என் மலர்
தரவரிசை
யுவன், ஸ்ரவியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘விளையாட்டு ஆரம்பம்’ படத்தின் விமர்சனம்.
ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் நாயகன் யுவன், நாயகி ஸ்ரவியாவை காதலித்து வருகிறார். இவர்களது காதல் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் நிலையில், யுவனுக்கு வேலை பறிபோகிறது. இதையடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், யுவனை எம்.எல்.எம். கம்பெனியில் இண்டர்வியூவுக்கு செல்லுமாறு தூண்டுகிறாள் நாயகி.
யுவனும், நாயகியின் பேச்சை தட்டாமல் எம்.எல்.எம் கம்பெனிக்கு இண்டர்வியூவுக்கு போகிறார். அது பிடித்துப் போகவே வேலையில் சேர்ந்து நல்ல நிலைமைக்கு செல்கிறார்.

இந்நிலையில், யுவன்-ஸ்ரவியாவின் காதல் ஸ்ரவியாவின் அண்ணனும் போலீசுமான ரியாஸ்கானுக்கு தெரிய வருகிறது. ஏற்கெனவே, யுவனுடன் மோதலில் இருக்கும் ரியாஸ்கானுக்கு இவர்களது காதல் பிடிக்காமல் போகவே, இருவரையும் அழைத்து எச்சரிக்கிறார். ஆனால், ரியாஸ்கானின் எச்சரிக்கையை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதனால், எப்படியாவது யுவனை பழிவாங்கவேண்டும் என்று ரியாஸ்கான் திட்டம் தீட்டி வருகிறார்.
அதன்படி, எம்.எல்.எம். கம்பெனி ஒன்றை தொடங்கி, அதில் மோசடிகள் செய்து, அதை யுவன் செய்ததாக சொல்லி மாட்டிவிடுகிறார். இதனால், யுவன் சிறைக்கு செல்ல நேரிடுகிறது.
கடைசியில், யுவன் இந்த பிரச்சினைகளில் இருந்து எப்படி மீண்டார்? தனது காதலியுடன் மீண்டும் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.
எம்.எல்.எம். கம்பெனியில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன என்று பரவலாக ஒரு பேச்சு நடைபெற்று வரும் நிலையில், இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும், இதனால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும் ஒழியும் என்பதை இப்படத்தில் சொல்ல வந்திருக்கிறார்கள் இயக்குனர்கள் சூரியனும், விஜய் ஆர் ஆனந்தும். ஆனால், மக்கள் மனதில் எம்.எல்.எம் கம்பெனிகளை பற்றிய தவறான விஷயங்கள் ஆழமாக பதிந்துவிட்ட நிலையில், இந்த நல்ல விஷயம் மக்களை எப்படி சென்றடையும் என்பது ஐயமே. இருப்பினும், நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு படமாக கொடுத்த இவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

நாயகன் யுவன் இதுவரையிலான படங்களில் எப்படி அப்பாவித்தனமாக தனது முகத்தை வைத்துக் கொண்டு நடித்தாரோ, அதேபோல் இப்படத்திலும் நடித்திருக்கிறார். ஒரு ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் இளைஞனாக நம்மால் இவரை யூகித்து பார்க்க முடியவில்லை. அதேபோல், நடிப்பிலும் இன்னும் கொஞ்சம் தேறவேண்டும்.
நாயகி ஸ்ரவியா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நடிப்பிலும் இன்னும் கொஞ்சம் அழகு கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. காமெடி என்ற பெயரில் பவர் ஸ்டார் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் வெறுப்பைத்தான் வரவழைத்திருக்கின்றன. ரியாஸ்கான் போலீஸ் வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். மற்றொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு இவருடைய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ரசிக்க தூண்டுகிறது. பின்னணி இசையிலும் படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறார். அருண் மொழி சோழனின் கேமரா இன்னும் கொஞ்சம் காட்சிகளை மெருகேற்றியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘விளையாட்டு ஆரம்பம்’ வெற்றிக்கான போராட்டம்.
யுவனும், நாயகியின் பேச்சை தட்டாமல் எம்.எல்.எம் கம்பெனிக்கு இண்டர்வியூவுக்கு போகிறார். அது பிடித்துப் போகவே வேலையில் சேர்ந்து நல்ல நிலைமைக்கு செல்கிறார்.

இந்நிலையில், யுவன்-ஸ்ரவியாவின் காதல் ஸ்ரவியாவின் அண்ணனும் போலீசுமான ரியாஸ்கானுக்கு தெரிய வருகிறது. ஏற்கெனவே, யுவனுடன் மோதலில் இருக்கும் ரியாஸ்கானுக்கு இவர்களது காதல் பிடிக்காமல் போகவே, இருவரையும் அழைத்து எச்சரிக்கிறார். ஆனால், ரியாஸ்கானின் எச்சரிக்கையை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதனால், எப்படியாவது யுவனை பழிவாங்கவேண்டும் என்று ரியாஸ்கான் திட்டம் தீட்டி வருகிறார்.
அதன்படி, எம்.எல்.எம். கம்பெனி ஒன்றை தொடங்கி, அதில் மோசடிகள் செய்து, அதை யுவன் செய்ததாக சொல்லி மாட்டிவிடுகிறார். இதனால், யுவன் சிறைக்கு செல்ல நேரிடுகிறது.
கடைசியில், யுவன் இந்த பிரச்சினைகளில் இருந்து எப்படி மீண்டார்? தனது காதலியுடன் மீண்டும் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.
எம்.எல்.எம். கம்பெனியில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன என்று பரவலாக ஒரு பேச்சு நடைபெற்று வரும் நிலையில், இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும், இதனால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும் ஒழியும் என்பதை இப்படத்தில் சொல்ல வந்திருக்கிறார்கள் இயக்குனர்கள் சூரியனும், விஜய் ஆர் ஆனந்தும். ஆனால், மக்கள் மனதில் எம்.எல்.எம் கம்பெனிகளை பற்றிய தவறான விஷயங்கள் ஆழமாக பதிந்துவிட்ட நிலையில், இந்த நல்ல விஷயம் மக்களை எப்படி சென்றடையும் என்பது ஐயமே. இருப்பினும், நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு படமாக கொடுத்த இவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

நாயகன் யுவன் இதுவரையிலான படங்களில் எப்படி அப்பாவித்தனமாக தனது முகத்தை வைத்துக் கொண்டு நடித்தாரோ, அதேபோல் இப்படத்திலும் நடித்திருக்கிறார். ஒரு ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் இளைஞனாக நம்மால் இவரை யூகித்து பார்க்க முடியவில்லை. அதேபோல், நடிப்பிலும் இன்னும் கொஞ்சம் தேறவேண்டும்.
நாயகி ஸ்ரவியா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நடிப்பிலும் இன்னும் கொஞ்சம் அழகு கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. காமெடி என்ற பெயரில் பவர் ஸ்டார் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் வெறுப்பைத்தான் வரவழைத்திருக்கின்றன. ரியாஸ்கான் போலீஸ் வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். மற்றொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு இவருடைய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ரசிக்க தூண்டுகிறது. பின்னணி இசையிலும் படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறார். அருண் மொழி சோழனின் கேமரா இன்னும் கொஞ்சம் காட்சிகளை மெருகேற்றியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘விளையாட்டு ஆரம்பம்’ வெற்றிக்கான போராட்டம்.
ஹரிஷ், யாமினி பாஸ்கர், சித்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘முன்னோடி’ படத்தின் விமர்சனம்
படித்து முடித்துவிட்டு வீட்டுக்கு அடங்காமல் சுற்றும் நாயகன் ஹரிஷ், தனது அம்மா தம்பி மீது மட்டும் அதிக பாசம் காட்டுவதால் அவர் மீது வெறுப்பாக இருக்கிறார். இந்த நிலையில் உள்ளூர் தாதாவான அர்ஜுனாவின் உயிரை காப்பாற்றும் ஹரிஷ், அவருடனேயே இருந்து அடியாள் வேலையும் செய்கிறார்.
இந்நிலையில் கல்லூரி மாணவியான நடிகை யாமினி பாஸ்கரை பார்த்ததும் காதல் வலையில் விழும் ஹரிஷ், அவள் பின்னாலேயே சுற்றுகிறார். இதற்கிடையில், தாதா மைத்துனருக்கு ஹரிஷை பிடிக்காமல் போகவே, ஹரிஷையும், அர்ஜுனாவையும்யும் பிரிக்க நினைக்கிறார்.

இதற்கிடையில் தான் காதலித்த யாமினி தனது தம்பியை காதலிப்பதாக நினைத்து ஆவேசப்படும் ஹரிஷ், அவனை கொலை செய்வதற்காக கத்தி எடுத்துக்கொண்டு செல்லும் வேளையில், தனது தம்பி தனது காதலை சேர்த்து வைக்க முயற்சிப்பது கண்டு நெகிழ்ந்து போகிறார். அதேபோல், தம்பி மீது மட்டும் அவளது அம்மா ஏன் பாசம் காட்டுகிறாள் என்கிற உண்மையும் அவருக்கு தெரிய வருகிறது.
இதனால், தனது தாய் மற்றும் தம்பி மீது பாசம் ஏற்பட்டு அவர்களுக்காக வாழத் தொடங்குகிறார். அதேநேரத்தில் தாதாவை விட்டும் விலகுகிறார். ஹரிஷ் தங்களைவிட்டு பிரிந்தால் போலீசுக்கு ஏதாவது தகவல் கொடுத்துவிடுவான் என்று சதித்திட்டம் தீட்டி, அவனை கொலை செய்ய அர்ஜுனனை தூண்டிவிடுகிறார் அவரது மைத்துனர். இவனது சதி வலையில் அவரும் விழுந்துவிட, ஹரிஷை கொல்ல ஆள் அனுப்புகிறார்.

ஆனால், இந்த தாக்குதலில் ஹரிஷின் தம்பியை ரவுடிகள் குத்தி கொன்றுவிடுகின்றனர். அவர்களை பழிவாங்க ஹரிஷ் துடிக்கிறார். இறுதியில், தம்பியை கொன்றவர்களை ஹரிஷ் பழிவாங்கினாரா? தம்பியை ஏன் அவர்கள் கொன்றார்கள்? என்பதற்கு விடை கொடுத்திருக்கிறார்கள்.
துறுதுறுவென கதாபாத்திரத்தில் ஹரிஷ் நம்மை கவர்கிறார். படம் முழுக்க யதார்ததமான நடிப்பால் கவர்ந்திருக்கிறார். சண்டைக் காட்சியிலும் அசர வைத்திருக்கிறார். யாமினி பாஸ்கருக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. வழக்கமான கதாநாயகிகள் போலவே இப்படத்தில் நாயகனுடன் ரொமான்ஸ் செய்ய மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.

தாதாவாக வரும் அர்ஜுனா மிரட்டியிருக்கிறார். கோவிலில் தன்னை சுற்றி வளைக்கும் ரவுடிகளிடமிருந்து இவர் தப்பிக்கும் காட்சிகள் எல்லாம் பலே சொல்ல வைக்கிறது. நாயகனின் தாயாக நடித்திருக்கும் சித்தாரா அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
இயக்குனர் குமார் தாதா கதையை குடும்ப பாச உறவுகளுடன் விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கிறார். ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் அடுத்து வரும் காட்சிகள் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. படத்தில் வரும் டுவிஸ்டுகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
பிரபு சங்கர் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ’முன்னோடி’ முன்னேற்றம்.
இந்நிலையில் கல்லூரி மாணவியான நடிகை யாமினி பாஸ்கரை பார்த்ததும் காதல் வலையில் விழும் ஹரிஷ், அவள் பின்னாலேயே சுற்றுகிறார். இதற்கிடையில், தாதா மைத்துனருக்கு ஹரிஷை பிடிக்காமல் போகவே, ஹரிஷையும், அர்ஜுனாவையும்யும் பிரிக்க நினைக்கிறார்.

இதற்கிடையில் தான் காதலித்த யாமினி தனது தம்பியை காதலிப்பதாக நினைத்து ஆவேசப்படும் ஹரிஷ், அவனை கொலை செய்வதற்காக கத்தி எடுத்துக்கொண்டு செல்லும் வேளையில், தனது தம்பி தனது காதலை சேர்த்து வைக்க முயற்சிப்பது கண்டு நெகிழ்ந்து போகிறார். அதேபோல், தம்பி மீது மட்டும் அவளது அம்மா ஏன் பாசம் காட்டுகிறாள் என்கிற உண்மையும் அவருக்கு தெரிய வருகிறது.
இதனால், தனது தாய் மற்றும் தம்பி மீது பாசம் ஏற்பட்டு அவர்களுக்காக வாழத் தொடங்குகிறார். அதேநேரத்தில் தாதாவை விட்டும் விலகுகிறார். ஹரிஷ் தங்களைவிட்டு பிரிந்தால் போலீசுக்கு ஏதாவது தகவல் கொடுத்துவிடுவான் என்று சதித்திட்டம் தீட்டி, அவனை கொலை செய்ய அர்ஜுனனை தூண்டிவிடுகிறார் அவரது மைத்துனர். இவனது சதி வலையில் அவரும் விழுந்துவிட, ஹரிஷை கொல்ல ஆள் அனுப்புகிறார்.

ஆனால், இந்த தாக்குதலில் ஹரிஷின் தம்பியை ரவுடிகள் குத்தி கொன்றுவிடுகின்றனர். அவர்களை பழிவாங்க ஹரிஷ் துடிக்கிறார். இறுதியில், தம்பியை கொன்றவர்களை ஹரிஷ் பழிவாங்கினாரா? தம்பியை ஏன் அவர்கள் கொன்றார்கள்? என்பதற்கு விடை கொடுத்திருக்கிறார்கள்.
துறுதுறுவென கதாபாத்திரத்தில் ஹரிஷ் நம்மை கவர்கிறார். படம் முழுக்க யதார்ததமான நடிப்பால் கவர்ந்திருக்கிறார். சண்டைக் காட்சியிலும் அசர வைத்திருக்கிறார். யாமினி பாஸ்கருக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. வழக்கமான கதாநாயகிகள் போலவே இப்படத்தில் நாயகனுடன் ரொமான்ஸ் செய்ய மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.

தாதாவாக வரும் அர்ஜுனா மிரட்டியிருக்கிறார். கோவிலில் தன்னை சுற்றி வளைக்கும் ரவுடிகளிடமிருந்து இவர் தப்பிக்கும் காட்சிகள் எல்லாம் பலே சொல்ல வைக்கிறது. நாயகனின் தாயாக நடித்திருக்கும் சித்தாரா அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
இயக்குனர் குமார் தாதா கதையை குடும்ப பாச உறவுகளுடன் விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கிறார். ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் அடுத்து வரும் காட்சிகள் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. படத்தில் வரும் டுவிஸ்டுகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
பிரபு சங்கர் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ’முன்னோடி’ முன்னேற்றம்.
இந்த்ரா இயக்கி, இசையமைத்து, நடித்து வெளியாகி உள்ள டியூப்லைட் படத்தின் விமர்சனம்.
நாயகன் இந்த்ரா அவனது நண்பர்களுடன் இணைந்து, சமூக வலைதளங்களில் பெண்கள் பெயரில் போலி கணக்கு தொடங்கி அதன் மூலம் சில இளைஞர்களை ஏமாற்றி வருகிறார். இவ்வாறாக ஒரு இளைஞரை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, கார் விபத்தில் சிக்கி இந்த்ராவின் காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பு துண்டிக்கப்படுகிறது. இதையடுத்து யார் பேசினாலும், அது 5 நொடிகள் கழித்தே இந்த்ராவின் காதுக்கு கேட்கும் என்று மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர்.
இதனை சரிசெய்ய பல மருத்துவர்களை நாடியும், அதற்கான தீர்வு மட்டும் கிடைக்கவில்லை. எனினும் தொடர்ந்து பல்வேறு மருத்துவர்களை சந்தித்து வரும் இந்த்ரா, ஒரு கட்டத்தில் மருத்துவராக வரும் பாண்டியராஜனை சந்திக்கிறான். ராசியில்லாத மருத்துவர் என்று பெயர் வாங்கிய பாண்டியராஜனிடம் சிகிச்சைக்காக யாரும் செல்வதில்லை.

ஆனால் இந்த்ரா மட்டும் பாண்டியராஜிடம் சிகிச்சை பெறுகிறான். இது ஒருபுறம் இருக்க நாயகி அதிதி, படம் வரையும் கலைஞராக இருந்து வருகிறார். நாயகன் சென்ற அதே மருத்துவமனையில் மனரீதியில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்களிடம் பேசி, அப்படியே வரையும் கலைஞராக பணியாற்றி வருகிறாள். இந்நிலையில், அதிதியை சந்திக்கும் இந்த்ராவுக்கு அவள் மீது காதல் வருகிறது.
இதனிடையே இந்த்ராவிடம் பேஸ்புக் மூலம் ஏமாற்றப்பட்ட இளைஞர் தன்னை ஏமாற்றியவர்களை பழிவாங்க முயற்சி செய்கிறான். மறுபுறத்தில் தனது காதலை அதிதியிடம் வெளிப்படுத்த முடியாமல் இந்த்ரா தவிக்கிறான். கடைசியில் இந்த்ராவின் காதல் வெற்றி பெற்றதா? அவனது பிரச்சனை சரியானதா? பாதிக்கப்பட்ட அந்த இளைஞன் இந்த்ராவை பழிவாங்கினானா? என்பது படத்தின் மீதிக்கதை.

இந்த்ரா படத்தில் மிகையான நடிப்பை வெளிப்படுத்தி பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறார். ஓரளவுக்கு கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்திருந்தாலே போதுமானது. இருப்பினும், ஒருசில இடங்களில் இவரது நடிப்பும், முகபாவணையும் ரசிக்கும்படி இருக்கிறது.
கேரள வரவான அதிதி படம் முழுக்க அழகு பதுமையாக வலம்வந்திருக்கிறார். அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. பாண்டியராஜன் தனது அனுபவ நடிப்பில் தனக்கே உண்டான நக்கலுடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இருப்பினும், அவரை முழுமையாக பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. பிற நடிகர்களும் படத்தின் கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி கதை ஓட்டத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.
நாயகன் இந்த்ராவே படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து இயக்கியிருக்கும் இந்த்ரா அதனை காட்சிப்படுத்துவதில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். ஒன்று இயக்கத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம், அல்லது நடிப்பிலாவது கவனம் செலுத்தியிருக்கலாம். அப்படியில்லாமல் இரண்டிலும் சரிவர கவனம் செலுத்தாமல் படத்தை சொதப்பியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
எஸ்.ஜே.சூர்யா பாஷையில் சொல்ல வேண்டுமானால், இருக்கு.... ஆனால் இல்லை... அந்த வகையில் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் என்ன இருக்கு என்றும் சொல்லமுடியவில்லை. என்ன இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. எனினும் வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
படத்தின் பின்னணி இசையில் இந்த்ராவின் பங்கு சிறப்பு. பின்னணி இசை படத்திற்கு பலம் அளித்தாலும், பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லை. ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் படம் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் ‘ட்யூப்லைட்’ பளிச்சிடவில்லை.
இதனை சரிசெய்ய பல மருத்துவர்களை நாடியும், அதற்கான தீர்வு மட்டும் கிடைக்கவில்லை. எனினும் தொடர்ந்து பல்வேறு மருத்துவர்களை சந்தித்து வரும் இந்த்ரா, ஒரு கட்டத்தில் மருத்துவராக வரும் பாண்டியராஜனை சந்திக்கிறான். ராசியில்லாத மருத்துவர் என்று பெயர் வாங்கிய பாண்டியராஜனிடம் சிகிச்சைக்காக யாரும் செல்வதில்லை.

ஆனால் இந்த்ரா மட்டும் பாண்டியராஜிடம் சிகிச்சை பெறுகிறான். இது ஒருபுறம் இருக்க நாயகி அதிதி, படம் வரையும் கலைஞராக இருந்து வருகிறார். நாயகன் சென்ற அதே மருத்துவமனையில் மனரீதியில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்களிடம் பேசி, அப்படியே வரையும் கலைஞராக பணியாற்றி வருகிறாள். இந்நிலையில், அதிதியை சந்திக்கும் இந்த்ராவுக்கு அவள் மீது காதல் வருகிறது.
இதனிடையே இந்த்ராவிடம் பேஸ்புக் மூலம் ஏமாற்றப்பட்ட இளைஞர் தன்னை ஏமாற்றியவர்களை பழிவாங்க முயற்சி செய்கிறான். மறுபுறத்தில் தனது காதலை அதிதியிடம் வெளிப்படுத்த முடியாமல் இந்த்ரா தவிக்கிறான். கடைசியில் இந்த்ராவின் காதல் வெற்றி பெற்றதா? அவனது பிரச்சனை சரியானதா? பாதிக்கப்பட்ட அந்த இளைஞன் இந்த்ராவை பழிவாங்கினானா? என்பது படத்தின் மீதிக்கதை.

இந்த்ரா படத்தில் மிகையான நடிப்பை வெளிப்படுத்தி பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறார். ஓரளவுக்கு கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்திருந்தாலே போதுமானது. இருப்பினும், ஒருசில இடங்களில் இவரது நடிப்பும், முகபாவணையும் ரசிக்கும்படி இருக்கிறது.
கேரள வரவான அதிதி படம் முழுக்க அழகு பதுமையாக வலம்வந்திருக்கிறார். அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. பாண்டியராஜன் தனது அனுபவ நடிப்பில் தனக்கே உண்டான நக்கலுடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இருப்பினும், அவரை முழுமையாக பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. பிற நடிகர்களும் படத்தின் கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி கதை ஓட்டத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.
நாயகன் இந்த்ராவே படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து இயக்கியிருக்கும் இந்த்ரா அதனை காட்சிப்படுத்துவதில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். ஒன்று இயக்கத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம், அல்லது நடிப்பிலாவது கவனம் செலுத்தியிருக்கலாம். அப்படியில்லாமல் இரண்டிலும் சரிவர கவனம் செலுத்தாமல் படத்தை சொதப்பியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
எஸ்.ஜே.சூர்யா பாஷையில் சொல்ல வேண்டுமானால், இருக்கு.... ஆனால் இல்லை... அந்த வகையில் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் என்ன இருக்கு என்றும் சொல்லமுடியவில்லை. என்ன இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. எனினும் வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
படத்தின் பின்னணி இசையில் இந்த்ராவின் பங்கு சிறப்பு. பின்னணி இசை படத்திற்கு பலம் அளித்தாலும், பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லை. ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் படம் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் ‘ட்யூப்லைட்’ பளிச்சிடவில்லை.
சுரேஷ் சங்கைய்யா இயக்கத்தில் விதார்த் - ரவீணா ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் விமர்சனம்.
நாயகன் விதார்த்துக்கு திருமணம் நடந்தால் குலதெய்வம் கோவிலில் கிடாய் வெட்டி சாமி கும்பிடுவதாக அவரது அம்மா வேண்டிக் கொள்கிறார். இந்நிலையில், விதார்த்துக்கும் ரவீணாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இதனால், தனது வேண்டுதலை நிறைவேற்ற குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடிவெடுக்கிறார் விதார்த்தின் அம்மா.
அதன்படி, விதார்த், ரவீணா, விதார்த்தின் அம்மா, ரவீணாவின் பெற்றோர், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் என அவரது சொந்த பந்தங்கள் எல்லோரும் ஒரு லாரியில் குலதெய்வம் கோவிலுக்கு பயணமாகிறார்கள். நடுவில் அந்த லாரியை விதார்த் ஓட்டி செல்லும்போது, சடாரென்று பிரேக் போடுகிறார். என்னவென்று எல்லோரும் யோசிக்கையில், இவர்கள் லாரிக்கு கீழே ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து கிடப்பது தெரிகிறது.

இறந்த நிலையில் கிடக்கும் அவரை பார்த்ததும் அனைவரும் பதற்றமடைகிறார்கள். அந்த இடத்தில் யாரும் இல்லாததால் அந்த விபத்தை மறைக்கப் பார்க்கிறார்கள். இதற்கு விதார்த்தின் உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், கடைசியில் இறந்த நபரை விபத்து நடந்த இடத்தின் பக்கத்திலேயே மறைத்து வைக்கிறார்கள்.
அதன்பின்னர், நடந்த சம்பவத்தை தனது மாமாவான வழக்கறிஞர் ஜார்ஜிடம், விதார்த் போனில் கூறுகிறார். அவர் சம்பவ இடத்திற்கு வந்து அனைவருக்கும் ஆறுதல் கூறிவிட்டு, தனது மருத்துவ நண்பரை வரவழைக்கிறார். மருத்துவரும் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை பரிசோதிக்கிறார். அப்போது இறந்து போனவர் விஷம் அருந்திதான் இறந்து போயிருக்கிறார் என்றும், விபத்தில் அவர் உயிரிழக்கவில்லை என்றும் ஜார்ஜிடம் கூறுகிறார். ஆனால், இந்த உண்மையை விதார்த்திடம் கூறாமல் மறைக்கிறார் ஜார்ஜ்.
லாரி ஏற்றியதால்தான் அவர் உயிரிழந்ததாகவும், இதில் யாராவது ஒருவர் குற்றவாளியாக கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்று விதார்த்திடம் ஜார்ஜ் கூறுகிறார். ஆனால், இந்த விஷயம் எப்படியோ போலீசுக்கு தெரியவர, லாரியில் சென்ற அனைவர் மீதும் வழக்கு பதியப்படுகிறது.

இந்த பிரச்சினையில் இருந்து அனைவரும் மீண்டார்களா? அல்லது அவர்களுக்கு தண்டனை கிடைத்ததா? ஜார்ஜ் ஏன் விதார்த்திடம் உண்மையை மறைத்தார்? அதன் பின்னணில் என்ன இருக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கிராமத்தில் வாழும் ஒரு இளைஞனாக விதார்த் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். பாசத்தை காட்டுவதிலும், பிரச்சனைகளை சமாளிப்பதிலும் பொறுமையை கடைப்பிடிக்கும் விதார்த், தனது வயது குறித்து கேலி செய்பவர்களிடம் சண்டை பிடிப்பது ரசிக்கும்படி இருக்கிறது.
ரவீணா தனது முதல் படத்திலேயே நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருக்கிறார். அவரது நடிப்பும், முக பாவனைகளும் ரசிக்கும்படி இருக்கிறது. ரவீணாவுக்கு படத்தில் அதிகளவில் நடிப்பு இல்லாவிட்டாலும், தான் வரும் காட்சிக்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

படத்தின் ஓட்டத்திற்கும், திருப்புமுனைக்கும் காரணமான ஜார்ஜ், வழக்கறிஞராக புதுமையான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மற்றபடி ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் என அனைவருமே படத்தின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.
ஒரு ஆட்டை பலிகொடுக்க செல்லும் ஒரு குடும்பம் ஒரு விபத்தால் என்னென்ன பிரச்சினைகள் சந்தித்தது என்பதை இப்படத்தில் இயக்குனர் சுரேஷ் சங்கையா. சொல்லியிருக்கிறார். உயிர் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான் என்பதை இப்படத்தில் வித்தியாசமான கதையுடன் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். படத்தின் நாயகனே வசனங்கள் என்று கூறுமளவுக்கு, அந்த பகுதி மக்களின் பேச்சுக்கு ஏற்றபடி வசனங்கள் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பு. ஜார்ஜின் கதாபாத்திரத்தை முழுமையாக்காதது படத்தில் ஒரு குறையாக கூறலாம். மற்றபடி அன்பு, பாசம், வளர்ப்பு பிராணிகள் மீது குழந்தைகள் வைத்திருக்கும் அன்பு என சிறுசிறு காட்சிகள் கூட ரசிக்கும்படி இருக்கிறது.
ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவில் கிராமத்தின் பின்னணி அழகாக காட்டப்பட்டிருக்கிறது. ஆர்.ரகுராமின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன்படி, விதார்த், ரவீணா, விதார்த்தின் அம்மா, ரவீணாவின் பெற்றோர், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் என அவரது சொந்த பந்தங்கள் எல்லோரும் ஒரு லாரியில் குலதெய்வம் கோவிலுக்கு பயணமாகிறார்கள். நடுவில் அந்த லாரியை விதார்த் ஓட்டி செல்லும்போது, சடாரென்று பிரேக் போடுகிறார். என்னவென்று எல்லோரும் யோசிக்கையில், இவர்கள் லாரிக்கு கீழே ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து கிடப்பது தெரிகிறது.

இறந்த நிலையில் கிடக்கும் அவரை பார்த்ததும் அனைவரும் பதற்றமடைகிறார்கள். அந்த இடத்தில் யாரும் இல்லாததால் அந்த விபத்தை மறைக்கப் பார்க்கிறார்கள். இதற்கு விதார்த்தின் உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், கடைசியில் இறந்த நபரை விபத்து நடந்த இடத்தின் பக்கத்திலேயே மறைத்து வைக்கிறார்கள்.
அதன்பின்னர், நடந்த சம்பவத்தை தனது மாமாவான வழக்கறிஞர் ஜார்ஜிடம், விதார்த் போனில் கூறுகிறார். அவர் சம்பவ இடத்திற்கு வந்து அனைவருக்கும் ஆறுதல் கூறிவிட்டு, தனது மருத்துவ நண்பரை வரவழைக்கிறார். மருத்துவரும் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை பரிசோதிக்கிறார். அப்போது இறந்து போனவர் விஷம் அருந்திதான் இறந்து போயிருக்கிறார் என்றும், விபத்தில் அவர் உயிரிழக்கவில்லை என்றும் ஜார்ஜிடம் கூறுகிறார். ஆனால், இந்த உண்மையை விதார்த்திடம் கூறாமல் மறைக்கிறார் ஜார்ஜ்.
லாரி ஏற்றியதால்தான் அவர் உயிரிழந்ததாகவும், இதில் யாராவது ஒருவர் குற்றவாளியாக கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்று விதார்த்திடம் ஜார்ஜ் கூறுகிறார். ஆனால், இந்த விஷயம் எப்படியோ போலீசுக்கு தெரியவர, லாரியில் சென்ற அனைவர் மீதும் வழக்கு பதியப்படுகிறது.

இந்த பிரச்சினையில் இருந்து அனைவரும் மீண்டார்களா? அல்லது அவர்களுக்கு தண்டனை கிடைத்ததா? ஜார்ஜ் ஏன் விதார்த்திடம் உண்மையை மறைத்தார்? அதன் பின்னணில் என்ன இருக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கிராமத்தில் வாழும் ஒரு இளைஞனாக விதார்த் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். பாசத்தை காட்டுவதிலும், பிரச்சனைகளை சமாளிப்பதிலும் பொறுமையை கடைப்பிடிக்கும் விதார்த், தனது வயது குறித்து கேலி செய்பவர்களிடம் சண்டை பிடிப்பது ரசிக்கும்படி இருக்கிறது.
ரவீணா தனது முதல் படத்திலேயே நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருக்கிறார். அவரது நடிப்பும், முக பாவனைகளும் ரசிக்கும்படி இருக்கிறது. ரவீணாவுக்கு படத்தில் அதிகளவில் நடிப்பு இல்லாவிட்டாலும், தான் வரும் காட்சிக்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

படத்தின் ஓட்டத்திற்கும், திருப்புமுனைக்கும் காரணமான ஜார்ஜ், வழக்கறிஞராக புதுமையான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மற்றபடி ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் என அனைவருமே படத்தின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.
ஒரு ஆட்டை பலிகொடுக்க செல்லும் ஒரு குடும்பம் ஒரு விபத்தால் என்னென்ன பிரச்சினைகள் சந்தித்தது என்பதை இப்படத்தில் இயக்குனர் சுரேஷ் சங்கையா. சொல்லியிருக்கிறார். உயிர் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான் என்பதை இப்படத்தில் வித்தியாசமான கதையுடன் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். படத்தின் நாயகனே வசனங்கள் என்று கூறுமளவுக்கு, அந்த பகுதி மக்களின் பேச்சுக்கு ஏற்றபடி வசனங்கள் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பு. ஜார்ஜின் கதாபாத்திரத்தை முழுமையாக்காதது படத்தில் ஒரு குறையாக கூறலாம். மற்றபடி அன்பு, பாசம், வளர்ப்பு பிராணிகள் மீது குழந்தைகள் வைத்திருக்கும் அன்பு என சிறுசிறு காட்சிகள் கூட ரசிக்கும்படி இருக்கிறது.
ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவில் கிராமத்தின் பின்னணி அழகாக காட்டப்பட்டிருக்கிறது. ஆர்.ரகுராமின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தாஜ் இயக்கத்தில் நட்டி நடராஜ் - ரூஹி சிங் - அர்ஜுனன் நடிப்பில் வெளியான போங்கு படத்தின் விமர்சனம்.
நட்டி நடராஜ், ரூஹி சிங், அர்ஜுனன் மூன்று பேரும் விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்யும் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். எம்.எல்ஏ. ஒருவர் தனது மகளுக்கு கார் ஒன்றை பரிசளிக்க எண்ணி, நட்டி பணிபுரியும் கார் கம்பெனியில் ஒரு காரை புக் செய்கிறார். அந்த காரை எம்.எல்.ஏ-வின் வீட்டில் கொண்டு டெலிவரி செய்ய நட்ராஜ், அர்ஜுன் இருவரும் செல்லும்போது, மர்ம நபர்கள் வழிமறித்து அந்த காரை கடத்திச் செல்கின்றனர்.
அந்த காரை நட்ராஜும் அர்ஜுனனும் சேர்ந்துதான் கடத்தியதாக போலீஸார் இருவரையும் கைது செய்கின்றனர். மேலும் அந்த கார் கம்பெனியில் இருந்து ரூஹி சிங், நட்ராஜ், அர்ஜுனன் 3 பேரும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். அதேவேளையில் அவர்கள் வேறு எந்த கம்பெனியிலும் சேரமுடியாதபடி கருப்பு முத்திரையும் குத்தப்படுகின்றனர்.

இதையடுத்து ஜெயிலில் இருக்கும் இருவரையும் ரூஹி சிங் பெயிலில் எடுக்க, தனது ஜெயில் நட்பின் மூலம் நட்டி தனது நண்பர்களுடன் இணைந்து கார் திருட்டு தொழிலில் ஈடுபடுகின்றார். அதில் முதல் திருட்டிலேயே அவருக்கு ரூ.10 கோடி பணமும் கிடைக்கிறது. அதன் பின்னர் முனிஸ்காந்தும் இவர்களது கூட்டணியில் சேருகிறார்.
இந்நிலையில், மதுரையில் தாதாவான சரத் லோகித்ஸ்வா கைவசம் இருக்கும் 10 சொகுசு கார்களை கடத்தி வரும்படி நட்டிக்கு உத்தரவு வருகிறது. இதையடுத்து அந்த கார்களை கடத்துவதற்காக, தனது குழுவுடன் மதுரை செல்லும் நட்டி, சரத் லோகித்ஸ்வாவின் கார்களை கடத்த திட்டம் போடுகிறார். அப்போது நட்டியிடம் இருந்து மர்மநபர்கள் கடத்தி சென்ற காரும் அங்கு இருக்க, அதை பார்த்த நட்டி அந்த காரையும் மீட்க போராடுகிறார்.

இறுதியில், நட்டி தன்னிடமிருந்து கடத்தப்பட்ட காரை மீட்டு அதன் உரிமையாளரிடம் கொண்டு சேர்த்தாரா? சரத் லோகித்ஸ்வாவிடம் உள்ள 10 சொகுசு கார்களையும் அவர் திருடினாரா? நட்டியிடம் இருந்து சரத் லோகித்ஸ்வா ஏன் காரை கடத்தி வந்தார்? என்பது படத்தின் மீதிக்கதை.
‘சதுரங்க வேட்டை’ படத்திற்கு பிறகு நட்டி மீண்டும் ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். அவருக்கு ஏற்ற கதைக்களம். அது சிறப்பாக அமைந்ததால், அதற்கேற்றவாறு இவரது நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது. நட்டியின் படபட பேச்சும், வசனங்களும் ரசிக்கும்படி இருக்கிறது.

நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை ரூஹி சிங்கிற்கு அமையவில்லை என்றாலும், காட்சிக்கு பக்கபலமாக தேவையான இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். அர்ஜுனன் காமெடியிலும், நடிப்பிலும் ரசிக்க வைத்திருக்கிறார். முனிஸ்காந்த் அவருக்கே உரிய பாணியில் ரசிக்க வைத்திருக்கிறார்.
சரத் லோகித்ஸ்வா ஒரு மிரட்டல் வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்டிக்கு எதிராக அவரது பேச்சும், நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. அதுல் குல்கர்னி குறைவான காட்சிகளிலே வந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தில் அவரது நடிப்புக்கு தீனி போடும்படியான கதாபாத்திரம் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இயக்குநர் தாஜ் ஒரு வித்தியாசமான கதையை சிறப்பாக இயக்கியிருக்கிறார். நட்டி, அர்ஜுனின் கதாபாத்திரம் திரையில் பார்க்க ரசிக்கும்படி இருக்கிறது. அதற்கேற்றாற்போல் திரைக்கதையை அமைத்திருப்பது சிறப்பு. வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். தனது வாழ்க்கையை கெடுத்த சரத் லோகித்ஸ்வாவை பழிவாங்கும் நட்டியின் துடிப்பும், அதற்கேற்ற காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கிறது.
மகேஷ் முத்துச்சாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் ‘போங்கு' கெத்தான கேங்கு.
அந்த காரை நட்ராஜும் அர்ஜுனனும் சேர்ந்துதான் கடத்தியதாக போலீஸார் இருவரையும் கைது செய்கின்றனர். மேலும் அந்த கார் கம்பெனியில் இருந்து ரூஹி சிங், நட்ராஜ், அர்ஜுனன் 3 பேரும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். அதேவேளையில் அவர்கள் வேறு எந்த கம்பெனியிலும் சேரமுடியாதபடி கருப்பு முத்திரையும் குத்தப்படுகின்றனர்.

இதையடுத்து ஜெயிலில் இருக்கும் இருவரையும் ரூஹி சிங் பெயிலில் எடுக்க, தனது ஜெயில் நட்பின் மூலம் நட்டி தனது நண்பர்களுடன் இணைந்து கார் திருட்டு தொழிலில் ஈடுபடுகின்றார். அதில் முதல் திருட்டிலேயே அவருக்கு ரூ.10 கோடி பணமும் கிடைக்கிறது. அதன் பின்னர் முனிஸ்காந்தும் இவர்களது கூட்டணியில் சேருகிறார்.
இந்நிலையில், மதுரையில் தாதாவான சரத் லோகித்ஸ்வா கைவசம் இருக்கும் 10 சொகுசு கார்களை கடத்தி வரும்படி நட்டிக்கு உத்தரவு வருகிறது. இதையடுத்து அந்த கார்களை கடத்துவதற்காக, தனது குழுவுடன் மதுரை செல்லும் நட்டி, சரத் லோகித்ஸ்வாவின் கார்களை கடத்த திட்டம் போடுகிறார். அப்போது நட்டியிடம் இருந்து மர்மநபர்கள் கடத்தி சென்ற காரும் அங்கு இருக்க, அதை பார்த்த நட்டி அந்த காரையும் மீட்க போராடுகிறார்.

இறுதியில், நட்டி தன்னிடமிருந்து கடத்தப்பட்ட காரை மீட்டு அதன் உரிமையாளரிடம் கொண்டு சேர்த்தாரா? சரத் லோகித்ஸ்வாவிடம் உள்ள 10 சொகுசு கார்களையும் அவர் திருடினாரா? நட்டியிடம் இருந்து சரத் லோகித்ஸ்வா ஏன் காரை கடத்தி வந்தார்? என்பது படத்தின் மீதிக்கதை.
‘சதுரங்க வேட்டை’ படத்திற்கு பிறகு நட்டி மீண்டும் ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். அவருக்கு ஏற்ற கதைக்களம். அது சிறப்பாக அமைந்ததால், அதற்கேற்றவாறு இவரது நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது. நட்டியின் படபட பேச்சும், வசனங்களும் ரசிக்கும்படி இருக்கிறது.

நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை ரூஹி சிங்கிற்கு அமையவில்லை என்றாலும், காட்சிக்கு பக்கபலமாக தேவையான இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். அர்ஜுனன் காமெடியிலும், நடிப்பிலும் ரசிக்க வைத்திருக்கிறார். முனிஸ்காந்த் அவருக்கே உரிய பாணியில் ரசிக்க வைத்திருக்கிறார்.
சரத் லோகித்ஸ்வா ஒரு மிரட்டல் வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்டிக்கு எதிராக அவரது பேச்சும், நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. அதுல் குல்கர்னி குறைவான காட்சிகளிலே வந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தில் அவரது நடிப்புக்கு தீனி போடும்படியான கதாபாத்திரம் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இயக்குநர் தாஜ் ஒரு வித்தியாசமான கதையை சிறப்பாக இயக்கியிருக்கிறார். நட்டி, அர்ஜுனின் கதாபாத்திரம் திரையில் பார்க்க ரசிக்கும்படி இருக்கிறது. அதற்கேற்றாற்போல் திரைக்கதையை அமைத்திருப்பது சிறப்பு. வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். தனது வாழ்க்கையை கெடுத்த சரத் லோகித்ஸ்வாவை பழிவாங்கும் நட்டியின் துடிப்பும், அதற்கேற்ற காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கிறது.
மகேஷ் முத்துச்சாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் ‘போங்கு' கெத்தான கேங்கு.
சச்சினின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படம் எப்படியிருக்கிறது என்பதை பார்ப்போம்.
கிரிக்கெட் உலகின் கடவுள் என போற்றப்பட்ட சச்சினின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஜேம்ஸ் எர்ஸ்கைன் என்பவர் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள படம்தான் ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’. இப்படம் ஒரு சினிமாவாக இல்லாமல் சச்சினுக்கு கிரிக்கெட் ஆர்வம் தொடங்கியது முதல், அவர் சாதித்த ஒவ்வொரு சாதனைகள் தொடர்ந்து, உலககோப்பை பெற்றது அதன்பிறகு தன்னுடைய கிரிக்கெட் பயணத்துக்கு ஓய்வு கொடுத்தது வரை அனைத்து வீடியோக்களையும் தொகுத்து ஒரு பதிவாக ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.
1983-ல் உலகக்கோப்பையை இந்திய அணி வாங்கும்போதுதான் சச்சினுக்கு கிரிக்கெட் ஆர்வம் துளிர்விடுகிறது. அப்போது சச்சினின் கிரிக்கெட் ஆசைக்கு அவரது அண்ணன் உறுதுணையாக இருக்கிறார். பொதுவாக சச்சின் என்றாலே அமைதியானவர் என்பதுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால், சிறுவயதில் அவர் பேரிய சேட்டைக்காரர் என்பதை காட்டி, அதன்பிறகு கிரிக்கெட் அவரை எப்படி நல்வழிப்படுத்துகிறது என்பதை காட்டியவிதம் ரசிக்க வைக்கிறது.

கிரிக்கெட் மைதானத்தில் மிகப்பெரிய ஜாம்பவானாக சச்சினை பார்த்த நமக்கு, அவர் குடும்பத்தினரிடம் எப்படி நடந்துகொள்வார். அவர்களுக்காக எப்படி நேரம் ஒதுக்குகிறார்? நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என நமக்கு தெரியாத பல விஷயங்களையும் இந்த படத்தில் காட்டியிருக்கிறார்கள். சச்சின் தன்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிடும்போது எடுத்த வீடியோக்களை இந்த படத்தில் பயன்படுத்தியிருப்பது சிறப்பு.
தனது மனைவி, நண்பர்கள் குறித்து பாசமான உணர்வுகளை சச்சின் விவரிக்கும் இடங்கள் எல்லாம் அனைவருக்கும் ஒரு பாடமாய் அமைந்திருக்கிறது. சச்சின் விளையாடிய முக்கிய போட்டிகளும் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஒவ்வொரு போட்டியின்போதும் தன்னுடைய மனநிலை எப்படி இருந்தது? என்பதையும் இதில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

அதேபோல் கேப்டன் பதவியின்போது தனக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருந்தது என்பது குறித்தும், கிரேக் சேப்பல் பயிற்சியாளராக இருந்தபோது என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டது, அது வீரர்களுக்குள் எவ்வித பிரிவினைகளை ஏற்படுத்தியது என்பதையும் இப்படத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
2 மணி நேரத்தில் சச்சினின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை ரசிகர்களுக்கு எந்தளவுக்கு எடுத்துச் சொல்ல முடியுமோ? அந்தளவுக்கு அழகாகவும், ரசிக்கும்படியாகவும் சொல்லியிருக்கிறார் ஜேம்ஸ் எர்ஸ்கைன். கிரிக்கெட் என்பதையும் தாண்டி, சச்சினின் நிஜ வாழ்க்கையையும் அருகில் இருந்து பார்த்ததுபோன்ற உணர்வை கொடுத்திருக்கிறது.
‘தோனி’ படம்போன்று முழுநீள படமாக எடுக்காமல், ஒரு ஆவண படமாக எடுத்திருப்பதுதான் படத்தின் மீதான சுவாரஸ்யத்தை குறைப்பதாக தெரிகிறது. மற்றபடி, மைதானத்தில் சச்சின் இருந்தால் ரசிகர்கள் எப்படி ஆர்ப்பரிப்பார்களோ, அந்தளவுக்கு தியேட்டரிலும் சச்சின் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

பிரையன் லாரா, விவியன் ரிச்சர்ட்சன், ரிக்கி பாண்டின், ஷேன் வார்னே, வாசிம் அக்ரம் என அவர்களை எதிர்த்து ஆடியவர்களும், சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, தோனி, கோலி, ஹர்பஜன் சிங் என பலரும் சச்சினுடன் விளையாடிய அனுபவங்களை இந்த படத்தில் பகிர்ந்துள்ளார்கள்.
சிறுவயதில் தான் கண்ட கனவு நனவாகும் சமயத்தில் தன்னுடைய மனநிலை எந்தமாதிரி இருந்தது என்பதை சச்சின் விவரிக்கும் காட்சிகளில் எல்லாம் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை பெரிதளவில் இல்லாவிட்டாலும், ஒருசில இடங்களில் ரசிக்க வைக்கிறது. பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
மொத்தத்தில் ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ கொண்டாட வேண்டும்.
1983-ல் உலகக்கோப்பையை இந்திய அணி வாங்கும்போதுதான் சச்சினுக்கு கிரிக்கெட் ஆர்வம் துளிர்விடுகிறது. அப்போது சச்சினின் கிரிக்கெட் ஆசைக்கு அவரது அண்ணன் உறுதுணையாக இருக்கிறார். பொதுவாக சச்சின் என்றாலே அமைதியானவர் என்பதுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால், சிறுவயதில் அவர் பேரிய சேட்டைக்காரர் என்பதை காட்டி, அதன்பிறகு கிரிக்கெட் அவரை எப்படி நல்வழிப்படுத்துகிறது என்பதை காட்டியவிதம் ரசிக்க வைக்கிறது.

கிரிக்கெட் மைதானத்தில் மிகப்பெரிய ஜாம்பவானாக சச்சினை பார்த்த நமக்கு, அவர் குடும்பத்தினரிடம் எப்படி நடந்துகொள்வார். அவர்களுக்காக எப்படி நேரம் ஒதுக்குகிறார்? நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என நமக்கு தெரியாத பல விஷயங்களையும் இந்த படத்தில் காட்டியிருக்கிறார்கள். சச்சின் தன்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிடும்போது எடுத்த வீடியோக்களை இந்த படத்தில் பயன்படுத்தியிருப்பது சிறப்பு.
தனது மனைவி, நண்பர்கள் குறித்து பாசமான உணர்வுகளை சச்சின் விவரிக்கும் இடங்கள் எல்லாம் அனைவருக்கும் ஒரு பாடமாய் அமைந்திருக்கிறது. சச்சின் விளையாடிய முக்கிய போட்டிகளும் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஒவ்வொரு போட்டியின்போதும் தன்னுடைய மனநிலை எப்படி இருந்தது? என்பதையும் இதில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

அதேபோல் கேப்டன் பதவியின்போது தனக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருந்தது என்பது குறித்தும், கிரேக் சேப்பல் பயிற்சியாளராக இருந்தபோது என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டது, அது வீரர்களுக்குள் எவ்வித பிரிவினைகளை ஏற்படுத்தியது என்பதையும் இப்படத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
2 மணி நேரத்தில் சச்சினின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை ரசிகர்களுக்கு எந்தளவுக்கு எடுத்துச் சொல்ல முடியுமோ? அந்தளவுக்கு அழகாகவும், ரசிக்கும்படியாகவும் சொல்லியிருக்கிறார் ஜேம்ஸ் எர்ஸ்கைன். கிரிக்கெட் என்பதையும் தாண்டி, சச்சினின் நிஜ வாழ்க்கையையும் அருகில் இருந்து பார்த்ததுபோன்ற உணர்வை கொடுத்திருக்கிறது.
‘தோனி’ படம்போன்று முழுநீள படமாக எடுக்காமல், ஒரு ஆவண படமாக எடுத்திருப்பதுதான் படத்தின் மீதான சுவாரஸ்யத்தை குறைப்பதாக தெரிகிறது. மற்றபடி, மைதானத்தில் சச்சின் இருந்தால் ரசிகர்கள் எப்படி ஆர்ப்பரிப்பார்களோ, அந்தளவுக்கு தியேட்டரிலும் சச்சின் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

பிரையன் லாரா, விவியன் ரிச்சர்ட்சன், ரிக்கி பாண்டின், ஷேன் வார்னே, வாசிம் அக்ரம் என அவர்களை எதிர்த்து ஆடியவர்களும், சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, தோனி, கோலி, ஹர்பஜன் சிங் என பலரும் சச்சினுடன் விளையாடிய அனுபவங்களை இந்த படத்தில் பகிர்ந்துள்ளார்கள்.
சிறுவயதில் தான் கண்ட கனவு நனவாகும் சமயத்தில் தன்னுடைய மனநிலை எந்தமாதிரி இருந்தது என்பதை சச்சின் விவரிக்கும் காட்சிகளில் எல்லாம் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை பெரிதளவில் இல்லாவிட்டாலும், ஒருசில இடங்களில் ரசிக்க வைக்கிறது. பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
மொத்தத்தில் ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ கொண்டாட வேண்டும்.
ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி - தான்யா - விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் `பிருந்தாவனம்' படத்தின் விமர்சனம்.
தனது மகனை இழந்த சோகத்தில் தவிக்கும் எம்.எஸ்.பாஸ்கர், ரோட்டில் ஆதரவின்றி திரியும் சிறுவர்களை அழைத்து ஆசிரமங்களில் சேர்த்து விடுகிறார். அவ்வாறாக சேர்த்துவிடப்படும் சிறுவர்களில் ஒருவர் தான் அருள்நிதி. தனது சிறுவயதிலிருந்தே காது கேட்காத, பேச முடியாத அருள்நிதி ஊட்டியில் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறார். குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னர், தனது நண்பன் செந்திலுடன் இணைந்து முடிதிருத்தும் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.
சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் தலைவாசல் விஜய்யின் மகளான நாயகி தான்யா, சிறுவயதிலிருந்தே அருள்நிதியுடன் பழகி வருகிறாள். இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. ஆசரமத்தில் தனிமையில் வளர்ந்த அருள்நிதி, அவ்வப்போது தான்யாவை சந்திப்பார். ஆசரமத்தில் தனிமையில் வளர்ந்த அருள்நிதிக்கு நடிகர் விவேக்கின் காமெடி தான் உறுதுணையாக இருந்துள்ளது. அவரது காமெடி தான் ஒரு உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது.

இவ்வாறாக ஒருநாள் நடிகர் விவேக்கை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அருள்நிதிக்கு கிடைத்தது. விவேக்கின் நெருங்கிய நண்பரான சுப்பு பஞ்சுவுக்கு உடல்நிலை சரியில்லை. சுப்புவின் கடைசி நாட்களில் அவருடன் இருக்க நினைத்த விவேக், ஊட்டியில் இருக்கும் நண்பன் சுப்புவின் வீட்டுக்கு செல்கிறார்.
இவ்வாறாக ஊட்டியில் கொஞ்ச காலம் தங்கியுள்ள விவேக், ஒருநாள் வெளியே செல்லும் போது அவரது கார் சேற்றில் சிக்கிக் கொள்கிறது. அப்போது அந்த வழியாக வரும் அருள்நிதி, விவேக்கின் காரை மீட்க உதவி செய்கிறார். இதையடுத்து அருள்நிதி - விவேக் இடையே நட்பு ஏற்படுகிறது. இதில், தான் விவேக்கின் தீவிர ரசிகன் என்பதை அருள்நிதி தனது சைகை பாஷையில் தெரிவிக்கிறார். இதையடுத்து அருள்நிதி - விவேக் - செந்தில் - தான்யா உள்ளிட்டோர் அடிக்கடி சந்திக்கின்றனர்.
என்னதான் நட்புடன் பழகி வந்தாலும் ஒருமனதாக அருள்நிதியை காதலித்து வருகிறார் தான்யா. ஆனால் தனது காதலை தெரிவிக்காமல் இருக்கும் தான்யாவிடம் காதலை வெளிப்படுத்தச் சொல்லி விவேக் ஊக்கப்படுத்துகிறார். விவேக்கின் பேச்சைக் கேட்டு தான்யா, தனது காதலை அருள்நிதியிடம் வெளிப்படுத்துகிறாள். தனக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது, தான்யாவின் காதலுக்கு அவளது அப்பா ஒத்துக்கொள்ள மாட்டார் என்று சில காணங்களை கூறும் அருள்நிதி, தான்யாவிடம் கோபமாக பேசி காதலை ஏற்க மறுக்கிறார்.

இதனிடையே அருள்நிதிக்கு பேச்சு வரும் என்ற உண்மை தெரிய வருகிறது. தனது சிறு வயதிலேயே அருள்நிதிக்கு பேச்சு வந்துள்ளது. ஆனால் யாரிடமும் அதனை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கிறார். இவ்வளவு நாளாக நடித்ததாகக் கூறி அருள்நிதி மீது கோபம் கொள்ளும் தான்யா, செந்தில் அருள்நிதியிடம் சண்டைபிடித்து பிரிகின்றனர். இதையடுத்து விவேக்கின் அறிவுரையின் பேரில், தனக்கு பேச்சு வரும் என்ற உண்மையை அருள்நிதி அனைவரிடமும் தெரிவிக்கிறார்.
அருள்நிதி பேசுவதைக் கேட்ட, அவருக்கு நெருக்கமானவர்கள் பலரும் அவர் மீது கோபங் கொள்கின்றனர். தனக்கு பேசமுடியும் என்பதை அருள்நிதி ஏன் மறைக்கிறார்? அதற்கான காரணம் என்ன? அவரது வாழ்க்கையில் இருக்கும் மர்மம் என்ன? அருள்நிதி - தான்யா இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது படத்தின் மீதிக்கதை.

காது கேட்காத, வாய் பேச முடியாத இளைஞனாக அருள்நிதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. அதற்காக அருள்நிதி கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. கவலை தெரியாத இளைஞனாக படம் முழுக்க சிரித்துக் கொண்டே இருக்கிறார்.
மொழி படத்தில் ஜோதிகா காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருந்தார். அதில் அவரது கதாபாத்திரம் தனித்துவமாக இருக்கும். அதேபோல வாய்பேச முடியாத ஒரு ஆண் என்ன செய்வான். தனது கருத்தக்களை எப்படி வெளிப்படுத்தான் என்பதை சிறப்பாக வெளிப்படுத்திய அருள்நிதிக்கு பாராட்டுக்கள்.
விவேக் இப்படத்தில் ஒரு நடிகராகவே வாழ்ந்திருக்கிறார். தனது நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விவேக், வாய் பேச முடியாத ஒரு இளைஞனுடன் நட்பு பாராட்டுவதும், அவனை மகிழ்விப்பதிலும், அவனது வாழ்க்கையில் பங்கு கொள்வதிலும் தனது முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக வெகு நாட்களுக்கு பிறகு அவரது காமெடிகள் பட்டாசாய் வெடித்திருக்கிறது. ரசிக்க வைத்திருக்கிறார்.

தான்யா ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தைரியமான பெண்ணாக படம் முழுக்க ரசிக்க வைக்கிறார். அருள்நிதியுடனேயே பயணம் செய்யும் செந்தில் தனது பங்குங்கு காமெடிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.
சமீப காலமாக தனது முதிர்ந்த நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் எம்.எஸ்.பாஸ்கர், இப்படத்திலும் அனைவரயும் கவர்ந்திருக்கிறார். வாழ்ந்து முடித்த ஒருவனின் வாழ்க்கையில் அவர் சந்திக்கும் நிகழ்வுகள், அவரது கண்னோட்டத்தில் அது எப்படி பார்க்கப்படுகிறது என்பதை யதார்த்தமாக கூறியிருக்கிறார். குறிப்பாக இவர் பேசும் வசனங்கள் எளிமையாக இருந்தாலும், அதில் பல்வேறு அர்த்தங்கள் பொதிந்து கிடக்கிறது என்பது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது.

பாட்டு, சண்டைக்காட்சிகள் என்று ஏனோதானோவென்று படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், தனக்கே உரிய பாணியில் வித்தியாசமான வழியில் செல்லும் இயக்குநர் ராதா மோகன், இப்படத்தையும் பூக்களை தொட்டுச் செல்லும் தென்றல் போல ரசிக்க வைத்திருக்கிறார். அன்பு, பாசம், ஏக்கம் என அனைத்தையும் ஒருங்க ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் இடமாக பிருந்தாவனத்தை இயக்கியிருக்கிறார். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. இதுபோன்ற எதார்த்தமான கதையை இயக்கும் இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். படத்தை தயாரிப்பதோடு நிற்காமல் படத்தை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதற்கான முயற்சியை மேற்கொண்டால் இது போன்ற இயக்குநர்களை ஊக்குவிக்க முடியும்.
எம்.எஸ்.விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவில் பிருந்தாவனம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் `பிருந்தாவனம்' அழகு.
சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் தலைவாசல் விஜய்யின் மகளான நாயகி தான்யா, சிறுவயதிலிருந்தே அருள்நிதியுடன் பழகி வருகிறாள். இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. ஆசரமத்தில் தனிமையில் வளர்ந்த அருள்நிதி, அவ்வப்போது தான்யாவை சந்திப்பார். ஆசரமத்தில் தனிமையில் வளர்ந்த அருள்நிதிக்கு நடிகர் விவேக்கின் காமெடி தான் உறுதுணையாக இருந்துள்ளது. அவரது காமெடி தான் ஒரு உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது.

இவ்வாறாக ஒருநாள் நடிகர் விவேக்கை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அருள்நிதிக்கு கிடைத்தது. விவேக்கின் நெருங்கிய நண்பரான சுப்பு பஞ்சுவுக்கு உடல்நிலை சரியில்லை. சுப்புவின் கடைசி நாட்களில் அவருடன் இருக்க நினைத்த விவேக், ஊட்டியில் இருக்கும் நண்பன் சுப்புவின் வீட்டுக்கு செல்கிறார்.
இவ்வாறாக ஊட்டியில் கொஞ்ச காலம் தங்கியுள்ள விவேக், ஒருநாள் வெளியே செல்லும் போது அவரது கார் சேற்றில் சிக்கிக் கொள்கிறது. அப்போது அந்த வழியாக வரும் அருள்நிதி, விவேக்கின் காரை மீட்க உதவி செய்கிறார். இதையடுத்து அருள்நிதி - விவேக் இடையே நட்பு ஏற்படுகிறது. இதில், தான் விவேக்கின் தீவிர ரசிகன் என்பதை அருள்நிதி தனது சைகை பாஷையில் தெரிவிக்கிறார். இதையடுத்து அருள்நிதி - விவேக் - செந்தில் - தான்யா உள்ளிட்டோர் அடிக்கடி சந்திக்கின்றனர்.
என்னதான் நட்புடன் பழகி வந்தாலும் ஒருமனதாக அருள்நிதியை காதலித்து வருகிறார் தான்யா. ஆனால் தனது காதலை தெரிவிக்காமல் இருக்கும் தான்யாவிடம் காதலை வெளிப்படுத்தச் சொல்லி விவேக் ஊக்கப்படுத்துகிறார். விவேக்கின் பேச்சைக் கேட்டு தான்யா, தனது காதலை அருள்நிதியிடம் வெளிப்படுத்துகிறாள். தனக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது, தான்யாவின் காதலுக்கு அவளது அப்பா ஒத்துக்கொள்ள மாட்டார் என்று சில காணங்களை கூறும் அருள்நிதி, தான்யாவிடம் கோபமாக பேசி காதலை ஏற்க மறுக்கிறார்.

இதனிடையே அருள்நிதிக்கு பேச்சு வரும் என்ற உண்மை தெரிய வருகிறது. தனது சிறு வயதிலேயே அருள்நிதிக்கு பேச்சு வந்துள்ளது. ஆனால் யாரிடமும் அதனை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கிறார். இவ்வளவு நாளாக நடித்ததாகக் கூறி அருள்நிதி மீது கோபம் கொள்ளும் தான்யா, செந்தில் அருள்நிதியிடம் சண்டைபிடித்து பிரிகின்றனர். இதையடுத்து விவேக்கின் அறிவுரையின் பேரில், தனக்கு பேச்சு வரும் என்ற உண்மையை அருள்நிதி அனைவரிடமும் தெரிவிக்கிறார்.
அருள்நிதி பேசுவதைக் கேட்ட, அவருக்கு நெருக்கமானவர்கள் பலரும் அவர் மீது கோபங் கொள்கின்றனர். தனக்கு பேசமுடியும் என்பதை அருள்நிதி ஏன் மறைக்கிறார்? அதற்கான காரணம் என்ன? அவரது வாழ்க்கையில் இருக்கும் மர்மம் என்ன? அருள்நிதி - தான்யா இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது படத்தின் மீதிக்கதை.

காது கேட்காத, வாய் பேச முடியாத இளைஞனாக அருள்நிதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. அதற்காக அருள்நிதி கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. கவலை தெரியாத இளைஞனாக படம் முழுக்க சிரித்துக் கொண்டே இருக்கிறார்.
மொழி படத்தில் ஜோதிகா காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருந்தார். அதில் அவரது கதாபாத்திரம் தனித்துவமாக இருக்கும். அதேபோல வாய்பேச முடியாத ஒரு ஆண் என்ன செய்வான். தனது கருத்தக்களை எப்படி வெளிப்படுத்தான் என்பதை சிறப்பாக வெளிப்படுத்திய அருள்நிதிக்கு பாராட்டுக்கள்.
விவேக் இப்படத்தில் ஒரு நடிகராகவே வாழ்ந்திருக்கிறார். தனது நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விவேக், வாய் பேச முடியாத ஒரு இளைஞனுடன் நட்பு பாராட்டுவதும், அவனை மகிழ்விப்பதிலும், அவனது வாழ்க்கையில் பங்கு கொள்வதிலும் தனது முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக வெகு நாட்களுக்கு பிறகு அவரது காமெடிகள் பட்டாசாய் வெடித்திருக்கிறது. ரசிக்க வைத்திருக்கிறார்.

தான்யா ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தைரியமான பெண்ணாக படம் முழுக்க ரசிக்க வைக்கிறார். அருள்நிதியுடனேயே பயணம் செய்யும் செந்தில் தனது பங்குங்கு காமெடிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.
சமீப காலமாக தனது முதிர்ந்த நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் எம்.எஸ்.பாஸ்கர், இப்படத்திலும் அனைவரயும் கவர்ந்திருக்கிறார். வாழ்ந்து முடித்த ஒருவனின் வாழ்க்கையில் அவர் சந்திக்கும் நிகழ்வுகள், அவரது கண்னோட்டத்தில் அது எப்படி பார்க்கப்படுகிறது என்பதை யதார்த்தமாக கூறியிருக்கிறார். குறிப்பாக இவர் பேசும் வசனங்கள் எளிமையாக இருந்தாலும், அதில் பல்வேறு அர்த்தங்கள் பொதிந்து கிடக்கிறது என்பது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது.

பாட்டு, சண்டைக்காட்சிகள் என்று ஏனோதானோவென்று படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், தனக்கே உரிய பாணியில் வித்தியாசமான வழியில் செல்லும் இயக்குநர் ராதா மோகன், இப்படத்தையும் பூக்களை தொட்டுச் செல்லும் தென்றல் போல ரசிக்க வைத்திருக்கிறார். அன்பு, பாசம், ஏக்கம் என அனைத்தையும் ஒருங்க ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் இடமாக பிருந்தாவனத்தை இயக்கியிருக்கிறார். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. இதுபோன்ற எதார்த்தமான கதையை இயக்கும் இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். படத்தை தயாரிப்பதோடு நிற்காமல் படத்தை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதற்கான முயற்சியை மேற்கொண்டால் இது போன்ற இயக்குநர்களை ஊக்குவிக்க முடியும்.
எம்.எஸ்.விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவில் பிருந்தாவனம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் `பிருந்தாவனம்' அழகு.
சமுத்திரக்கனி இயக்கத்தில், அவரும் சுனைனா - விக்ராந்த் - அர்த்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் `தொண்டன்' படத்தின் விமர்சனம்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வரும் சமுத்திரக்கனி, அப்பா வேல ராமமூர்த்தி, தங்கை அர்த்தனாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால், சமுத்திரக்கனியின் அம்மா இறந்த விட தனது ராணுவ பணியை உதறித் தள்ளிவிட்டு முதலில் ஊரைப் பார்ப்போம் என்று வந்து விடுகிறார். இதையடுத்து கஞ்சா கருப்புடன் இணைந்து மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு, முதலுதவி செய்து வருகிறார். அதிலும் தனது ஆம்புலன்சில் ஏறியவர்கள் அனைவரையும் காப்பாற்றிவிட வேண்டும் என்ற கொள்கையுடனும் இருக்கிறார் சமுத்திரக்கனி.
அமைச்சராக வரும் ஞானசம்பந்தத்திற்கு நமோ நாராயணா, சவுந்தர்ராஜா என்ற இரு மகன்கள். இதில் நமோ நாராயணா தனக்கு எதிராக செயல்படும் ஒருவரை, தனது ஆட்களை ஏவி வெட்டி விடுகிறார். அவருக்கு முதலுதவி அளிக்கும் சமுத்திரக்கனி அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விடுகிறார். இதனால் சமுத்திரக்கனியை பழிவாங்க வேண்டும் என்று நமோ நாராயணா முயற்சி செய்து வருகிறார்.

இதுஒருபுறம் இருக்க, சமுத்திரக்கனியை காதலிக்கும் சுனைனா, தனது காதலை சமுத்திரக்கனியுடன் தெரிவிக்க அவரும் சம்மதம் தெரிவிக்கிறார். இதையடுத்து தனது குடும்பத்துடன் சமுத்திரக்கனி பெண் கேட்க செல்கிறார். இதில் சுனைனாவின் தம்பி நசாத் தனது சாதுரியத்தால் அவனது அப்பாவின் சம்மதத்தை பெற வைக்கிறான். பின்னர் இருவருக்கும் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். மறுபுறத்தில் விக்ராந்த், சமுத்திரக்கனியின் தங்கை அர்த்தனாவை காதலிக்கிறார். ஆனால் அர்த்தனா விக்ராந்தின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறாள்.
ஒரு கட்டத்தில் தவறான வழிக்கு செல்லும் விக்ராந்துக்கு சில அறிவுரைகளை கூறி, முதலுதவி செய்யும் பணியில் ஈடுபடுத்திவிடுகிறார் சமுத்திரக்கனி. இதில் ஒரு உயிரை காப்பற்றும் விக்ராந்துக்கு மகிழ்ச்சியுடன், மனநிறைவும் கிடைக்க அந்த பணியிலேயே நீடிக்க விரும்புகிறார்.

மேலும் அர்த்தனாவின் தோழிக்கு நமோ நாராயணா தம்பி சவுந்தர்ராஜன் காதல் தொல்லை கொடுக்க, ஒரு கட்டத்தில் பொது இடத்தில் வைத்து அவனை அடித்து விடுகிறாள். இதையடுத்து அவளது கல்லூரிக்கு செல்லும் சவுந்தர் ராஜன் அர்த்தனாவின் தோழியை கட்டையால் அடிக்க, மாணவிகள் அனைவரும் ஒன்றுகூடி சவுந்தர்ராஜனை தாக்கி விடுகின்றனர். இந்நிலையில் சவுந்தர்ராஜனுக்கு முதலுதவி கொடுக்கும் சமுத்திரக்கனி, மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, சவுந்தர் ராஜன் இறந்து விடுகிறார்.
தனது தம்பியை, சமுத்திரக்கனி தான் கொன்றாதாக நினைத்து அவரை பழிவாங்க துடிக்கும் நமோ நாராயணா சமுத்திரக்கனி வீட்டில் குண்டு வைக்க, கர்ப்பமாக இருக்கும் சுனைனாவின் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிடுகிறது. இந்நிலையில், நமோ நாராயணாவை சமுத்திரக்கனி பழிவாங்கினாரா? நமோ நாராயணாவுக்கு அறிவுரை கூறி திருத்தினாரா? விக்ராந்த் - அர்த்தனா காதல் வெற்றி பெற்றதா? என்பது படத்தின் மீதிக்கதை.

படம் முழுக்க துடிப்புடன் இருக்கும் சமுத்திரக்கனி ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு மகனாக, அண்ணனாக, கணவனாக, சமூக பொறுப்பாளியாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற படங்களைப் போல இல்லாமல், இந்த படத்தில் சுனைனாவின் கதாபாத்திரம் பேசும்படியாக இருக்கிறது. அதற்கேற்றாற் போல் சுனைனாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். சுனைனாவுக்கு வசனங்கள் குறைவு என்றாலும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.
தொடர்ந்து வித்தியாசமான கதைகளை, கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்ராந்த் இப்படத்தில் ஒரு பொறுப்புள்ள இளைஞனாக வலம் வருகிறார். ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய கோபத்தில், காப்பற்றிய மகிழ்ச்சியில் அவரது நடிப்பு கண்கலங்க வைக்கிறது. படம் முழுக்க அர்த்தனா அழகு தேவதையாக வலம் வருகிறார். உறுதியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அவரை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்படியாக நடித்திருக்கிறார்.

தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் நமோ நாராயணா ஒரு வில்லனுக்கு தேவையான கெத்துடன் கலக்கியிருக்கிறார். படம் முழுக்க சமுத்திரக்கனியுடனேயே பயணம் செய்யும் கஞ்சா கருப்பு கதைக்கு உறுதுணையாக காமெடி, செண்டிமென்ட் என அனைத்து பிரிவிலும் கலக்கியிருக்கிறார். சூரி, தம்பி ராமைய்யா, நசாத் நகைச்சுவைக்கு அவர்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். மற்றபடி ஞானசம்பந்தம், வேல ராமமூர்த்தி, அனில் முரளி, சவுந்தர்ராஜன், படவா கோபி, திலீபன் தங்களது முதிர்ந்த நடிப்பால் ரசிக்க வைத்திருக்கின்றனர்.
இயக்குநராக சமுத்திரக்கனி தனக்கே உரிய பாணியில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். தற்போதைய முக்கிய பிரச்சனைகளான விவசாயம், அரசியல் நிலவரம், காவிரி பிரச்சனை, ஜல்லிக்கட்டு, ஜாதி திணிப்பு என அனைத்து பிரிவிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கியருக்கிறார். மருத்துவம் எவ்வுளவு முக்கியம், ஒரு உயிரின் மதிப்பு என்னஎன்பதை தொண்டன் மூலம் உணர்த்தியிருக்கும் சமுத்திரக்கனியின் முயற்சிக்கு பாராட்டுக்கள். காமெடி, செண்டிமென்ட், என கோபம், சீற்றம் அனைத்தையும் சரியான இடைவெளியில் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. ஒரு பொறுப்பான இயக்குநராக நின்றிருக்கிறார். படத்தில் வசனங்கள் பக்கபலமாக அமைந்திருக்கிறது.
ஏகாம்பரம், ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் `தொண்டன்' மரியாதைக்குரியவன்.
அமைச்சராக வரும் ஞானசம்பந்தத்திற்கு நமோ நாராயணா, சவுந்தர்ராஜா என்ற இரு மகன்கள். இதில் நமோ நாராயணா தனக்கு எதிராக செயல்படும் ஒருவரை, தனது ஆட்களை ஏவி வெட்டி விடுகிறார். அவருக்கு முதலுதவி அளிக்கும் சமுத்திரக்கனி அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விடுகிறார். இதனால் சமுத்திரக்கனியை பழிவாங்க வேண்டும் என்று நமோ நாராயணா முயற்சி செய்து வருகிறார்.

இதுஒருபுறம் இருக்க, சமுத்திரக்கனியை காதலிக்கும் சுனைனா, தனது காதலை சமுத்திரக்கனியுடன் தெரிவிக்க அவரும் சம்மதம் தெரிவிக்கிறார். இதையடுத்து தனது குடும்பத்துடன் சமுத்திரக்கனி பெண் கேட்க செல்கிறார். இதில் சுனைனாவின் தம்பி நசாத் தனது சாதுரியத்தால் அவனது அப்பாவின் சம்மதத்தை பெற வைக்கிறான். பின்னர் இருவருக்கும் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். மறுபுறத்தில் விக்ராந்த், சமுத்திரக்கனியின் தங்கை அர்த்தனாவை காதலிக்கிறார். ஆனால் அர்த்தனா விக்ராந்தின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறாள்.
ஒரு கட்டத்தில் தவறான வழிக்கு செல்லும் விக்ராந்துக்கு சில அறிவுரைகளை கூறி, முதலுதவி செய்யும் பணியில் ஈடுபடுத்திவிடுகிறார் சமுத்திரக்கனி. இதில் ஒரு உயிரை காப்பற்றும் விக்ராந்துக்கு மகிழ்ச்சியுடன், மனநிறைவும் கிடைக்க அந்த பணியிலேயே நீடிக்க விரும்புகிறார்.

மேலும் அர்த்தனாவின் தோழிக்கு நமோ நாராயணா தம்பி சவுந்தர்ராஜன் காதல் தொல்லை கொடுக்க, ஒரு கட்டத்தில் பொது இடத்தில் வைத்து அவனை அடித்து விடுகிறாள். இதையடுத்து அவளது கல்லூரிக்கு செல்லும் சவுந்தர் ராஜன் அர்த்தனாவின் தோழியை கட்டையால் அடிக்க, மாணவிகள் அனைவரும் ஒன்றுகூடி சவுந்தர்ராஜனை தாக்கி விடுகின்றனர். இந்நிலையில் சவுந்தர்ராஜனுக்கு முதலுதவி கொடுக்கும் சமுத்திரக்கனி, மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, சவுந்தர் ராஜன் இறந்து விடுகிறார்.
தனது தம்பியை, சமுத்திரக்கனி தான் கொன்றாதாக நினைத்து அவரை பழிவாங்க துடிக்கும் நமோ நாராயணா சமுத்திரக்கனி வீட்டில் குண்டு வைக்க, கர்ப்பமாக இருக்கும் சுனைனாவின் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிடுகிறது. இந்நிலையில், நமோ நாராயணாவை சமுத்திரக்கனி பழிவாங்கினாரா? நமோ நாராயணாவுக்கு அறிவுரை கூறி திருத்தினாரா? விக்ராந்த் - அர்த்தனா காதல் வெற்றி பெற்றதா? என்பது படத்தின் மீதிக்கதை.

படம் முழுக்க துடிப்புடன் இருக்கும் சமுத்திரக்கனி ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு மகனாக, அண்ணனாக, கணவனாக, சமூக பொறுப்பாளியாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற படங்களைப் போல இல்லாமல், இந்த படத்தில் சுனைனாவின் கதாபாத்திரம் பேசும்படியாக இருக்கிறது. அதற்கேற்றாற் போல் சுனைனாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். சுனைனாவுக்கு வசனங்கள் குறைவு என்றாலும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.
தொடர்ந்து வித்தியாசமான கதைகளை, கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்ராந்த் இப்படத்தில் ஒரு பொறுப்புள்ள இளைஞனாக வலம் வருகிறார். ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய கோபத்தில், காப்பற்றிய மகிழ்ச்சியில் அவரது நடிப்பு கண்கலங்க வைக்கிறது. படம் முழுக்க அர்த்தனா அழகு தேவதையாக வலம் வருகிறார். உறுதியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அவரை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்படியாக நடித்திருக்கிறார்.

தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் நமோ நாராயணா ஒரு வில்லனுக்கு தேவையான கெத்துடன் கலக்கியிருக்கிறார். படம் முழுக்க சமுத்திரக்கனியுடனேயே பயணம் செய்யும் கஞ்சா கருப்பு கதைக்கு உறுதுணையாக காமெடி, செண்டிமென்ட் என அனைத்து பிரிவிலும் கலக்கியிருக்கிறார். சூரி, தம்பி ராமைய்யா, நசாத் நகைச்சுவைக்கு அவர்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். மற்றபடி ஞானசம்பந்தம், வேல ராமமூர்த்தி, அனில் முரளி, சவுந்தர்ராஜன், படவா கோபி, திலீபன் தங்களது முதிர்ந்த நடிப்பால் ரசிக்க வைத்திருக்கின்றனர்.
இயக்குநராக சமுத்திரக்கனி தனக்கே உரிய பாணியில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். தற்போதைய முக்கிய பிரச்சனைகளான விவசாயம், அரசியல் நிலவரம், காவிரி பிரச்சனை, ஜல்லிக்கட்டு, ஜாதி திணிப்பு என அனைத்து பிரிவிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கியருக்கிறார். மருத்துவம் எவ்வுளவு முக்கியம், ஒரு உயிரின் மதிப்பு என்னஎன்பதை தொண்டன் மூலம் உணர்த்தியிருக்கும் சமுத்திரக்கனியின் முயற்சிக்கு பாராட்டுக்கள். காமெடி, செண்டிமென்ட், என கோபம், சீற்றம் அனைத்தையும் சரியான இடைவெளியில் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. ஒரு பொறுப்பான இயக்குநராக நின்றிருக்கிறார். படத்தில் வசனங்கள் பக்கபலமாக அமைந்திருக்கிறது.
ஏகாம்பரம், ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் `தொண்டன்' மரியாதைக்குரியவன்.
ராதாரவி, வாகை சந்திரசேகர், நிழல்கள் ரவி, சீதா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வீர வம்சம்’ படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.
தென் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் ராதாரவி, வாகை சந்திரசேகர், நிழல்கள் ரவி ஆகிய மூன்று பேரும் ஊர் பெரியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஒன்றுகூடி அந்த ஊர் கோயில் திருவிழாவை நடத்துகிறார்கள். ஊர் திருவிழாவில் கிடா சண்டையும் இடம்பெறுகிறது. கிடா சண்டையில் வெற்றி பெறுவதை கௌரவமாக நினைப்பவர்கள் அவர்கள்.
அப்படி நடக்கும் கிடா சண்டையில் ராதாரவியின் கிடாவும், வாகை சந்திரசேகரின் கிடாவும் மோதுகின்றன. அதில், வாகை சந்திரசேகரின் கிடா வெற்றிவாகை சூடுகிறது. இதனால் அவமானமடைந்த ராதாரவி தற்கொலை செய்துகொள்கிறார். இதனால், அந்த ஊரே கலவரமாகிறது. இதில், நிழல்கள் ரவி கொல்லப்படுகிறார். நிழல்கள் ரவி கொல்லப்பட்டதால் அவருடைய மனைவியான சீதா தனது மகனை அழைத்துக்கொண்டு அந்த ஊரைவிட்டே வெளியேறுகிறார்.

அதன்பிறகு கதை 18 ஆண்டுகளுக்கு பிறகு நகர்கிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஊர் மிகவும் வறட்சியாக மாறியிருக்கிறது. ஊர் கோவில் மூடப்பட்டிருக்கிறது. 18 ஆண்டுகளாக கோவில் திருவிழாவும் நடைபெறாமல் இருக்கிறது. கிராமத்தின் வறட்சிக்கு கோவில் திருவிழாவை நடத்தாததுதான் காரணம் என்று நினைத்து ஊர் பெரியவர்கள் அனைவரும் கோவில் திருவிழாவை நடத்த முன் வருகிறார்கள்.
இதற்காக வாகை சந்திரசேகரிடம் சென்று முறையிடுகிறார்கள். அவரோ, கோவிலை திறந்தால் ராதாரவியின் குடும்பத்தார் பிரச்சினைக்கு வருவார்கள். அதனால் முதலில் அவர்களிடம் அனுமதி வாங்கி வாருங்கள் என்று கூறி அனுப்புகிறார். ஆனால், ராதாரவியின் மனைவியான வடிவுக்கரசியோ அந்த கோவிலை திறக்க அனுமதிக்க மாட்டேன் என்று விடாப்பிடியாக கூறுகிறார்.
இதற்கிடையில், ஊரைவிட்டு வெளியேறிய சீதாவின் மகனான நாயகன் செல்வாவும், வாகை சந்திரசேகரின் பேத்தியான நாயகி அனிதாவும் காதலித்து வருகிறார்கள். மறுபுறம் கோவில் திருவிழாவை எப்படியாவது நடத்தவேண்டும் என்று ஊர்க்காரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

அப்போது, ஊர்க்காரர்களிடம் வடிவுக்கரசி மீண்டும் கிடா சண்டை நடத்துமாறும், அதில் வாகை சந்திரசேகரின் கிடா வெற்றி பெற்றால் ஊர் திருவிழாவை நடத்த சம்மதிப்பதாகவும், அவருடைய கிடா தோற்றுவிட்டால் வாகை சந்திரசேகர் குடும்பத்துடன் ஊரைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறுகிறார்.
இதற்கு வாகை சந்திரசேகரும் ஒப்புக் கொள்கிறார். அதன்பிறகு, அந்த கிடா சண்டையில் யாருடைய கிடா வெற்றி பெற்றது? கோவில் திருவிழாவை நடத்தி கிராமத்தின் வறட்சியை போக்கினார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
ராதாரவி, வாகை சந்திரசேகர், நிழல்கள் ரவி என அனுபவம் வாய்ந்த நடிகர்கள் இப்படத்தில் ஏராளம். அவர்கள் எல்லாம் தங்களது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்க்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், இந்த கதையில் நேர்த்தியில்லாதது இவர்களது நடிப்பை ரசிக்க முடியாமல் செய்துவிட்டது.

வடிவுக்கரசி தனது வீர வம்சத்துக்குண்டான ஆக்ரோஷமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பழைய வில்லியான வடிவுக்கரசியை மீண்டும் பார்க்க முடிகிறது. சீதா பாசமுள்ள அம்மாவாக பளிச்சிடுகிறார்.
நாயகனான செல்வாவுக்கு முதல் படம் என்பதால், அவரிடமிருந்து பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகி அனிதாவுக்கும் நடிப்பதற்குண்டான வாய்ப்பு குறைவே. சில காட்சிகள் வந்தாலும் அதிலும் தனது திறமையை நிரூபிக்க தவறியிருக்கிறார்.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் பகவதி பாலா. அந்த சமுதாயத்தின் பெருமையை இப்படத்தில் சொல்லியிருந்தாலும், முகம் சுளிக்க வைக்கும் சில காட்சிகளை அமைத்திருப்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. அதேபோல், கதைக்கு தேவையில்லாத காட்சிகளையெல்லாம் புகுத்தி கடைசிவரை கதையே புரியாமல் செய்திருக்கிறார்கள்.
குட்லக் ரவி, கபாலீஸ்வர் ஆகியோரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. பகவதி பாலாவின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘வீர வம்சம்’ வீரமில்லை.
அப்படி நடக்கும் கிடா சண்டையில் ராதாரவியின் கிடாவும், வாகை சந்திரசேகரின் கிடாவும் மோதுகின்றன. அதில், வாகை சந்திரசேகரின் கிடா வெற்றிவாகை சூடுகிறது. இதனால் அவமானமடைந்த ராதாரவி தற்கொலை செய்துகொள்கிறார். இதனால், அந்த ஊரே கலவரமாகிறது. இதில், நிழல்கள் ரவி கொல்லப்படுகிறார். நிழல்கள் ரவி கொல்லப்பட்டதால் அவருடைய மனைவியான சீதா தனது மகனை அழைத்துக்கொண்டு அந்த ஊரைவிட்டே வெளியேறுகிறார்.

அதன்பிறகு கதை 18 ஆண்டுகளுக்கு பிறகு நகர்கிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஊர் மிகவும் வறட்சியாக மாறியிருக்கிறது. ஊர் கோவில் மூடப்பட்டிருக்கிறது. 18 ஆண்டுகளாக கோவில் திருவிழாவும் நடைபெறாமல் இருக்கிறது. கிராமத்தின் வறட்சிக்கு கோவில் திருவிழாவை நடத்தாததுதான் காரணம் என்று நினைத்து ஊர் பெரியவர்கள் அனைவரும் கோவில் திருவிழாவை நடத்த முன் வருகிறார்கள்.
இதற்காக வாகை சந்திரசேகரிடம் சென்று முறையிடுகிறார்கள். அவரோ, கோவிலை திறந்தால் ராதாரவியின் குடும்பத்தார் பிரச்சினைக்கு வருவார்கள். அதனால் முதலில் அவர்களிடம் அனுமதி வாங்கி வாருங்கள் என்று கூறி அனுப்புகிறார். ஆனால், ராதாரவியின் மனைவியான வடிவுக்கரசியோ அந்த கோவிலை திறக்க அனுமதிக்க மாட்டேன் என்று விடாப்பிடியாக கூறுகிறார்.
இதற்கிடையில், ஊரைவிட்டு வெளியேறிய சீதாவின் மகனான நாயகன் செல்வாவும், வாகை சந்திரசேகரின் பேத்தியான நாயகி அனிதாவும் காதலித்து வருகிறார்கள். மறுபுறம் கோவில் திருவிழாவை எப்படியாவது நடத்தவேண்டும் என்று ஊர்க்காரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

அப்போது, ஊர்க்காரர்களிடம் வடிவுக்கரசி மீண்டும் கிடா சண்டை நடத்துமாறும், அதில் வாகை சந்திரசேகரின் கிடா வெற்றி பெற்றால் ஊர் திருவிழாவை நடத்த சம்மதிப்பதாகவும், அவருடைய கிடா தோற்றுவிட்டால் வாகை சந்திரசேகர் குடும்பத்துடன் ஊரைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறுகிறார்.
இதற்கு வாகை சந்திரசேகரும் ஒப்புக் கொள்கிறார். அதன்பிறகு, அந்த கிடா சண்டையில் யாருடைய கிடா வெற்றி பெற்றது? கோவில் திருவிழாவை நடத்தி கிராமத்தின் வறட்சியை போக்கினார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
ராதாரவி, வாகை சந்திரசேகர், நிழல்கள் ரவி என அனுபவம் வாய்ந்த நடிகர்கள் இப்படத்தில் ஏராளம். அவர்கள் எல்லாம் தங்களது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்க்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், இந்த கதையில் நேர்த்தியில்லாதது இவர்களது நடிப்பை ரசிக்க முடியாமல் செய்துவிட்டது.

வடிவுக்கரசி தனது வீர வம்சத்துக்குண்டான ஆக்ரோஷமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பழைய வில்லியான வடிவுக்கரசியை மீண்டும் பார்க்க முடிகிறது. சீதா பாசமுள்ள அம்மாவாக பளிச்சிடுகிறார்.
நாயகனான செல்வாவுக்கு முதல் படம் என்பதால், அவரிடமிருந்து பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகி அனிதாவுக்கும் நடிப்பதற்குண்டான வாய்ப்பு குறைவே. சில காட்சிகள் வந்தாலும் அதிலும் தனது திறமையை நிரூபிக்க தவறியிருக்கிறார்.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் பகவதி பாலா. அந்த சமுதாயத்தின் பெருமையை இப்படத்தில் சொல்லியிருந்தாலும், முகம் சுளிக்க வைக்கும் சில காட்சிகளை அமைத்திருப்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. அதேபோல், கதைக்கு தேவையில்லாத காட்சிகளையெல்லாம் புகுத்தி கடைசிவரை கதையே புரியாமல் செய்திருக்கிறார்கள்.
குட்லக் ரவி, கபாலீஸ்வர் ஆகியோரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. பகவதி பாலாவின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘வீர வம்சம்’ வீரமில்லை.
விஜய் டி.அலெக்சாண்டர் இயக்கத்தில் தாமோதரன் - ஆஸ்தா லதா நடிப்பில் உருவாகியிருக்கும் இந்திரக் கோபை படத்தின் விமர்சனம்.
நாயகன் தாமோதரனின் மனைவி ஆஸ்தா லதா தனது கணவனை விட்டு பிரிந்து தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறாள். லதாவின் மகன், அதே ஊரில் தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் மீது காதல் கொள்கிறான். அவனது காதலுக்கு, அந்த பெண்ணும் சம்மதம் தெரிவிக்க இருவரும் சந்தோஷமாக காதலித்து வருகின்றனர்.
இதையடுத்து, இருவீட்டாரும் அவர்களுக்கு திருமணம் பேசி முடிக்கின்றனர். இதையடுத்து ஒரு நாள் தனது காதலி குடும்பத்துடன் லதாவின் மகன் கோயிலுக்குச் செல்கிறார். அங்கு அவனது காதலியின் சொந்தக்காரர் ஒருவர், லதாவின் கணவன் குறித்து, அதாவது அந்த இளைஞனின் தந்தை தாமோதரன் குறித்து தவறாக பேச அதனால் கொதித்து எழும் நாயகன், அங்கிருந்து கோபத்துடன் செல்கிறான்.

அவனது காதலி அவனை சமாதனப்படுத்தியும் கேட்காமல் தனது தந்தை யார்? தற்போது அவர் என்ன செய்கிறார்? என்பது குறித்து தெரிந்து கொள்ள லதாவின் சொந்த ஊருக்கு செல்கிறான். பிளாஸ்பேக்கில் விவசாயம் செய்து வரும் தந்தைக்கு உதவி செய்யாமலும், வேறு வேலைக்கு செல்லாமலும் ஊர் சுற்றி வரும் தாமோதரன், அதே ஊரிலேயே கல்லூரியில் படித்து வரும் ஆஸ்தா லதாவை பார்க்கிறான். தொடர்ந்து லதாவை பார்க்கும் தாமோதரனுக்கு அவள் மீது காதல் வர, தனது காதலை அவளிடம் தெரிவிக்கிறார்.
ஜாதி வெறி கொண்ட தனது அண்ணன் மீது கொண்ட பயத்தினால் தாமோதரனின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறாள். இருப்பினும், தாமோதரனின் காதல் தொல்லையால், அவனிடம் தனது அன்பை வெளிப்படுத்துகிறாள். பின்னர் நாயகன், நாயகி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்க்கை நடத்தி வர ஒரு கட்டத்தில், லதாவின் அண்ணன் இருவரையும் பிரித்துவிட, தனது கணவனை பிரிந்த லதா, அப்பா யார் என்பதை தெரிவிக்காமல் தனது மகனை வளர்த்து வருகிறாள்.
இதையெல்லாம் கேட்ட அந்த இளைஞன் தனது தந்தையான தாமோதரனை சந்தித்தானா? தனது காதலியுடன் சேர்ந்தானா? என்பது படத்தின் மீதிக்கதை.

காதல் காட்சிகளிலும் சரி, விவசாயத்தை வலியுறுத்தும் ஒரு நாயகனாக தாமோதரன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆஸ்தா லதா தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை குறைவில்லாமல் கொடுத்திருக்கிறார். மற்ற துணை நடிகர்கள் அனைவரும் கதைக்கு பக்கபலமாக தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
ஜாதி வெறி கூடாது, விவசாயம் முக்கியம் என்பதை இயக்குநர் விஜய் டி.அலெக்சாண்டர் சிறப்பாக கூறியிருக்கிறார். காதல் காட்சிகள் பார்க்கும்படி இருந்தாலும், ரசிக்கும்படியாக இல்லை. படத்தில் பெரும்பாலும் புதுமுகங்கள் என்பதால் அவர்களை வேலை வாங்க தவறியிருக்கிறார். படத்தில் வரும் வசனங்கள் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. மற்றபடி காட்சிப்படுத்தலில் கதையை தெளிவாக சொல்ல முடியாமல் திணறியிருக்கிறார்.
படத்தின் பின்னணி இசையில் ரொனால்டு ரீகனின் பின்னணி இசை படத்திற்கு பலம் என்றாலும், பாடல்கள் சொல்லும்படியாக இல்லை. வெள்ளை கேசவனின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் ‘இந்திரக் கோபை’ கொலை.
இதையடுத்து, இருவீட்டாரும் அவர்களுக்கு திருமணம் பேசி முடிக்கின்றனர். இதையடுத்து ஒரு நாள் தனது காதலி குடும்பத்துடன் லதாவின் மகன் கோயிலுக்குச் செல்கிறார். அங்கு அவனது காதலியின் சொந்தக்காரர் ஒருவர், லதாவின் கணவன் குறித்து, அதாவது அந்த இளைஞனின் தந்தை தாமோதரன் குறித்து தவறாக பேச அதனால் கொதித்து எழும் நாயகன், அங்கிருந்து கோபத்துடன் செல்கிறான்.

அவனது காதலி அவனை சமாதனப்படுத்தியும் கேட்காமல் தனது தந்தை யார்? தற்போது அவர் என்ன செய்கிறார்? என்பது குறித்து தெரிந்து கொள்ள லதாவின் சொந்த ஊருக்கு செல்கிறான். பிளாஸ்பேக்கில் விவசாயம் செய்து வரும் தந்தைக்கு உதவி செய்யாமலும், வேறு வேலைக்கு செல்லாமலும் ஊர் சுற்றி வரும் தாமோதரன், அதே ஊரிலேயே கல்லூரியில் படித்து வரும் ஆஸ்தா லதாவை பார்க்கிறான். தொடர்ந்து லதாவை பார்க்கும் தாமோதரனுக்கு அவள் மீது காதல் வர, தனது காதலை அவளிடம் தெரிவிக்கிறார்.
ஜாதி வெறி கொண்ட தனது அண்ணன் மீது கொண்ட பயத்தினால் தாமோதரனின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறாள். இருப்பினும், தாமோதரனின் காதல் தொல்லையால், அவனிடம் தனது அன்பை வெளிப்படுத்துகிறாள். பின்னர் நாயகன், நாயகி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்க்கை நடத்தி வர ஒரு கட்டத்தில், லதாவின் அண்ணன் இருவரையும் பிரித்துவிட, தனது கணவனை பிரிந்த லதா, அப்பா யார் என்பதை தெரிவிக்காமல் தனது மகனை வளர்த்து வருகிறாள்.
இதையெல்லாம் கேட்ட அந்த இளைஞன் தனது தந்தையான தாமோதரனை சந்தித்தானா? தனது காதலியுடன் சேர்ந்தானா? என்பது படத்தின் மீதிக்கதை.

காதல் காட்சிகளிலும் சரி, விவசாயத்தை வலியுறுத்தும் ஒரு நாயகனாக தாமோதரன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆஸ்தா லதா தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை குறைவில்லாமல் கொடுத்திருக்கிறார். மற்ற துணை நடிகர்கள் அனைவரும் கதைக்கு பக்கபலமாக தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
ஜாதி வெறி கூடாது, விவசாயம் முக்கியம் என்பதை இயக்குநர் விஜய் டி.அலெக்சாண்டர் சிறப்பாக கூறியிருக்கிறார். காதல் காட்சிகள் பார்க்கும்படி இருந்தாலும், ரசிக்கும்படியாக இல்லை. படத்தில் பெரும்பாலும் புதுமுகங்கள் என்பதால் அவர்களை வேலை வாங்க தவறியிருக்கிறார். படத்தில் வரும் வசனங்கள் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. மற்றபடி காட்சிப்படுத்தலில் கதையை தெளிவாக சொல்ல முடியாமல் திணறியிருக்கிறார்.
படத்தின் பின்னணி இசையில் ரொனால்டு ரீகனின் பின்னணி இசை படத்திற்கு பலம் என்றாலும், பாடல்கள் சொல்லும்படியாக இல்லை. வெள்ளை கேசவனின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் ‘இந்திரக் கோபை’ கொலை.
பழனிவேல் இயக்கத்தில் சோனியா அகர்வால், சந்தோஷ் கண்ணா - காயத்ரி நடிப்பில் உருவாகி இருக்கும் சாயா படத்தின் விமர்சனம்.
கொல்லிமலை அருகே உள்ள வளையபட்டி கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இலவசமாக பள்ளி நடத்தி வருகிறார் ராஜன். இந்த ஊருக்கு, வெளியூரில் படித்து முடித்துவிட்டு வரும் நாயகன் சந்தோஷ் கண்ணா, ராஜனுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
இதே ஊரில் பண்ணையாரான பாலாசிங், தனது தம்பி கராத்தே ராஜா, மூகாம்பிகை ரவி ஆகியோரின் உதவியுடன் தனியார் பள்ளிக்கூடம் வைத்து, கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார். ராஜன் இலவசமாக கல்வி வழங்குவதால், இவர்களது பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் சேர்க்கை குறைகிறது. இதனால், ராஜனை எப்படியாவது அந்த பள்ளிக்கூடத்தை நடத்த விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.

சந்தோஷின் மாமன் மகளான நாயகி காயத்ரி, தனது மாமனை திருமணம் செய்துகொள்ள ஆசையுடன் இருக்கிறாள். இந்நிலையில், இரவானதும் நாயகனுக்கு மட்டும் அவனது பெயரை ஒரு பெண் அழைப்பது போன்று குரல் கேட்கிறது. அதேநேரத்தில் கொல்லிமலையில் வசிக்கும் ஒரு சாமியார் தன் வாழ்நாள் முடியும் தருவாயில் தன்னிடம் உள்ள சக்திகளையெல்லாம் நாயகனுக்கு கொடுத்துவிட்டு மறைகிறார்.
அந்த சக்திகளை வைத்துக் கொண்டு நாயகன் ஊரில் இறந்துபோனவர்களையெல்லாம் உயிர்ப்பிக்கிறார். இந்நிலையில், ஆசிரியர் ராஜனை, பாலாசிங்கின் தம்பிகள் கொலை செய்கிறார்கள். அவரையும் உயிர்பிக்க முயற்சிக்கும் வேளையில், ராஜனின் ஆவி, தன்னை காப்பாற்ற வேண்டாமென்றும், தனக்கு பதிலாக அந்த பள்ளிக்கூடத்தை சிறப்பாக செயல்படுத்துமாறும் நாயகனிடம் கேட்டுக் கொண்டு மறைந்துவிடுகிறது.
இதையடுத்து நாயகன் அந்த இலவச பள்ளிக்கூடத்தை ஏற்று சிறப்பாக நடத்தினாரா? ஆசிரியர் ராஜனை கொன்றவர்களை பழிதீர்த்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் சந்தோஷ் கண்ணாவுக்கு நாயகனுக்குண்டான தோற்றம் இருந்தாலும் அவரால் சிறப்பாக நடிக்க முடியவில்லை. சென்டிமெண்ட் காட்சிகளில் ஏனோதானோவென்று நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், காமெடி, ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் இவரது நடிப்பு சொதப்பலே. இவர் மீது குறை சொல்வதைவிட இவரை இயக்குனர் சரியாக வேலை வாங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நாயகி காயத்ரி ஏற்கெனவே பார்த்த முகம் தான் என்றாலும், இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். வீர வசனம் பேசுவதாகட்டும், தனது மாமனுடன் ரொமான்ஸ் செய்வதாகட்டும் இரண்டிலும் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். பண்ணையாராக வரும் பாலாசிங், அவரது தம்பிகளாக வரும் கராத்தே ராஜா, மூகாம்பிகை ரவி ஆகியோரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.

ஆசிரியராக வரும் ராஜனுக்கு கௌரவமான வேடம். அந்த வேடத்தை தனது சிறப்பான நடிப்பால் பூர்த்தி செய்திருக்கிறார். நெல்லை சிவா, கொட்டாங்குச்சி, கிரேன் மனோகர் ஆகியோரின் காமெடி பெரிதாக எடுபடவில்லை. நாயகன் கூடவே வரும் பாவா லட்சுமணனுக்கு நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு வழங்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. பஞ்சாயத்து தலைவர்களாக ஆர்.சுந்தர்ராஜன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக அளித்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் சோனியா அகர்வால் கடைசி சண்டை காட்சியில் மட்டும் தலையை காண்பித்துவிட்டு சென்றிருக்கிறார். மற்றபடி அவருக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை.
இயக்குனர் பழனிவேல், தனியார் பள்ளிக்கூடங்கள் தங்கள் பள்ளிக்கூடத்தின் தரத்திற்காக 9-ம் வகுப்பிலேயே 10-வகுப்புக்கான பாடத்தையும், 11-ஆம் வகுப்பிலேயே 12-ஆம் வகுப்புக்கான பாடத்தையும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து, அவர்களின் மீது படிப்பு சுமையை அதிகமாக சுமத்தி அவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகிறார்கள். அவர்களை புரிந்து படிக்க வைத்தாலே இந்த மாதிரியான சுமைகளை அவர்கள் மீது ஏற்ற வேண்டியதில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக இப்படத்தை எடுத்திருக்கிறார்.

ஆனால், சொல்ல வேண்டிய கருத்தை ஆழமாக சொல்லாமல் தேவையில்லாத காட்சிகளையெல்லாம் கதையின் ஊடே கொண்டுசென்று எந்தவொரு விஷயமும் நமக்கு புரியும்படி இல்லாமல் செய்துவிட்டார். அதேபோல், ஆவி மனிதர்களை போல சாதாரணமாக நடமாடுவது, இறந்தவர்களை உயிர் பிழைத்து வரவைப்பது என நம்பும்படியான விஷயங்களும் படத்தை பார்ப்பதற்கு தடையாக இருக்கிறது. அதேபோல், ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் வேலை வாங்குவதிலும் ரொம்பவும் கவனம் சிதறியிருக்கிறார்.
ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. அம்மன் பாடலும், ஆரம்பத்தில் வரும் கும்மி பாடலும் ரசிக்க வைக்கிறது. பழனிவேலின் பின்னணி இசை பரவாயில்லை ரகம்தான். பார்த்திபனின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம்தான்.
மொத்தத்தில் ‘சாயா’ சாய்க்கவில்லை.
இதே ஊரில் பண்ணையாரான பாலாசிங், தனது தம்பி கராத்தே ராஜா, மூகாம்பிகை ரவி ஆகியோரின் உதவியுடன் தனியார் பள்ளிக்கூடம் வைத்து, கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார். ராஜன் இலவசமாக கல்வி வழங்குவதால், இவர்களது பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் சேர்க்கை குறைகிறது. இதனால், ராஜனை எப்படியாவது அந்த பள்ளிக்கூடத்தை நடத்த விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.

சந்தோஷின் மாமன் மகளான நாயகி காயத்ரி, தனது மாமனை திருமணம் செய்துகொள்ள ஆசையுடன் இருக்கிறாள். இந்நிலையில், இரவானதும் நாயகனுக்கு மட்டும் அவனது பெயரை ஒரு பெண் அழைப்பது போன்று குரல் கேட்கிறது. அதேநேரத்தில் கொல்லிமலையில் வசிக்கும் ஒரு சாமியார் தன் வாழ்நாள் முடியும் தருவாயில் தன்னிடம் உள்ள சக்திகளையெல்லாம் நாயகனுக்கு கொடுத்துவிட்டு மறைகிறார்.
அந்த சக்திகளை வைத்துக் கொண்டு நாயகன் ஊரில் இறந்துபோனவர்களையெல்லாம் உயிர்ப்பிக்கிறார். இந்நிலையில், ஆசிரியர் ராஜனை, பாலாசிங்கின் தம்பிகள் கொலை செய்கிறார்கள். அவரையும் உயிர்பிக்க முயற்சிக்கும் வேளையில், ராஜனின் ஆவி, தன்னை காப்பாற்ற வேண்டாமென்றும், தனக்கு பதிலாக அந்த பள்ளிக்கூடத்தை சிறப்பாக செயல்படுத்துமாறும் நாயகனிடம் கேட்டுக் கொண்டு மறைந்துவிடுகிறது.
இதையடுத்து நாயகன் அந்த இலவச பள்ளிக்கூடத்தை ஏற்று சிறப்பாக நடத்தினாரா? ஆசிரியர் ராஜனை கொன்றவர்களை பழிதீர்த்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் சந்தோஷ் கண்ணாவுக்கு நாயகனுக்குண்டான தோற்றம் இருந்தாலும் அவரால் சிறப்பாக நடிக்க முடியவில்லை. சென்டிமெண்ட் காட்சிகளில் ஏனோதானோவென்று நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், காமெடி, ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் இவரது நடிப்பு சொதப்பலே. இவர் மீது குறை சொல்வதைவிட இவரை இயக்குனர் சரியாக வேலை வாங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நாயகி காயத்ரி ஏற்கெனவே பார்த்த முகம் தான் என்றாலும், இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். வீர வசனம் பேசுவதாகட்டும், தனது மாமனுடன் ரொமான்ஸ் செய்வதாகட்டும் இரண்டிலும் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். பண்ணையாராக வரும் பாலாசிங், அவரது தம்பிகளாக வரும் கராத்தே ராஜா, மூகாம்பிகை ரவி ஆகியோரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.

ஆசிரியராக வரும் ராஜனுக்கு கௌரவமான வேடம். அந்த வேடத்தை தனது சிறப்பான நடிப்பால் பூர்த்தி செய்திருக்கிறார். நெல்லை சிவா, கொட்டாங்குச்சி, கிரேன் மனோகர் ஆகியோரின் காமெடி பெரிதாக எடுபடவில்லை. நாயகன் கூடவே வரும் பாவா லட்சுமணனுக்கு நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு வழங்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. பஞ்சாயத்து தலைவர்களாக ஆர்.சுந்தர்ராஜன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக அளித்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் சோனியா அகர்வால் கடைசி சண்டை காட்சியில் மட்டும் தலையை காண்பித்துவிட்டு சென்றிருக்கிறார். மற்றபடி அவருக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை.
இயக்குனர் பழனிவேல், தனியார் பள்ளிக்கூடங்கள் தங்கள் பள்ளிக்கூடத்தின் தரத்திற்காக 9-ம் வகுப்பிலேயே 10-வகுப்புக்கான பாடத்தையும், 11-ஆம் வகுப்பிலேயே 12-ஆம் வகுப்புக்கான பாடத்தையும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து, அவர்களின் மீது படிப்பு சுமையை அதிகமாக சுமத்தி அவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகிறார்கள். அவர்களை புரிந்து படிக்க வைத்தாலே இந்த மாதிரியான சுமைகளை அவர்கள் மீது ஏற்ற வேண்டியதில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக இப்படத்தை எடுத்திருக்கிறார்.

ஆனால், சொல்ல வேண்டிய கருத்தை ஆழமாக சொல்லாமல் தேவையில்லாத காட்சிகளையெல்லாம் கதையின் ஊடே கொண்டுசென்று எந்தவொரு விஷயமும் நமக்கு புரியும்படி இல்லாமல் செய்துவிட்டார். அதேபோல், ஆவி மனிதர்களை போல சாதாரணமாக நடமாடுவது, இறந்தவர்களை உயிர் பிழைத்து வரவைப்பது என நம்பும்படியான விஷயங்களும் படத்தை பார்ப்பதற்கு தடையாக இருக்கிறது. அதேபோல், ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் வேலை வாங்குவதிலும் ரொம்பவும் கவனம் சிதறியிருக்கிறார்.
ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. அம்மன் பாடலும், ஆரம்பத்தில் வரும் கும்மி பாடலும் ரசிக்க வைக்கிறது. பழனிவேலின் பின்னணி இசை பரவாயில்லை ரகம்தான். பார்த்திபனின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம்தான்.
மொத்தத்தில் ‘சாயா’ சாய்க்கவில்லை.
எஸ்.சாம் இம்மானுவேல் இயக்கத்தில் சபாபதி - லுகுனா அஹமது - பிளாக் பாண்டி நடிப்பில் உருவாகியிருக்கும் `கேக்கிறான் மேய்க்கிறான்' படத்தின் விமர்சனம்.
பிளாக் பாண்டி தன் நண்பர்களோடு இணைந்து, தான் வெளிநாட்டில் இருந்து வருவதாகவும், வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பென்சன் வாங்கித் தருவதாகவும் கூறி, ஜோதிலட்சுமியை முன்னிருத்தி பலரிடம் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டு ஊரை காலி செய்கின்றார். பணம் கொடுத்தவர்கள் அனைவரும் ஜேதிலட்சுமியை திட்ட அவமானம் தாங்காமல் ஒருகட்டத்தில் அவர் இறந்து விடுகிறார்.
அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்ற பாண்டி மற்றும் அவனது நண்பர்கள், அந்த பணத்தை கொண்டு புதிய தொழில் தொடங்க முடிவு செய்கின்றனர். இந்த விஷயத்தை அதே ஊரில் வசிக்கும் நாயகனான சபாபதியிடம் தெரிவிக்க, போட்டோகிராபி மீது ஈர்ப்புக் கொண்டிருக்கும் சபாபதி, அந்த பணத்தை வைத்து ஒரு ஸ்டூடியோ தொடங்கலாம் என்று கூற ஒரு ஸ்டூடியோவை தொடங்குகின்றனர்.

ஆனால் மக்களிடையே அந்த ஸ்டூடியோ வரவேற்பை பெறாததால், ஒரு மாடலை அவர்களின் ஸ்டூடியோ விளம்பரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்கின்றனர். இவ்வாறாக பெரிய மாடலை தேர்ந்தெடுத்தால் அதிக பணம் செலவாகும் என்பதால், உள்ளூர் பூக்காரியான ஜாங்கிரி மதுமிதாவை மாடலாக நடிக்க வைத்து பிரபலப்படுத்துகின்றனர்.
மாடலிங்கில் நாட்டத்துடன் இருக்கும் நாயகி லுகுனா அஹமதின் தோழி அந்த விளம்பரத்தை பார்த்தவுடன், அந்த ஸ்டூடியோவில் போட்டோ எடுக்க வேண்டும் என்று விரும்புகிறாள். இதையடுத்து லுகுனா அஹமதுடன் சென்ற அவளது தோழி அந்த ஸ்டூடியோவில் போட்டோ எடுத்துக் கொள்கிறாள். லுகுனா
அமீரை பார்த்த முதல் சந்திப்பிலேயே அவள் மீது காதல் கொண்ட சபாபதி, லுகுனாவுக்கு தெரியாமலேயே அவளையும் போட்டோ எடுத்து அனுப்பிவிடுகிறான். இதையடுத்து அந்த போட்டோ குறித்து சபாபதியிடம் லுகுனா கேட்கும் போது, லுகுனாவை காதலிப்பதாக சபாபதி கூற, ஒரு கட்டத்தில் நாயகியும் அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள்.

இந்நிலையில், லுகுனாவின் தந்தையும், காவல்துறை ஆணையருமான ஆடுகளம் நரேனிடம் தனது காதல் பற்றி லுகுனா கூறுகிறாள். இதையடுத்து நரேன், சபாபதியை நேரில் அழைத்து வர சொல்கிறார். நரேனை பார்க்க சபாபதி, பாண்டியுடன் செல்கிறார். அங்கு பாண்டியை பார்த்த நரேன், இவனால் தான் தனது அம்மா ஜோதிலட்சுமி இறந்துவிட்டதாகக் கூறி அவனை பிடிக்க செல்லும் போது, பாண்டி அங்கிருந்து தப்பித்து செல்ல, சபாபதியை பிடித்து நரேன் விசாரிக்கிறார்.
அந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கதறியும், சபாபதியின் பேச்சைக் கேட்காத நரேன் தனது மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறாரா? சபாபதி - லுகுனா அஹமதின் காதல் வெற்றி பெற்றதா? பாண்டி என்ன ஆனான்? கடைசியில் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.

நாயகன் சபாபதி கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். லுகுனா அஹமது அழகான தேவதையாக திரையில் பளிச்சிடுகிறார். அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. பிளாக் பாண்டி படம் முழுக்க காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார். எனினும் ஒரு சில இடங்களிலேயே அவரது காமெடி பலித்திருக்கிறது. ஆடுகளம் நரேன், ரேகா சுரேஷ், ஷாலு, ஜாங்கிரி மதுமிதா என மற்ற அனைவரும் படத்திற்கு பக்கபலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
இப்படத்தின் மூலம் நட்பு வேண்டும், நல்ல நட்பு வேண்டும், நம்மை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் நட்பினை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு வித்தியாசமான கதையை முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் எஸ்.சாம் இம்மானுவேல்.
டி கார்த்திக் பாலாவின் ஒளிப்பதிவும், ஆதித்யா மகாதேவனின் இசையும் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. குறிப்பாக அஷ்மிதா ஆடும் அந்த பாடல் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் `கேக்கிறான் மேய்க்கிறான்' ஏமாற்றுகிறான்.
அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்ற பாண்டி மற்றும் அவனது நண்பர்கள், அந்த பணத்தை கொண்டு புதிய தொழில் தொடங்க முடிவு செய்கின்றனர். இந்த விஷயத்தை அதே ஊரில் வசிக்கும் நாயகனான சபாபதியிடம் தெரிவிக்க, போட்டோகிராபி மீது ஈர்ப்புக் கொண்டிருக்கும் சபாபதி, அந்த பணத்தை வைத்து ஒரு ஸ்டூடியோ தொடங்கலாம் என்று கூற ஒரு ஸ்டூடியோவை தொடங்குகின்றனர்.

ஆனால் மக்களிடையே அந்த ஸ்டூடியோ வரவேற்பை பெறாததால், ஒரு மாடலை அவர்களின் ஸ்டூடியோ விளம்பரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்கின்றனர். இவ்வாறாக பெரிய மாடலை தேர்ந்தெடுத்தால் அதிக பணம் செலவாகும் என்பதால், உள்ளூர் பூக்காரியான ஜாங்கிரி மதுமிதாவை மாடலாக நடிக்க வைத்து பிரபலப்படுத்துகின்றனர்.
மாடலிங்கில் நாட்டத்துடன் இருக்கும் நாயகி லுகுனா அஹமதின் தோழி அந்த விளம்பரத்தை பார்த்தவுடன், அந்த ஸ்டூடியோவில் போட்டோ எடுக்க வேண்டும் என்று விரும்புகிறாள். இதையடுத்து லுகுனா அஹமதுடன் சென்ற அவளது தோழி அந்த ஸ்டூடியோவில் போட்டோ எடுத்துக் கொள்கிறாள். லுகுனா
அமீரை பார்த்த முதல் சந்திப்பிலேயே அவள் மீது காதல் கொண்ட சபாபதி, லுகுனாவுக்கு தெரியாமலேயே அவளையும் போட்டோ எடுத்து அனுப்பிவிடுகிறான். இதையடுத்து அந்த போட்டோ குறித்து சபாபதியிடம் லுகுனா கேட்கும் போது, லுகுனாவை காதலிப்பதாக சபாபதி கூற, ஒரு கட்டத்தில் நாயகியும் அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள்.

இந்நிலையில், லுகுனாவின் தந்தையும், காவல்துறை ஆணையருமான ஆடுகளம் நரேனிடம் தனது காதல் பற்றி லுகுனா கூறுகிறாள். இதையடுத்து நரேன், சபாபதியை நேரில் அழைத்து வர சொல்கிறார். நரேனை பார்க்க சபாபதி, பாண்டியுடன் செல்கிறார். அங்கு பாண்டியை பார்த்த நரேன், இவனால் தான் தனது அம்மா ஜோதிலட்சுமி இறந்துவிட்டதாகக் கூறி அவனை பிடிக்க செல்லும் போது, பாண்டி அங்கிருந்து தப்பித்து செல்ல, சபாபதியை பிடித்து நரேன் விசாரிக்கிறார்.
அந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கதறியும், சபாபதியின் பேச்சைக் கேட்காத நரேன் தனது மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறாரா? சபாபதி - லுகுனா அஹமதின் காதல் வெற்றி பெற்றதா? பாண்டி என்ன ஆனான்? கடைசியில் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.

நாயகன் சபாபதி கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். லுகுனா அஹமது அழகான தேவதையாக திரையில் பளிச்சிடுகிறார். அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. பிளாக் பாண்டி படம் முழுக்க காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார். எனினும் ஒரு சில இடங்களிலேயே அவரது காமெடி பலித்திருக்கிறது. ஆடுகளம் நரேன், ரேகா சுரேஷ், ஷாலு, ஜாங்கிரி மதுமிதா என மற்ற அனைவரும் படத்திற்கு பக்கபலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
இப்படத்தின் மூலம் நட்பு வேண்டும், நல்ல நட்பு வேண்டும், நம்மை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் நட்பினை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு வித்தியாசமான கதையை முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் எஸ்.சாம் இம்மானுவேல்.
டி கார்த்திக் பாலாவின் ஒளிப்பதிவும், ஆதித்யா மகாதேவனின் இசையும் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. குறிப்பாக அஷ்மிதா ஆடும் அந்த பாடல் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் `கேக்கிறான் மேய்க்கிறான்' ஏமாற்றுகிறான்.






