search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிதி"

    • இதை பார்த்த ரசிகர்கள், நண்பர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்
    • "வாழ்நாள் முழுவதும் திருமண ஜோடிகள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்' என்று தெரிவித்து உள்ளார்.

    நடிகர் சித்தார்த் 'ஆயுத எழுத்து' படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பாய்ஸ், அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்து முக்கிய நடிகரானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'சித்தா' படம் ரசிகர்களிட நல்ல வரவேற்பு பெற்றது.

    இந்நிலையில் நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ்வை காதலித்து வந்தார். இவர் செக்க சிவந்த வானம், காற்று வெளியிடை, சைக்கோ போன்ற தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.

    இந்நிலையில் சித்தார்த்தும், அதிதி ராவும் தெலுங்கானாவில் ஒரு கோவிலில் ரகசிய திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது திருமணம் அல்ல, நிச்சயதார்த்தம் என்று இருவரும் பதில் அளித்து உள்ளனர். இது வைரலாக பரவியது.

    இதை பார்த்த ரசிகர்கள், நண்பர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவும் சித்தார்த்- அதிதி ஜோடிக்கு இணைய தளத்தில் வாழ்த்துக்கள் கூறி உள்ளார். அதில் "வாழ்நாள் முழுவதும் திருமண ஜோடிகள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்' மனமாற வாழ்த்துக்கள் என்று தெரிவித்து உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இறுதிச்சுற்றில் பிரியன்ஷ், அல்ஜாஷ் பிரென்க் என்ற வீரரை வீழ்த்தினார்.
    • இந்தியா இதுவரை 5 தங்கம் உள்பட 9 பதக்கங்களை வென்றுள்ளது.

    லிமரிக்:

    அயர்லாந்தில் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், 21 வயதிற்குட்பட்டோருக்கான காம்பவுண்டு வில்வித்தை போட்டியில், இந்தியாவின் பிரியன்ஷ், சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இவர் இறுதிச்சுற்றில் ஸ்லோவேனியாவைச் சேர்ந்த அல்ஜாஷ் பிரென்க் என்ற வீரரை 147-141 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

    முன்னதாக 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் ஸ்வாமி காம்பவுண்டு பிரிவில் அமெரிக்காவின் லீன் டிரேக்கை 142-136 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.

    இதன்மூலம்  இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 தங்கம் அடங்கும்

    • முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் வெளியான படம் விருமன்.
    • இப்படத்தில் இடம்பெற்ற 'கஞ்சா பூ கண்ணால' பாடல் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது.

    நடிகர் கார்த்தி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் விருமன். இந்த படத்தில் 'கஞ்சா பூ கண்ணால' என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இளைஞர்கள் அதிகம் பேர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலையில், கஞ்சாவை மையப்படுத்தி பாடல் வரிகள் இடம் பெறலாமா என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.

     

    விருமன்

    விருமன்

    இந்த நிலையில், 'கஞ்சா பூ கண்ணால' பாடல் வரிகளுக்காக தான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக பாடலை எழுதிய பாடலாசிரியர் மணிமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, மயக்கும் தன்மைக்காக பெண்ணின் கண்களை கஞ்சா பூவுடன் ஒப்பிட்டதாகவும், கஞ்சாவுடன் ஒப்பிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.

     

    பாடலாசிரியர் மணிமாறன்

    பாடலாசிரியர் மணிமாறன்

    மேலும், பாடலின் வரிகள் கற்பனைக்காக உவமைப்படுத்தப்பட்டது என்று கூறிய அவர், தான் எழுதியது தவறான வார்த்தைதான் என்றும் கூறினார். இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் வெளியான படம் விருமன்.
    • இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் அதிதி.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அதிதி அறிமுகமாகியுள்ளார். விருமன் படத்தில் அதிதியின் நடிப்பு மற்றும் நடனத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். 'முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

     

    அதிதி

    அதிதி

    அதிதி, அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஷங்கரின் மகள் என்பதாலேயே அவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என விமர்சனங்கள் எழுந்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகை ஆத்மிகா மறைமுகமாக இதுகுறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

    அதிதி

    அதிதி

     

    இந்த விமர்சனங்களுக்கெல்லாம் அதிதி பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "என் அப்பாவால் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் திறமை இல்லாவிட்டால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காது. ரசிகர்கள் ஆதரிக்க மாட்டார்கள். இந்தத் துறையில் நிலைத்து நிற்க முடியாது. வாரிசு அந்தஸ்து இல்லை, மாறாக திறமைதான் கை கொடுக்கும்". என்று அவர் கூறியுள்ளார்.இவரின் இந்த கருத்துக்கு பலரின் ஆதரவு கிடைத்து வருகிறது.

    ×