என் மலர்tooltip icon

    இது புதுசு

    • 2023 டொயோட்டா வெல்ஃபயர் மாடலில் ADAS அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
    • புதிய வெல்ஃபயர் மாடலில் மூன்று மீட்டர்கள் நீளமான வீல்பேஸ் கொண்டிருக்கிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2023 வெல்ஃபயர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1 கோடியே 20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய டொயோட்டா வெல்ஃபயர் மாடல் Hi கிரேடு மற்றும் VIP கிரேடு என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    2023 டொயோட்டா வெல்ஃபயர் மாடலில் பெரிய முன்புற கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் கிளஸ்டர்கள் உள்ளன. வெல்ஃபயர் மாடலில் ஆறு ஏர்பேக், 360 டிகிரி கேமரா, ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், ADAS அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     

    புதிய வெல்ஃபயர் மாடலில் மூன்று மீட்டர்கள் நீளமான வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த காரின் பாடி ஸ்டைல் லெக்சஸ் LM மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய டொயோட்டா வெல்ஃபயர் மாடல் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.4 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 275 ஹெச்பி பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 2.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 250 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • லேன்ட் குரூயிசர் 200 மாடலின் விற்பனை சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
    • லேன்ட் குரூயிசர் 300 மாடல் வட அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை.

    டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த இரண்டு லேன்ட் குரூயிசர் எஸ்யுவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வட அமெரிக்க சந்தையில் லேன்ட் குரூயிசர் 250 மற்றும் லேன்ட் குரூயிசர் 70 என்று அழைக்கப்படுகின்றன. லேன்ட் குரூயிசர் 250 மாடல் லேன்ட் குரூயிசர் பிராடோ என்ற பெயரில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    முற்றிலும் புதிய லேன்ட் குரூயிசர் 250 மாடல் மூலம் வட அமெரிக்க சந்தையில் மீண்டும் லேன்ட் குரூயிசர் பிரான்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் லேன்ட் குரூயிசர் 200 மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட லேன்ட் குரூயிசர் 300 மாடல் வட அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை.

     

    ஐரோப்பா, ஜப்பான், மத்திய கிழக்கு மற்றும் ஆஸ்திரேலிய சந்தைகளில் புதிய லேன்ட் குரூயிசர் பிராடோ மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பார்ச்சூனர் எஸ்யுவி மாடலிலும் இதே என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படுகிறது.

    லேன்ட் குரூயிசர் 250 மாடலில் 2.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் லெக்சஸ் GX 470 மற்றும் அதிக டொயோட்டா மற்றும் லெக்சஸ் கார்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. லேன்ட் குரூயிசர் 70 மாடலில் 2.8 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரண்டு புதிய லேன்ட் குரூயிசர் கார்களில், லேன்ட் குரூயிசர் பிராடோ மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த கார் பார்ச்சூனரின் மேல், லேன்ட் குரூயிசர் 300 எஸ்யுவி மாடல்களின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

    • ஹோன்டாவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
    • இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    ஹோன்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய பி செக்மன்ட் எஸ்யுவி e:Ny1 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் என்ற அடிப்படையில், இந்த கார் ஹோன்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய முன்புற-வீல்-டிரைவ் e:Ny1 ஆர்கிடெக்ச்சரான F பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    புதிய ஹோன்டா e:Ny1 மாடலில் பானரோமிக் சன்ரூஃப், ஹீட்டெட் லெதர் ஸ்டீரிங் வீல், பிரீமியம் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை ஸ்டான்டர்டு அம்சங்களாக வழங்கப்படுகிறது. இத்துடன் ஹேன்ட்ஸ்-ஃபிரீ டெயில்கேட், ஆட்டோ டிம்மிங் மிரர்கள், எட்டு வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, டூயல் ஜோன் ஏசி, வயர்லெஸ் சார்ஜிங் பேட், ஏராளமான யுஎஸ்பி போர்ட்கள், புஷ் ஸ்டார்ட் பட்டன் வழங்கப்படுகிறது.

     

    இதில் வழங்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார்கள், 204 ஹெச்பி பவர், 315 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றன. மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.6 நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    இத்துடன் 100 கிலோவாட் சார்ஜர் கொண்டு காரை 11 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இத்துடன் கொலிஷன் மிடிகேஷன் பிரேக்கிங், பிலைன்ட் ஸ்பாட் இன்ஃபர்மேஷன், ரோட் டிபாச்சர் மிடிகேஷன், லேன் கீப் அசிஸ்ட், பார்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் 15.1 இன்ச் அளவில் சென்ட்ரல் டச் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, டிரைவிங் மற்றும் இன்போடெயின்மென்ட் அம்சங்கள், ஆன்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய ஹோன்டா எலெக்ட்ரிக் காரின் வினியோகம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் துவங்கும் என்று தெரிகிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் மாடலிலும் 2.2 லிட்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.
    • மஹிந்திரா ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் சற்றே நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது.

    மஹந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ N எஸ்யுவி மாடலின் பிக்கப் வெர்ஷனை அறிமுகம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே. புதிய பிக்கப் டர்க் மாடலுக்கான டீசரை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. டீசரின் படி புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் மாடல் ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    எனினும், இந்த மாடல் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் தான் முதலில் அறிமுகம் செய்யப்படுகிறது. Z121 என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் சற்றே நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. புதிய பிக்கப் டிரக் 3000mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது. வழக்கமான மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் 2600mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது.

     

    நீண்ட வீல்பேஸ் கொண்டிருப்பதால் ஸ்கார்பியோ N மாடலில் அதிக சுமையை ஏற்ற முடியும். ஸ்கார்பியோ N பிக்கப் டிர்க்-இல் இரட்டை கேபின் வெர்ஷனும் அறிமுகமாக இருப்பது டீசரில் தெரியவந்துள்ளது. இந்த மாடலில் முற்றிலும் புதிய எல்இடி டெயில்லேம்ப், முன்புற கிரில், எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    இந்த அம்சங்கள் அனைத்தும் ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் மாடல் ஆடம்பர மாடல்கள் பிரிவில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிகிறது. ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் மாடலிலும் 2.2 லிட்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட, நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 172.5 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • ஹோன்டா நிறுவனம் யுனிகான் 160 மாடலை பிரீமியம் பிரிவில் விற்பனை செய்து வருகிறது.
    • புதிய ஹோன்டா பைக்கிலும் 162சிசி என்ஜின் தான் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஹோன்டா நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் வெளியீட்டை உணர்த்தும் வகையில் புதிய டீசரை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. புதிய ஹோன்டா பைக் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 2-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    புதிய பைக் எந்த பிரிவில் நிலைநிறுத்தப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இது 150சிசி அல்லது 180சிசி பிரிவில் இடம்பெறலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஹோன்டா நிறுவனம் யுனிகான் 160 மாடலை பிரீமியம் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், புதிய மாடல் SP160 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற மாடலாக உருவாகும் புதிய ஹோன்டா பைக்கிலும் 162சிசி என்ஜின் தான் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது 12.7 ஹெச்பி பவர், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹோன்டா பைக் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் வரை இருக்கும் என்று தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    • ஹோன்டா நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது.
    • புதிய பைக் 150-180சிசி பிரிவில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் 2-ம் தேதி புதிய மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடல் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மாடல் 150-180சிசி பிரிவில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்த பிரிவில் ஹோன்டா நிறுவனம் 162.7சிசி மற்றும் 184.4சிசி என இரண்டு என்ஜின்களை கொண்டிருக்கிறது. இதில் 162.7சிசி என்ஜின் ஹோன்டா யுனிகான் 160 மாடலிலும் மற்றொரு என்ஜின் சிபி ஹார்னெட் 2.0 மாடலிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாடலின் அறிமுகம் மட்டும் அடுத்த வாரம் நடைபெறுகிறது.

     

    இதன் வெளியீடு வரும் வாரங்களில் துவங்கும் என்று தெரிகிறது. இந்த மாடல் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பிரான்டிங்கிலேயே அறிமுகம் செய்யப்படலாம். முன்னதாக இதேபோன்ற நடைமுறை ஷைன் 100 மாடலிலும் பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் என்ஜின் செயல்திறனில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

    ஹோன்டா யுனிகான் மாடலில் உள்ள 162.7சிசி என்ஜின் 12.73 ஹெச்பி பவர், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஹோன்டா ஹார்னெட் 2.0 மாடலில் உள்ள 184.4சிசி என்ஜின் 17.03 ஹெச்பி பவர், 16.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • ஆடி நிறுவனத்தின் பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் அறிமுகமாகிறது.
    • புதிய ஆடி Q8 இ டிரான் மாடலில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன.

    ஆடி Q8 இ டிரான் மாடல் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 18-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. புதிய Q8 இ டிரான் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஆடி Q8 இ டிரான் விலை ரூ. 1 கோடியே 32 லட்சம் முதல் ரூ. 1 கோடியே 35 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

    புதிய Q8 இ-டிரான் மாடலில் பிளாக்டு-அவுட் கிரில் சரவுன்ட்கள், ரிடிசைன் செய்யப்பட்ட கிரில், மெஷ் டிசைன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆடியின் புதிய மோனோக்ரோம் லோகோ வழங்கப்பட்டு உள்ளது. கிரில் பகுதியின் மேல்புறத்தில் லைட் பார் உள்ளது.

     

    இந்த காரின் முன்புற பம்ப்பர் ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்டு, சற்றே அளவில் பெரிய ஏர் இன்டேக்குகளை கொண்டிருக்கிறது. இந்த காரில் 114 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 600 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கிடைக்கும்.

    புதிய ஆடி Q8 இ டிரான் மாடலில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை ஒருங்கிணைந்து 408 ஹெச்பி பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும்.

    • மெர்சிடிஸ் EQXX மாடல் அந்நிறுவனத்தின் MMA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.
    • புதிய EQXX மாடல் முழு சார்ஜ் செய்தால் 998 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முனிச் மோட்டார் விழாவில் முற்றிலும் புதிய என்ட்ரி லெவல் மாடலின் கான்செப்ட் காரை அறிமுகம் செய்ய முடிவு செய்து இருக்கிறது. புதிய கார் மெர்சிடிஸ் CLA எனும் பெயர் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

    புதிய எலெக்ட்ரிக் கார் 2025 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் மெர்சிடிஸ் உருவாக்கிய எலெக்ட்ரிக் மற்று்ம மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் டிரைவ்டிரெயின்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 2025 ஆண்டிற்குள் அனைத்து பிரிவுகளிலும் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

     

    அந்த வகையில், புதிய கான்செப்ட் மாடலுடன் விஷன் EQXX மற்றும் விஷன் ஒன்-லெவன் போன்ற மாடல்களின் கான்செப்ட் வெர்ஷனும் முனிச் ஆட்டோ விழாவில் பிரீவியூ செய்யப்படலாம் என்று தெரிகிறது. EQA செடான் என்று அழைக்கப்படும் புதிய கான்செப்ட் மாடல் புதுமை, டிசைன் மற்றும் டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு வருகிறது. டெஸ்டிங்கில் இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 1202 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கியது.

    மெர்சிடிஸ் EQXX மாடல் அந்நிறுவனத்தின் MMA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு மெர்சிடிஸ் அறிமுகம் செய்யும் ஐசி என்ஜின் கொண்ட மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய EQXX மாடல் முழு சார்ஜ் செய்தால் 998 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன.

    • வெலார் பேஸ்லிப்ட் மாடலில் பிக்சல் எல்இடி ஹெட்லைட்கள், ரிவைஸ்டு டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளன.
    • புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் உள்ளது.

    லேன்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் பேஸ்லிப்ட் விலை ரூ. 93 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ரேன்ஜ் ரோவர் ஒற்றை HSE வேரியன்ட் மற்றும் இரண்டு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் ரேன்ஜ் ரோவர் வெலார் பேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு கடந்த வாரம் துவங்கியது. வினியோகம் செப்டம்பர் மாதம் துவங்கும் என்று தெரிகிறது. புதிய பேஸ்லிப்ட் மாடலின் விலை தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் அதிகம் ஆகும்.

     

    வெலார் பேஸ்லிப்ட் மாடலில் பிக்சல் எல்இடி ஹெட்லைட்கள், ரிவைஸ்டு டேடைம் ரன்னிங் லைட்கள், பின்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட பம்ப்பர், டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. காரின் உள்புறம் 11.4 இன்ச் டச்-ஸ்கிரீன் பிவி ப்ரோ சிஸ்டம், வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆப்பிள் கார்பிளே வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் மோட்டார் 250 ஹெச்பி பவர், 365 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் மோட்டார் 204 ஹெச்பி பவர், 430 நீயூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்த கார் மணிக்கு 217 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. டீசல் என்ஜின் கொண்ட மாடல் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இது மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 8.3 நொடிகளில் எட்டிவிடும். 

    • மாருதி சுசுகி நிறுவனம் தனது இன்விக்டோ பிரீமியம் எம்பிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
    • ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் என்ற போதிலும், இன்விக்டோ மாடலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் மாருதி சுசுகி Fronx-இன் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் புதிய டொயோட்டா கார் இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாடல் 1.2 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    சமீபத்தில் தான் மாருதி சுசுகி நிறுவனம் தனது இன்விக்டோ பிரீமியம் எம்பிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் என்ற போதிலும், இன்விக்டோ மாடலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

     

    டொயோட்டா நிறுவனம் ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாருதி சுசுகி Fronx மாடலை இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இதுதவிர டொயோட்டா நிறுவனம் எர்டிகா மாடலின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் மாருதி சுசுகி நிறுவனம் Fronx மற்றும் ஜிம்னி மாடல்களை அறிமுகம் செய்தது. இரு கார்களும் நெக்சா விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செயய்யப்படுகிறது. புதிய Fronx மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த கார் பிரெஸ்ஸா கம்பேக்ட் எஸ்யுவி மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.

    புதிய மாருதி சுசுகி Fronx மாடல் பிரீமியம் ஹேச்பேக் பலேனோவை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்ப்பட்டு, குறைந்த எடை கொண்ட ஹார்டெக்ட் பிளாட்பார்ம் வழங்கப்படுகிறது. இதன் டொயோட்டா வெர்ஷனும் இதே ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்படுகிறது.

    • புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்கள், பத்து வித்தியாசமான நிறங்களில் கிடைக்கிறது.
    • 2023 கியா செல்டோஸ் மாடலில் பானரோமிக் சன்ரூஃப், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் உள்ளது.

    கியா இந்தியா நிறுவனம் 2023 செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 89 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2019-இல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கியா செல்டோஸ் பெற்றிருக்கும் முதல் மிகப்பெரிய அப்டேட் இது ஆகும்.

    புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல்- டெக் லைன், GT லைன், X லைன் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் பத்து வித்தியாசமான நிறங்களில் கிடைக்கிறது. டிசைனை பொருத்தவரை செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலின் முன்புற தோற்றம் புதிதாக மாற்றப்பட்டு, ரிவைஸ்டு ஹெட்லேம்ப்கள், கிரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    பக்கவாட்டில் அலாய் வீல் டிசைன் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. பின்புறம் சிங்கில்-பீஸ் டெயில் லேம்ப், ராப்-அரவுன்ட்களை கொண்டிருக்கிறது. காரின் உள்புறம் புதிய டேஷ்போர்டு, டூயல் ஸ்கிரீன்- 10.1 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், HD டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வேரியன்டிற்கு ஏற்ற பெய்க், பிரவுன் பிளாக் அல்லது கிரே நிற பினிஷ் வழங்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை கியா செல்டோஸ் மாடலில் பானரோமிக் சன்ரூஃப், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ADAS உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங், கூல்டு குலோவ் பாக்ஸ், HUD, ஏர் பியூரிபயர், பவர் மிரர்கள், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஆறு ஏர்பேக், இபிடி கொண்ட ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல், ஐசோபிக்ஸ் சைல்டு மவுன்ட் புதிய காரின் அனைத்து வேரியன்ட்களிலும் வழங்கப்படுகிறது. 2023 கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல்- 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இவை முறையே 113 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT டிரான்ஸ்மிஷன், 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க், 6 ஸ்பீடு கிளட்ச்லெஸ் மேனுவல் அல்லது 7 ஸ்பீடு DCT யூனிட் மற்றும் 114 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க், 6 ஸ்பீடு கிளட்ச்லெஸ் மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.

    • ஸ்கோடா ஸ்கேலா மாடலில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் TSI மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது.
    • ஸ்கோடா ஸ்கேலா மாடலில் புதிய கிரில், ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது.

    ஸ்கோடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்கேலா மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அசத்தலான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஸ்கோடா ஸ்கேலா மாடல் ஆகஸ்ட் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய மாடல் நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியான காரின் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய ஸ்கோடா ஸ்கேலா மாடலில் புதிய கிரில், ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது. இத்துடன் மெல்லிய ஹெட்லேம்ப் கிரில் வரை நீளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பம்ப்பர் டிசைன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

     

    புதிய ஸ்கோடா ஸ்கேலா மாடலில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் TSI மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின், 1.5 லிட்டர் TSI நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனுக்கு 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஆகஸ்ட் 1 அறிமுகத்தை தொடர்ந்து மேம்பட்ட ஸ்கோடா ஸ்கேலா மற்றும் கமிக் மாடல்கள் ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்கேலா மாடலின் இந்திய வெளியீடு சந்தேகத்திற்குரிய விஷயம் தான்.

    ×