என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோ டிப்ஸ்
X
இந்தியாவில் சோதனை செய்யப்படும் 2022 டாடா நெக்சான் இ.வி.
Byமாலை மலர்10 Jan 2022 9:14 AM GMT (Updated: 10 Jan 2022 9:14 AM GMT)
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சான் இ.வி. மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.
டாடா நெக்சான் இ.வி. மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போது சோதனை செய்யப்படுவது நெக்சான் இ.வி. லாங்-ரேன்ஜ் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. தோற்றத்தில் இந்த மாடல் தற்போதைய நெக்சான் இ.வி. போன்றே காட்சியளிக்கிறது.
புதிய மேம்பட்ட மாடலின் உள்புறமும் தற்போதைய மாடலில் உள்ள அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் ஆட்டோ ஹெட்லேம்ப், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
தற்போதைய நெக்சான் இ.வி. மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரி மற்றும் மோட்டார் 125 பி.ஹெச்.பி. திறன், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
புதிய நெக்சான் இ.வி. லாங்-ரேன்ஜ் மாடலின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. வரும் நாட்களில் இதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X