என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    மெர்சிடிஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் புதிய ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் மெர்சிடிஸ் EQS என அழைக்கப்படுகிறது. புதிய மெர்சிடிஸ் EQS மாடல் அந்நிறுவனத்தின் EVA2 EV பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் பல்வேறு பவர்-டிரைன் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    இவை 355 பி.ஹெச்.பி.-யில் துவங்கி அதிகபட்சமாக 536 பி.ஹெ்ச.பி. வரையிலான செயல்திறன் வெளிப்படுத்தும். மற்ற மெர்சிடிஸ் ஃபிளாக்‌ஷிப் மாடல்களை போன்றே, புதிய EQS எஸ்.யு.வி. மாடலிலும் கில்ஸ், MBUX ஹைப்பர் ஸ்கிரீன், டிஜிட்டல் ஹெட்லைட்கள், ஆக்மெண்டெட் ரியாலிட்டி, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    மெர்சிடிஸ் EQS

    அளவில் புதிய மெர்சிடிஸ் EQS 5125mm நீளமாகவும், 1959mm அகலமாகவும், ஒட்டுமொத்தமாக 1718mm உயரமாகவும் இருக்கிறது. இதன் வீல்பேஸ் 3210mm அளவில் இருக்கிறது. இந்த காரில் மூன்றாம் கட்ட இருக்கைகளை விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. 

    மெர்சிடிஸ் EQS மாடல் 2 மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதிகளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த எலெக்ட்ரிக் கார் 355 பி.ஹெச்.பி.-யில் துவங்கி அதிகபட்சம் 536 பி.ஹெச்.பி. வரையில் பல்வேறு டியூனிங்கில் செயல்திறன் வழங்கும் ஆப்ஷ்களில் கிடைக்கிறது. இதில் உள்ள 107.8 கிலோவாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 660 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது.
    சண்டிகர் மாநிலத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு நபர் ஒருவர் ரூ. 15 லட்சம் செலவிட்டு ஃபேன்சி நம்பர் வாங்கி இருக்கிறார்.
     

    இந்தியாவில் வாகனங்களுக்கு பேன்சி நம்பர்களை வாங்குவது சாதாரண விஷயம் தான். அதிக விருப்பத்துடன் வாங்கும் வாகனங்களுக்கு சில ஆயிரங்களை கொடுத்து பிடித்தமான எண்களை, வாகன பதிவு எண்ணாக வாங்குவது வழக்கமான ஒன்று தான். 

    இந்த நிலையில்தான், சண்டிகரை சேர்ந்த நபர் ஒருவர் தனது ஹோண்டா ஸ்கூட்டருக்கு ரூ. 15 லட்சத்து 44 ஆயிரம் செலவிட்டு பேன்சி நம்பர் வாங்கி இருக்கிறார். தனது ஹோண்டா ஆக்டிவா மாடலில் CH-01-CJ-0001 என்ற பேன்சி நம்பரை பெற இந்த நபர் இவ்வளவு செலவு செய்து இருக்கிறார். இவர் வாங்கிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விலையே ரூ. 71 ஆயிரம் தான். 

     ஹோண்டா ஆக்டிவா

    சண்டிகரில் வசிக்கும் 42 வயதான ப்ரிஜ் மோகன் விளம்பரத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் சண்டிகர் ஆர்.டி.ஒ.-வில் நடைபெற்ற ஏலத்தில் கலந்து கொண்டு இந்த பேன்சி நம்பரை வாங்கி இருக்கிறார். தான் பேன்சி நம்பர் வாங்குவது இதுவே முதல் முறை என அவர் தெரிவித்தார். 

    CH-01-CJ சீரிசில் மொத்தம் 378 பேன்சி நம்பர்களுக்கான ஏலம் ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 16, 2022 வரை நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் ரூ. 1 கோடியே 5 லட்சம் வை வசூலானது என சண்டிகர் ஆர்.டி.ஒ. அதிகாரி தெரிவித்தார். இது தவிர CH-01-CJ-007 மற்றும் CH-01-CJ-003 போன்ற எண்கள் முறையே ரூ. 4 லட்சத்து 40 ஆயிரமும், ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டன.
    ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் சில ஆயிரம் யூனிட்களை ரிகால் செய்து இருக்கிறது.


    ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்த ப்ரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் பேட்டரி பிரச்சினையை சரி செய்ய 3 ஆயிரத்து 215 யூனிட்களை ரி-கால் செய்து இருக்கிறது. 

    பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்துவோர் விரைந்து தங்களின் ஸ்கூட்டர்களை கொண்டு வர ஒகினவா எச்சரிக்கை விடுத்து உள்ளது. ரி-கால் நடவடிக்கை பவர் பேக் ஹெல்த் செக்-அப் திட்டத்தின் கீழ் நடத்தப்படுவதாக ஒகினவா தெரிவித்து இருக்கிறது. 

     ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    ரி-கால் செய்யப்படும் இ ஸ்கூட்டர்களின் பேட்டரி பேக்குகளில் லூஸ் கனெக்டர்கள் அல்லது வேறு ஏதேனும் சேதம் அடைந்து இருக்கிறதா என்பதை ஒகினவா நிறுவனம் சோதனை செய்ய இருக்கிறது. ஒருவேளை ஸ்கூட்டர்களில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தால், அவற்றை இலவசமாக சரி செய்து வழங்க இருக்கிறது. 

    பாதிக்கப்பட்ட யூனிட்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் அதன் டீலர்கள் உதவியுடன் தொடர்பு கொண்டு ஸ்கூட்டர்களை சரி செய்து வழங்க இருக்கிறது. இந்த நடவடிக்கை முழுவதும் வாடிக்கையாளர் சவுகரியத்திற்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டும் என ஒகினவா நிறுவனம் தனது டீலர்களிடம் தெரிவித்து உள்ளது. 

    சமீப காலங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடிக்கடி வெடித்துச் சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், பாதிப்பு ஏற்படும் முன்னரே நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த ரி-கால் அறிவிப்பு வெளியிடப்படுவதாக ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
    சிம்பில் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    சிம்பில் எனர்ஜி நிறுவனம் கடந்த ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சிம்பில் எனர்ஜி நிறுவனம் புதிய எலெர்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த தகவலை சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சுஹாஸ் ராஜ்குமார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார். ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான உற்பத்தி சோதனை ஏற்கனவே துவங்கி விட்டது. வினியோகம் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

     சிம்பில் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி துவங்கும் போதே, இரண்டாவது வாகனமும் அறிமுகம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். "முதல் மாடலை தொடர்ந்து எங்களின் இரண்டாவது வாகனம் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும். இது குறைந்த விலையில் கிடைக்கும் மாடலாக இருக்கும்," என அவர் தெரிவித்தார். 

    ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாடல் முற்றிலும் புதியதாக இருக்கும். இது புதிய பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும். இதில் சிறிய பேட்டரி மற்றும் மோட்டார் வழங்கப்படும். எனினும், இவை தவிர புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி வேறு எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. இந்த மாடலின் விலை போட்டி நிறுவனங்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என அவர் தெரிவித்தார். 
    மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த 2022 மாருதி சுசுகி எர்டிகா மாடல் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.


    மாருதி சுசுகி நிறுவனம் 2022 எர்டிகா எம்.பி.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2022 மாருதி சுசுகி எர்டிகா மாடல் விலை ரூ. 8 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் முதல் துவங்குகிறது. 2022 மாருதி சுசுகி எர்டிகா மாடல் தவணை முறையிலும் வழங்கப்படுகிறது. மாதாந்திர சந்தா கட்டணங்கள் பெட்ரோல் மாடலுக்கு ரூ. 18 ஆயிரத்து 600, CNG மாடலுக்கு ரூ. 22 ஆயிரத்து 400 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    முன்பை போன்றே புதிய எர்டிகா மாடலும் பிரைவேட் வாடிக்கையாளர்களுக்கு Lxi, Vxi, Zxi மற்றும் Zxi+ என நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. 2022 எர்டிகா மாடலின் Vxi மற்றும் Zxi வேரியண்ட்களில் ஃபேக்டரி CNG கிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

     2022 மாருதி சுசுகி எர்டிகா

    2-22 மாருதி சுசுகி எர்டிகா மாடலில் புது என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க மாற்றங்களாக இருக்கின்றன. மாருதி சுசுகி நிறுவனத்தின் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிடிற்கு மாற்றாக இம்முறை அதிநவீன 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 1.5 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் 102 பி.ஹெச்.பி. பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பெட்ரோல் CNG மாடல் 99 பி.ஹெச்.பி. பவர், 136 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இதே என்ஜின் 87 பி.ஹெச்.பி. பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    இந்திய சந்தையின் பிரமீயம் ஸ்கூட்டர் பிரிவில் யமஹா தனது ஏரோக்ஸ் 155 மூலம் களமிறங்கி இருக்கிறது.


    யமஹா நிறுவனத்தின் 155சிசி மேக்சி ஸ்கூட்டர் ஏரோக்ஸ் 155 மாடல் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. புதிய ஏரோக்ஸ் மூலம் யமஹா இந்திய சந்தையின் பிரீமியம் ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர்கள் பிரிவில் களமிறங்கி இருக்கிறது.

    இந்தியாவில் புதிய யமஹா ஏரோக்ஸ் விலை ரூ. 1,31,739, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. யமஹா ஏரோக்ஸ் மாடல் மெட்டாலிக் பிளாக், ரேசிங் புளூ மற்றும் கிரே வெர்மிலியன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஏரோக்ஸ் மாடலை சில நாட்கள் பயன்படுத்தினோம். அதன்படி புதிய ஏரோக்ஸ் நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா, பயன்படுத்த எப்படி இருக்கிறது என்ற விவரங்களை விரிவாக பார்ப்போம். 

    யமஹா ஏரோக்ஸ்

    யமஹா ஏரோக்ஸ் 155 அம்சங்கள்

    பவர் டிரெயின் - 155சிசி, லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக், SOHC, 4 வால்வு
    திறன் - 8,000 ஆர்.பி.எம்.-இல் 15.6 பி.எஸ்.
    இழுவிசை - 6500 ஆர்.பி.எம்-இல் 13.9 நியூட்டன் மீட்டர்
    டிரான்ஸ்மிஷன் - வி பெல்ட் ஆட்டோமேடிக்
    டையர்கள் முன்புறம் / பின்புறம் - 110/80-14M/C 53P டியூப்லெஸ் / 140/70-14M/C 62P டியூப்லெஸ் 
    சஸ்பென்ஷன் முன்புறம் / பின்புறம் - டெலிஸ்கோபிக் ஃபோர்க் / யூனிட் ஸ்விங்
    பிரேக் முன்புறம் / பின்புறம் - டிஸ்க் பிரேக் 230 எம்.எம். மற்றும் ஏ.பி.எஸ். / டிரம் 130 எம்.எம். 
    வீல்பேஸ் - 1350 மில்லிமீட்டர்
    கிரவுண்ட் க்ளியரன்ஸ் - 145 மில்லிமீட்டர்
    சீட் உயரம் - 790 மில்லிமீட்டர்
    எடை - 126 கிலோ
    பியூவல் டேன்க் கொள்ளளவு - 5.5 லிட்டர்

     யமஹா ஏரோக்ஸ்

    டிசைன்

    ஸ்கூட்டர்கள் பிரிவில் 155 சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டு அறிமுகமானதோடு, அசத்தலான டிசைன் மூலம் புதிய ஏரோக்ஸ் அசர வைக்கிறது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் தோற்றம் தனித்துவம் மிக்கதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. மிக நேர்த்தியான பாடி-வொர்க், அதற்கு ஏற்ற எல்.இ.டி. ஹெட்லைட்களுடன் ஏரோக்ஸ் முன்புறம் ஸ்போர்ட் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. இத்துடன் 14 இன்ச் வீல்கள், அசத்தலான எக்சாஸ்ட் சிஸ்டம், பின்புறம் டுவின் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன.

    இவைதவிர, ஸ்விட்ச்கியர், பாடி-வொர்க் போன்றவை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபியூவல் கேப், பில்லியன் ஃபூட்பெக், ஃபுளோர்-மேட் உள்ளிட்டவை வித்தியாசமாக இருந்தாலும் சமயங்களில் சற்றே இடையூறை ஏற்படுத்துகிறது. தோற்றத்தில் அதிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் ஏரோக்ஸ், 24.5 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ் பெற்று இருக்கிறது. எனினும், இத்தகைய திறன் கொண்ட ஸ்கூட்டரில் 5.5 லிட்டர் ஃபியூவல் டேன்க் அளவில் சிறியதே.

     யமஹா ஏரோக்ஸ்

    அம்சங்கள்   

    ஏரோக்ஸ் மாடல் இந்திய சந்தையின் பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஹெட்லைட் மற்றும் டெயில் லேம்ப்கள் எல்.இ.டி. யூனிட்களாக வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷர்கள் தனியே அக்சஸரி வடிவில் ரூ. 1,490 விலையில் விற்பனை செய்யப்படுகிகிறது. புதிய ஏரோக்ஸ் மாடலிலும்  டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பயன்பாட்டு தகவல்களுடன் வி.வி.ஏ. இண்டிகேட்டர் மற்றும் டக்கோமீட்டர் போன்ற விவரங்களையும் காண்பிக்கிறது.

    இந்த அம்சங்களுடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். அலெர்ட்கள், பார்க் லொகேஷன் உள்ளிட்டவை விவரங்களை இயக்க முடியும். இதில் உள்ள ஃபியூவல் டேன்க் ஸ்கூட்டரில் இருந்து இறங்காமலேயே பட்டன் மூலம் திறக்கும் வசதி கொண்டிருக்கிறது. இதன் அண்டர் சீட் ஸ்டேரேஜை இயக்கவும் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏரோக்ஸ் மாடலில் டி.சி. சார்ஜிங் போர்ட், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். மற்றும் சைடு ஸ்டாண்டு கட்-ஆஃப் வசதி உள்ளது. 

     யமஹா ஏரோக்ஸ்

    செயல்திறன்

    புதிய யமஹா ஏரோக்ஸ் மாடலில் 4 வால்வுகள் கொண்ட 155சிசி மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வி.வி.ஏ. தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் யமஹாவின் ஆர்15 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் செயல்திறன் பிரீமியம் ஸ்கூட்டருக்கு ஏற்ற வகையில் ரி-டியூன் செய்யப்பட்டுள்ளது. 

    அந்த வகையில் ஏரோக்ஸ் கொண்டிருக்கும் என்ஜின் நகர பயன்பாடுகளுக்கு ஏற்ற உடனடி பிக்க்ப், நெடுஞ்சாலைகளுக்கு ஏற்ற சீரான வேகத்தை சிரமம் இன்றி வழங்குகிறது. இந்த மாடல் மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகங்களிலும் அதிர்வுகள் இன்றி சீராக செல்கிறது. இது மணிக்கு அதிகபட்சம் 115 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்கிறது. 

    இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 50 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. எனினும் அதிவேக பயன்பாடுகளின் போது, இந்த அளவு வேறுபடுகிறது. இத்துடன் போக்குவரத்து நெரிசல்களில் நிற்கும் போது எரிபொருள் சேமிக்கும் நோக்கில் என்ஜின் தானாக ஆஃப் ஆகிவிடுகிறது. மீண்டும் என்ஜினை செயல்பாட்டுக்கு கொண்டு வர நெரிசல் பதற்றம் இன்றி திராட்டிலை திருகினாலே போதும்.

     யமஹா ஏரோக்ஸ்

    ரைடு மற்றும் ஹேண்ட்லிங்

    இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மற்ற ஸ்கூட்டர்களை விட ஏரோக்ஸ் மாடலின் ஹேண்ட்லிங் சிறப்பாகவே இருக்கிறது. நெரிசல்களில் உடனடி கட் செய்வது ஏரோக்ஸ் சற்று கனமாகவே உணர்கிறது. எனினும், இந்த ஸ்கூட்டரின் ஸ்டேபிலிட்டி மற்றும் கம்போஷர் அலாதியாக இருக்கிறது. எந்த வேகத்தில், எந்த கோணத்தில் பயணித்தாலும், அதிர்வுகள் அற்ற நிலையான உறுதித்தன்மையை ஏரோக்ஸ் உணரச் செய்கிறது. கார்னெரிங்களில் ஏரோக்ஸ் ஸ்கூட்டரையும் கடந்து மோட்டார்சைக்கிள் போன்ற அனுபவத்தை வழங்குகிறது.

    மற்ற பெட்ரோல் ஸ்கூட்டர்களில் மோனோ ஷாக் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், ஏரோக்ஸ் மாடலில் டுவின் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன. மேலும் இவை சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. முன்புற ஃபோர்க் சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது. இதே ஸ்கூட்டரில் மேலும் சவுகரிய அனுபவத்தை பெற யமஹா கியாஸ்-சார்ஜ் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய யமஹா ஏரோக்ஸ் மாடல் நகர போக்குவரத்து அசத்தலான சவுகரியத்தை வழங்குகிறது. இத்துடன் சி.வி.டி. வழங்கப்பட்டுளள்ளது. ஸ்கூட்டர் போன்ற பயன்பாடுகளிலும், இது மோட்டார்சைக்கிள் போன்ற அனுபவத்தை வழங்குகிறது. 
    கோமகி எலெக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரேன்ஜர் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்தது.

     
    கோமகி எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் குரூயிசர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. கோமகி எலெக்ட்ரிக் குரூயிசர் மாடல் ரேன்ஜர் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.68 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம்  செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய கோமகி ரேன்ஜர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல் ஜனவரி 26 ஆம் தேதி முதல் கோமகி எலெக்ட்ரிக் விற்பனை மையங்களில் கிடைக்கும். புதிய கோமகி  ரேன்ஜர் மாடல்- கார்னெட் ரெட், டீப் புளூ மற்றும் ஜெட் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    கோமகி ரேன்ஜர்

    அம்சங்களை பொருத்தவரை கோமகி ரேன்ஜர் மாடல் குரூயிசர் டிசைனில் குரோம் எக்ஸ்டீரியர், பெரிய வீல்களை கொண்டிருக்கிறது. இதில் வட்ட வடிவம்  கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ரெட்ரோ தீம் கொண்ட இண்டிகேட்டர்கள் உள்ளன. இதில் சிங்கில் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், குரோம் டிரீட் செய்யப்பட்ட டிஸ்ப்ளே, அகலமான ஹேண்டில்பார்கள் வழங்கப்பட்டுள்ளன.

    கோமகி ரேன்ஜர் எலெக்ட்ரிக் குரூயிசர் மோட்டார்சைக்கிளில் 4000 வாட் மோட்டார் மற்றும் 4 கிலோவாட் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களில் இத்தகைய பேட்டரி இதுவரை எந்த மாடலிலும் வழங்கப்படவில்லை. 

    இந்த மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 180 முதல் 220 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ப்ளூடூத் சவுண்ட் சிஸ்டம், சைடு ஸ்டாண்டு சென்சார், குரூயிஸ் கண்ட்ரோல் வசதி, ஆண்டி-தெஃப்ட் லாக் சிஸ்டம், டூயல் ஸ்டோரேஜ் பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது.


    டாடா  மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலை டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்தது. அறிமுகமான மூன்றே மாதங்களில் புதிய டாடா பன்ச் விலை ரூ. 16 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    புதிய டாடா பன்ச் பியூர் மற்றும் பியூர் ரிதம் என இரண்டு வேரியண்ட்களின் விலை ரூ. 16 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 11 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. 'நிறுவனத்தின் உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்,' என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. 

    டாடா பன்ச் டாப் எண்ட் மாடல்களான கிரியேட்டிவ் மற்றும் கிரியேட்டிவ் இரா விலைகள் முறையே ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகமானது முதல் பிரபல மாடல்களில் ஒன்றாக டாடா பன்ச் மாறி வருகிறது. இந்த மாடலுக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு காரணமாக இதற்கான காத்திருப்பு காலம் கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் மாடல்களின் விலையை மாற்றியமைத்து இருக்கிறது.


    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை இந்தியாவில் ஆறு நகரங்களில் மாற்றி இருக்கிறது. இரு மாடல்களின் விலை டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் பூனே போன்ற நகரங்களில் மாற்றப்பட்டது.

    டெல்லி - 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் விலை ரூ. 5580 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் புதிய விலை முறையே ரூ. 1,38,006 மற்றும் ரூ. 1,18,996 ஆகும்.

    மும்பை - 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் விலை ரூ. 13,605 குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை முறையே ரூ. 1,28,636 மற்றும் ரூ. 1,09,626 ஆகும். 

    சென்னை - 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் விலை ரூ. 6105 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் புதிய விலை முறையே ரூ. 1,52,401 மற்றும் ரூ. 1,33,391 ஆகும்.

    பெங்களூரு - 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் விலை ரூ. 6157 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் புதிய விலை முறையே ரூ. 1,50,657 மற்றும் ரூ. 1,31,647 ஆகும்.

    ஐதராபாத் - 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் விலை ரூ. 5475 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் புதிய விலை முறையே ரூ. 1,52,401 மற்றும் ரூ. 1,33,391 ஆகும்.

    பூனே - 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் விலை ரூ. 13,605 குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை முறையே ரூ. 1,28,321 மற்றும் ரூ. 1,09,311 ஆகும்.

    விலை மாற்றத்தின் படி மும்பை மற்றும் பூனே வாடிக்கையாளர்கள் சற்றே குறைந்த விலையிலும், மற்ற நகர வாடிக்கையாளர்கள் அதிக விலையிலும் ஏத்தர் ஸ்கூட்டர் மாடல்களை வாங்க முடியும்.
    2022 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் மாடலின் விலை சந்தையில் ரூ. 2.31 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


    சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட 2022 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் மாடல் விரைவில் இந்தியா வருகிறது. அதன்படி இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ரேன்ஜ் ரோவர் மாடலின் விலை இந்தியாவில் ரூ. 2.31 கோடி, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. 

    2022 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் மாடலின் அனைத்து வேரியண்ட் மற்றும் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. புதிய ரேன்ஜ் ரோவர் மாடல் எம்.எல்.ஏ-ஃபிளெக்ஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஸ்டாண்டர்டு மற்றும் லாங்-வீல்பேஸ் வெர்ஷன்களில் வழங்கப்பட இருக்கிறது. முதல்முறையாக லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் மாடல் 7 சீட்டர் ஆப்ஷனுடன் வழங்கப்படுகிறது.

     2022 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர்

    புதிய 2022 ரேன்ஜ் ரோவர் மாடல் 3 லிட்டர், 6 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கிடைக்கிறது. இதன் 3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 389 பி.சஹெச்.பி. திறன், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் டீசல் என்ஜின் 243 பி.ஹெச்.பி. திறன், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் பேஸ்லிப்ட் மாடல் விற்பனை தொடங்கிய 24 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஸ்கோடா நிறுவனம் நேற்று முன்தினம் தனது கோடியக் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகமான முதல் நாளிலேயே புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடல் முழுமையாக விற்றுத்தீர்ந்தது. இந்தியாவில் சி.பி.யு. முறையில் கொண்டுவரப்படும் கோடியக் பேஸ்லிப்ட் விலை ரூ. 34.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    முன்னதாக இந்த மாடல் பல்வேறு வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 7 சீட்டர் கோடியக் மாடலில் மேம்பட்ட என்ஜின் மற்றும் புது தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 2 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஸ்கோடா கோடியக்

    2022 ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் பட்டர்ஃபிளை கிரில், வெர்டிக்கல் ஸ்லாட்கள், குரோம் சரவுண்ட், எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர். எல்., புதிய முன்புற பம்ப்பர், அலாய் வீல்கள், சில்வர் ரூப் ரெயில்கள், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள், பூட் லிட் மீது ஸ்கோடா பெயர், எலெக்ட்ரிக் டெயில் கேட் மற்றும் விர்ச்சுவல் பெடல் உள்ளது.

    காரின் உள்புறம் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பானரோமிக் சன்ரூப், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.


    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் 60 லட்சம் யூனிட்களை எட்டியதாக அறிவித்து இருக்கிறது. 60 லட்சத்து யூனிட் குருகிராம் ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. 

    'இந்தியாவில் சுசுகி களமிறங்கி இந்த ஆண்டுடன் 15 வருடங்களை நிறைவு செய்கிறது. இரண்டாம் அலையின் தாக்கம், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள செமிகண்டக்டர் தட்டுப்பாடு போன்ற சிக்கலான சூழ்நிலைகளிலும் இந்த மைல்கல் எட்டியதில் பெருமை கொள்கிறோம்,' என சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிர்வாக இயக்குனர் சடோஷி யுச்சிடா தெரிவித்தார்.  

     சுசுகி ஸ்கூட்டர்

    சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில், அக்சஸ் 125, ஜிக்சர் 250, ஜிக்சர் 150, பர்க்மேன் ஸ்டிரீட் மற்றும் அவெனிஸ் 125 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் ஐந்தாவது பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளராக உருவெடுத்தது.

    முன்னதாக சுசுகி நிறுவனம் அவெனிஸ் 125 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சுசுகி அவெனிஸ் விலை ரூ. 86,700, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய அவெனிஸ் மாடல் டி.வி.எஸ். என்டார்க் 125 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
    ×