search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "adhithi"

    • முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் வெளியான படம் விருமன்.
    • இப்படத்தில் இடம்பெற்ற 'கஞ்சா பூ கண்ணால' பாடல் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது.

    நடிகர் கார்த்தி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் விருமன். இந்த படத்தில் 'கஞ்சா பூ கண்ணால' என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இளைஞர்கள் அதிகம் பேர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலையில், கஞ்சாவை மையப்படுத்தி பாடல் வரிகள் இடம் பெறலாமா என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.

     

    விருமன்

    விருமன்

    இந்த நிலையில், 'கஞ்சா பூ கண்ணால' பாடல் வரிகளுக்காக தான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக பாடலை எழுதிய பாடலாசிரியர் மணிமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, மயக்கும் தன்மைக்காக பெண்ணின் கண்களை கஞ்சா பூவுடன் ஒப்பிட்டதாகவும், கஞ்சாவுடன் ஒப்பிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.

     

    பாடலாசிரியர் மணிமாறன்

    பாடலாசிரியர் மணிமாறன்

    மேலும், பாடலின் வரிகள் கற்பனைக்காக உவமைப்படுத்தப்பட்டது என்று கூறிய அவர், தான் எழுதியது தவறான வார்த்தைதான் என்றும் கூறினார். இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் வெளியான படம் விருமன்.
    • இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் அதிதி.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அதிதி அறிமுகமாகியுள்ளார். விருமன் படத்தில் அதிதியின் நடிப்பு மற்றும் நடனத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். 'முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

     

    அதிதி

    அதிதி

    அதிதி, அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஷங்கரின் மகள் என்பதாலேயே அவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என விமர்சனங்கள் எழுந்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகை ஆத்மிகா மறைமுகமாக இதுகுறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

    அதிதி

    அதிதி

     

    இந்த விமர்சனங்களுக்கெல்லாம் அதிதி பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "என் அப்பாவால் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் திறமை இல்லாவிட்டால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காது. ரசிகர்கள் ஆதரிக்க மாட்டார்கள். இந்தத் துறையில் நிலைத்து நிற்க முடியாது. வாரிசு அந்தஸ்து இல்லை, மாறாக திறமைதான் கை கொடுக்கும்". என்று அவர் கூறியுள்ளார்.இவரின் இந்த கருத்துக்கு பலரின் ஆதரவு கிடைத்து வருகிறது.

    ×