என் மலர்
சினிமா செய்திகள்
- சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.
- பாடலாசிரியர் சினேகன் தந்தை மறைவுக்கு திரை உலகினர், பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார்.
இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சினேகன்,
நட்புக்குரிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் /அனைத்து கட்சி அரசியல் தோழர்களுக்கும் வணக்கம்.
எனது தந்தையார் இன்று அதிகாலை 4.30 மணிக்குக் காலமாகி விட்டார் என்ற துயர தகவலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
பாடலாசிரியர் சினேகன் தந்தை மறைவுக்கு திரை உலகினர், பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இப்படம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் நிறுவனங்கள் தயாரித்த இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படத்தை தொடர்ந்து, நடிகர் மாதவன் தற்போது மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார்.
இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்த மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மாதவன் நடிக்கிறார்.
இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் ஜி.டி.நாயுடு (GDN) படத்தை இயக்குகிறார், ராக்கெட் படத்தை தயாரிக்கும் அதே நிறுவனங்கள் இப்படத்தையும் தயாரிக்கின்றன.
ஜி.டி. நாயுடு பிறந்த இடமான கோயமத்தூரில் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜி.டி.நாயுடு படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக, ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறுகையில்," சில மாதங்களுக்கு பிறகு, இன்று தலைவருடன் தரமான நேரத்தைச் செலவிட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவருடன் பகிர்ந்து கொள்ளக் கிடைக்கும் ஒவ்வொரு தருணத்தையும் நான் உண்மையிலேயே போற்றுகிறேன்" என்றார்.
2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் 'ஆண் பாவம் பொல்லாதது'. இப்படத்தை அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.
இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'ஆண்பாவம் பொல்லாதது' படம் வருகிற 31-ந்தேதி வெளியாக உள்ளது.
'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. டிரெய்லரில் பெண் பார்ப்பது முதல் திருமணம், குடும்ப சண்டை, விவாகரத்து என திருமண வாழ்க்கையில் கணவன்-மனைவிக்கு இடையே நடப்பதை சொல்லப்பட்டுள்ளது. ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஆண் பாவம் பொல்லாதது படத்தின் மண மகனே பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நாயகன் விகாஷ் சத்தியமங்கலம் பகுதியில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். ஒருநாள் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்தில் தற்கொலை செய்ததாக தகவல் கிடைக்கிறது. அங்கு செல்லும் விகாஷ், இது தற்கொலை இல்லை கொலை என்று கண்டுபிடிக்கிறார். இதையடுத்து யார் கொலை செய்து இருப்பார்கள் என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
இறுதியில் அந்த பெண்ணை கொலை செய்தவர் யார்? எதற்காக கொலை செய்தார்? போலீஸ் அதிகாரி விகாஷ் கொலையாளியை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விகாஷ் போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஒரு மாஸ் ஹீரோவுக்கான நடை, உடை என கவர முயற்சி செய்து இருக்கிறார். கொஞ்சம் நடிப்பிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். மற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள். சிங்கம் புலியின் நடிப்பு பெரியதாக எடுபடவில்லை.
இயக்கம்
ஒரு தற்கொலை, அதன் பின்னணி என்ன என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தளபதி. படம் ஆரம்பித்து பத்து நிமிடத்திலேயே கதையை சொல்லி விட்டார் இயக்குனர். திரைக்கதையில் சுவாரசியம் இல்லாமல் இயக்கி இருப்பது பலவீனம். அடுத்தடுத்து யூகிக்கும் படியான காட்சிகள் வைத்து இருப்பது சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இசை
விஜய் பிரபுவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்து இருக்கிறது.
ஒளிப்பதிவு
பாலமுருகனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
- விஜய் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார்.
- யாரிடமும் அதிகம் நெருங்கி பேசமாட்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், நடிகை ரோஜா. 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், ஒரு கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டதன் காரணமாக, படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். சமீபத்தில் படங்களில் நடிக்காதது பற்றி நடிகை ரோஜா தெரிவித்துள்ள கருத்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ரோஜா அளித்த பேட்டியில், "நடிகர் விஜய்யுடன் 'நெஞ்சினிலே' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். அப்போது விஜய் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார். யாரிடமும் அதிகம் நெருங்கி பேசமாட்டார். சில வருடங்கள் கழித்து, அவரது நடிப்பில் 'காவலன்' படத்தில் அசின் அம்மாவாக நடித்தேன்.
அந்தப் படப்பிடிப்பில் என்னைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய், 'மேடம்.. நீங்கள் எனக்கு மாமியாராக நடிக்கிறீர்களா?. படக்குழுவில் சொன்னபோது, அவர்கள் சும்மா சொல்கிறார்கள் என்று நினைத்தேன். நீங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களை நாங்கள் இன்னும் நாயகியாகவே பார்த்து வருகிறோம்' என்று கூறினார்.
விஜய் மட்டுமல்ல தெலுங்கில் நடிகர் கோபிசந்துக்கு மாமியாராக நடித்தபோது, அவரும் இதே விஷயத்தைக் கூறினார். அதனால் தான் நான் சினிமாவில் அம்மா, மாமியார் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று ஒதுங்கினேன். 'பாகுபலி' படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்ததுபோல ஒரு கதாபாத்திரம் கிடைத்தால், மீண்டும் நடிப்பது பற்றி யோசிப்பேன்" என்று கூறியுள்ளார்.
- கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது.
- பைசன் படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளது
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில், படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளது.
இந்நிலையில், பைசன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் ஹீரோ துருவ் விக்ரமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவை பகிர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பதிவில், "என் முதல் படமான பரியேறும் பெருமாளில் ஆரம்பித்து கர்ணன், மாமன்னன், வாழை இப்போது பைசன் வரை என் மீதும் என் படைப்பின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்து ஆர்வமாய் பார்த்து நேரில் அழைத்து என்னை உச்சிமுகர்ந்து கொண்டாடும் உங்களின் அத்தனை பேரன்பிற்கும் பெரும் பிரியத்திற்கும் என் இதயத்திலிருந்து கசிந்துருகும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா" என்று தெரிவித்துள்ளார்.
- கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது.
- பைசன் படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில், படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளது.
இந்நிலையில், பைசன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் ஹீரோ துருவ் விக்ரமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பைசன் காலமாடன்: மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!.
தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு 'sharp message'-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. அவ்வகையில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து, இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ் அவர்கள்.
சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக 'பைசன்' மிளிர்கிறது. இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, மாரியின் திரைக்கதைக்கு உயிரூட்டியுள்ள துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா உள்ளிட்ட நடிகர்கள், பின்னணியில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
இதுபோல மேலும் பல படைப்புகளைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்க மாரி செல்வராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.
- ரேஜ் திரைப்படத்தை டைரக்டர் சிவனேசன் இயக்கியுள்ளார்.
- நடிகர் ஷான், இயக்கி தயாரிப்பு நிறுவனம், ரேஜ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றார்.
சென்னை:
நடிகர் ஷான் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிக்கும் 'ரேஜ்' திரைப்படத்தின் டைட்டில் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார்.
நடிகர் ஷான், இயக்கி தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரேஜ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரேஜ்' திரைப்படத்தில் ஷான், ஷெர்லி பவித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
எம்.எஸ்.நவீன் குமார் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்திற்கு விபின் .ஆர் இசையமைக்கிறார். லவ் வித் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை இயக்கி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் டைட்டில் லுக்கில் 'இயல்புக்கு மீறிய காதல் கதை' என்ற டேக் லைன் இணைக்கப்பட்டிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 'பைசன்' படம் வெற்றி விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது:-
எவ்வளது எதிர்ப்பு வந்தாலும், எவ்வளது முரண் வந்தாலும் என்னை மாற்றிவிடலாம், எனது எழுத்து நடையை மாற்றிவிடலாம் என நினைத்துவிடாதீர்கள். அது என் ரத்தத்திலேயே கிடையாது.
எனக்கு அது தான் வரும். அதைவிட்டு விலகுவதற்கான வாழ்க்கை என்னிடம் இல்லை. அதைப்பற்றிய சிந்தனைதான் அதிகமாக உள்ளது.
இந்த படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையிலான காலக்கட்டத்தில் நான் சந்திக்கும் மக்கள், அவர்களுடைய பிரச்சனைகள் மிகவும் நீண்டது. இவர்களுடைய கதையை கேட்டாளே வேறு படமே எடுக்க முடியாது.
நான் மிகவும் நிலையானவனாக இருக்க விரும்புகிறேன். திரும்ப திரும்ப மாரி செல்வரான் ஏன் சாதிய படமே எடுக்கிறார் என்று கேட்டீர்கள் என்றால், மவுனம் தான் எனது பதிலாக இருக்கும். இதுபோன்ற கேள்விகளை எதிர்காலத்தில் எதிர்கொள்ள மாட்டேன் என்று நம்புகிறேன்.
இதைநான் வேண்டுகோளாகவே சொல்கிறேன். இதுபோன்ற கேள்விகள் என்னையும், எனது பணியையும், எனது சிந்தனையையும் மிகவும் பாதிக்கிறது.
மாரி செல்வராஜ் எடுப்பது சாதி படமா என்றால் அது உங்கள் மொழி. எனது மொழி, மாரி செல்வராஜ் எடுப்பது சாதியை எதிர்ப்பு படம். அந்த எதிர்ப்பு படங்களை தொடர்ந்து நான் எடுத்துக் கொண்டே இருப்பேன்.
மாரி செல்வராஜ் படம் என்றால் அது இருக்கும். மாரி செல்வராஜ் அதற்காக கிளம்பி வந்தவன் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2-ம் வாரம் அப்சரா சிஜேவும் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே யார் எல்லாம் வரப்போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் சின்னத்திரை நட்சத்திர ஜோடி பிரஜன்-சான்ட்ரா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதாக தகவல் வெளியானது. இந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.
இதற்கு முன்னர் 2வது சீசனில் தாடி பாலாஜி மற்றும் நித்யா ஜோடியாக பிக் பாஸில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் திரில்லர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராகுல் சதாசிவன். இவர் இயக்கிய ரெட் ரெயின், 2024ம் ஆண்டில் மம்முட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் போன்ற படங்கள் வித்தியாசமான கதையம்சங்களில் அமைந்திருந்தது.
பிரம்மயுகம் படத்தை தொடர்ந்து, டைஸ் ஐரே படத்தை கூட்டாத தயாரித்துள்ளது ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் நைட் ஷிப்ட் நிறுவனங்கள்.
டைஸ் ஐரே படத்தில் மோகன்லாலின் மகன், பிரணவ் மோகன்லால் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 25 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஒரே மாதத்தில் நிறைவுப்பெற்றது.
டைஸ் ஐரே என்பது லத்தீன் மொழியின் பாடலில் வரும் வார்த்தை என கூறப்படுகிறது. இதற்கு, நரகத்திற்கு அனுப்பப்படும் இறுதித் தீர்ப்பு என்பது பொருள்.
இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ள பகதஙயகங், படம் வரும் 31ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், 'டைஸ் ஐரே' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திகிலாக அமைந்திருக்கும் டிரெய்லரின் காட்சிகள் ரசிர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.






