என் மலர்
முன்னோட்டம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் முன்னோட்டம். #PariyerumPerumal #Kathir #KayalAnandhi
நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’.
இதில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருக்கிறார். அவருடன் கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - ஸ்ரீதர், படத்தொகுப்பு - ஆர்.கே.செல்வா, தயாரிப்பு - பா.ரஞ்சித், எழுத்து, இயக்கம் - மாரி செல்வராஜ். ராமிடம் இணை இயக்குனராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார். இவர் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ சிறுகதை தொகுப்பு, ‘மறக்க நினைக்கிறேன்’ தொடர் ஆகியவற்றை எழுதியவர்.

படம் பற்றி கூறிய இயக்குனர்...
“இது முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்ட படம். ‘பரியேறும் பெருமாள்’ என்பது குலதெய்வம் பெயர். தென்தமிழக கிராமங்கள், நகரங்கள் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் பிரிவினை படிநிலை உள்ளது. அது உருவாக்கும் பெரும் தாக்கத்தை உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ இருக்கும்” என்றார்.
ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்' படத்தின் முன்னோட்டம். #SaamySquare #Vikram #KeerthySuresh
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சாமி ஸ்கொயர்'.
விக்ரம் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ், இசை - தேவி ஸ்ரீ பிரகாஷ், எடிட்டிங் - வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய், பாடலாசிரியர் - விவேகா, கலை - பி.சண்முகம், பி.வி.பாலாஜி, சண்டைப்பயிற்சி - கனல் கண்ணன், ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பு - நீராஜா கோனா, தயாரிப்பு - சிபு தமீன்ஸ், ஸ்ரீனிவாச சித்தூரி, எழுத்து, இயக்கம் - ஹரி.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹரி பேசியதாவது,
தொடர்ந்து எனது படத்தை தயாரித்தவர் இயக்குநர் பாலச்சந்தர். இந்த தருணத்தில் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சிபுவும் சிறந்த தயாரிப்பாளர். படத்திற்கான வெற்றி, தோல்வியை வெளிப்படையாக கூறுவார். இந்த படத்திற்காக அதிகமாக செலவு செய்திருக்கிறார். 5 மாநிலங்களுக்கு சென்று, பல முக்கிய இடங்களில் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
சாமி படத்தை 2003-ல் உருவாக்கினோம். அப்போவே சாமியின் வேட்டை தொடரும் என்று போட்டிருந்தேன். அப்போது ஒரு ஒன்லைன் இருந்தது. அதை அடுத்தடுத்து எடுத்த போலீஸ் படங்களில் அதை எடுத்துவிட்டேன். ஒரு நல்ல கதை இருந்தால் மட்டும் தான் பண்ண முடியும் என்று சொல்வேன். எனவே 14 வருடங்கள் காத்திருந்தோம். அப்போது தான் கதை அமைந்தது. நிறைய பேர், புதுசு புதுசாக கதை சொல்கிறார்கள், ரொம்ப யோசிக்க வேண்டாம், கதையை நானே சொல்கிறேன். பெருமாள் பிச்சை குடும்பத்துக்கும், ஆறுச்சாமி குடும்பத்துக்கும் நடக்கும் போராட்டம் தான் சாமி ஸ்கொயர் படத்தின் கதை. என்றார்.
`சாமி ஸ்கொயர்' உலகமெங்கும் நாளை (செப்டம்பர் 21-ஆம் தேதி) ரிலீசாக இருக்கிறது. #SaamySquare #Vikram #KeerthySuresh
சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலர்:
பவன்குமார் இயக்கத்தில் சமந்தா - ஆதி, நரேன், ராகுல் ரவீந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் `யு டர்ன்' படத்தின் முன்னோட்டம். #UTurn #Samantha
பி.ஆர்.8 கிரியேஷன்ஸ், ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் மற்றும் விஒய் கம்பைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் `யு டர்ன்'.
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான இந்த படத்தில், அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் குறித்த துப்பறியும் கதாபாத்திரத்தில் இளம் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடித்திருக்கிறார். சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரனும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆதி, நரேன், பூமிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி, இசை - அனிருத், பூர்ணசந்திரா தேஜஸ்வி, எடிட்டிங் - சுரேஷ் ஆறுமுகம், பாடல்கள் - சுபு, கலை - ராமன்ஜனேயலு, ஏ.எஸ்.பிரகாஷ், லதா தருண் தாஸ்யம், சண்டைப்பயிற்சி - சேத்தன் டி சவுசா, ஆடை வடிவமைப்பு - பல்லவி சிங், தயாரிப்பு - ராம்பாபு பந்தாரு, ஸ்ரீனிவாச சித்தூரி, வசனம் - கவின் பாலா, இணை இயக்குநர் - கவின் பாலா, சூரி ரவி, திரைக்கதை, இயக்கம் - பவன்குமார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் செப்டம்பர் 13-ஆம் தேதி (நாளை) ரிலீசாக இருக்கிறது. அதேநாளில் தான் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள சீமராஜா படமும் ரிலீசாக இருக்கிறது.
இதுபற்றி சமந்தாவிடம் கேட்டபோது, ‘2 படங்களுமே வேறு வேறு வகையை சேர்ந்தவை. சீமராஜா கிராமத்து படமாகவும், யு டர்ன் ஒரு கொலை சம்பவத்தின் பின்னணியிலும் உருவாகி இருக்கின்றன. இரண்டையுமே ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்’ என்று கூறி உள்ளார். #UTurn #Samantha
யு டர்ன் படத்தின் டிரைலர்:
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் முன்னோட்டம். #Seemaraja #Sivakarthikeyan #Samantha
24 ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘சீமராஜா’.
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் முதல்முறையாக அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். நெப்போலியன், சிம்ரன், லால், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், இசை - டி.இமான், எடிட்டிங் - விவேக் ஹர்ஷன், பாடல்கள் - யுகபாரதி, கலை - முத்துராஜ், சண்டைப்பயிற்சி - அனல் அரசு, ஆடை வடிவமைப்பு - அனு பார்த்தசாரதி, எகா லஹானி, நிர்வாக தயாரிப்பு - மாலா மன்யன், தயாரிப்பு - ஆர்.டி.ராஜா, எழுத்து, இயக்கம் - பொன்ராம்.
படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது,
“ படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். ரஜினி முருகன் படத்தின்போதே இந்த யோசனை பற்றி பொன்ராமும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் அதிரடி காட்சிகளை குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம்.

காமெடியும் நிறையவே இருக்கிறது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன் ” என்றார்.
பொன்ராம் - சிவகார்த்திகேயன் - சூரி - டி.இமான் - பாலசுப்ரமணியம் - விவேக் ஹர்ஷன் என அறுவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Seemaraja #Sivakarthikeyan #Samantha
நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் காட்டை மையப்படுத்தி உருவாகும் “கா“ படத்தின் முன்னோட்டம். #Kaa #AndreaJeremiah
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ கா “ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.
கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு மற்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சலீம் கவுஸ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு - அறிவழகன், இசை - அம்ரிஷ், எடிட்டிங் - கோபிகிருஷ்ணா, கலை - லால்குடி இளையராஜா, ஸ்டன்ட் - விக்கி, நிர்வாக தயாரிப்பு - சங்கர், தயாரிப்பு - ஜான்மேக்ஸ், ஜோன்ஸ், இணை தயாரிப்பு - ரவிகாந்த், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நாஞ்சில்
முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கிரைம் திரில்லர் படமாக உருவாகிறது. அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. #Kaa #AndreaJeremiah
கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்க இருக்கும் ‘ஜாக்’ படத்தின் முன்னோட்டம். #Jack #JackTheMovie
முன்பெல்லாம் விலங்குகளை வைத்து மிகக்குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் வசூலை வாரிக்குவித்தன. சமீப காலங்களில் பல்வேறு காரணங்களால் குறைந்திருந்த இந்த போக்கு, தற்போது மீண்டும் வந்திருக்கிறது. விலங்குகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய வசூலை ஈட்டித் தருகின்றன. இதனை தொடர்ந்து பல இயக்குனர்கள் இந்த ஜானரில் படங்கள் இயக்க துவங்கியிருக்கிறார்கள்.
திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து, புரூஸ்லீ, சர்வர் சுந்தரம், ஆகிய படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் 'வான்' படத்தை தயாரிக்கும் கெனன்யா ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு நாயை மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.
புரூஸ்லீ படத்தை இயக்கிய பிரஷாந்த் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்குகிறார். 'ஜாக்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார்.
இது குறித்து தயாரிப்பாளர் செல்வக்குமார் கூறும்போது, "இது ராணுவ நடவடிக்கைகளை மையப்படுத்திய படம். எங்கள் நிறுவனத்தில் அனைத்து விதமான படங்களையும் எடுப்பது என்பதில் நான் உறுதியாக இருந்திருக்கிறேன். இதுவரை விலங்குகளை வைத்து எந்த படத்தையும் நாங்கள் எடுத்ததில்லை. இந்த கதையை பிரஷாந்த் என்னிடம் சொன்னபோது, இந்த படம் தேசிய அளவில் கவனம் பெறும் என உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன். அசோக் செல்வன் எந்த வகை படமாக இருந்தாலும் எளிதாக பொருந்தி விடுகிறார். ராணுவ வீரருக்குண்டான உடல் அமைப்பும் அவருக்கு இருக்கிறது. கோகுல் பினாய் (ஒளிப்பதிவு), ஜஸ்டின் பிரபாகர் (இசை), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), பாபா பாஸ்கர் (நடனம்) என படத்தின் மதிப்பை கூட்டும் வகையில் மிக திறமையான கலைஞர்களை படத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.
படத்தின் இயக்குனர் பிரஷாந்த் பாண்டிராஜ் கூறும்போது, "ஜாக் என்ற தலைப்புக்கு சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பு உள்ளது. இந்த கதையை சில காலம் முன்பே எழுதி விட்டேன். இது ராணுவத்துக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு நாயை பற்றிய கதை என்பதால் கதைக்கு நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டது. வெறும் நாயை வைத்து எடுக்கப்படும் பொழுதுபோக்கு படம் இல்லை, படத்தின் ஆதாரமே எமோஷன் தான். போர்க்காட்சிகளில் நாயகனுக்கும், நாய்க்கும் இடையே உள்ள பிணைப்பு தான் படத்தின் ஒரு முக்கிய ஹைலைட். அசோக் செல்வன் இந்த படத்துக்கு பிறகு நல்ல உயரத்துக்கு போவார், நாயகி தேர்வு நடந்து வருகிறது. நல்ல தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தின் பெரிய பலம். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது" என்றார்.
மனோஜ் பீதா இயக்கத்தில் குரு சோமசந்தரம், சாந்தினி, அனிஷா ஆம்ரோஸ் நடிப்பில் காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `வஞ்சகர் உலகம்' படத்தின் முன்னோட்டம். #VanjagarUlagam #GuruSomasundaram #ChandiniTamilarasan
லைப்ரந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரித்துள்ள படம் வஞ்சகர் உலகம்.
புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். குரு சோமசுந்தரம் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். ஹரேஷ் பெரடி, விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - ராட்ரிகோ டெல் ரியோ, இசை - சாம்.சி.எஸ், பாடல்கள் - மதன் கார்க்கி, ஒலி வடிவமைப்பு - சச்சின் சுதாகரன், படத்தொகுப்பு - ஆண்டனி எல்.ரூபன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்னர் சாம், கலை இயக்குநர் - ஏ.ராஜேஷ், எழுத்து - மனோஜ் பீதா, விநாயக் வயாஸ், இயக்கம் - மனோஜ் பீதா.

இவர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் பற்றி இயக்குநர் மனோஜ் பேசும் போது,
முதல் படமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் தான் த்ரில்லர் கதையில் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் கலந்த திரில்லர் படம். எனவே ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதுவித அனுபவமாக இருக்கும். மேற்கத்திய படமொன்றை பார்த்த அனுபவம் இருக்கும். விக்ரம் வேதா படத்திற்கு பிறகு சாம்.சி.எஸ்க்கு பேசும்படியான படமாக இது இருக்கும் என்றார்.
படம் வருகிற 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #VanjagarUlagam #GuruSomasundaram #ChandiniTamilarasan
மன்சூர் அலிகான் இயக்கி நடித்து, அவரது மகன் அலிகான் துக்ளக்கை நாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கும் `கடமான்பாறை' படத்தின் முன்னோட்டம். #Katamanparai #MansoorAlikhan
பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன், பல படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு `கடமான்பாறை' என்று பெயரிட்டுள்ளார்.
மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூர் அலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - மகேஷ்.டி, இசை - ரவிவர்மா, பாடல்கள் - விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூர் அலிகான், கலை - ஜெயகுமார், நடனம் - டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா. ஸ்டன்ட் - ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம் - ஜே.அன்வர்
ஒருங்கிணைப்பு - ஜே,ஜெயகுமார், எழுத்து, இயக்கம் - மன்சூர் அலிகான்.

படம் பற்றி மன்சூர் அலிகான் கூறும்போது
‘கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறி போகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது. அப்படி இருக்கும் ஒரு காதல் ஜோடி கல்லூரியை கட்டடித்துவிட்டு ஒரு மலைப்பகுதிக்கு செல்கிறார்கள். அந்த கங்குவாரெட்டி கஞ்சமலையை தன் வசம் வைத்திருக்கும் ஆதிவாசி சூரப்பனான என்னிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.
என்னிடம் பாரஸ்ட் ரேஞ்சர் மாட்டிக்கொண்டால் கூட உயிரோடு திரும்ப முடியாது. அந்த மலையில் இருந்து செம்மரக்கட்டை கடத்த முடியாது, கனிமவளங்களை திருட முடியாது, காட்டிலிருந்து எந்த பொருளும் வெளியே விடாமல் அந்த காட்டின் பாதுகாவலனாக இருக்கும் அவனிடம் சிக்கிய ஜோடி தப்பிதார்களா, இல்லையா என்பதுதான் இந்த கடமான்பாறை படத்தின் திரைக்கதை. திகிலூட்டும் காட்சிகள் மக்களை ரசிக்கவைக்கும்’ என்றார். #Katamanparai #MansoorAlikhan
ராம்ஷேவா இயக்கத்தில் அங்காடிதெரு மகேஷ் - ஷாலு நடிப்பில் உருவாகி வரும் `என் காதலி சீன் போடுறா' படத்தின் முன்னோட்டம். #EnKadhaliScenePodra #Mahesh
சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படம் `என் காதலி சீன் போடுறா'.
இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி. கோகுல், டாக்டர் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - வெங்கட், இசை - அம்ரீஷ், பாடல்கள் - ராம்சேவா, ஏகாதசி, கலை - அன்பு, நடனம் - சாண்டி, டி.முருகேஷ், சண்டைப்பயிற்சி - மிரட்டல் செல்வா, படத்தொகுப்பு - மாரி, தயாரிப்பு மேற்பார்வை - தண்டபாணி, தயாரிப்பு - ஜோசப் பேபி. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ராம்ஷேவா.
இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது...

இன்றைய சமூகத்தில் எல்லோருமே புத்திசாலிகள் தான் ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அதி புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே. இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம். படப்பிடிப்பு சென்னை, பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது என்றார். #EnKadhaliScenePodra #Mahesh
சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `96' படத்தின் முன்னோட்டம். #96TheMovie #VijaySethupathi #Trisha
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `96'. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். ஜனகராஜ், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - சண்முகசுந்தரம், இசை - கோவிந்த் மேனன், படத்தொகுப்பு - கோவிந்தராஜ், கலை - வினோத் ராஜ்குமார், பாடல்கள் - உமாதேவி, கார்த்திக் நேத்தா. தயாரிப்பு - எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம் - சி.பிரேம்குமார்.
இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். படம் பற்றி பிரேம் குமார் கூறும் போது,

படத்தின் அனைத்துகட்ட பணிகளும் முடிந்து விட்டது. விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களை விட இந்த படம் அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு அனுபவத்தை தரும். படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது, எங்களுக்கு கிடைத்த வெற்றிதான். படமும் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்ல என்றார்.
படத்தை உலகம் முழுவதும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் எஸ்.எஸ்.லலித்குமார் வெளியிடுகிறார். #96TheMovie #VijaySethupathi #Trisha
பா.விஜய் தாநாயகனாக நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் ‘ஆருத்ரா’ படத்தின் முன்னோட்டம். #Aaruthra
வில் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ‘ஆருத்ரா’. இதில் கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். மும்பை மாடல் அழகி திஷிதா, கொல்கத்தாவை சேர்ந்த மோகல், ஐதராபாத்தை சேர்ந்த சோனி ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். ஒளிப்பதிவு- பி.எல். சஞ்சய், இசை- வித்யாசாகர், எடிட்டிங்- ஷான் லோகேஷ், கலை-ராம்பிரசாத், ஸ்டண்ட்-கணேஷ், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்- பா.விஜய்.
படம் பற்றி அவரிடம் கேட்ட போது....
‘‘ஸ்ட்ராபெரி’ படத்தை தொடர்ந்து எனது இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஆருத்ரா’. நான், தொன்மையான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவன ஊழியராக இதில் நடித்திருக்கிறேன். எனது தந்தையாக எஸ்.ஏ. சந்திர சேகரன் நடிக்கிறார். கே.பாக்யராஜும், மொட்டை ராஜேந்திரனும் துப்பறியும் நிபுணர்களாக நடித்திருக்கிறார்கள்.
இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க வேண்டும்? என்ற முக்கிய செய்தியை சொல்லி இருக்கிறோம்.
‘ஆருத்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக இருக்கிறது.
வெற்றிமாறன் தயாரிப்பில் தினேஷ், மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் முன்னோட்டம். #AnnanukkuJai #Dinesh #MahimaNambiar
`அட்டகத்தி' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தினேஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `உள்குத்து' படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், தினேஷ் நடிப்பில் அடுத்ததாக `அண்ணனுக்கு ஜே' என்ற படம் உருவாகி இருக்கிறது.
ராஜ்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தினேஷ் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்தனர்.
அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில் தினேஷ் ஜோடியாக மகிமா நம்பியாரும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை விஷ்ணு ரங்கசாமி கவனித்திருக்கிறார். #AnnanukkuJai #Dinesh #MahimaNambiar






