என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோ டிப்ஸ்
X
ரூ. 300 கோடி முதலீட்டில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் பஜாஜ்
Byமாலை மலர்30 Dec 2021 8:57 AM GMT (Updated: 30 Dec 2021 8:57 AM GMT)
பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் பூனேவில் புதிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை கட்டமைக்க இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் ரூ. 300 கோடி முதலீட்டில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை பூனேவின் அகுர்டி பகுதியில் கட்டமைக்கிறது. இந்த ஆலையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
இந்த ஆலையில் அதிநவீன ரோபோடிக் மற்றும் தானியங்கி உற்பத்தி முறைகள் நிறுவப்பட இருக்கின்றன. இங்கு நடைபெறும் பெரும்பாலான பணிகள் தானியங்கி முறையில் செயல்படுத்தப்பட இருக்கின்றன. இந்த ஆலை 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இந்த ஆலையில் மொத்தம் 800 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
புதிய ஆலையில் இருந்து முதல் எலெக்ட்ரிக் வாகனம் அடுத்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது. தற்போதைய முதலீடு மட்டுமின்றி மேலும் சில விற்பனையார்கள் இணைந்து ரூ. 250 கோடி முதலீடு செய்ய இருக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X