என் மலர்
சினிமா செய்திகள்
- மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.
- தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.
பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா, மும்பையின் பந்த்ராவில் உள்ள வீட்டின் மொட்டையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக இரண்டு போலீசார் சென்றுள்ளனர். இதுவரை தற்கொலை தொடர்பான கடிதம் ஏதும் கண்டெடுக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
அனில் அரோரா தற்கொலை செய்து கொண்டபோது நடிகை மலைகா அரோரா வீடடில் இல்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மலைகா குடும்பத்தினர் இரங்கல் தெரிவிக்க அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
மலைகா அரோராவிற்கு 11 வயது இருக்கும்போது அவரது பெற்றோர் தனியாக பிரிந்தனர். அவரும், அவருடைய தங்கை அம்ரிதா ராவ் (அப்போது 6 வயது) அவர்களுடைய தாயாரால் வளர்க்கப்பட்டனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன்.
- நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம்.
நடிகர் ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து இருந்தார்.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி வந்த நிலையில் தற்போது, நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன்.
என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல....
ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது.
தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமன்றி நல்வழி காட்டி வரும் பத்திரிக்கை ஊடக மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எது சரி என்று நினைக்கிறோமோ அதை செய்ய வேண்டும்.
- முடியாது என்று சொல்ல வேண்டிய இடத்தில் முடியாது என்று சொல்ல வேண்டும்.
ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வடகறி, ஓ மை கோஸ்ட், தீ இவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் மலையாள பட உலகில் பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்திய ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கொச்சியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சன்னி லியோனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து சன்னிலியோன் கூறும்போது, "சொந்த அனுபவங்களை மட்டுமே என்னால் பேச முடியும். மற்றவர்கள் சொல்வது போன்ற தொல்லைகளை நான் சந்திக்கவில்லை. முடிவுகளை எடுப்பது பெண்கள் கையில் உள்ளது.
எது சரி என்று நினைக்கிறோமோ அதை செய்ய வேண்டும். முடியாது என்று சொல்ல வேண்டிய இடத்தில் முடியாது என்று சொல்ல வேண்டும். தவறு என்று தெரிந்தால் அந்த இடத்தில் இருந்து வெளியேற வேண்டும்.
எனக்கு பல கதவுகள் மூடப்பட்டன. அது பிரச்சினையாக தெரியவில்லை. ஒரு வாய்ப்பு போனால் பல வழிகளில் இன்னும் பல வாய்ப்புகள் வரும்'' என்றார்.
- இருவரும் ஆப்பிள் நிறுவனத் தலைவரான டிம் குக் உடன் கலந்துரையாடினர்.
- டிம் குக்குடன் எடுத்த புகைப்படத்தை சித்தார்த் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
வாஷிங்டன்:
நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இருதரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. சித்தார்த்தும், அதிதி ராவும் தெலுங்கானாவில் உள்ள வனபர்த்தியில் உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.
இதற்கிடையே, உலகின் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் நேற்று தனது நியூ மாடல் ஐ போன் சீரிஸ், வாட்ச் சீரிஸ், ஏர் பாட்ஸ் போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதற்கான அறிமுக வெளியீட்டு விழா 'இட்ஸ் க்ளோடைம்' என்ற தலைப்பில் அமெரிக்காவின் ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடந்தது. இந்நிகழ்வில் நடிகர்கள் சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் பங்கேற்று ஆப்பிள் நிறுவனத் தலைவரும், தற்போதைய தலைமை செயல் அதிகாரியுமான டிம் குக் உடன் கலந்துரையாடினர்.
இந்நிலையில், டிம் குக்குடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மறக்கமுடியாத மேஜிகல் அனுபவத்தை கொடுத்த டிம் குக்கிற்கு நன்றி. வியப்பூட்டும் வகையில் எங்களைச் சுற்றி புதிய தொழில்நுட்பங்களும், சிறந்த படைப்பாற்றல்களும் இருந்தன. அதனால் எங்களுக்கு கடந்த இரண்டு நாட்கள் மிகச்சிறப்பாக அமைந்தது. ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது" என பதிவிட்டுள்ளார்.
- மாணவர்கள் மத்தியில் மகாவிஷ்ணு பேசினார். இந்த பேச்சு பெரும் சர்சைக்கு உள்ளாகியுள்ளது
- இயக்குனரான செல்வராகவன் அவரது கருத்தை பதிவு செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். இந்த பேச்சு பெரும் சர்சைக்கு உள்ளாகியுள்ளது. இதுக்குறித்து பிரபல இயக்குனரான செல்வராகவன் அவரது கருத்தை பதிவு செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் `ஆன்மீக குரு என்பவர், தன்னை தேடுபவர்களை தானே தேடி வருவார்
மாறாக விளம்பரங்கள் மூலமாக சில விஷயங்களை பேசிவிட்டு மக்களை ஏமாற்றுபவர்களிடம் சென்று உட்கார்ந்து கொள்ளுமளவிற்கு மக்கள் காய்ந்துபோய் கிடக்கிறார்களா? யாரோ ஒருவர் எதையோ பேசுகிரார் அதை அப்படியே மனதில் ஏற்றிக்க்கொள்வீர்களா? உண்மையான குரு தன்னை வெளிப்படுத்தி கொள்ளவே மாட்டார். எல்லா மதமும் போதிப்பது நம் ஒவ்வொருவருக்குள் கடவுள் இருக்கிறார் என்பதையே. என்றும் செல்வராகவன் கூறியுள்ளார்.
புத்தரின் வழிமுறைகளை பின்பற்றியே சுலபமாக யோகா, தியானம் போன்றவற்றை பயிற்சி செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் கூறியபடி எளிமையாக நாசித் துவாரங்களின் வழியாகவே இவற்றை பயிற்சி செய்ய முடியும் என்றும் துவக்கத்தில் சுவாசம் குறித்த கவலைஇல்லாமல் இதை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பிரதர் திரைப்படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். இவருடன் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.
அதைத்தொடர்ந்து காதலிக்க நேரமில்லை மற்றும் ஜீனி ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜெயம் ரவிக்கு, பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் நடித்த படங்களின் அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அடுத்ததாக ஜெயம் ரவி , கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் படம் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது சூர்யா 44 திரைப்படத்தை இயக்கி வருகிறார் கார்த்தி சுப்பராஜ். அதை முடித்துவிட்டு ஜெயம் ரவி திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கார்த்தி சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும்.
- இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.
மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், லப்பர் பந்து வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. படத்தின் மூன்றாவது பாடலான டம்மா கோலி என்ற பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. பாடல் ஒரு கானா பாடலாக அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "காதலிக்க நேரமில்லை".
- கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "காதலிக்க நேரமில்லை".
ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
கடந்த மாதம் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜெயம் ரவிக்கு வாழ்த்து கூறி படக்குழு பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அண்மையில் ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார்.
- ஆர் எம் வீரப்பன் பிறந்தநாளை முன்னிட்டு சத்யா மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு பாடல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98.
ஆர்.எம்.வீரப்பன் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர்.
இந்நிலையில், மறைந்த அரசியல் பிரமுகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர் எம் வீரப்பன் பிறந்தநாளை (செப்டம்பர் 9) முன்னிட்டு சத்யா மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு பாடல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
அப்பாடலில் ஆர். எம். வீரப்பன் அவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் மரியாதையை செலுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது.
- ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகியது.
- ஜெயம் ரவி ஒரு அலாவுதீன் பூதத்தைப்போல் தோற்றம் அளித்துள்ளார்.
ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகியது.
அதில் ஒரு அலாவுதீன் பூதத்தைப்போல் தோற்றம் அளித்துள்ளார். கல்யாணி பிரியதர்சன் மற்றும் வாமிகா கபி தேவதை வேடத்தில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அலாவுதின் கம்பலத்தில் வானத்தில் பறந்துக் கொண்டு இருக்குமாறு போஸ்டர் வடிவமைத்து இருக்கின்றனர்.
உண்மையில் அவர்கள் எப்பேர்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்று படத்தின் டிரெய்லர் வெளியானால்தான் தெரியும்.
அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.
கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவையாணி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஃபேண்டசி மற்றும் காமெடி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஜெயம் ரவி திரைப்பயணத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படமாகும்.
படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டிரைலரில் அப்பா, மகன் என இரு வேடங்களில் ஜுன்னியர் என்.டி.ஆர் நடித்துள்ளார். தந்தை வீரமான கதாப்பாத்திரத்திலும் மகன் அனைத்து விஷயத்திற்கும் பயப்படும் ஒரு இளைஞனாக நடித்துள்ளார்.
ஆக்ஷன் மிகுந்த காட்சிகள் நிறைய உள்ளன. திரைப்படத்தை குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. டிரைலரின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது
.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டி.ஜே ஞானவேல் தற்பொழுது ரஜினிகாந்த நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- ஞானவேல் அடுத்ததாக தோச கிங் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
டி.ஜே ஞானவேல் தற்பொழுது ரஜினிகாந்த நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் நேற்று வெளியாக்கி ரசிகர்களிடையேம் நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஞானவேல் அடுத்ததாக தோச கிங் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படம் பிரபல சரவணன் பவன் உரிமையாளரான பி ராஜகோபாலின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இயக்கப்படும் கதையாகும்.
இப்படத்தின் கதையை பிரபல கன்னட இயக்குனரான ஹேமந்த் ராவ் படத்தின் கதையை எழுதியுள்ளார். இவர் இதற்குமுன் பிரபல கவழுடாரி மற்றும் சப்த சாகரடாச்சே எலோ படத்தின் இயக்குனராவார். இப்படத்தை ஜங்லி பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.
படத்தில் நடிக்கப்போகும் நடிகர்கள் குறித்தும் படப்பிடிப்பு குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






