என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    யோகிபாபு நடிப்பில் இயக்குநர் முத்துகுமரன் இயக்கத்தில் பி.ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகி வரும் 'தர்மபிரபு' படத்தின் முன்னோட்டம்.
    யோகிபாபு நடிப்பில் இயக்குநர் முத்துகுமரன் இயக்கத்தில் P. ரங்கநாதன் தயாரிக்கும் படம் 'தர்மபிரபு'. எமலோகத்தைப் பற்றிய நகைச்சுவை கலந்த படம். தற்போது, இப்படத்திற்காக AVM ஸ்டூடியோவில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு தளம் போடப்பட்டுள்ளது. சுமார் 1 ½ லட்சம் வருடங்கள் பழமையான எமலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், சொர்க்கம் மற்றும் நரகம் என்று தனித்தனியாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்படவுள்ளது. மேலும், இந்த தளம் அமைப்பதற்கு கலை இயக்குநர் பாலசந்தர் தலைமையில் ஏறக்குறைய 200 பேர் கொண்ட குழு கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமால் உழைத்து வருகிறார்கள்.



    வருகிற டிசம்பர் 14ம் தேதி இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், மகன் எமனாக யோகிபாபு நடிக்க, அவருக்கு அப்பா எமனாக ராதாரவி நடிக்கிறார். சித்ரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர்களுடன் அழகம் பெருமாள், 'போஸ்' வெங்கட், சோனியா போஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

    இப்படத்தில் ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு நடனமாடுகிறார். அதற்காக பிரம்மாண்ட தளம் அமைக்கப்படுகிறது. மேலும், அவருக்கென்று பிரத்யேகமான உடைகளும், ஆபரணங்களும் தயாராகி வருகிறது.

    ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத்தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்குநர் – பாலசந்தர், பாடல்கள் – யுகபாரதி, இசை – ஜஸ்டின் பிரபாகரன், தயாரிப்பு – P. ரங்கநாதன், தயாரிப்பு மேற்பார்வை - ராஜா செந்தில். இயக்கம் – முத்துகுமரன்.
    புதுமுக கலைஞர்கள் நடிப்பில் அண்ணன் - தம்பி பாசத்தோடு காதலையும் கலந்து குலசேகரபட்டினம் என்ற புதிய படம் வேகமாக வளர்ந்து முடிவடைந்துள்ளது.
    ஆ.ஜார்ஜ் வில்லியம், ஜேம்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் என்ற நிறுவனத்தின் சார்பில் குலசேகரபட்டினம் படத்தை தயாரித்து வருகிறார்.

    இந்தப் படத்தை பல முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ஆள்வான், கிராமத்து பண்பாடு, கலாசாரத்தோடு அண்ணன்-தம்பி பாசத்துடன் காதலையும் கலந்து நெஞ்சை நெகிழ வைக்கும் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்.

    இதில் கதாநாயகனாக ஜேம்ஸ் என்ற புதுமுக நடிகர் தனது முதல் படத்திலேயே அண்ணன்-தம்பி என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி என்ற புதுமுக நடிகை நடித்திருக்கிறார். வில்லனாக படத்தின் இயக்குனர் ஆள்வினும், காமெடி வேடத்தில் ஜூனியர் டி.ராஜேந்திரன் என்பவரும் நடித்திருக்கிறார்கள். உமா, பிரியா, மதுபாலா, ஜெயக்குமார், பூபதி போன்ற புதுமுக கலைஞர்கள் இதில் பணியாற்றி இருக்கிறார்கள்.



    இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டி, சுப்பம் மாதரம், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில், பசுவந்தனை கிராமம் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது.

    ஒளிப்பதிவை விஜய் கவனிக்க, தஞ்சை செல்வா, பிரவீன், சங்கர் என்ற மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே சில படங்களில் இசையமைப்பாளர்களாக பணியாற்றியவர்கள். பாடல்கள் - தஞ்சை சிகரன், எடிட்டிங் - கே.துரைராஜ், நடனம் - பவர்சிவா, கலை - மணி, கதிர், ஜெயக்குமார், மக்கள் தொடர்பு - பெருதுளசி பழனிவேல், இணைத் தயாரிப்பு - பிரபா வில்லியம், தயாரிப்பு - ஆ.ஜார்ஜ் வில்லியம், எழுத்து, இயக்கம் - ஆள்வான்.
    ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி - ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் `கள்ளபார்ட்' படத்தின் முன்னோட்டம். #Kallapart #ArvindSwami
    விக்ரம் நடித்து வெற்றி பெற்ற `ஸ்கெட்ச்' படத்தை தயாரித்த மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் `கள்ளபார்ட்' படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார்கள். 

    வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். 

    வசனம் - ராதாகிருஷ்ணன், ஒளிப்பதிவு - அரவிந்த்கிருஷ்ணா, இசை - நிவாஸ் கே.பிரசன்னா, கலை - மாயபாண்டி, எடிட்டிங் - இளையராஜா, ஸ்டன்ட் - மிராக்கில் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை - வி.ராமச்சந்திரன், தயாரிப்பு - எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன்,
    திரைக்கதை, எழுத்து, இயக்கம் - ராஜபாண்டி.

    சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Kallapart #ArvindSwami
    செல்வசேகரன் இயக்கத்தில் விக்ராந்த் - அர்த்தனா பினு நடிப்பில் உருவாகி இருக்கும் `வெண்ணிலா கபடி குழு 2' படத்தின் முன்னோட்டம்.
    சாய் அற்புதம் சினிமாஸ் சார்பில் பூங்காவனம், ஆனந்த் இணைந்து தயாரித்துள்ள படம் `வெண்ணிலா கபடி குழு 2'.

    2009-ஆம் ஆண்டு கபடி போட்டியை பிரதானப்படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், பரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது.

    மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில், இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். சந்தோஷ், பசுபதி, பரோட்டா சூரி, கிஷோர், கஞ்சா கருப்பு, அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இசை - செல்வகணேஷ், ஒளிப்பதிவு - இ.கிருஷ்ண்சாமி, படத்தொகுப்பு - அஜய், கலை - சக்தி வெங்கட்ராஜ், சண்டைப்பயிற்சி - சூப்பர் சுப்பராயன், பாடல்கள் - கபிலன், விஜயசாகர், நடனம் - தினேஷ், தயாரிப்பு - பூங்காவனம், ஆனந்த், எழுத்து - சுசீந்திரன், இயக்கம் - செல்வ சேகரன்.



    படம் குறித்து இயக்குனர் செல்வ சேகரன் கூறுகையில்,

    1987-ஆம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிக விமர்சையாக திருவிழா போல் கபடி விளையாட்டு போட்டியை கொண்டாடும் நிகழ்வை அப்படியே நம் கண்முண்னே கொண்டு வந்துள்ளோம்.

    நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பை தத்ருபமாக படமாக்கியுள்ளோம். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக "வெண்ணிலா கபடி குழு 2" படம் அமையும் என்றார்.

    வெண்ணிலா கபடி குழு 2 டீசர்:

    ஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் `அய்யா உள்ளேன் அய்யா' படத்தின் முன்னோட்டம்.
    சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களின் கதை, வசனம் எழுதியவர் ஈரோடு செளந்தர். அத்துடன் முதல் சீதனம், சிம்மராசி உள்ளிட்ட படங்களையும் இயக்கி இருக்கிறார். இவர் தற்போது "அய்யா உள்ளேன் அய்யா" என்ற படத்தை இயக்குகிறார்.

    இந்த படத்தில் அவரது பேரன் கபிலேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு எதிர்மறை நாயகனாக அவரது தம்பி மகன் பால சபரீஸ்வரன் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். மனோபாலா, லிவிங்ஸ்டன், பாவா லட்சுமணன், நளினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - சந்துரு, இசை - மகேந்திரன், தயாரிப்பு - வீர ஸ்ரீ சந்தன கருப்பராயன் புரொடக்‌ஷன்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஈரோடு செளந்தர்.


    படம் பற்றி இயக்குநர் கூறியதாவது,

    10-ஆம் வகுப்பு பள்ளிக்கூட கதை என்பதால் இந்த கதைக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் தனது பேரன் சரியாக இருப்பான் என்பதால் நாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்.

    மாணவர்களின் எதிர்காலம் என்பது 10-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு கால கட்டம் தான். அதை மட்டும் மனதில் வைத்து மாணவர்கள் செயல்பட்டால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கொஞ்சம் தடம் மாறினாலும் அவர்கள் வாழ்க்கை திசை மாறி விடும் என்கிற கருத்தை சொல்கிற படமாக இது உருவாகிறது என்றார். படப்பிடிப்பு 4ம் தேதி ஈரோட்டில் துவங்கிறது.
    அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் `கேம் ஓவர்' படத்தின் முன்னோட்டம்.
    ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம் `கேம் ஓவர்'.

    பாலிவுட் சென்று பிரபலமாகி இருக்கும் டாப்சி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இந்த படத்தில் டாப்சிக்கு வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரம். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ஏ.வசந்த், கலை இயக்குனர் - சிவா சங்கர், ஆடை வடிவமைப்பு - என்.கே.நந்தினி, சண்டைப்பயிற்சி - ரியல் சதிஷ், இசை - ரான் ஈதன் யோஹன், படத்தொகுப்பு - ரிச்சர்ட் கெவின், ஒலி வடிவமைப்பு - சச்சின் சுதாகரன், ஹரிஹரன், ஸ்டில் போட்டோகிராபர் - எம்.எஸ்.ஆனந்தன், லைன் புரொடுயுசர் - முத்துராமலிங்கம், புரொடக்‌ஷன் எக்சிகியுடிவ் - ரங்கராஜ், இணை தயாரிப்பு - சக்ரவர்த்தி ராமசந்திரா, தயாரிப்பு - எஸ்.சசிகாந்த், எழுத்து - அஸ்வின் சரவணன், காவ்யா ராம்குமார், இயக்கம் - அஸ்வின் சரவணன்.



    படம் குறித்த இயக்குனர் அஸ்வின் சரவணன் பேசியதாவது, “மாயா படம் இன்று வரை மக்கள் மனதில் ஞாபகத்தில் இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு பிறகு ஒரு திரைப்பட வெளியீட்டை எதிர்நோக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டாப்சி இப்படத்தின் மூலம் தமிழ் திரைவுலகுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் என்றே நம்புகிறேன். கேம் ஓவர் வெளியீடு மற்றும் வரவேற்ப்பை எதிர்நோக்கி ஆவலோடு இருக்கிறேன்” என்றார்.

    தணிக்கையில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    கேம் ஓவர் படத்தின் டிரைலர்:

    ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அர்ஜுன் - ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் `கொலைகாரன்' படத்தின் முன்னோட்டம்.
    தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `கொலைகாரன்'.

    விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஆஷிமா நர்வால் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். அர்ஜூன், நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - முகேஷ், படத்தொகுப்பு - ரிச்சர்டு கெவின், இசை - சிமோன் கே.கிங், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - கல்யாண், வெளியீடு - தனஞ்ஜெயன், தயாரிப்பு - பிரதீப், எழுத்து, இயக்கம் - ஆண்ட்ரூ லூயிஸ்.



    படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, ‘எனக்கு ஒரு சைகாலஜிக்கல் பிரச்சினை இருக்கு. நான் நடிக்கும் போது எதிரில் இருப்பவர் நன்றாக நடித்தால் எனக்கு நடிக்க வராது. அவரை நான் ரசிக்க ஆரம்பித்துவிடுவேன். இளையராஜா இசையை ரசித்து தான் நான் இசையமைப்பாளர் ஆனேன். அதுபோல் தான் நல்ல நடிகர்களை பார்த்து, ரசித்து, இப்போது நடிகராகிவிட்டேன். ஆனால் நன்றாக நடிக்கிறேனா என எனக்கு தெரியவில்லை". இவ்வாறு அவர் கூறினார்.

    கொலைகாரன் படம் ரம்ஜான் வெளியீடாக வருகிற ஜூன் 5-ந் தேதி திரைக்கு வருகிறது.

    `கொலைகாரன்' படத்தின் டிரைலர்:

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `என்ஜிகே' படத்தின் முன்னோட்டம்.
    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் `என்ஜிகே'.

    சூர்யா நாயகனாகவும், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நாயகிகளாகவும், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - சிவகுமார் விஜயன், படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல்., இசை - யுவன் ஷங்கர் ராஜா, பாடல்கள் - வைரமுத்து, உமாதேவி, ஒலி வடிவமைப்பு - ஹரிஹர சுதன், கலை இயக்கம் - ஆர்.கே.விஜய் முருகன், ஆடை வடிவமைப்பு - நீராஜா கோனா, பெருமாள் செல்வம், சண்டைப்பயிற்சி - அனல் அரசு, ஸ்டன்னர் சாம், தயாரிப்பு - எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, எழுத்து, இயக்கம் - செல்வராகவன்.



    படம் பற்றி நடிகை சாய் பல்லவி கூறியதாவது,

    படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு அவர் சொல்வதைக் கேட்டு நடித்தால் தான் சரியாக இருக்கும். ஒரு வசனத்திற்கு எப்படி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழ வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக சொல்லிக் கொடுப்பார். அவர் நினைக்கும் நடிப்பு நம்மிடம் வரும்வரை விடமாட்டார் என்றார்.

    படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    என்ஜிகே டிரைலர்:

    மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் பேய் படமான `பியார்' படத்தின் முன்னோட்டம்.
    விண்டோபாய் பிக்சர்ஸ் வி.பாலகிருஷ்ணன், ஆர்.சோமசுந்தரம் மற்றும் மாரிசன் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு "பியார்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார். சாம்ஸ், ஆர்த்தி, வாசு விக்ரம், ஷபி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - ஆர்.ஆனந்தகுமார், இசை - ஏ.கே.ரிஷால் சாய், பாடல்கள் - வ.கருப்பன், படத்தொகுப்பு - ரமேஷ் வேலுகுட்டி, நடனம் - அசோக்ராஜா, ஸ்டண்ட் - சூப்பர் சுப்பராயன், கலை - முத்துவேல், கதை திரைக்கதை வசனம், இயக்கம் - மில்கா எஸ்.செல்வகுமார். 
    இவர் ராகவா லாரன்ஸிடம் உதவியாளராக பணியாற்றியவர். தற்போது நட்ராஜ் - மனிஷா யாதவ் நடிப்பில் உருவாகி வரும் சண்டி முனி படத்தை இயக்கி வருகிறார். விரைவில் பியார் என்ற படத்தை இயக்குகிறார்.



    படம் பற்றி இயக்குனர் பேசும் போது,

    வழக்கமாக ஒரு ஹீரோ காதலர்களைத் தான் சேர்த்து வைப்பார்கள். இந்த படத்தில் வித்தியாசமாக ஒரு ஹீரோ இரண்டு பேய்க் காதலர்களை சேர்த்து வைக்கிறார். அதாவது பேயை பேயுடன் சேர்த்து வைப்பது தான் இதன் கதை. பேய்க்காதல் என்றும் சொல்லலாம்.

    ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. ஊட்டி குன்னூர் பழனி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றார்.

    விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவி 2' படத்தின் முன்னோட்டம்.
    ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் `தேவி 2'.

    பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - அயனங்கா போஸ், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - லெவ்லின் அந்தோணி கான்சால்வ்ஸ், சங்கீத் சத்யநாதன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சில்வா, மனோகர் வர்மா, பாடல்கள் - பிரபுதேவா & கார்கி, வசனம் - கிரேஸி மோகன், விஜய், தயாரிப்பு - டாக்டர் ஐசரி கே.கணேஷ் & ரவீந்திரன், எழுத்து, இயக்கம் - விஜய்.



    படம் குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது,

    "நல்ல விஷயங்கள் எப்போதும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நடக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது. அது இப்போது தேவி 2 படத்தில் நடக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தேவி 2 படம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அவர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான். காமெடி, எமோஷன், காதல், இசை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய கூறுகள் படத்தில் உள்ளன. இந்த கோடையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக நிச்சயம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

    படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    தேவி 2 படத்தின் டிரைலர்:

    சக்திவாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் ‘நாயே பேயே’ படத்தின் முன்னோட்டம்.
    கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் இணைந்து தயாரிக்கும் படம் ‘நாயே பேயே’.

    நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - நிரன் சந்தர், இசை - என்.ஆர்.ரகுநந்தன், கலை - சுப்பு அழகப்பன், படத்தொகுப்பு - கோபி கிருஷ்ணா, நிர்வாக தயாரிப்பாளர் - சக்கரத்தாழ்வார், ஆக்சன் - ஸ்டான்ட் ஜி.என், நடனம்  தினேஷ், தினா, இணை இயக்குனர் - வே.செந்தில்குமார், தயாரிப்பு மேற்பார்வை - அஸ்கர் அலி, விஜயகுமார், தயாரிப்பு - கோபி கிருஷ்ணா, கலையரசி சாத்தப்பன், டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சக்திவாசன்



    இயக்குனர் சக்திவாசன் படம் பற்றி கூறியதாவது:-

    ‘‘நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கிறான்.

    இந்த நிலையில், அவன் ஒரு பெரிய திருட்டில் ஈடுபட்டு வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக விரும்புகிறான். அவனுக்கு அந்த சந்தர்ப்பம் அமைந்ததா, அதில் அவன் வெற்றி பெற்றானா? என்பதே இந்த படத்தின் கதை என்றார்.

    ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடிப்பில் இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படமாக உருவாகி இருக்கும் ‘லிசா’ படத்தின் முன்னோட்டம்.
    பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லிசா’.

    அஞ்சலி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சாம் ஜோன்ஸ், மக்ராந்த் தேஷ்பாண்டே, யோகி பாபு, மைம் கோபி முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவு - பி.ஜி.முத்தையா, கலை - வினோத் ரவீந்திரன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்னர் சாம், பாடல்கள் - மணி அமுதவன், நடனம் - சுரேஷ், கிரியேட்டிவ் ஹெட் - யோகேஷ் கிருஷ்ணா, ஆடியோகிராபி - ஏ.எம்.ரஹமதுல்லா, தயாரிப்பு மேற்பார்வை - பாலமுருகன், இணை இயக்கம் - டி.என்.பி.ராஜேந்திரன், நிர்வாக தயாரிப்பு - சௌந்தர் பைரவி, தயாரிப்பு - பி.ஜி.முத்தையா, எம்.தீபா, எழுத்து, இயக்கம் - ராஜு விஸ்வநாத்.



    இந்த படம் 3டி டெக்னாலஜி ஸ்டீரியோஸ்கோப் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. திகில் கலந்த த்ரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. படம் வருகிற மே 24-ந் தேதி திரைக்கு வருகிறது.

    லிசா படத்தின் டிரைலர்:

    ×