என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சான் இ.வி. மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.
டாடா நெக்சான் இ.வி. மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போது சோதனை செய்யப்படுவது நெக்சான் இ.வி. லாங்-ரேன்ஜ் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. தோற்றத்தில் இந்த மாடல் தற்போதைய நெக்சான் இ.வி. போன்றே காட்சியளிக்கிறது.
புதிய மேம்பட்ட மாடலின் உள்புறமும் தற்போதைய மாடலில் உள்ள அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் ஆட்டோ ஹெட்லேம்ப், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

தற்போதைய நெக்சான் இ.வி. மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரி மற்றும் மோட்டார் 125 பி.ஹெச்.பி. திறன், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
புதிய நெக்சான் இ.வி. லாங்-ரேன்ஜ் மாடலின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. வரும் நாட்களில் இதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஜனவரி மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் ஜனவரி 2022 மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அனைத்து கார் மாடல்களின் விலை ரூ. 35,596 வரையிலான தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

சலுகை விவரங்கள்
ஹோண்டா அமேஸ் - அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம்
ஹோண்டா டபிள்யூ.ஆர்.வி. - அதிகபட்சம் ரூ. 26 ஆயிரம்
ஹோண்டா ஜாஸ் - அதிகபட்சம் ரூ. 33,147
இந்த சலுகைகள் தள்ளுபடி, எப்.ஒ.சி. அக்சஸரீஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலன்களாக லாயல்டி போனஸ் மற்றும் ஹோண்டா கார் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்ட சலுகைகள் ஜனவரி 31, 2022 வரை வழங்கப்படுகிறது.
வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் 2021 ஆண்டு வாகனங்கள் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது.
வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு வாகனங்கள் விற்பனையில் 27 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் 1,724 யூனிட்களை விற்பனை செய்தது. அதற்கும் முந்தைய ஆண்டு வால்வோ நிறுவனம் 1361 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.
மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலான எக்ஸ்.சி.60, வால்வோ விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலான எக்ஸ்.சி.40 அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு முதல் வால்வோ நிறுவனம் இந்தியாவில் பெட்ரோல் கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. டீசல் என்ஜின் மாடல்களுக்கு மாற்றாக எஸ்90, எக்ஸ்.சி.60 மற்றும் எக்ஸ்.சி.90 பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் கார்களை வால்வோ அறிமுகம் செய்தது.
யமஹா நிறுவனத்தின் ஆர்15 வெர்ஷன் 4 மாடல் இந்திய சந்தையில் 155சிசி பிரிவில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் யமஹாவின் பிரபல 155சிசி மோட்டார்சைக்கிள் சீரிஸ் ஆர்15 மாடலின் வெர்ஷன் 4 கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 1.67 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய யமஹா ஆர்14 வி4 ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,82,800, எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
யமஹாவின் ஆர்15 வி4 மாடலை சில நாட்கள் பயன்படுத்தினோம். புதிய யமஹா ஆர்15 வி4 மாடலில் உள்ள அம்சங்கள், இதன் பயன்பாடு எப்படி இருக்கிறது என்ற விவரங்களை விரிவாக பார்ப்போம்.

யமஹாவின் ஆர்15 வெர்ஷன் 4 அம்சங்கள்
பவர் டிரெயின் - 155சிசி, லிக்விட் கூல்டு
திறன் - 10,000 ஆர்.பி.எம்.-இல் 18.4 பி.ஹெச்.பி.
இழுவிசை - 7500 ஆர்.பி.எம்-இல் 14.2 நியூட்டன் மீட்டர்
டிரான்ஸ்மிஷன் - கான்ஸ்டண்ட் மெஷ், 6 ஸ்பீடு
சேசிஸ் - டெல்டா பாக்ஸ்
டையர்கள் முன்புறம் / பின்புறம் - 100/80 17M/C 52P டியூப்லெஸ் / 140/70 R17M/C 66H ரேடியல் டியூப்லெஸ்
வீல்பேஸ் - 1325 மில்லிமீட்டர்
கிரவுண்ட் க்ளியரன்ஸ் - 170 மில்லிமீட்டர்
சீட் உயரம் - 725 மில்லிமீட்டர்
எடை - 142 கிலோ
பியூவல் டேன்க் கொள்ளளவு - 11 லிட்டர்
டிசைன்:
புதிய ஆர்15 ஒட்டுமொத்த தோற்றம் யமஹாவின் ஆர் சீரிஸ் மோட்டார்சைக்கிளை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 2021 யமஹா ஆர்7 மாடலின் பெரும்பாலான அம்சங்கள் புதிய மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்புறம் மிக கூர்மையான தோற்றம், பை-ஃபன்ஷனல் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லைட் உள்ளது. இதில் உள்ள எல்.இ.டி. பொசிஷன் லைட்கள் கண்களை போன்றே காட்சியளிக்கின்றன. இவற்றின் நடுவே ஹெட்லைட் உள்ளது.

இந்த பைக் பக்கவாட்டு பகுதிகள் ஒட்டுமொத்த வடிவமைப்புடன் ஒன்றி இருக்கிறது. இத்துடன் டூயல் டோன் பெயிண்ட், மேட் மற்றும் கிளாஸ் எஃபெக்ட் உள்ளிட்டவை ஆர்15 வெர்ஷன் 4 மாடலுக்கு முற்றிலும் புதிய தோற்றத்தை வழங்குகிறது. இதன் பூயூவல் டேன்க் மீது உள்ள சிறு சிறு மாற்றங்கள் பைக்கை ஓட்டும் போது புதிய அனுபவத்தை வழங்குகிறது. புதிய மாடலிலும் முந்தைய வெர்ஷன்களில் உள்ளதை போன்றே 11 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு இருக்கிறது.

யமஹா ஆர்15 வி4 டெயில் பகுதி ஆர்7 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய ஆர்15 மாடலில் எல்.சி.டி. டிஸ்ப்ளே, புளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் போன், எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும். இத்துடன் யமஹாவின் வை கனெக்ட் ஆப் மோட்டார்சைக்கிள் பயன்பாடு பற்றிய கூடுதல் விவரங்களை வழங்குகிறது.
செயல்திறன்:
யமஹாவின் ஆர்15 வெர்ஷன் 4 மாடலில் 155சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் வேரியபில் வால்வ் ஆக்டுவேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் என்ஜின் செயல்திறனை குறைக்காமல் சீராக இயங்க வைக்கிறது.

இந்த என்ஜின் 18.1 பி.ஹெச்.பி. திறன், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது முந்தைய மாடலில் உள்ளதை விட 0.2 பி.ஹெச்.பி. மற்றும் 0.1 நியூட்டன் மீட்டர் டார்க் குறைவு ஆகும். எனினும், இதன் அக்செல்லரேஷன் சற்று வேகமாகவே உள்ளது.
புதிய ஆர்15 வி4 மாடல் லிட்டருக்கு அதிகபட்சம் 47 கிலோமீட்டர் வரை செல்லும். நெடுஞ்சாலைகளில் இந்த எண்ணிக்கை சற்று அதிகமாகலாம்.
ரைட் மற்றும் ஹேண்ட்லிங்:
யமஹா ஆர்15 மாடலில் அட்ஜஸ்ட் செய்ய முடியாத யு.எஸ்.டி. போர்க் உள்ளது. புதிய ஆர்14 கட்டுப்படுத்த மிக சிறப்பாகவே உள்ளது. அதிவேகமாக செல்லும் போது பைக் அதிக இரைச்சலின்றி சீறிப்பாய்கிறது. இந்த மாடலில் ரி-இன்போர்ஸ் செய்யப்பட்ட சப்-ஃபிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர சேசிஸ்-இல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதன் டெல்டாபாக்ஸ் ஃபிரேம் மற்றும் சஸ்பெஷன் இணைந்து செயல்படுகிறது. கார்னெரிங் செய்வது ஆர்15 மாடலில் சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. வளைவுகளில் ஓட்டுவது கூர்மையாக இருக்கிறது. எனினும், இதில் சிறந்த கண்ட்ரோல் பெற பயிற்சி அவசியமாகிறது. நகர நெரிசல்களில் சிக்காமல் நுழைந்து செல்ல புதிய ஆர்15 வி4 சவுகரியமாக உள்ளது.

புதிய வெர்ஷன் 4 மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது இந்திய சாலைகளில் பாதுகாப்பாக பயணிக்க உதவுகிறது. இதில் உள்ள பிரேக்கிங் சிஸ்டம் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் யமஹா ஆர்15 வி4 விலை உயர்த்தப்பட்டது. அதன்படி இதன் விலை ரூ. 1,72,800 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,82,800 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
யமஹா ஆர்15 வி4 மாடல் இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையின் 155சிசி பிரிவில் களமிறங்கி இருக்கும் மற்றொரு ஸ்டிரீட் ஸ்போர்ட் மாடல் ஆகும்.
ஹூண்டாய் நிறுவனம் 2026 ஆண்டு வாக்கில் உலக சந்தையில் 17 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் குழுமம் இந்த ஆண்டு முதல் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி ஹூண்டாய் நிறுவன பிராண்டுகளின் கீழ் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவற்றில் ஹூண்டாய் ஐயோனிக் 5, கியா இ.வி.6 மற்றும் ஜெனிசிஸ் ஜி.வி.60 போன்ற மாடல்கள் அடங்கும்.
இதுதவிர 2025 வாக்கில் பத்து லட்சம், 2026 வாக்கில் 17 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய ஹூண்டாய் இலக்கு நிர்ணயித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்துவதற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. என்ஜின் வளர்ச்சி மையத்தை முழுமையாக புறக்கணிக்காமல், அதனை எலெக்ட்ரிக் பிரிவுக்கு மாற்ற ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

என்ஜின் வளர்ச்சி மையத்தில் பணியாற்றி வந்த குழுக்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தின் கீழ் இயங்கும் வெவ்வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் என்ஜின் வளர்ச்சி சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தும். இந்த ஆண்டு மட்டும் ஹூண்டாய் நிறுவனம் 43.2 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் வருவாய் விவரங்கள் வெளியாகி உள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் 2021 ஆண்டு முதலிடம் பிடித்தார். எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் டெஸ்லாவின் அசுர வளர்ச்சி காரணமாக எலான் மஸ்க் வருவாய் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜனவரி 3, 2022) மட்டும் டெஸ்லா நிறுவன பங்குகள் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்தன.
டெஸ்லா நிறுவன பங்குகள் 13.5 சதவீதம் அதிகரித்து ஒரு பங்கின் விலை 1,199.78 டாலர்களாக அதிகரித்தது. டெஸ்லா பங்குகளில் 18 சதவீதத்தை எலான் மஸ்க் வைத்திருக்கிறார். கடந்த மாதம் டெஸ்லா நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்களாக அதிகரித்தது.

2021 ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் கார் மாடல்கள் வினியோகம் இருமடங்கு அதிகரித்தது. கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் மட்டும் டெஸ்லா நிறுவனம் 3 லட்சம் யூனிட்களை வினியோகம் செய்தது. டெஸ்லாவின் மாடல் 3 மற்றும் மாடல் வை அதிக பிரபலமான மாடல்களாக இருந்துள்ளன.
இந்தியாவில் கடந்த மாதம் பாஸ்டேக் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுக்க செயல்பட்டு வரும் சுவங்கச் சாவடிகளில் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ‘பாஸ்டேக்’ மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதத்தில் ‘பாஸ் டேக்’ மூலம் நாடு முழுவதும் ரூ. 3,679 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு பாஸ்டேக் மூலம் ரூ. 119 கோடி வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இது தினசரி வசூலில் புது சாதனை ஆகும்.

கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது டிசம்பர் 2021, மாதத்தில் சுங்க கட்டணம் ரூ. 502 கோடி அதிகரித்து இருக்கிறது. 2020 டிசம்பரில் ரூ. 2,304 கோடியாக இருந்த கட்டண வசூல் கடந்த மாதத்தில் 1,375 கோடி அதிகரித்துள்ளது.
பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெற்றதால் சுங்க கட்டண வசூல் அதிகரித்துள்ளது. மேலும் பொருளாதார நடவடிக்கை காரணங்களாலும் கட்டண வசூல் அதிகரித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
டெஸ்லா நிறுவனம் தனது மாடல் 3 மற்றும் மாடல் எஸ் கார்களை திரும்ப பெற்று இருக்கிறது.
டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட மாடல் 3 மற்றும் மாடல் எஸ் எலெக்ட்ரிக் கார்களில் 4.75 யூனிட்களை திரும்ப பெற்றுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மாடல்கள் திரும்ப பெறப்படுவதாக டெஸ்லா அறிவித்து இருக்கிறது.
அமெரிக்காவில் 2017 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட 3,56,309 மாடல் 3 யூனிட்களும், 2014 முதல் 2021 வரை விற்பனை செய்யப்பட்ட 1,19,009 மாடல் எஸ் யூனிட்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. டெஸ்லா மாடல் 3 ரியர்-வியூ கேமராவில் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.

மாடல் எஸ் பொனெட் பிரச்சினையை டெஸ்லா சரி செய்ய இருக்கிறது. இந்த குறைபாடு குறித்து இதுவரை எந்த விபத்துகளோ, உயிரிழப்புகளோ நடைபெறவில்லை என டெஸ்லா அறிவித்துள்ளது. டெஸ்லா நிறுவனம் விரைவில் மாடல் வை மற்றும் மாடல் 3 யூனிட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
ஸ்வீடன் நாட்டு கார் உற்பத்தியாளரான வால்வோ தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி கார் மாடல்கள் விலை ரூ. 1 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 3 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
அந்நிய செலாவணி நிலையற்ற தன்மை, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் குறைபாடு போன்ற காரணங்களால் கார் மாடல்கள் விலை உயர்த்தப்படுவதாக வால்வோ அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு இன்று (ஜனவரி 1, 2022) அமலுக்கு வந்தது.

புதிய விலை விவரங்கள்
வால்வோ எக்ஸ்.சி.40 டி4 ஆர் டிசைன் பெட்ரோல் ரூ. 43.25 லட்சம்
வால்வோ எக்ஸ்.சி.60 பி5 இன்ஸ்க்ரிப்ஷன் பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் ரூ. 63.50 லட்சம்
வால்வோ எஸ்90 பி5 இன்ஸ்க்ரிப்ஷன் பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் ரூ. 64.90 லட்சம்
வால்வோ எக்ஸ்.சி.90 பி6 இன்ஸ்க்ரிப்ஷன் பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் விலை ரூ. 90.90 லட்சம்
முன்னதாக வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது டீசல் மாடல்களின் விற்பனையை நிறுத்தியது. தற்போதைய விலை உயர்வில் வால்வோ எஸ்60 செடான், பிளக்-இன் ஹைப்ரிட் எக்ஸ்.சி.90 டி8 போன்ற மாடல்கள் பாதிக்கப்படவில்லை.
அமெரிக்காவில் பெட்ரோல் வாகனங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பெட்ரோல் என்ஜின் கொண்ட வாகனங்களின் விற்பனைக்கு 2035 முதல் தடை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. காற்று மாசை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
2027 ஆண்டு முதல் அரசு சார்பில் வாங்கப்பட இருக்கும் இலகு ரக வாகனங்கள் அனைத்தும் புகை விதிகளுக்கு ஆதரவானதாக இருக்கும். பெடரல் அரசாங்க பணிகளில் 2030 ஆண்டு காற்று மாசை 65 சதவீதம் வரை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மின்சாரமும், மாசில்லா முறைகளில் இருந்தே பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 2050 ஆம் ஆண்டுக்குள் மாசில்லா நிலையை அடைய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் அமெரிக்காவின் புதிய வாகனங்களில் 50 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற திட்டமிடப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் பூனேவில் புதிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை கட்டமைக்க இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் ரூ. 300 கோடி முதலீட்டில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை பூனேவின் அகுர்டி பகுதியில் கட்டமைக்கிறது. இந்த ஆலையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
இந்த ஆலையில் அதிநவீன ரோபோடிக் மற்றும் தானியங்கி உற்பத்தி முறைகள் நிறுவப்பட இருக்கின்றன. இங்கு நடைபெறும் பெரும்பாலான பணிகள் தானியங்கி முறையில் செயல்படுத்தப்பட இருக்கின்றன. இந்த ஆலை 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இந்த ஆலையில் மொத்தம் 800 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

புதிய ஆலையில் இருந்து முதல் எலெக்ட்ரிக் வாகனம் அடுத்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது. தற்போதைய முதலீடு மட்டுமின்றி மேலும் சில விற்பனையார்கள் இணைந்து ரூ. 250 கோடி முதலீடு செய்ய இருக்கின்றனர்.
சமூக வலைதளத்தில் உடல் ஊனமுற்றவரின் வீடியோ பார்த்து, உடனடியாக அவருக்கு உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இரு கை மற்றும் கால்கள் இல்லாத நபர், மாடிஃபை செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனத்தை மிக நேர்த்தியாக இயக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. வைரல் வீடியோவை தனது டைம்லைனில் பார்த்த ஆனந்த் மஹிந்திரா ஊனமுற்றவரின் திறமையை பார்த்து வியந்துள்ளார்.
மேலும் அவரின் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை பாராட்டி அவருக்கு வேலை வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா உறுதியளித்துள்ளார். இதுபற்றிய தகவலை ஆனந்த் மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Received this on my timeline today. Don’t know how old it is or where it’s from, but I’m awestruck by this gentleman who’s not just faced his disabilities but is GRATEFUL for what he has. Ram, can @Mahindralog_MLL make him a Business Associate for last mile delivery? pic.twitter.com/w3d63wEtvk
— anand mahindra (@anandmahindra) December 27, 2021
'இதனை இன்று எனது டைம்லைனில் பார்த்தேன். இது எவ்வளவு பழையது என்றோ, எங்கிருந்து வந்ததோ என தெரியாது. ஆனால் இந்த நபரின் செயலால் பூரித்துப் போனேன்,' என தெரிவித்துள்ளார். மேலும் தனது நிறுவன அதிகாரியிடம் இவருக்கு தகுந்த வேலை வழங்கவும் உத்தரவிட்டார்.
இவரது டுவிட்டர் பதிவுக்கு பதில் அளித்த மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், 'இவரை தேடி வருகிறோம். இவர் நமக்கு மிகவும் பயனுள்ள சொத்து. உண்மையான சூப்பர்ஹீரோ,' என பதில் அளித்தது.






