search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naren"

    • நடிகர் நரேன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்தை இயக்குனர் சுகீத் இயக்குகிறார்.

    இயக்குனர் சுகீத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஆத்மா'. இந்த படத்திற்கு ராகேஷ் சங்கர் கதை, திரைக்கதை எழுத, கே. சந்துரு வசனம் எழுதியுள்ளார். கைதி, விக்ரம் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு,  ஆட்டிசம் பாதித்த இளைஞனாக இப்படத்தில் அசத்தியுள்ளார்  நடிகர் நரேன். கதாநாயகியாக தில்லுக்கு துட்டு 2 புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். மேலும், பால சரவணன், காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடிக்க  ஃபிலிப்பினோவைச் சேர்ந்த  நடிக்கைகள் ஷெரீஸ் ஷீன் அகாட், கிறிஷ்டீன் பெண்டிசிகோ ஆகியோர் திருப்புமுனை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  


    மங்கள் சுவர்னன், சஸ்வதி சுனில்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேக் மேனன் ஒளிப்பதிவு செய்ய நவீன் விஜயன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். பெரும் பொருட்செலவில், KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி இப்படத்தினை தயாரித்துள்ளார். தமிழகமெங்கும் பிரபல இயக்குனர் சுசீந்திரன் இப்படத்தினை வெளியிடுகிறார்.


    ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல மர்ம முடிச்சுகள் அவிழ ஆரம்பிக்கிறது. பரப்பரபான பல திருப்பங்களுடன், ஹாரர் கலந்த, மிஸ்டரி த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.


    ஆத்மா போஸ்டர்

    துபாயில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கைதி'.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், ட்விஸ்டுகளும் இந்த படத்தை மாபெரும் வெற்றிப்படமாக மாற்றியது.


    இதைத்தொடர்ந்து, . 'கைதி 2' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 'கைதி 2' திரைப்படம் விரைவில் உருவாகும் என கார்த்தி அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால், படம் எப்போது தொடங்கப்படும் என்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 'கைதி', 'விக்ரம்' திரைப்படங்களில் நடித்த நடிகர் நரேன் 'கைதி 2' திரைப்படம் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது, கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் நரேனிடம் 'கைது 2' எப்போது ரிலீஸ் ஆகும்? என்று கேள்வி கேட்கப்பட்டது.


    இதற்கு, "எல்சியூ-வில் அடுத்து வெளியாகப்போகும் படம் 'கைதி 2' தான், ஆனால், அதற்கு முன் எல்சியூ கன்னெக்டுடன் ஒரு 10 நிமிட ஷார்ட் பிலிம் ஒன்றை லோகேஷ் இயக்கவுள்ளார். அதில் நானும் நடித்திருக்கிறேன். எல்சியூ-வின் தொடக்கம் தான் அந்த ஷார்ட் பிலிம். அதன் பின் 'கைது 2' வெளியாகும்" என்று தெரிவித்தார்.

    எல்சியூ (lokesh cinematic universe)-ல் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் 'கைதி'. அதன் பிறகு கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்', விஜய் நடித்த 'லியோ' போன்ற படங்கள் எல்சியூ-வில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.


    • சித்திரம் பேசுதடி, நெஞ்சிருக்கும் வரை, அஞ்சாதே, கைதி, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நரேன்.
    • இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    மிஷ்கின் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் நரேன். அதன்பின்னர் நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே, தம்பிக்கோட்டை, யு டர்ன், கைதி, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியன விக்ரம் படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

     

    நரேன், கடந்த 2007-ம் ஆண்டு மஞ்சு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2008-ம் ஆண்டு தன்மையா என்ற மகள் பிறந்தார். இந்நிலையில் 14 வருடத்திற்கு பிறகு நரேன் - மஞ்சு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை நரேன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் நரேன், சூர்யாவுக்கு குரல் கொடுத்தது பெருமிதம் என்று கூறியிருக்கிறார்.
    சூர்யா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'ஜெய்பீம்'. இந்தப் படம் தமிழ் மொழியில் பெற்ற அதே வரவேறப்பை மலையாளத்திலும் பெற்றுள்ளது. மலையாளத்தில் சூர்யாவுக்கு டப்பிங் குரல் கொடுத்திருப்பவர் நடிகர் நரேன். அந்த அனுபவத்தை பற்றி கூறும்போது, 'மிகப் பெரிய ஸ்டாரான சூர்யா சாருக்கு குரல் கொடுப்பதில் பெருமிதமடைகிறேன். பெரும் வெற்றி பெற்ற 'சூரரைப்போற்று' படத்துக்கும் நான் தான் டப்பிங் பேசினேன்.

    நரேன்

    'ஜெய்பீம்' படத்துக்கும் டப்பிங் பேச அழைத்தபோது ஒப்புக்கொண்டேன். ஆனால் நான் நினைத்த மாதிரி இல்லாமல் மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. சூர்யா சாரின் நடிப்பு, வசன உச்சரிப்பு மிக நுட்பமாக இருந்ததால் பிரேம் பை பிரேம் கவனித்து பேசியது புது அனுபவமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அதுமட்டுமல்ல, இந்த அனுபவம் சினிமாவை மேலும் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. மலையாளத்தில் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வாய்ப்பு அளித்த சிபு பற்றும் ஜாலி ஆகியோருக்கு நன்றி’ என்றார்.
    சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் நரேன் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார். #Naren #KanImmaikkumNerathil
    கன்னடத்தில் வாசு என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அஜித் வாசன், தற்போது `கண் இமைக்கும் நேரத்தில்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

    நள்ளிரவு ஒரு மணி முதல் 4 மணி வரை நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஆக்‌ஷன் திரில்லராக படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர். புதுமுகங்கள் பலரும் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த படத்தை அஜித் வாசனுடன் நடிகர் நரேனும் இணைந்து தயாரிக்கிறார். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நரேன் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.



    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி, மற்றும் நரேன் வெளியிட்டுள்ளனர். விரைவில் இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
    ×