என் மலர்
தரவரிசை
ஜான் வாட்ஸ் இயக்கத்தில் டாம் ஹாலண்டு, ராபர்ட் டவுனி, மைக்கேல் ஹீட்டன் நடிப்பில் உருவாகியிருக்கும் `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' படத்தின் விமர்சனம்.
கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்தில் ஒரு முக்கிய காட்சியில் பீட்டர் பார்க்கர் எனப்படும் ஸ்பைடர் மேன் பங்கேற்றிருப்பார். அதில் அவெஞ்சர்கள் எனப்படும் சூப்பர் ஹீரோசுடன் இணைந்து பல்வேறு சாதனைகளை படைத்திருந்தார் என்பது நாம் அறிந்ததே. அந்த படத்தின் தொடர்ச்சியாக `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' உருவாகியிருக்கிறது.
அந்த சாதனைக்கு பிறகு அடுத்த வேலை வரும் வரை மக்களோடு மக்களாக வாழும் படி அறிவுறுத்துகிறார் ஐயர்ன் மேன் எனப்படும் ராபர்ட் டவுனி. இதையடுத்து, பள்ளி செல்லும் பீட்டர் பார்க்கர் மீண்டும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது திருட்டு உள்ளிட்ட சிறிய குற்றங்கள் செய்பவர்களை போலீசில் மாட்டிவிடுகிறார். அப்போது அவர்களிடம் அதிபயங்கரமான ஆயுதங்கள் இருப்பதையும் பார்க்கிறார்.

இதையடுத்து, அந்த ஆயுதங்களை அவர்களுக்கு சப்ளை செய்வது யார் என்பதை கண்டுபடிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். இதனை ஐயர் மேனிடம் சொல்கிறார். ஆனால் ஸ்பைடர் மேனின் பேச்சை ஐயர்ன் மேன் பொருட்படுத்தாததால், அந்த ஆயுதங்கள் சப்ளை செய்பவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்குகிறார் பீட்டர் பார்க்கர்.
அப்போது, அந்த ஆயுதங்களை கைமாற்றும் கும்பல் கப்பலில் இருப்பதாக கிடைக்கும் தகவலை அடுத்து, அவர்களை பிடிக்க ஸ்பைடர் மேன் அந்த கப்பலுக்கு செல்கிறார். அப்போது, ஸ்பைடர் மேன் மீது நடத்தப்படும் தாக்குதலில், அந்த கப்பல் இரண்டாக உடையும் நிலை ஏற்படுகிறது. இதையடுத்து தனது சக்தியின் மூலம் அந்த கப்பலை மீண்டும் ஒட்ட வைக்க முயற்சிக்கிறார். இதையடுத்து அங்கு வந்த ஐயர்ன் மேன், இரண்டாக பிளந்த கப்பலை ஒன்றிணைத்து, அதில் இருந்த மக்களையும் காப்பாற்றுகிறார்.

ஆனால் தனது பேச்சை கேட்காமல், அதிகப்பிரசங்கித்தனமாக ஈடுபடுவதால், தான் கொடுத்த ஸ்பைடர் மேன் சிறப்பு சூட்டை அவரிடமிருந்து ஐயர்ன் மேன் திரும்பப் பெற்று விடுகிறார். மேலும் பீட்டர் பார்க்கரை அவரது குழுவில் இருந்தும் நீக்கி விடுகிறார். அதுவே உனது அதிகப்பிரங்கித்தனத்துக்கான தண்டனை என்றும் கூறிவிடுகிறார்.
ஸ்பைடர் மேன் சூட் இல்லாமல், கடத்தல் கும்பலை எப்படி முறியடித்தார்? அவருக்கு மீண்டும் சூட் கிடைத்ததா? அவஞ்சர்ஸ் குழுவில் இடம்பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

முந்தைய பாகங்களில் நடித்திருந்த ஸ்பைடர் மேன் போல, இந்த பாகத்தில் நடித்திருக்கும் டாம் ஹோலண்டும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பள்ளி செல்லும் ஒரு இளைஞனுக்கு உண்டான துடிப்புடனும், காதல், சண்டை, நகைச்சுவை என அனைத்து பரிணாமங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
ஐயர்ன் மேனாக வரும் ராபர்ட் டவுனி எப்போதும் போல ஒரு சூப்பர் ஹீரோவுக்கு உண்டான கெத்துடன் வந்து செல்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு முக்கியமானதாக அமைகிறது. முன்னாள் பேட்மேனான மைக்கேல் கீட்டன் வில்லனாக நடித்திருப்பது படத்திற்கு ப்ளஸ். ஜேக்கப் பேட்டலான் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. முக்கியமான காட்சியிலும் காமெடி செய்து சிரிக்க வைக்கும் ஜேக்கப்பின் கதாபாத்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. மற்றபடி ஜான் பேவ்ரியூ, செண்டயா, டொனால்டு க்ளோவர், டைன் டேலி உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

சூப்பர் ஹீரோக்கள் படங்களிலேயே ஸ்பைர் மேன் பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் சூப்பர் ஹீரோக்களை வைத்து வந்து கொண்டிருக்கும் படங்களில், ஏலிகன்களின் வருகையால் ஏற்பட்ட பிரச்சனையால் கிளம்பும் புதிய பிரச்சனையை ஸ்பைடர் மேன் எப்படி முறியடிக்கிறார் என்பதை திரைக்கதையில் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். சூப்பர் ஹீரோ படங்கள் பெரும்பாலும் அதிகளில் சீரியசாக இருக்கும் நிலையில், இந்த படம் ரசிகர்களை பெருமளவில் சிரிக்க வைப்பது சிறப்பு. குறிப்பாக தமிழ் டப்பிங்கும், அதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள வசனங்களும் ரசிக்கும் படி இருக்கிறது.
மைக்கேல் ஜியேசினோவின் இசை படத்திற்கு கூடுதல் பலம். சால்வடோர் டோடினோவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.
மொத்தத்தில் `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' காமெடி சீரியஸ்
அந்த சாதனைக்கு பிறகு அடுத்த வேலை வரும் வரை மக்களோடு மக்களாக வாழும் படி அறிவுறுத்துகிறார் ஐயர்ன் மேன் எனப்படும் ராபர்ட் டவுனி. இதையடுத்து, பள்ளி செல்லும் பீட்டர் பார்க்கர் மீண்டும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது திருட்டு உள்ளிட்ட சிறிய குற்றங்கள் செய்பவர்களை போலீசில் மாட்டிவிடுகிறார். அப்போது அவர்களிடம் அதிபயங்கரமான ஆயுதங்கள் இருப்பதையும் பார்க்கிறார்.

இதையடுத்து, அந்த ஆயுதங்களை அவர்களுக்கு சப்ளை செய்வது யார் என்பதை கண்டுபடிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். இதனை ஐயர் மேனிடம் சொல்கிறார். ஆனால் ஸ்பைடர் மேனின் பேச்சை ஐயர்ன் மேன் பொருட்படுத்தாததால், அந்த ஆயுதங்கள் சப்ளை செய்பவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்குகிறார் பீட்டர் பார்க்கர்.
அப்போது, அந்த ஆயுதங்களை கைமாற்றும் கும்பல் கப்பலில் இருப்பதாக கிடைக்கும் தகவலை அடுத்து, அவர்களை பிடிக்க ஸ்பைடர் மேன் அந்த கப்பலுக்கு செல்கிறார். அப்போது, ஸ்பைடர் மேன் மீது நடத்தப்படும் தாக்குதலில், அந்த கப்பல் இரண்டாக உடையும் நிலை ஏற்படுகிறது. இதையடுத்து தனது சக்தியின் மூலம் அந்த கப்பலை மீண்டும் ஒட்ட வைக்க முயற்சிக்கிறார். இதையடுத்து அங்கு வந்த ஐயர்ன் மேன், இரண்டாக பிளந்த கப்பலை ஒன்றிணைத்து, அதில் இருந்த மக்களையும் காப்பாற்றுகிறார்.

ஆனால் தனது பேச்சை கேட்காமல், அதிகப்பிரசங்கித்தனமாக ஈடுபடுவதால், தான் கொடுத்த ஸ்பைடர் மேன் சிறப்பு சூட்டை அவரிடமிருந்து ஐயர்ன் மேன் திரும்பப் பெற்று விடுகிறார். மேலும் பீட்டர் பார்க்கரை அவரது குழுவில் இருந்தும் நீக்கி விடுகிறார். அதுவே உனது அதிகப்பிரங்கித்தனத்துக்கான தண்டனை என்றும் கூறிவிடுகிறார்.
ஸ்பைடர் மேன் சூட் இல்லாமல், கடத்தல் கும்பலை எப்படி முறியடித்தார்? அவருக்கு மீண்டும் சூட் கிடைத்ததா? அவஞ்சர்ஸ் குழுவில் இடம்பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

முந்தைய பாகங்களில் நடித்திருந்த ஸ்பைடர் மேன் போல, இந்த பாகத்தில் நடித்திருக்கும் டாம் ஹோலண்டும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பள்ளி செல்லும் ஒரு இளைஞனுக்கு உண்டான துடிப்புடனும், காதல், சண்டை, நகைச்சுவை என அனைத்து பரிணாமங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
ஐயர்ன் மேனாக வரும் ராபர்ட் டவுனி எப்போதும் போல ஒரு சூப்பர் ஹீரோவுக்கு உண்டான கெத்துடன் வந்து செல்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு முக்கியமானதாக அமைகிறது. முன்னாள் பேட்மேனான மைக்கேல் கீட்டன் வில்லனாக நடித்திருப்பது படத்திற்கு ப்ளஸ். ஜேக்கப் பேட்டலான் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. முக்கியமான காட்சியிலும் காமெடி செய்து சிரிக்க வைக்கும் ஜேக்கப்பின் கதாபாத்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. மற்றபடி ஜான் பேவ்ரியூ, செண்டயா, டொனால்டு க்ளோவர், டைன் டேலி உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

சூப்பர் ஹீரோக்கள் படங்களிலேயே ஸ்பைர் மேன் பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் சூப்பர் ஹீரோக்களை வைத்து வந்து கொண்டிருக்கும் படங்களில், ஏலிகன்களின் வருகையால் ஏற்பட்ட பிரச்சனையால் கிளம்பும் புதிய பிரச்சனையை ஸ்பைடர் மேன் எப்படி முறியடிக்கிறார் என்பதை திரைக்கதையில் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். சூப்பர் ஹீரோ படங்கள் பெரும்பாலும் அதிகளில் சீரியசாக இருக்கும் நிலையில், இந்த படம் ரசிகர்களை பெருமளவில் சிரிக்க வைப்பது சிறப்பு. குறிப்பாக தமிழ் டப்பிங்கும், அதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள வசனங்களும் ரசிக்கும் படி இருக்கிறது.
மைக்கேல் ஜியேசினோவின் இசை படத்திற்கு கூடுதல் பலம். சால்வடோர் டோடினோவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.
மொத்தத்தில் `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' காமெடி சீரியஸ்
ரவி உதயவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி - அத்னான் சித்திக் - சாஜல் அலி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள `மாம்' படத்தின் விமர்சனம்.
டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகிறார் ஸ்ரீதேவி. அத்னான் சித்திக் ஸ்ரீதேவியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். இதில் முதல் மனைவிக்கு பிறந்த மகள் தான் சாஜல் அலி. சாஜலும் ஸ்ரீதேவி வேலை பார்க்கும் பள்ளியிலேயே படிக்கிறாள். ஸ்ரீதேவிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். எனினும் சாஜல் அலியை, தன் மகளாக பார்க்கிறார் ஸ்ரீதேவி. ஆனால் ஸ்ரீதேவியை அம்மாவாக ஏற்றுக் கொள்ள சாஜல் அலி மறுக்கிறாள். மாறாக ஸ்ரீதேவியை மேம் என்றே அழைக்கிறாள்.
இவ்வாறாக நாட்கள் மெல்ல கடந்து செல்ல, தன்னுடன் படிக்கும் தோழியின் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க சாஜல் அலி செல்கிறாள். இந்நேரம் பார்த்து வேலை விஷயமாக அத்னான் சித்திக் வெளியூர் சென்று விடுகிறார். இரவு வெகு நேரமாகியும் சாஜல் வராததால் ஸ்ரீதேவி நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்க்க, சாஜல் அங்கு இல்லை. சாஜலுடன் படிக்கும் சக மாணவன், அவனது நண்பர்கள் இணைந்து சாஜலை கடத்திக் கொண்டு போய் கற்பழித்து விடுகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நவாசுதீன் சித்திக் வருகிறார். அவரது பிரயாசையின் பேரில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார். சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றாவாளிகள் அனைவரும் இந்த வழக்கில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.
தன்னை இந்த நிலைமைக்கு ஆழ்த்தியவர்களுக்கு தண்டனை வாங்கித் தர முடியவில்லையே என்று சாஜல் மனக் கஷ்டத்தில் குமுறுகிறாள். மகளின் இந்த நிலைமையை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்ரீதேவி, குற்றவாளிகளை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறாள். அதன்படி துப்பறிவாளரான அக்ஷய் கண்ணாவின் உதவியுடன், குற்றவாளிகளை ஸ்ரீதேவி எப்படி பழிவாங்குகிறார்? எந்த மாதிரியான அவர்களுக்கு தண்டனை வழங்கினார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? சாஜல் அலி, ஸ்ரீதேவியை அம்மாவாக ஏற்றுக் கொண்டாளா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஒரு தாயாகவே வாழ்ந்திருக்கிறார் ஸ்ரீதேவி. பள்ளியில் ஆசிரியராகவும், வீட்டில் அம்மா, மனைவி என ஒரு குடும்ப பெண்ணாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது மகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பழிவாங்குவதிலும், அதற்கான முடிவுகளை எடுப்பதிலும் ஸ்ரீதேவியின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.
பாகிஸ்தானின் பிரபல நடிகரான அத்னான் சித்திக் ஒரு தந்தையாக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் ஓட்டத்திற்கே அச்சாணியான சாஜல் அலி, ஸ்ரீதேவியை எதிர்க்கும் மகளாகவும், தனக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தால் மனம் குறுகி கஷ்டப்படுவதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பாகிஸ்தானச் சேர்ந்த இவரை திரையில் பார்க்க ரசிக்கும்படி இருக்கிறது.

நவாசுதீன் சித்திக் ஒரு போலீஸ் அதிகாரியாக, தான் செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்கிறார். அதேநேரத்தில் குற்றாவாளிகளை கண்டுபிடிப்பதிலும், அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும் அவர் எடுக்கும் முயற்சியும் சிறப்பாக உள்ளது. அக்ஷய் கண்ணா படத்தின் போக்குக்கு ஏற்ப வந்து சென்றாலும், அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக அவரது வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன காலத்தில், பெண்கள் சுதந்திரமாக வெளியில் சுற்றி வருவது அவர்களுக்கு பாதுகாப்பாக அமையாது. எந்த நேரத்திலும் பெண்கள் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் சந்தர்பங்கள் உருவாகலாம். இவ்வாறு பெண்களுக்கு இளைக்கப்படும் குற்றச் செயல்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி குற்றவாளிகளை தப்பிக்க விடக்கூடாது. மேலும் அத்தகைய நபர்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண் குற்றச் செயலுக்கு ஆளாக்கப்பட்டால், அந்த குடும்பம் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கும். அந்த பெண்ணின் குடும்பத்தார் எந்தளவுக்கு பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்பதை படத்தின் மூலமாக விளக்கியிருக்கும் ரவி உதயவாரின் முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால் படத்தை பார்க்க, ஒரு ஆவணப்படத்தை பார்த்த அனுபவமே இருக்கிறது. அந்தளவுக்கு படத்தின் திரைக்கதை மெல்ல செல்கிறது. மற்றபடி படம் ஒரு நல்ல செய்தியை எடுத்துரைக்கிறது.
இவ்வாறாக மெதுவாக நகரும் திரைக்கதையை ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பார்க்கும் போது, பொறுமையாக பார்க்க முடிகிறது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். அனய் கோஸ்வாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் `மாம்' பொறுமையானவள்.
இவ்வாறாக நாட்கள் மெல்ல கடந்து செல்ல, தன்னுடன் படிக்கும் தோழியின் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க சாஜல் அலி செல்கிறாள். இந்நேரம் பார்த்து வேலை விஷயமாக அத்னான் சித்திக் வெளியூர் சென்று விடுகிறார். இரவு வெகு நேரமாகியும் சாஜல் வராததால் ஸ்ரீதேவி நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்க்க, சாஜல் அங்கு இல்லை. சாஜலுடன் படிக்கும் சக மாணவன், அவனது நண்பர்கள் இணைந்து சாஜலை கடத்திக் கொண்டு போய் கற்பழித்து விடுகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நவாசுதீன் சித்திக் வருகிறார். அவரது பிரயாசையின் பேரில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார். சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றாவாளிகள் அனைவரும் இந்த வழக்கில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.
தன்னை இந்த நிலைமைக்கு ஆழ்த்தியவர்களுக்கு தண்டனை வாங்கித் தர முடியவில்லையே என்று சாஜல் மனக் கஷ்டத்தில் குமுறுகிறாள். மகளின் இந்த நிலைமையை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்ரீதேவி, குற்றவாளிகளை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறாள். அதன்படி துப்பறிவாளரான அக்ஷய் கண்ணாவின் உதவியுடன், குற்றவாளிகளை ஸ்ரீதேவி எப்படி பழிவாங்குகிறார்? எந்த மாதிரியான அவர்களுக்கு தண்டனை வழங்கினார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? சாஜல் அலி, ஸ்ரீதேவியை அம்மாவாக ஏற்றுக் கொண்டாளா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஒரு தாயாகவே வாழ்ந்திருக்கிறார் ஸ்ரீதேவி. பள்ளியில் ஆசிரியராகவும், வீட்டில் அம்மா, மனைவி என ஒரு குடும்ப பெண்ணாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது மகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பழிவாங்குவதிலும், அதற்கான முடிவுகளை எடுப்பதிலும் ஸ்ரீதேவியின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.
பாகிஸ்தானின் பிரபல நடிகரான அத்னான் சித்திக் ஒரு தந்தையாக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் ஓட்டத்திற்கே அச்சாணியான சாஜல் அலி, ஸ்ரீதேவியை எதிர்க்கும் மகளாகவும், தனக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தால் மனம் குறுகி கஷ்டப்படுவதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பாகிஸ்தானச் சேர்ந்த இவரை திரையில் பார்க்க ரசிக்கும்படி இருக்கிறது.

நவாசுதீன் சித்திக் ஒரு போலீஸ் அதிகாரியாக, தான் செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்கிறார். அதேநேரத்தில் குற்றாவாளிகளை கண்டுபிடிப்பதிலும், அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும் அவர் எடுக்கும் முயற்சியும் சிறப்பாக உள்ளது. அக்ஷய் கண்ணா படத்தின் போக்குக்கு ஏற்ப வந்து சென்றாலும், அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக அவரது வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன காலத்தில், பெண்கள் சுதந்திரமாக வெளியில் சுற்றி வருவது அவர்களுக்கு பாதுகாப்பாக அமையாது. எந்த நேரத்திலும் பெண்கள் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் சந்தர்பங்கள் உருவாகலாம். இவ்வாறு பெண்களுக்கு இளைக்கப்படும் குற்றச் செயல்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி குற்றவாளிகளை தப்பிக்க விடக்கூடாது. மேலும் அத்தகைய நபர்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண் குற்றச் செயலுக்கு ஆளாக்கப்பட்டால், அந்த குடும்பம் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கும். அந்த பெண்ணின் குடும்பத்தார் எந்தளவுக்கு பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்பதை படத்தின் மூலமாக விளக்கியிருக்கும் ரவி உதயவாரின் முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால் படத்தை பார்க்க, ஒரு ஆவணப்படத்தை பார்த்த அனுபவமே இருக்கிறது. அந்தளவுக்கு படத்தின் திரைக்கதை மெல்ல செல்கிறது. மற்றபடி படம் ஒரு நல்ல செய்தியை எடுத்துரைக்கிறது.
இவ்வாறாக மெதுவாக நகரும் திரைக்கதையை ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பார்க்கும் போது, பொறுமையாக பார்க்க முடிகிறது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். அனய் கோஸ்வாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் `மாம்' பொறுமையானவள்.
டிரான்ஸ்பார்மர்ஸ் பட வரிசையில் 5-வது பாகமாக வெளிவந்திருக்கும் ‘டிராஸ்பார்மர்ஸ் - தி லாஸ்ட் நைட்’ படத்தின் விமர்சனம்
கடந்த பாகத்தில் பூமியில் ஆட்டோ போட்ஸ் டிரான்ஸ்பார்மர்களின் கூட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்தி வந்த ஆப்டிமைஸ் பிரைம் தன்னுடைய உலகமான சைபர் டிரானுக்கு திரும்புவதோடு படம் முடிந்தது. இந்த பாகத்தில் தன்னுடைய உலகத்தை அடையும் ஆப்டிமைஸ் பிரைம் அது சின்னாபின்னமாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறது.
அப்போது சைபர் டிரானில் குயின்டெஷாவின் அறிமுகம் கிடைக்கிறது. ஆப்டிமைஸ் உள்ளிட்ட டிரான்ஸ்பார்களுக்கெல்லாம் தான்தான் படைப்பாளி என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது குயின்டெஷா. சைபர் டிரானின் அழிவுக்கு அவள்தான் காரணம் என்று கோபப்பட்டு குயின்டெஷாவை தாக்குகிறது ஆப்டிமைஸ். ஆனால், ஆப்டிமைசை குயின்டெஷா தன் வசப்படுத்துவிடுகிறது.

சைபர் டிரானின் அழிவுக்கு ஆப்டிமைஸ்தான் காரணம் என்று அதன்மீது குற்றமும் சுமத்துகிறது. குயின்டெஷா தன் வசம் இருந்த படைப்பின் சக்தியான கோலை 12 காவல் தளபதிகள் திருடி பூமியில் மறைத்துவிட்டதாகவும், அதை அவர்கள் ஒரு மனிதனிடம் கொடுத்துவிட்டதாகவும் கூறுகிறது. அந்த கோல் இருந்தால்தான் சைபர் டிரானுக்கு மீண்டும் உயிர் கொடுக்கமுடியும் என்றும், அதை தன்னிடம் வந்து ஒப்படைத்தால் உன்னுடைய தவறை திருத்திக் கொள்ளுமாறும் ஆப்டிமைஸிடம் கூறுகிறது.
ஆப்டிமைசும் குயின்டெஷாவின் உத்தரவுக்கு செவி சாய்க்கிறது. இதற்குள், பூமியில் குயின்டெஷாவிடமிருந்து திருடிக் கொண்டுவரப்பட்ட கோலின் ஒரு பகுதி நாயகன் மார்க் வால்பர்க்குக்கு கிடைக்கிறது. அதன் சக்தி தெரியாமல் சாதாரணமான ஒரு பொருளாகவே அதை வைத்து இருக்கிறார்.

அதே நேரத்தில் ஆட்டோ போட்ஸுக்கு எதிரான டிசப்டிகான்ஸ் டிரான்ஸ்பார்மர்ஸ்களின் தலைவனான மெகா ட்ரான், அந்த கோலை எப்படியாவது தங்கள் வசமாக்கி பூமியை அழிக்க திட்டம் தீட்டுகின்றனர். இறுதியில், அந்த கோல் யார் கைவசம் கிடைத்தது? ஆப்டிமைஸ் அந்த கோலை காப்பாற்றி தன்னுடைய உலகத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
மைக்கேல் பே இயக்கியிருக்கும் இந்த பாகத்திலும் இயந்திர டைனோசர்கள் மற்றும் இயந்திர டிராகன்களுடனான சண்டை காட்சிகள் விறுவிறுப்புக்கும், பிரம்மாண்டத்திற்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்திருக்கிறது. இந்த காட்சிகளை 3டியில் பார்க்கும்போது ரொம்பவும் சிறப்பாக இருக்கிறது.

குறிப்பாக, படத்தின் ஆரம்பத்தில் பம்பிள் பீ கதாநாயகனை காப்பாற்றும் காட்சி பிரமிக்க வைக்கிறது. ஆக்ஷன் மட்டுமில்லாமல் டிரான்ஸ்பார்மர் செய்யும் காமெடிகளும் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறது. அதை தமிழாக்கம் செய்தவிதம் தமிழ்பட ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் இருக்கிறது.
இயந்திர மனிதர்களுக்கிடையே நடக்கும் ஒவ்வொரு சண்டைக் காட்சியும் ரொம்பவும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்கள். கடந்த பாகத்தைப்போலவே இந்த பாகத்தின் நீளமும் ரசிகர்களுக்கு சற்று சலிப்பை கொடுத்திருக்கிறது. மற்றபடி, ஆக்ஷன் ரசிகர்களுக்கு இந்த படம் நிறைவை தரும் என்பது உண்மை.
மொத்தத்தில் ‘டிரான்ஸ்பார்மர்: தி லாஸ்ட் நைட்’ அதிரடி
அப்போது சைபர் டிரானில் குயின்டெஷாவின் அறிமுகம் கிடைக்கிறது. ஆப்டிமைஸ் உள்ளிட்ட டிரான்ஸ்பார்களுக்கெல்லாம் தான்தான் படைப்பாளி என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது குயின்டெஷா. சைபர் டிரானின் அழிவுக்கு அவள்தான் காரணம் என்று கோபப்பட்டு குயின்டெஷாவை தாக்குகிறது ஆப்டிமைஸ். ஆனால், ஆப்டிமைசை குயின்டெஷா தன் வசப்படுத்துவிடுகிறது.

சைபர் டிரானின் அழிவுக்கு ஆப்டிமைஸ்தான் காரணம் என்று அதன்மீது குற்றமும் சுமத்துகிறது. குயின்டெஷா தன் வசம் இருந்த படைப்பின் சக்தியான கோலை 12 காவல் தளபதிகள் திருடி பூமியில் மறைத்துவிட்டதாகவும், அதை அவர்கள் ஒரு மனிதனிடம் கொடுத்துவிட்டதாகவும் கூறுகிறது. அந்த கோல் இருந்தால்தான் சைபர் டிரானுக்கு மீண்டும் உயிர் கொடுக்கமுடியும் என்றும், அதை தன்னிடம் வந்து ஒப்படைத்தால் உன்னுடைய தவறை திருத்திக் கொள்ளுமாறும் ஆப்டிமைஸிடம் கூறுகிறது.
ஆப்டிமைசும் குயின்டெஷாவின் உத்தரவுக்கு செவி சாய்க்கிறது. இதற்குள், பூமியில் குயின்டெஷாவிடமிருந்து திருடிக் கொண்டுவரப்பட்ட கோலின் ஒரு பகுதி நாயகன் மார்க் வால்பர்க்குக்கு கிடைக்கிறது. அதன் சக்தி தெரியாமல் சாதாரணமான ஒரு பொருளாகவே அதை வைத்து இருக்கிறார்.

அதே நேரத்தில் ஆட்டோ போட்ஸுக்கு எதிரான டிசப்டிகான்ஸ் டிரான்ஸ்பார்மர்ஸ்களின் தலைவனான மெகா ட்ரான், அந்த கோலை எப்படியாவது தங்கள் வசமாக்கி பூமியை அழிக்க திட்டம் தீட்டுகின்றனர். இறுதியில், அந்த கோல் யார் கைவசம் கிடைத்தது? ஆப்டிமைஸ் அந்த கோலை காப்பாற்றி தன்னுடைய உலகத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
மைக்கேல் பே இயக்கியிருக்கும் இந்த பாகத்திலும் இயந்திர டைனோசர்கள் மற்றும் இயந்திர டிராகன்களுடனான சண்டை காட்சிகள் விறுவிறுப்புக்கும், பிரம்மாண்டத்திற்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்திருக்கிறது. இந்த காட்சிகளை 3டியில் பார்க்கும்போது ரொம்பவும் சிறப்பாக இருக்கிறது.

குறிப்பாக, படத்தின் ஆரம்பத்தில் பம்பிள் பீ கதாநாயகனை காப்பாற்றும் காட்சி பிரமிக்க வைக்கிறது. ஆக்ஷன் மட்டுமில்லாமல் டிரான்ஸ்பார்மர் செய்யும் காமெடிகளும் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறது. அதை தமிழாக்கம் செய்தவிதம் தமிழ்பட ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் இருக்கிறது.
இயந்திர மனிதர்களுக்கிடையே நடக்கும் ஒவ்வொரு சண்டைக் காட்சியும் ரொம்பவும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்கள். கடந்த பாகத்தைப்போலவே இந்த பாகத்தின் நீளமும் ரசிகர்களுக்கு சற்று சலிப்பை கொடுத்திருக்கிறது. மற்றபடி, ஆக்ஷன் ரசிகர்களுக்கு இந்த படம் நிறைவை தரும் என்பது உண்மை.
மொத்தத்தில் ‘டிரான்ஸ்பார்மர்: தி லாஸ்ட் நைட்’ அதிரடி
இன்பசேகர் இயக்கத்தில் உமாபதி - ரேஷ்மா ரத்தோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தின் விமர்சனம்.
அப்பாவியான நாயகன் உமாபதி கிதார் வாசிப்பதில் வல்லவர். இதனால், அவரது அப்பா பாண்டியராஜன் தன்னுடைய அப்பாவின் நினைவாக உமாபதியின் புகைப்படத்துடன் அவரது முழு விவரம் அடங்கிய கிதார் ஒன்றை அவருக்கு பரிசாக அளிக்கிறார். இந்நிலையில், நாயகனின் நண்பர் பெரிய தொழிலதிபரான நரேனின் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். அவர், நாயகனுக்கு போன் செய்து தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், தான் அவசரமாக அங்கு செல்லவேண்டும் என்பதால், நான் வரும்வரை என்னுடைய வேலையை நீ பார்க்கவேண்டும் என்று நாயகனிடம் கெஞ்சுகிறார்.
நாயகனும் மனமிறங்கி, அந்த வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். வேலைக்கு வந்த சிறிது நேரத்தில் அவர் மயங்கிவிடுகிறார். மயக்கம் தெளிந்தபோது அந்த வீட்டில் அனைவரும் மயங்கிய நிலையில் கிடக்கிறார்கள். இதைப் பார்த்ததும் தன்னுடைய நண்பனுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்கிறார் நாயகன். நண்பரும் என்னால் நீ மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று அவரை அங்கிருந்து கிளம்ப சொல்கிறார். அடுத்தபடியாக நண்பரும் போலீசுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை புகாராக கொடுக்கிறார்.

உடனே அங்கிருந்து கிளம்பும் உமாபதி தான் கொண்டு வந்த கிதாரை அங்கேயே விட்டு விட்டு சென்றுவிடுகிறார். சிறிது நேரம் கழித்து கிதார் நினைவில்வர, அதை எடுப்பதற்காக மீண்டும் நரேனின் வீட்டுக்கு சென்று கிதாரை தேடிப் பார்க்கிறார். ஆனால், கிதார் அங்கு இல்லை. அந்த கிதாரில் தன்னுடைய முழு விவரமும் இருப்பதால், ஒருவேளை போலீஸ்தான் அதை எடுத்துச் சென்றிருப்பார்களோ? என்று பயப்படுகிறார் நாயகன். இதனால் தான் மாட்டிக் கொள்வோம் என்றும் பயப்படுகிறார்.
மறுநாள் தன்னுடைய நெருங்கிய நண்பரான கருணாகரனிடம் சென்று நடந்த விஷயங்களை கூறி, தன்னைக் காப்பாற்ற அவரால் மட்டுமே முடியும் என்று நம்பி உதவி கேட்கிறார். இதற்குள், கொள்ளையர்கள் கிதார் மாட்டிக்கொண்டு வந்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகிறது. அதன்பிறகு, தன்னுடைய கிதார் கொள்ளையர்கள் வசம்தான் இருக்கிறது என்பது தெரிந்துகொண்ட நாயகன், எப்படியிருந்தாலும் அந்த கிதார் போலீஸ் வசம் கிடைத்தால் தான் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்துக்கொண்டு கருணகாரனை வைத்து இந்த பிரச்சினையை தீர்க்க பார்க்கிறார்.

ஆனால் உண்மையிலேயே பயந்தாங்கொள்ளியான கருணாகரன் இவருடைய பிரச்சினையை எப்படி தீர்த்து வைத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
தம்பி ராமையாவின் மகனான நாயகன் உமாபதி நடிப்பில் அடுத்தடுத்து உயரத்தை தொடுவார் என்ற நம்பிக்கையை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். அப்பாவித்தனமான கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்து காமெடியிலும் கலக்கியிருக்கிறார். நடனத்திலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். தம்பிராமையாவின் பெயரை இவர் நிச்சயம் காப்பாற்றுவார் என்பது இந்த படத்தின் மூலம் தெரிகிறது.
நரேனின் மகளாக வரும் கதாநாயகி ரேஷ்மா ரத்தோர் நடிப்பில் ஓகேதான். நாயகனுக்கு அப்பாவாக வரும் பாண்டியராஜனுக்கு படத்தில் நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு கொடுக்கவில்லை. இருப்பினும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தொழிலதிபராக வரும் நரேன் நகைச்சுவையான கதாபாத்திரத்தை ரொம்பவும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

மனோபாலாவுக்கு இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். கடைசியில், இவரது கதாபாத்திரம் கொடுக்கும் டுவிஸ்டு பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். கருணாகரன் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அவர் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். படம் முழுவதும் அடிவாங்குவதும், அதை சமாளிப்பது என இவரது கதாபாத்திரம் நகர்ந்து சென்றிருக்கிறது. அதை வித்தியாசப்படுத்தி நடித்து அனைவரையும் வயிறு குலுங்க வைத்திருக்கிறார்.
தம்பி ராமையா ஒரு காட்சி வந்தாலும் நிறைவாக செய்துவிட்டு போயிருக்கிறார். இயக்குனர் இன்பசேகர் ஒரு இன்பமான கதையை உருவாக்கி, அதை ரசிகர்களுக்கு கலகலப்பாக கொடுத்திருக்கிறார். தன்னுடைய கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார். குடும்பத்தோடு சென்றால் கலகலப்பாக பொழுதை கழிக்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

பி.கே.வர்மா ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாக காட்டியிருக்கிறது. இமான் இசையில் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். பின்னணி இசையிலும் கதைக்கு தேவையான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ கலகலப்பு.
நாயகனும் மனமிறங்கி, அந்த வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். வேலைக்கு வந்த சிறிது நேரத்தில் அவர் மயங்கிவிடுகிறார். மயக்கம் தெளிந்தபோது அந்த வீட்டில் அனைவரும் மயங்கிய நிலையில் கிடக்கிறார்கள். இதைப் பார்த்ததும் தன்னுடைய நண்பனுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்கிறார் நாயகன். நண்பரும் என்னால் நீ மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று அவரை அங்கிருந்து கிளம்ப சொல்கிறார். அடுத்தபடியாக நண்பரும் போலீசுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை புகாராக கொடுக்கிறார்.

உடனே அங்கிருந்து கிளம்பும் உமாபதி தான் கொண்டு வந்த கிதாரை அங்கேயே விட்டு விட்டு சென்றுவிடுகிறார். சிறிது நேரம் கழித்து கிதார் நினைவில்வர, அதை எடுப்பதற்காக மீண்டும் நரேனின் வீட்டுக்கு சென்று கிதாரை தேடிப் பார்க்கிறார். ஆனால், கிதார் அங்கு இல்லை. அந்த கிதாரில் தன்னுடைய முழு விவரமும் இருப்பதால், ஒருவேளை போலீஸ்தான் அதை எடுத்துச் சென்றிருப்பார்களோ? என்று பயப்படுகிறார் நாயகன். இதனால் தான் மாட்டிக் கொள்வோம் என்றும் பயப்படுகிறார்.
மறுநாள் தன்னுடைய நெருங்கிய நண்பரான கருணாகரனிடம் சென்று நடந்த விஷயங்களை கூறி, தன்னைக் காப்பாற்ற அவரால் மட்டுமே முடியும் என்று நம்பி உதவி கேட்கிறார். இதற்குள், கொள்ளையர்கள் கிதார் மாட்டிக்கொண்டு வந்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகிறது. அதன்பிறகு, தன்னுடைய கிதார் கொள்ளையர்கள் வசம்தான் இருக்கிறது என்பது தெரிந்துகொண்ட நாயகன், எப்படியிருந்தாலும் அந்த கிதார் போலீஸ் வசம் கிடைத்தால் தான் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்துக்கொண்டு கருணகாரனை வைத்து இந்த பிரச்சினையை தீர்க்க பார்க்கிறார்.

ஆனால் உண்மையிலேயே பயந்தாங்கொள்ளியான கருணாகரன் இவருடைய பிரச்சினையை எப்படி தீர்த்து வைத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
தம்பி ராமையாவின் மகனான நாயகன் உமாபதி நடிப்பில் அடுத்தடுத்து உயரத்தை தொடுவார் என்ற நம்பிக்கையை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். அப்பாவித்தனமான கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்து காமெடியிலும் கலக்கியிருக்கிறார். நடனத்திலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். தம்பிராமையாவின் பெயரை இவர் நிச்சயம் காப்பாற்றுவார் என்பது இந்த படத்தின் மூலம் தெரிகிறது.
நரேனின் மகளாக வரும் கதாநாயகி ரேஷ்மா ரத்தோர் நடிப்பில் ஓகேதான். நாயகனுக்கு அப்பாவாக வரும் பாண்டியராஜனுக்கு படத்தில் நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு கொடுக்கவில்லை. இருப்பினும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தொழிலதிபராக வரும் நரேன் நகைச்சுவையான கதாபாத்திரத்தை ரொம்பவும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

மனோபாலாவுக்கு இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். கடைசியில், இவரது கதாபாத்திரம் கொடுக்கும் டுவிஸ்டு பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். கருணாகரன் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அவர் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். படம் முழுவதும் அடிவாங்குவதும், அதை சமாளிப்பது என இவரது கதாபாத்திரம் நகர்ந்து சென்றிருக்கிறது. அதை வித்தியாசப்படுத்தி நடித்து அனைவரையும் வயிறு குலுங்க வைத்திருக்கிறார்.
தம்பி ராமையா ஒரு காட்சி வந்தாலும் நிறைவாக செய்துவிட்டு போயிருக்கிறார். இயக்குனர் இன்பசேகர் ஒரு இன்பமான கதையை உருவாக்கி, அதை ரசிகர்களுக்கு கலகலப்பாக கொடுத்திருக்கிறார். தன்னுடைய கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார். குடும்பத்தோடு சென்றால் கலகலப்பாக பொழுதை கழிக்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

பி.கே.வர்மா ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாக காட்டியிருக்கிறது. இமான் இசையில் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். பின்னணி இசையிலும் கதைக்கு தேவையான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ கலகலப்பு.
விஷ்ணு - வர்ஷா - இஷாரா நாயர் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘இவன் யாரென்று தெரிகிறதா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
நாயகன் விஷ்ணு கல்லூரியில் படித்து முடித்துவிட்டு பொறுப்பில்லாமல் நண்பர்கள் அர்ஜுனன், ராஜ்குமார் ஆகியோருடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவருடைய அப்பாவான ஜெயப்பிரகாஷும் விஷ்ணுவை ரொம்பவும் செல்லமாக வளர்த்து வருகிறார்.
பொறுப்பில்லாமலும், அப்பாவித்தனமாகவும் இருக்கும் விஷ்ணுவை அவரது நண்பர்கள் தங்கள் காதலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதாக தனது அப்பாவித்தனத்தால் விஷ்ணு தனது நண்பர்களை அவ்வப்போது பிரச்சினையில் மாட்டி விடுகிறார்.

இதனால் கோபமடைந்த அவரது நண்பர்கள் விஷ்ணுவுக்கு காதலே அமையாது என்று அவருக்கு சாபம் விடுகிறார்கள். ஆனால், விஷ்ணுவோ காதலர் தினத்தில் பிறந்த எனக்கு காதல் அமையாதா? நான் யாரையாவது காதலித்து காட்டுகிறேன் என்று அவர்களுக்கு சவால் விட்டு செல்கிறார்.
அப்போது, கல்லூரியில் படிக்கும்போது இவருடன் படித்த இஷா நாயர், இவரை தேடி வந்து காதலை சொன்னது ஞாபகம் வரவே, அவளை தேடிப் போய் தனது காதலை சொல்கிறார். ஆனால், இஷா நாயருக்கோ திருமணம் ஆகி, குழந்தையெல்லாம் இருக்கிறது. உடனே ஏமாற்றத்துடன் திரும்பும் விஷ்ணு சப்-இன்ஸ்பெக்டரான நாயகி வர்ஷாவை பார்க்கிறார்.

அவளை எப்படியாவது காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் அவள் பின்னாலேயே சுற்றுகிறார். இறுதியில், வர்ஷாவை காதலிக்க வைத்து, தனது நண்பர்களுக்கு விடுத்த சவாலை விஷ்ணு நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
சின்னத்திரையில் நடித்து வந்த விஷ்ணு, அவ்வப்போது சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். இந்த படத்தில் முழுநீள ஹீரோவாக மாறியிருக்கிறார். அப்பாவித்தனமான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து இவர் செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன.
நாயகனின் நண்பர்களாக வரும் அர்ஜுனன், ராஜ்குமார் இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாயகிகளில் இஷாரா நாயர் ஏற்கெனவே நாம் பல படங்களில் பார்த்த முகம்தான். இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்.

டப் மாஷில் புகழ்பெற்ற வர்ஷா ஹீரோயின் அவதாரம் எடுத்திருக்கும் படம். படத்தில் இவருடைய கதாபாத்திரம்தான் ரொம்பவும் சீரியஸாக செல்லும். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். படத்திற்கு ரொம்பவும் பலம் அருள்தாஸ், பக்ஸ், ராம்ஸ் செய்யும் அமர்க்களம்தான். திருட்டு கும்பலான இவர்கள் செய்யும் சேட்டைகள் படத்தின் கலகலப்புக்கு கியாரண்டி.
இயக்குனர் சுரேஷ்குமார் தனது முதல் படத்தில் காதல் மற்றும் அதற்குள் காமெடி கலந்து கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாதி ரொம்பவும் மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி ரொம்பவும் கலகலப்பாக நகர்ந்திருக்கிறது. குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு படமாக இதைக் கொடுத்திருக்கிறார்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படியாக உள்ளது. அதேபோல், பின்னணி இசையும் ஓகே சொல்ல வைக்கிறது. பி&ஜியின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி இருக்கிறது.
மொத்தத்தில் ‘இவன் யாரென்று தெரிகிறதா?’ கலகலப்பு.
பொறுப்பில்லாமலும், அப்பாவித்தனமாகவும் இருக்கும் விஷ்ணுவை அவரது நண்பர்கள் தங்கள் காதலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதாக தனது அப்பாவித்தனத்தால் விஷ்ணு தனது நண்பர்களை அவ்வப்போது பிரச்சினையில் மாட்டி விடுகிறார்.

இதனால் கோபமடைந்த அவரது நண்பர்கள் விஷ்ணுவுக்கு காதலே அமையாது என்று அவருக்கு சாபம் விடுகிறார்கள். ஆனால், விஷ்ணுவோ காதலர் தினத்தில் பிறந்த எனக்கு காதல் அமையாதா? நான் யாரையாவது காதலித்து காட்டுகிறேன் என்று அவர்களுக்கு சவால் விட்டு செல்கிறார்.
அப்போது, கல்லூரியில் படிக்கும்போது இவருடன் படித்த இஷா நாயர், இவரை தேடி வந்து காதலை சொன்னது ஞாபகம் வரவே, அவளை தேடிப் போய் தனது காதலை சொல்கிறார். ஆனால், இஷா நாயருக்கோ திருமணம் ஆகி, குழந்தையெல்லாம் இருக்கிறது. உடனே ஏமாற்றத்துடன் திரும்பும் விஷ்ணு சப்-இன்ஸ்பெக்டரான நாயகி வர்ஷாவை பார்க்கிறார்.

அவளை எப்படியாவது காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் அவள் பின்னாலேயே சுற்றுகிறார். இறுதியில், வர்ஷாவை காதலிக்க வைத்து, தனது நண்பர்களுக்கு விடுத்த சவாலை விஷ்ணு நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
சின்னத்திரையில் நடித்து வந்த விஷ்ணு, அவ்வப்போது சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். இந்த படத்தில் முழுநீள ஹீரோவாக மாறியிருக்கிறார். அப்பாவித்தனமான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து இவர் செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன.
நாயகனின் நண்பர்களாக வரும் அர்ஜுனன், ராஜ்குமார் இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாயகிகளில் இஷாரா நாயர் ஏற்கெனவே நாம் பல படங்களில் பார்த்த முகம்தான். இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்.

டப் மாஷில் புகழ்பெற்ற வர்ஷா ஹீரோயின் அவதாரம் எடுத்திருக்கும் படம். படத்தில் இவருடைய கதாபாத்திரம்தான் ரொம்பவும் சீரியஸாக செல்லும். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். படத்திற்கு ரொம்பவும் பலம் அருள்தாஸ், பக்ஸ், ராம்ஸ் செய்யும் அமர்க்களம்தான். திருட்டு கும்பலான இவர்கள் செய்யும் சேட்டைகள் படத்தின் கலகலப்புக்கு கியாரண்டி.
இயக்குனர் சுரேஷ்குமார் தனது முதல் படத்தில் காதல் மற்றும் அதற்குள் காமெடி கலந்து கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாதி ரொம்பவும் மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி ரொம்பவும் கலகலப்பாக நகர்ந்திருக்கிறது. குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு படமாக இதைக் கொடுத்திருக்கிறார்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படியாக உள்ளது. அதேபோல், பின்னணி இசையும் ஓகே சொல்ல வைக்கிறது. பி&ஜியின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி இருக்கிறது.
மொத்தத்தில் ‘இவன் யாரென்று தெரிகிறதா?’ கலகலப்பு.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் இவன் தந்திரன் படத்தின் விமர்சனம்.
இன்ஜினியரிங் படித்து வந்த நாயகன் கவுதம் கார்த்திக் மற்றும் அவரது நண்பன் ஆர்.ஜே.பாலாஜி, படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கும் பிரபலபான இடத்தில் கடை ஒன்றை ஆரம்பிக்கின்றனர். அங்கு லேப்டாப், கணினி, மொபைல் போன் உள்ளிட்டவற்றை பல எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். எலக்ட்ரானிக் மீது அதீத ஈடுபாடு உடைய கவுதம் கார்த்திக் பல்வேறு புதிய முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்.
அதன் பயனாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்ற, தனித்துவமான புதிய மொபைல் போன் ஒன்றையும் உருவாக்குகிறார். பின்னர் அந்த போனை விற்பனை செய்ய பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார். இதுஒருபுறம் இருக்க நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், கவுதம் கார்த்திக்கிடம் இருந்து லேப்டாப் ஒன்றை வாங்கி செல்கிறார். அந்த லேப்டாப்பில் ஏற்பட்ட பழுதின் காரணமாக இவர்களது சந்திப்பு மோதலுக்கு செல்கிறது.

அதே நேரத்தில் அமைச்சர் சூப்பர் சுப்பராயன் வீட்டில் கேமரா மாட்டும் பணி கவுதம் கார்த்திக்குக்கு கிடைக்கிறது. கேமரா வைத்துவிட்டு, அதற்கான பணத்தை சுப்பராயனின் மச்சானான ஸ்டன்ட் சில்வாவிடம் கவுதம் கார்த்திக் கேட்க, பணம் கொடுக்காமல் கவுதமை விரட்டி விடுகிறார் சில்வா. இதனால் கடுப்பாகும் கவுதம் கார்த்திக், தனக்கு வரவேண்டிய பணத்தை சில்வாவிடம் வசூலித்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார்.
இந்நிலையில், பல இன்ஜினியரிங் கல்லூரிகளில் தரமான கல்வி இல்லை என்று அமைச்சர் சூப்பர் சுப்பராயன், குறி்பிட்ட கல்லூரிகளுக்கு தடை விதிக்கிறார். அதில் நாயகி ஷ்ரத்தா படிக்கும் கல்லூரியும் ஒன்று. இவ்வாறாக கல்லூரிகளுக்கு தடை விதிப்பது போல் விதித்து பணம் சம்பாதிக்கும் முயற்சியில் சுப்பராயன் ஈடுபடுகிறார். அமைச்சருக்கு பணம் கொடுப்பதற்காக மாணவர்களிடம் இருந்து கல்லூரி நிர்வாகம் பணம் கேட்க, பணத்தை கொடுக்க முடியாமல், மாணவர் ஒருவர் கவுதம் கார்த்திக் முன்னிலையிலேயே தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்த பிரச்சனைக்கு சுப்பராயன் தான் காரணம் என்று கவுதம் கார்த்திக்குக்கு தெரிய வர, தனது சாதுரியத்தின் மூலம் அமைச்சருக்கு எதிரான ஆதரங்களை திரட்டுகிறார். இதையடுத்து சூப்பர் சுப்பராயன் குறித்த தகவல்களை ரகசியமாக இணையதளங்களில் வெளியிடுகிறார். இதனால் சூப்பர் சுப்பராயனின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படுகிறது. இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு, மீண்டும் அமைச்சராக முயற்சி செய்கிறார் சுப்பராயன்.
மறுபுறத்தில் அமைச்சரை மாட்டி விட்டது கவுதம் கார்த்திக் தான் என்பதை கண்டுபிடித்துவிடும் சில்வா, கவுதமை தேடி செல்கிறார். இந்நிலையில், கல்லூரி பிரச்சனையில் தன்னை பற்றிய தகவல் வெளியேறி விடக்கூடாது என்பதால், தனது மச்சான் சில்வாவையும், சுப்பராயன் கொலை செய்து விடுகிறார். இதையடுத்து அவரது பதவி பறிபோக காரணமானது கவுதம் தான் என்பதை அமைச்சர் கண்டுபிடித்து பழிவாங்கினாரா? அல்லது கவுதம் அமைச்சரை வெளிவரமுடியாத சிக்கலில் சிக்க வைத்தாரா? ஷ்ரத்தாவுடனான மோதல் காதலில் முடிந்ததா? என்பதே மீதிக்கதை.

சமீப காலமாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கவுதம் கார்த்திக், கல்லூரியில் இருந்து வெளியேறினாலும், செய்முறையில் இன்ஜினியரிங் மாணவர்களை விட சிறந்து விளங்குபவராக ஜொலிக்கிறார். இன்ஜினியராக இல்லாவிட்டாலும், அதற்குறிய தனித்துவத்துடன் வலம் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.
காற்று வெளியிடை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருந்தாலும், நடுத்தர வீட்டு பெண் என்று கூறிவிட்டு, பார்ப்பதற்கு பணக்கார வீட்டு பெண் போல இருப்பது படத்திற்கு மைனஸ்.

நகைச்சுவையில் ஆர்.ஜே.பாலாஜி ரசிக்க வைக்கிறார். பல கவுண்டர்கள் கொடுத்தாலும், ஒரு சில கவுண்டர்களுக்கே சிரிக்க முடிகிறது. இன்ஜினியரிங் படித்து வேலையின்றி இளைஞர்கள் கஷ்டப்படுவதை அவ்வப்போது சுட்டிக்காட்டுகிறார். நகைச்சுவை கலந்த எதார்த்தத்தை எடுத்துரைத்திருக்கிறார்.
சூப்பர் சுப்பராயன், ஸ்டன்ட் சில்வா இருவருமே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அமைச்சருக்குண்டான கெத்துடன் வலம் வரும் சூப்பர் சுப்பராயன் பார்வையிலேயே மிரட்டுகிறார். மற்றபடி பாரத் ரெட்டி, மயில்சாமி, மதன் பாப் காமெடி கலந்த நடிப்புடன் காட்சிக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.

படிப்பு இல்லை என்ற ஒரு குறை இல்லை. இன்ஜினியரிங் படித்தால் தான் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்ற எண்ணத்தில் இருப்பர்களுக்கு, தனது தனித்துவத்தின் மூலமாக உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும். அதற்கான முயற்சியில் தொடந்து ஈடுபட்டால் அடுத்தடுத்த நிலைக்கு செல்லலாம் என்பதை கூறியிருக்கும் இயக்குநர் ஆர்.கண்ணனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். தனக்குரிய தனித்துவத்தின் மூலம் யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எதிர்க்கலாம் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். ஒரு நல்ல கதையை சிறப்பாக இயக்கி இருந்தாலும், திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருந்தால், படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
தமனின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. இவன் தந்திரன் பின்னணி இசை கேட்கும்படி இருக்கிறது. பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் டிஜிட்டல் லுக்கில் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `இவன் தந்திரன்' சிக்கலானவன்.
அதன் பயனாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்ற, தனித்துவமான புதிய மொபைல் போன் ஒன்றையும் உருவாக்குகிறார். பின்னர் அந்த போனை விற்பனை செய்ய பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார். இதுஒருபுறம் இருக்க நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், கவுதம் கார்த்திக்கிடம் இருந்து லேப்டாப் ஒன்றை வாங்கி செல்கிறார். அந்த லேப்டாப்பில் ஏற்பட்ட பழுதின் காரணமாக இவர்களது சந்திப்பு மோதலுக்கு செல்கிறது.

அதே நேரத்தில் அமைச்சர் சூப்பர் சுப்பராயன் வீட்டில் கேமரா மாட்டும் பணி கவுதம் கார்த்திக்குக்கு கிடைக்கிறது. கேமரா வைத்துவிட்டு, அதற்கான பணத்தை சுப்பராயனின் மச்சானான ஸ்டன்ட் சில்வாவிடம் கவுதம் கார்த்திக் கேட்க, பணம் கொடுக்காமல் கவுதமை விரட்டி விடுகிறார் சில்வா. இதனால் கடுப்பாகும் கவுதம் கார்த்திக், தனக்கு வரவேண்டிய பணத்தை சில்வாவிடம் வசூலித்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார்.
இந்நிலையில், பல இன்ஜினியரிங் கல்லூரிகளில் தரமான கல்வி இல்லை என்று அமைச்சர் சூப்பர் சுப்பராயன், குறி்பிட்ட கல்லூரிகளுக்கு தடை விதிக்கிறார். அதில் நாயகி ஷ்ரத்தா படிக்கும் கல்லூரியும் ஒன்று. இவ்வாறாக கல்லூரிகளுக்கு தடை விதிப்பது போல் விதித்து பணம் சம்பாதிக்கும் முயற்சியில் சுப்பராயன் ஈடுபடுகிறார். அமைச்சருக்கு பணம் கொடுப்பதற்காக மாணவர்களிடம் இருந்து கல்லூரி நிர்வாகம் பணம் கேட்க, பணத்தை கொடுக்க முடியாமல், மாணவர் ஒருவர் கவுதம் கார்த்திக் முன்னிலையிலேயே தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்த பிரச்சனைக்கு சுப்பராயன் தான் காரணம் என்று கவுதம் கார்த்திக்குக்கு தெரிய வர, தனது சாதுரியத்தின் மூலம் அமைச்சருக்கு எதிரான ஆதரங்களை திரட்டுகிறார். இதையடுத்து சூப்பர் சுப்பராயன் குறித்த தகவல்களை ரகசியமாக இணையதளங்களில் வெளியிடுகிறார். இதனால் சூப்பர் சுப்பராயனின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படுகிறது. இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு, மீண்டும் அமைச்சராக முயற்சி செய்கிறார் சுப்பராயன்.
மறுபுறத்தில் அமைச்சரை மாட்டி விட்டது கவுதம் கார்த்திக் தான் என்பதை கண்டுபிடித்துவிடும் சில்வா, கவுதமை தேடி செல்கிறார். இந்நிலையில், கல்லூரி பிரச்சனையில் தன்னை பற்றிய தகவல் வெளியேறி விடக்கூடாது என்பதால், தனது மச்சான் சில்வாவையும், சுப்பராயன் கொலை செய்து விடுகிறார். இதையடுத்து அவரது பதவி பறிபோக காரணமானது கவுதம் தான் என்பதை அமைச்சர் கண்டுபிடித்து பழிவாங்கினாரா? அல்லது கவுதம் அமைச்சரை வெளிவரமுடியாத சிக்கலில் சிக்க வைத்தாரா? ஷ்ரத்தாவுடனான மோதல் காதலில் முடிந்ததா? என்பதே மீதிக்கதை.

சமீப காலமாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கவுதம் கார்த்திக், கல்லூரியில் இருந்து வெளியேறினாலும், செய்முறையில் இன்ஜினியரிங் மாணவர்களை விட சிறந்து விளங்குபவராக ஜொலிக்கிறார். இன்ஜினியராக இல்லாவிட்டாலும், அதற்குறிய தனித்துவத்துடன் வலம் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.
காற்று வெளியிடை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருந்தாலும், நடுத்தர வீட்டு பெண் என்று கூறிவிட்டு, பார்ப்பதற்கு பணக்கார வீட்டு பெண் போல இருப்பது படத்திற்கு மைனஸ்.

நகைச்சுவையில் ஆர்.ஜே.பாலாஜி ரசிக்க வைக்கிறார். பல கவுண்டர்கள் கொடுத்தாலும், ஒரு சில கவுண்டர்களுக்கே சிரிக்க முடிகிறது. இன்ஜினியரிங் படித்து வேலையின்றி இளைஞர்கள் கஷ்டப்படுவதை அவ்வப்போது சுட்டிக்காட்டுகிறார். நகைச்சுவை கலந்த எதார்த்தத்தை எடுத்துரைத்திருக்கிறார்.
சூப்பர் சுப்பராயன், ஸ்டன்ட் சில்வா இருவருமே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அமைச்சருக்குண்டான கெத்துடன் வலம் வரும் சூப்பர் சுப்பராயன் பார்வையிலேயே மிரட்டுகிறார். மற்றபடி பாரத் ரெட்டி, மயில்சாமி, மதன் பாப் காமெடி கலந்த நடிப்புடன் காட்சிக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.

படிப்பு இல்லை என்ற ஒரு குறை இல்லை. இன்ஜினியரிங் படித்தால் தான் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்ற எண்ணத்தில் இருப்பர்களுக்கு, தனது தனித்துவத்தின் மூலமாக உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும். அதற்கான முயற்சியில் தொடந்து ஈடுபட்டால் அடுத்தடுத்த நிலைக்கு செல்லலாம் என்பதை கூறியிருக்கும் இயக்குநர் ஆர்.கண்ணனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். தனக்குரிய தனித்துவத்தின் மூலம் யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எதிர்க்கலாம் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். ஒரு நல்ல கதையை சிறப்பாக இயக்கி இருந்தாலும், திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருந்தால், படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
தமனின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. இவன் தந்திரன் பின்னணி இசை கேட்கும்படி இருக்கிறது. பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் டிஜிட்டல் லுக்கில் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `இவன் தந்திரன்' சிக்கலானவன்.
நட்டி குமார் இயக்கத்தில் அகில் - நயனா - சோனியா அகர்வால் நடிப்பில் வெளியாகி இருக்கும் `எவனவன்' படத்தின் விமர்சனம்.
சொந்தமாக தொழில் செய்து வரும் நாயகன் அகில், நாயகி நயனாவை காதலித்து வருகிறார். இவர்களது காதலுக்கு நயனாவின் அம்மா மற்றும் அப்பா டெல்லி கணேஷ் சம்மதம் தெரிவிக்கின்றனர். ஒருநாள் நயனாவின் பெற்றோர் வெளியூர் செல்ல, வீட்டில் தனியாக இருக்கும் நயனா, அகிலை துணைக்கு அழைக்கிறாள். இவ்வாறு நயனா வீட்டிற்கு செல்லும் அகில், நயனா இருவரும் வேறு வேறு அறைகளில் தங்குகின்றனர். அடுத்த நாள் காலை, நயனா குளிப்பதை தனது மொபைலில் வீடியோ எடுத்து அதனை நயனாவிடம் காண்பிக்கிறார்.
அந்த வீடியோவை பார்த்து அகில் மீது கோபமடையும் நயனா, அதனை அழிக்க சொல்ல, அகில் வீடியோவை அழித்து விடுகிறார். ஆனால் தனது வீட்டிற்கு சென்று அந்த வீடியோவை ரெக்கவரி போட்டு எடுத்து விடுகிறார். இந்நிலையில், அகிலின் போன் தொலைந்து போகிறது. மற்றொரு நாயகனான சரணிடம் சிக்கும் அந்த போனை தரச்சொல்லி அகில், அவரை மிரட்டுகிறார்.

இதனால் கோபமடையும் சரண், போனில் ஏதேனும் இருக்குமோ என்று சந்தேகித்து, போனில் என்ன இருக்கிறது என்று பார்க்கிறார். இதில் நயனாவின் குளியல் வீடியோ இருக்க, காதலியை இப்படி வீடியோ எடுத்திருக்கிறாயே என்று சரண், அகிலை விமர்ச்சிக்கிறார். இதையடுத்து, சரண் என்ன சொன்னாலும் தான் செய்யத் தயாராக இருப்பதாக அகில் கூற, அவருக்கு தண்டனையாக சமூகத்தில் இவரை போன்று தவறுகள் செய்யும் சிலரை அகில் மூலமாக சரண் பாடம் புகட்டுகிறார்.
இதில் அமைச்சர் ஒருவரை பொதுமேடையில் செருப்பால் அடிக்க வேண்டும் என்கிறார். சரணின் பேச்சை கேட்டு அகிலும், அமைச்சரை செருப்பால் அடித்துவிட்டு, பின்னர் அமைச்சரை தனியாக சந்தித்து, மொபைல் தொலைந்தது முதல், அதில் இருக்கும் வீடியோ வரை அனைத்தையும் கூறி மன்னிப்பு கேட்கிறார். அந்தநேரம் பார்த்து, அமைச்சரை சந்தித்து பேசும் நயனா, தான் அகிலை காதலிப்பதாக அவரது போட்டோவை காட்ட அமைச்சர் கோபத்தின் உச்சிக்கே செல்கிறார். மேலும் அகில் கூறிய அனைத்தையும் நயனாவிடம் சொல்லிவிடுகிறார்.

பின்னர் நயனாவை சந்திக்கும் அகிலிடம், அந்த அமைச்சர் தான் தனது அண்ணன் என்று நயனா கூற அகில் அதிர்ச்சி அடைகிறார். இதுஒருபுறம் இருக்க சரண் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் அகில், தனது நண்பர்கள் உதவியுடன் அவரை அடித்து, உதைத்து கடலில் தூக்கி எறிந்து விடுகிறார்.
இந்நிலையில், நயனா காணாமல் போக, அமைச்சரின் உத்தரவால் போலீஸ் அதிகாரிகளான அசோகன், சோனியா அகர்வால், அகிலை கைது செய்கின்றனர். இந்த விசாரணையில் நடந்தது அனைத்தையும் அகில் போலீசிடம் கூறுகிறார். இந்நிலையில், கடலில் தூக்கி எறிந்த அந்த நபரும் திரும்ப வர, அந்த நபர் எப்படி உயிருடன் வந்தார்? அகில் - நயனாவின் காதல் வெற்றி பெற்றதா? நயனாவின் அண்ணனின் எதிர்ப்பை மீறி இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் அகில், நயனா நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் காட்சிகள் பார்பதற்கு ரசிக்கும்படியாக இல்லை. நடிகர் அசோகன் படத்திற்காக சிறப்பு உடற்பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். அது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. அவரது உழைப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். சமீபகாலமாக படவாய்ப்புகள் அமையாததால், கிடைக்கும் வேடத்தில் நடத்து வரும் சோனியா அகர்வால், இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார். இதற்கு முன்னதாக சாயா படத்திலும் சோனியா போலீஸாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் காட்சிக்கு ஏற்ப ஆங்காங்கே வந்து செல்கிறது.
திட்டமிட்டு செயல்படுவதிலும், செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் புத்திசாலிகள் என்றாலும், விளைவுகள் பற்றி தெரியாமல் இறங்கி சிரமப்படும் இளைஞர்கள் சிலரும் உண்டு. இது போல் சின்ன தவறுதானே செய்கிறோம். அதனால் என்ன பெரிதாக வந்து விட போகிறது என்று நினைத்து இளைஞன் ஒருவன் செய்த தவறால் அவன் என்ன சிக்கலில் மாட்டுகிறான். அவனது வாழ்க்கையில் என்னென்ன நடந்தது? என்பதை படமாக இயக்கி இருக்கிறார் நட்டி குமார்.

ஃபெடோ பேட்டின் பின்னணி இசை படத்திற்கு ஓரளவு பலத்தை கூட்டியிருக்கிறது. அருண் பிரசாத்தின் ஔிப்பதிவு சுமார் ரகம் தான். படம் பார்பதற்கான மனநிலையே இல்லாமல், சீரியல் தொகுப்புகளை இணைத்து பார்த்தால் எப்படி இருக்குமோ, அந்த சிந்தனையே இருக்கிறது.
மொத்தத்தில் `எவனவன்' சொல்ல முடியவில்லை.
அந்த வீடியோவை பார்த்து அகில் மீது கோபமடையும் நயனா, அதனை அழிக்க சொல்ல, அகில் வீடியோவை அழித்து விடுகிறார். ஆனால் தனது வீட்டிற்கு சென்று அந்த வீடியோவை ரெக்கவரி போட்டு எடுத்து விடுகிறார். இந்நிலையில், அகிலின் போன் தொலைந்து போகிறது. மற்றொரு நாயகனான சரணிடம் சிக்கும் அந்த போனை தரச்சொல்லி அகில், அவரை மிரட்டுகிறார்.

இதனால் கோபமடையும் சரண், போனில் ஏதேனும் இருக்குமோ என்று சந்தேகித்து, போனில் என்ன இருக்கிறது என்று பார்க்கிறார். இதில் நயனாவின் குளியல் வீடியோ இருக்க, காதலியை இப்படி வீடியோ எடுத்திருக்கிறாயே என்று சரண், அகிலை விமர்ச்சிக்கிறார். இதையடுத்து, சரண் என்ன சொன்னாலும் தான் செய்யத் தயாராக இருப்பதாக அகில் கூற, அவருக்கு தண்டனையாக சமூகத்தில் இவரை போன்று தவறுகள் செய்யும் சிலரை அகில் மூலமாக சரண் பாடம் புகட்டுகிறார்.
இதில் அமைச்சர் ஒருவரை பொதுமேடையில் செருப்பால் அடிக்க வேண்டும் என்கிறார். சரணின் பேச்சை கேட்டு அகிலும், அமைச்சரை செருப்பால் அடித்துவிட்டு, பின்னர் அமைச்சரை தனியாக சந்தித்து, மொபைல் தொலைந்தது முதல், அதில் இருக்கும் வீடியோ வரை அனைத்தையும் கூறி மன்னிப்பு கேட்கிறார். அந்தநேரம் பார்த்து, அமைச்சரை சந்தித்து பேசும் நயனா, தான் அகிலை காதலிப்பதாக அவரது போட்டோவை காட்ட அமைச்சர் கோபத்தின் உச்சிக்கே செல்கிறார். மேலும் அகில் கூறிய அனைத்தையும் நயனாவிடம் சொல்லிவிடுகிறார்.

பின்னர் நயனாவை சந்திக்கும் அகிலிடம், அந்த அமைச்சர் தான் தனது அண்ணன் என்று நயனா கூற அகில் அதிர்ச்சி அடைகிறார். இதுஒருபுறம் இருக்க சரண் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் அகில், தனது நண்பர்கள் உதவியுடன் அவரை அடித்து, உதைத்து கடலில் தூக்கி எறிந்து விடுகிறார்.
இந்நிலையில், நயனா காணாமல் போக, அமைச்சரின் உத்தரவால் போலீஸ் அதிகாரிகளான அசோகன், சோனியா அகர்வால், அகிலை கைது செய்கின்றனர். இந்த விசாரணையில் நடந்தது அனைத்தையும் அகில் போலீசிடம் கூறுகிறார். இந்நிலையில், கடலில் தூக்கி எறிந்த அந்த நபரும் திரும்ப வர, அந்த நபர் எப்படி உயிருடன் வந்தார்? அகில் - நயனாவின் காதல் வெற்றி பெற்றதா? நயனாவின் அண்ணனின் எதிர்ப்பை மீறி இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் அகில், நயனா நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் காட்சிகள் பார்பதற்கு ரசிக்கும்படியாக இல்லை. நடிகர் அசோகன் படத்திற்காக சிறப்பு உடற்பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். அது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. அவரது உழைப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். சமீபகாலமாக படவாய்ப்புகள் அமையாததால், கிடைக்கும் வேடத்தில் நடத்து வரும் சோனியா அகர்வால், இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார். இதற்கு முன்னதாக சாயா படத்திலும் சோனியா போலீஸாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் காட்சிக்கு ஏற்ப ஆங்காங்கே வந்து செல்கிறது.
திட்டமிட்டு செயல்படுவதிலும், செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் புத்திசாலிகள் என்றாலும், விளைவுகள் பற்றி தெரியாமல் இறங்கி சிரமப்படும் இளைஞர்கள் சிலரும் உண்டு. இது போல் சின்ன தவறுதானே செய்கிறோம். அதனால் என்ன பெரிதாக வந்து விட போகிறது என்று நினைத்து இளைஞன் ஒருவன் செய்த தவறால் அவன் என்ன சிக்கலில் மாட்டுகிறான். அவனது வாழ்க்கையில் என்னென்ன நடந்தது? என்பதை படமாக இயக்கி இருக்கிறார் நட்டி குமார்.

ஃபெடோ பேட்டின் பின்னணி இசை படத்திற்கு ஓரளவு பலத்தை கூட்டியிருக்கிறது. அருண் பிரசாத்தின் ஔிப்பதிவு சுமார் ரகம் தான். படம் பார்பதற்கான மனநிலையே இல்லாமல், சீரியல் தொகுப்புகளை இணைத்து பார்த்தால் எப்படி இருக்குமோ, அந்த சிந்தனையே இருக்கிறது.
மொத்தத்தில் `எவனவன்' சொல்ல முடியவில்லை.
பிரசாந்த் ஜி சேகர் இயக்கத்தில் அஸ்வின் ஜெரோம் - நாயகி வர்ஷா பொலம்மா நடிப்பில் வெளியாகி இருக்கும் `யானும் தீயவன்' படத்தின் விமர்சனம்.
அமைச்சராக வரும் சந்தானபாரதியின் ஆதரவில் ஊரின் முக்கிய தாதாவாக வலம் வருகிறார் ராஜு சுந்தரம். அமைச்சரின் ஆதரவாளர் என்பதால் போலீஸ் கூட அவரிடமிருந்த ஒதுங்கியே இருக்கிறது. இருந்தாலும் அவரது நடவடிக்கைகளை கவனித்து வருகிறது. காவல் அதிகாரியாக வரும் பொன்வண்ணன், ராஜு சுந்தரம் செய்து வரும் தவறுகளை மேலோட்டமாக கவனித்து வருகிறார்.
மறுபுறத்தில் நாயகன் அஸ்வின் ஜெரோம் - நாயகி வர்ஷா பொலம்மா இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர். வசதியான வீட்டைச் சேர்ந்த இருவரும் காதலித்து வருகின்றனர். மகிழ்ச்சியாக காதலித்து வரும் இவர்கள், ஒருநாள் வெளியே சென்று வருகையில், மதுபோதையில் அங்கு வரும் ராஜு சுந்தரம் மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேர் வர்ஷாவை கிண்டல் செய்கின்றனர். ஒரு கட்டத்தில் வர்ஷாவை தரகுறைவாக திட்டியும் விடுகின்றனர்.

இதனால் கடுப்பாகும் அஸ்வின் அவர்களை அடிக்க செல்கிறார். இந்நிலையில், அஸ்வினை சமாதானப்படுத்தும் வர்ஷா, அவனை அங்கிருந்து கூட்டிச் செல்கிறார். வர்ஷாவை அவளது வீட்டில் பத்திரமாக கொண்டுவிடும் அஸ்வின் மீண்டும் அதே இடத்திற்கு சென்று, வர்ஷாவை கிண்டல் செய்த ராஜு சுந்தரம் மற்றும் அவரது கூட்டாளிகளை சரமாரியாக தாக்கிவிட்டு செல்கிறார்.
ஊருக்கே தாதாவாக வலம் வந்த தன்னை, சாதாரண இளைஞன் ஒருவர் தாக்கி சென்றதால், அவனை கொலை செய்ய முடிவு செய்யும் ராஜு சுந்தரம், அஸ்வினை தேடி வருகிறார். இந்த பிரச்சனை ஒருபக்கம் இருக்க, அமைச்சர் சந்தான பாரதிக்கு எதிராக செயல்படுகிறார். இதனால் கோபமடையும் சந்தான பாரதி, ராஜு சுந்தரத்தை கைது செய்ய உத்தரவிடுகிறார். இந்நிலையில், பெற்றோரின் சம்மதம் கிடைக்காத அஸ்வினும், வர்ஷாவும் ரகசிய திருமணம் செய்து ராஜு சுந்தரம் வசிக்கும் வீட்டின் மேல்மாடியில் குடிபெயர்கின்றனர்.

அஸ்வினை தேடிவரும் ராஜு சுந்தரம், தனது வீட்டிற்கு மேல் மாடியிலேயே அஸ்வின் இருப்பதை தெரிந்து கொண்டு, இருவரையும் பிணையக் கைதியாக பிடித்து வைத்துக் கொள்கிறான். பின்னர் அவர்களை கொலை செய்ய முடிவு செய்யும் ராஜு, அவர்களை வைத்து போலீசில் இருந்து தப்பிக்கவும் முடிவு செய்கிறான். இவ்வாறாக ராஜு சுந்தரத்திடம் மாட்டிக் கொண்ட அஸ்வின், எப்படி தப்பித்தார்? போலீஸ் ராஜுவை கைது செய்ததா? அஸ்வின் - வர்ஷாவின் திருமணத்தை அவர்களது பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா என்பது படத்தின் மீதிக்கதை.
நாயகன் அஸ்வின் தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. வர்ஷா அழகு பதுமையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். நஸ்ரியா சாயலில் இருக்கும் இவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. வர்ஷா வரும் காட்சிகளில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

ராஜு சுந்தரத்தின் கதாபாத்திரம் தான் படத்திற்கே பலம். இதற்கு முன்பு அவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே காமெடி கலந்த சாயலில் இருக்கும். ஆனால் இந்த படத்தில் மாஸான தாதாவாக வலம் வரும் ராஜு சுந்தரம், கதைக்கு ஏற்ப மிரட்டி இருக்கிறார். பொன்வண்ணன், சந்தான பாரதி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். விடிவி கணேஷ், அருண்ராஜா காமராஜ், ஜாங்கிரி மதுமிதா கதையின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.
எல்லோருடைய மனதிலும் ஒரு நல்லவன், ஒரு தீயவன் இருப்பான். சூழ்நிலைக்கு ஏற்ப அவன் வெளிப்படுவான். அதனை படத்தின் மூலம் தெரிவிக்க முயன்றிருக்கும் இயக்குநரின் முயற்சிக்கு பாராட்டுக்கள். எந்த ஒரு விஷயத்தையும் சிந்தித்து செய்ய வேண்டும். யோசிக்காமல் செய்வதால் ஏற்படும் விளைவுகளை காதல், கிரைம் கலந்து உருவாக்கி இருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கும் பிரசாந்த் ஜி சேகர் திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டு இருக்கலாம்.

அச்சுராஜாமணியின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் கேட்கும்படி இருக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக இருக்கிறது. காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் `யானும் தீயவன்' மாற்றம் கொண்டவன்.
மறுபுறத்தில் நாயகன் அஸ்வின் ஜெரோம் - நாயகி வர்ஷா பொலம்மா இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர். வசதியான வீட்டைச் சேர்ந்த இருவரும் காதலித்து வருகின்றனர். மகிழ்ச்சியாக காதலித்து வரும் இவர்கள், ஒருநாள் வெளியே சென்று வருகையில், மதுபோதையில் அங்கு வரும் ராஜு சுந்தரம் மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேர் வர்ஷாவை கிண்டல் செய்கின்றனர். ஒரு கட்டத்தில் வர்ஷாவை தரகுறைவாக திட்டியும் விடுகின்றனர்.

இதனால் கடுப்பாகும் அஸ்வின் அவர்களை அடிக்க செல்கிறார். இந்நிலையில், அஸ்வினை சமாதானப்படுத்தும் வர்ஷா, அவனை அங்கிருந்து கூட்டிச் செல்கிறார். வர்ஷாவை அவளது வீட்டில் பத்திரமாக கொண்டுவிடும் அஸ்வின் மீண்டும் அதே இடத்திற்கு சென்று, வர்ஷாவை கிண்டல் செய்த ராஜு சுந்தரம் மற்றும் அவரது கூட்டாளிகளை சரமாரியாக தாக்கிவிட்டு செல்கிறார்.
ஊருக்கே தாதாவாக வலம் வந்த தன்னை, சாதாரண இளைஞன் ஒருவர் தாக்கி சென்றதால், அவனை கொலை செய்ய முடிவு செய்யும் ராஜு சுந்தரம், அஸ்வினை தேடி வருகிறார். இந்த பிரச்சனை ஒருபக்கம் இருக்க, அமைச்சர் சந்தான பாரதிக்கு எதிராக செயல்படுகிறார். இதனால் கோபமடையும் சந்தான பாரதி, ராஜு சுந்தரத்தை கைது செய்ய உத்தரவிடுகிறார். இந்நிலையில், பெற்றோரின் சம்மதம் கிடைக்காத அஸ்வினும், வர்ஷாவும் ரகசிய திருமணம் செய்து ராஜு சுந்தரம் வசிக்கும் வீட்டின் மேல்மாடியில் குடிபெயர்கின்றனர்.

அஸ்வினை தேடிவரும் ராஜு சுந்தரம், தனது வீட்டிற்கு மேல் மாடியிலேயே அஸ்வின் இருப்பதை தெரிந்து கொண்டு, இருவரையும் பிணையக் கைதியாக பிடித்து வைத்துக் கொள்கிறான். பின்னர் அவர்களை கொலை செய்ய முடிவு செய்யும் ராஜு, அவர்களை வைத்து போலீசில் இருந்து தப்பிக்கவும் முடிவு செய்கிறான். இவ்வாறாக ராஜு சுந்தரத்திடம் மாட்டிக் கொண்ட அஸ்வின், எப்படி தப்பித்தார்? போலீஸ் ராஜுவை கைது செய்ததா? அஸ்வின் - வர்ஷாவின் திருமணத்தை அவர்களது பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா என்பது படத்தின் மீதிக்கதை.
நாயகன் அஸ்வின் தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. வர்ஷா அழகு பதுமையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். நஸ்ரியா சாயலில் இருக்கும் இவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. வர்ஷா வரும் காட்சிகளில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

ராஜு சுந்தரத்தின் கதாபாத்திரம் தான் படத்திற்கே பலம். இதற்கு முன்பு அவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே காமெடி கலந்த சாயலில் இருக்கும். ஆனால் இந்த படத்தில் மாஸான தாதாவாக வலம் வரும் ராஜு சுந்தரம், கதைக்கு ஏற்ப மிரட்டி இருக்கிறார். பொன்வண்ணன், சந்தான பாரதி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். விடிவி கணேஷ், அருண்ராஜா காமராஜ், ஜாங்கிரி மதுமிதா கதையின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.
எல்லோருடைய மனதிலும் ஒரு நல்லவன், ஒரு தீயவன் இருப்பான். சூழ்நிலைக்கு ஏற்ப அவன் வெளிப்படுவான். அதனை படத்தின் மூலம் தெரிவிக்க முயன்றிருக்கும் இயக்குநரின் முயற்சிக்கு பாராட்டுக்கள். எந்த ஒரு விஷயத்தையும் சிந்தித்து செய்ய வேண்டும். யோசிக்காமல் செய்வதால் ஏற்படும் விளைவுகளை காதல், கிரைம் கலந்து உருவாக்கி இருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கும் பிரசாந்த் ஜி சேகர் திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டு இருக்கலாம்.

அச்சுராஜாமணியின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் கேட்கும்படி இருக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக இருக்கிறது. காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் `யானும் தீயவன்' மாற்றம் கொண்டவன்.
மூன்று தலை கொண்ட சுறாவின் அட்டகாசத்தை மையப்படுத்தி வெளிவந்துள்ள த்ரீ ஹெட்டெட் ஷார்க் அட்டாக் படத்தின் விமர்சனம்.
கடலுக்கு மேல் கட்டப்பட்ட ஆராய்ச்சி கூடத்தில் விசித்திரமான கடல்வாழ் உயிரினங்களை கண்டறிந்து, அவைகளின் வாழ்வாதாரம் கடலுக்கடியில் எப்படி இருக்கிறது? அவை எந்த சூழ்நிலையில் வாழ்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
இவர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கும்போதே 3 தலை கொண்ட சுறா ஒன்று இவர்களது ஆராய்ச்சிக் கூடத்தை தாக்குகிறது. இதனால், அங்கிருந்து அனைவரும் தப்பித்துப் போக நினைக்கிறார்கள். அந்த சுறாவின் தாக்குதலில் ஆராய்ச்சி கூடம் அழிந்துபோகவே, அங்கிருந்து அனைவரும் ஒரு படகு மூலம் தப்பித்து செல்கிறார்கள்.

செல்லும் வழியில் இவர்கள் ஒரு உல்லாச படகை பார்க்கிறார்கள். அவர்களிடம் சென்று உதவி கேட்கலாம் என்கிற பட்சத்தில் 3 தலை கொண்ட அந்த சுறா உல்லாச படகை தாக்கி, அதில் பயணம் செய்பவர்களை கொல்கிறது. இதில் சில பேர் காயத்துடன் தப்பிக்கிறார்கள்.
இதற்குள், ஆராய்ச்சி கூடத்தில் பணிபுரிந்தவர்களும் அந்த உல்லாச படகை அடைகிறார்கள். காயமடைந்தவர்களையும் காப்பாற்றுகிறார்கள். மறுபடியும் அந்த சுறா உல்லாச படகை தாக்கி மற்றவர்களையும் கொன்று சாப்பிட துடிக்கிறது. இறுதியில், அந்த சுறாவிடமிருந்து அனைவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
இரண்டு தலை சுறாவின் அட்டகாசத்தை கண்டுகளித்த வரிசையில் தற்போது மூன்று தலை கொண்ட சுறாவை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கிறிஸ்டோபர் ரே. மூன்று தலை கொண்ட சுறாவை காட்சிப்படுத்தியதில் கிராபிக்ஸ் நன்றாகவே தெரிகிறது. அதேபோல், படத்தில் லாஜிக் இல்லாத சில சம்பவங்களும் இடம் பெற்றிருப்பதால் ஹாலிவுட் தரத்திற்கு இதை நினைத்துப் பார்க்கமுடியவில்லை.

ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்து தப்பிக்கும் சமயத்தில் தூரத்தில் நிற்கும் படகை பிடிப்பதற்காக கடலுக்குள் இறங்கி நடக்கும் ஒவ்வொருவரும் சுறாவிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற பயத்துடனே செல்லும் காட்சிகளில் எல்லாம் நமக்கும் பயம் தொற்றிக் கொள்கிறது. படத்தில் ஆரம்பத்தில் மூன்று தலை சுறா கரையில் நின்று கொண்டிருப்பவர்களை தலைக்கு ஒருவரை கடித்து திங்கும் காட்சிகளில் இயக்குனரின் கற்பனையை பாராட்டியே ஆகவேண்டும்.
மொத்தத்தில் ‘த்ரி ஹெட்டெட் ஷார்க் அட்டாக்’ ரசிக்கலாம்.
இவர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கும்போதே 3 தலை கொண்ட சுறா ஒன்று இவர்களது ஆராய்ச்சிக் கூடத்தை தாக்குகிறது. இதனால், அங்கிருந்து அனைவரும் தப்பித்துப் போக நினைக்கிறார்கள். அந்த சுறாவின் தாக்குதலில் ஆராய்ச்சி கூடம் அழிந்துபோகவே, அங்கிருந்து அனைவரும் ஒரு படகு மூலம் தப்பித்து செல்கிறார்கள்.

செல்லும் வழியில் இவர்கள் ஒரு உல்லாச படகை பார்க்கிறார்கள். அவர்களிடம் சென்று உதவி கேட்கலாம் என்கிற பட்சத்தில் 3 தலை கொண்ட அந்த சுறா உல்லாச படகை தாக்கி, அதில் பயணம் செய்பவர்களை கொல்கிறது. இதில் சில பேர் காயத்துடன் தப்பிக்கிறார்கள்.
இதற்குள், ஆராய்ச்சி கூடத்தில் பணிபுரிந்தவர்களும் அந்த உல்லாச படகை அடைகிறார்கள். காயமடைந்தவர்களையும் காப்பாற்றுகிறார்கள். மறுபடியும் அந்த சுறா உல்லாச படகை தாக்கி மற்றவர்களையும் கொன்று சாப்பிட துடிக்கிறது. இறுதியில், அந்த சுறாவிடமிருந்து அனைவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
இரண்டு தலை சுறாவின் அட்டகாசத்தை கண்டுகளித்த வரிசையில் தற்போது மூன்று தலை கொண்ட சுறாவை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கிறிஸ்டோபர் ரே. மூன்று தலை கொண்ட சுறாவை காட்சிப்படுத்தியதில் கிராபிக்ஸ் நன்றாகவே தெரிகிறது. அதேபோல், படத்தில் லாஜிக் இல்லாத சில சம்பவங்களும் இடம் பெற்றிருப்பதால் ஹாலிவுட் தரத்திற்கு இதை நினைத்துப் பார்க்கமுடியவில்லை.

ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்து தப்பிக்கும் சமயத்தில் தூரத்தில் நிற்கும் படகை பிடிப்பதற்காக கடலுக்குள் இறங்கி நடக்கும் ஒவ்வொருவரும் சுறாவிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற பயத்துடனே செல்லும் காட்சிகளில் எல்லாம் நமக்கும் பயம் தொற்றிக் கொள்கிறது. படத்தில் ஆரம்பத்தில் மூன்று தலை சுறா கரையில் நின்று கொண்டிருப்பவர்களை தலைக்கு ஒருவரை கடித்து திங்கும் காட்சிகளில் இயக்குனரின் கற்பனையை பாராட்டியே ஆகவேண்டும்.
மொத்தத்தில் ‘த்ரி ஹெட்டெட் ஷார்க் அட்டாக்’ ரசிக்கலாம்.
ரவி ராகுல் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ‘சலாம்’ படத்தின் விமர்சனம்
வெளியூரிலிருந்து தனது நண்பனின் ஊரான இராமேஸ்வரத்திற்கு வருகிறார் நாயகன். அந்த ஊரில் இஸ்லாம் மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் மதத்தால் வேறுபட்டாலும், எல்லோரும் மச்சான், மாப்பிள்ளை, அண்ணன், தம்பி என்று அனைவரும் ஒருவருக்கொருவர் உரிமையோடு பழகி வருகிறார்கள்.
இந்நிலையில், அந்த ஊரிலேயே தன்னுடைய நண்பன் செய்யும் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் நாயகன். அவர் அந்த ஊரிலேயே இருக்கப்போகிறார் என்று ஊரில் உள்ள அனைவரிடமும் சொல்லி வருகிறார் நாயகனின் நண்பன். இதனால், நாயகனையும் தங்கள் வீட்டில் உள்ள ஒரு பையன்போலவே அனைவரும் அவரை நடத்தி வருகிறார்கள். ஆனால், நாயகனோ அந்த ஊரில் நடக்கும் சில விஷேசங்களையெல்லாம் ஏதோ காரணங்களுக்காக ஒதுக்கியே வருகிறார்.

அதேஊரில், நாயகியை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றுகிறார் நாயகன். ஆனால், நாயகனை தவறாக புரிந்துகொண்ட நாயகி அவரை அடித்து விடுகிறார். ஒருகட்டத்தில் தன்மீது தான் தப்பு இருக்கிறது என்பதை உணர்ந்த நாயகிக்கு நாயகன் மீது காதல் வருகிறது.
இதற்கிடையில் நாயகன் வசிக்கும் ஊருக்கும் வரும் சம்பத், நாயகனின் போட்டோவை அந்த ஊரில் உள்ள அனைவரிடமும் காட்டி அவரைப் பற்றிய விவரங்கள் கேட்கிறார். ஆனால், யாரும் நாயகனை தங்களுக்கு தெரியவில்லை என்றே சொல்கிறார்கள்.

உண்மையில் நாயகன் அந்த ஊருக்கு வரக் காரணம் என்ன? நாயகனை தேடி வரும் சம்பத் யார்? எதற்காக நாயகனை தேடுகிறார்? நாயகி தனது காதலை நாயகனிடம் சொன்னாரா? இவர்களது காதலை அந்த ஊர் மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனான ரவி ராகுல் படம் முழுக்க ஏதோ சோகம் வழிந்த முகத்துடனே வந்து போகிறார். படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தும் கொஞ்சம் நடிப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார். புதுமுகம் என்பதால் இவரிடம் பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்றாலும், கதைக்கு பொருத்தவரை அவருடைய நடிப்பு போதும் என்பதுபோல் தான் தோன்றுகிறது.
நாயகிக்கும் படத்தில் ரொம்பவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அவரும் தனது கதாபாத்திரத்திற்குண்டான வலு தெரிந்து அதை மேலும் சிறப்பாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தில் நிறைய பார்த்த முகங்கள் இருந்தாலும் அவரவர் தங்கள் கதாபாத்திரக்குண்டான நடிப்பை கொடுத்து படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

இயக்குனர் ரவி ராகுல், இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு கருத்தை படத்தில் சொல்ல வந்திருக்கிறார். இன்றைய சூழ்நிலையில் அனைவரும் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொருவருக்குள்ளும் மனிதநேயத்தை வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், சொல்லவேண்டிய கருத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
தருண் ஆண்டனியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை ஓகே சொல்ல வைக்கிறது. மகிபாலன் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘சலாம்’ சலாம் போடலாம்.
இந்நிலையில், அந்த ஊரிலேயே தன்னுடைய நண்பன் செய்யும் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் நாயகன். அவர் அந்த ஊரிலேயே இருக்கப்போகிறார் என்று ஊரில் உள்ள அனைவரிடமும் சொல்லி வருகிறார் நாயகனின் நண்பன். இதனால், நாயகனையும் தங்கள் வீட்டில் உள்ள ஒரு பையன்போலவே அனைவரும் அவரை நடத்தி வருகிறார்கள். ஆனால், நாயகனோ அந்த ஊரில் நடக்கும் சில விஷேசங்களையெல்லாம் ஏதோ காரணங்களுக்காக ஒதுக்கியே வருகிறார்.

அதேஊரில், நாயகியை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றுகிறார் நாயகன். ஆனால், நாயகனை தவறாக புரிந்துகொண்ட நாயகி அவரை அடித்து விடுகிறார். ஒருகட்டத்தில் தன்மீது தான் தப்பு இருக்கிறது என்பதை உணர்ந்த நாயகிக்கு நாயகன் மீது காதல் வருகிறது.
இதற்கிடையில் நாயகன் வசிக்கும் ஊருக்கும் வரும் சம்பத், நாயகனின் போட்டோவை அந்த ஊரில் உள்ள அனைவரிடமும் காட்டி அவரைப் பற்றிய விவரங்கள் கேட்கிறார். ஆனால், யாரும் நாயகனை தங்களுக்கு தெரியவில்லை என்றே சொல்கிறார்கள்.

உண்மையில் நாயகன் அந்த ஊருக்கு வரக் காரணம் என்ன? நாயகனை தேடி வரும் சம்பத் யார்? எதற்காக நாயகனை தேடுகிறார்? நாயகி தனது காதலை நாயகனிடம் சொன்னாரா? இவர்களது காதலை அந்த ஊர் மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனான ரவி ராகுல் படம் முழுக்க ஏதோ சோகம் வழிந்த முகத்துடனே வந்து போகிறார். படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தும் கொஞ்சம் நடிப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார். புதுமுகம் என்பதால் இவரிடம் பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்றாலும், கதைக்கு பொருத்தவரை அவருடைய நடிப்பு போதும் என்பதுபோல் தான் தோன்றுகிறது.
நாயகிக்கும் படத்தில் ரொம்பவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அவரும் தனது கதாபாத்திரத்திற்குண்டான வலு தெரிந்து அதை மேலும் சிறப்பாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தில் நிறைய பார்த்த முகங்கள் இருந்தாலும் அவரவர் தங்கள் கதாபாத்திரக்குண்டான நடிப்பை கொடுத்து படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

இயக்குனர் ரவி ராகுல், இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு கருத்தை படத்தில் சொல்ல வந்திருக்கிறார். இன்றைய சூழ்நிலையில் அனைவரும் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொருவருக்குள்ளும் மனிதநேயத்தை வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், சொல்லவேண்டிய கருத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
தருண் ஆண்டனியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை ஓகே சொல்ல வைக்கிறது. மகிபாலன் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘சலாம்’ சலாம் போடலாம்.
ஜெயம் ரவி-சாயிஷா நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘வனமகன்’ படத்தின் விமர்சனம்
சாயிஷா சிறுவயதில் இருக்கும்போது அவளுடைய பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துவிட, அதன்பிறகு சாயிஷாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரகாஷ் ராஜ் வசம் வருகிறது. அதன்பின்னர், பிரகாஷ் ராஜ் சாயிஷாவின் பெயரில் நிறைய தொழில்கள் தொடங்கி சாயிஷாவை பெரிய தொழிலபதிர் ஆக்குகிறார். சாயிஷா பெயரிலேயே எல்லா சொத்துக்களும் இருப்பதால், தன்னுடைய மகனான வருணுக்கு அவளை திருமணம் செய்துவைத்து சொத்துக்களை தன்வசமாக்க நினைக்கிறார் பிரகாஷ் ராஜ்.
இந்நிலையில், அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் போது, காட்டுவாசியான ஜெயம் ரவியின் மீது கார் ஏற்றிவிடுகிறார்கள். அடிபட்டு கிடக்கும் ஜெயம் ரவிக்கும் சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்கிறார்கள். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் இந்தியா கொண்டு வந்துவிடுகிறார்கள். அவருக்கு சிகிச்சை அளித்து நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர் பழைய நினைவுகளை இழந்துவிடுகிறார்.

மேலும், காடுதான் எல்லாமே என்று வாழ்ந்துவந்த ஜெயம் ரவிக்கு நகர வாழ்க்கை புதுமையாக தெரிகிறது. அதேபோல், மற்றவர்கள் பேசும் மொழியும் இவருக்கு வியப்பை கொடுக்கவே, அவர்களிடமிருந்து தனித்தே வாழ்கிறார். இதற்கிடையில், சாயிஷா காட்டுவாசிகளிடம் எப்படி பழகவேண்டும் என்று தெரிந்துகொண்டு ஜெயம் ரவியுடன் நட்பு வளர்க்கிறாள். நாளடைவில் ஜெயம் ரவி சாயிஷாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறார்.
இந்நிலையில், காணாமல்போன ஜெயம் ரவியை தேடி அந்தமான் காட்டு இலாகா அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். ஜெயம் ரவியை பிடித்துக்கொண்டு அந்தமான் செல்கிறார்கள். ஜெயம் ரவியை மீட்பதாக சாயிஷாவும் அந்தமான் போகிறார். போலீஸ் நிலையத்திலிருந்து தப்பிக்கும் ஜெயம் ரவி, சாயிஷாவை கூட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்கிறார்.
அப்போதுதான் ஜெயம்ரவிக்கு அனைத்துமே ஞாபகத்துக்கு வருகிறது. காட்டில் அவர் பிறந்து வளர்ந்தது, அவருக்கென்று ஒரு கூட்டம் இருந்தது, கார்ப்பரேட் கம்பெனிக்காரர்கள் தங்களுடைய இருப்பிடத்தை அழிக்க நினைத்து தன்னுடைய ஆட்களை எல்லாம் காட்டை விட்டே துரத்தியது என அனைத்துமே அவருடைய நினைவில் வருகிறது.

சாயிஷாவை தன்வசம் வைத்துக்கொண்டு தன்னுடைய இனத்தை எப்படி கண்டறிந்தார்? கார்ப்பரேட் கம்பெனிக்காரர்களையும் எப்படி அங்கிருந்து விரட்டி அடித்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஜெயம் ரவி இப்படத்தில் ஒரு இடத்தில்கூட வசனமே பேசவில்லை. படம் முழுக்க தனது முகபாவனையிலேயே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதை மிகவும் நேர்த்தியாகவே செய்திருக்கிறார்கள். இப்படத்தில் இவர் கஷ்டப்பட்டு உழைத்திருப்பது படம் பார்க்கும்போதே தெரிகிறது.
சாயிஷா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். நடனமும் சுழன்று சுழன்று ஆடியிருக்கிறார். எல்லாம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. நடிப்பிலும் சபாஷ் சொல்ல வைக்கிறார். பிரகாஷ் ராஜ் தனது அனுபவ நடிப்பை கொடுத்து படத்திற்கு பலம் சேர்க்க முயற்சித்திருக்கிறார்.

வருணுக்கும் படத்தில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தம்பி ராமையாவின் காமெடி சமீபகால படங்களில் கேட்டு புளித்துப்போனதாகவே இருப்பதால் பெரிதாக எடுபடவில்லை. அர்ஜுனன், வேல ராமமூர்த்தி, ரம்யா சுப்ரமணியன், சாம் பால் உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு எற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து படமாக்கிவரும் விஜய், இந்த படத்திலும் வித்தியாசமான கதையை கையிலெடுத்திருக்கிறார். கஷ்டப்பட்டு உழைக்கக்கூடிய நடிகர்களை வைத்து வேலை வாங்கிவிட்டு திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார். இவர் காமெடியாக எடுத்த காட்சிகளில் எல்லாம் சுத்தமாக சிரிக்கவே தோன்றவில்லை.

காட்டில் வாழ்பவர்கள்தான் மனிதர்களாக வாழ்கிறார்கள். நகரத்தில் வாழும் சிலபேரால் நாம் காட்டுவாசியாகவே தெரிகிறோம் என்ற ஆழமான கருத்தையும் சமூகத்திற்கு சொல்ல வந்திருக்கிறார். காட்டுவாசிகளின் போர்க்குணம், அவர்களின் குணாதிசயங்களை ஜெயம் ரவி மூலமாக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லையென்றாலும், பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. திருவின் ஒளிப்பதிவு அந்தமான் காடுகளை வளைத்து வளைத்து படமாக்கியிருக்கிறது. காட்சிகளிலும் குளுமை இருக்கிறது.
மொத்தத்தில் ‘வனமகன்’ நம் வசமில்லை.
இந்நிலையில், அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் போது, காட்டுவாசியான ஜெயம் ரவியின் மீது கார் ஏற்றிவிடுகிறார்கள். அடிபட்டு கிடக்கும் ஜெயம் ரவிக்கும் சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்கிறார்கள். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் இந்தியா கொண்டு வந்துவிடுகிறார்கள். அவருக்கு சிகிச்சை அளித்து நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர் பழைய நினைவுகளை இழந்துவிடுகிறார்.

மேலும், காடுதான் எல்லாமே என்று வாழ்ந்துவந்த ஜெயம் ரவிக்கு நகர வாழ்க்கை புதுமையாக தெரிகிறது. அதேபோல், மற்றவர்கள் பேசும் மொழியும் இவருக்கு வியப்பை கொடுக்கவே, அவர்களிடமிருந்து தனித்தே வாழ்கிறார். இதற்கிடையில், சாயிஷா காட்டுவாசிகளிடம் எப்படி பழகவேண்டும் என்று தெரிந்துகொண்டு ஜெயம் ரவியுடன் நட்பு வளர்க்கிறாள். நாளடைவில் ஜெயம் ரவி சாயிஷாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறார்.
இந்நிலையில், காணாமல்போன ஜெயம் ரவியை தேடி அந்தமான் காட்டு இலாகா அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். ஜெயம் ரவியை பிடித்துக்கொண்டு அந்தமான் செல்கிறார்கள். ஜெயம் ரவியை மீட்பதாக சாயிஷாவும் அந்தமான் போகிறார். போலீஸ் நிலையத்திலிருந்து தப்பிக்கும் ஜெயம் ரவி, சாயிஷாவை கூட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்கிறார்.
அப்போதுதான் ஜெயம்ரவிக்கு அனைத்துமே ஞாபகத்துக்கு வருகிறது. காட்டில் அவர் பிறந்து வளர்ந்தது, அவருக்கென்று ஒரு கூட்டம் இருந்தது, கார்ப்பரேட் கம்பெனிக்காரர்கள் தங்களுடைய இருப்பிடத்தை அழிக்க நினைத்து தன்னுடைய ஆட்களை எல்லாம் காட்டை விட்டே துரத்தியது என அனைத்துமே அவருடைய நினைவில் வருகிறது.

சாயிஷாவை தன்வசம் வைத்துக்கொண்டு தன்னுடைய இனத்தை எப்படி கண்டறிந்தார்? கார்ப்பரேட் கம்பெனிக்காரர்களையும் எப்படி அங்கிருந்து விரட்டி அடித்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஜெயம் ரவி இப்படத்தில் ஒரு இடத்தில்கூட வசனமே பேசவில்லை. படம் முழுக்க தனது முகபாவனையிலேயே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதை மிகவும் நேர்த்தியாகவே செய்திருக்கிறார்கள். இப்படத்தில் இவர் கஷ்டப்பட்டு உழைத்திருப்பது படம் பார்க்கும்போதே தெரிகிறது.
சாயிஷா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். நடனமும் சுழன்று சுழன்று ஆடியிருக்கிறார். எல்லாம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. நடிப்பிலும் சபாஷ் சொல்ல வைக்கிறார். பிரகாஷ் ராஜ் தனது அனுபவ நடிப்பை கொடுத்து படத்திற்கு பலம் சேர்க்க முயற்சித்திருக்கிறார்.

வருணுக்கும் படத்தில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தம்பி ராமையாவின் காமெடி சமீபகால படங்களில் கேட்டு புளித்துப்போனதாகவே இருப்பதால் பெரிதாக எடுபடவில்லை. அர்ஜுனன், வேல ராமமூர்த்தி, ரம்யா சுப்ரமணியன், சாம் பால் உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு எற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து படமாக்கிவரும் விஜய், இந்த படத்திலும் வித்தியாசமான கதையை கையிலெடுத்திருக்கிறார். கஷ்டப்பட்டு உழைக்கக்கூடிய நடிகர்களை வைத்து வேலை வாங்கிவிட்டு திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார். இவர் காமெடியாக எடுத்த காட்சிகளில் எல்லாம் சுத்தமாக சிரிக்கவே தோன்றவில்லை.

காட்டில் வாழ்பவர்கள்தான் மனிதர்களாக வாழ்கிறார்கள். நகரத்தில் வாழும் சிலபேரால் நாம் காட்டுவாசியாகவே தெரிகிறோம் என்ற ஆழமான கருத்தையும் சமூகத்திற்கு சொல்ல வந்திருக்கிறார். காட்டுவாசிகளின் போர்க்குணம், அவர்களின் குணாதிசயங்களை ஜெயம் ரவி மூலமாக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லையென்றாலும், பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. திருவின் ஒளிப்பதிவு அந்தமான் காடுகளை வளைத்து வளைத்து படமாக்கியிருக்கிறது. காட்சிகளிலும் குளுமை இருக்கிறது.
மொத்தத்தில் ‘வனமகன்’ நம் வசமில்லை.
சிம்பு-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளிவந்துள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் விமர்சனம்.
துபாயில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் கஸ்தூரி, துபாயில் பெரிய டானாக இருப்பவரை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். பெரிய டானுக்கு நெருக்கமானவர்களை சுற்றி வளைக்கிறது போலீஸ். அப்போது மஹத்தையும் கைது செய்து விசாரிக்கிறது. அப்போது அவர் ‘அஸ்வின் தாத்தா’ பற்றிய கதையை கூற ஆரம்பிக்கிறார்.
அதன்பின்னர் 70 காலகட்டத்தை நோக்கி பிளாஷ் பேக் விரிகிறது. மதுரையில் நண்பர்கள் விடிவி கணேஷ், மஹத் உடன் வாழ்ந்து வருகிறார் சிம்பு (மதுர மைக்கேல்). நண்பர்கள்தான் உலகமே என்று வாழ்ந்துவரும் சிம்பு, மதுரையில் இருக்கும் மிகப்பெரிய ஆளுக்கு கீழ் அடியாளாக பணியாற்றி வருகிறார். இதனால், ஊரிலேயே மிகவும் கெத்தான ஆளாக வலம்வருகிறார் சிம்பு.

இந்நிலையில், ஒருநாள் ஸ்ரேயாவை பார்க்கும் சிம்புவுக்கு அவள்மீது காதல் வருகிறது. முதலில் சிம்புவை கண்டுகொள்ளாத ஸ்ரேயா ஒருகட்டத்தில் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இரண்டு பேரும் சேர்ந்து ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுக்கையில், சிம்பு அடியாளாக பணியாற்றுபவரின் மகன் சிம்புவை போலீசில் மாட்டிவிடுகிறான்.
சிம்பு ஜெயிலுக்கு போன நேரத்தில் ஸ்ரேயாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நடத்த பார்க்கிறார்கள். அப்போது, சிம்புவின் நண்பர்கள் அவரை ஜெயிலில் இருந்து தப்பிக்க வைத்து, ஸ்ரேயாவிடம் சேர்த்து வைக்க நினைக்கிறார்கள். ஜெயிலில் இருந்து தப்பிக்கும் சிம்பு, ஸ்ரேயாவை மணமுடித்தால் அவளால் நம்முடன் நிம்மதியாக வாழமுடியாது என்று முடிவெடுத்து, ஊரை விட்டு ஓடி தலைமறைவாகிறார்.
பின்னர் நாட்கள் கடக்கிறது. சிம்புவுக்கும் வயதாகிவிடுகிறது. வயதானபிறகு ‘அஸ்வின் தாத்தா’ என்று அழைக்கப்படும் சிம்பு, தன்னுடைய நண்பர் விஜயகுமார் தன்னைவிட இளம் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதை பார்த்து, தானும் அதேபோல் இளம் வயது பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். அதற்காக, வயதானவரை திருமணம் செய்துள்ள பெண்கள் வேண்டும் என்று விளம்பரமும் கொடுக்கிறார்.

அந்த விளம்பரத்தை பார்த்து நிறைய பேர் வருகிறார்கள். அதில், தமன்னாவும் வருகிறார். தமன்னா மணப்பெண்ணாகத்தான் வந்திருக்கிறாள் என்று நினைக்கும் சிம்பு, அதன்பின்னர், அவள் கோவை சரளாவுக்கு மாப்பிள்ளை தேடித்தான் அங்கு வந்திருப்பதை அறிகிறார். இருப்பினும், தமன்னாவுடன் நட்பு வளர்த்து வருகிறார்.
இந்த நட்பு நாளடைவில் இருவருக்குள்ளும் காதலாக மாறியதா? இல்லையா? என்பதே முதல்பாகத்தின் மீதிக்கதை. கஸ்தூரி தேடும் டானுக்கும், இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்? என்பதை இரண்டாம் பாகத்தில் சொல்லவிருக்கிறார்கள்.
இரண்டு பாகமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகத்தில் சிம்பு, மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா என்ற இரண்டு கெட்டப்புகளில் வருகிறார். மதுர மைக்கேல் கெட்டப்பில் இவர் அறிமுகம் காட்சி அவர் சொல்வதுபோலவே சிறப்பு. மதுர மைக்கேல் கெட்டப்புகளில் ரொம்பவும் மாஸாக காட்டியிருக்கிறார்கள். அதற்கேற்றார்போல், இவருடைய நடிப்பும் படத்திற்கு ரொம்பவும் மாஸாக இருக்கிறது. அறிமுக பாடலில் ரசிகர்களின் தோளின்மீதே நின்று இவர் ஆடும் ஆட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

அஸ்வின் தாத்தா கெட்டப்பில் கொழுக் மொழுக்கென்று இருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கேற்றவாறு நடிப்பிலும், நகைச்சுவையிலும் ரசிக்க வைத்திருக்கிறார். இருப்பினும், இதுவெல்லாம் சிம்புவின் ரசிகர்களுக்கு திருப்திபடுத்தும்படி அமைந்திருக்கிறதா? என்றால் அது கேள்விக்குறியே. சிம்புவின் நண்பராக வரும் மஹத் தனக்கு என்ன வருமோ? அதை அப்படியே திரையில் பிரதிபலித்திருக்கிறார்.
விடிவி கணேஷ் வழக்கம்போல காமெடி, செண்டிமெண்ட் என ரசிக்க வைத்திருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன் வழக்கம்போல் தன்னுடைய குரலாலேயே ரசிகர்கள் வயிறு குலுங்க வைத்திருக்கிறார். ஸ்ரேயா எளிமையாக வந்து எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அமைதியான முகம், மென்மையான கோபம் என தன்னுடைய நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
தமன்னா கிளாமர் உடையில் வந்து அனைவரையும் கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். வயதான தாத்தாவை காதலிக்கும் வெகுளியான பெண்ணாகவும், முதியோர் காப்பகத்தை ஏற்று நடத்தும் பொறுப்பான பெண்ணாகவும் எளிதாக நம்மை கவர்கிறார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு ரசிகர்களின் நாடித்துடிப்பை ரொம்பவும் நுணுக்கமாக அறிந்து வைத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். எந்தெந்த இடத்தில் ரசிகர்களை துள்ளி எழ வைக்கலாம் என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்றார்போல் காட்சிகளை அமைத்திருக்கிறார். அதேபோல், ஒரு கமர்ஷியல் படத்துக்குண்டான அத்தனை அம்சங்களும் இந்த படத்திலும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், படத்தின் திரைக்கதையில் ரொம்பவும் கோட்டை விட்டுவிட்டார். அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரசிக்கும்படியாக படம் இருந்திருக்கும்.
யுவனின் பின்னணி இசைதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. மதுர மைக்கேல் தீம் மியூசிக்தான் படத்தில் மிகப்பெரிய மாஸ். பாடல்களும் காட்சிகளுடன் பார்க்கும்போது கூடுதல் சிறப்பாக இருக்கிறது. கிருஷ்ணன் வசந்த்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. 90-களில் நடக்கும் காலகட்டத்திற்கு ஏற்ற ஒளியமைப்பை வைத்து அந்த காலத்தோடு ஒன்ற வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ சிறப்பு இல்லை.
அதன்பின்னர் 70 காலகட்டத்தை நோக்கி பிளாஷ் பேக் விரிகிறது. மதுரையில் நண்பர்கள் விடிவி கணேஷ், மஹத் உடன் வாழ்ந்து வருகிறார் சிம்பு (மதுர மைக்கேல்). நண்பர்கள்தான் உலகமே என்று வாழ்ந்துவரும் சிம்பு, மதுரையில் இருக்கும் மிகப்பெரிய ஆளுக்கு கீழ் அடியாளாக பணியாற்றி வருகிறார். இதனால், ஊரிலேயே மிகவும் கெத்தான ஆளாக வலம்வருகிறார் சிம்பு.

இந்நிலையில், ஒருநாள் ஸ்ரேயாவை பார்க்கும் சிம்புவுக்கு அவள்மீது காதல் வருகிறது. முதலில் சிம்புவை கண்டுகொள்ளாத ஸ்ரேயா ஒருகட்டத்தில் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இரண்டு பேரும் சேர்ந்து ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுக்கையில், சிம்பு அடியாளாக பணியாற்றுபவரின் மகன் சிம்புவை போலீசில் மாட்டிவிடுகிறான்.
சிம்பு ஜெயிலுக்கு போன நேரத்தில் ஸ்ரேயாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நடத்த பார்க்கிறார்கள். அப்போது, சிம்புவின் நண்பர்கள் அவரை ஜெயிலில் இருந்து தப்பிக்க வைத்து, ஸ்ரேயாவிடம் சேர்த்து வைக்க நினைக்கிறார்கள். ஜெயிலில் இருந்து தப்பிக்கும் சிம்பு, ஸ்ரேயாவை மணமுடித்தால் அவளால் நம்முடன் நிம்மதியாக வாழமுடியாது என்று முடிவெடுத்து, ஊரை விட்டு ஓடி தலைமறைவாகிறார்.
பின்னர் நாட்கள் கடக்கிறது. சிம்புவுக்கும் வயதாகிவிடுகிறது. வயதானபிறகு ‘அஸ்வின் தாத்தா’ என்று அழைக்கப்படும் சிம்பு, தன்னுடைய நண்பர் விஜயகுமார் தன்னைவிட இளம் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதை பார்த்து, தானும் அதேபோல் இளம் வயது பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். அதற்காக, வயதானவரை திருமணம் செய்துள்ள பெண்கள் வேண்டும் என்று விளம்பரமும் கொடுக்கிறார்.

அந்த விளம்பரத்தை பார்த்து நிறைய பேர் வருகிறார்கள். அதில், தமன்னாவும் வருகிறார். தமன்னா மணப்பெண்ணாகத்தான் வந்திருக்கிறாள் என்று நினைக்கும் சிம்பு, அதன்பின்னர், அவள் கோவை சரளாவுக்கு மாப்பிள்ளை தேடித்தான் அங்கு வந்திருப்பதை அறிகிறார். இருப்பினும், தமன்னாவுடன் நட்பு வளர்த்து வருகிறார்.
இந்த நட்பு நாளடைவில் இருவருக்குள்ளும் காதலாக மாறியதா? இல்லையா? என்பதே முதல்பாகத்தின் மீதிக்கதை. கஸ்தூரி தேடும் டானுக்கும், இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்? என்பதை இரண்டாம் பாகத்தில் சொல்லவிருக்கிறார்கள்.
இரண்டு பாகமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகத்தில் சிம்பு, மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா என்ற இரண்டு கெட்டப்புகளில் வருகிறார். மதுர மைக்கேல் கெட்டப்பில் இவர் அறிமுகம் காட்சி அவர் சொல்வதுபோலவே சிறப்பு. மதுர மைக்கேல் கெட்டப்புகளில் ரொம்பவும் மாஸாக காட்டியிருக்கிறார்கள். அதற்கேற்றார்போல், இவருடைய நடிப்பும் படத்திற்கு ரொம்பவும் மாஸாக இருக்கிறது. அறிமுக பாடலில் ரசிகர்களின் தோளின்மீதே நின்று இவர் ஆடும் ஆட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

அஸ்வின் தாத்தா கெட்டப்பில் கொழுக் மொழுக்கென்று இருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கேற்றவாறு நடிப்பிலும், நகைச்சுவையிலும் ரசிக்க வைத்திருக்கிறார். இருப்பினும், இதுவெல்லாம் சிம்புவின் ரசிகர்களுக்கு திருப்திபடுத்தும்படி அமைந்திருக்கிறதா? என்றால் அது கேள்விக்குறியே. சிம்புவின் நண்பராக வரும் மஹத் தனக்கு என்ன வருமோ? அதை அப்படியே திரையில் பிரதிபலித்திருக்கிறார்.
விடிவி கணேஷ் வழக்கம்போல காமெடி, செண்டிமெண்ட் என ரசிக்க வைத்திருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன் வழக்கம்போல் தன்னுடைய குரலாலேயே ரசிகர்கள் வயிறு குலுங்க வைத்திருக்கிறார். ஸ்ரேயா எளிமையாக வந்து எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அமைதியான முகம், மென்மையான கோபம் என தன்னுடைய நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
தமன்னா கிளாமர் உடையில் வந்து அனைவரையும் கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். வயதான தாத்தாவை காதலிக்கும் வெகுளியான பெண்ணாகவும், முதியோர் காப்பகத்தை ஏற்று நடத்தும் பொறுப்பான பெண்ணாகவும் எளிதாக நம்மை கவர்கிறார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு ரசிகர்களின் நாடித்துடிப்பை ரொம்பவும் நுணுக்கமாக அறிந்து வைத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். எந்தெந்த இடத்தில் ரசிகர்களை துள்ளி எழ வைக்கலாம் என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்றார்போல் காட்சிகளை அமைத்திருக்கிறார். அதேபோல், ஒரு கமர்ஷியல் படத்துக்குண்டான அத்தனை அம்சங்களும் இந்த படத்திலும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், படத்தின் திரைக்கதையில் ரொம்பவும் கோட்டை விட்டுவிட்டார். அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரசிக்கும்படியாக படம் இருந்திருக்கும்.
யுவனின் பின்னணி இசைதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. மதுர மைக்கேல் தீம் மியூசிக்தான் படத்தில் மிகப்பெரிய மாஸ். பாடல்களும் காட்சிகளுடன் பார்க்கும்போது கூடுதல் சிறப்பாக இருக்கிறது. கிருஷ்ணன் வசந்த்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. 90-களில் நடக்கும் காலகட்டத்திற்கு ஏற்ற ஒளியமைப்பை வைத்து அந்த காலத்தோடு ஒன்ற வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ சிறப்பு இல்லை.






