என் மலர்
தரவரிசை
டெஸ்பிகபில் மீ அனிமேஷன் பட வரிசையில் மூன்றாவது பாகமாக வெளிவந்திருக்கும் ‘டெஸ்பிகபில் மீ 3’ படத்தின் விமர்சனம்
பிராட் சிறுவயதிலிருந்து டிவி சீரியல்களில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனால், இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவருடைய உருவத்தில் பொம்மைகள் எல்லாம் வெளியாகி அனைவர் மத்தியிலும் பிரபலமாகிவிடுகிறார். ஒருகட்டத்தில் இவருடைய சீரியல் நிறுத்தப்பட இவரது மார்க்கெட் சட்டென்று சறுக்குகிறது.
இதனால், விரக்தியடையும் பிராட் நிஜ வாழ்க்கையிலும் வில்லனாகிறார். ஒருமுறை கப்பலில் இருக்கும் வைரத்தை திருடுவதற்கு பிராட் செல்கிறார். அதை கண்டுபிடித்து அவரை பிடிக்கும் முயற்சியில் உளவுத்துறை ஏஜென்டான க்ரூவும் அவரது மனைவியும் செல்கிறார்கள். சென்ற இடத்தில் வைரத்தை அவனிடமிருந்து மீட்டுவிடுகிறார்கள். ஆனால், பிராட் இவர்களிடமிருந்து தப்பித்து விடுகிறார்.

இதனால் க்ருவையும் அவரது மனைவியையும் உளவுத்துறை ஏஜென்ட் பதவியிலிருந்து அவரை தூக்குகிறார்கள். இந்நிலையில், க்ரூ இரட்டை பிறவி என்றும், அவருக்கு ஒரு சகோதரர் இருப்பதும் தெரிய வருகிறது. எனவே, தனது சகோதரரை தேடி புறப்படுகிறார் க்ரூ.
பெரிய செல்வந்தரான க்ரூவின் சகோதரர், ஏகப்பட்ட செல்வங்கள் இருந்தும் தன்னுடைய அப்பாவைப் போல் பெரிய வில்லனாக ஆகமுடியவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கிறார். இதனால், ஏற்கெனவே வில்லனாக இருந்து மிகப்பெரிய சாகசங்கள் செய்த க்ரூவிடம் தானும் அதேபோல் வில்லனாக ஆகவேண்டுமென்று உதவி கேட்கிறார்.

ஆரம்பத்தில் மறுக்கும் க்ரூ, ஒருகட்டத்தில் தனது சகோதரனின் ஆசையை நிறைவேற்ற முன்வருகிறார். இதற்குள், க்ரூவால் கைப்பற்றப்பட்ட வைரத்தை பிராட் மறுபடியும் திருடி சென்றுவிடுகிறார். இதை அறிந்த க்ரூ, அந்த வைரத்தை திருடி, தனது சகோதரனை வில்லனாக்குவதற்காக பயிற்சி கொடுக்க முடிவெடுக்கிறார். இதற்காக பல திட்டங்கள் போட்டு அந்த வைரத்தை இரண்டு பேரும் சேர்ந்து திருட முயற்சி செய்கிறார்கள்.
இறுதியில், அந்த வைரம் இவர்கள் கைக்கு கிடைத்ததா? தன்னைப் போலவே தனது தம்பியையும் பெரிய வில்லனாக க்ரூ மாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
டெஸ்பிகபில் மீ பட வரிசையில் மூன்றாவது பாகமாக வெளிவந்துள்ள படம்தான். முந்தைய பாகங்களைப்போலவே இந்த பாகமும் ரொம்பவும் கலகலப்பாக செல்கிறது. முக்கியமாக பிராட் கப்பலில் வைரத்தை திருடச் செல்லும்போது அவர் செய்யும் சேஷ்டைகள் எல்லாம் ரொம்பவும் கலகலப்பாக இருக்கிறது.

அதேபோல், இந்த பாகத்தில் க்ரூவின் சகோதரர் செய்யும் குறும்புகளும் ரசிக்க வைக்கிறது. இவர் சீரியசாக செய்யும் விஷயங்கள் எல்லாம் நமக்கு காமெடியாக இருக்கிறது. மின்னியன்ஸ்களுக்கு ஆரம்பத்தில் அவ்வளவாக வேலை இல்லாவிட்டாலும் பிற்பாதிக்கு பிறகு அவைகளின் சேட்டைகள் எல்லாம் கலகலப்பூட்டியிருக்கின்றன.
படம் முழுவதும் காமெடி மழை பொழிந்திருந்தாலும் ஆங்காங்கே செண்டிமெண்ட் காட்சிகளும் இருக்கிறது. அவை கதை ஓட்டத்திற்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தவில்லை. எல்லா கதாபாத்திரங்களையும் ரொம்பவும் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘டெஸ்பிகபில் மீ 3’ நகைச்சுவை விருந்து.
இதனால், விரக்தியடையும் பிராட் நிஜ வாழ்க்கையிலும் வில்லனாகிறார். ஒருமுறை கப்பலில் இருக்கும் வைரத்தை திருடுவதற்கு பிராட் செல்கிறார். அதை கண்டுபிடித்து அவரை பிடிக்கும் முயற்சியில் உளவுத்துறை ஏஜென்டான க்ரூவும் அவரது மனைவியும் செல்கிறார்கள். சென்ற இடத்தில் வைரத்தை அவனிடமிருந்து மீட்டுவிடுகிறார்கள். ஆனால், பிராட் இவர்களிடமிருந்து தப்பித்து விடுகிறார்.

இதனால் க்ருவையும் அவரது மனைவியையும் உளவுத்துறை ஏஜென்ட் பதவியிலிருந்து அவரை தூக்குகிறார்கள். இந்நிலையில், க்ரூ இரட்டை பிறவி என்றும், அவருக்கு ஒரு சகோதரர் இருப்பதும் தெரிய வருகிறது. எனவே, தனது சகோதரரை தேடி புறப்படுகிறார் க்ரூ.
பெரிய செல்வந்தரான க்ரூவின் சகோதரர், ஏகப்பட்ட செல்வங்கள் இருந்தும் தன்னுடைய அப்பாவைப் போல் பெரிய வில்லனாக ஆகமுடியவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கிறார். இதனால், ஏற்கெனவே வில்லனாக இருந்து மிகப்பெரிய சாகசங்கள் செய்த க்ரூவிடம் தானும் அதேபோல் வில்லனாக ஆகவேண்டுமென்று உதவி கேட்கிறார்.

ஆரம்பத்தில் மறுக்கும் க்ரூ, ஒருகட்டத்தில் தனது சகோதரனின் ஆசையை நிறைவேற்ற முன்வருகிறார். இதற்குள், க்ரூவால் கைப்பற்றப்பட்ட வைரத்தை பிராட் மறுபடியும் திருடி சென்றுவிடுகிறார். இதை அறிந்த க்ரூ, அந்த வைரத்தை திருடி, தனது சகோதரனை வில்லனாக்குவதற்காக பயிற்சி கொடுக்க முடிவெடுக்கிறார். இதற்காக பல திட்டங்கள் போட்டு அந்த வைரத்தை இரண்டு பேரும் சேர்ந்து திருட முயற்சி செய்கிறார்கள்.
இறுதியில், அந்த வைரம் இவர்கள் கைக்கு கிடைத்ததா? தன்னைப் போலவே தனது தம்பியையும் பெரிய வில்லனாக க்ரூ மாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
டெஸ்பிகபில் மீ பட வரிசையில் மூன்றாவது பாகமாக வெளிவந்துள்ள படம்தான். முந்தைய பாகங்களைப்போலவே இந்த பாகமும் ரொம்பவும் கலகலப்பாக செல்கிறது. முக்கியமாக பிராட் கப்பலில் வைரத்தை திருடச் செல்லும்போது அவர் செய்யும் சேஷ்டைகள் எல்லாம் ரொம்பவும் கலகலப்பாக இருக்கிறது.

அதேபோல், இந்த பாகத்தில் க்ரூவின் சகோதரர் செய்யும் குறும்புகளும் ரசிக்க வைக்கிறது. இவர் சீரியசாக செய்யும் விஷயங்கள் எல்லாம் நமக்கு காமெடியாக இருக்கிறது. மின்னியன்ஸ்களுக்கு ஆரம்பத்தில் அவ்வளவாக வேலை இல்லாவிட்டாலும் பிற்பாதிக்கு பிறகு அவைகளின் சேட்டைகள் எல்லாம் கலகலப்பூட்டியிருக்கின்றன.
படம் முழுவதும் காமெடி மழை பொழிந்திருந்தாலும் ஆங்காங்கே செண்டிமெண்ட் காட்சிகளும் இருக்கிறது. அவை கதை ஓட்டத்திற்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தவில்லை. எல்லா கதாபாத்திரங்களையும் ரொம்பவும் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘டெஸ்பிகபில் மீ 3’ நகைச்சுவை விருந்து.
அபிஷேக், அர்ச்சனா சிங் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘வெருளி’ படத்தின் விமர்சனம்.
படத்தின் ஆரம்பத்திலேயே மினி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் சில பேர் உயிரிழக்கிறார்கள். சில பேர் காயத்துடன் உயிர் தப்பிக்கிறார்கள். போலீஸ் அதிகாரியான நாயகன் அபிஷேக் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருப்பவர்களை எல்லாம் அப்புறப்படுத்தி, அந்த இடத்தில் சிதறிக் கிடக்கும் பொருட்களையெல்லாம் சேகரிக்கும்போது ஒரு எந்திர தகடும் கிடைக்கிறது. அதையெல்லாம் எடுத்து காவல் நிலையத்தில் அபிஷேக் வைக்கச் சொல்கிறார்.
இந்நிலையில், இரவு ரோந்து பணியின்போது ஒரு தம்பதியிடம் மர்ம நபர் ஒருவர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயற்சிக்கிறார். அப்போது, அவர்களை அபிஷேக், தம்பதியரை அந்த மர்ம நபரிடமிருந்து காப்பாற்றுகிறார். அந்த இடத்திலும் அபிஷேக்குக்கு ஒரு எந்திர தகடு கிடைக்கிறது. மினி பஸ் விபத்து நடந்த இடத்திலிருந்து கிடைத்த எந்திர தகடும், வழிப்பறி கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த எந்திர தகடும் ஒன்றையொன்று ஒத்துப்போகிறது.

நடந்த சம்பவங்களுக்கும் அந்த தகட்டுக்கும் ஏதாவதும் சம்பந்தம் இருக்குமா? என்று விசாரித்துக் கொண்டிருக்கையில், டிவி ரிப்போர்ட்டரான நாயகி அர்ச்சனா சிங் இந்த தகவலை அறிந்துகொண்டு அவளும் இதுகுறித்த விசாரணையில் களமிறங்குகிறாள். இதன்பின்னர், ஒரு விபத்தில் குழந்தை இறக்க, அந்த இடத்திலும் ஒரு எந்திர தகடு கிடைக்கிறது.
அந்த தகடுக்கும் இந்த சம்பவத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்பதை அப்போதுதான் அபிஷேக் உறுதிபடுத்துகிறார். உண்மையில் அந்த தகடுக்கும் நடந்த சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதெல்லாம் எதற்காக நடக்கிறது? யாரெல்லாம் இதன் பின்னணியில் இருந்து செயல்படுகிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் அபிஷேக் போலீஸ் அதிகாரிக்குண்டான மிடுக்குடன் படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். விசாரணை செய்யும் விதம், மற்றவர்களிடம் பேசும் விதம் எல்லாமே அருமையாக இருக்கிறது. ரிப்போர்ட்டராக வரும் நாயகி அர்ச்சனா சிங், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
பிற்பாதியில் வரும் பாக்யராஜ் தனது அனுபவ நடிப்பை கொடுத்து படததிற்கு பலம் சேர்த்திருக்கிறார். பாசம், செண்டிமெண்ட் காட்சிகளில் அனைவரையும் உறைய வைத்திருக்கிறார். அவருடைய மகனாக நடித்திருக்கும் அசோக் பாண்டியனும் தனது பங்குக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராணுவ அதிகாரியாக வரும் ரவி பிரகாஷ், அபிஷேக்குக்கு உதவி செய்யும் காட்சிகளில் எல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இயக்குனர் அமுதவாணன், திரில்லர் கதையில் சமூக அக்கறையுடன் ஒரு கருத்தையும் படத்தில் சொல்ல வந்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும், நகரத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் காரணம் என்னவென்று விசாரணை செய்ய ஆரம்பிக்கும் நிலையிலிருந்து படம் வேகமெடுக்கிறது. படத்திற்கு விளம்பரம் இல்லாததுதான் இப்படத்தை பற்றிய பேச்சு பெரிய அளவில் இல்லாமல் போயிற்று. படத்திற்கு நன்றாக விளம்பரப்படுத்தியிருந்தால் கண்டிப்பாக அனைவரிடத்திலும் இப்படம் நல்ல மதிப்பை பெற்றிருக்கும்.
ராஜ் பிரதாப், தினேஷ் ராஜா ஆகியோரின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்காவிட்டாலும், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்கள். சிவா பிரபுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘வெருளி’ வெறுக்கவில்லை.
இந்நிலையில், இரவு ரோந்து பணியின்போது ஒரு தம்பதியிடம் மர்ம நபர் ஒருவர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயற்சிக்கிறார். அப்போது, அவர்களை அபிஷேக், தம்பதியரை அந்த மர்ம நபரிடமிருந்து காப்பாற்றுகிறார். அந்த இடத்திலும் அபிஷேக்குக்கு ஒரு எந்திர தகடு கிடைக்கிறது. மினி பஸ் விபத்து நடந்த இடத்திலிருந்து கிடைத்த எந்திர தகடும், வழிப்பறி கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த எந்திர தகடும் ஒன்றையொன்று ஒத்துப்போகிறது.

நடந்த சம்பவங்களுக்கும் அந்த தகட்டுக்கும் ஏதாவதும் சம்பந்தம் இருக்குமா? என்று விசாரித்துக் கொண்டிருக்கையில், டிவி ரிப்போர்ட்டரான நாயகி அர்ச்சனா சிங் இந்த தகவலை அறிந்துகொண்டு அவளும் இதுகுறித்த விசாரணையில் களமிறங்குகிறாள். இதன்பின்னர், ஒரு விபத்தில் குழந்தை இறக்க, அந்த இடத்திலும் ஒரு எந்திர தகடு கிடைக்கிறது.
அந்த தகடுக்கும் இந்த சம்பவத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்பதை அப்போதுதான் அபிஷேக் உறுதிபடுத்துகிறார். உண்மையில் அந்த தகடுக்கும் நடந்த சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதெல்லாம் எதற்காக நடக்கிறது? யாரெல்லாம் இதன் பின்னணியில் இருந்து செயல்படுகிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் அபிஷேக் போலீஸ் அதிகாரிக்குண்டான மிடுக்குடன் படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். விசாரணை செய்யும் விதம், மற்றவர்களிடம் பேசும் விதம் எல்லாமே அருமையாக இருக்கிறது. ரிப்போர்ட்டராக வரும் நாயகி அர்ச்சனா சிங், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
பிற்பாதியில் வரும் பாக்யராஜ் தனது அனுபவ நடிப்பை கொடுத்து படததிற்கு பலம் சேர்த்திருக்கிறார். பாசம், செண்டிமெண்ட் காட்சிகளில் அனைவரையும் உறைய வைத்திருக்கிறார். அவருடைய மகனாக நடித்திருக்கும் அசோக் பாண்டியனும் தனது பங்குக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராணுவ அதிகாரியாக வரும் ரவி பிரகாஷ், அபிஷேக்குக்கு உதவி செய்யும் காட்சிகளில் எல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இயக்குனர் அமுதவாணன், திரில்லர் கதையில் சமூக அக்கறையுடன் ஒரு கருத்தையும் படத்தில் சொல்ல வந்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும், நகரத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் காரணம் என்னவென்று விசாரணை செய்ய ஆரம்பிக்கும் நிலையிலிருந்து படம் வேகமெடுக்கிறது. படத்திற்கு விளம்பரம் இல்லாததுதான் இப்படத்தை பற்றிய பேச்சு பெரிய அளவில் இல்லாமல் போயிற்று. படத்திற்கு நன்றாக விளம்பரப்படுத்தியிருந்தால் கண்டிப்பாக அனைவரிடத்திலும் இப்படம் நல்ல மதிப்பை பெற்றிருக்கும்.
ராஜ் பிரதாப், தினேஷ் ராஜா ஆகியோரின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்காவிட்டாலும், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்கள். சிவா பிரபுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘வெருளி’ வெறுக்கவில்லை.
பிரெயின் ஃபீ இயக்கத்தில் `கார்ஸ்' பட பாகங்களின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள `கார்ஸ் 3' படத்தின் விமர்சனம்.
கார்களில் முன்னணியில் இருக்கும் சிவப்பு கலர் காரான லைட்னிங் மெக்குயின், கார் பந்தயத்தில் தொடர்ந்து முதல் இடத்தையே பிடிக்கிறது. லைட்னிங்கின் நெருங்கிய நண்பர்களான பாபி ஸ்விப்ட் மற்றும் கேல் வெதர்ஸ் ஆகிய இரு கார்களும் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பிடித்து வருகிறது.
இவ்வாறாக வெற்றிப் பாதையில் சென்ற இந்த கார்களின் வெற்றிக்கு தடை போடும்படியாக ஒரு சம்பவம் நடக்கிறது. அதாவது அடுத்ததாக நடக்கும் கார் பந்தயப் போட்டியில் லைட்னிங், வெற்றி கோட்டை தொடும் சமயத்தில் புதிய தொழில்நுட்பம் கொண்ட ஜாக்சன் ஸ்டார்ம் என்ற கருப்பு நிறக் கார் கண்ணிமைக்கும் நேரத்தில் லைட்னிங்கை முந்தி வெற்றிக் கோட்டை தொட்டுவிடுகிறது.

இதையடுத்து, ஸ்டார்ம் மீது அனைவரின் கவனமும் திரும்ப, பழைய கார்கள் ஓரம் கட்டப்படுகிறது. நவீன தொழில்நுட்பம், புதுமையான ஸ்டைல் என அனைத்திலும் புதுமையை பார்த்த உடன், அனைவரும் லைட்னிங் மற்றும் அதன் நண்பர்களை ஓய்வுபெற சொல்லி வற்புறுத்த பாபி மற்றும் கேல் உள்ளிட்ட பல கார்கள் ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறது.
பந்தயத்தில் தான் வென்றே தீருவேன் என்ற முடிவுடன் இருக்கும் லைட்னிங், ஓய்வு பெறாமல் அடுத்த பந்தயத்தில் பங்கேற்கிறது. லைட்னிங்கை தவிர்த்து மற்ற பழைய கார்கள் அனைத்தும் ஓய்வு பெற்றதால், லைட்னிங் புதிய தொழில்நுட்பம் கொண்ட கார்களுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. பந்தயத்தில் அந்த கார்களுக்கு ஈடுகொடுக்க போராடிய லைட்னிங், ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிவிடுகிறது.

இதையடுத்து, லைட்னிங்கின் கதை அவ்வளவு தான் என்று பலரும் வசைபாடி வருகிறார்கள். இந்நிலையில் லைட்னிங் மீண்டும் புத்துயிர் பெற ஸ்பான்சர் ஒருவர் முன்வருகிறார். அவரது உதவியுடன் பழைய நிலைக்கு திரும்புகிறது லைட்னிங். ஆனால், அவர் லைட்னிங்கை போட்டியில் பங்கேற்க வைக்க விரும்பாமல், அதை வைத்து விளம்பரம் செய்து தன்னுடைய பொருட்களை விற்பனை செய்யவே முடிவு செய்கிறார். ஆனால் அவரது முடிவை ஏற்க மறுக்கும் லைட்னிங், கார் பந்தயப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது. தோல்வியடைந்தால், அவரது பேச்சை கேட்பதாக கூறி வாழ்வா சாவா போட்டிக்கு தயாராகிறது.
லைட்னிங்கின் கோச்சான க்ரூஸ் ரேமியர்ஸ் சில நுணுக்கங்களை தெரிவித்து போட்டிக்கு தயார்படுத்துகிறது. கடைசியில் நாம் எதிர்பார்த்த அந்த போட்டி வர, அதில் பங்கேற்கும் லைட்னிங் எப்படி வெற்றி பெற்றது? வெற்றி பெற என்ன செய்தது? அதன் என்ன முயற்சிகளை மேற்கொண்டது? அனைவரையும் மீண்டும் எப்படி கவர்ந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆங்கிலத்தில் ஓவன் வில்சன், கிறிஸ்டெலா அலோன்சா, கிறிஸ் கூப்பர், ஆர்மி ஹேமர் என கார்களுக்கு குரல் கொடுத்த அனைவரும் நக்கலுடன் பேசியிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. தமிழ் டப்பிங்கில் வசனங்கள் ரசிக்கும்படி நகைச்சுவையாக இருக்கிறது.
கார்ஸ் படங்களின் சீரியஸை இயக்கியுள்ள பிரெயின் ஃபீ, கார்ஸ் 3 படத்தை முந்தைய பாகங்களை போல இல்லாமல் வித்தியாசமாக இயக்கி இருக்கிறார். கார்ஸ் 1, கார்ஸ் 2 வரிசையில் கார்ஸ் 3 படமும் ரசித்து பார்க்கும்படி ட்விஸ்ட்டுகளுடன் இருக்கிறது.

கேமரா காட்சிகளில் ஜெரமி லஸ்க்கி, கிம் வொயிட் திறம்பட செயல்பட்டிருக்கின்றனர். பிக்ஸார் அனிமேஷன் ஸ்டூடியோஸின் பங்களிப்பு அளப்பறியாதது. ஒவ்வொரு காட்சிக்கும் மெனக்கிட்டிருக்கின்றனர். படத்தை 3டி-யில் பார்க்க பிரம்மாண்டாக இருக்கிறது. ராண்டி நியூமேனின் பின்னணி இசை காட்சிக்கு துணையாக ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் `கார்ஸ் 3' ரேஸ் வின்னர்.
இவ்வாறாக வெற்றிப் பாதையில் சென்ற இந்த கார்களின் வெற்றிக்கு தடை போடும்படியாக ஒரு சம்பவம் நடக்கிறது. அதாவது அடுத்ததாக நடக்கும் கார் பந்தயப் போட்டியில் லைட்னிங், வெற்றி கோட்டை தொடும் சமயத்தில் புதிய தொழில்நுட்பம் கொண்ட ஜாக்சன் ஸ்டார்ம் என்ற கருப்பு நிறக் கார் கண்ணிமைக்கும் நேரத்தில் லைட்னிங்கை முந்தி வெற்றிக் கோட்டை தொட்டுவிடுகிறது.

இதையடுத்து, ஸ்டார்ம் மீது அனைவரின் கவனமும் திரும்ப, பழைய கார்கள் ஓரம் கட்டப்படுகிறது. நவீன தொழில்நுட்பம், புதுமையான ஸ்டைல் என அனைத்திலும் புதுமையை பார்த்த உடன், அனைவரும் லைட்னிங் மற்றும் அதன் நண்பர்களை ஓய்வுபெற சொல்லி வற்புறுத்த பாபி மற்றும் கேல் உள்ளிட்ட பல கார்கள் ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறது.
பந்தயத்தில் தான் வென்றே தீருவேன் என்ற முடிவுடன் இருக்கும் லைட்னிங், ஓய்வு பெறாமல் அடுத்த பந்தயத்தில் பங்கேற்கிறது. லைட்னிங்கை தவிர்த்து மற்ற பழைய கார்கள் அனைத்தும் ஓய்வு பெற்றதால், லைட்னிங் புதிய தொழில்நுட்பம் கொண்ட கார்களுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. பந்தயத்தில் அந்த கார்களுக்கு ஈடுகொடுக்க போராடிய லைட்னிங், ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிவிடுகிறது.

இதையடுத்து, லைட்னிங்கின் கதை அவ்வளவு தான் என்று பலரும் வசைபாடி வருகிறார்கள். இந்நிலையில் லைட்னிங் மீண்டும் புத்துயிர் பெற ஸ்பான்சர் ஒருவர் முன்வருகிறார். அவரது உதவியுடன் பழைய நிலைக்கு திரும்புகிறது லைட்னிங். ஆனால், அவர் லைட்னிங்கை போட்டியில் பங்கேற்க வைக்க விரும்பாமல், அதை வைத்து விளம்பரம் செய்து தன்னுடைய பொருட்களை விற்பனை செய்யவே முடிவு செய்கிறார். ஆனால் அவரது முடிவை ஏற்க மறுக்கும் லைட்னிங், கார் பந்தயப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது. தோல்வியடைந்தால், அவரது பேச்சை கேட்பதாக கூறி வாழ்வா சாவா போட்டிக்கு தயாராகிறது.
லைட்னிங்கின் கோச்சான க்ரூஸ் ரேமியர்ஸ் சில நுணுக்கங்களை தெரிவித்து போட்டிக்கு தயார்படுத்துகிறது. கடைசியில் நாம் எதிர்பார்த்த அந்த போட்டி வர, அதில் பங்கேற்கும் லைட்னிங் எப்படி வெற்றி பெற்றது? வெற்றி பெற என்ன செய்தது? அதன் என்ன முயற்சிகளை மேற்கொண்டது? அனைவரையும் மீண்டும் எப்படி கவர்ந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆங்கிலத்தில் ஓவன் வில்சன், கிறிஸ்டெலா அலோன்சா, கிறிஸ் கூப்பர், ஆர்மி ஹேமர் என கார்களுக்கு குரல் கொடுத்த அனைவரும் நக்கலுடன் பேசியிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. தமிழ் டப்பிங்கில் வசனங்கள் ரசிக்கும்படி நகைச்சுவையாக இருக்கிறது.
கார்ஸ் படங்களின் சீரியஸை இயக்கியுள்ள பிரெயின் ஃபீ, கார்ஸ் 3 படத்தை முந்தைய பாகங்களை போல இல்லாமல் வித்தியாசமாக இயக்கி இருக்கிறார். கார்ஸ் 1, கார்ஸ் 2 வரிசையில் கார்ஸ் 3 படமும் ரசித்து பார்க்கும்படி ட்விஸ்ட்டுகளுடன் இருக்கிறது.

கேமரா காட்சிகளில் ஜெரமி லஸ்க்கி, கிம் வொயிட் திறம்பட செயல்பட்டிருக்கின்றனர். பிக்ஸார் அனிமேஷன் ஸ்டூடியோஸின் பங்களிப்பு அளப்பறியாதது. ஒவ்வொரு காட்சிக்கும் மெனக்கிட்டிருக்கின்றனர். படத்தை 3டி-யில் பார்க்க பிரம்மாண்டாக இருக்கிறது. ராண்டி நியூமேனின் பின்னணி இசை காட்சிக்கு துணையாக ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் `கார்ஸ் 3' ரேஸ் வின்னர்.
விக்கி ஆனந்த் இயக்கத்தில் கலையரசன் - தன்ஷினா நடிப்பில் வெளியாகி இருக்கும் `உரு' படத்தின் விமர்சனம்.
பிரபல எழுத்தாளர் கலையரசன், தனது மனைவி தன்ஷிகா உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தொடக்கத்தில் அவர் எழுதிய கதைகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், வர்த்தக ரீதியாகவும் நல்லவிதமாக அமைந்தது. ஆனால் சமீபத்தில் கலையரசன் எழுதிய கதைகள் மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாமல், பழைய பாணியிலேயே இருப்பதால் போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், கலையரசனின் கதைகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப வித்தியாசமாக இல்லை. காதல், செண்டிமண்ட் என அரைத்த மாவையே அரைக்காமல் புதுமையாக யோசித்து எழுதும்படி சிலர் அவருக்கு அறிவுரை கூறுகின்றனர். தன்ஷிகாவும் கதை எழுதுவதை விட்டுவிட்டு படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்கும்படி கலையிடம் கூறிவருகிறாள்.

ஆனால் கதை எழுதுவதில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் கலையரசனுக்கு, ஒரு கட்டத்தில் த்ரில்லர் கதை எழுதுவதற்கான துணுக்கு ஒன்று கிடைக்கிறது. எப்போதுமே டிரெண்ட் மாறாத ஒரே எமோஷன் "பயம்" என்பதால் ஒரு வித்தியாசமான கதையை எழுத முடிவு செய்து மேகமலைக்கு செல்கிறார். மேகமலை காட்டில் அமைதியான இடத்தில் இருக்கும் ஒரு தனி வீட்டிற்கு சென்று கதை எழுத ஆரம்பிக்கிறார்.
அங்கு சில மர்மமான சம்பவங்கள் அவருக்கு நிகழ ஆரம்பிக்கின்றன. அதுவும், கலையரசன் என்ன எழுதுகிறாரோ, அது உண்மையாகவே நடக்க ஆரம்பிக்கிறது. தொடக்கத்தில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்கும் கலையரசனுக்கு, தான் எழுதும் கதை அப்படியே நடப்பது குறித்து வியப்பும், பயமும் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவரது கதையில் வரும் சீரியல் கில்லர், கலையரசனையே கொல்ல வருகிறான்.

அந்த சீரியல் கில்லர் யார்? கலையரசன் எழுதும் கதை அப்படியே நடப்பதற்கான காரணம் என்ன? அந்த கில்லர் ஏன் கலையரசனை கொல்ல வருகிறான்? அதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கலையரசன், இப்படத்திலும் அதனை பின்பற்றி இருக்கிறார். இப்படத்தில் ஒரு எழுத்தாளருக்கு தேவையான குணநலன்களுடன் வலம் வரும் கலையரசனின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக மேகமலையில் நடக்கும் சம்பவங்களில் அவர் அனுபவிக்கும் அமானுஷ்ய விஷயங்களால் பயம், ஆச்சரியம், வியப்பு என மாறி மாறி நடித்து ரசிக்க வைக்கிறார்.

தனது முதல் படத்திலேயே பேசப்படும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த தன்ஷிகா, தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. தன்ஷிகாவின் கதாபாத்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளிலும் ரசிக்க வைத்திருக்கிறார்.
மைம் கோபிக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார். ஜெயபாலன் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்.
முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதையை முயற்சி செய்துள்ள இயக்குநர் விக்கி ஆனந்த்துக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். உரு வழக்கமாக வரும் ஹாரர் படங்களை போல் இல்லாமல், ஒரு புதுமையான திரைக்கதையில் விறுவிறுப்புடன் இயக்கி இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் க்ளைமேக்சில் மட்டும் இயக்குநர் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். சொல்ல வருவதை அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக எளிதாக தெரிவிக்காமல் சுற்றி வளைத்து சொல்லி இருப்பது, அனைவராலும் உள்வாங்கிக் கொள்ளும்படியாக இல்லை. மற்றபடி படம் ரசிக்கும்படி இருக்கிறது.

பின்னணி இசையை பொறுத்த வரை ஜோகன் ஷேவனேஷ் மிரட்டியிருக்கிறார். பேய் படம் இல்லை என்றாலும், த்ரில்லர் கதைக்கு தேவையான விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் பின்னணி இசை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கிறது. காடுகளில் இருட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளில் மெனக்கிட்டிருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது.
மொத்தத்தில் `உரு' நல்ல `உரு'வாக்கம்.
இந்நிலையில், கலையரசனின் கதைகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப வித்தியாசமாக இல்லை. காதல், செண்டிமண்ட் என அரைத்த மாவையே அரைக்காமல் புதுமையாக யோசித்து எழுதும்படி சிலர் அவருக்கு அறிவுரை கூறுகின்றனர். தன்ஷிகாவும் கதை எழுதுவதை விட்டுவிட்டு படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்கும்படி கலையிடம் கூறிவருகிறாள்.

ஆனால் கதை எழுதுவதில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் கலையரசனுக்கு, ஒரு கட்டத்தில் த்ரில்லர் கதை எழுதுவதற்கான துணுக்கு ஒன்று கிடைக்கிறது. எப்போதுமே டிரெண்ட் மாறாத ஒரே எமோஷன் "பயம்" என்பதால் ஒரு வித்தியாசமான கதையை எழுத முடிவு செய்து மேகமலைக்கு செல்கிறார். மேகமலை காட்டில் அமைதியான இடத்தில் இருக்கும் ஒரு தனி வீட்டிற்கு சென்று கதை எழுத ஆரம்பிக்கிறார்.
அங்கு சில மர்மமான சம்பவங்கள் அவருக்கு நிகழ ஆரம்பிக்கின்றன. அதுவும், கலையரசன் என்ன எழுதுகிறாரோ, அது உண்மையாகவே நடக்க ஆரம்பிக்கிறது. தொடக்கத்தில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்கும் கலையரசனுக்கு, தான் எழுதும் கதை அப்படியே நடப்பது குறித்து வியப்பும், பயமும் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவரது கதையில் வரும் சீரியல் கில்லர், கலையரசனையே கொல்ல வருகிறான்.

அந்த சீரியல் கில்லர் யார்? கலையரசன் எழுதும் கதை அப்படியே நடப்பதற்கான காரணம் என்ன? அந்த கில்லர் ஏன் கலையரசனை கொல்ல வருகிறான்? அதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கலையரசன், இப்படத்திலும் அதனை பின்பற்றி இருக்கிறார். இப்படத்தில் ஒரு எழுத்தாளருக்கு தேவையான குணநலன்களுடன் வலம் வரும் கலையரசனின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக மேகமலையில் நடக்கும் சம்பவங்களில் அவர் அனுபவிக்கும் அமானுஷ்ய விஷயங்களால் பயம், ஆச்சரியம், வியப்பு என மாறி மாறி நடித்து ரசிக்க வைக்கிறார்.

தனது முதல் படத்திலேயே பேசப்படும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த தன்ஷிகா, தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. தன்ஷிகாவின் கதாபாத்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளிலும் ரசிக்க வைத்திருக்கிறார்.
மைம் கோபிக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார். ஜெயபாலன் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்.
முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதையை முயற்சி செய்துள்ள இயக்குநர் விக்கி ஆனந்த்துக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். உரு வழக்கமாக வரும் ஹாரர் படங்களை போல் இல்லாமல், ஒரு புதுமையான திரைக்கதையில் விறுவிறுப்புடன் இயக்கி இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் க்ளைமேக்சில் மட்டும் இயக்குநர் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். சொல்ல வருவதை அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக எளிதாக தெரிவிக்காமல் சுற்றி வளைத்து சொல்லி இருப்பது, அனைவராலும் உள்வாங்கிக் கொள்ளும்படியாக இல்லை. மற்றபடி படம் ரசிக்கும்படி இருக்கிறது.

பின்னணி இசையை பொறுத்த வரை ஜோகன் ஷேவனேஷ் மிரட்டியிருக்கிறார். பேய் படம் இல்லை என்றாலும், த்ரில்லர் கதைக்கு தேவையான விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் பின்னணி இசை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கிறது. காடுகளில் இருட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளில் மெனக்கிட்டிருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது.
மொத்தத்தில் `உரு' நல்ல `உரு'வாக்கம்.
மோகன்லால், கமாலினி முகர்ஜி ஆகியோர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்ட ‘புலிமுருகன்’ படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. அந்த படத்தின் விமர்சனம்.
வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமம் புலியூர். காட்டுக்குள் இருந்து இந்த கிராமத்திற்குள் வரும் புலி, மக்களை தாக்கி கொல்கிறது. மோகன்லால் சிறுவயதில் இருக்கும்போது அவரது தந்தையை அந்த புலி கொன்றுவிடுகிறது. ஏற்கெனவே, தாயை இழந்து நிற்கும் மோகன்லால் தனது தந்தையையும் இழந்ததால் ஊர் மக்களிடம் தனது தம்பியை ஒப்படைத்துவிட்டு புலியை கொல்ல காட்டுக்குள் போகிறார். புலியையும் வேட்டையாடி கொன்று விடுகிறார்.
அன்றுமுதல் சாதாரண முருகனாக இருந்த மோகன்லால் புலிமுருகனாக உருவெடுக்கிறார். அதேபோல், காட்டை சுற்றியுள்ள எந்தவொரு கிராமத்திலும் புலியால் ஆபத்து ஏற்பட்டால் மோகன்லால் வேட்டையாடி ஊரை பாதுகாத்து வருகிறார். வளர்ந்து பெரியவனானதும் ஒருநாள் மோகன்லால் தம்பியின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு இரண்டு பேர் காட்டுக்குள் கஞ்சா செடியை பறித்துக் கொண்டு செல்வதற்காக வருகிறார்கள். கேன்சரை குணமாக்கும் மருந்துக்கு அது தேவைப்படுவதாகவும், அதற்கு மோகன்லாலின் உதவி தேவை என்றும் அவரிடம் வருகிறார்கள். மோகன்லாலும் அவர்களுக்கு உதவுவதாக கூறிவிட்டு, கஞ்சா செடிகளை பறித்துக் கொடுக்கிறார்.

கஞ்சா செடிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது போலீஸ் இவர்களை சுற்றி வளைக்கிறது. அவர்களை தாக்கிவிட்டு மோகன்லால் தனது மனைவி கமாலினி முகர்ஜி மற்றும் குடும்பத்துடன் லாரியில் ஏறி தப்பித்து ஜெகபதிபாபுவிடம் அடைக்கலம் தேடிப் போகிறார்கள். ஆரம்பத்தில் ஜெகபதி பாபுவை நல்லவர் என்று நம்புகிறார் மோகன்லால். ஜெகபதி பாபுவையும் ஒரு பிரச்சினையில் இருந்து மோகன்லால் காப்பாற்ற, மோகன்லால் மீது ஜெகபதி பாபுவுக்கும் நல்ல மதிப்பு உருவாகிறது.
ஒருகட்டத்தில் மோகன்லால் ஜெகபதிபாபுவை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அது எதனால்? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

மோகன்லால்தான் படத்தின் மிகப்பெரிய பலமே. 50 வயதிலும் நடிப்பில் துள்ளலுடன் நடித்து அசத்தியிருக்கிறார். புலி வேட்டையின்போது ஆக்ரோஷம், மனைவி கமாலினி முகர்ஜியுடன் ரொமான்ஸ், தம்பிக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தில் கண்கலங்கும்போது செண்டிமெண்ட் என அனைத்திலும் தனக்கே உரித்தான நடிப்பில் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
இளம் வயது மோகன்லாலாக வரும் சிறுவன் பார்வையிலேயே மிரட்டுகிறான். சில நேரங்களே வந்தாலும் அசத்தியிருக்கிறான். மோகன்லால் மாமாவாக வரும் லால் ரொம்பவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மோகன்லாலின் தம்பியாக வரும் பாலா, அண்ணன்-தம்பி செண்டிமெண்டில் ரசிக்க வைத்திருக்கிறார்.
மோகன்லால் மனைவியாக வரும் கமாலினி முகர்ஜி, கணவனுடன் போடும் செல்லச் சண்டைகள், கொஞ்சல்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. ஜெகபதிபாபு அமைதியான வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு போயிருக்கும் நமீதா, மோகன்லாலை பார்க்கும் பார்வையிலேயே கிறங்க வைக்கிறார்.
கிராபிக்சில் வரும் புலி, கிராபிக்ஸ் என்று தெரியாத அளவுக்கு அமைத்திருப்பது சிறப்பு. பீட்டர் கெய்னின் சண்டைக் காட்சிகள்தான் படத்தில் பாராட்டப்பட வேண்டியது. ஹீரோயிசம் இல்லாமல் ஒரு புலியை சாதாரண மனிதன் எப்படி வேட்டையாடுவானோ? அதேபோல் ரொம்பவும் தத்ரூபமாக அந்த சண்டைக் காட்சிகளை வைத்திருப்பதுதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. இதற்காக பீட்டர் கெய்னுக்கு தேசிய விருது கிடைத்திருப்பதற்கு நாம் ஆச்சர்யப்பட வேண்டியதே இல்லை.

அதன்பின்னர் பாராட்ட வேண்டியது இப்படத்தை தமிழில் மொழியாக்கம் செய்த ஆர்.பி.பாலாவைத்தான். இது ஒரு மலையாளப் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் தத்ரூபமாக உதடு அசைவுகளுக்கேற்றவாறு சரியாக தமிழாக்கம் செய்துள்ளார். சிறந்த நடிகர்களை தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார் இயக்குனர் வைஷாக். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாகவே நகர்கிறது.
ஷாஜிகுமாரின் கேமரா காடுகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. புலி வேட்டை காட்சிகளும், லாரி சேசிங் காட்சிகளும் இவரது கேமராவில் அழகாக பதிவாகியிருக்கிறது. கோபி சுந்தரின் இசையில் உருவான பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. குறிப்பாக, மோகன்லாலுக்காக உருவாக்கப்பட்ட ‘முருகா முருகா புலிமுருகா’ என்ற தீம் சாங் வெறியூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘புலிமுருகன்’ வேகம்.
அன்றுமுதல் சாதாரண முருகனாக இருந்த மோகன்லால் புலிமுருகனாக உருவெடுக்கிறார். அதேபோல், காட்டை சுற்றியுள்ள எந்தவொரு கிராமத்திலும் புலியால் ஆபத்து ஏற்பட்டால் மோகன்லால் வேட்டையாடி ஊரை பாதுகாத்து வருகிறார். வளர்ந்து பெரியவனானதும் ஒருநாள் மோகன்லால் தம்பியின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு இரண்டு பேர் காட்டுக்குள் கஞ்சா செடியை பறித்துக் கொண்டு செல்வதற்காக வருகிறார்கள். கேன்சரை குணமாக்கும் மருந்துக்கு அது தேவைப்படுவதாகவும், அதற்கு மோகன்லாலின் உதவி தேவை என்றும் அவரிடம் வருகிறார்கள். மோகன்லாலும் அவர்களுக்கு உதவுவதாக கூறிவிட்டு, கஞ்சா செடிகளை பறித்துக் கொடுக்கிறார்.

கஞ்சா செடிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது போலீஸ் இவர்களை சுற்றி வளைக்கிறது. அவர்களை தாக்கிவிட்டு மோகன்லால் தனது மனைவி கமாலினி முகர்ஜி மற்றும் குடும்பத்துடன் லாரியில் ஏறி தப்பித்து ஜெகபதிபாபுவிடம் அடைக்கலம் தேடிப் போகிறார்கள். ஆரம்பத்தில் ஜெகபதி பாபுவை நல்லவர் என்று நம்புகிறார் மோகன்லால். ஜெகபதி பாபுவையும் ஒரு பிரச்சினையில் இருந்து மோகன்லால் காப்பாற்ற, மோகன்லால் மீது ஜெகபதி பாபுவுக்கும் நல்ல மதிப்பு உருவாகிறது.
ஒருகட்டத்தில் மோகன்லால் ஜெகபதிபாபுவை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அது எதனால்? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

மோகன்லால்தான் படத்தின் மிகப்பெரிய பலமே. 50 வயதிலும் நடிப்பில் துள்ளலுடன் நடித்து அசத்தியிருக்கிறார். புலி வேட்டையின்போது ஆக்ரோஷம், மனைவி கமாலினி முகர்ஜியுடன் ரொமான்ஸ், தம்பிக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தில் கண்கலங்கும்போது செண்டிமெண்ட் என அனைத்திலும் தனக்கே உரித்தான நடிப்பில் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
இளம் வயது மோகன்லாலாக வரும் சிறுவன் பார்வையிலேயே மிரட்டுகிறான். சில நேரங்களே வந்தாலும் அசத்தியிருக்கிறான். மோகன்லால் மாமாவாக வரும் லால் ரொம்பவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மோகன்லாலின் தம்பியாக வரும் பாலா, அண்ணன்-தம்பி செண்டிமெண்டில் ரசிக்க வைத்திருக்கிறார்.
மோகன்லால் மனைவியாக வரும் கமாலினி முகர்ஜி, கணவனுடன் போடும் செல்லச் சண்டைகள், கொஞ்சல்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. ஜெகபதிபாபு அமைதியான வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு போயிருக்கும் நமீதா, மோகன்லாலை பார்க்கும் பார்வையிலேயே கிறங்க வைக்கிறார்.
கிராபிக்சில் வரும் புலி, கிராபிக்ஸ் என்று தெரியாத அளவுக்கு அமைத்திருப்பது சிறப்பு. பீட்டர் கெய்னின் சண்டைக் காட்சிகள்தான் படத்தில் பாராட்டப்பட வேண்டியது. ஹீரோயிசம் இல்லாமல் ஒரு புலியை சாதாரண மனிதன் எப்படி வேட்டையாடுவானோ? அதேபோல் ரொம்பவும் தத்ரூபமாக அந்த சண்டைக் காட்சிகளை வைத்திருப்பதுதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. இதற்காக பீட்டர் கெய்னுக்கு தேசிய விருது கிடைத்திருப்பதற்கு நாம் ஆச்சர்யப்பட வேண்டியதே இல்லை.

அதன்பின்னர் பாராட்ட வேண்டியது இப்படத்தை தமிழில் மொழியாக்கம் செய்த ஆர்.பி.பாலாவைத்தான். இது ஒரு மலையாளப் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் தத்ரூபமாக உதடு அசைவுகளுக்கேற்றவாறு சரியாக தமிழாக்கம் செய்துள்ளார். சிறந்த நடிகர்களை தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார் இயக்குனர் வைஷாக். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாகவே நகர்கிறது.
ஷாஜிகுமாரின் கேமரா காடுகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. புலி வேட்டை காட்சிகளும், லாரி சேசிங் காட்சிகளும் இவரது கேமராவில் அழகாக பதிவாகியிருக்கிறது. கோபி சுந்தரின் இசையில் உருவான பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. குறிப்பாக, மோகன்லாலுக்காக உருவாக்கப்பட்ட ‘முருகா முருகா புலிமுருகா’ என்ற தீம் சாங் வெறியூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘புலிமுருகன்’ வேகம்.
ஆதி, நிக்கி கல்ராணி, ராம்தாஸ், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் பேண்டசி திரைப்படமாக வெளிவந்துள்ள ‘மரகத நாணயம்’ படத்தின் விமர்சனம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்புரை என்ற சிற்றரசன், தன்னைவிட அதிக பலம்வாய்ந்த அரசு தன்னை நோக்கி போர் தொடுக்கும்வேளையில், அதை எதிர்கொள்ள தியானம் செய்து ஒரு மரகதநாணயத்தை வரமாக பெறுகிறார். அந்த மரகத நாணயத்தை தன் வாளில் பதித்துக் கொண்டு எதிரிகளிடம் போரிட்டு வெற்றியும் அடைகிறார்.
மரகத நாணயம் அவர் கைவசம் வந்ததிலிருந்து அவருக்கு வெற்றிகளை குவிகின்றன. இதனால், மரகத நாணயத்தை யாரிடம் ஒப்படைக்காமல் இறுதிவரை தன் வசமே வைத்திருக்கிறார். 90-வயதில் இறக்கும் தருவாயில் அந்த மரகத நாணயத்தை தன்னுடனே வைத்து உயிருடன் ஜீவசமாதி அடைகிறார்.

இந்நிலையில் 1990-ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் அந்த மரகத நாணயத்தை தேடி கண்டுபிடித்து தோண்டி எடுக்கிறார். அந்த நாணயத்தை யாரெல்லாம் தொடுகிறார்களோ, அவர்களெல்லாம் வண்டியில் அடிபட்டு இறக்கிறார்கள். இதனால், அந்த நாணயத்தை இரும்புரை அரசனின் ஆவிதான் யார் கைக்கும் கிடைக்காதபடி பாதுகாத்து வருவதாக ஒரு பேச்சு இருக்கிறது.
இதையடுத்து கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. நாயகன் ஆதி 40 லட்சம் கடனுடன், ஏதாவது கடத்தல் தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்ற நினைப்புடன் நண்பன் டேனியுடன் சென்னையில் தங்கியிருக்கிறார். கடத்தல் தொழில் செய்துவரும் ராம்தாஸுடன் ஆதியை சேர்த்துவிட்டு, கடத்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.

ஒருகட்டத்தில் ராம்தாஸ் செய்வதெல்லாம் சிறு சிறு கடத்தல் வேலைகள்தான், இவரிடம் வேலை பார்த்தால் தன்னுடைய கடனை கூடிய சீக்கிரத்தில் அடைக்க முடியாத என நினைக்கும் ஆதி, பெரிய கடத்தல் ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார்.
இந்நிலையில், சீனாவில் இருந்து மரகத நாணயத்தை தேடி ஒருவன் சென்னைக்கு வருகிறான். மைம் கோபி மூலமாக அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். அந்த மரகத நாணயத்தை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 கோடி கொடுப்பதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால், மரகத நாணயத்தின் வரலாறு பற்றி அனைவருக்கும் தெரிந்திருப்பதால் யாரும் அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முன் வருவதில்லை. இந்த விஷயம் ஆதிக்கு தெரியவர, அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று நினைத்து, அதை தேடிக்கண்டுபிடித்து தருவதாக முன்வருகிறார்.
ஆதி இந்த முடிவை எடுத்ததும் அவருக்கு நிறைய கெட்ட சகுனங்கள் குறுக்கிடுகிறது. இதையெல்லாம் மீறி ஆதி, மரகத நாணயத்தை கண்டுபிடித்தாரா? அந்த மரகத நாணயத்தால் இவருக்கு என்ன பலன் கிடைத்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஆதி தனக்கேற்றவாறு கதையை தேர்வு செய்து அதில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு படத்தில் எல்லா இடத்திலும் இவரது நடிப்பு பலே சொல்ல வைத்திருக்கிறது. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள், தன்னைவிட மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்படியான காட்சிகள் இருந்தும், தைரியமாக இக்கதையை தேர்வுசெய்த ஆதியை பாராட்டியே ஆகவேண்டும்.
நிக்கி கல்ராணி வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்தை திரையில் பார்க்கும்போதுதான் அந்த வித்தியாசம் நமக்கு தெரிய வரும். இந்த மாதிரி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பதற்கு பல நடிகைகள் யோசிப்பார்கள். ஆனால், நிக்கி கல்ராணி தைரியமாக இந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.

படத்தில் ரொம்பவும் ஹைலைட்டான விஷயம் ராமதாஸின் செய்யும் சேட்டைகள்தான். இவர் அடிக்கும் கவுண்டர்களுக்கு தியேட்டரே சிரிப்பலையில் அலறுகிறது. ஆதியின் நண்பனாக வரும் டேனியலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். ராமதாஸுக்கு பக்கபலமாக இருந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். இவர்களுடன் அருண்ராஜ் காமராஜும் தன் பங்குக்கு காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, இவர் ஆடும் ஆட்டம் எல்லாம் ரசிகர்களின் வயிறை பதம் பார்த்திருக்கிறது.

ஹைடெக் வில்லனாக வரும் ஆனந்த்ராஜை பார்த்தாலே நமக்கெல்லாம் சிரிப்பு வந்துவிடுகிறது. அவர் வில்லத்தனமாக செய்யும் விஷயங்கள் எல்லாம் நமக்கு காமெடியாகவே தெரிகிறது. அவருடைய அனுபவ நடிப்புக்கு இந்த படத்தில் நல்ல தீனி கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். மைம்கோபி, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம் ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

இயக்குனர் சரவன் இப்படியொரு வித்தியாசமான கதையை எப்படி யோசித்தார்? என்பதுதான் நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. பேன்டசி என்றொரு விஷயத்தை வைத்துக்கொண்டு படத்தில் இப்படியெல்லாம் பேன்டசியை புகுத்த முடியுமா? என்று பலரையும் வாய்பிளக்க வைத்திருக்கிறார். படத்தில் எந்தவொரு காட்சியும் வீண் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார். நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும், எல்லா கதாபாத்திரங்களும் மனதில் பதியும்படி, அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். படத்தின் பலமே திரைக்கதைதான். கதையோடு ரசிகர்களை கட்டிப்போட்டுக் கொண்டே செல்லும் திரைக்கதையை பாராட்டாமல் இருக்கவே முடியாது.

பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு படம் முழுக்க கலர் புல்லாக இருக்கிறது. கதையின் ஓட்டத்தை தடை செய்யாத அளவுக்கு இவரது ஒளிப்பதிவு கச்சிதமாக அமைந்துள்ளது சிறப்பு. திபு நைனன் தாமஸ் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கதையோடு ஒட்டியே பயணித்திருக்கிறது. பாடல்கள் கேட்கும் ரகம்தான் என்றாலும், பின்னணி இசையில் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். பிரசன்னாவின் எடிட்டிங்கும் காட்சிகளை கோர்வையாக அமைத்திருக்கிறது. இதனால், படம் பார்த்துவிட்டு வெளிவந்த பிறகும் படத்தின் தாக்கம் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.
மொத்தத்தில் ‘மரகத நாணயம்’ மதிப்பு அதிகம்.
மரகத நாணயம் அவர் கைவசம் வந்ததிலிருந்து அவருக்கு வெற்றிகளை குவிகின்றன. இதனால், மரகத நாணயத்தை யாரிடம் ஒப்படைக்காமல் இறுதிவரை தன் வசமே வைத்திருக்கிறார். 90-வயதில் இறக்கும் தருவாயில் அந்த மரகத நாணயத்தை தன்னுடனே வைத்து உயிருடன் ஜீவசமாதி அடைகிறார்.

இந்நிலையில் 1990-ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் அந்த மரகத நாணயத்தை தேடி கண்டுபிடித்து தோண்டி எடுக்கிறார். அந்த நாணயத்தை யாரெல்லாம் தொடுகிறார்களோ, அவர்களெல்லாம் வண்டியில் அடிபட்டு இறக்கிறார்கள். இதனால், அந்த நாணயத்தை இரும்புரை அரசனின் ஆவிதான் யார் கைக்கும் கிடைக்காதபடி பாதுகாத்து வருவதாக ஒரு பேச்சு இருக்கிறது.
இதையடுத்து கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. நாயகன் ஆதி 40 லட்சம் கடனுடன், ஏதாவது கடத்தல் தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்ற நினைப்புடன் நண்பன் டேனியுடன் சென்னையில் தங்கியிருக்கிறார். கடத்தல் தொழில் செய்துவரும் ராம்தாஸுடன் ஆதியை சேர்த்துவிட்டு, கடத்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.

ஒருகட்டத்தில் ராம்தாஸ் செய்வதெல்லாம் சிறு சிறு கடத்தல் வேலைகள்தான், இவரிடம் வேலை பார்த்தால் தன்னுடைய கடனை கூடிய சீக்கிரத்தில் அடைக்க முடியாத என நினைக்கும் ஆதி, பெரிய கடத்தல் ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார்.
இந்நிலையில், சீனாவில் இருந்து மரகத நாணயத்தை தேடி ஒருவன் சென்னைக்கு வருகிறான். மைம் கோபி மூலமாக அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். அந்த மரகத நாணயத்தை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 கோடி கொடுப்பதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால், மரகத நாணயத்தின் வரலாறு பற்றி அனைவருக்கும் தெரிந்திருப்பதால் யாரும் அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முன் வருவதில்லை. இந்த விஷயம் ஆதிக்கு தெரியவர, அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று நினைத்து, அதை தேடிக்கண்டுபிடித்து தருவதாக முன்வருகிறார்.
ஆதி இந்த முடிவை எடுத்ததும் அவருக்கு நிறைய கெட்ட சகுனங்கள் குறுக்கிடுகிறது. இதையெல்லாம் மீறி ஆதி, மரகத நாணயத்தை கண்டுபிடித்தாரா? அந்த மரகத நாணயத்தால் இவருக்கு என்ன பலன் கிடைத்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஆதி தனக்கேற்றவாறு கதையை தேர்வு செய்து அதில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு படத்தில் எல்லா இடத்திலும் இவரது நடிப்பு பலே சொல்ல வைத்திருக்கிறது. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள், தன்னைவிட மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்படியான காட்சிகள் இருந்தும், தைரியமாக இக்கதையை தேர்வுசெய்த ஆதியை பாராட்டியே ஆகவேண்டும்.
நிக்கி கல்ராணி வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்தை திரையில் பார்க்கும்போதுதான் அந்த வித்தியாசம் நமக்கு தெரிய வரும். இந்த மாதிரி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பதற்கு பல நடிகைகள் யோசிப்பார்கள். ஆனால், நிக்கி கல்ராணி தைரியமாக இந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.

படத்தில் ரொம்பவும் ஹைலைட்டான விஷயம் ராமதாஸின் செய்யும் சேட்டைகள்தான். இவர் அடிக்கும் கவுண்டர்களுக்கு தியேட்டரே சிரிப்பலையில் அலறுகிறது. ஆதியின் நண்பனாக வரும் டேனியலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். ராமதாஸுக்கு பக்கபலமாக இருந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். இவர்களுடன் அருண்ராஜ் காமராஜும் தன் பங்குக்கு காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, இவர் ஆடும் ஆட்டம் எல்லாம் ரசிகர்களின் வயிறை பதம் பார்த்திருக்கிறது.

ஹைடெக் வில்லனாக வரும் ஆனந்த்ராஜை பார்த்தாலே நமக்கெல்லாம் சிரிப்பு வந்துவிடுகிறது. அவர் வில்லத்தனமாக செய்யும் விஷயங்கள் எல்லாம் நமக்கு காமெடியாகவே தெரிகிறது. அவருடைய அனுபவ நடிப்புக்கு இந்த படத்தில் நல்ல தீனி கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். மைம்கோபி, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம் ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

இயக்குனர் சரவன் இப்படியொரு வித்தியாசமான கதையை எப்படி யோசித்தார்? என்பதுதான் நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. பேன்டசி என்றொரு விஷயத்தை வைத்துக்கொண்டு படத்தில் இப்படியெல்லாம் பேன்டசியை புகுத்த முடியுமா? என்று பலரையும் வாய்பிளக்க வைத்திருக்கிறார். படத்தில் எந்தவொரு காட்சியும் வீண் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார். நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும், எல்லா கதாபாத்திரங்களும் மனதில் பதியும்படி, அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். படத்தின் பலமே திரைக்கதைதான். கதையோடு ரசிகர்களை கட்டிப்போட்டுக் கொண்டே செல்லும் திரைக்கதையை பாராட்டாமல் இருக்கவே முடியாது.

பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு படம் முழுக்க கலர் புல்லாக இருக்கிறது. கதையின் ஓட்டத்தை தடை செய்யாத அளவுக்கு இவரது ஒளிப்பதிவு கச்சிதமாக அமைந்துள்ளது சிறப்பு. திபு நைனன் தாமஸ் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கதையோடு ஒட்டியே பயணித்திருக்கிறது. பாடல்கள் கேட்கும் ரகம்தான் என்றாலும், பின்னணி இசையில் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். பிரசன்னாவின் எடிட்டிங்கும் காட்சிகளை கோர்வையாக அமைத்திருக்கிறது. இதனால், படம் பார்த்துவிட்டு வெளிவந்த பிறகும் படத்தின் தாக்கம் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.
மொத்தத்தில் ‘மரகத நாணயம்’ மதிப்பு அதிகம்.
வெற்றி, சவுந்தர்ராஜா, அதிதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தங்கரதம்’ படத்தின் விமர்சனம்
நாயகன் வெற்றியும், சவுந்தர்ராஜாவும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறி லோடு வண்டி ஓட்டி வருகிறார்கள். வெற்றி தன்னுடைய பெரியப்பாவான நரேனின் வண்டியில் டிரைவராக பணியாற்றுகிறார். சவுந்தர்ராஜா தன்னுடைய சொந்த வண்டியை ஓட்டி வருகிறார். மார்க்கெட்டுக்கு யார் முதலில் காய்கறி கொண்டு போகிறார்கள் என்பதில் இருவருக்குள்ளும் ஒரு போட்டி இருக்கிறது. இதனால் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவே வலம் வருகிறார்கள்.
இந்நிலையில், சவுந்தர்ராஜாவின் தங்கையான நாயகி அதிதியை பார்த்ததும் நாயகனுக்கு பிடித்துப்போய் விடுகிறது. பிறகு, அவள் சவுந்தர்ராஜாவின் தங்கை என்பது வெற்றிக்கு தெரிந்ததும் அவள் பின்னால் சுற்றுவதை நிறுத்துகிறார். பின்னர், ஒரு சந்திப்பில் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. பின்னர் அந்த மோதல் மெல்ல மெல்ல காதலாக உருவாகிறது.
அதேஊரில் பெரும் குடிகாரனாக இருககும் மொட்டை ராஜேந்திரனுக்கும், சவுந்தர்ராஜாவுக்கும் ஒரு பகை இருக்கிறது. அந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு ஒருநாள் மொட்டை ராஜேந்திரன் சவுந்தர்ராஜாவின் வேன் கண்ணாடியை உடைத்துவிடுகிறார். இதை வெற்றிதான் செய்திருப்பான் என்று நினைக்கிறார் சவுந்தர்ராஜா. ஏற்கெனவே அவன்மீது இந்த சம்பவத்தால் கொலை வெறியாக மாறுகிறது.
இது வெற்றியின் பெரியப்பாவான நரேனுக்கு தெரியவர, வெற்றியை காப்பாற்றுவதற்காக அவனை வேறு ஊருக்கு அனுப்பி வைக்கிறார். அதேநேரத்தில், சவுந்தர்ராஜாவுக்கும் வெற்றிக்கும் இருக்கும் பகையை போக்குவதற்காக அவனது குடும்பத்தில் சம்பந்தம் செய்ய நரேன் முடிவு செய்கிறார்.

அதன்படி, தன்னுடைய மகனுக்கு சவுந்தர்ராஜாவின் தங்கையான அதிதியை நிச்சயம் செய்கிறார் நரேன். இது நாயகனான வெற்றிக்கு தெரிய வருகிறது. அதன்பிறகு, வெற்றி என்ன முடிவெடுத்தார்? இவர்களது காதல் என்ன ஆனது? சவுந்தர்ராஜா-வெற்றியின் பகை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் வெற்றி ஏற்கெனவே சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் முழுநீள ஹீரோவாகியிருக்கிறார். நடிப்பு கொஞ்சம் நன்றாகவே வருகிறது. இருந்தாலும், இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி நடிக்கவேண்டும்.

கதாநாயகி அதிதி, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். அதிதியின் அண்ணனாக வரும் சவுந்தர்ராஜா ஆக்ரோஷமான நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். ஹீரோவுக்கு இணையான வேடம் என்பதால் தனது முழு நடிப்பையும் போட்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
பாசமுள்ள பெரியப்பா கதாபாத்திரத்தில் நரேன் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரனின் கேபிள் டிவி காமெடிகள் ரசிக்க வைக்கிறது. குடித்துவிட்டு ரகளை செய்யும் காட்சிகள்தான் கொஞ்சம் போரடிக்கிறது. மற்றபடி, அவருடைய பங்களிப்பை சரியாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்.

இயக்குனர் பாலமுருகன் கிராமத்துப் பிண்ணனியில் இருவருக்குள் இருக்கும் பகையை மையப்படுத்திய கதையில், காதல், பாசம், செண்டிமெண்ட் என கலந்து சொல்லியிருக்கிறார். ஆனால், படத்தில் அடிக்கடி பிளாஸ்பேக் காட்சிகள் வைத்து படத்தை தொடர்ந்து பார்த்து ரசிக்க முடியாமல் தடை ஏற்படுத்தியிருக்கிறார்.
டோனி பிரிட்டோவின் இசையில் பாடல்கள் கேட்டும்படி இருக்கிறது. பின்னணி இசையும் ஓகே சொல்ல வைக்கிறது. ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘தங்கரதம்’ வேகமில்லை.
இந்நிலையில், சவுந்தர்ராஜாவின் தங்கையான நாயகி அதிதியை பார்த்ததும் நாயகனுக்கு பிடித்துப்போய் விடுகிறது. பிறகு, அவள் சவுந்தர்ராஜாவின் தங்கை என்பது வெற்றிக்கு தெரிந்ததும் அவள் பின்னால் சுற்றுவதை நிறுத்துகிறார். பின்னர், ஒரு சந்திப்பில் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. பின்னர் அந்த மோதல் மெல்ல மெல்ல காதலாக உருவாகிறது.
அதேஊரில் பெரும் குடிகாரனாக இருககும் மொட்டை ராஜேந்திரனுக்கும், சவுந்தர்ராஜாவுக்கும் ஒரு பகை இருக்கிறது. அந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு ஒருநாள் மொட்டை ராஜேந்திரன் சவுந்தர்ராஜாவின் வேன் கண்ணாடியை உடைத்துவிடுகிறார். இதை வெற்றிதான் செய்திருப்பான் என்று நினைக்கிறார் சவுந்தர்ராஜா. ஏற்கெனவே அவன்மீது இந்த சம்பவத்தால் கொலை வெறியாக மாறுகிறது.
இது வெற்றியின் பெரியப்பாவான நரேனுக்கு தெரியவர, வெற்றியை காப்பாற்றுவதற்காக அவனை வேறு ஊருக்கு அனுப்பி வைக்கிறார். அதேநேரத்தில், சவுந்தர்ராஜாவுக்கும் வெற்றிக்கும் இருக்கும் பகையை போக்குவதற்காக அவனது குடும்பத்தில் சம்பந்தம் செய்ய நரேன் முடிவு செய்கிறார்.

அதன்படி, தன்னுடைய மகனுக்கு சவுந்தர்ராஜாவின் தங்கையான அதிதியை நிச்சயம் செய்கிறார் நரேன். இது நாயகனான வெற்றிக்கு தெரிய வருகிறது. அதன்பிறகு, வெற்றி என்ன முடிவெடுத்தார்? இவர்களது காதல் என்ன ஆனது? சவுந்தர்ராஜா-வெற்றியின் பகை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் வெற்றி ஏற்கெனவே சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் முழுநீள ஹீரோவாகியிருக்கிறார். நடிப்பு கொஞ்சம் நன்றாகவே வருகிறது. இருந்தாலும், இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி நடிக்கவேண்டும்.

கதாநாயகி அதிதி, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். அதிதியின் அண்ணனாக வரும் சவுந்தர்ராஜா ஆக்ரோஷமான நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். ஹீரோவுக்கு இணையான வேடம் என்பதால் தனது முழு நடிப்பையும் போட்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
பாசமுள்ள பெரியப்பா கதாபாத்திரத்தில் நரேன் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரனின் கேபிள் டிவி காமெடிகள் ரசிக்க வைக்கிறது. குடித்துவிட்டு ரகளை செய்யும் காட்சிகள்தான் கொஞ்சம் போரடிக்கிறது. மற்றபடி, அவருடைய பங்களிப்பை சரியாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்.

இயக்குனர் பாலமுருகன் கிராமத்துப் பிண்ணனியில் இருவருக்குள் இருக்கும் பகையை மையப்படுத்திய கதையில், காதல், பாசம், செண்டிமெண்ட் என கலந்து சொல்லியிருக்கிறார். ஆனால், படத்தில் அடிக்கடி பிளாஸ்பேக் காட்சிகள் வைத்து படத்தை தொடர்ந்து பார்த்து ரசிக்க முடியாமல் தடை ஏற்படுத்தியிருக்கிறார்.
டோனி பிரிட்டோவின் இசையில் பாடல்கள் கேட்டும்படி இருக்கிறது. பின்னணி இசையும் ஓகே சொல்ல வைக்கிறது. ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘தங்கரதம்’ வேகமில்லை.
கார்த்திக்-அஞ்சலி ராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ’பீச்சாங்கை’ படத்தின் விமர்சனம்.
நாயகன் கார்த்திக் பிரபலமான பிக்பாக்கெட் திருடன். இவனுக்கு இவனுடைய பீச்சாங்கைதான் பலமே. அந்த கையால் நிறைய திருட்டு வேலைகளை செய்திருக்கிறான். திருடனாக இருந்தாலும் அதிலும் மிகவும் நேர்மையாக இருந்து வருகிறார் கார்த்திக். இவருடன் ஒரு பெண்ணும், இளைஞனும் சேர்ந்து இந்த திருட்டு தொழிலை நடத்தி வருகிறார்கள்.
ஒருமுறை நாயகி அஞ்சலி ராவ் தன்னுடைய பணப்பையை நாயகனின் நண்பர்களிடம் பறிகொடுக்க, அந்த பணத்தை திரும்ப கொடுக்கும்வரும் நாயகன் மீது அவளுக்கு பாசம் வர, இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். இதற்கிடையில், அரசியல்கட்சி தலைவரான எம்.எஸ்.பாஸ்கர் தனக்கு நெருக்கமான விவேக் பிரசன்னாவுக்கு கட்சியில் முக்கிய பதவியை கொடுக்க, அதை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சியின் மூத்த நிர்வாகியான வெங்கடேசன், விவேக் பிரசன்னாவுக்கு எதிராக சதிவலையை பின்ன ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில், விவேக் பிரசன்னா, தான் பெண்களிடம் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து அதை பார்த்து ரசிப்பதை ஒரு பழக்கமாக கொண்டு வருகிறார். அதை தெரிந்துகொண்ட வெங்கடேசன், அந்த செல்போனை திருடிவிட்டால், அந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விவேக் பிரசன்னாவை அவமானப்படுத்திவிடலாம் என்று முடிவு செய்கிறார். அதன்படி, அந்த செல்போனை திருடிவர தனது ஆட்களிடம் சொல்கிறார்.
அந்த பொறுப்பு எங்கெங்கோ சென்று கடைசியில் நாயகன் கைக்கு வருகிறது. இதற்கிடையில், நாயகன் ஒரு விபத்தில் சிக்கி அவனது பீச்சாங்கையில் அடிபட்டு விடுகிறது. ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ என்ற நோயால் அவரது பீச்சாங்கை பாதிக்கப்படுகிறது. இதனால், அவருடைய பீச்சாங்கை கட்டுப்பாட்டில் இல்லாமல் அதுவே தனியாக செயல்பட ஆரம்பிக்கிறது. இதனால், நாயகனுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கிடையில் வெங்கேடஷனின் ஆட்கள் சொன்ன செல்போனையும் இவர் திருடி விடுகிறார்.

இதன்பிறகு, கார்த்திக்கின் நிலைமை என்னவாயிற்று? அவரது கட்டுப்பாட்டில் இல்லாத அவரது பீச்சாங்கையால் அவர் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார்? இவருடைய காதல் என்னவாயிற்று? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் கார்த்திக் தனிஒரு ஆளாக படத்தின் முழு கதையையும் தாங்கி சென்றிருக்கிறார். அறிமுகம் என்றாலும் அது தெரியாத அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பீச்சாங்கை இவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் தனியாக செயல்படும் காட்சிகளில் எல்லாம் எதார்த்தம் மீறாமல் அழகாக நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் மாஸ் ஹீரோ போல் தன்னை காட்டிக் கொள்வதாகட்டும், பீச்சாங்கையால் அனுபவிக்கும் அவஸ்தைகளை ஏற்றுக்கொள்ளும் அப்பாவித்தனமாகட்டும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

நாயகி அஞ்சலி ராவ் பார்க்க அழகாக இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு போயிருக்கிறார். அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அதேபோல், அவருக்கு நெருக்கமானவராக வரும் விவேக் பிரசன்னாவும், கட்சியின் மூத்த நிர்வாகியாக வரும் வெங்கடேஷன் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் அசோக் வித்தியாசமான ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து படமாக கொடுத்திருக்கிறார். அதற்கான இவரது கதாபாத்திரங்கள் தேர்வும் கச்சிதமாக இருக்கிறது. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை போகப்போக வேகமெடுக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் போரடிக்கும்படியான காட்சிகள் இருந்தாலும், படத்தை பார்த்து முடிக்கும்போது நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கிறது.
பாலமுரளி பாலுவின் பாடல்கள் எல்லாம் சூப்பர். சுகுமார் கணேசன் வரிகளில் நாயகனை அறிமுகப்படுத்தும் ‘ஸ்மூத்’ என்ற பாடல் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. நாயகனுக்கென்று கொடுக்கப்பட்டுள்ள தீம் மியூசிக் அபாரம். கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக கைகொடுத்திருக்கிறது. சிறு பட்ஜெட் படம் என்று தெரியாத அளவுக்கு ஒளிப்பதிவில் அவ்வளவு துல்லியம் தெரிகிறது.
மொத்தத்தில் ‘பீச்சாங்கை’ பிடித்தமான கை.
ஒருமுறை நாயகி அஞ்சலி ராவ் தன்னுடைய பணப்பையை நாயகனின் நண்பர்களிடம் பறிகொடுக்க, அந்த பணத்தை திரும்ப கொடுக்கும்வரும் நாயகன் மீது அவளுக்கு பாசம் வர, இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். இதற்கிடையில், அரசியல்கட்சி தலைவரான எம்.எஸ்.பாஸ்கர் தனக்கு நெருக்கமான விவேக் பிரசன்னாவுக்கு கட்சியில் முக்கிய பதவியை கொடுக்க, அதை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சியின் மூத்த நிர்வாகியான வெங்கடேசன், விவேக் பிரசன்னாவுக்கு எதிராக சதிவலையை பின்ன ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில், விவேக் பிரசன்னா, தான் பெண்களிடம் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து அதை பார்த்து ரசிப்பதை ஒரு பழக்கமாக கொண்டு வருகிறார். அதை தெரிந்துகொண்ட வெங்கடேசன், அந்த செல்போனை திருடிவிட்டால், அந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விவேக் பிரசன்னாவை அவமானப்படுத்திவிடலாம் என்று முடிவு செய்கிறார். அதன்படி, அந்த செல்போனை திருடிவர தனது ஆட்களிடம் சொல்கிறார்.
அந்த பொறுப்பு எங்கெங்கோ சென்று கடைசியில் நாயகன் கைக்கு வருகிறது. இதற்கிடையில், நாயகன் ஒரு விபத்தில் சிக்கி அவனது பீச்சாங்கையில் அடிபட்டு விடுகிறது. ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ என்ற நோயால் அவரது பீச்சாங்கை பாதிக்கப்படுகிறது. இதனால், அவருடைய பீச்சாங்கை கட்டுப்பாட்டில் இல்லாமல் அதுவே தனியாக செயல்பட ஆரம்பிக்கிறது. இதனால், நாயகனுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கிடையில் வெங்கேடஷனின் ஆட்கள் சொன்ன செல்போனையும் இவர் திருடி விடுகிறார்.

இதன்பிறகு, கார்த்திக்கின் நிலைமை என்னவாயிற்று? அவரது கட்டுப்பாட்டில் இல்லாத அவரது பீச்சாங்கையால் அவர் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார்? இவருடைய காதல் என்னவாயிற்று? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் கார்த்திக் தனிஒரு ஆளாக படத்தின் முழு கதையையும் தாங்கி சென்றிருக்கிறார். அறிமுகம் என்றாலும் அது தெரியாத அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பீச்சாங்கை இவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் தனியாக செயல்படும் காட்சிகளில் எல்லாம் எதார்த்தம் மீறாமல் அழகாக நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் மாஸ் ஹீரோ போல் தன்னை காட்டிக் கொள்வதாகட்டும், பீச்சாங்கையால் அனுபவிக்கும் அவஸ்தைகளை ஏற்றுக்கொள்ளும் அப்பாவித்தனமாகட்டும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

நாயகி அஞ்சலி ராவ் பார்க்க அழகாக இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு போயிருக்கிறார். அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அதேபோல், அவருக்கு நெருக்கமானவராக வரும் விவேக் பிரசன்னாவும், கட்சியின் மூத்த நிர்வாகியாக வரும் வெங்கடேஷன் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் அசோக் வித்தியாசமான ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து படமாக கொடுத்திருக்கிறார். அதற்கான இவரது கதாபாத்திரங்கள் தேர்வும் கச்சிதமாக இருக்கிறது. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை போகப்போக வேகமெடுக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் போரடிக்கும்படியான காட்சிகள் இருந்தாலும், படத்தை பார்த்து முடிக்கும்போது நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கிறது.
பாலமுரளி பாலுவின் பாடல்கள் எல்லாம் சூப்பர். சுகுமார் கணேசன் வரிகளில் நாயகனை அறிமுகப்படுத்தும் ‘ஸ்மூத்’ என்ற பாடல் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. நாயகனுக்கென்று கொடுக்கப்பட்டுள்ள தீம் மியூசிக் அபாரம். கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக கைகொடுத்திருக்கிறது. சிறு பட்ஜெட் படம் என்று தெரியாத அளவுக்கு ஒளிப்பதிவில் அவ்வளவு துல்லியம் தெரிகிறது.
மொத்தத்தில் ‘பீச்சாங்கை’ பிடித்தமான கை.
அலெக்ஸ் கர்ட்ஸ்மன் இயக்கத்தில் டாம் குரூஸ் - அனபெல்லே வாலிஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் தி மம்மி படத்தின் விமர்சனம்.
சுமார் 4000-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் வாழ்ந்த மன்னர் ஒருவரின் மனைவி கருவுற்று ஆண் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். இதுபிடிக்காத அந்த மன்னனின் மகள், அந்த குழந்தையால் தனது அரியணை வாய்ப்பு போய்விடும் என்று பயந்து மன்னர், ராணி மற்றும் அவர்களது குழந்தையை கொன்று விடுகிறாள். மேலும் தீய சக்திகளை அவள் மீதே ஏவிவிட்டு, தீய சக்திகளின் ராணியாக வேண்டும் என்று எண்ணுகிறாள். தீய சக்திகளின் ராஜாவாக ஒருவரை தேர்வு செய்து, சிவப்பு கல் பதித்த கத்தி மூலமாக அவரை கொண்டு தீய சக்திகளின் ராஜாவாக்க முயற்சிக்கிறாள்.
இந்நிலையில், ராஜாவின் காவலாளிகள் அவளை உயிருடன் பிடித்து சவப் பெட்டியில் வைத்து மூடிவிடுகிறார்கள். அவள் மீண்டும் வெளியே வந்தால் தீய சக்திகளின் மூலம் அனைவருக்கும பாதிப்பு ஏற்படும் என்று அவளை மூடிய சவப் பெட்டியை, எகிப்தில் இருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சுரங்கப்பாதை அமைத்து வெளிவர முடியாதபடி செய்து விடுகின்றனர்.

அந்த ராணியின் உடலை கண்டுபிடிக்க, தொல்பொருள் ஆராய்ச்சியில் கைதேர்ந்தவளான நாயகி அனபெல்லே வாலிஸ் ஒரு மேப்பை வைத்துக் கொண்டு, மறைக்கப்பட்ட அந்த ராணியின் உடலை தேடி வருகிறார். மறுபுறத்தில் ராணுவப் பணியில் இருக்கும் டாம் குரூஸ் மற்றும் அவரது நண்பர் அந்த பகுதியில் ரகசிய பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர்.
அதே நேரத்தில் அனபெல்லேவிடமும் தொடர்பில் இருக்கும் டாம் குரூஸ், அவளிடம் இருக்கும் அந்த மேப் ஒன்றை திருடிக் கொண்டு அந்த இடத்தில் புதையல் இருப்பதாக எண்ணி அதைக் கைப்பற்ற ஆசைப்பட்டு அங்கு செல்லும் போது, அவர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதையடுத்து டாம் தனது ராணுவத்தின் உதவியை நாட ராணுவம் அங்கு விரைகிறது. அந்த இடத்தில் ஒரு ஏவுகணை குண்டையும் வீசுகிறது. இதில் குண்டுவிழுந்த இடத்தில் அந்த உடலை மறைத்து வைத்திருக்கும் சுரங்கப்பாதையும் வெளிப்படுகிறது. அந்த நேரம் அந்த இடத்திற்கு வந்த நாயகி, நாயகன் மற்றும் ராணுவ உதவியுடன் அந்த உடலை லண்டனுக்கு கொண்டு செல்கிறாள். ஆனால் செல்லும் வழியிலேயே தீய சக்தியின் செயலால் அந்த விமானம் விபத்திற்குள்ளாகிறது.
இதில் அனபெல்லேவை டாம் குரூஸ் காப்பாற்றிவிடுகிறார். அதேநேரத்தில் அவர் விபத்தில் சிக்கிவிடுகிறார். அவரை அந்த தீயசக்தி காப்பாற்றி இருப்பதும், அந்த உடலை கண்டுபிடிக்க உத்தரவிட்ட ரஸல் குரோ மூலமாக தெரியவருகிறது. டாமை தீயசக்திகளின் ராஜாவாக்க முடிவு செய்து, அவரை பழி கொடுக்க நினைக்கிறது.

இந்நிலையில், அந்த தீயசக்தியான சோபியாவின் பிடியில் இருந்து டாம் தப்பித்தாரா? அவரது நண்பனையும், நாயகியையும் காப்பாற்றினாரா? என்பது படத்தின் மீதிக்கதை.
டாம் குரூஸ் தனக்கே உரித்தான ஸ்டைலில் பட்டையை கிளப்புவார் என்ற எதிர்பார்ப்பில் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டாம் நடிப்பில் கலக்கியிருந்தாலும், அவருக்கான கெத்து குறைச்சலே.
அனபெல்லே வாலிஸ் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் கதைக்கே கருவான சோபியா பெளடெல்லா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், ஒரு ராணிக்கு உண்டான கெத்து, தீயசக்திகளுக்கு உண்டான சூட்சமம் உள்ளிட்டவற்றுடன் கலக்கி இருக்கிறார். மற்றபடி ஜேக் ஜான்சன், கோர்ட்னி பி வேன்ஸ், ரஸல் க்ரோ காட்சிகளுக்கு பக்கபலமாக வந்து செல்கின்றனர்.

அலெக்ஸ் கர்ட்ஸ்மன் இயக்கத்தில் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும், தெளிவாக இல்லை. காட்சிகளில் ஹாலிவுட் படங்களுக்கு உண்டான தரம் குறைந்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் ஸ்வாரஸ்யமான விஷயங்களும் அதிகமாக இல்லாதது படத்திற்கு மைனஸ்.
ப்ரெயன் டைலரின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பென் செரசினின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும், தெளிவாக இல்லை.
மொத்தத்தில் `தி மம்மி' ஸ்வாரஸ்யம் கம்மி.
இந்நிலையில், ராஜாவின் காவலாளிகள் அவளை உயிருடன் பிடித்து சவப் பெட்டியில் வைத்து மூடிவிடுகிறார்கள். அவள் மீண்டும் வெளியே வந்தால் தீய சக்திகளின் மூலம் அனைவருக்கும பாதிப்பு ஏற்படும் என்று அவளை மூடிய சவப் பெட்டியை, எகிப்தில் இருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சுரங்கப்பாதை அமைத்து வெளிவர முடியாதபடி செய்து விடுகின்றனர்.

அந்த ராணியின் உடலை கண்டுபிடிக்க, தொல்பொருள் ஆராய்ச்சியில் கைதேர்ந்தவளான நாயகி அனபெல்லே வாலிஸ் ஒரு மேப்பை வைத்துக் கொண்டு, மறைக்கப்பட்ட அந்த ராணியின் உடலை தேடி வருகிறார். மறுபுறத்தில் ராணுவப் பணியில் இருக்கும் டாம் குரூஸ் மற்றும் அவரது நண்பர் அந்த பகுதியில் ரகசிய பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர்.
அதே நேரத்தில் அனபெல்லேவிடமும் தொடர்பில் இருக்கும் டாம் குரூஸ், அவளிடம் இருக்கும் அந்த மேப் ஒன்றை திருடிக் கொண்டு அந்த இடத்தில் புதையல் இருப்பதாக எண்ணி அதைக் கைப்பற்ற ஆசைப்பட்டு அங்கு செல்லும் போது, அவர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதையடுத்து டாம் தனது ராணுவத்தின் உதவியை நாட ராணுவம் அங்கு விரைகிறது. அந்த இடத்தில் ஒரு ஏவுகணை குண்டையும் வீசுகிறது. இதில் குண்டுவிழுந்த இடத்தில் அந்த உடலை மறைத்து வைத்திருக்கும் சுரங்கப்பாதையும் வெளிப்படுகிறது. அந்த நேரம் அந்த இடத்திற்கு வந்த நாயகி, நாயகன் மற்றும் ராணுவ உதவியுடன் அந்த உடலை லண்டனுக்கு கொண்டு செல்கிறாள். ஆனால் செல்லும் வழியிலேயே தீய சக்தியின் செயலால் அந்த விமானம் விபத்திற்குள்ளாகிறது.
இதில் அனபெல்லேவை டாம் குரூஸ் காப்பாற்றிவிடுகிறார். அதேநேரத்தில் அவர் விபத்தில் சிக்கிவிடுகிறார். அவரை அந்த தீயசக்தி காப்பாற்றி இருப்பதும், அந்த உடலை கண்டுபிடிக்க உத்தரவிட்ட ரஸல் குரோ மூலமாக தெரியவருகிறது. டாமை தீயசக்திகளின் ராஜாவாக்க முடிவு செய்து, அவரை பழி கொடுக்க நினைக்கிறது.

இந்நிலையில், அந்த தீயசக்தியான சோபியாவின் பிடியில் இருந்து டாம் தப்பித்தாரா? அவரது நண்பனையும், நாயகியையும் காப்பாற்றினாரா? என்பது படத்தின் மீதிக்கதை.
டாம் குரூஸ் தனக்கே உரித்தான ஸ்டைலில் பட்டையை கிளப்புவார் என்ற எதிர்பார்ப்பில் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டாம் நடிப்பில் கலக்கியிருந்தாலும், அவருக்கான கெத்து குறைச்சலே.
அனபெல்லே வாலிஸ் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் கதைக்கே கருவான சோபியா பெளடெல்லா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், ஒரு ராணிக்கு உண்டான கெத்து, தீயசக்திகளுக்கு உண்டான சூட்சமம் உள்ளிட்டவற்றுடன் கலக்கி இருக்கிறார். மற்றபடி ஜேக் ஜான்சன், கோர்ட்னி பி வேன்ஸ், ரஸல் க்ரோ காட்சிகளுக்கு பக்கபலமாக வந்து செல்கின்றனர்.

அலெக்ஸ் கர்ட்ஸ்மன் இயக்கத்தில் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும், தெளிவாக இல்லை. காட்சிகளில் ஹாலிவுட் படங்களுக்கு உண்டான தரம் குறைந்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் ஸ்வாரஸ்யமான விஷயங்களும் அதிகமாக இல்லாதது படத்திற்கு மைனஸ்.
ப்ரெயன் டைலரின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பென் செரசினின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும், தெளிவாக இல்லை.
மொத்தத்தில் `தி மம்மி' ஸ்வாரஸ்யம் கம்மி.
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு - மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `சத்ரியன்' படத்தின் விமர்சனம்.
திருச்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா சரத் லோகிதஸ்வா, அமைச்சர் போஸ்டர் நந்தகுமாரின் ஆதரவுடன் திருச்சியை ஆட்டிப்படைக்கிறார். என்னதான் ஊரையே ஆட்டிப்படைத்தாலும், வீட்டில் மகள் மஞ்சிமா மோகன், மகன் சவுந்தர்ராஜனுக்கு அன்பான தந்தையாக வந்து செல்கிறார். அப்பா ஊரையே ஆட்டிப்படைக்கும் ரவுடி, ஆனால் மகன் சவுந்தர்ராஜனோ ஒரு அப்பாவி.
ஒரு கட்டத்தில் சரத் லோகிதஸ்வாவின் வளர்ச்சி பிடிக்காத அமைச்சர் நந்தகுமார், அவரை கொல்ல திட்டம் தீட்டுகிறார். பின்னர் திருச்சியின் மற்றொரு ரவுடியான அருள் தாஸ் மூலமாக சரத் லோகிதஸ்வாவை கொன்று விடுகிறார். இதனால் சரத் லோகிதஸ்வா இடத்திற்கு அவருக்கு நெருக்கமான விஜய் முருகன் வருகிறார். விஜய் முருகனின் கீழ் அவரின் நம்பிக்கையான ரவுடியாக நாயகன் விக்ரம் பிரபு வருகிறார்.

சரத் லோகிதஸ்வாவை இழந்த அவரது குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் விஜய் முருகன் பார்த்துக் கொள்கிறார். இவ்வாறாக ஒரு நாள் கல்லூரிக்கு சென்ற மஞ்சிமா மோகனை சிலர் தொந்தரவு செய்கின்றனர். இந்த விஷயத்தை மஞ்சிமாவின் அம்மா விஜய் முருகனிடம் கூறுகிறாள்.
இதையடுத்து மஞ்சிமாவுக்கு பாதுகாப்பாக, விஜய் முருகனின் நம்பிக்கைக்கு பாத்திரமான விக்ரம் பிரபு வருகிறார். மறுநாளே மீண்டும் மஞ்சிமாவுக்கு தொந்தரவு வர, அங்கு வரும் விக்ரம் பிரபு அவர்களை தெறிக்க விடுகிறார். அவரது தைரியத்தை பார்த்து மஞ்சிமாவுக்கு அவர் மீது காதல் வருகிறது. விக்ரம் பிரபு, மஞ்சிமா பின்னாலேயே அனைத்து இடங்களுக்கும் செல்கிறார். இந்நிலையில், ஒருநாள் தனது காதலை விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமா வெளிப்படுத்த, அவளது காதலுக்கு விக்ரம் பிரபு மறுப்பு தெரிவிக்கிறார்.

விடாது அவரை தனது வலையில் சிக்க வைக்கும் மஞ்சிமா, ரவுடி வாழ்க்கை வேண்டாம், நிம்மதியாக வேறு வாழக்கை வாழலாம் என அவருக்கு அறிவுரை கூற, மஞ்சிமாவின் அறிவுரையை கேட்டு விக்ரம் பிரபுவும் மஞ்சிமாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இந்நிலையில், இவர்களது காதல் மஞ்சிமாவின் வீட்டுக்கு தெரிய வந்து, அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விஜய் முருகனும் விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமாவை விட்டுவிட்டு வர அறிவுறுத்துகிறார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் தனது காதலில் துடிப்புடன் இருக்கிறார் விக்ரம் பிரபு. தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவன் இப்படி துரோகம் செய்துவிட்டானே என்று விக்ரம் பிரபுவை கொல்ல விஜய் முருகன் திட்டமிடுகிறார்.

இதுஒருபுறம் இருக்க அருள்தாஸின் ஆள் ஒருவரை கொன்றதற்காக, விக்ரம் பிரபுவை பழிவாங்க அருள் தாஸின் ஆட்கள் சுற்றித் திரிகின்றனர். இதையடுத்து இந்த பிரச்சனைகளில் இருந்து விக்ரம் பிரபு மீண்டாரா? மஞ்சிமா மோகனுடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை.
விக்ரம் பிரபு அவருக்கே உண்டான சாயலில் நடித்திருந்தாலும், ஆக்ரோஷம், அமைதி என மாறி மாறி நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளில் எப்போதும் போல மிரள வைக்கிறார். ரவுடியாக ஒரு பக்கத்தில் மிரட்டினாலும், காதல் காட்சிகளிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மஞ்சிமா மோகன் திருச்சி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். திரையில், குடும்பபாங்கான அழகான தேவதையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், பார்வையும் கவர்ந்து இழுக்கும்படியாக இருக்கிறது.
சரத் லோகிதஸ்வா அவருக்கே உண்டான சாயலில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அருள்தாஸ், ரவுடியாக படம் முழுவதும் வந்து மிரட்டியிருக்கிறார். ரவுடிக்குண்டான குணநலங்களுடன் ரசிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் போக்குக்கே காரணகர்த்தாவான போஸ்டர் நந்தகுமார் ஒரு அரசியல்வாதியாக மிரள வைக்கிறார். அரசியல்வாதிக்குண்டான கெத்துடன் படத்தின் ஓட்டத்திற்கு பக்கபலமாக வந்து செல்கிறார். அவரது முதிர்ச்சியான நடிப்பு ரசிகக்க வைக்கிறது. ஆர்.கே.விஜய் முருகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சவுந்தர்ராஜன் ஒரு பயங்கொள்ளியாக கதையின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கிறார். காட்சிக்கு பக்கபலமாக கவின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஐஸ்வர்யா தத்தாவிற்கு படத்தில் பேசும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. ரியோ ஒருசில இடங்களில் வந்து செல்கிறார். யோகிபாபுவையும் படத்தில் பயன்படுத்தவில்லை. ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வந்து செல்கிறார்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திருச்சியின் பின்புலத்தில் படத்தை உருவாகியிருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப்பட்டிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ஆக்ஷனுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். தாதாவாக ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து வாழ்வது தான் கெத்து என்ற எண்ணமே தவறு. கத்தி, சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை என்பதும் இருக்கிறது. அந்த வாழ்க்கையை வாழ்வது தான் சிறப்பு என்பதை உணர்த்தி இருக்கிறார். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக படத்தில் ரவுடிகள் பேசும் வசனங்கள் படத்திற்கு பலம்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் வரும் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. "பாறை மேல தூறல் போல" பாடல் ஈர்க்கும்படி இருக்கிறது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் திருச்சி ரம்மியமாக காட்டப்பட்டுள்ளது.
மொத்தத்தில் `சத்ரியன்' யாருக்கும் அஞ்சாதவன்.
ஒரு கட்டத்தில் சரத் லோகிதஸ்வாவின் வளர்ச்சி பிடிக்காத அமைச்சர் நந்தகுமார், அவரை கொல்ல திட்டம் தீட்டுகிறார். பின்னர் திருச்சியின் மற்றொரு ரவுடியான அருள் தாஸ் மூலமாக சரத் லோகிதஸ்வாவை கொன்று விடுகிறார். இதனால் சரத் லோகிதஸ்வா இடத்திற்கு அவருக்கு நெருக்கமான விஜய் முருகன் வருகிறார். விஜய் முருகனின் கீழ் அவரின் நம்பிக்கையான ரவுடியாக நாயகன் விக்ரம் பிரபு வருகிறார்.

சரத் லோகிதஸ்வாவை இழந்த அவரது குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் விஜய் முருகன் பார்த்துக் கொள்கிறார். இவ்வாறாக ஒரு நாள் கல்லூரிக்கு சென்ற மஞ்சிமா மோகனை சிலர் தொந்தரவு செய்கின்றனர். இந்த விஷயத்தை மஞ்சிமாவின் அம்மா விஜய் முருகனிடம் கூறுகிறாள்.
இதையடுத்து மஞ்சிமாவுக்கு பாதுகாப்பாக, விஜய் முருகனின் நம்பிக்கைக்கு பாத்திரமான விக்ரம் பிரபு வருகிறார். மறுநாளே மீண்டும் மஞ்சிமாவுக்கு தொந்தரவு வர, அங்கு வரும் விக்ரம் பிரபு அவர்களை தெறிக்க விடுகிறார். அவரது தைரியத்தை பார்த்து மஞ்சிமாவுக்கு அவர் மீது காதல் வருகிறது. விக்ரம் பிரபு, மஞ்சிமா பின்னாலேயே அனைத்து இடங்களுக்கும் செல்கிறார். இந்நிலையில், ஒருநாள் தனது காதலை விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமா வெளிப்படுத்த, அவளது காதலுக்கு விக்ரம் பிரபு மறுப்பு தெரிவிக்கிறார்.

விடாது அவரை தனது வலையில் சிக்க வைக்கும் மஞ்சிமா, ரவுடி வாழ்க்கை வேண்டாம், நிம்மதியாக வேறு வாழக்கை வாழலாம் என அவருக்கு அறிவுரை கூற, மஞ்சிமாவின் அறிவுரையை கேட்டு விக்ரம் பிரபுவும் மஞ்சிமாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இந்நிலையில், இவர்களது காதல் மஞ்சிமாவின் வீட்டுக்கு தெரிய வந்து, அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விஜய் முருகனும் விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமாவை விட்டுவிட்டு வர அறிவுறுத்துகிறார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் தனது காதலில் துடிப்புடன் இருக்கிறார் விக்ரம் பிரபு. தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவன் இப்படி துரோகம் செய்துவிட்டானே என்று விக்ரம் பிரபுவை கொல்ல விஜய் முருகன் திட்டமிடுகிறார்.

இதுஒருபுறம் இருக்க அருள்தாஸின் ஆள் ஒருவரை கொன்றதற்காக, விக்ரம் பிரபுவை பழிவாங்க அருள் தாஸின் ஆட்கள் சுற்றித் திரிகின்றனர். இதையடுத்து இந்த பிரச்சனைகளில் இருந்து விக்ரம் பிரபு மீண்டாரா? மஞ்சிமா மோகனுடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை.
விக்ரம் பிரபு அவருக்கே உண்டான சாயலில் நடித்திருந்தாலும், ஆக்ரோஷம், அமைதி என மாறி மாறி நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளில் எப்போதும் போல மிரள வைக்கிறார். ரவுடியாக ஒரு பக்கத்தில் மிரட்டினாலும், காதல் காட்சிகளிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மஞ்சிமா மோகன் திருச்சி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். திரையில், குடும்பபாங்கான அழகான தேவதையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், பார்வையும் கவர்ந்து இழுக்கும்படியாக இருக்கிறது.
சரத் லோகிதஸ்வா அவருக்கே உண்டான சாயலில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அருள்தாஸ், ரவுடியாக படம் முழுவதும் வந்து மிரட்டியிருக்கிறார். ரவுடிக்குண்டான குணநலங்களுடன் ரசிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் போக்குக்கே காரணகர்த்தாவான போஸ்டர் நந்தகுமார் ஒரு அரசியல்வாதியாக மிரள வைக்கிறார். அரசியல்வாதிக்குண்டான கெத்துடன் படத்தின் ஓட்டத்திற்கு பக்கபலமாக வந்து செல்கிறார். அவரது முதிர்ச்சியான நடிப்பு ரசிகக்க வைக்கிறது. ஆர்.கே.விஜய் முருகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சவுந்தர்ராஜன் ஒரு பயங்கொள்ளியாக கதையின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கிறார். காட்சிக்கு பக்கபலமாக கவின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஐஸ்வர்யா தத்தாவிற்கு படத்தில் பேசும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. ரியோ ஒருசில இடங்களில் வந்து செல்கிறார். யோகிபாபுவையும் படத்தில் பயன்படுத்தவில்லை. ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வந்து செல்கிறார்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திருச்சியின் பின்புலத்தில் படத்தை உருவாகியிருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப்பட்டிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ஆக்ஷனுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். தாதாவாக ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து வாழ்வது தான் கெத்து என்ற எண்ணமே தவறு. கத்தி, சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை என்பதும் இருக்கிறது. அந்த வாழ்க்கையை வாழ்வது தான் சிறப்பு என்பதை உணர்த்தி இருக்கிறார். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக படத்தில் ரவுடிகள் பேசும் வசனங்கள் படத்திற்கு பலம்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் வரும் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. "பாறை மேல தூறல் போல" பாடல் ஈர்க்கும்படி இருக்கிறது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் திருச்சி ரம்மியமாக காட்டப்பட்டுள்ளது.
மொத்தத்தில் `சத்ரியன்' யாருக்கும் அஞ்சாதவன்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - சானா மக்புல் நடிப்பில் உருவாகி இருக்கும் `ரங்கூன்'படத்தின் விமர்சனம்.
பர்மாவின் ரங்கூனில் வசித்து வரும் நாயகன் கவுதம் கார்த்திக், தனது நண்பர்கள் இரண்டு பேருடன் இந்தியாவுக்கு வருகிறார். சென்னை வரும் அவருக்கு, நண்பர் ஒருவர் மூலம் அடகு கடை நடத்திவரும் சித்திக்கின் அறிமுகம் கிடைக்க, அவருடைய கடையில் எடுபிடி வேலைக்கு சேர்கிறார்கள் மூவரும். நாளடைவில் கவுதமின் வேலை சித்திக்கு பிடித்துப் போகிறது. அதேநேரத்தில், ஒரு பிரச்சினையில் சித்திக்கின் மகளை கவுதம் காப்பாற்றுகிறார். அதேபோல், சித்திக்கின் உயிருக்கும் ஆபத்து வரும்போது அவரையும் கவுதம் காப்பாற்றுகிறார். இதனால், கவுதம் மீது சித்திக் வைத்திருந்த பாசம் மேலும் அதிகமாகிறது.
அந்த வேளையில் நாயகி சானா மாக்பல்லை பார்க்கும் கவுதமுக்கு அவள்மீது காதல் துளிர்விடுகிறது. ஆரம்பத்தில் கவுதமை கண்டுகொள்ளாத சானா, பின்னர் அவர் செய்யும் நல்ல விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, காதலிக்கத் தொடங்குகிறார். இந்நிலையில், தனக்கு பணக்கஷ்டம் இருப்பதால் தங்க கடத்தல் வேலையை செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கவுதமிடம் சித்திக் ஆலோசனை கூறுகிறார். கவுதமும் சித்திக்கின் ஆலோசனையை ஏற்று தங்க கடத்தல் வேலையை தொடங்குகிறார்.

ஆரம்பத்தில் சிறிது சிறிதாக தங்க கடத்தல் வேலைகளை செய்துவருகிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுடைய கடத்தல் தொழிலுக்கு போலீஸால் இடைஞ்சல் வரவே, பெரிய கடத்தல் ஒன்றை செய்துவிட்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட முடிவு செய்கிறார்கள். அதன்படி, நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டு பர்மா புறப்படுகிறார்கள். பர்மாவில் அந்த தங்கத்தை கைமாற்றிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பும் வேளையில் இவர்களது பணம் காணாமல் போகிறது.
பணம் காணாமல் போனதால் அனைவரும் செய்வதறியாது திகைக்கிறார்கள். அந்த பணம் எங்கே போனது? கடைசியில் அவர்களுக்கு அந்த பணம் கிடைத்ததா? பணத்தை திருடியவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கவுதம் கார்த்திக்கு ஏற்ற கதாபாத்திரம் என்பதால் நடிப்பில் தனது திறமையை நிரூபித்து காட்டியிருக்கிறார். அதேபோல், லோக்கல் பாஷை, அழுக்கு படிந்த முகம் என குப்பத்து இளைஞனாக மனதில் பதிகிறார். கவுதமின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் அவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
நாயகி சானா மக்பலுக்கு அறிமுக படமாக இருந்தாலும், தனக்கேற்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் கூடுதல் அழகாக தெரிகிறார். அடகு கடை அதிபராக நடித்திருக்கும் மலையாள நடிகர் சித்திக், அனுபவ நடிப்பை எதார்த்தமாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தங்க கடத்தல் பின்னணியில் வாழ்க்கையை தொலைத்துவிட்ட இளைஞர்களின் வாழ்வியலை படமாக கொடுத்திருக்கிறார். படத்திற்காக இவர் தேர்வு செய்த லொக்கேஷன்கள் எல்லாம் ரொம்பவும் அழகாக இருக்கிறது. படத்தில் அனைவரையும் அழகாக வேலை வாங்கியிருக்கிறார். அதை ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும்போதே தெரிகிறது.
அனிஸ் தருண்குமாரின் ஒளிப்பதிவில் ரங்கூனை ரொம்பவும் அழகாக காட்டியிருக்கிறார். இரவிலும், பகலிலும் ரங்கூனின் அழகை நமது கண்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு மேலும் மெருகூட்டியிருக்கிறது. விக்ரமின் இசையில் பாடல்களும் கேட்கும்படியாக இருக்கிறது. அன்பறிவு சண்டைக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
மொத்தத்தில் ‘ரங்கூன்’ ரசிக்கலாம்.
அந்த வேளையில் நாயகி சானா மாக்பல்லை பார்க்கும் கவுதமுக்கு அவள்மீது காதல் துளிர்விடுகிறது. ஆரம்பத்தில் கவுதமை கண்டுகொள்ளாத சானா, பின்னர் அவர் செய்யும் நல்ல விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, காதலிக்கத் தொடங்குகிறார். இந்நிலையில், தனக்கு பணக்கஷ்டம் இருப்பதால் தங்க கடத்தல் வேலையை செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கவுதமிடம் சித்திக் ஆலோசனை கூறுகிறார். கவுதமும் சித்திக்கின் ஆலோசனையை ஏற்று தங்க கடத்தல் வேலையை தொடங்குகிறார்.

ஆரம்பத்தில் சிறிது சிறிதாக தங்க கடத்தல் வேலைகளை செய்துவருகிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுடைய கடத்தல் தொழிலுக்கு போலீஸால் இடைஞ்சல் வரவே, பெரிய கடத்தல் ஒன்றை செய்துவிட்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட முடிவு செய்கிறார்கள். அதன்படி, நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டு பர்மா புறப்படுகிறார்கள். பர்மாவில் அந்த தங்கத்தை கைமாற்றிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பும் வேளையில் இவர்களது பணம் காணாமல் போகிறது.
பணம் காணாமல் போனதால் அனைவரும் செய்வதறியாது திகைக்கிறார்கள். அந்த பணம் எங்கே போனது? கடைசியில் அவர்களுக்கு அந்த பணம் கிடைத்ததா? பணத்தை திருடியவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கவுதம் கார்த்திக்கு ஏற்ற கதாபாத்திரம் என்பதால் நடிப்பில் தனது திறமையை நிரூபித்து காட்டியிருக்கிறார். அதேபோல், லோக்கல் பாஷை, அழுக்கு படிந்த முகம் என குப்பத்து இளைஞனாக மனதில் பதிகிறார். கவுதமின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் அவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
நாயகி சானா மக்பலுக்கு அறிமுக படமாக இருந்தாலும், தனக்கேற்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் கூடுதல் அழகாக தெரிகிறார். அடகு கடை அதிபராக நடித்திருக்கும் மலையாள நடிகர் சித்திக், அனுபவ நடிப்பை எதார்த்தமாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தங்க கடத்தல் பின்னணியில் வாழ்க்கையை தொலைத்துவிட்ட இளைஞர்களின் வாழ்வியலை படமாக கொடுத்திருக்கிறார். படத்திற்காக இவர் தேர்வு செய்த லொக்கேஷன்கள் எல்லாம் ரொம்பவும் அழகாக இருக்கிறது. படத்தில் அனைவரையும் அழகாக வேலை வாங்கியிருக்கிறார். அதை ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும்போதே தெரிகிறது.
அனிஸ் தருண்குமாரின் ஒளிப்பதிவில் ரங்கூனை ரொம்பவும் அழகாக காட்டியிருக்கிறார். இரவிலும், பகலிலும் ரங்கூனின் அழகை நமது கண்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு மேலும் மெருகூட்டியிருக்கிறது. விக்ரமின் இசையில் பாடல்களும் கேட்கும்படியாக இருக்கிறது. அன்பறிவு சண்டைக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
மொத்தத்தில் ‘ரங்கூன்’ ரசிக்கலாம்.
நிரஞ்சன் இயக்கத்தில் அவரும், காயத்ரியும் இணைந்து நடித்திருக்கும் நீதான் ராஜா படத்தின் விமர்சனம்.
நாயகன் நிரஞ்சன் தனது நண்பனை பார்ப்பதற்காக ஒரு கிராமத்துக்கு வருகிறார். தன்னுடைய தங்கையை எப்படியாவது டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். இந்நிலையில், தன்னுடைய நண்பன் மூலம் நாயகியின் அறிமுகம் கிடைக்கிறது. நாயகி காயத்ரி அந்த ஊரில் ஆசிரமம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.
அந்த ஆசிரமத்தை கைப்பற்றுவதற்கு, அந்த ஊரில் வசிக்கும் செல்வந்தரான காக்கா ஆசைப்படுகிறார். இதனால், நாயகிக்கும் ஆசிரமத்திற்கும் பல்வேறு இடைஞ்சல்களை கொடுக்கிறார். இதையெல்லாம் நாயகனிடம் முறையிடுகிறாள் நாயகி. ஆனால், நாயகனோ அவளது பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாததுபோல் நடந்து கொள்கிறார். இதனால் நாயகன் மீது நாயகிக்கு வெறுப்பு வருகிறது.

ஆனால், மறுநாள் ஆசிரமத்தை தாக்க வரும் காக்காவின் ஆட்கள் அனைவரையும் நாயகன் அடித்து துவம்சம் செய்கிறார். அதன்பிறகு, ஆசிரமத்தை தாக்க சொன்ன காக்காவை தேடி அவரது வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்றதும், காக்காவின் அண்ணன் நாயகனை முன்பே சந்தித்ததுபோல் கூப்பிட்டு தன்னுடன் அழைத்து செல்கிறார்.
பிறகு நாயகன் அவர்களிடமே வேலைக்கு சேர்கிறார். இது நாயகிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. காக்காவிடம் நல்ல பிள்ளையாக நடந்துகொள்ளும் நாயகன், நாயகியிடமிருந்து ஆசிரமத்தை கைப்பற்றி அவர்களிடம் ஒப்படைப்பதாக கூறிவிட்டு செல்கிறார்.

அதன்பிறகு உண்மையில் என்ன நடந்தது? நாயகன் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்? என்ன காரணத்திற்காக அவர் இந்த கிராமத்திற்கு வந்தார்? அவருடைய தங்கையை மருத்துவ படிப்பு படிக்க வைக்கவேண்டும் என்று அவரது நினைவில் அடிக்கடி வருவதன் காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனான நிரஞ்சனே இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். பார்ப்பதற்கு ஹீரோவுக்குண்டான தோற்றம் இருந்தாலும், நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பான அறிமுகமாக இருந்திருக்கும். நீதான் ராஜா என்ற தலைப்பிற்கு ஏற்ப, படத்தில் இவரே ராஜாவாக வலம்வர முயற்சி செய்திருக்கிறார். அதற்காக படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் இவரை புகழ்பாடுவதாகவே அமைத்திருப்பது வெறுப்பைத்தான் வரவழைத்திருக்கிறது. அதேபோல், படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் கோர்வை இல்லாமல் தனித்தனியாக கொடுத்திருப்பது படத்தை பார்ப்பதற்கே தடையாக நிற்கிறது.

நாயகி காயத்ரி ஒருசில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார். அதேபோல் நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் லீமா செண்டிமெண்ட் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து நடித்திருக்கலாம். நாயகனின் நண்பனாக வரும் ரவிசாந்த் நிறைய படங்களில் பார்த்த முகம்தான். நடிப்பில் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். காக்காவாக நடித்திருப்பவர் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அதேபோல், அவருடைய அண்ணனாக வருபவரும் ஆரம்பத்தில் மென்மையானவராகவும், பிறகு மிரட்டலாகவும் வந்து கவர்கிறார்.
தஷியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் பெரிதாக மிரட்டல் இல்லை. தினேஷின் ஒளிப்பதிவும் பாராட்டும்படியாக இல்லை.
மொத்தத்தில் ‘நீதான் ராஜா’ முடிசூடவில்லை.
அந்த ஆசிரமத்தை கைப்பற்றுவதற்கு, அந்த ஊரில் வசிக்கும் செல்வந்தரான காக்கா ஆசைப்படுகிறார். இதனால், நாயகிக்கும் ஆசிரமத்திற்கும் பல்வேறு இடைஞ்சல்களை கொடுக்கிறார். இதையெல்லாம் நாயகனிடம் முறையிடுகிறாள் நாயகி. ஆனால், நாயகனோ அவளது பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாததுபோல் நடந்து கொள்கிறார். இதனால் நாயகன் மீது நாயகிக்கு வெறுப்பு வருகிறது.

ஆனால், மறுநாள் ஆசிரமத்தை தாக்க வரும் காக்காவின் ஆட்கள் அனைவரையும் நாயகன் அடித்து துவம்சம் செய்கிறார். அதன்பிறகு, ஆசிரமத்தை தாக்க சொன்ன காக்காவை தேடி அவரது வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்றதும், காக்காவின் அண்ணன் நாயகனை முன்பே சந்தித்ததுபோல் கூப்பிட்டு தன்னுடன் அழைத்து செல்கிறார்.
பிறகு நாயகன் அவர்களிடமே வேலைக்கு சேர்கிறார். இது நாயகிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. காக்காவிடம் நல்ல பிள்ளையாக நடந்துகொள்ளும் நாயகன், நாயகியிடமிருந்து ஆசிரமத்தை கைப்பற்றி அவர்களிடம் ஒப்படைப்பதாக கூறிவிட்டு செல்கிறார்.

அதன்பிறகு உண்மையில் என்ன நடந்தது? நாயகன் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்? என்ன காரணத்திற்காக அவர் இந்த கிராமத்திற்கு வந்தார்? அவருடைய தங்கையை மருத்துவ படிப்பு படிக்க வைக்கவேண்டும் என்று அவரது நினைவில் அடிக்கடி வருவதன் காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனான நிரஞ்சனே இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். பார்ப்பதற்கு ஹீரோவுக்குண்டான தோற்றம் இருந்தாலும், நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பான அறிமுகமாக இருந்திருக்கும். நீதான் ராஜா என்ற தலைப்பிற்கு ஏற்ப, படத்தில் இவரே ராஜாவாக வலம்வர முயற்சி செய்திருக்கிறார். அதற்காக படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் இவரை புகழ்பாடுவதாகவே அமைத்திருப்பது வெறுப்பைத்தான் வரவழைத்திருக்கிறது. அதேபோல், படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் கோர்வை இல்லாமல் தனித்தனியாக கொடுத்திருப்பது படத்தை பார்ப்பதற்கே தடையாக நிற்கிறது.

நாயகி காயத்ரி ஒருசில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார். அதேபோல் நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் லீமா செண்டிமெண்ட் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து நடித்திருக்கலாம். நாயகனின் நண்பனாக வரும் ரவிசாந்த் நிறைய படங்களில் பார்த்த முகம்தான். நடிப்பில் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். காக்காவாக நடித்திருப்பவர் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அதேபோல், அவருடைய அண்ணனாக வருபவரும் ஆரம்பத்தில் மென்மையானவராகவும், பிறகு மிரட்டலாகவும் வந்து கவர்கிறார்.
தஷியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் பெரிதாக மிரட்டல் இல்லை. தினேஷின் ஒளிப்பதிவும் பாராட்டும்படியாக இல்லை.
மொத்தத்தில் ‘நீதான் ராஜா’ முடிசூடவில்லை.






