என் மலர்
நீங்கள் தேடியது "ஜுனியர் என்.டி.ஆர்"
- தேவரா படம் முதல் நாளிலேயே ரூ.172 கோடி வசூலை பெற்றது.
- உலகம் முழுவதும் தேவரா படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த தேவரா படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜான்விகபூர் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் தென்னிந்திய திரை உலகில் ஜான்வி கபூர் முதல் முறையாக அறிமுகமானார்.
தேவரா படம் முதல் நாளிலேயே ரூ.172 கோடி வசூலை பெற்றது. மூன்று நாட்களில் 307 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. உலகம் முழுவதும் இப்படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
இந்நிலையில், தேவரா படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தேவரா 2 படத்தின் அறிவிப்பை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
- ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது.
- மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இப்படத்தில் கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
திரைப்படத்தின் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் திரைபடம் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதியாவில் மட்டும் 240 கோடி ரூபாய் வசூலித்தது. ஓவர்சீஸ்-ல் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜூனியர் என் டி ஆர் இந்தி திரையுலகில் அவரது முதல் படத்தை நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜூனியர் என் டி ஆர் இந்தி திரையுலகில் அவரது முதல் படத்தை நடித்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ளார். கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார்.
திரைப்படம் மிகவும் ஆக்ஷன் நிறைந்த காட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான பொருட் செலவில் திரைப்படம் உருவாகியுள்ளது. இரண்டு ராணுவ வீரர்கள் வெவ்வேறு இலக்கை நோக்கி பயனிக்கின்றனர், இந்த இருவரும் மனநிலை மற்றும் கோட்பாடுகள் வேறாக இருக்கிறது. டிரெய்லர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
- இயக்குனர் கொரட்டலா சிவாவுடன் ஜூனியர் என். டி.ஆர் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றப் போகிறார்
- நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார்.
2024 தசரா அன்று தேவரா பாகம் 1- இன் டைட்டில் ரீவில் செய்தார்கள். இயக்குனர் கொரட்டலா சிவாவுடன் ஜூனியர் என். டி.ஆர் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றப் போகிறார். இதற்கு முன் 8 ஆண்டுகளுக்கு ம் உன் வெளியான் ஜந்தா கேரேஜ் படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்தார்.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். இந்த படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜான்வி கபூர், சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வெளியான 'Fear Song' என்ற பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். அனிருத் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'தேவரா பாகம்-1' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில், மேரு மலையே தலைவணங்கும் அளவுக்கு வாழ்ந்த ராமோஜி ராவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இயக்குனர் ராம் கோபால் வர்மா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டி, ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமேஜி ராவ் (87) உடல்நகுறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.45 மணிக்கு காலமானார்.
ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவியதன் மூலம் ஐதராபாத் மற்றும் திரைப்படத் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ராமோஜி ராவ். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், 'ராமோஜி ராவ் இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவருடன் பல முறை உரையாடுவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி' என்று பதிவிட்டுள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில், மேரு மலையே தலைவணங்கும் அளவுக்கு வாழ்ந்த ராமோஜி ராவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
ஜுனியர் என்.டி.ஆர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய சினிமாவிலும் பத்திரிக்கைத் துறையிலும் தீர்க்கதரிசியாக விளங்கிய ராமோஜி ராவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். எனது முதல் படமான நின்னு சூடலனி உருவாக காரணமாக இருந்த அவரை என்றென்றைக்கும் நினைவில் வைத்திருப்பேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இயக்குனர் ராம் கோபால் வர்மா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
- கடந்த மே 20 ஆம் தேதி என்.டி.ஆர் பிறந்தநாள் அன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.
- இந்நிலையில் 'NTR-31' படம் இன்று பூஜையுடன் துவங்க உள்ளது
கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கே.ஜி.எப் படத்தின் 3 ஆம் பாகத்தில் அஜித் குமார் இணையலாம் என்று வைரலாக பேசப்பட்டது.
இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக கடந்த மே 20 ஆம் தேதி என்.டி.ஆர் பிறந்தநாள் அன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.
இந்நிலையில் 'NTR-31' படம் இன்று பூஜையுடன் துவங்க உள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்களை விரைவில் படக்குழு முடிவு செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கிடையில், கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர்.என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள 'தேவரா', படம் வரும் அக்டோபர் 10 அன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






