போது பக்தர்களின் சரண கோஷம் பழனியையே அதிர வைக்கும். ஆனால் நேற்று நடந்த திருக்கல்யாணம் பக்தர்களின் 'அரோகரா' கோஷம் இன்றி நடந்தது.
இதற்கிடையே திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியிலும் பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு தடை உள்ள போதிலும், பழனிக்கு தினமும் பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் கிரிவலம் வந்து பாதவிநாயகர் கோவில் முன்பு நின்று வழிபட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றி செல்கின்றனர்.
பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. அதையடுத்து வள்ளி-தெய்வானைக்கு பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். மாங்கல்யம் அணிவித்தலை அடுத்து மலர்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ப
பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் எழுந்தருளினார். இரவில் வெள்ளி மயில் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று நடந்த திருக்கல்யாணத்திலும் பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
வழக்கமாக திருக்கல்யாண நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அப்போது பக்தர்களின் சரண கோஷம் பழனியையே அதிர வைக்கும். ஆனால் நேற்று நடந்த திருக்கல்யாணம் பக்தர்களின் 'அரோகரா' கோஷம் இன்றி நடந்தது.
இதற்கிடையே திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியிலும் பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு தடை உள்ள போதிலும், பழனிக்கு தினமும் பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் கிரிவலம் வந்து பாதவிநாயகர் கோவில் முன்பு நின்று வழிபட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றி செல்கின்றனர்.
நாமும் தேவனின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்தால், நம்முடைய தண்ணீர் போன்ற வாழ்க்கை, திராட்சை ரசம் போன்று சுவை மிகுந்ததாய் மாறும்.
தேவன் எப்போதும் நம் மீது அன்பாகவே இருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் குறைகள் ஏற்படும்போது, அதை அவர் நிறைவாய் மாற்றுகிறார். அப்படி மாற்றும்போது, அது நம்முடைய முந்தைய நிலையை விடவும் வளமானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும்படி செய்கிறார். தேவனுக்கு கீழ்படிந்து நாம் நடக்கும்போது, ‘அவர்கள் வேண்டுவதற்கு முன்னே நான் மறுமொழி தருவேன்; அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே பதிலளிப்பேன்’ என்று எசாயாவில் எழுதப்பட்டுள்ள வார்த்தையின் படி, நம்முடைய தேவையை அறிந்ததுமே உதவி செய்பவராக இருக்கிறார்.
கலிலேயாவில் உள்ள கானாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றுக்கு, இயேசுவும் அவருடைய சீடர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இயேசுவின் தாய் மரியாளும் அத்திருமணத்திற்கு வந்திருந்தார். சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த திருமண விருந்தில், திராட்சை ரசம் தீர்ந்து போனது. இதை அறிந்தவுடன் மரியாள் இயேசுவிடம் வந்து, ‘‘திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது’’ என்றார். இயேசுவே அவரிடம், ‘‘அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே’’ என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், ‘‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’’ என்றார்.
யூதரின் தூய்மைச் சடங்கு களுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் நிரம்பக் கூடியவை. இயேசு அவர்களிடம், ‘‘இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்’’ என்றார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், ‘‘இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்’’ என்று கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
பந்தி மேற்பார்வையாளர், திராட்சை ரசமாய் மாறியிருந்த தண்ணீரை சுவைத்தார். அந்த ரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, ‘‘எல்லாரும் நல்ல திராட்சை ரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்த பின்தான் தரம் குறைந்த ரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல ரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?’’ என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அற்புதம் இது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
இந்த அற்புதம் நடைபெற முக்கிய காரணம், கீழ்படிதலே ஆகும். அந்தக் கல்யாண வீட்டில் ஒரு குறை என்றவுடன், இயேசுவின் தாய் அதனை புறக்கணித்துச் செல்லவில்லை. இந்தக் குறையை தன் மகனிடம் கூறினால், நிச்சயமாய் அவரால் அதனை சரி செய்ய முடியும் என்பதை அவர் முதலில் விசுவாசித்தார். அதனால்தான் அவர் தன் மகனிடம் சென்று ‘திரட்சை ரசம் தீர்ந்து விட்டது’ என்றார்.
இயேசு இந்த உலகில் தனக்கான நேரம் வரவில்லை என்பதை அறிந்தவராய், தன்னால் என்ன செய்ய இயலும் என்று தன்னுடைய அன்னையிடம் கேட்டார். ஆனாலும் அன்னையே தன்னுடைய மகன் மீது கொண்டிருந்த விசுவாசத்தால், அங்கிருந்த பணியாளர்களிடம் ‘‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’’ என்று கூறினார். பின்னர் இயேசுவும் தன்னுடைய தாயின் வார்த்தைக்கு கீழ்படிந்தவராய், அங்கிருந்த ஊழியர்களை நோக்கி, ‘‘இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்’’ என்றார். அவர்களும் அதற்கு மறுவார்த்தை எதுவும் கேட்காமல் அங்கிருந்த தொட்டிகளில் தண்ணீரை நிரப்பினார்கள்.
அதன்பின் இயேசு பணியாளர்களை நோக்கி ‘இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்’ என்றார். அதற்கும் அவர்கள் மறுமொழி கூறாமல், இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்து, அந்தத் தொட்டியில் நிரப்பியிருந்த தண்ணீரை மொண்டு, பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு சென்றனர். அவர்கள் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்து அவர் சொன்னபடி செய்ததால், அந்த பந்தி மேற்பார்வையாளரிடம் அந்த தண்ணீர் சென்ற போது, அது திராட்சை ரசமாக மாறியிருந்தது. அதுவும் முன்பிருந்த திராட்சை ரசத்தை விட சுவையானதாகவும் இருந்தது.
இன்றும் பிதாவான தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றுதான். அது அவருடைய கட்டளைக்கு கீழ்படிய வேண்டும் என்பதே. அப்படி நாமும் தேவனின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்தால், நம்முடைய தண்ணீர் போன்ற வாழ்க்கை, திராட்சை ரசம் போன்று சுவை மிகுந்ததாய் மாறும்.
கலிலேயாவில் உள்ள கானாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றுக்கு, இயேசுவும் அவருடைய சீடர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இயேசுவின் தாய் மரியாளும் அத்திருமணத்திற்கு வந்திருந்தார். சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த திருமண விருந்தில், திராட்சை ரசம் தீர்ந்து போனது. இதை அறிந்தவுடன் மரியாள் இயேசுவிடம் வந்து, ‘‘திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது’’ என்றார். இயேசுவே அவரிடம், ‘‘அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே’’ என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், ‘‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’’ என்றார்.
யூதரின் தூய்மைச் சடங்கு களுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் நிரம்பக் கூடியவை. இயேசு அவர்களிடம், ‘‘இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்’’ என்றார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், ‘‘இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்’’ என்று கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
பந்தி மேற்பார்வையாளர், திராட்சை ரசமாய் மாறியிருந்த தண்ணீரை சுவைத்தார். அந்த ரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, ‘‘எல்லாரும் நல்ல திராட்சை ரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்த பின்தான் தரம் குறைந்த ரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல ரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?’’ என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அற்புதம் இது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
இந்த அற்புதம் நடைபெற முக்கிய காரணம், கீழ்படிதலே ஆகும். அந்தக் கல்யாண வீட்டில் ஒரு குறை என்றவுடன், இயேசுவின் தாய் அதனை புறக்கணித்துச் செல்லவில்லை. இந்தக் குறையை தன் மகனிடம் கூறினால், நிச்சயமாய் அவரால் அதனை சரி செய்ய முடியும் என்பதை அவர் முதலில் விசுவாசித்தார். அதனால்தான் அவர் தன் மகனிடம் சென்று ‘திரட்சை ரசம் தீர்ந்து விட்டது’ என்றார்.
இயேசு இந்த உலகில் தனக்கான நேரம் வரவில்லை என்பதை அறிந்தவராய், தன்னால் என்ன செய்ய இயலும் என்று தன்னுடைய அன்னையிடம் கேட்டார். ஆனாலும் அன்னையே தன்னுடைய மகன் மீது கொண்டிருந்த விசுவாசத்தால், அங்கிருந்த பணியாளர்களிடம் ‘‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’’ என்று கூறினார். பின்னர் இயேசுவும் தன்னுடைய தாயின் வார்த்தைக்கு கீழ்படிந்தவராய், அங்கிருந்த ஊழியர்களை நோக்கி, ‘‘இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்’’ என்றார். அவர்களும் அதற்கு மறுவார்த்தை எதுவும் கேட்காமல் அங்கிருந்த தொட்டிகளில் தண்ணீரை நிரப்பினார்கள்.
அதன்பின் இயேசு பணியாளர்களை நோக்கி ‘இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்’ என்றார். அதற்கும் அவர்கள் மறுமொழி கூறாமல், இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்து, அந்தத் தொட்டியில் நிரப்பியிருந்த தண்ணீரை மொண்டு, பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு சென்றனர். அவர்கள் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்து அவர் சொன்னபடி செய்ததால், அந்த பந்தி மேற்பார்வையாளரிடம் அந்த தண்ணீர் சென்ற போது, அது திராட்சை ரசமாக மாறியிருந்தது. அதுவும் முன்பிருந்த திராட்சை ரசத்தை விட சுவையானதாகவும் இருந்தது.
இன்றும் பிதாவான தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றுதான். அது அவருடைய கட்டளைக்கு கீழ்படிய வேண்டும் என்பதே. அப்படி நாமும் தேவனின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்தால், நம்முடைய தண்ணீர் போன்ற வாழ்க்கை, திராட்சை ரசம் போன்று சுவை மிகுந்ததாய் மாறும்.
கொரோனா தொற்று பரவி வருவதால் ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் புஷ்யமி மாதம் பவுர்ணமி அன்று புஷ்யமி நட்சத்திரத்தன்று திருப்பதி ஏழுமலையான் அருகே ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடப்பது வழக்கம். அங்கு திரளான பக்தர்கள் சென்று ராமகிருஷ்ண தீர்த்தத்தில் புனித நீராடி ராமச்சந்திரமூர்த்தி, கிருஷ்ணரை வழிபடுவார்கள்.
தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம் நேற்று பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது. அங்குள்ள ராமச்சந்திரமூர்த்தி மற்றும் கிருஷ்ணர் உருவச்சிலைகளுக்கு பால், தயிர், சந்தனம் மற்றும் பிற சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்புப்பூஜைகள் ெசய்து, நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம் நேற்று பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது. அங்குள்ள ராமச்சந்திரமூர்த்தி மற்றும் கிருஷ்ணர் உருவச்சிலைகளுக்கு பால், தயிர், சந்தனம் மற்றும் பிற சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்புப்பூஜைகள் ெசய்து, நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.






